• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Idhu Irul Alla! - 26 (Final)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

How was the Story?

  • Wow

    Votes: 22 51.2%
  • Good

    Votes: 19 44.2%
  • Okay

    Votes: 1 2.3%
  • I don't like

    Votes: 1 2.3%

  • Total voters
    43

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
பாஸ்கர் மாமாவையும் மாற்றி அருமையாக கதையை நிறைவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
 




Annapurani Dhandapani

மண்டலாதிபதி
Joined
Jan 31, 2018
Messages
346
Reaction score
3,223
Location
Chennai
Very nice and interesting story.
நன்றி ஹரிணி
Thank you for this lovely story Annapurani. Regards and Best Wishes.
நன்றி விஜயா
hi poorani
rompa arumayaana novelpa rendu appavi nalla ullangalin valliku marinthiduvathupol irunthathu end part bhaskarin thavarai thiruthikollum mudivu superp thosa nivarthi kalyanam endraalum ithu avargal iruvarin vallvin vidiyallukkaana saavi superp palliyaana appavigalaana padmini yamini vaasu ivargalaipondravargalin valgai namakku oru padipinnai nice and thanks for social awarness novelpa
நன்றி சகோதரி வடிவேலம்மாள்!
Nice ending kalakitenga
நன்றி பிரியா
Nice story
நன்றி சஹானிகா
(y)(y)(y)Very nice ending....superb story mam. Atlast baskar mama vecha twist dhan highlight;) ....superb story:):)
நன்றி ரிஹா
superb story sis baskar mama yaariyum nalla meruti vittaru. avar yaminiyai magalai thathu etuthu kondathu arumai........ arumai..... arumai sis(y)(y)(y)(y)(y):love::love::love::love:padminiyin kulanthaiyai valartha krishna& pavadharini.......... rukmini,ishu,sowmi ovoru charactersum arumai.
நன்றி ஸ்ரீதேவி
Very Nice ending
நன்றி சகோதரர் நடராஜன்
Super(y) baskar mama chance e illa.... Kalakitaru:) Yamini aasa patta maari marraige nadathuruchu:love: happy ending:love: irul vilakiduchu;) suberb story sis(y)
நன்றி நிஷிர்தா
Nyc ending ma'am
நன்றி அனு
Very nice story annam
நன்றி சாரு
Happys endings.
Beautiful story
நன்றி பக்ஷி
பாஸ்கர் மாமாவையும் மாற்றி அருமையாக கதையை நிறைவு செய்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்
நன்றி சக்தி
நன்றி அகிலா
Good ending &lovely story
நன்றி நண்பரே
interesting story
நன்றி பிரியா

இத்தனை நாட்களாக எனக்கு உற்சாகமும் ஊக்கமும் அளித்து என்கதை மாந்தர்களுடன் பயணித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
 




Indujaprabhu

நாட்டாமை
Joined
May 17, 2018
Messages
61
Reaction score
62
Location
Kanyakumari
வாசு - யாமினியின் திருமணத்தன்று கோவிலில் ஐஷுவும் சௌமியும் அழகான பட்டுப் பாவாடை தாவணியில் அடக்கமான அழகுடன் வளைய வந்தார்கள்!

வாசுவின் நண்பர்கள், ஆகாஷ் - ஷிவானி, டேவிட், சந்திரிகா, ரவிக்குமார், முகமது, காயத்திரி எல்லாரும் அவரவர்களின் துணையுடனும் குழந்தை குட்டிகளுடனும் வந்திருந்தனர்! அவர்கள் மட்டுமல்லாமல் ஸ்டீவன், அவனுடைய அலுவலக நண்பர்கள் கரண், கேப்ரியல், அவனுடைய உயரதிகாரி வேணு சாஸ்த்திரி என்று செல்லமாகத் திட்டு வாங்கும் வேணு கோபால், என அனைவரும் வந்திருந்தனர்!

யாமினியின் வளர்ப்புத் தாய் கமலாம்மா, அவளுடைய உடன் பிறவா சகோதரி பத்மினி, பத்மினியுடைய அம்மா, மற்றும் அவளுடன் அந்த கல்யாண கான்ட்ராக்டரிடம் வேலை செய்த நண்பர்கள் எல்லாரும் வந்திருந்தனர்!

நண்பர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பார்த்ததால் வாசுவின் மனம் மகிழ்ச்சியில் கூத்தாடியது என்றால், அதற்கு மேல் யாமினியின் அழகு வேறு அவனை பாடாய் படுத்திக் கொண்டிருந்தது!

தான் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையில் சர்வ அலங்காரத்துடன் அம்மன் சன்னதியில் நின்றிருந்த யாமினியின் அழகை வாசு தன் கண்களால் பாராட்ட, அவள் வெட்கத்துடன் தலை குனிந்தாள்! அவளுடைய சிவந்த முகம் இன்னும் சிவக்க, வாசு வானத்தில் பறந்து கொண்டிருந்தான்!

