முதலில் ஆண்டு விழா காணும் என் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள் .....முதல் ஆண்டு விழாவே மயக்கம் கொடுத்து விட்டது ....எதை விட எதை சொல்ல ........ செம்ம...இதற்கே இப்படி அதகள படுத்தி விட்டார்கள் .....இன்னும் 5,10,25,50,100,1000 ஆண்டு விழாவின் கொண்டத்தை இப்பவே மனம் தேட ஆரம்பித்து விட்டது என்றால் மிகையல்ல ..............இந்த குடும்பத்தின் நானும் ஒரு அங்கம் என்று சொல்வதே ஒருவித கர்வத்தை தான் கொடுக்கிறது .....
song dedication
நிச்சயமா இது ஒரு குடும்பம் தான் ..........இங்கு கொட்டி கிடக்கும் திறமைகளுக்கு அளவே இல்லை ....படிக்கச் அமர்ந்தா வித விதமான பரிமாணங்கள் .........ஒரு உயிரோட்டம் இங்கு நிறையவே உண்டு .ஏதோ சொந்த தோழியிடம் ,நட்பிடம் ,உறவிடம் பேசுவது போலெ இங்கு மட்டுமே பேச முடிகிறது என்பது 100% உண்மை .தவறுகளை கூட பாசிட்டிவ் கொடுக்க இங்கே மட்டுமே முடிகிறது அனைவராலும் .
கிண்டல் ,கேலி ,கால் வாரல் ,கழுவி ஊத்தால் எல்லாமே நிறைவாக நடக்கும் ...ஆனாலும் எதுவும் அளவூ மீறியது இல்லை .....
பானுமா ,மஹா ,ரிஹா ,சித்ரா சரஸ்வதி ,ஈஸ்வரி காசிராஜன்நிஷிதரா ,ஷ்யாமளா சோதி ,ஸ்ரீபதி ,அகிலா மதன் ,நடராஜன் ,ரேகா ஜெகன் ,பிரியா பிரவீன்குமார் ,ugina ,சாரு ,கீதா செல்வம் ,ஸ்ரீதேவி ,ஸ்டெல்லா ,லட்சுமி பெருமாள் ,சரோஜா கோபாலகிரிஷானா ரஜிப்ரபா .
(இருங்க பா ...........type செய்வதற்குள் மூச்சு தள்ளி நாக்கு பிதுங்கி போச்சு ........அத்தனை பேரை வச்சு தினமும் செஞ்சுட்டு இருக்கேன் )))))) இவங்க கமெண்ட் பார்க்கவே பல நாள் பள்ளி மாணவி டெஸ்ட் ரிசல்ட் வெயிட் செய்வது போல் பலமுறை லோக் இன் செய்து இருக்கேன் .மற்றவர்கள் விட்டு போய் இருந்தால் மன்னிக்கவும் .
மோனிஷா டியர் கொடுத்த நடுவர்களின் இன்றோ பக்கா மாஸ் ...........இந்த நடுவர்கள் செய்யும் கிண்டல்ஸ் ,நக்கல்ஸ் ,சேட்டைகளை கண்டு நான் இவர்கள் youngsters 20-30 வயசு என்று தான் நினைத்து இருந்தேன் .........ஆனால் திறமைக்கு வயது இல்லை .........மனதால் குழந்தைகளாக ஆர்ப்பரிக்க வயசு முக்கியமில்லை என்பதை வாழ்ந்து காட்டியவர்கள் இவர்கள் ....லவ் யு நாட்டாமைஸ் .......சான்ஸ் இல்லை............செம்ம தான் போங்க .....இன்னும் கூட ஷாக் குறையலை .............ஆனா ஒண்ணு மோனிஷா டியர் இப்படி அவங்க வயசை சொல்லி அவங்களுக்கு வரும் ப்ரோபோசல்களை இப்படி எல்லாம் தடுத்து இருக்க கூடாது .
ஆண்டு விழா போட்டியில் அதிகமாக கலந்து கொள்ளவில்லை ......ஒரே ஒரு அட்டை படம் மட்டுமே போட்டேன் ...அதுக்கே தலை சுத்தி போச்சு ....ஆனா சின்ன குயில் சித்ராகள் ,ரவிவர்மா வாரிசுகள் ,சாலமன் பாப்பையா குடும்பம் ,கருத்து கண்ணம்மாகளை கண்டு எப்படி புகழுவது என்று வார்த்தைகளை இனிமேல் எல்லா மொழியிலும் உருவாக்க கூட முடியாது தான் ....அந்த அளவூ திறமை ......எல்லோருக்கும் ஒரு ஸ்டாண்டிங் ovation ......
