MithraPrasath
SM Exclusive
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 14
சுந்தரம் வீட்டிற்கு சென்று கிளம்பினான். சாப்பிட செல்லலாம் என்று எண்ணி விக்னேஷ்க்கு கால் செய்தான். அவனையும் உடன் அழைத்து செல்லலாம் என்று எண்ணி கூப்பிட நினைத்தான். போனை எடுத்த போது அதில் சில மிஸ்டு கால் இருந்தது. எடுத்து பார்த்தான்.., அழகனிடம் இருந்து கால் வந்து இருந்தது.
உடனே அவனுக்கு கால் செய்தான். ஆனால் அப்போது அழகன் எடுக்கவில்லை. சிறிது நேரம் கழித்து ட்ரை பண்ணலாம் என்று நினைத்து விட்டான்.
விக்னேஷ்க்கு கால் செய்து சாப்பிட வர சொன்னான். அவனும் சுந்தரமும் சாப்பிட ஒரு ஹோட்டல் சென்றனர். சாப்பிட்டு விட்டு கிளம்பும் போது அங்கே ஒரு போலீஸ் கான்ஸ்டபில் வந்தார். அதுவும் சுந்தரத்தை தேடி வந்திருந்தார்.
சுந்தரம் என்ன என்று கேட்டதற்கு, பணம் தொலைஞ்சத பத்தி விசாரிக்க இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் வர சொல்லிருப்பதாக கூறிவிட்டு அவர் சென்று விட்டார். விக்னேஷ் தானும் உடன் வருவதாக கூறி ஒன்றாக சென்றான் சுந்தரத்துடன். ஸ்டேஷன் வாசலுக்கு வரும் போதே விக்னேஷ்க்கு வேலை வந்து விட்டது.
“நீ போய் பாரு... எனக்கு கொஞ்சம் வேலை வந்துடுச்சு... நான் கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்...” என்று கூறிவிட்டு வேகமாக சென்று விட்டான்.
ஸ்டேஷன் உள்ளே சென்று பார்த்தான். அங்கு இன்ஸ்பெக்டர் இல்லை. அவர் சுந்தரத்தை காத்திருக்க சொல்லிருப்பதாக கான்ஸ்டபில் வந்து சொன்னார்.
“சார் எங்க போயிருக்கார்...? எப்போ வருவாரு..?” என்று சுந்தரம் கான்ஸ்டபில் ஒருவரிடம் கேட்டான்.
அவர் பதிலே பேசாமல் முறைத்து பார்த்து, “போய் உட்காரு..., அவர் வரவும் நாங்களே சொல்லுவோம்...” என்று கூறிவிட்டு அவர் வேலையை கவனிக்க தொடங்கினார்.
சுந்தரம் அமைதியாக சென்று அமர்ந்தான். நேரம் சென்று கொண்டே இருந்தது. இன்ஸ்பெக்டர் வரவே இல்லை, விக்னேஷும் வரவும் இல்லை. பொறுமை இழந்து வெளியே எழுந்து சென்றான்.
அழகனுக்கு கால் செய்தான். அப்போதும் அழகன் எடுக்கவில்லை. குழப்பமாக இருந்தது. அங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறதோ என்று நினைத்து கவலை கொண்டிருந்தான். அப்போது ஆனந்த்திடம் இருந்து கால் வந்தது.
அட்டென்ட் செய்து காதில் வைத்தான். அவன் பேசுவதற்கு முன்பே ஆனந்த் பேசினான்.
“என்னடா கிளம்பியாச்சா...? போகலாமா..?” என்று கேட்டான்.
“டேய்... நான் ஸ்டேஷன்ல இருக்கேன்.” என்று சொல்லிகொண்டிருக்கும் போதே, இடை புகுந்து,
“அங்க எதுக்கு போன...? அடுத்து என்ன பிரச்சனை..? என்னடா நீ... நமக்கு இருக்க பிரச்சனை எத்தனைன்னு கூட தெரியாத மாதிரி ஒரு புது பிரச்சனைய கொண்டு வந்துட்டியா...? எப்டி தான் இப்டி இருக்கியோ..?” என்று அவனாக கற்பனை செய்து ஏதோ ஏதோ சொல்ல சுந்தரம் கோபமானான்.
“டேய்...! நிறுத்துடா... என்ன நினைச்சுட்டு இருக்க....? என்ன பார்த்த உனக்கு அவ்ளோ மோசமாவா தெரியுது... என்ன எதுன்னு கேட்காமலே உன் இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்க...” என்று கத்தினான்.
“அதுக்கு எதுக்கு நீ கத்துற..? என்னன்னு தான் சொல்லேன்...”என்று தணிந்து சொன்னான்.
“ஆனாலும் எல்லாருக்கும் என்னை பார்த்தா எப்டி தான் தெரியுமோ...?” என்று வர சொல்லிவிட்டு காத்திருக்க வைத்திருப்பதைம், அதில் இவன் வேறு இன்னும் கொஞ்சம் அவனை பேசியது என்று எல்லாம் நினைத்து சலித்து கொண்டு சொன்னான்.
“யாரு என்ன பண்ணா...? எதுக்கு அங்க போன..? சொல்லு..” என்று நிதானமாக கேட்டான்.
“ம்ஹும்... பணம் காணோம்ன்னு கொடுத்த கம்ப்ளைன்ட் க்கு விசாரிக்க வர சொல்லிட்டு அந்த இன்ஸ்பெக்டர் எங்கையோ வெளில வேலைன்னு போய்ட்டார். எங்க போனாருன்னும் தெரியல, எப்போ வருவாருன்னும் தெரியல... கேட்டாலும் இளக்காரமா பார்க்குறாங்க...
ஒரு மணி நேரமா உட்கார்ந்து இருக்கேன் இங்க...” என்று சொன்னான்.
“விக்னேஷ் வச்சு பேச வேண்டியது தான...” என்று அவன் கேட்டான்.
“டேய்... அது அதுக்கு மேல., அவனும் ஏதோ வேலைன்னு ஓடிட்டான். அவனும் இன்னும் வரல.. ஒரே மண்ட வழியா இருக்கு..” என்று சலித்து கொண்டே சொல்ல அப்போது அங்கு விக்னேஷ் வந்தான்.
“என்னடா மண்ட வலிக்குதா..? எதுக்கு..? என்ன இங்க நிற்குற..? நீ வீட்டுக்கு போயிருப்பன்னு நான் நினைச்சேன்..” என்று கூறி கொண்டே பின்னாடி இருந்து வந்தான் விக்னேஷ்.
“விச்சாரிக்கவே இல்லையாம்.. இதுல எங்க நான் வீட்டுக்கு போறது..” என்று சலித்து கொண்டே சொன்னான்.
“டேய்... நான் இருக்கேன் போன் ல...” என்று சொல்லி ஆனந்த் எரிச்சல் அடைந்தான்.
“நான் உன் கிட்ட அப்பறம் பேசுறேன். நீ வை போன...” என்று கூறி கட் செய்தான். பின் இருவரும் உள்ளே சென்றனர்.
விக்னேஷை பார்த்த பின் விக்னேஷுடன் சேர்த்து சுந்தரத்திற்கும் அங்கு கொஞ்சம் மரியாதை மற்றும் செய்திகள் உடனுக்குடன் தெரியவும் வந்தது.
இன்ஸ்பெக்டர் அவசர வேலைக்காக சென்று உள்ளதால் தான் இவ்வளவு நேரம் ஆகிறது என்று தெரிய வந்தது. விக்னேஷ் இன்னும் வேலை இருப்பதாக கூறி சென்று அங்கிருந்த கான்ஸ்டபில் இருவருடன் ஏதோ பேசி கொண்டிருந்தான்.
அவர்களுடனே இருந்தான் விக்னேஷ். சிறிது நேரத்தில் அங்கு இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் வரவும் அவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். இவனை அங்கு யாரும் கவனிக்கவில்லை.அடுத்தும் அரைமணி நேரம் சென்றது.
பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போய் கொண்டிருந்தது சுந்தரத்திற்கு. பின் விக்னேஷ்க்கு கால் வந்தது. உடனே அவசரமாக அவனும் இன்னும் இரண்டு கான்ஸ்டபில் கிளம்பினர். விக்னேஷ் போகும் போது சுந்தரத்தை பார்த்து, “கொஞ்சம் வேலை வந்துருச்சு.. என்னால வர முடியாது. நீயும் ஆனந்தும் கவனிச்சுக்கோங்க...” என்று கூறிவிட்டு வேகமாக புறப்பட்டு சென்று விட்டான்.
அதன் பின் ஒரு கான்ஸ்டபில் சென்று இன்ஸ்பெக்டரிடம் சுந்தரத்தை கை காட்டி ஏதோ சொல்கிறார். அவர் அவனை வர சொல்லி அழைத்தார்.
“என்ன கேஸ்..?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிலிடம்.
அவர் ஏதோ பைல் ஒன்றை எடுத்து கொடுத்தார். பார்த்துவிட்டு ஒருநிமிடத்தில், “ஹ்ம்ம்ம்.... சொல்லுப்பா... எப்படி தொலைஞ்சு போச்சு..? உனக்கு யாரு மீதாது சந்தேகம் இருக்கா..?” என்று கேட்டார்.
“சார் எப்படி தொலைஞ்சு போச்சு., எங்க தொலைஞ்சு போச்சுன்னு எனக்கு சரியா தெரியல...” என்று சொல்லவும்,
இன்ஸ்பெக்டர் அவனை ஒருமுறை நிமிர்ந்து பார்த்தார். பின்,
“சரி... அப்போ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு..”என்று சொன்னார் நிதானமாகவே.
அவனும் நடந்ததை தெளிவாக சொன்னான். சொல்லிவிட்டு அவரை பார்த்தான்.
“சரி இதுல உனக்கு எங்க தொலைஞ்சு இருக்கும்ன்னு ஏதாவது சந்தேகம் இருக்கா..?” என்று கேட்டார்.
“சார் அது அந்த கடைல நான் டீ சாப்பிட நிப்பாட்டின அப்போ தான் யாராது எடுத்துருக்கணும் இல்ல அப்போ பார்த்துட்டு பின்னாடியே வந்து நான் வீட்டுக்குள்ள போன பின்னாடி வந்து எடுத்துருக்கணும்...”என்று சொன்னான்.
“அது எந்த கடைன்னு சொல்லு... நான் கான்ஸ்டபில் அனுப்பி விசாரிக்க சொல்றேன். அதே போல அங்க வீட்டு பக்கமும் விசாரிக்கலாம்.” என்று சொல்லி கொண்டிருக்கும் போதே,
அவன் இடை மறித்து, “சார் எனக்கு அங்க எதிர் வீட்டுல இருக்க கமலா அக்கா மேல சந்தேகம் வந்தது. ஆனா அவங்க பேசுறது எல்லாம் அப்டி இல்லைன்னு சொல்றாங்க. நாங்க விசாரிக்க போனப்ப அவங்க ‘எதுக்கு எடுத்தாலும் இங்கயே வந்தா போலீஸ் கிட்ட நான் கம்ப்ளைன்ட் கொடுப்பேன்’ அப்டின்னு சொல்லி எங்கள விரட்டி விட்டுட்டாங்க. இருந்தாலும் ஒருமுறை அவங்க கிட்ட நல்லா விசாரிச்சா தான் தெரியும்.
ஏனா அவங்க அன்னைக்கு அதிக நேரம் அவங்க தம்பி வர்றாங்கன்னு சொல்லி வெளிலையே இருந்துருக்காங்க.. அதான் தெரிஞ்சுருக்கலாம் ன்னு கேட்க போனோம்.” என்று தெளிவாக அதே நேரம் மனதில் இருந்த சந்தேகத்தை தெளிவாக எடுத்து சொன்னான்.
இன்ஸ்பெக்டரும் சுந்தரத்தை ஒரு கான்ஸ்டபில் உடன் அனுப்பி வைத்தார். சென்று அந்த கடைக்கு அருகில் விசாரிக்க சென்றனர். ஆனால் அங்கு எந்த விவரமும் கிடைக்க வில்லை. அதிலே நேரம் சென்று கொண்டிருந்தது.
அடிக்கொருமுறை ஆனந்த் கால் செய்து கொண்டிருந்தான். கடைசியாக அவனை மட்டும் சென்று பேச சொல்லி சொன்னான் சுந்தரம். முதலில் ஆனந்த் தயங்கினான். பின் மீனாட்சிகாக சரி என்று சொல்லி கிளம்பினான்.
இங்கு சுந்தரத்தை இன்ஸ்பெக்டர் விடவே இல்லை. அடுத்து அங்கு தெருவில் விசாரிக்க அவரும் உடன் வந்தார். கமலா அக்காவின் தம்பியை விசாரிக்க தனியாக ஒரு கான்ஸ்டபில் ஒருவரை அனுப்பியிருந்தார்.
அங்கு சென்று விசாரித்தும் எந்த தகவலும் சரி இல்லை என்று கூறி இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் சென்று விட்டார். சுந்தரமும் உடன் சென்றான். அங்கு சென்ற பின் இன்ஸ்பெக்டரிடம் பேசி கொண்டிருந்தான்.
அப்போது ஆனந்திடம் இருந்து கால் வந்தது. தனியாக சென்று என்ன என்று பேசினான். ஆனந்தின் குரலில் பதட்டம் அதிகமாக தெரிந்தது.
“என்னடா..... அதான் நீ போ நான் வர்றேன்னு சொன்னேன்ல...? அப்பறம் என்ன..?” என்று சலித்து கொண்டே கேட்டான் சுந்தரம்.
“டேய்... நான் இங்க வந்துட்டேன்டா... ஆனா இங்க வீடு பூட்டி இருக்கு..” என்று பதட்டமாக கூறினான்.
“என்ன சொல்ற... அதெப்படி...? நீ அழகன் நம்பர்க்கு கால் பண்ணி கேட்டு பாரு..” என்று சொன்னான்.
“நான் உன் தம்பி நம்பர்க்கும் ட்ரை பண்ணிட்டேன், உன்னோட தங்கச்சி நம்பர்க்கும் ட்ரை பண்ணிட்டேன்... யாரும் எடுக்கல...” என்று சற்று கோபமாக சொன்னான்.
சுந்தரத்திற்கு அடுத்து பதற்றம் தொற்றி கொண்டது.
“ஒரு வேளை தங்கச்சிக்கு எதுவும் உடம்பு சரி இல்லாம போயிருக்குமோ..?” என்று அவன் சொல்ல,
“எனக்கு என்னம்மோ வேற தோணுது..” என்று அவன் சொல்ல
“என்ன..?”
“உன்னோட தங்கச்சிய இப்போவே கல்யாணம் பண்ணிக்க கூட்டிட்டு போயிட்டாங்களோ..? அப்டின்னு தான்...” என்று சொல்லி சுந்தரத்தை மேலும் கலங்கடித்தான் ஆனந்த்.
“அச்ச்சோ.... அப்டியும் நடக்க வாய்ப்பு இருக்கு தான்... அதுக்கு தான் அழகன் காலைல எனக்கு கால் பண்ணிருப்பானோ...?”என்று பதறி கொண்டே சொல்லிகொண்டிருந்தான்.
“என்னடா சொல்ற..? அவன் எப்போ கால் பண்ணான்..?” என்று பதட்டமாகவே கேட்டான்.
“நான் குளிக்கும் போது கால் வந்துருந்தது. நான் வந்துட்டு கூப்பிட்டப்ப எடுக்கல..” என்று தயங்கி கொண்டு யோசித்து கொண்டே சொன்னான்.
“என்னடா இப்போ யோசிச்சு பேசிட்டு இருக்க.. அப்போவே உனக்கு சந்தேகம் வரலையா..? என்னடா நீ இப்டி இருக்க..?”என்று திட்டி கொண்டே பல்லை கடித்தான்.
“சரி நீ டென்ஷன் ஆகாத... பக்கத்துல விசாரிச்சு பாரு.. நான் ஸ்டேஷன் ல சொல்லிட்டு வர்றேன்..” என்று கூறிவிட்டு போனை வைத்தான்.
உள்ளே சென்று இன்ஸ்பெக்டரிடம் சொன்னான். அங்கு நடப்பவைகளை எடுத்து கூறினான். உடனே இன்ஸ்பெக்டர்,
“நான் அங்க பக்கத்துல இருக்க ஸ்டேஷன் போலீஸ விசாரிக்க அனுப்ப சொல்றேன்... நீங்க பயப்படாம போங்க..” என்று கூறி அங்கு தஞ்சை போலீஸ்க்கு கால் செய்து இன்பார்ம் செய்தார்.
சுந்தரம் கிளம்பி வேகமாக சென்றான். அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்தான். ஆனந்த் பதட்டமாக நின்று கொண்டிருந்தான்.
“டேய் நான் பக்கத்துல விசாரிச்சேன். அவங்க அந்த பரமு மீனாட்சிய கார்ல எங்கையோ கூட்டிட்டு போனதா சொல்றாங்க...”என்று சொல்லவும்,
“அப்போ அழகன், பாட்டி...??” என்று சந்தேகமாக கேட்டான்.
“அவங்கள பார்க்கலையாம்.. அவங்க வெளில வந்த மாதிரி இல்லைன்னு தான் எல்லாரும் சொல்றாங்க... இப்போ அவன் மீனாட்சிய எங்க கூட்டிட்டு போயிருப்பன்னு எப்டி கண்டு பிடிக்குறது..?” என்று கோபமாக கேட்டான்.
“எனக்கும் குழப்பமாவே இருக்கே... தம்பிக்கு வேற என்ன ஆச்சுன்னு தெரியல...” என்று பதட்டத்தோடு சொல்லிக் கொண்டிருந்தான்.
இருவருக்கும் மண்டையை குழப்பிவிடும் நிலையில் இருந்தது சூழல். புரியாமல் திணறி கொண்டு, அடுத்து என்ன செய்ய என்று யோசித்து கொண்டிருந்தனர். ஆனந்த் மனம் கட்டுகடங்காத கோபத்தில் கொந்தளித்து கொண்டிருந்தது.