ஒரு பெரிய பாறாங்கல்ல உளியால அடிச்சி அடிச்சிதான் சிற்பம் செய்வாங்க! அது எவ்ளோக்கெவ்ளா அடி தாங்குதோ அவ்ளோக்கவ்ளோ அழகான சிற்பமா மாறும்! அப்பதான் அத கோவில்ல வெச்சு எல்லாரும் கும்பிடுவாங்க..... அது முதல் அடிலயே ஒடஞ்சிருச்சுன்னா.... அத கோவில் வாசல்ல படியில வெச்சுடுவாங்க..... அத எல்லாரும் மிதிச்சி மிதிச்சிதான் கோவிலுக்குள்ள போவாங்க.....அது மாதிரி, கடவுள் நம்மள அடி மேல அடி குடுத்து அழகான சிற்பமா மாத்திகிட்டு இருக்காரு..... நாம நல்லா வரணும்ல.... நாம அவர் அடிக்கற முதல் அடியிலயே ஒடஞ்சி போய்ட்டோம்னா நம்ம மேல எல்லாரும் ஏறி மிதிச்சிட்டு போய்ட்டே இருப்பாங்க..... அதுக்கு நாம எடம் குடுக்க கூடாது வாசு....." என்றாள்.