மோனிஷா சொல்வது போல் மனித மனம் என்பது ஒரு பாராட்டுக்கு உருகி போகும் தன்மை உடையது ....ஒரு கல் கல்லாகவே இருப்பதும் அது கோயில் சிலையாக உருவாவதும் எப்படி ஒரு உளியால் நடக்கிறதோ ....அதே போன்ற உளிகள் பாராட்டுகளாக ,தங்களின் பொன்னான நேரம் பார்க்காமல் வாரி வழங்கும் கடை ஏழு வள்ளல்களின் ******* இங்கே மட்டும் தான் .....சான்ஸ்சே இல்லை .............இந்த சைட் ............
பானுமா மாவை பத்தி மட்டும் முக்கியமா இங்கே சொல்வதற்கு கடமை பட்டு உள்ளேன் ...மத்தவங்க முறைக்காதீங்க பா ...
இவர்களின் போனில் பேசிய பெருமை எனக்கு உண்டு .....என்ன வாய்ஸ் ,அதில் என்ன ஒரு துள்ளல் ,என்ன ஒரு பாசம் ....இன்னொரு அம்மா என்னை மடி தாங்கி இருக்கிறார் .
என் கதை தலைப்பு முதலில் "என்ன தவம் செய்தனை "என்று தான் இருந்தது ....என் இன்ட்ரோ படித்த உடன் .....இது காதல் கதை மகளே .....இந்த டாபிக் படித்த உடன் எனக்கு தாய்க்கும் மகனுக்கும் நடுவே உள்ள பந்தம் தான் நினைவுக்கு வரும் ....இது எப்படி இந்த கதைக்கு பொருந்தும் என்று என்னை காச்சி எடுத்துட்டார் .....என்னடா இது ஒரு டாபிக் அதற்கே இந்த பாடு படுத்தறாங்களே என்று அல்லு விட்டுடுச்சு ......பேசாம மூட்டை கட்டி எழுதுவதை வழக்கம் போலெ பரண் மேல் போட்டுட்டு ,தனியா நாம எழுதியதை நாமே படிச்சுட்டு நம்மளை நாமே வச்சு செஞ்சுக்கலாமா என்று தோன்றிய சமயம் ....என்ன அப்டேட் காணோம் என்று வந்து நின்றவர்கள் ....நீ எழுதுவதை எழுது ....நாங்க இருக்கோம் ...........எழுதும் முறையை compromise செய்யாதே ......உனக்கு தோன்றுவதை எழுது என்று தட்டி கொடுத்த பெருமை இவர்களுக்கே சேரும் ....இன்று 35 எபிசொட் தாண்டி சென்றாலும் .........நீ அடிக்கிறத அடி நாங்க தில்லா நிற்போமே என்று துணை வருபவர்கள் ........இவர்களால் தான் "என்ன தவம் செய்தேன் "என்று தலைப்பு மாறியது ...அது ஒரு விதத்தில் யார் யாருக்காக தவம் என்ற ரேஞ்சுக்கு பொருந்தி போனது ...லவ் யு பானுமா .....
உண்மையில் இங்கே தவம் செய்தவள் நான் தான் என்று பெருமையோடு இங்கே சொல்லி கொள்வேன் ....இத்தனை உறவுகள் ,எனக்கு குடும்பமாய் கிடைத்து உள்ளது ......முகம் தெரியாத உறவுகள் என்றாலும் சில உறவுகள் ரத்த சமந்தத்தை விட உயர்ந்தது என்ற கருத்து இங்கே உண்மையாக்கிய உறவுகளே உங்களுக்கு வந்தனம் ....உங்களின் ஒற்றுமைக்கு ,பிரிக்க முடியாத பந்தத்திற்கு வாழ்த்துக்கள் ..........
இறைவனின் அருளால் அனைவரும் பல நூறு ஆண்டுகள் எல்லா நலமும் ,வளமும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்
ithu admin teamku dedication.....pinnal irunthu ayaramal uzhaikum jeevangaluku