இதைக் கண்ட எல்லாரும் அவர்களைக் கிண்டல் செய்ய, அவர்கள் இருவரும் ஒருவரைப் பார்த்து ஒருவர் சிரித்துக் கொண்டனர்!

அம்மனின் சன்னதியில் குருக்கள் மந்திரம் ஓதியபடி மங்கல நாணை எடுத்துக் கொடுக்க, பெற்றோரும் உற்றாரும் பெரியோரும் அட்சதை தூவ, மனதில் பொங்கிப் பெருகும் பரவசத்துடன் வாசு யாமினியின் கழுத்தில் மீண்டுமொரு முறை மங்கல நாணை அணிவித்தான்!

அவனுக்கு சற்றும் குறையாத அதே பரவசத்துடன் அவளும் அவன் அணிவித்த திருமாங்கல்யத்தை மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் தலை குனிந்து ஏற்றுக் கொண்டாள்!

திருமண வைபவங்கள் இனிதே நிறைவேற, பாஸ்கர் மாமாவும் ருக்மணி மாமியும் வந்திருந்த அனைவருக்கும் ஐந்து நட்டத்திர ஹோட்டலில் விருந்து வைத்து ஜமாய்த்தனர்!

யாமினி வளர்ந்த அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கும் அவர்கள் சார்பில் விருந்து அளிக்கப்பட்டது!

அன்று மாலை கிருஷ்ணா மற்றும் பவதாரிணியின் விருப்பமாக திருமண வரவேற்பும் இனிதே நடைபெற்றது!

வாசுவும் யாமினியும் அழகாக தங்களை அலங்கரித்துக் கொண்டு தங்கள் துணையின் கண்களுக்கு விருந்தாகிக் கொண்டிருந்தனர்!

ஐஷுவும் சௌமியும் தாங்கள் ஆசையாக வாங்கிய லெஹங்காவில் அட்டகாசமான அழகில் மினுக்கினர்!

வாசு இளவரசன் போல ஷேர்வாணியில் கம்பீரமாகக் காட்சி தர, யாமினி தன் கைப்பட தானே டிசைன் செய்த டிசைனர் புடவையில் அதற்கேற்ற அலங்காரத்தில் ஜொலித்தாள்!

மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துப் பார்த்து பூரிக்க, மற்றவர்கள் அனைவரும் இவர்களைப் பார்த்து பூரிக்க, இருவருமே ஒரு புதுவிதமான உணர்வுகளில் மிதந்து கொண்டிருந்தனர்!

அன்றைய இரவின் தனிமையில் வாசு தன் அருகில் அளவான அலங்காரத்தில் அமர்ந்திருந்த யாமினியை அன்புடன் பார்த்திருக்க,

"எ...... என்ன.... வாசு.... புதுசா பாக்கற மாதிரி.... பாக்கறீங்க...." என்று மெல்லிய குரலில் கேட்க,

"ஹூம்....இல்ல... அன்னிக்கு.... நம்ம முதல்ல கல்யாணம் பண்ணிகிட்டு வந்தன்னிக்கு என்ன எப்டி நீ விரல் சொடுக்கி கூப்பிட்ட.... எவ்ளோ அலட்சியமா..... அசட்டு தைரியத்தோட...... இப்ப என்னடான்னா...... இவ்ளோ அமைதியா உக்காந்திருக்கியேன்னு நெனச்சேன்...."

அவள் மெலிதாக சிணுங்கினாள்!

"ஹேய்... சும்மா சொன்னேன்...." என்று சிரித்துவிட்டு அவளுடைய கையைப் பிடித்து, அவளுடைய உள்ளங்கையில் இட்டிருக்கும் மருதாணியை தன் விரல்களால் மென்மையாகத் தடவியபடியே கேட்டான், "இப்ப உனக்கு சந்தோஷமா?"

அவன் எதற்கு இப்படிக் கேட்கிறான் என்று புரியாமல் அவள் விழிக்க,

"நம்ம கல்யாணம் நீ ஆசப்பட்ட மாதிரி, உன் ட்ரஸ்ஸை நீயே டிசைன் பண்ணி போட்டுகிட்டு, கை நிறைய மருதாணில்லாம் இட்டுகிட்டு உன் மனசுக்குப் பிடிச்சவன் உன்னப் பாத்து அழகா இருக்கன்னு கண்ணாலயே சொல்ல, நீ அதுக்கு வெக்கப்பட்டு தலை குனிய, பெரியவங்கல்லாம் அட்சதை தூவ, அந்த கடவுளோட சன்னதியில நம்ம கல்யாணம்.... உன் ஆசைப்படியே நடந்திருக்கே.... உனக்கு சந்தோஷமா?" என்று கேட்டான் வாசு!

யாமினி கண்கள் விரிய அவனைப் பார்த்தாள்!

"அப்ப நீங்க.... அன்னிக்கு...."

"ம்.... நீ அம்மா கிட்ட பேசினத நா கேட்டேன்..... உன் ஆசைய நிறைவேத்த முடீலயேன்னு தவிச்சிகிட்டு இருந்தேன்.... நல்ல வேளை.... மாமா தோஷ நிவர்த்தின்னு திரும்பவும் நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு செஞ்சார்!" என்றான்!

யாமினி எதுவும் சொல்லத் தோன்றாமல் அவனுடைய கையைப் பிடித்து அதில் முத்தம் பதிக்க,

"இது என்ன அநியாயம்... உன் ஆசைய முதல் முதலா நெறைவேத்தியிருக்கேன்.... நீ என்ன தம்மாத்தூண்டு கிஸ் பண்ற...." என்று அவளைப் போலவே சென்னைத் தமிழில் பேசிக் காட்டி அவளை வம்புக்கிழுத்தான்!

யாமினி மென்மையாகச் சிரித்துக் கொண்டாள்! அவனும் கூடச் சேர்ந்து சிரித்தான்!

அவன் அவளுடைய கையில் இடப்பட்டிருந்த மருதாணியின் அழகில் கவரப்பட்டு அதில் தன் விரல்களால் கோலமிட்டபடி இருக்க, அவளோ அவனை கவனிக்காமல் திடீரென்று ஏதோ தோன்றியவளாய், முகத்தை வெகு சீரியஸாய் வைத்துக் கொண்டு அவனைப் பார்த்து கேட்டாள்.

"எனக்கு ஒரு டௌட்டு வாசு?"

"என்ன டௌட் யாமினி?"

"நாம, இன்னிக்கு நம்ம கல்யாண நாள கொண்டாடுவோமா? இல்ல, நமக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் நடந்துச்சே, அன்னிக்கு நம்ம கல்யாண நாள கொண்டாடுவோமா?"

அடிப்பாவீ.... இப்ப இது ரொம்ப முக்கியமாடீ.... என்று மனதில் நினைத்தவன்,

"யாமினீ.... நா ஒண்ணு சொல்லட்டுமா...." என்று மெதுவாகக் கேட்டான்!

"ம்!"

"மொதல்ல இப்ப நடக்கற ஃபங்ஷன கொண்டாடுவோமா.... இல்லன்னா நா ரொம்ப காண்டாய்டுவேன்...." என்று சென்னைத் தமிழில் கூறினான் முகத்தை அவளைப் போலவே சீரியஸாய் வைத்துக் கொண்டு!

அவள் அவனை முறைத்து விட்டு,

"தெர்லன்னுதானே கேட்டேன்... அதுக்கு போய் இவ்ளோ அல்டிக்கறீங்களே!"

"நானாடீ அல்டிக்கறேன்...." என்று அப்பாவியாய்க் கூறினான்!

"நா கேட்டதுக்கு மொதல்ல பதில் சொல்லுங்க...."

"அது ஒரு பெரிய விஷயமா யாமினி.... நாம ரெண்டு நாளையுமே நம்ம கல்யாண நாளா கொண்டாடலாம்.... எவன் கேப்பான் நம்மள...." என்றான்!

"ஐய... ரெண்டு கல்யாண நாளா.... விட்டா தினம் தினம் கல்யாண நாள் கொண்டாடுவீங்க போல...." என்று அவள் நக்கலடித்தாள்!

"ஆஹா..... தினம் தினம் கல்யாண நாள் கொண்டாட நா ரெடி....." என்று சிரித்துக் கொண்டே வாசு சொன்னதைக் கேட்டவள் முதலில் புரியாமல் பின்னர் புரிந்து கொண்டு வெட்கத்தோடு சிணுங்கினாள்!

"என்ன ஓகேயா..." என்று குறும்பாய் புன்னகைத்துக் கேட்டான் வாசு!

"ஹக்கும்.." என்று செல்லமாய் சிணுங்கியபடியே எழுந்தவளை இழுத்து அணைத்து தன் அபரிமிதமான காதலை அழகான கவிதையாய் அவளுடைய இதழ்களில் தன்னுடைய இதழ்களால் அவன் வரையத் தொடங்க, அவனுடைய அன்பான காதல் கவிதையில் தன்னைத் தொலைக்கத் தொடங்கினாள் அவனுடைய யாமினி!



வாசு - யாமினியின் வாழ்வில் சூழ்ந்திருந்த இருள் விலகி எங்கும் புதிய வெளிச்சம் பரவி அவர்களின் வாழ்வை ஔிபெறச் செய்யத் தொடங்கிவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் நாமும் விடை பெறுவோம்! நன்றி!



சுபம்!





Super story
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top