MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 12
சுந்தரம், விக்னேஷ் இருவரும் நீலமேக பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அன்று நடந்த கல்யாணம் ரிஜிஸ்டர் செய்யவில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவர்கள் நேராக சென்று கோவில் நிர்வாகத்திடம் பேசினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்று பதிந்த கல்யாணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.
கோவிலின் முன் வாசலில் இருக்கும் கேமரா மட்டுமே இயங்கி கொண்டிருப்பதும், பின் வாசல் கேமரா இயங்க வில்லை என்றும் தெரியவந்தது. கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பின் வாசல் வழியாக வந்து இருக்கின்றனர்.
இருந்தாலும் முன் கேமராவில் பதிவானதில் இருந்து அன்று அங்கு மலர் அங்கு வந்தது தெரியவந்தது. மேலும் கல்யாணம் முடிந்த பின்னர் மலரும், கல்யாண பெண் ராஜியும் எதற்காகவோ கோவிலுக்கு வெளியே சென்று இருக்கின்றனர். அதன் பின் சிறிது நேரத்தில் அனைவரும் வேகமாக வெளியே ஓடுவதும் பதிவாகி இருந்தது.
“எல்லாரும் எதுக்கு இவ்ளோ வேகமா வெளில ஓடுறாங்க...?” என்று சந்தேகத்தை கேட்டு கொண்டிருந்தான்.
கோவில் நிருவாக அதிகாரி, “வாசல்ல ஒருத்தருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சார்... அதான்...” என்று அவர் விளக்கம் அளித்தார்.
“யாருக்குன்னு தெரியுமா...?” என்று கேட்டான்.
“கல்யாண பெண்ணுக்கு தான் சார்...” என்று சொல்லவும் சுந்தரமும் விக்னேஷ் இருவரும் அதிர்ந்தனர். குழப்பமாக இருந்தது இருவருக்கும்.
“அத நீங்க நேருல பார்த்தீங்களா..?” என்று கேட்டான் சுந்தரம்.
“நான் பார்க்கல சார்... நான் வெளில வர்றதுக்குள்ள அந்த பொண்ண ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போய்ட்டாங்க...
அங்க இருந்தவங்க கல்யாண பொண்ணுக்கு தான் ஆக்சிடென்ட் ன்னு சொன்னாங்க... அன்னைக்கு ரெண்டு கல்யாணம் நடந்தது., அதுவும் ஒரே நேரத்துல... அதுனால எனக்கு எந்த பொண்ணுக்கு நடந்ததுன்னும் சரியா தெரியல...” என்றார்.
“எந்த ஹாஸ்பிட்டல்..?”என்று சுந்தரம் கேட்டான்.
“பக்கத்துல இருக்க நலம் ஆஸ்பத்திரி தான் சார்...” என்று சொல்லவும்,
“சரி.... வேற ஏதாவது டீட்டைல்ஸ் வேணும்னா நான் வர்றேன். தேங்க்ஸ்..” என்று கூறி அங்கிருந்து கிளம்பினர்.
வெளியே வந்ததும், “இப்போ என்ன பண்ண..?” என்று சுந்தரம் கேட்டான்.
“அங்க போய் தான் விசாரிக்கணும்...” என்று கூறினான் விக்னேஷ்.
“ஹ்ம்ம்... ஓகே...
அப்புறம் நீ மலர் நம்பர் வாங்கின... என்னாச்சு..? அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சதா..?” என்று சுந்தரம் கேட்டான்.
“அவளோட நம்பர் ஆக்டிவா இல்ல... அந்த நம்பர் கடைசியா இருந்தது தஞ்சாவூர் தான்னு சிக்னல் காட்டுது. எனக்கு தெரிஞ்சு அவ நம்பர இங்கேயே தூக்கி போட்டுருப்பாங்க...” என்று சொல்லவும் சுந்தரம் குழப்பமானான்.
“அந்த ராஜி... அந்த பொண்ணுக்கு தான் ஆக்சிடென்ட் ஆகிருக்கணும்... அதான் அன்னைக்கு மலர் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்துருக்கா...” என்று சுந்தரம் உகித்து சொன்னான்.
“இருக்கலாம்.... அதே போல அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி கூட கூட்டிட்டு போயிருக்க வாய்ப்பு இருக்கு... ஏன்னா உன்னோட தங்கச்சி அவங்க கூப்பிடவும் அமைதியா போயிருக்கான்னா இதுவா தான் இருக்கணும் காரணம்...” என்று விக்னேஷ் ஒன்று கூறினான்.
“ஹ்ம்ம்.... எனக்கும் அப்படி தான் தோணுது...” என்று சுந்தரம் சொல்லி கொண்டிருக்க அவனது போன் ஒலித்தது.
ஆனந்த் அழைத்தான். எடுத்து பேசினான்.
“என்னடா சொல்லு...” என்று கேட்டான் சுந்தரம்.
“நான் அந்த பொண்ணு லலிதாவ அவங்க வீட்டுல பத்திரமா விட்டுட்டேன்...” என்று சொல்லி அமைதியானான்.
“ஹ்ம்ம்... சரி நீ வீட்டுக்கு போய்ட்டியா..?” சுந்தரம் கேட்டான்.
சலிப்புடன், “எனக்கு மனமே இல்லடா... வீட்டுக்கு போனா அம்மா கண்டு பிடிச்சுடுவாங்க நடந்தத, என்னோட முகத்த வச்சே...” என்று இறங்கிய குரலில் சொன்னான்.
அவனது சோகம் புரிந்தாலும் என்ன செய்ய என்று நினைத்தான்.
“இப்போ அதுக்காக வீட்டுக்கு போகாம இருப்பியா..? அம்மா அப்போவும் ஏதாவது தப்ப நினைச்சுடுவாங்க... நீ வீட்டுக்கு போ... எல்லாம் நல்லதா நடக்கும்ன்னு நம்பு.
அப்புறம் இன்னொன்னு... நீ இல்ல யாரு சொன்னாலும் சரி, சொல்லலைனாலும் சரி, நான் இந்த கல்யாணத்த நடக்க விட மாட்டேன்...
நீ நம்பிக்கையா இரு... நீயே நடந்தத அம்மா, அப்பா கிட்ட சொல்லாத...
எல்லாம் நல்லதா நடந்த பின்னாடி சொல்லிக்கலாம். இப்போ நீ சாதரணமா இருக்க மாதிரி இரு...” என்று அறிவுரை கூறினான்.
“சரி டா.... ஆனாலும் எப்டிடா என்னால சாதரணமா இருக்க முடியும்..?
உன்னோட தங்கச்சி என்ன கொல்லாம கொன்னுட்டா... மனசாட்சியே இல்லாதவ... திமிருப் பிடிச்சவ...” என்று மனம் தாங்காமல் வாய் விட்டு திட்டினான்.
தங்கையை திட்டவும் அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்னடா மீனாட்சிய திட்டுற...? அவ சூழ்நிலை என்னவோ...? அத தெரியாம இப்டி பேசாத... உன்னோட இடத்துல மட்டும் இருந்து யோசிக்காத... அதுவும் அவ பொண்ணு... அவ நிலைமைல இருந்தா தான் கஷ்டம் தெரியும்...
அதுவும் என்னோட தங்கச்சிய என்கிட்டயே திட்டாத... எனக்கு அது பிடிக்காது...” என்று சுந்தரம் பொங்கி கொண்டு பேசினான்.
ஆனந்தும் விடாமல், “நான் அப்டி இருக்கேனா... அப்போ சார் எப்டி இருக்கீங்க..? நீயும் உன்னோட இடத்துல இருந்து தான் யோசிக்குற... என்னை பத்தி யோசிக்குறியா..?
சுயநலவாதி... உனக்கு உன்னோட குடும்பம் மட்டும் தான் முக்கியம்... நான் மூணாவது மனுஷன் தான... போடா..” என்று கோபமாக சொன்னான்.
அவர்கள் போடும் இந்த சிறுபிள்ளைதனமான சண்டை பார்த்து விக்னேஷ் தான் சற்று எரிச்சல் அடைந்தான்.
“என்னடா ரெண்டு பேரும் விளையாடுறீங்களா..? சின்ன பசங்க மாதிரி பேசிட்டு... பேசாம வச்சுருங்க போன... இல்ல ரெண்டு பேரையும் அடிக்க வேண்டிருக்கும்...” என்று கறாராக அதே நேரத்தில் கேலியாகவும் சொன்னான்.
சுந்தரம் சின்ன பிள்ளை போன்று போனை விக்னேஷிடம் திணித்தான்.
“அப்போ நீயே உன் ப்ரெண்ட் கிட்ட பேசு.... பேசி வைக்க சொல்லு... நான் பேசல...” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டான்.
சுந்தரம், விக்னேஷ் இருவரும் நீலமேக பெருமாள் கோவிலுக்கு சென்றனர். அன்று நடந்த கல்யாணம் ரிஜிஸ்டர் செய்யவில்லை என்பதை ஏற்கனவே தெரிந்து இருந்ததால் அவர்கள் நேராக சென்று கோவில் நிர்வாகத்திடம் பேசினர். கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அன்று பதிந்த கல்யாணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.
கோவிலின் முன் வாசலில் இருக்கும் கேமரா மட்டுமே இயங்கி கொண்டிருப்பதும், பின் வாசல் கேமரா இயங்க வில்லை என்றும் தெரியவந்தது. கல்யாணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் பின் வாசல் வழியாக வந்து இருக்கின்றனர்.
இருந்தாலும் முன் கேமராவில் பதிவானதில் இருந்து அன்று அங்கு மலர் அங்கு வந்தது தெரியவந்தது. மேலும் கல்யாணம் முடிந்த பின்னர் மலரும், கல்யாண பெண் ராஜியும் எதற்காகவோ கோவிலுக்கு வெளியே சென்று இருக்கின்றனர். அதன் பின் சிறிது நேரத்தில் அனைவரும் வேகமாக வெளியே ஓடுவதும் பதிவாகி இருந்தது.
“எல்லாரும் எதுக்கு இவ்ளோ வேகமா வெளில ஓடுறாங்க...?” என்று சந்தேகத்தை கேட்டு கொண்டிருந்தான்.
கோவில் நிருவாக அதிகாரி, “வாசல்ல ஒருத்தருக்கு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு சார்... அதான்...” என்று அவர் விளக்கம் அளித்தார்.
“யாருக்குன்னு தெரியுமா...?” என்று கேட்டான்.
“கல்யாண பெண்ணுக்கு தான் சார்...” என்று சொல்லவும் சுந்தரமும் விக்னேஷ் இருவரும் அதிர்ந்தனர். குழப்பமாக இருந்தது இருவருக்கும்.
“அத நீங்க நேருல பார்த்தீங்களா..?” என்று கேட்டான் சுந்தரம்.
“நான் பார்க்கல சார்... நான் வெளில வர்றதுக்குள்ள அந்த பொண்ண ஹாஸ்பிட்டல் அழைச்சுட்டு போய்ட்டாங்க...
அங்க இருந்தவங்க கல்யாண பொண்ணுக்கு தான் ஆக்சிடென்ட் ன்னு சொன்னாங்க... அன்னைக்கு ரெண்டு கல்யாணம் நடந்தது., அதுவும் ஒரே நேரத்துல... அதுனால எனக்கு எந்த பொண்ணுக்கு நடந்ததுன்னும் சரியா தெரியல...” என்றார்.
“எந்த ஹாஸ்பிட்டல்..?”என்று சுந்தரம் கேட்டான்.
“பக்கத்துல இருக்க நலம் ஆஸ்பத்திரி தான் சார்...” என்று சொல்லவும்,
“சரி.... வேற ஏதாவது டீட்டைல்ஸ் வேணும்னா நான் வர்றேன். தேங்க்ஸ்..” என்று கூறி அங்கிருந்து கிளம்பினர்.
வெளியே வந்ததும், “இப்போ என்ன பண்ண..?” என்று சுந்தரம் கேட்டான்.
“அங்க போய் தான் விசாரிக்கணும்...” என்று கூறினான் விக்னேஷ்.
“ஹ்ம்ம்... ஓகே...
அப்புறம் நீ மலர் நம்பர் வாங்கின... என்னாச்சு..? அவ எங்க இருக்கான்னு தெரிஞ்சதா..?” என்று சுந்தரம் கேட்டான்.
“அவளோட நம்பர் ஆக்டிவா இல்ல... அந்த நம்பர் கடைசியா இருந்தது தஞ்சாவூர் தான்னு சிக்னல் காட்டுது. எனக்கு தெரிஞ்சு அவ நம்பர இங்கேயே தூக்கி போட்டுருப்பாங்க...” என்று சொல்லவும் சுந்தரம் குழப்பமானான்.
“அந்த ராஜி... அந்த பொண்ணுக்கு தான் ஆக்சிடென்ட் ஆகிருக்கணும்... அதான் அன்னைக்கு மலர் ரொம்ப நேரம் அழுதுட்டே இருந்துருக்கா...” என்று சுந்தரம் உகித்து சொன்னான்.
“இருக்கலாம்.... அதே போல அந்த பொண்ணுக்கு உடம்பு சரி இல்லைன்னு சொல்லி கூட கூட்டிட்டு போயிருக்க வாய்ப்பு இருக்கு... ஏன்னா உன்னோட தங்கச்சி அவங்க கூப்பிடவும் அமைதியா போயிருக்கான்னா இதுவா தான் இருக்கணும் காரணம்...” என்று விக்னேஷ் ஒன்று கூறினான்.
“ஹ்ம்ம்.... எனக்கும் அப்படி தான் தோணுது...” என்று சுந்தரம் சொல்லி கொண்டிருக்க அவனது போன் ஒலித்தது.
ஆனந்த் அழைத்தான். எடுத்து பேசினான்.
“என்னடா சொல்லு...” என்று கேட்டான் சுந்தரம்.
“நான் அந்த பொண்ணு லலிதாவ அவங்க வீட்டுல பத்திரமா விட்டுட்டேன்...” என்று சொல்லி அமைதியானான்.
“ஹ்ம்ம்... சரி நீ வீட்டுக்கு போய்ட்டியா..?” சுந்தரம் கேட்டான்.
சலிப்புடன், “எனக்கு மனமே இல்லடா... வீட்டுக்கு போனா அம்மா கண்டு பிடிச்சுடுவாங்க நடந்தத, என்னோட முகத்த வச்சே...” என்று இறங்கிய குரலில் சொன்னான்.
அவனது சோகம் புரிந்தாலும் என்ன செய்ய என்று நினைத்தான்.
“இப்போ அதுக்காக வீட்டுக்கு போகாம இருப்பியா..? அம்மா அப்போவும் ஏதாவது தப்ப நினைச்சுடுவாங்க... நீ வீட்டுக்கு போ... எல்லாம் நல்லதா நடக்கும்ன்னு நம்பு.
அப்புறம் இன்னொன்னு... நீ இல்ல யாரு சொன்னாலும் சரி, சொல்லலைனாலும் சரி, நான் இந்த கல்யாணத்த நடக்க விட மாட்டேன்...
நீ நம்பிக்கையா இரு... நீயே நடந்தத அம்மா, அப்பா கிட்ட சொல்லாத...
எல்லாம் நல்லதா நடந்த பின்னாடி சொல்லிக்கலாம். இப்போ நீ சாதரணமா இருக்க மாதிரி இரு...” என்று அறிவுரை கூறினான்.
“சரி டா.... ஆனாலும் எப்டிடா என்னால சாதரணமா இருக்க முடியும்..?
உன்னோட தங்கச்சி என்ன கொல்லாம கொன்னுட்டா... மனசாட்சியே இல்லாதவ... திமிருப் பிடிச்சவ...” என்று மனம் தாங்காமல் வாய் விட்டு திட்டினான்.
தங்கையை திட்டவும் அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது.
“என்னடா மீனாட்சிய திட்டுற...? அவ சூழ்நிலை என்னவோ...? அத தெரியாம இப்டி பேசாத... உன்னோட இடத்துல மட்டும் இருந்து யோசிக்காத... அதுவும் அவ பொண்ணு... அவ நிலைமைல இருந்தா தான் கஷ்டம் தெரியும்...
அதுவும் என்னோட தங்கச்சிய என்கிட்டயே திட்டாத... எனக்கு அது பிடிக்காது...” என்று சுந்தரம் பொங்கி கொண்டு பேசினான்.
ஆனந்தும் விடாமல், “நான் அப்டி இருக்கேனா... அப்போ சார் எப்டி இருக்கீங்க..? நீயும் உன்னோட இடத்துல இருந்து தான் யோசிக்குற... என்னை பத்தி யோசிக்குறியா..?
சுயநலவாதி... உனக்கு உன்னோட குடும்பம் மட்டும் தான் முக்கியம்... நான் மூணாவது மனுஷன் தான... போடா..” என்று கோபமாக சொன்னான்.
அவர்கள் போடும் இந்த சிறுபிள்ளைதனமான சண்டை பார்த்து விக்னேஷ் தான் சற்று எரிச்சல் அடைந்தான்.
“என்னடா ரெண்டு பேரும் விளையாடுறீங்களா..? சின்ன பசங்க மாதிரி பேசிட்டு... பேசாம வச்சுருங்க போன... இல்ல ரெண்டு பேரையும் அடிக்க வேண்டிருக்கும்...” என்று கறாராக அதே நேரத்தில் கேலியாகவும் சொன்னான்.
சுந்தரம் சின்ன பிள்ளை போன்று போனை விக்னேஷிடம் திணித்தான்.
“அப்போ நீயே உன் ப்ரெண்ட் கிட்ட பேசு.... பேசி வைக்க சொல்லு... நான் பேசல...” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டான்.