Dear Friends,
Thank you so much for your wonderful likes and comments...
இரண்டல்ல ஒன்று – 10
மணமேடையில் அமர்ந்திருந்த நந்தினி தன் இரு கண்களை சுருக்கி ராம் பிரசாத்தை கூர்மையாகப் பார்த்தாள். அவளறியாமல் நந்தினியின் வெட்கம் மறைந்து யோசனை மேலோங்கியது.
ராம் பிரசாத் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான். அவனால் திருமண சடங்குகளில் முழுதாக ஈடுபட முடியவில்லை.'வைஷ்ணவியின் எண்ணமா?' இந்தக் கேள்விக்கு ராம் பிரசாத்திடம் பதில் இல்லை.
'காதலா?' என்ற கேள்வி ராம் பிரசாத் மனதில் எழுந்தால், 'ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுக்க முடியாத பட்சத்தில் காதல் அர்த்தமற்று போனதாக தோன்றியது' அவனுக்கு.
வைஷ்ணவியின் எண்ணங்கள் பின்னுக்கு சென்று, தற்போதைய பிரச்சனை ராம் பிரசாத் முன் பூதாகரமாய் நின்றது.
நந்தினி! நந்தினி! நந்தினி! என்ற பெயரோடு...
தன் மணவாளனிடம் எதிர்பார்த்த பார்வை, புன்னகை என அனைத்தையும் மறந்து நந்தினி அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் உள்ளுணர்வு ஏதேதோ கூறியது.
இது அறியாமல்… நந்தினியைப் பார்க்கும் தைரியம் இல்லாமல்… குற்ற உணர்ச்சி மேலோங்க, ‘என்னால் இவளிடம் சகஜமாக பேச முடியுமா? காதல் அத்தனை பெரிய குற்றமா? இந்தக் காதல் எத்தனை பேரின் வாழ்க்கையை அழிக்கப் போகிறது?’ போன்ற குதர்க்கமான கேள்விகளோடு இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி ஐயர் கூறியதை செய்து கொண்டிருந்தான் ராம் பிரசாத்.
அப்பொழுது அனைவரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, ஒருவர் வேஷ்டி சட்டையோடு கம்பீரமாக நுழைய அவரோடு இன்னும் சிலர் நுழைய அங்குப் பதட்டம் நிலவியது.
சந்துரு பதட்டமாகவும் மரியாதையாகவும் மேடையில் இருந்து இறங்கி வந்தான். அவனோடு வாசுதேவனும் இறங்கி வந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து இல்லையில்லை ஓடி வர, அந்தக் காட்சியை ரசித்துப் பார்த்தாள் வாசுதேவனின் தங்கை சுபா.
அவர்கள் இருவரும் ஒன்றாக வந்த காட்சி அவர்களின் நெருங்கிய நட்பு நிறைந்த காலத்தை நினைவு படுத்த, 'அந்த காலம் மீண்டு விடாதா?' என்று ஏக்கத்தோடு அவர்களை மணமேடையில் நின்றபடி பார்த்தார் பார்வதி சந்துருவின் தாய்.
நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த உத்தமி… தன் மகனையும், சந்துருவையும் சொல்லிலடங்கா வெறுப்போடும்... வேதனையோடும் பார்த்தார்.
அந்த வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்த பெரியவரை இருவரும் பலத்த மரியாதையோடு வரவேற்க… அருகே சென்றால் அவர் அந்த ஊரின் MLA என்று நமக்குத் தெரிய வருகிறது.
தாலி கட்டும் நேரம் நெருங்க நெருங்க வைஷ்ணவியும், அவள் தந்தையும் எண்ணி நமக்குப் பதட்டம் மேலோங்க… அவர்கள் இன்னும் வராத காரணத்தினால் நாம் அவர்களைத் தேடி செல்வோம்.
வைஷ்ணவி மதுரை மருத்துவமனை ICU வாசலில் சோர்வான முகத்தோடும், கலங்கிய கண்களோடும் சோகமாக அமர்ந்திருந்தாள்.
வைஷ்ணவியை நெருங்கப் பயந்து அவளை நெருங்காமல் அவளைச் சுற்றி பலர் மரியாதையாக நின்று கொண்டிருந்தனர்.
வைஷ்ணவியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. பலர் அவளைச் சுற்றி இருந்தாலும், தாய் இல்லா அந்த இளம் பெண்… தந்தையும் ICU யில் இருக்க… தோள் சாய்ந்து அழுவதற்கோ… தேற்றுவதற்கோ ஆள் இல்லாமல் தனியாக அமர்ந்திருந்தாள்.
"ராம் பிரசாத்தின் முகூர்த்த நேரம் நெருங்கியிருக்கும்..." என்று ஏதோ ஒரு ஓரத்தில் வைஷ்ணவிக்குத் தோன்றினாலும், அதைச் சிந்திக்க மனமில்லாமல் அவள் எண்ணம் நேற்று இரவு நடந்து சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தது.
"வைஷ்ணவி..." என்று அவள் தந்தை தர்மலிங்கம் படபடப்பாக அழைக்க, "அப்பா.. அப்பா.." என்று அழைத்துக் கொண்டு அருகே ஓடினாள் வைஷ்ணவி.
அவர் முகமெங்கும் வியர்வைத் துளிகள். அவர் முதுகு பக்கம் வியர்வையால் நனைந்திருக்க, அவர் சரிந்து படுத்தார்.
அவரைத் திருநெல்வேலியில் உள்ள, பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, "ஹார்ட் அட்டாக்.." என்று மருத்துவர் சொன்னது மட்டும் தான் வைஷ்ணவிக்கு நினைவிலிருந்து.
அதன் பின் கலந்து பேசி மதுரை இல்லையென்றால் சென்னை அழைத்து வர வேண்டும் என அவர்கள் நினைக்க, "சென்னை வரை அழைத்துச் செல்வது உசிதம் இல்லை..." என்று மருத்துவர் கூறினார்.
தன் திருமணத்தை பற்றிய கவலையே தந்தையை இந்நிலைக்குக் கொண்டு வந்து விட்டதாக எண்ணினாள் வைஷ்ணவி. 'அப்பாவை யாராலும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது...' என்று தனக்குள் சூளுரைத்து பழக்கம் இல்லாத ஊராயினும் மதுரைக்குத் தந்தையை அழைத்துச் செல்வதாக முடிவு செய்தாள் வைஷ்ணவி.
இடையில் கண் விழித்த தர்மதுரை, "வைஷ்ணவி... இவங்க எல்லாம் என் கூட இருக்கட்டும்... நீ கல்யாணத்துக்குப் போ..." என்று அவர் தன் மகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு கூறினார்.
மறுப்பாகத் தலை அசைத்து, "என்னுடைய இந்தப் பிடிவாதமே, நான் உங்களை விட்டுப் பிரிய கூடாதுன்னு தான்... அப்படி இருக்க நீங்க இந்த நிலையில் இருக்கும் பொழுது எனக்குக் கல்யாணமா அப்பா? " என்று நிதானமாகக் கேட்டாள் வைஷ்ணவி.
"உன் வாழ்க்கை?" என்று தர்மலிங்கம் கேள்வியாக நிறுத்த, "நீங்கப் பழைய மாதிரி தெம்பா வந்தா நல்லாருக்கும்..." என்று அவர் உடல் நலத்தோடு திரும்பி வர தன் தந்தைக்கு மறைமுக ஆணைப் பிறப்பித்தாள் வைஷ்ணவி.
மகளின் ஆணையை ஏற்றுத் தானே அவருக்குப் பழக்கம்... சம்மதமாகத் தலை அசைத்து operation theatre க்குள் சென்றிந்தார் தர்மலிங்கம்.
தலை அசைத்து , கண்ணீரைத் துடைத்து, 'நான் அழக் கூடாது... அழுவது கோழைத்தனம்... அழுவது என்னைப் பலவீனப்படுத்தும்... இப்ப என்ன நடந்திருச்சு... அப்பாக்கு உடம்பு சரி இல்லை... இந்த ஆபரேஷன் முடிந்தால் எல்லாம் சரி ஆகிரும்...' என்று யோசித்து தன்னை தானே தேற்றிக் கொண்டு நிமிர்வாக அமர்ந்தாள் வைஷ்ணவி.
வைஷ்ணவி தன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் நிலைமையில் இல்லாததால், நம்மாலும் எதையும் கணிக்க முடியவில்லை.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதால்… நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.
"கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற பாடல் நாம் செல்லும் வழியில் உள்ள டீ கடையில் ஒலிக்கிறது.
அழகியபுரம் திருமண மண்டபம்...
அனைவரும் மணமக்களை ஆசிர்வதிக்கத் தயாராக இருக்க, "கெட்டிமேளம்... கெட்டிமேளம்..." என்ற சத்தம் ஓங்கி ஒலித்தது.
ராம்பிரசாத் நந்தினியின் கழுத்தில் முதல் முடிச்சைப் போட, மீதி இரண்டு முடிச்சான நாத்தனார் முடிச்சை வாசுதேவனின் தங்கை சுபா முடிச்சிட்டாள்.
சுபா... அவளுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதும்... அவள் சந்துருவையும், ராம் பிரசத்தையும் அண்ணா என்றழைத்தது வாய் வார்த்தையில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அனைவரும் திருமண நிகழ்வைச் சந்தோஷமாக அனுபவிக்க, உத்தமி யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
Thank you so much for your wonderful likes and comments...
இரண்டல்ல ஒன்று – 10
மணமேடையில் அமர்ந்திருந்த நந்தினி தன் இரு கண்களை சுருக்கி ராம் பிரசாத்தை கூர்மையாகப் பார்த்தாள். அவளறியாமல் நந்தினியின் வெட்கம் மறைந்து யோசனை மேலோங்கியது.
ராம் பிரசாத் குற்ற உணர்ச்சியில் தவித்துக் கொண்டிருந்தான். அவனால் திருமண சடங்குகளில் முழுதாக ஈடுபட முடியவில்லை.'வைஷ்ணவியின் எண்ணமா?' இந்தக் கேள்விக்கு ராம் பிரசாத்திடம் பதில் இல்லை.
'காதலா?' என்ற கேள்வி ராம் பிரசாத் மனதில் எழுந்தால், 'ஒருவருக்காக ஒருவர் விட்டுக் கொடுக்க முடியாத பட்சத்தில் காதல் அர்த்தமற்று போனதாக தோன்றியது' அவனுக்கு.
வைஷ்ணவியின் எண்ணங்கள் பின்னுக்கு சென்று, தற்போதைய பிரச்சனை ராம் பிரசாத் முன் பூதாகரமாய் நின்றது.
நந்தினி! நந்தினி! நந்தினி! என்ற பெயரோடு...
தன் மணவாளனிடம் எதிர்பார்த்த பார்வை, புன்னகை என அனைத்தையும் மறந்து நந்தினி அவனை கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் உள்ளுணர்வு ஏதேதோ கூறியது.
இது அறியாமல்… நந்தினியைப் பார்க்கும் தைரியம் இல்லாமல்… குற்ற உணர்ச்சி மேலோங்க, ‘என்னால் இவளிடம் சகஜமாக பேச முடியுமா? காதல் அத்தனை பெரிய குற்றமா? இந்தக் காதல் எத்தனை பேரின் வாழ்க்கையை அழிக்கப் போகிறது?’ போன்ற குதர்க்கமான கேள்விகளோடு இலக்கில்லாமல் எங்கோ பார்த்தபடி ஐயர் கூறியதை செய்து கொண்டிருந்தான் ராம் பிரசாத்.
அப்பொழுது அனைவரின் கவனத்தை திசை திருப்பும் விதமாக, ஒருவர் வேஷ்டி சட்டையோடு கம்பீரமாக நுழைய அவரோடு இன்னும் சிலர் நுழைய அங்குப் பதட்டம் நிலவியது.
சந்துரு பதட்டமாகவும் மரியாதையாகவும் மேடையில் இருந்து இறங்கி வந்தான். அவனோடு வாசுதேவனும் இறங்கி வந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாக நடந்து இல்லையில்லை ஓடி வர, அந்தக் காட்சியை ரசித்துப் பார்த்தாள் வாசுதேவனின் தங்கை சுபா.
அவர்கள் இருவரும் ஒன்றாக வந்த காட்சி அவர்களின் நெருங்கிய நட்பு நிறைந்த காலத்தை நினைவு படுத்த, 'அந்த காலம் மீண்டு விடாதா?' என்று ஏக்கத்தோடு அவர்களை மணமேடையில் நின்றபடி பார்த்தார் பார்வதி சந்துருவின் தாய்.
நான்காவது வரிசையில் அமர்ந்திருந்த உத்தமி… தன் மகனையும், சந்துருவையும் சொல்லிலடங்கா வெறுப்போடும்... வேதனையோடும் பார்த்தார்.
அந்த வெள்ளை வேஷ்டி, சட்டை அணிந்த பெரியவரை இருவரும் பலத்த மரியாதையோடு வரவேற்க… அருகே சென்றால் அவர் அந்த ஊரின் MLA என்று நமக்குத் தெரிய வருகிறது.
தாலி கட்டும் நேரம் நெருங்க நெருங்க வைஷ்ணவியும், அவள் தந்தையும் எண்ணி நமக்குப் பதட்டம் மேலோங்க… அவர்கள் இன்னும் வராத காரணத்தினால் நாம் அவர்களைத் தேடி செல்வோம்.
வைஷ்ணவி மதுரை மருத்துவமனை ICU வாசலில் சோர்வான முகத்தோடும், கலங்கிய கண்களோடும் சோகமாக அமர்ந்திருந்தாள்.
வைஷ்ணவியை நெருங்கப் பயந்து அவளை நெருங்காமல் அவளைச் சுற்றி பலர் மரியாதையாக நின்று கொண்டிருந்தனர்.
வைஷ்ணவியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்து கொண்டிருந்தது. பலர் அவளைச் சுற்றி இருந்தாலும், தாய் இல்லா அந்த இளம் பெண்… தந்தையும் ICU யில் இருக்க… தோள் சாய்ந்து அழுவதற்கோ… தேற்றுவதற்கோ ஆள் இல்லாமல் தனியாக அமர்ந்திருந்தாள்.
"ராம் பிரசாத்தின் முகூர்த்த நேரம் நெருங்கியிருக்கும்..." என்று ஏதோ ஒரு ஓரத்தில் வைஷ்ணவிக்குத் தோன்றினாலும், அதைச் சிந்திக்க மனமில்லாமல் அவள் எண்ணம் நேற்று இரவு நடந்து சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தது.
"வைஷ்ணவி..." என்று அவள் தந்தை தர்மலிங்கம் படபடப்பாக அழைக்க, "அப்பா.. அப்பா.." என்று அழைத்துக் கொண்டு அருகே ஓடினாள் வைஷ்ணவி.
அவர் முகமெங்கும் வியர்வைத் துளிகள். அவர் முதுகு பக்கம் வியர்வையால் நனைந்திருக்க, அவர் சரிந்து படுத்தார்.
அவரைத் திருநெல்வேலியில் உள்ள, பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, "ஹார்ட் அட்டாக்.." என்று மருத்துவர் சொன்னது மட்டும் தான் வைஷ்ணவிக்கு நினைவிலிருந்து.
அதன் பின் கலந்து பேசி மதுரை இல்லையென்றால் சென்னை அழைத்து வர வேண்டும் என அவர்கள் நினைக்க, "சென்னை வரை அழைத்துச் செல்வது உசிதம் இல்லை..." என்று மருத்துவர் கூறினார்.
தன் திருமணத்தை பற்றிய கவலையே தந்தையை இந்நிலைக்குக் கொண்டு வந்து விட்டதாக எண்ணினாள் வைஷ்ணவி. 'அப்பாவை யாராலும் என்னிடமிருந்து பிரிக்க முடியாது...' என்று தனக்குள் சூளுரைத்து பழக்கம் இல்லாத ஊராயினும் மதுரைக்குத் தந்தையை அழைத்துச் செல்வதாக முடிவு செய்தாள் வைஷ்ணவி.
இடையில் கண் விழித்த தர்மதுரை, "வைஷ்ணவி... இவங்க எல்லாம் என் கூட இருக்கட்டும்... நீ கல்யாணத்துக்குப் போ..." என்று அவர் தன் மகளின் வாழ்க்கையை மனதில் கொண்டு கூறினார்.
மறுப்பாகத் தலை அசைத்து, "என்னுடைய இந்தப் பிடிவாதமே, நான் உங்களை விட்டுப் பிரிய கூடாதுன்னு தான்... அப்படி இருக்க நீங்க இந்த நிலையில் இருக்கும் பொழுது எனக்குக் கல்யாணமா அப்பா? " என்று நிதானமாகக் கேட்டாள் வைஷ்ணவி.
"உன் வாழ்க்கை?" என்று தர்மலிங்கம் கேள்வியாக நிறுத்த, "நீங்கப் பழைய மாதிரி தெம்பா வந்தா நல்லாருக்கும்..." என்று அவர் உடல் நலத்தோடு திரும்பி வர தன் தந்தைக்கு மறைமுக ஆணைப் பிறப்பித்தாள் வைஷ்ணவி.
மகளின் ஆணையை ஏற்றுத் தானே அவருக்குப் பழக்கம்... சம்மதமாகத் தலை அசைத்து operation theatre க்குள் சென்றிந்தார் தர்மலிங்கம்.
தலை அசைத்து , கண்ணீரைத் துடைத்து, 'நான் அழக் கூடாது... அழுவது கோழைத்தனம்... அழுவது என்னைப் பலவீனப்படுத்தும்... இப்ப என்ன நடந்திருச்சு... அப்பாக்கு உடம்பு சரி இல்லை... இந்த ஆபரேஷன் முடிந்தால் எல்லாம் சரி ஆகிரும்...' என்று யோசித்து தன்னை தானே தேற்றிக் கொண்டு நிமிர்வாக அமர்ந்தாள் வைஷ்ணவி.
வைஷ்ணவி தன் வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் நிலைமையில் இல்லாததால், நம்மாலும் எதையும் கணிக்க முடியவில்லை.
முகூர்த்த நேரம் நெருங்கிவிட்டதால்… நாம் அழகியபுரம் நோக்கிப் பயணிப்போம்.
"கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று" என்ற பாடல் நாம் செல்லும் வழியில் உள்ள டீ கடையில் ஒலிக்கிறது.
அழகியபுரம் திருமண மண்டபம்...
அனைவரும் மணமக்களை ஆசிர்வதிக்கத் தயாராக இருக்க, "கெட்டிமேளம்... கெட்டிமேளம்..." என்ற சத்தம் ஓங்கி ஒலித்தது.
ராம்பிரசாத் நந்தினியின் கழுத்தில் முதல் முடிச்சைப் போட, மீதி இரண்டு முடிச்சான நாத்தனார் முடிச்சை வாசுதேவனின் தங்கை சுபா முடிச்சிட்டாள்.
சுபா... அவளுக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை என்பதும்... அவள் சந்துருவையும், ராம் பிரசத்தையும் அண்ணா என்றழைத்தது வாய் வார்த்தையில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
அனைவரும் திருமண நிகழ்வைச் சந்தோஷமாக அனுபவிக்க, உத்தமி யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தார்.
Last edited: