அன்பான வாசகர்களே...
உங்கள் விமர்சனங்கள் மற்றும் likes க்கு நன்றி... உங்களைக் காண, இரண்டல்ல ஒன்று ஒரு நாள் முன்னதாகவே பயணித்து விட்டது.
இரண்டல்ல ஒன்று – 20
"அப்புறம்..." என்று வாசுதேவன் கேள்வியாய் நோக்க, "அது... அது..." என்று தடுமாறினாள் பவித்ரா.
வாசுதேவன் பவித்ராவின் பதிலுக்காகப் பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.
"நந்தினி கல்யாணத்துக்கு மறுநாள் அத்தையும்... சுபாவும் பேசிட்டு இருந்தாங்க..." என்று பவித்ரா தயக்கத்தோடு ஆரம்பித்தாள்.
வாசுதேவன் எதுவும் பேசாமல், பவித்ராவை கூர்மையாகப் பார்க்க... பவித்ரா மேலும் தொடர்ந்தாள்.
"அன்னக்கி என்ன பேசுனாங்கன்னா… சுபாவுக்கு இன்னும் குழந்தை இல்லை... அவளுக்குக் குழந்தை இல்லாம சந்தோஷ் பிறந்ததே தப்புன்னு பேசினாங்க... சுபாவுக்குக் குழந்தை பிறக்காம நாம ரெண்டாவது குழந்தை பெத்துக்க கூடாதுன்னு அத்தை சுபாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க... சுபா எதுவும் பேசலை தான்... ஆனால், இந்த நேரம் அத்தைக்கு விஷயம் தெரிஞ்சா..." என்று பவித்ரா பேசிக் கொண்டிருக்க, "பவித்ரா..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.
பவித்ரா தன் மூச்சை உள்ளிழுத்து, 'இவங்க நம்ப மாட்டாங்க... சாமியாட்டம் ஆடப் போறாங்க...' என்று பவித்ரா எண்ணிக் கொண்டிருக்க, "நீ ஏன்டி இப்படி இருக்க? உனக்கு அம்மாவைத் தப்பா புரிஞ்சிக்கிறதே வேலையா போச்சு..." என்று பவித்ராவை பார்த்துச் சலிப்பாகக் கூறினான் வாசுதேவன்.
"அம்மா... அப்படி சொல்லுவாங்களா?" என்று வாசுதேவன் பவித்ராவை பார்த்து கோபமாக கேட்க, "இதுக்கு தான்... நான் உங்க கிட்டச் சொல்லலை... நீங்க எப்படியும் நான் சொல்றதை நம்ப போறதில்லை... அப்புறம் என்ன காரணத்துக்கு நான் உங்க கிட்ட சொல்லணும்?" என்று கடுப்பாகக் கேட்டாள் பவித்ரா.
"உன்னை நம்பாம இல்லை பவித்ரா... உன் அறியாமையைத் தான் நான் சொல்றேன்..." என்று வாசுதேவன் பவித்ராவின் தவறைச் சுட்டிக் காட்ட, "ஆமா... நான் முட்டாள்... நீங்க அதிபுத்திசாலி..." என்று சலிப்பாகக் கூறி மெத்தையின் மீது கோபமாக அமர்ந்தாள் பவித்ரா.
பவித்ராவின் முகம் சலிப்பைக் காட்ட, வாசுதேவன் பவித்ராவை கூர்மையாகப் பார்த்தான்.
"சரி பவித்ரா... அம்மா சொன்னதாகவே இருக்கட்டும்... நான் சொன்னது எனக்குச் சரி... நீ சொன்னது உனக்குச் சரி... நான் உன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பலை... நீ புத்திசாலியாவே இருந்துட்டு போ... ஆனால், என் கிட்ட ஏன் சொல்லலை?" என்று பவித்ராவின் முகம் பார்த்துக் கிடுக்குபிடியாக கேட்டான் வாசுதேவன்.
"அது... அது... வந்து... நீங்க உங்க அம்மா பேச்சைக் கேட்டு..." என்று பவித்ரா ஆரம்பிக்க, "மேல பேசாத பவித்ரா..." என்று தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டும் தன் பற்களை கடித்துக் கொண்டும் வார்த்தைகளை கடித்து துப்பினான் வாசுதேவன்.
"அத்தான்..." என்று பவித்ரா அழைக்க, "என்னைப் பத்தி நீ என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க?" என்று கேட்டு வாசுதேவன் கண்கலங்க பவித்ராவை விலகல் தன்மையோடு பார்த்தான்.
"அத்தான் அப்படி பாக்காதீங்க..." என்று பவித்ரா தொடங்க, வாசுதேவன் தன் தலையை மறுப்பாக அசைத்து, "உன் விருப்பத்திற்கு மாறா... நான் ஏதாவது செய்றேனா டீ?" என்று வாசுதேவன் உடைந்த குரலில் கேட்டான்.
"அத்தான்..." என்று பவித்ரா மீண்டும் தொடங்க, அவளைப் பேசவிடாமல் வாசுதேவன் மீண்டும் தொடர்ந்தான். "நீ ஆசைப்படுற இந்தக் குழந்தையை... நான் வேண்டாமுன்னு சொல்லுவேன்னு நீ நினைச்சியா பவித்ரா? உன் மனசு எனக்குத் தெரியாதா டீ... உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துப்பேனா?" என்று காட்டமாகக் கேட்க நினைத்து, பரிதாபமாகக் கேட்டான் வாசுதேவன்.
பவித்ரா வாசுதேவனின் கேள்வியில், அவன் குரலில் தாக்கப்பட்டு, அமைதியாக… தன் தலையில் கை வைத்துக் கொண்டு… கண் கலங்க அவனைப் பார்த்தாள்.
"உன் விருப்பத்திற்கு தானே நந்தினி கல்யாணம் நடந்துச்சு... உன் விருப்பத்திற்கு தானே நான் மறுவீட்டுக்கு வந்தேன்... உன் விருப்பப்படி தானே விருந்து நடந்துச்சு..." என்று வாசுதேவன் பவித்ராவை அடுக்குஅடுக்கான கேள்விகளால் தாக்கினான்.
வாசுதேவன் சொல்லி காட்டியதில், சீற்றம் கொண்டவளாய்… "அத்தான்... நீங்கச் சொன்ன எல்லா விஷயத்துக்கும் அத்தை தடங்கல் பண்ணாங்க... நீங்களும் உங்க அம்மா கிட்ட சரின்னு சொல்லிட்டு தான் வந்தீங்க... நான் ஒவ்வொரு தடவையும் உங்க கிட்ட சண்டை போட்ருக்கேன்... ஒவ்வொரு விஷயம் நடக்கிறதுக்கும் போராட்டம்... அப்புறம் நீங்க எனக்காகச் சம்மதம் சொன்னீங்க... இப்பவும் எனக்காகச் சரின்னு சொல்லுவீங்கன்னு தெரியும்... ஆனால்... நாலு மாசம் கழிச்சி சொன்னா, எந்த பேச்சுக்கும் இடமே இருகாதில்லை..." என்று மேலும் பேசும் எண்ணத்தோடு தன் பேச்சை நிறுத்தினாள் பவித்ரா.
பவித்ராவின் எண்ணத்தை அவள் முகம் கண்ணடியாகக் காட்ட, வாசுதேவன் வேதனை நிறைந்த மனதோடு அவள் இன்னும் என்ன சொல்லக் காத்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள அமைதியாக அமர்ந்திருந்தான்.
'சொல்ல ஆரம்பித்ததைச் சொல்லித் தானே ஆக வேண்டும்...' என்ற எண்ணம் பவித்ராவுக்கு மேலோங்க, "ஆனால்... மத்த விஷயங்களும் இதுவும் எனக்கு ஒண்ணு இல்லை அத்தான்..." என்று பவித்ரா கூற, அவள் கூறியது புரியாமல் தன் கண்களை சுருக்கி பவித்ராவை பார்த்தான் வாசுதேவன்.
"நம்ம குழந்தை விஷயத்தில்... அத்தை பேச்சைக் கேட்டுட்டு நீங்க எதிர்மறையா பேசுவீங்களோன்னு எனக்குப் பயம்... என் இஷ்டபடி தான் நடக்கும்னாலும்... குழந்தை விஷயத்தில் உங்க கிட்ட இருந்து வர ஒரு எதிர்மறைச் சொல்லைக் கூட என்னால் ஏத்துக்கவும் முடியாது... தாங்கவும் முடியாது அத்தான்..." என்று அழுத்தமாக ஆரம்பித்து, அழுதபடி பேசினாள் பவித்ரா.
வாசுதேவன் விரக்தியாகப் புன்னகைத்தான்.
வாசுதேவனின் கோபம் வடிந்து, வருத்தம் மேலோங்கியது.
பவித்ரா பவி ஆக மாறி இருந்தது.
'ஏன் பவி... என்னோடு வாழ்ந்த இத்தனை வருஷ வாழ்க்கையில் நீ என்னை இவ்வளவு தான் புரிஞ்சிகிட்டியா?' என்ற வாசுதேவனின் கேள்வி பவித்ராவின் மீது சாட்டையடியாக இறங்கியது.
பவித்ரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை வேதனை நிறைந்த கண்களோடு பார்த்தாள்.
நாற்காலியிலிருந்து எழுந்து, பவித்ராவின் முகம் பார்க்காமல் எதிர்த் திசையில் திரும்பிக் கொண்டு, "பவி... உனக்கும் உன் குழந்தைக்கும் நான் பாதுகாப்பா இருபெங்குற நம்பிக்கையை உன் அத்தான் இத்தனை வருஷ வாழ்க்கையில் உனக்குக் குடுக்கலயா டி?" என்று வாசுதேவன் ஆழமான குரலில் கேட்டான்.
உங்கள் விமர்சனங்கள் மற்றும் likes க்கு நன்றி... உங்களைக் காண, இரண்டல்ல ஒன்று ஒரு நாள் முன்னதாகவே பயணித்து விட்டது.
இரண்டல்ல ஒன்று – 20
"அப்புறம்..." என்று வாசுதேவன் கேள்வியாய் நோக்க, "அது... அது..." என்று தடுமாறினாள் பவித்ரா.
வாசுதேவன் பவித்ராவின் பதிலுக்காகப் பிடிவாதமாக அமர்ந்திருந்தான்.
"நந்தினி கல்யாணத்துக்கு மறுநாள் அத்தையும்... சுபாவும் பேசிட்டு இருந்தாங்க..." என்று பவித்ரா தயக்கத்தோடு ஆரம்பித்தாள்.
வாசுதேவன் எதுவும் பேசாமல், பவித்ராவை கூர்மையாகப் பார்க்க... பவித்ரா மேலும் தொடர்ந்தாள்.
"அன்னக்கி என்ன பேசுனாங்கன்னா… சுபாவுக்கு இன்னும் குழந்தை இல்லை... அவளுக்குக் குழந்தை இல்லாம சந்தோஷ் பிறந்ததே தப்புன்னு பேசினாங்க... சுபாவுக்குக் குழந்தை பிறக்காம நாம ரெண்டாவது குழந்தை பெத்துக்க கூடாதுன்னு அத்தை சுபாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாங்க... சுபா எதுவும் பேசலை தான்... ஆனால், இந்த நேரம் அத்தைக்கு விஷயம் தெரிஞ்சா..." என்று பவித்ரா பேசிக் கொண்டிருக்க, "பவித்ரா..." என்று கர்ஜித்தான் வாசுதேவன்.
பவித்ரா தன் மூச்சை உள்ளிழுத்து, 'இவங்க நம்ப மாட்டாங்க... சாமியாட்டம் ஆடப் போறாங்க...' என்று பவித்ரா எண்ணிக் கொண்டிருக்க, "நீ ஏன்டி இப்படி இருக்க? உனக்கு அம்மாவைத் தப்பா புரிஞ்சிக்கிறதே வேலையா போச்சு..." என்று பவித்ராவை பார்த்துச் சலிப்பாகக் கூறினான் வாசுதேவன்.
"அம்மா... அப்படி சொல்லுவாங்களா?" என்று வாசுதேவன் பவித்ராவை பார்த்து கோபமாக கேட்க, "இதுக்கு தான்... நான் உங்க கிட்டச் சொல்லலை... நீங்க எப்படியும் நான் சொல்றதை நம்ப போறதில்லை... அப்புறம் என்ன காரணத்துக்கு நான் உங்க கிட்ட சொல்லணும்?" என்று கடுப்பாகக் கேட்டாள் பவித்ரா.
"உன்னை நம்பாம இல்லை பவித்ரா... உன் அறியாமையைத் தான் நான் சொல்றேன்..." என்று வாசுதேவன் பவித்ராவின் தவறைச் சுட்டிக் காட்ட, "ஆமா... நான் முட்டாள்... நீங்க அதிபுத்திசாலி..." என்று சலிப்பாகக் கூறி மெத்தையின் மீது கோபமாக அமர்ந்தாள் பவித்ரா.
பவித்ராவின் முகம் சலிப்பைக் காட்ட, வாசுதேவன் பவித்ராவை கூர்மையாகப் பார்த்தான்.
"சரி பவித்ரா... அம்மா சொன்னதாகவே இருக்கட்டும்... நான் சொன்னது எனக்குச் சரி... நீ சொன்னது உனக்குச் சரி... நான் உன் நம்பிக்கையைக் கெடுக்க விரும்பலை... நீ புத்திசாலியாவே இருந்துட்டு போ... ஆனால், என் கிட்ட ஏன் சொல்லலை?" என்று பவித்ராவின் முகம் பார்த்துக் கிடுக்குபிடியாக கேட்டான் வாசுதேவன்.
"அது... அது... வந்து... நீங்க உங்க அம்மா பேச்சைக் கேட்டு..." என்று பவித்ரா ஆரம்பிக்க, "மேல பேசாத பவித்ரா..." என்று தன் இரு காதுகளையும் மூடிக் கொண்டும் தன் பற்களை கடித்துக் கொண்டும் வார்த்தைகளை கடித்து துப்பினான் வாசுதேவன்.
"அத்தான்..." என்று பவித்ரா அழைக்க, "என்னைப் பத்தி நீ என்னடி நினைச்சுக்கிட்டு இருக்க?" என்று கேட்டு வாசுதேவன் கண்கலங்க பவித்ராவை விலகல் தன்மையோடு பார்த்தான்.
"அத்தான் அப்படி பாக்காதீங்க..." என்று பவித்ரா தொடங்க, வாசுதேவன் தன் தலையை மறுப்பாக அசைத்து, "உன் விருப்பத்திற்கு மாறா... நான் ஏதாவது செய்றேனா டீ?" என்று வாசுதேவன் உடைந்த குரலில் கேட்டான்.
"அத்தான்..." என்று பவித்ரா மீண்டும் தொடங்க, அவளைப் பேசவிடாமல் வாசுதேவன் மீண்டும் தொடர்ந்தான். "நீ ஆசைப்படுற இந்தக் குழந்தையை... நான் வேண்டாமுன்னு சொல்லுவேன்னு நீ நினைச்சியா பவித்ரா? உன் மனசு எனக்குத் தெரியாதா டீ... உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நான் நடந்துப்பேனா?" என்று காட்டமாகக் கேட்க நினைத்து, பரிதாபமாகக் கேட்டான் வாசுதேவன்.
பவித்ரா வாசுதேவனின் கேள்வியில், அவன் குரலில் தாக்கப்பட்டு, அமைதியாக… தன் தலையில் கை வைத்துக் கொண்டு… கண் கலங்க அவனைப் பார்த்தாள்.
"உன் விருப்பத்திற்கு தானே நந்தினி கல்யாணம் நடந்துச்சு... உன் விருப்பத்திற்கு தானே நான் மறுவீட்டுக்கு வந்தேன்... உன் விருப்பப்படி தானே விருந்து நடந்துச்சு..." என்று வாசுதேவன் பவித்ராவை அடுக்குஅடுக்கான கேள்விகளால் தாக்கினான்.
வாசுதேவன் சொல்லி காட்டியதில், சீற்றம் கொண்டவளாய்… "அத்தான்... நீங்கச் சொன்ன எல்லா விஷயத்துக்கும் அத்தை தடங்கல் பண்ணாங்க... நீங்களும் உங்க அம்மா கிட்ட சரின்னு சொல்லிட்டு தான் வந்தீங்க... நான் ஒவ்வொரு தடவையும் உங்க கிட்ட சண்டை போட்ருக்கேன்... ஒவ்வொரு விஷயம் நடக்கிறதுக்கும் போராட்டம்... அப்புறம் நீங்க எனக்காகச் சம்மதம் சொன்னீங்க... இப்பவும் எனக்காகச் சரின்னு சொல்லுவீங்கன்னு தெரியும்... ஆனால்... நாலு மாசம் கழிச்சி சொன்னா, எந்த பேச்சுக்கும் இடமே இருகாதில்லை..." என்று மேலும் பேசும் எண்ணத்தோடு தன் பேச்சை நிறுத்தினாள் பவித்ரா.
பவித்ராவின் எண்ணத்தை அவள் முகம் கண்ணடியாகக் காட்ட, வாசுதேவன் வேதனை நிறைந்த மனதோடு அவள் இன்னும் என்ன சொல்லக் காத்திருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள அமைதியாக அமர்ந்திருந்தான்.
'சொல்ல ஆரம்பித்ததைச் சொல்லித் தானே ஆக வேண்டும்...' என்ற எண்ணம் பவித்ராவுக்கு மேலோங்க, "ஆனால்... மத்த விஷயங்களும் இதுவும் எனக்கு ஒண்ணு இல்லை அத்தான்..." என்று பவித்ரா கூற, அவள் கூறியது புரியாமல் தன் கண்களை சுருக்கி பவித்ராவை பார்த்தான் வாசுதேவன்.
"நம்ம குழந்தை விஷயத்தில்... அத்தை பேச்சைக் கேட்டுட்டு நீங்க எதிர்மறையா பேசுவீங்களோன்னு எனக்குப் பயம்... என் இஷ்டபடி தான் நடக்கும்னாலும்... குழந்தை விஷயத்தில் உங்க கிட்ட இருந்து வர ஒரு எதிர்மறைச் சொல்லைக் கூட என்னால் ஏத்துக்கவும் முடியாது... தாங்கவும் முடியாது அத்தான்..." என்று அழுத்தமாக ஆரம்பித்து, அழுதபடி பேசினாள் பவித்ரா.
வாசுதேவன் விரக்தியாகப் புன்னகைத்தான்.
வாசுதேவனின் கோபம் வடிந்து, வருத்தம் மேலோங்கியது.
பவித்ரா பவி ஆக மாறி இருந்தது.
'ஏன் பவி... என்னோடு வாழ்ந்த இத்தனை வருஷ வாழ்க்கையில் நீ என்னை இவ்வளவு தான் புரிஞ்சிகிட்டியா?' என்ற வாசுதேவனின் கேள்வி பவித்ராவின் மீது சாட்டையடியாக இறங்கியது.
பவித்ரா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவனை வேதனை நிறைந்த கண்களோடு பார்த்தாள்.
நாற்காலியிலிருந்து எழுந்து, பவித்ராவின் முகம் பார்க்காமல் எதிர்த் திசையில் திரும்பிக் கொண்டு, "பவி... உனக்கும் உன் குழந்தைக்கும் நான் பாதுகாப்பா இருபெங்குற நம்பிக்கையை உன் அத்தான் இத்தனை வருஷ வாழ்க்கையில் உனக்குக் குடுக்கலயா டி?" என்று வாசுதேவன் ஆழமான குரலில் கேட்டான்.
Last edited: