Dear Friends,
Thank you so much for your likes and comments...
அன்பான வாசகர்களே,
கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தது போல், கதை யதார்த்தமாக நகர்ந்து சென்றாலும், கதையில் வரும் இடங்கள் நிகழ் கால இடங்களை ஒட்டிச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். கதை மாந்தர்களின் எண்ணப் போக்கின் படி, கதை அறிவியல் புனைவுகளை மெல்லிய வருடலாகத் தொட்டு செல்லும். கதையின் போக்கு உங்களைக் கவரும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவு இதோ...
இரண்டல்ல ஒன்று – 16
சந்துருவின் பதிலில், ஒரு நொடி கூட சிந்திக்காமல், "ஆனால், ஏன் அப்படி பண்ணீங்க?" என்று கேசரியை ருசித்தபடியே நிதானமாகக் கேட்டாள் நந்தினி.
நேற்று வந்த பெண்… தன் அண்ணனைக் கேள்வி கேட்பது பிடிக்காமல், ராம் பிரசாத்தின் கோபம் தலைக்கேறி, அவன் கை முஷ்டி இறுகியது.
'ஏன் என் கல்யாணத்தை செய்தீக?' என்று கேட்காமல் நந்தினி கேட்கும் கேள்வி என்ற எண்ணம் கோமதியின் மனதில் உதித்தது.
சந்துரு மிகவும் நிதானமாக, நந்தினியிடம் கேள்வியை எதிர் பார்த்தவன் போல் புன்னகையோடு, "சுபா சின்ன வயசிலிருந்து இங்க தான் வளர்ந்தா... தேவா கூட அப்படி தான்... தேவா நெருங்கிய நண்பன் ஆகிட்டான்... சுபா என் தங்கையாகவே ஆகிட்டா... அவளுக்கு தேவாவை விட என்னைத்தென் பிடிக்கும்... நான் சொல்றது தான் சரின்னு சொல்லுவா... ஏன் உன் புருஷன் ராம் கூட என்னைவிட, தேவாவுக்குத் தான் நெருக்கம்.... வாசு அண்ணா... வாசு அண்ணான்னு அவன் பின்னாடிதென் சுத்துவான்..." என்று ராம் பிரசாத்தை பார்த்தபடி கூறினான் வாசுதேவன்.
நந்தினி எதுவும் பேசாமல் பிடிவாதமாக பதிலுக்காக அமர்ந்திருக்க, 'என்ன ஒரு அழுத்தம்? அண்ணா இவளுக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்காக... இவ இவ்வளவு பிடிவாதமா அமைதியா அமர்ந்திருகா?' என்ற யோசனையோடு நந்தினியைக் கடுப்பாக பார்த்தான் ராம் பிரசாத்.
நந்தினி சமாதானம் அடையவில்லை, என்று அவள் பார்வை கூற, சந்துரு தன் பேச்சை மேலும் தொடர்ந்தான்.
"யாரும் சுபாவின் ஆசைக்குச் சம்மதம் தெரிவிக்குற மாதிரி தெரியலை... அவ கண் கலங்குறது எனக்கு பிடிக்கலை... எனக்கு சுபா மேல் இல்லாத அக்கறையா? அதனால் தான்..." என்று சந்துரு சுபாவின் மீதுள்ள உரிமையை நிலை நாட்டினான்.
கோமதி பொறுமையாக பேசும் தன் கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
'நல்லவர் தான்... பொறுமைசாலி தான்... ஆனால் இந்த அளவுக்கா?' என்று தன் கணவனை ஆராயும் கண்களோடு கோமதி பார்க்க… சந்துரு அவன் புருவம் உயர்த்தி தன் மனைவியைக் கேள்வியாக பார்க்க… கோமதி மறுப்பாகத் தலை அசைத்தாள்.
அந்தப் பார்வை பரிமாற்றத்தை, கவனித்த நந்தினி, "எல்லாரும் உங்க சொல்லை நம்புவாங்க போல?" என்று நந்தினி புன்னகை ததும்பும் முகத்தோடு கேட்டாள்.
"ஏய்..." என்று ராம் பிரசாத் எகிற, "ராம்..." என்று சந்துரு தன் தமையனை அதட்டி அடக்கினான்.
கோமதி சற்று பதட்டம் அடைந்து நந்தினியைப் பார்த்தாள்.
'இந்த பொண்ணு என்ன… முதல் நாளே இப்படி பேசுது? அம்மா சொன்னது சரி தான் போல... பொண்ணு அழகா லட்சணமா இருக்கா... நல்லா படிச்ச பொண்ணு வேற... அந்தப் பெண்ணோடு அழுத்தத்தைப் பார்த்தா, பயங்கர கெட்டிக்காரியா இருப்பா போல... யாரவது ஓப்படச்சியா இப்படி ஒருத்தியை பார்த்து வைப்பாளா? நீ கோட்டிக்காரிதென்... பாத்து பொழச்சுக்கோ...' என்று தன் தாய் பேசியது நினைவு வரக் கோமதி சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சந்த்ருவுக்கு நந்தினி மீது கோபம் வரவில்லை... அவளைச் சகோதரத்துவம் மேலோங்கப் பார்த்தான்.
"ஏன் நீ என் சொல்லை நம்பலையா?" என்று நக்கல் தொனித்த குரலில் கேட்டான் சந்துரு.
சந்துருவின் நக்கல் தொனித்த கேள்வியில், நந்தினியின் புன்னகை விரிந்தது.
"தேங்க்ஸ்... நீங்க கோபப்படாம பேசறதுக்கு..." என்று நன்றி நவிழ, "ம்.. க்கும்... கோபப்பட கூடாது... நல்ல செவிட்டில் ஒண்ணு கொடுக்கணும்...' என்று ராம் பிரசாத்தின் மனம் விரும்பியது.
ராம் பிரசாத்தின் அறிவு, அவன் படித்த படிப்பு, பெண்ணின் மீது வைத்திருக்கும் மரியாதை அவனை அமைதி காக்க செய்தது.
"நான் உங்க சொல்லை நம்பலை..." என்று பளிச்சென்று கூறி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் நந்தினி.
"உங்க செயலை நம்பறேன்... நான் உங்களை யாரோ மாதிரி பாக்கலை... வாசு அத்தான் மாதிரி தான் பாக்கறேன்... எல்லாரும் உங்க மேல் உள்ள அன்பில் உங்க சொல்லை நம்பி, நீங்க சொல்றதை நம்பறாங்க... ஆனால், நான் ரெண்டு நாளா உங்களைப் பார்த்ததில், பெரிய பிரச்சனை வரக் கூடிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா நீங்க செஞ்சிருப்பீங்கன்னு எனக்குத் தோணலை... உங்க செயலுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு எனக்கு தோணுது..." என்று நந்தினி கூற, சந்துருவின் பார்வை மெச்சுதலாகா மாறினாலும், அவன் அதிர்ச்சி பன்மடங்காக பெருகியது.
சந்துரு சற்று தடுமாறினான்... 'தன் தாய்... தன் மனைவி... எல்லாரும் கெட்டிக் காறங்க தான்... எந்தப் பிரச்சனையையும் சாமர்த்தியசாலித்தனமாக, பொறுமையாக அணுகக் கூடியவர்கள் தான்... ஆனால் இவள்? பெண்கள் படிக்கிறார்கள்... வேலைக்குச் செல்கிறார்கள்... பெரிய பதவியில் இருக்கிறார்கள்... தலைமை பதவியில் திறம் பட செயல் படுகிறார்கள்... கேள்விப்பட்டிருக்கிறேன்... பார்த்ததில்லை... ஆனால், எதிரே நிற்பவனை இரண்டு நாளில் கணித்து, அவனிடம் கேள்வியும் கேட்டு, அவனைப் பாராட்டவும் செய்து... அப்பப்பா...' என்று எண்ணினான் சந்துரு.
"பெண் புத்தி பின் புத்தி..." என்ற வாக்கியத்தின் பொருள் இப்பொழுதுதான் சந்துருவிற்கு தெளிவாகப் புரிந்தது.
'காலத்தின் போக்கில் பின்னால் நடப்பதையும்... தன் கண்களுக்கு முன்னாள் மட்டுமின்றி பின்னால் நடப்பதையும் அறிக கூடியவர்கள் பெண்கள்... பெண் புத்தி பின் புத்தி தான்...' என்று பிரமிப்பாக எண்ணினான் சந்துரு.
தன் கணவனின் தடுமாற்றத்தைக் கண்ட கோமதி, நந்தினியின் சாமர்த்தியசாலித்தனத்தை மனதில் மெச்சினாலும், அவள் கண்கள் மெல்லிய பொறாமை உணர்வைக் காட்டியது.
'எல்லாம் தெரியுமுன்னு நினைப்பு...' என்று ராம் பிரசாத் பெரு மூச்சை வெளியேற்ற, அவரவர் சிந்தனையில் அனைவரும் அமைதி காத்தனர்.
அமைதியைக் கலைக்கும் விதமாக, "எல்லாம் தெரிஞ்சிக்கணுமுன்னு கேட்கலை... என் மனசில் பட்டத்தை சொல்லணுமுன்னு தோணுச்சு... சொல்லிட்டேன் அத்தான்..." என்று நந்தினி லகுவாக கூற, சந்துரு புன்னகைத்துக் கொண்டான்.
"அவுகளை அத்தனை முறை அத்தான்னு கூப்பிடுற... என்னை அக்கான்னு கூப்பிடு..." என்று கோமதி வம்பிழுக்க, இப்பொழுது மௌனமாக புன்னகைப்பது நந்தினியின் முறையாயிற்று.
'பவித்ராவை தவிர, வேறு யாரையாவது அக்கான்னு கூப்பிட முடியுமா?' என்று எண்ணியபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் நந்தினி.
சந்துரு, கோமதி இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
அனைவரும், உணவை முடித்துக் கொண்டு உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்க, நேரம் மெல்லமாக நகர்ந்தது.
நந்தினி சந்தோஷ், அகல்யாவோடு பேசி சிரித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு இடையூறு இல்லமால் நாம் பவித்ரா வாசுதேவன் இல்லத்தை நோக்கிப் பயணிப்போம்.
மகாதேவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, உத்தமி பட்டாளை தூணில் சாய்ந்து கொண்டு, "ராத்திரி நேரம் தோட்டத்தில் இருக்காதீங்கன்னு சொன்னா கேக்கறது கிடையாது... ரெண்டு பேரும் மரத்தடியில் இருட்டில இருந்து குசுகுசுன்னு பேசவேண்டியது..." என்று உத்தமி சலித்துக் கொள்ள மஹாதேவன் சிரித்துக் கொண்டார்.
தோட்டத்தில் மாமரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் தலைக்கு தன் கையை அண்டைக் கொடுத்து படுத்திருந்தான் வாசுதேவன்.
வாசுதேவன் அருகே சம்மணமிட்டு அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.
இரவில் பூத்திருந்த மல்லி, பிச்சி பூக்களின் மணம் மூக்கைத் தொலைக்க அதை இருவரும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
நிலவொளியில் பவித்ரா வாசுதேவனின் கண்களுக்கு தேவதையாகக் காட்சி அளித்தாள். வாசுதேவனின் கம்பீரம் பவித்ராவுக்கு அந்த இருளில் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது.
பவித்ரா எழுந்து செல்ல, அவள் மெலிதாக தள்ளாடினாள்.
"பவி..." என்று பதறியபடி எழுந்தான் வாசுதேவன். "எட்டி... என்ன ஆச்சு..." என்று அக்கறையாகக் கேட்டான் வாசுதேவன்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தான்... உங்களை பாத்துகிட்டே தரையில் கால் வைத்தேன்... கீழே இருந்த கல்லை கவனிக்கலை..." என்று தடுமாற்றத்தோடு கூறினாள் பவித்ரா.
பவித்ராவின் கண்களில் மெல்லிய பதட்டம் தெரிந்தது. அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான் வாசுதேவன்.
"பவி..." என்று ஆழமான குரலில் அழைத்தான் வாசுதேவன்.
Thank you so much for your likes and comments...
அன்பான வாசகர்களே,
கதையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டு இருந்தது போல், கதை யதார்த்தமாக நகர்ந்து சென்றாலும், கதையில் வரும் இடங்கள் நிகழ் கால இடங்களை ஒட்டிச் சென்றாலும் கற்பனை நிறைந்தது என்பதை இங்கு நினைவு கூர்கிறேன். கதை மாந்தர்களின் எண்ணப் போக்கின் படி, கதை அறிவியல் புனைவுகளை மெல்லிய வருடலாகத் தொட்டு செல்லும். கதையின் போக்கு உங்களைக் கவரும் என்ற நம்பிக்கையோடு அடுத்த பதிவு இதோ...
இரண்டல்ல ஒன்று – 16
சந்துருவின் பதிலில், ஒரு நொடி கூட சிந்திக்காமல், "ஆனால், ஏன் அப்படி பண்ணீங்க?" என்று கேசரியை ருசித்தபடியே நிதானமாகக் கேட்டாள் நந்தினி.
நேற்று வந்த பெண்… தன் அண்ணனைக் கேள்வி கேட்பது பிடிக்காமல், ராம் பிரசாத்தின் கோபம் தலைக்கேறி, அவன் கை முஷ்டி இறுகியது.
'ஏன் என் கல்யாணத்தை செய்தீக?' என்று கேட்காமல் நந்தினி கேட்கும் கேள்வி என்ற எண்ணம் கோமதியின் மனதில் உதித்தது.
சந்துரு மிகவும் நிதானமாக, நந்தினியிடம் கேள்வியை எதிர் பார்த்தவன் போல் புன்னகையோடு, "சுபா சின்ன வயசிலிருந்து இங்க தான் வளர்ந்தா... தேவா கூட அப்படி தான்... தேவா நெருங்கிய நண்பன் ஆகிட்டான்... சுபா என் தங்கையாகவே ஆகிட்டா... அவளுக்கு தேவாவை விட என்னைத்தென் பிடிக்கும்... நான் சொல்றது தான் சரின்னு சொல்லுவா... ஏன் உன் புருஷன் ராம் கூட என்னைவிட, தேவாவுக்குத் தான் நெருக்கம்.... வாசு அண்ணா... வாசு அண்ணான்னு அவன் பின்னாடிதென் சுத்துவான்..." என்று ராம் பிரசாத்தை பார்த்தபடி கூறினான் வாசுதேவன்.
நந்தினி எதுவும் பேசாமல் பிடிவாதமாக பதிலுக்காக அமர்ந்திருக்க, 'என்ன ஒரு அழுத்தம்? அண்ணா இவளுக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்காக... இவ இவ்வளவு பிடிவாதமா அமைதியா அமர்ந்திருகா?' என்ற யோசனையோடு நந்தினியைக் கடுப்பாக பார்த்தான் ராம் பிரசாத்.
நந்தினி சமாதானம் அடையவில்லை, என்று அவள் பார்வை கூற, சந்துரு தன் பேச்சை மேலும் தொடர்ந்தான்.
"யாரும் சுபாவின் ஆசைக்குச் சம்மதம் தெரிவிக்குற மாதிரி தெரியலை... அவ கண் கலங்குறது எனக்கு பிடிக்கலை... எனக்கு சுபா மேல் இல்லாத அக்கறையா? அதனால் தான்..." என்று சந்துரு சுபாவின் மீதுள்ள உரிமையை நிலை நாட்டினான்.
கோமதி பொறுமையாக பேசும் தன் கணவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.
'நல்லவர் தான்... பொறுமைசாலி தான்... ஆனால் இந்த அளவுக்கா?' என்று தன் கணவனை ஆராயும் கண்களோடு கோமதி பார்க்க… சந்துரு அவன் புருவம் உயர்த்தி தன் மனைவியைக் கேள்வியாக பார்க்க… கோமதி மறுப்பாகத் தலை அசைத்தாள்.
அந்தப் பார்வை பரிமாற்றத்தை, கவனித்த நந்தினி, "எல்லாரும் உங்க சொல்லை நம்புவாங்க போல?" என்று நந்தினி புன்னகை ததும்பும் முகத்தோடு கேட்டாள்.
"ஏய்..." என்று ராம் பிரசாத் எகிற, "ராம்..." என்று சந்துரு தன் தமையனை அதட்டி அடக்கினான்.
கோமதி சற்று பதட்டம் அடைந்து நந்தினியைப் பார்த்தாள்.
'இந்த பொண்ணு என்ன… முதல் நாளே இப்படி பேசுது? அம்மா சொன்னது சரி தான் போல... பொண்ணு அழகா லட்சணமா இருக்கா... நல்லா படிச்ச பொண்ணு வேற... அந்தப் பெண்ணோடு அழுத்தத்தைப் பார்த்தா, பயங்கர கெட்டிக்காரியா இருப்பா போல... யாரவது ஓப்படச்சியா இப்படி ஒருத்தியை பார்த்து வைப்பாளா? நீ கோட்டிக்காரிதென்... பாத்து பொழச்சுக்கோ...' என்று தன் தாய் பேசியது நினைவு வரக் கோமதி சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சந்த்ருவுக்கு நந்தினி மீது கோபம் வரவில்லை... அவளைச் சகோதரத்துவம் மேலோங்கப் பார்த்தான்.
"ஏன் நீ என் சொல்லை நம்பலையா?" என்று நக்கல் தொனித்த குரலில் கேட்டான் சந்துரு.
சந்துருவின் நக்கல் தொனித்த கேள்வியில், நந்தினியின் புன்னகை விரிந்தது.
"தேங்க்ஸ்... நீங்க கோபப்படாம பேசறதுக்கு..." என்று நன்றி நவிழ, "ம்.. க்கும்... கோபப்பட கூடாது... நல்ல செவிட்டில் ஒண்ணு கொடுக்கணும்...' என்று ராம் பிரசாத்தின் மனம் விரும்பியது.
ராம் பிரசாத்தின் அறிவு, அவன் படித்த படிப்பு, பெண்ணின் மீது வைத்திருக்கும் மரியாதை அவனை அமைதி காக்க செய்தது.
"நான் உங்க சொல்லை நம்பலை..." என்று பளிச்சென்று கூறி, அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினாள் நந்தினி.
"உங்க செயலை நம்பறேன்... நான் உங்களை யாரோ மாதிரி பாக்கலை... வாசு அத்தான் மாதிரி தான் பாக்கறேன்... எல்லாரும் உங்க மேல் உள்ள அன்பில் உங்க சொல்லை நம்பி, நீங்க சொல்றதை நம்பறாங்க... ஆனால், நான் ரெண்டு நாளா உங்களைப் பார்த்ததில், பெரிய பிரச்சனை வரக் கூடிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா நீங்க செஞ்சிருப்பீங்கன்னு எனக்குத் தோணலை... உங்க செயலுக்கு பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு எனக்கு தோணுது..." என்று நந்தினி கூற, சந்துருவின் பார்வை மெச்சுதலாகா மாறினாலும், அவன் அதிர்ச்சி பன்மடங்காக பெருகியது.
சந்துரு சற்று தடுமாறினான்... 'தன் தாய்... தன் மனைவி... எல்லாரும் கெட்டிக் காறங்க தான்... எந்தப் பிரச்சனையையும் சாமர்த்தியசாலித்தனமாக, பொறுமையாக அணுகக் கூடியவர்கள் தான்... ஆனால் இவள்? பெண்கள் படிக்கிறார்கள்... வேலைக்குச் செல்கிறார்கள்... பெரிய பதவியில் இருக்கிறார்கள்... தலைமை பதவியில் திறம் பட செயல் படுகிறார்கள்... கேள்விப்பட்டிருக்கிறேன்... பார்த்ததில்லை... ஆனால், எதிரே நிற்பவனை இரண்டு நாளில் கணித்து, அவனிடம் கேள்வியும் கேட்டு, அவனைப் பாராட்டவும் செய்து... அப்பப்பா...' என்று எண்ணினான் சந்துரு.
"பெண் புத்தி பின் புத்தி..." என்ற வாக்கியத்தின் பொருள் இப்பொழுதுதான் சந்துருவிற்கு தெளிவாகப் புரிந்தது.
'காலத்தின் போக்கில் பின்னால் நடப்பதையும்... தன் கண்களுக்கு முன்னாள் மட்டுமின்றி பின்னால் நடப்பதையும் அறிக கூடியவர்கள் பெண்கள்... பெண் புத்தி பின் புத்தி தான்...' என்று பிரமிப்பாக எண்ணினான் சந்துரு.
தன் கணவனின் தடுமாற்றத்தைக் கண்ட கோமதி, நந்தினியின் சாமர்த்தியசாலித்தனத்தை மனதில் மெச்சினாலும், அவள் கண்கள் மெல்லிய பொறாமை உணர்வைக் காட்டியது.
'எல்லாம் தெரியுமுன்னு நினைப்பு...' என்று ராம் பிரசாத் பெரு மூச்சை வெளியேற்ற, அவரவர் சிந்தனையில் அனைவரும் அமைதி காத்தனர்.
அமைதியைக் கலைக்கும் விதமாக, "எல்லாம் தெரிஞ்சிக்கணுமுன்னு கேட்கலை... என் மனசில் பட்டத்தை சொல்லணுமுன்னு தோணுச்சு... சொல்லிட்டேன் அத்தான்..." என்று நந்தினி லகுவாக கூற, சந்துரு புன்னகைத்துக் கொண்டான்.
"அவுகளை அத்தனை முறை அத்தான்னு கூப்பிடுற... என்னை அக்கான்னு கூப்பிடு..." என்று கோமதி வம்பிழுக்க, இப்பொழுது மௌனமாக புன்னகைப்பது நந்தினியின் முறையாயிற்று.
'பவித்ராவை தவிர, வேறு யாரையாவது அக்கான்னு கூப்பிட முடியுமா?' என்று எண்ணியபடி மௌனமாக அமர்ந்திருந்தாள் நந்தினி.
சந்துரு, கோமதி இருவரும் அர்த்தம் பொதிந்த பார்வையை பரிமாறிக் கொண்டனர்.
அனைவரும், உணவை முடித்துக் கொண்டு உறவினர்களோடு பேசிக் கொண்டிருக்க, நேரம் மெல்லமாக நகர்ந்தது.
நந்தினி சந்தோஷ், அகல்யாவோடு பேசி சிரித்துக் கொண்டிருக்க, அவர்களுக்கு இடையூறு இல்லமால் நாம் பவித்ரா வாசுதேவன் இல்லத்தை நோக்கிப் பயணிப்போம்.
மகாதேவன் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, உத்தமி பட்டாளை தூணில் சாய்ந்து கொண்டு, "ராத்திரி நேரம் தோட்டத்தில் இருக்காதீங்கன்னு சொன்னா கேக்கறது கிடையாது... ரெண்டு பேரும் மரத்தடியில் இருட்டில இருந்து குசுகுசுன்னு பேசவேண்டியது..." என்று உத்தமி சலித்துக் கொள்ள மஹாதேவன் சிரித்துக் கொண்டார்.
தோட்டத்தில் மாமரத்தடியில் கயிற்றுக் கட்டிலில் தலைக்கு தன் கையை அண்டைக் கொடுத்து படுத்திருந்தான் வாசுதேவன்.
வாசுதேவன் அருகே சம்மணமிட்டு அவன் முகம் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் பவித்ரா.
இரவில் பூத்திருந்த மல்லி, பிச்சி பூக்களின் மணம் மூக்கைத் தொலைக்க அதை இருவரும் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
நிலவொளியில் பவித்ரா வாசுதேவனின் கண்களுக்கு தேவதையாகக் காட்சி அளித்தாள். வாசுதேவனின் கம்பீரம் பவித்ராவுக்கு அந்த இருளில் பாதுகாப்பு உணர்வைக் கொடுத்தது.
பவித்ரா எழுந்து செல்ல, அவள் மெலிதாக தள்ளாடினாள்.
"பவி..." என்று பதறியபடி எழுந்தான் வாசுதேவன். "எட்டி... என்ன ஆச்சு..." என்று அக்கறையாகக் கேட்டான் வாசுதேவன்.
"அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தான்... உங்களை பாத்துகிட்டே தரையில் கால் வைத்தேன்... கீழே இருந்த கல்லை கவனிக்கலை..." என்று தடுமாற்றத்தோடு கூறினாள் பவித்ரா.
பவித்ராவின் கண்களில் மெல்லிய பதட்டம் தெரிந்தது. அவள் கண்களை ஊடுருவிப் பார்த்தான் வாசுதேவன்.
"பவி..." என்று ஆழமான குரலில் அழைத்தான் வாசுதேவன்.
Last edited: