Dear Friends,
Thank you so much for you likes and comments...
இரண்டல்ல ஒன்று – 27
பவித்ரா ஆதரவின்றி தரையில் சரிந்து விழ, வாசுதேவன் வேதனையோடு வேறு பக்கம் திரும்பி இருக்க... "மதினி..." என்ற சத்தமான அழைப்போடு அவளைத் தாங்கி பிடித்தாள் சுபா.
சுபா எழுப்பிய சத்தத்தில், வாசுதேவன் பதட்டத்தோடு திரும்பினான்.
பவித்ராவை தன் மீது சாய்த்துக் கொண்டு, "பவி... எட்டி பவி..." என்று பதறிய குரலில் எழுப்பினான் வாசு தேவன்.
பவித்ரா மூச்சுப் பேச்சின்றி கிடந்தாள். பவித்ராவை எழுப்ப முயன்ற வாசுதேவனின் கைகள் சில்லிட்டது. "வாசு அண்ணா... எனக்குத் தெரியும்... நீ அம்மா பேச்சைக் கேட்கும் போதே... இப்படியொரு நாள் நடக்கும்னு தெரியும்..." என்று சுபா வாசுதேவனிடம் காட்டமாகக் கூறினாள்.
"ஒன்னும் நடக்கலை... எல்லாம் அதிர்ச்சி மயக்கம் தான்... இதுவரைக்கும் திட்டாத நீ திடீருன்னு திட்டினா அப்படி தான்..." என்று கூறிக் கொண்டே, தண்ணீரை வேகமாக பவித்ராவின் முகத்தில் தெளித்தார் உத்தமி.
"அம்மா... இவ்வளவு வேகமா தண்ணீர் முகத்தில் அடிச்சா... அவளுக்கு வலிக்கும் அம்மா..." என்று கூறியபடி, தன் மேல் கிடந்த துண்டால் பவித்ராவின் முகத்தைத் துடைத்தான் வாசுதேவன்.
"இதுக்கு மட்டும் இல்லைடா... நீ பேசின பேச்சுக்கும் வலிக்கும்..." என்று வாசுதேவனை வெறுப்பாகப் பார்த்தபடி கூறினார் மஹாதேவன்.
"எல்லாம் என் தப்பு தான்... எல்லாம் என் தப்பு தான்... இத்தனை வருஷம் அவளே தனியா சமாளிச்சாளே... இன்னைக்கும் சமாளிச்சிருவான்னு நினைச்சி அமைதியா இருந்தது... என் தப்பு தான்..." என்று தலையில் அடித்துக் கொண்டார் மஹாதேவன்.
"பவி... எட்டி பவி..." என்பதைத் தவிர வாசுதேவன் எதுவும் பேசவில்லை.
வாசுதேவன் பவித்ராவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க, "என்ன நடந்திருச்சுன்னு ஆளாளுக்கு குதிக்கிறீங்க? அவளும் நடிக்கறா?" என்று உத்தமி சீற, " உன்னை மாதிரி நினைச்சியா? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்காத... பிள்ளைங்க முன்னாடி நான் எதையும் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்... இல்லனா நடக்கிறதே வேற..." என்று உத்தமியை மிரட்டினார் மஹாதேவன்.
இது போல் சில சமயம் கோபித்துக் கொள்ளும் கணவனின் குணம் அறிந்து, உத்தமி தன் வாயை கப்சிப் என்று மூடிக் கொண்டார்.
"வாசு... பவித்ராவை காருக்கு தூக்கிட்டு போ... நீ ஓட்ட வேண்டாம்... நான் வண்டி எடுக்கறேன்... சுபா நீ கூட வா... அவங்க அம்மா அப்பா இங்கிருக்கும் பொழுது அவுக கிட்ட சொல்லாம மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறது தப்பு... அவுங்களுக்கு போகும் வழியில் சொல்லிடு..." என்று கட்டளையை பரப்பித்துக் கொண்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மஹாதேவன்.
வாசுதேவன் எதுவும் பேசாமல், பவித்ராவை கைகளில் ஏந்தியபடி அமைதியாக இருந்தான். அதற்குள் சுபாவின் கணவர் கார்த்திகேயன் விஷயமறிந்து, அவர்களுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தான்.
வாசுதேவன் பவித்ராவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் செல்ல, மஹாதேவன் அவன் பின் தொடர்ந்து சென்றார்.
வாசுதேவன், மஹாதேவன், பவித்ரா உள்ளே செல்ல, கார்த்திகேயன், சுபாவை கை பிடித்து நிறுத்தினான்.
"என்ன நடந்தது சுபா?" என்று தன் கண்களைச் சுருக்கி கேட்டான் கார்த்திகேயன்.
சுபா நடந்ததைக் கூற, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் அவள் கணவன்.
"நீ உங்க அப்பா மாதிரின்னு நினைச்சன் டீ... உங்க அம்மா மாதிரின்னு காட்டிட்டியே டீ.... அது சரி... உங்க அம்மா புத்தி உனக்கு இல்லாம போகுமா?" என்று கார்த்திகேயன் சுபாவை திட்ட, சுபா ஏதோ பேச வாயெடுத்தாள்.
"பேசாதா... உனக்கு உங்க அம்மாவை பத்தி தெரியாது... பவித்ரா அக்கா பாவம் டீ... இத்தனை வருஷம் அவங்க உங்க கிட்ட நாத்தனார் மாதிரியா நடந்துக்கிட்டாங்க? நீ உன் நாத்தனார் புத்தியை காட்டிட்டல... ச்ச..." என்று கார்த்திகேயன் அவளை வெறுப்பாய் பார்த்தான்.
"இல்லங்க... அம்மா நெஞ்சை பிடிச்சதால் கொஞ்சம் நிதானம் தவறிட்டேன்..." என்று கண்களை கசக்கினாள் சுபா.
"உங்க அம்மா நடிச்சிருப்பாங்க டீ... இது உங்க நொண்ணக்கு புரியாது... அப்படியே துடிச்சு போயிருப்பாரு... உனக்கு எங்க போச்சு அறிவு? உங்க வீட்டில் என் கிட்ட மரியாதை கொடுத்து பேசுறது அவுக மட்டும் தான். அவுகளையும் இங்க கொண்டு வந்து படுக்க வச்சிடீங்க மொத்த குடும்பமுமா சேர்ந்து.... உங்க அப்பா நல்லவரா இருந்து ப்ரோஜனமே கிடையாது... வாயே திறக்க மாட்டாக...." என்று சுபாவிடம் ஏறினான் கார்த்திகேயன்.
"இத பார்... நீ அங்க போகாம இருந்தாலே எல்லாம் சரி ஆகிரும்... நீ இருக்கிற தயவுல தான் உங்க அம்மா ஆட்டம் அதிகமா இருக்கு... அங்க எல்லாம் சரியாகுற வரைக்கும், நீ உங்க வீட்டு பக்கம் போக கூடாது..." என்று கார்த்திகேயன் கூற அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் சுபா.
"நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்ட முறை தப்பு தான்... அதுக்கு தான் இத்தனை வருஷம் பொறுமையா இருந்தேன்... இனி இருக்க முடியாது... நான் சொல்றதை கேள்... இல்லை அம்மா... ஆட்டு குட்டின்னு உங்க வீட்டுக்குப் போன, அப்புறம் நடக்கிற கதையே வேற... எல்லாரையும் வகுந்துருவேன்..." என்று கார்த்திகேயன் கர்ஜனையாகக் கூற, சுபா இன்றைய குற்ற உணர்ச்சியில் வேறு வழியின்றி தலை அசைத்தாள்.
"போய்... அவுகளை பாரு... புள்ள தாச்சி வேற... என்ன பாவம் பண்ணமோ... இன்னைக்கி வரைக்கும் நமக்கு குழந்தை இல்லை... நீ இதை வேற சேர்த்து வச்சிருக்க..." என்று வருத்தமான குரலில் கார்த்திகேயன் கூற கண்களில் வலியோடு அவனைப் பார்த்தாள் சுபா.
சுபாவின் முகம் பார்த்து, சற்று கோபம் தணிந்தவனாக அவள் தலை கோதி, "போ ... போய் அவகளை பாரும்மா... அவுகளுக்கு ஒன்னும் ஆகாது " என்று சுபாவை ஆறுதல் படுத்தி உள்ளே அனுப்பினான் கார்த்திகேயன்.
அதற்குள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த சந்திரசேகரின் குடும்பம், விஷயம் அறிந்து மொத்த குடும்பமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
பவித்ராவின் பெற்றோர் செல்வி, ஆவுடையப்பன் இருவரும் வர அனைவரும் பவித்ராவின் நிலை அறிந்து கொள்ள ஐ.சி.யூ. வாசலில் நின்றனர்.
வாசுதேவன் முகத்தில் உயிரோட்டம் இல்லாமல், வாடிய முகத்தோடு கண்களை இறுக மூடிக்கொண்டு, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி சுவரில் சாய்ந்திருந்தான்.
அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு காத்திருக்க, நந்தினி ஆராயும் கண்களோடு கண்ணாடி வழியே பவித்ராவை பார்த்தாள்.
அழுது சிவந்து வீங்கியிருப்பது போல் பவித்ராவின் முகம் காட்சி அளிக்க, நந்தினி வாசுதேவன் அருகே சென்றாள்.
"அத்தான்... அக்கா அழுதாளா?" என்று தன் கண்களைச் சுருக்கி கேட்டாள் நந்தினி.
நந்தினியின் கேள்வியில் கண்களைத் திறந்த வாசுதேவன், பதில் கூறாமல் மௌனமாக நின்றான்.
வாசுதேவனின் மௌனம் நந்தினிக்குச் சந்தேகத்தைக் கிளப்ப, "அக்காவை அடிச்சீங்களா?" என்று நந்தினி வாசுதேவனைப் பார்த்து கூர்மையாகக் கேட்டாள்.
அனைவரும் பதட்டத்தோடு வாசுதேவனைப் பார்க்க, வாசுதேவன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
Thank you so much for you likes and comments...
இரண்டல்ல ஒன்று – 27
பவித்ரா ஆதரவின்றி தரையில் சரிந்து விழ, வாசுதேவன் வேதனையோடு வேறு பக்கம் திரும்பி இருக்க... "மதினி..." என்ற சத்தமான அழைப்போடு அவளைத் தாங்கி பிடித்தாள் சுபா.
சுபா எழுப்பிய சத்தத்தில், வாசுதேவன் பதட்டத்தோடு திரும்பினான்.
பவித்ராவை தன் மீது சாய்த்துக் கொண்டு, "பவி... எட்டி பவி..." என்று பதறிய குரலில் எழுப்பினான் வாசு தேவன்.
பவித்ரா மூச்சுப் பேச்சின்றி கிடந்தாள். பவித்ராவை எழுப்ப முயன்ற வாசுதேவனின் கைகள் சில்லிட்டது. "வாசு அண்ணா... எனக்குத் தெரியும்... நீ அம்மா பேச்சைக் கேட்கும் போதே... இப்படியொரு நாள் நடக்கும்னு தெரியும்..." என்று சுபா வாசுதேவனிடம் காட்டமாகக் கூறினாள்.
"ஒன்னும் நடக்கலை... எல்லாம் அதிர்ச்சி மயக்கம் தான்... இதுவரைக்கும் திட்டாத நீ திடீருன்னு திட்டினா அப்படி தான்..." என்று கூறிக் கொண்டே, தண்ணீரை வேகமாக பவித்ராவின் முகத்தில் தெளித்தார் உத்தமி.
"அம்மா... இவ்வளவு வேகமா தண்ணீர் முகத்தில் அடிச்சா... அவளுக்கு வலிக்கும் அம்மா..." என்று கூறியபடி, தன் மேல் கிடந்த துண்டால் பவித்ராவின் முகத்தைத் துடைத்தான் வாசுதேவன்.
"இதுக்கு மட்டும் இல்லைடா... நீ பேசின பேச்சுக்கும் வலிக்கும்..." என்று வாசுதேவனை வெறுப்பாகப் பார்த்தபடி கூறினார் மஹாதேவன்.
"எல்லாம் என் தப்பு தான்... எல்லாம் என் தப்பு தான்... இத்தனை வருஷம் அவளே தனியா சமாளிச்சாளே... இன்னைக்கும் சமாளிச்சிருவான்னு நினைச்சி அமைதியா இருந்தது... என் தப்பு தான்..." என்று தலையில் அடித்துக் கொண்டார் மஹாதேவன்.
"பவி... எட்டி பவி..." என்பதைத் தவிர வாசுதேவன் எதுவும் பேசவில்லை.
வாசுதேவன் பவித்ராவை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருக்க, "என்ன நடந்திருச்சுன்னு ஆளாளுக்கு குதிக்கிறீங்க? அவளும் நடிக்கறா?" என்று உத்தமி சீற, " உன்னை மாதிரி நினைச்சியா? உன்னைப் பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைக்காத... பிள்ளைங்க முன்னாடி நான் எதையும் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறேன்... இல்லனா நடக்கிறதே வேற..." என்று உத்தமியை மிரட்டினார் மஹாதேவன்.
இது போல் சில சமயம் கோபித்துக் கொள்ளும் கணவனின் குணம் அறிந்து, உத்தமி தன் வாயை கப்சிப் என்று மூடிக் கொண்டார்.
"வாசு... பவித்ராவை காருக்கு தூக்கிட்டு போ... நீ ஓட்ட வேண்டாம்... நான் வண்டி எடுக்கறேன்... சுபா நீ கூட வா... அவங்க அம்மா அப்பா இங்கிருக்கும் பொழுது அவுக கிட்ட சொல்லாம மருத்துவமனைக்கு கூட்டிட்டு போறது தப்பு... அவுங்களுக்கு போகும் வழியில் சொல்லிடு..." என்று கட்டளையை பரப்பித்துக் கொண்டு கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினார் மஹாதேவன்.
வாசுதேவன் எதுவும் பேசாமல், பவித்ராவை கைகளில் ஏந்தியபடி அமைதியாக இருந்தான். அதற்குள் சுபாவின் கணவர் கார்த்திகேயன் விஷயமறிந்து, அவர்களுக்காக மருத்துவமனை வாசலில் காத்திருந்தான்.
வாசுதேவன் பவித்ராவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குள் செல்ல, மஹாதேவன் அவன் பின் தொடர்ந்து சென்றார்.
வாசுதேவன், மஹாதேவன், பவித்ரா உள்ளே செல்ல, கார்த்திகேயன், சுபாவை கை பிடித்து நிறுத்தினான்.
"என்ன நடந்தது சுபா?" என்று தன் கண்களைச் சுருக்கி கேட்டான் கார்த்திகேயன்.
சுபா நடந்ததைக் கூற, அவள் கன்னத்தில் பளார் என்று அறைந்தான் அவள் கணவன்.
"நீ உங்க அப்பா மாதிரின்னு நினைச்சன் டீ... உங்க அம்மா மாதிரின்னு காட்டிட்டியே டீ.... அது சரி... உங்க அம்மா புத்தி உனக்கு இல்லாம போகுமா?" என்று கார்த்திகேயன் சுபாவை திட்ட, சுபா ஏதோ பேச வாயெடுத்தாள்.
"பேசாதா... உனக்கு உங்க அம்மாவை பத்தி தெரியாது... பவித்ரா அக்கா பாவம் டீ... இத்தனை வருஷம் அவங்க உங்க கிட்ட நாத்தனார் மாதிரியா நடந்துக்கிட்டாங்க? நீ உன் நாத்தனார் புத்தியை காட்டிட்டல... ச்ச..." என்று கார்த்திகேயன் அவளை வெறுப்பாய் பார்த்தான்.
"இல்லங்க... அம்மா நெஞ்சை பிடிச்சதால் கொஞ்சம் நிதானம் தவறிட்டேன்..." என்று கண்களை கசக்கினாள் சுபா.
"உங்க அம்மா நடிச்சிருப்பாங்க டீ... இது உங்க நொண்ணக்கு புரியாது... அப்படியே துடிச்சு போயிருப்பாரு... உனக்கு எங்க போச்சு அறிவு? உங்க வீட்டில் என் கிட்ட மரியாதை கொடுத்து பேசுறது அவுக மட்டும் தான். அவுகளையும் இங்க கொண்டு வந்து படுக்க வச்சிடீங்க மொத்த குடும்பமுமா சேர்ந்து.... உங்க அப்பா நல்லவரா இருந்து ப்ரோஜனமே கிடையாது... வாயே திறக்க மாட்டாக...." என்று சுபாவிடம் ஏறினான் கார்த்திகேயன்.
"இத பார்... நீ அங்க போகாம இருந்தாலே எல்லாம் சரி ஆகிரும்... நீ இருக்கிற தயவுல தான் உங்க அம்மா ஆட்டம் அதிகமா இருக்கு... அங்க எல்லாம் சரியாகுற வரைக்கும், நீ உங்க வீட்டு பக்கம் போக கூடாது..." என்று கார்த்திகேயன் கூற அவனை அதிர்ச்சியாக பார்த்தாள் சுபா.
"நான் உன்னை கல்யாணம் பண்ணிகிட்ட முறை தப்பு தான்... அதுக்கு தான் இத்தனை வருஷம் பொறுமையா இருந்தேன்... இனி இருக்க முடியாது... நான் சொல்றதை கேள்... இல்லை அம்மா... ஆட்டு குட்டின்னு உங்க வீட்டுக்குப் போன, அப்புறம் நடக்கிற கதையே வேற... எல்லாரையும் வகுந்துருவேன்..." என்று கார்த்திகேயன் கர்ஜனையாகக் கூற, சுபா இன்றைய குற்ற உணர்ச்சியில் வேறு வழியின்றி தலை அசைத்தாள்.
"போய்... அவுகளை பாரு... புள்ள தாச்சி வேற... என்ன பாவம் பண்ணமோ... இன்னைக்கி வரைக்கும் நமக்கு குழந்தை இல்லை... நீ இதை வேற சேர்த்து வச்சிருக்க..." என்று வருத்தமான குரலில் கார்த்திகேயன் கூற கண்களில் வலியோடு அவனைப் பார்த்தாள் சுபா.
சுபாவின் முகம் பார்த்து, சற்று கோபம் தணிந்தவனாக அவள் தலை கோதி, "போ ... போய் அவகளை பாரும்மா... அவுகளுக்கு ஒன்னும் ஆகாது " என்று சுபாவை ஆறுதல் படுத்தி உள்ளே அனுப்பினான் கார்த்திகேயன்.
அதற்குள் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த சந்திரசேகரின் குடும்பம், விஷயம் அறிந்து மொத்த குடும்பமாக மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
பவித்ராவின் பெற்றோர் செல்வி, ஆவுடையப்பன் இருவரும் வர அனைவரும் பவித்ராவின் நிலை அறிந்து கொள்ள ஐ.சி.யூ. வாசலில் நின்றனர்.
வாசுதேவன் முகத்தில் உயிரோட்டம் இல்லாமல், வாடிய முகத்தோடு கண்களை இறுக மூடிக்கொண்டு, தன் கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி சுவரில் சாய்ந்திருந்தான்.
அனைவரும் கவலை தோய்ந்த முகத்தோடு காத்திருக்க, நந்தினி ஆராயும் கண்களோடு கண்ணாடி வழியே பவித்ராவை பார்த்தாள்.
அழுது சிவந்து வீங்கியிருப்பது போல் பவித்ராவின் முகம் காட்சி அளிக்க, நந்தினி வாசுதேவன் அருகே சென்றாள்.
"அத்தான்... அக்கா அழுதாளா?" என்று தன் கண்களைச் சுருக்கி கேட்டாள் நந்தினி.
நந்தினியின் கேள்வியில் கண்களைத் திறந்த வாசுதேவன், பதில் கூறாமல் மௌனமாக நின்றான்.
வாசுதேவனின் மௌனம் நந்தினிக்குச் சந்தேகத்தைக் கிளப்ப, "அக்காவை அடிச்சீங்களா?" என்று நந்தினி வாசுதேவனைப் பார்த்து கூர்மையாகக் கேட்டாள்.
அனைவரும் பதட்டத்தோடு வாசுதேவனைப் பார்க்க, வாசுதேவன் மறுப்பாகத் தலை அசைத்தான்.
Last edited: