MithraPrasath
SM Exclusive
ஹலோ ப்ரெண்ட்ஸ்..
எனக்கு ஆதரவு தந்து இதுவரை கதையை படித்த அனைவருக்கும், லைக், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி. இந்த அத்தியாயத்தோடு கதை முடிவடைகிறது. கதையை பற்றிய உங்களது கருத்துக்களை சொல்லவும். என்னோட கதைல உங்களுக்கு பிடிச்சது என்ன..? பிடிக்காதது என்ன..? அத எல்லாம் மறக்காம சொல்லுங்க. நான் கதை எழுதுறதுல எதை மாற்றி கொண்டா நல்லா இருக்கும்.. கதைல எது இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் அப்டின்னு நீங்க நினைக்கிறதையும் மறக்காம சொல்லுங்க..
தேங்க்ஸ்...
அத்தியாயம் 20
பல வருடத்திற்கு பிறகு விக்னேஷை பார்க்கவும் சந்தோஷத்தில் வேகமாக சென்று, அவனை கட்டி தழுவி வரவேற்றான் சுந்தரம். ஆனால் விக்னேஷின் முகத்தில் அந்த சந்தோஷம் துளியும் இல்லாமல் இருந்தது. ஆனந்தும் வந்து விக்னேஷை சந்தோஷமாக வரவேற்றான்.
“எப்டி விக்னேஷ் இருக்க..? எவ்ளோ வருசமாச்சு பார்த்து... உன்னை காண்டக்ட் பண்ணவே முடியலையே...? எங்க போன இவ்ளோ நாள்... இப்போ எப்டி அதுவும் மலர் கல்யாணத்தப்போ இங்க சரியா வந்த..?” என்று சுந்தரம் புரியாமல் விடாமல் கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.
விக்னேஷ் எதோ போல நின்றிந்தான். சுந்தரமோ, ஆனந்தோ அதை கவனிக்கவில்லை. சிவா அதை கவனித்து, “என்ன விக்னேஷ் அண்ணா., எதுவுமே பேச மாட்டறீங்க..? உங்க முகமே சரி இல்ல.. எதுவும் பிரச்சனையா அண்ணா...?” என்று கேட்டான்.
“ஆமாம் ஒரு முக்கியமான விஷயமா வந்துருக்கேன்... ஒரு பிரச்சனை. அந்த பரமு ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான்...”என்று விக்னேஷ் சொல்லும் போதே அனைவரும் அதிர்ச்சியாகினர். இந்த ஐந்து வருடங்களும் இருந்த நிம்மதி அவன் கூறிய பரமு தப்பித்துவிட்டான் என்றதில் காணாமல் போனது.
ஆனந்த் பதறி கொண்டு, “ஐயோ... என்னடா சொல்ற..? எப்படி தப்பிச்சான்..? இப்போ எங்க இருக்கான்..? அவன பிடிச்சுட்டீங்களா..?!!” என்று பயத்துடன் கேட்டான்.
“நேற்று அவங்க அம்மா அவன பார்த்து பேசிருக்காங்க.. நேற்று நைட்டே ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான் அவன்.. கண்டிப்பா அவன் இங்க தான் வந்துருக்கணும்.. அதான் உடனே இங்க நான் வந்தேன்...” என்று சொல்லும் போதே,
“எதுக்காக வந்துருக்கான்...? என்ன பண்ண போறான்..?” சிவாவும் பயத்துடன் கேட்டான்.
“அது தெரியல.. அவங்க அம்மாவும் இப்போ எங்கன்னு தெரியல..? போலீஸ் ரெண்டு பேரையுமே தீவிரமா தேடுறாங்க... எப்டியும் பிடிச்சுருவாங்க... ”
“இப்போ மலருக்கு தான் கல்யாணம்... அவள எதுவும் பண்ண வந்துருக்கானா..?” என்று சுந்தரம் சந்தேகத்தோடு கேட்டான்.
“தெரியல...” என்று விக்னேஷ் குழப்பத்துடன் சொல்லவும்,
“மலர்... மலர்... எங்க இருக்க..?” என்று வீடு முழுவதும் தேட ஆரம்பித்தனர் அனைவரும்.
மலர் வீட்டின் பின் பக்கத்தில் இருந்து காதில் ஹெட் போனுடன் வந்தாள். அவளை பார்த்த பின்னர் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி மீனாட்சிய அவங்க பாட்டி வந்து பார்த்தாங்க.. ஒருவேளை மீனாட்சிய..” என்று ஆனந்து பதற,
மீனாட்சி அங்கிருந்து, “நான் இங்க தான் இருக்கேன்.. ஒருவேளை குழந்தைய எதுவும் பண்ண வந்துருக்கானா..?” என்று கேட்டால் அவளும் பயந்து.
“குழந்தை பத்தரமா தான் இருக்கா... அழகன் கடைக்கு கூட்டிட்டு போகுறத பார்த்தேன். கூட ஒரு போலீஸ் அனுப்பிருக்கேன். அவங்க பத்தரமா வந்துருவாங்க...
நீங்க நினைக்கிற மாதிரி அவன் அதுக்காக வந்த மாதிரி தெரியல... அப்டி குழந்தைய ஏதாவது பண்ணனும் ன்னு நினைச்சுருந்தா, குழந்தை பிறந்தப்போவே வந்துருக்கணும்...”என்று விக்னேஷ் யோசித்து கொண்டே சொன்னான்.
“அப்பறம் எதுக்கு வந்துருக்கான்..?” என்று கேட்டான் சுந்தரம்.
“எனக்கு தெரிஞ்சு, அன்னைக்கு மீனாட்சி அடிச்சதுல அவனுக்கு ஆண்மையே போய்டுச்சு... அதுல இருந்து ரொம்ப கோபமா இருந்தான். அதுனால கூட வந்திருக்கலாம்..” என்று விக்னேஷ் சொன்னான்.
“அது அவனுக்கு கிடைச்ச சரியான தண்டனை... அப்படி இருந்தும் அவன் நம்ம மேல கோபமா இருக்கானா..?” என்று சிவா கோபமாக கேட்டான்.
மீனாட்சி குழப்பமாக விக்னேஷை பார்த்தாள்.
“அண்ணா அன்னைக்கு நான் அவன அடிக்கல...” என்று சொன்னாள்.
மற்றவர்கள் புரியாமல் குழப்பமாக பார்க்க,
“அன்னைக்கு நான் தான் அவன அப்படி அடிச்சேன்.. மீனாட்சிய காப்பாற்ற வேற வழி தெரியல எனக்கு. அதான் அப்டி பண்ணிட்டேன். ஆனா அவனுக்கு அப்டி ஆகணும்ன்னு நினைச்சு பண்ணல நான்..” என்று வருத்ததோடு சொன்னான் சுந்தரம்.
“அன்னைக்கு நீ தான் அடிச்சியா..?” என்று ஆனந்த் கேட்டான்.
மீனாட்சி பதற்றத்துடன், “அன்னைக்கு பாட்டி என்கிட்ட பேசிட்டு, அண்ணி கிட்ட தான் பேசுனாங்க.. அப்போ...” என்று இழுத்தாள்.., “அண்ணி எங்க இருக்காங்க..?” என்று பயந்து போய் கேட்டாள்.
அப்போது தான் அங்கே அபி இல்லாததை உணர்ந்தான் சுந்தரம். அவனுக்குள் பயம் அதிகமாகியது. அபியை வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்புறம் மோட்டர் போடா சென்றதாக மலர் சொல்லவும், அங்கு விரைந்தனர். மோட்டர் ரூம் திறந்து இருந்தது. ஆனால் உள்ளே அபி இல்லை. சுந்தரத்திற்கு பதற்றம் அதிகமானது.
“அவள எதுக்கு அவன் கடத்தணும்..?”என்று கோபத்துடம் புரியாமல் கேட்டான் ஆனந்த்.
“இப்போ அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா... என்னை பழி வாங்குறதுக்காக அவள கடத்திருக்கணும்...” என்று கூறி சுந்தரம் மனமுடைந்து போய் கீழே சாய்ந்தான். அவனை விக்னேஷ் பிடித்து ஒரு இடத்தில் அமர வைத்தான். தகவல் சொல்லி அவளை தேட சொன்னான் விக்னேஷ்.
“என்ன அண்ணா அண்ணி நிஜமாவே கர்ப்பமா இருக்காங்களா..? இத ஏன் முன்னாடியே சொல்லல நீங்க ரெண்டு பேரும்..?”என்று வருத்ததுடன் கேட்டான் சிவா.
“இவ்ளோ நாள் கழிச்சு அண்ணி கர்ப்பமா இருக்காங்க.. அவங்கள பத்தரமா பார்த்துட்டு இருக்க வேண்டியது அவசியம். இத முன்னாடியே சொல்லிருந்த இத்தனை பிரச்சனை வந்துருக்காது அண்ணா... அவங்கள ரெஸ்ட் எடுக்க வச்சு, நாங்க அவங்கள பத்தரமா பார்த்துட்டு இருந்துருப்போம்..” என்று சொல்லி மீனாட்சியும் வருத்தப்பட்டாள்.
“உங்க கிட்ட சொல்லகூடாதுன்னு நாங்க நினைக்கல... டாக்டர் கிட்ட முழுசா செக் பண்ணிட்டு அவங்க கன்பார்ம் பண்ண அப்பறம் உங்க எல்லாரு கிட்டயும் சொல்லலாம்ன்னு இருந்தோம். உங்க எல்லாருக்கும் நம்பிக்கை தந்து அப்பறம் அது இல்லாம போச்சுன்னா, உங்கள கஷ்டபடுத்துற மாதிரி ஆகிடும். அதான் நாங்க சொல்லல... வேற எந்த காரணமும் இல்ல...” என்று சோகத்துடன் சொல்லி முடிக்கும் போதே சுந்தரத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அனைவரும் இப்போது என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தனர்.
“அவள எங்க கடத்திட்டு போனானோ..? என்னால அவளுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்துருச்சே...” என்று சுந்தரம் புலம்பி கொண்டிருந்தான்.
அப்போது அழகன் வேகமாக ஓடி வந்தான்.
“அண்ணா... அண்ணிய பாட்டி எங்கையோ கூட்டிட்டு போறாங்க.. எங்க போறாங்க.. உங்களுக்கு தெரியுமா..?” என்று சந்தேகத்துடன் கேட்டு கொண்டே வந்தான்.
உடனே விக்னேஷ், “நல்லா பார்த்தியா..? அது அபி தானா..?”
“ஆமாம் அண்ணா... அது அண்ணியே தான்.. எதுவும் பிரச்சனையா..?” என்று பதறி கொண்டு கேட்டான்.
“எதுல கூட்டிட்டு போறாங்க..?” என்று கேட்டான் விக்னேஷ்.
“ஒரு பழைய அம்பாசிடர் வண்டி...” என்று கூறி சுந்தரத்தின் அருகில் சென்று அமர்ந்து அவனை ஆறுதலாக கையை பற்றி நடந்ததை வினவினான்.
எனக்கு ஆதரவு தந்து இதுவரை கதையை படித்த அனைவருக்கும், லைக், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி.. நன்றி. இந்த அத்தியாயத்தோடு கதை முடிவடைகிறது. கதையை பற்றிய உங்களது கருத்துக்களை சொல்லவும். என்னோட கதைல உங்களுக்கு பிடிச்சது என்ன..? பிடிக்காதது என்ன..? அத எல்லாம் மறக்காம சொல்லுங்க. நான் கதை எழுதுறதுல எதை மாற்றி கொண்டா நல்லா இருக்கும்.. கதைல எது இருந்தா இன்னும் நல்லா இருந்துருக்கும் அப்டின்னு நீங்க நினைக்கிறதையும் மறக்காம சொல்லுங்க..
தேங்க்ஸ்...
இடைவிடாத இன்னல்கள்
அத்தியாயம் 20
பல வருடத்திற்கு பிறகு விக்னேஷை பார்க்கவும் சந்தோஷத்தில் வேகமாக சென்று, அவனை கட்டி தழுவி வரவேற்றான் சுந்தரம். ஆனால் விக்னேஷின் முகத்தில் அந்த சந்தோஷம் துளியும் இல்லாமல் இருந்தது. ஆனந்தும் வந்து விக்னேஷை சந்தோஷமாக வரவேற்றான்.
“எப்டி விக்னேஷ் இருக்க..? எவ்ளோ வருசமாச்சு பார்த்து... உன்னை காண்டக்ட் பண்ணவே முடியலையே...? எங்க போன இவ்ளோ நாள்... இப்போ எப்டி அதுவும் மலர் கல்யாணத்தப்போ இங்க சரியா வந்த..?” என்று சுந்தரம் புரியாமல் விடாமல் கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.
விக்னேஷ் எதோ போல நின்றிந்தான். சுந்தரமோ, ஆனந்தோ அதை கவனிக்கவில்லை. சிவா அதை கவனித்து, “என்ன விக்னேஷ் அண்ணா., எதுவுமே பேச மாட்டறீங்க..? உங்க முகமே சரி இல்ல.. எதுவும் பிரச்சனையா அண்ணா...?” என்று கேட்டான்.
“ஆமாம் ஒரு முக்கியமான விஷயமா வந்துருக்கேன்... ஒரு பிரச்சனை. அந்த பரமு ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான்...”என்று விக்னேஷ் சொல்லும் போதே அனைவரும் அதிர்ச்சியாகினர். இந்த ஐந்து வருடங்களும் இருந்த நிம்மதி அவன் கூறிய பரமு தப்பித்துவிட்டான் என்றதில் காணாமல் போனது.
ஆனந்த் பதறி கொண்டு, “ஐயோ... என்னடா சொல்ற..? எப்படி தப்பிச்சான்..? இப்போ எங்க இருக்கான்..? அவன பிடிச்சுட்டீங்களா..?!!” என்று பயத்துடன் கேட்டான்.
“நேற்று அவங்க அம்மா அவன பார்த்து பேசிருக்காங்க.. நேற்று நைட்டே ஜெயில்ல இருந்து தப்பிச்சுட்டான் அவன்.. கண்டிப்பா அவன் இங்க தான் வந்துருக்கணும்.. அதான் உடனே இங்க நான் வந்தேன்...” என்று சொல்லும் போதே,
“எதுக்காக வந்துருக்கான்...? என்ன பண்ண போறான்..?” சிவாவும் பயத்துடன் கேட்டான்.
“அது தெரியல.. அவங்க அம்மாவும் இப்போ எங்கன்னு தெரியல..? போலீஸ் ரெண்டு பேரையுமே தீவிரமா தேடுறாங்க... எப்டியும் பிடிச்சுருவாங்க... ”
“இப்போ மலருக்கு தான் கல்யாணம்... அவள எதுவும் பண்ண வந்துருக்கானா..?” என்று சுந்தரம் சந்தேகத்தோடு கேட்டான்.
“தெரியல...” என்று விக்னேஷ் குழப்பத்துடன் சொல்லவும்,
“மலர்... மலர்... எங்க இருக்க..?” என்று வீடு முழுவதும் தேட ஆரம்பித்தனர் அனைவரும்.
மலர் வீட்டின் பின் பக்கத்தில் இருந்து காதில் ஹெட் போனுடன் வந்தாள். அவளை பார்த்த பின்னர் தான் அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது.
“ரெண்டு நாளைக்கு முன்னாடி மீனாட்சிய அவங்க பாட்டி வந்து பார்த்தாங்க.. ஒருவேளை மீனாட்சிய..” என்று ஆனந்து பதற,
மீனாட்சி அங்கிருந்து, “நான் இங்க தான் இருக்கேன்.. ஒருவேளை குழந்தைய எதுவும் பண்ண வந்துருக்கானா..?” என்று கேட்டால் அவளும் பயந்து.
“குழந்தை பத்தரமா தான் இருக்கா... அழகன் கடைக்கு கூட்டிட்டு போகுறத பார்த்தேன். கூட ஒரு போலீஸ் அனுப்பிருக்கேன். அவங்க பத்தரமா வந்துருவாங்க...
நீங்க நினைக்கிற மாதிரி அவன் அதுக்காக வந்த மாதிரி தெரியல... அப்டி குழந்தைய ஏதாவது பண்ணனும் ன்னு நினைச்சுருந்தா, குழந்தை பிறந்தப்போவே வந்துருக்கணும்...”என்று விக்னேஷ் யோசித்து கொண்டே சொன்னான்.
“அப்பறம் எதுக்கு வந்துருக்கான்..?” என்று கேட்டான் சுந்தரம்.
“எனக்கு தெரிஞ்சு, அன்னைக்கு மீனாட்சி அடிச்சதுல அவனுக்கு ஆண்மையே போய்டுச்சு... அதுல இருந்து ரொம்ப கோபமா இருந்தான். அதுனால கூட வந்திருக்கலாம்..” என்று விக்னேஷ் சொன்னான்.
“அது அவனுக்கு கிடைச்ச சரியான தண்டனை... அப்படி இருந்தும் அவன் நம்ம மேல கோபமா இருக்கானா..?” என்று சிவா கோபமாக கேட்டான்.
மீனாட்சி குழப்பமாக விக்னேஷை பார்த்தாள்.
“அண்ணா அன்னைக்கு நான் அவன அடிக்கல...” என்று சொன்னாள்.
மற்றவர்கள் புரியாமல் குழப்பமாக பார்க்க,
“அன்னைக்கு நான் தான் அவன அப்படி அடிச்சேன்.. மீனாட்சிய காப்பாற்ற வேற வழி தெரியல எனக்கு. அதான் அப்டி பண்ணிட்டேன். ஆனா அவனுக்கு அப்டி ஆகணும்ன்னு நினைச்சு பண்ணல நான்..” என்று வருத்ததோடு சொன்னான் சுந்தரம்.
“அன்னைக்கு நீ தான் அடிச்சியா..?” என்று ஆனந்த் கேட்டான்.
மீனாட்சி பதற்றத்துடன், “அன்னைக்கு பாட்டி என்கிட்ட பேசிட்டு, அண்ணி கிட்ட தான் பேசுனாங்க.. அப்போ...” என்று இழுத்தாள்.., “அண்ணி எங்க இருக்காங்க..?” என்று பயந்து போய் கேட்டாள்.
அப்போது தான் அங்கே அபி இல்லாததை உணர்ந்தான் சுந்தரம். அவனுக்குள் பயம் அதிகமாகியது. அபியை வீடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. பின்புறம் மோட்டர் போடா சென்றதாக மலர் சொல்லவும், அங்கு விரைந்தனர். மோட்டர் ரூம் திறந்து இருந்தது. ஆனால் உள்ளே அபி இல்லை. சுந்தரத்திற்கு பதற்றம் அதிகமானது.
“அவள எதுக்கு அவன் கடத்தணும்..?”என்று கோபத்துடம் புரியாமல் கேட்டான் ஆனந்த்.
“இப்போ அவ ப்ரெக்னன்ட்டா இருக்கா... என்னை பழி வாங்குறதுக்காக அவள கடத்திருக்கணும்...” என்று கூறி சுந்தரம் மனமுடைந்து போய் கீழே சாய்ந்தான். அவனை விக்னேஷ் பிடித்து ஒரு இடத்தில் அமர வைத்தான். தகவல் சொல்லி அவளை தேட சொன்னான் விக்னேஷ்.
“என்ன அண்ணா அண்ணி நிஜமாவே கர்ப்பமா இருக்காங்களா..? இத ஏன் முன்னாடியே சொல்லல நீங்க ரெண்டு பேரும்..?”என்று வருத்ததுடன் கேட்டான் சிவா.
“இவ்ளோ நாள் கழிச்சு அண்ணி கர்ப்பமா இருக்காங்க.. அவங்கள பத்தரமா பார்த்துட்டு இருக்க வேண்டியது அவசியம். இத முன்னாடியே சொல்லிருந்த இத்தனை பிரச்சனை வந்துருக்காது அண்ணா... அவங்கள ரெஸ்ட் எடுக்க வச்சு, நாங்க அவங்கள பத்தரமா பார்த்துட்டு இருந்துருப்போம்..” என்று சொல்லி மீனாட்சியும் வருத்தப்பட்டாள்.
“உங்க கிட்ட சொல்லகூடாதுன்னு நாங்க நினைக்கல... டாக்டர் கிட்ட முழுசா செக் பண்ணிட்டு அவங்க கன்பார்ம் பண்ண அப்பறம் உங்க எல்லாரு கிட்டயும் சொல்லலாம்ன்னு இருந்தோம். உங்க எல்லாருக்கும் நம்பிக்கை தந்து அப்பறம் அது இல்லாம போச்சுன்னா, உங்கள கஷ்டபடுத்துற மாதிரி ஆகிடும். அதான் நாங்க சொல்லல... வேற எந்த காரணமும் இல்ல...” என்று சோகத்துடன் சொல்லி முடிக்கும் போதே சுந்தரத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அனைவரும் இப்போது என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்தனர்.
“அவள எங்க கடத்திட்டு போனானோ..? என்னால அவளுக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்துருச்சே...” என்று சுந்தரம் புலம்பி கொண்டிருந்தான்.
அப்போது அழகன் வேகமாக ஓடி வந்தான்.
“அண்ணா... அண்ணிய பாட்டி எங்கையோ கூட்டிட்டு போறாங்க.. எங்க போறாங்க.. உங்களுக்கு தெரியுமா..?” என்று சந்தேகத்துடன் கேட்டு கொண்டே வந்தான்.
உடனே விக்னேஷ், “நல்லா பார்த்தியா..? அது அபி தானா..?”
“ஆமாம் அண்ணா... அது அண்ணியே தான்.. எதுவும் பிரச்சனையா..?” என்று பதறி கொண்டு கேட்டான்.
“எதுல கூட்டிட்டு போறாங்க..?” என்று கேட்டான் விக்னேஷ்.
“ஒரு பழைய அம்பாசிடர் வண்டி...” என்று கூறி சுந்தரத்தின் அருகில் சென்று அமர்ந்து அவனை ஆறுதலாக கையை பற்றி நடந்ததை வினவினான்.