IM 18
போட்ட எல்லா பிளான்-னும் சொதப்பிடுச்சு.. இந்த al --------- தீவிரவாதிங்க வேற, 500 சி4, கொடு... விலை என்னன்னாலும் தர்றோம்-கிறங்க.. இந்த SNP -யோ.. அந்த ஃபாக்டரி-ய விடறதா இல்ல.. ம்ம் என்ன பண்ணலாம்?
வக்கீல் பொம்பளையும் , அவ புருஷனும் கோர்ட்-ல முட்டிப்பாங்க-னு பாத்தா , அதுவும் வரல. அந்தம்மா புருஷனும் கூண்டு-ல ஏறல ?... சே.... இவங்க புள்ளையும், அந்த பொண்ணு யாரவ?, கல்பா அவளும் சேர்ந்து காரியத்தை கெடுத்திட்டாங்க" , தனக்கு தானே பேசிய மனோகரனின் பக்கத்தில் இருந்த அலைபேசி அடித்தது.. வந்ததோ வாட்ஸப் அழைப்பு .. ஆனால், அதை இவர்கள் உபயோகிக்கும் முறையோ அலாதி..
பேசினால் தானே கண்டுபிடிப்பர்? இரு முனையிலும், காது கேளாத, வாய் பேச, இயலாதவர்களின் சைகை மொழியில் பேசினால்?.. யாரும் ஒட்டுக்கேட்டாலும் எதுவும் கேட்காது.. பேசுபவர்களின் எண்களை தவிர வேறு எதுவும் பதிவுகளில் இருக்காது... அந்த எண்களும் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப் பட மாட்டாது. பின்னர் எங்கே பிடிப்பது இவர்களை? ஆதாரம் ? இப்படித்தான் மனோவுடன், வெடிகுண்டு தேவைப்படுபவர்கள், தொடர்பு கொள்கிறார்கள்.
"நான் என்ன தப்பு பண்ணினேன்? வெளிநாட்டுல சட்டப்படி தயாரிக்கறத, இந்தியால தயாரிக்கறேன்.. நியாயமா பாத்தா, நல்ல தொழிலதிபர்-ன்னு விருது கொடுத்து பாராட்டணும்.. ம்ம்ம்.. என்னவோ போடா...மனோகரா... இந்த நாடு நம்மள எப்பதான் புரிஞ்சுக்குமோ ?"
" சரி.. நான் C-4 குடுக்கலைன்னா அவங்களுக்கு கிடைக்காம போயிடுமா? சப்ளை பண்றதுக்கு ஏகப்பட்ட பேர் இருக்கான்.. கொலை செஞ்சேனா?, திருடினேனா? இருக்கிற மூளையை உபயோகிச்சு நாலு காசு சம்பாதிச்சு சேர்த்து வைக்கறேன், அதுவும் அன்னிய செலாவணி ... இது ஒரு தப்பாப்பா?"
"அலைபேசியை எடுத்தவன், சைகை மொழியில் பேச...
"சொல்லுங்க ஜி "
" 300 C 4, அவசரம், அஸ்ஸாம் பார்டர் கிட்ட தேவை.. தரமுடியுமா?"
"தேவையான பொருட்கள் இருக்கான்னு தெரில. சரி என்ன ரேட் ?"
"வழக்கத்தை விட மூணு பங்கு அதிகம்.. சீக்கிரம் கொடுத்தா இன்னும் ஏத்தி தர்றேன்."
"ஆஹா... நல்ல சான்ஸ் ஆச்சே.. விடக் கூடாதே ", என்று இவன் இங்கே யோசிக்க ஆரம்பித்தான்.
++++++++++++++++++++++++++++++
அன்று இளம்பரிதி, அலுவலகத்துக்கு வந்து "கண்டு பிடிச்சிட்டோம் ..."என்று சொல்லி விபரங்களை சொன்னபோது, SNP -க்கு "ஆஹா.... ", என்று இளா -வை மெச்சிக் கொள்ள தோன்றியது. அவன் கூறியது ::
"அத்தைக்கு போன் பண்ணின அந்த டெலிபோன் பூத்-லேர்ந்து ரெண்டு ஸ்டேப் கீழ இறங்கினா ரோடு, சுத்தி ஒண்ணுமில்ல, ஆனா, ஒரு இடத்துல மட்டும், நான் கால் வச்ச இடத்துல சூடு இருந்தது, என் பேண்ட்-டையும் தாண்டி தெரிஞ்சது. அது கரித்தூள்.. தொடர்ச்சியா ஒரே இடத்தில கொட்டின தடம்.. தள்ளு வண்டில இஸ்திரி போட்றவங்க இப்படித்தான் கரித்தூளை கொட்டுவாங்க... சோ, அந்த ஏரியா மொத்தமும் விசாரிச்சதுல, மூணு பேரு அந்த மாதிரி அயர்ன் பண்றாங்க-ன்னு தெரிஞ்சுகிட்டேன். அவங்கள்ல ஒருத்தன் ரெகுலரா அந்த இடத்துல நின்னு தான், அயர்ன் பன்றான்,அவன் சொன்னது என்னன்னா... நமக்கு போன் வந்த அந்த நேரத்துல, ப்ளூ கலர் ஸ்ட்ரைப் ஷர்ட் போட்ட ஒருத்தன் ஆக்ட்டிவா ஓட்டிட்டு வந்து, அங்க போன் பண்ணிட்டு போனத இவன் பாத்திருக்கான் ... "
"இந்த ஒன்னு போதாதா நமக்கு ?, அந்த ஏரியா, CCTV footage மொத்தமும் அலசினதுல, ப்ளூ கோடு போட்ட சட்ட, வித் ஆக்ட்டிவா ன்னு தேட.வண்டி நம்பர் கிடைச்சு.. ஆள பிடிச்சாச்சு. பேரு யோகேஷ், கை ரேகை செக் பண்ணிட்டேன். நம்ம மெட்டீரியல்-ல கை வச்சதும் இவங்க குரூப்தான்.."
"காரணம் மனோகரன்-்னு ஒருத்தன், விஷயம் கேட்டா, ரொம்ப ஷாக் ஆவீங்க.. அவன் ஒரு பக்கா கிரிமினல்.. C 4 ரக வெடிகுண்டு தயாரிக்கிறானாம், அதுக்கு உங்க பிளாஸ்டிக் தேவைப்படுது, அவனுக்கு.. இந்த கம்பெனியை, அவனே வாங்க முயற்சி செஞ்சிருக்கான், பழைய ஓனர் ஒத்துக்கல.. அதனால, கம்பெனி பேரை கெடுத்துட்டா.. நாமளே வித்துட்டு போயிடுவோம்-னு தப்பா நினைச்சிருக்கான்... அப்பறம், மெட்டீரியல் கை மாறியது.. தரம் போனது-ன்னு , போன் வந்தது.. எல்லாம் இவன் வேலைதான் , பிடிபட்டவனே அக்கு வேற ஆணி வேற சொல்றான்"
"இப்போ மனோகரனை பிடிச்சிடீங்களா?"
"வாய்ப்பே இல்ல,அந்தாள நான் ரெண்டு தட்டு தட்டின உடனே, உண்மையெல்லாம் சொன்னவன், கடைசில சொன்னான் பாருங்க ... " சார் ... நீ எங்கிட்ட என்ன வேணா கேளு, உண்மையை சொல்றேன்... ஆனா, கோர்ட்-ல மட்டும் , நீ அடிச்சு சொல்ல வச்ச-ன்னுதான் சொல்லுவேன். அப்படி நான் சொல்லலைன்னா, வெளியவோ இல்ல உள்ள வச்சோ என்ன தீத்திடுவாங்க. சாரி ஸார். என் வீட்டு ஆளுங்களும் வெளிய தான் இருக்காங்க..நான் அவங்கள காப்பாத்தணும்ல்ல -ன்னு , அசால்ட்டா சொல்லிட்டான்.."
விஷயம் தெரிஞ்சது-ன்னு வேணும்னா சந்தோஷ படலாம், அவனை தூண்டி விட்டு அடுத்து ஏதாவது அவனே பண்ணினா, மாட்டிப்பான்.. ஆனா, அவன் புத்திசாலி மட்டுமில்ல ரொம்ப பெரிய கிரிமினல் கூட. பாத்துதான் பண்ணனும்.
அதாலதான், கோர்ட்-ல பாஸ்கரை ... ஒருத்தன் அப்ரூவர் ஆகிட்டான்-ன்னு சொல்ல வச்சேன்..இனி அவனா மூவ் பண்ணினாதான் உண்டு.", என்று முடித்தான்..
"இந்த விஷயம் சரண்-க்கு தெரியுமா?"
தெரியாது, ஆனா சொல்லணும்... நீங்க அத்த டென்சன் படுவாங்கன்னு பாக்காதீங்க.. அவங்க அண்ட் கல்பா ரெண்டு பேரும், ஜாக்கிரதையா இருக்கணும். அவன் கோபம் யார் மேல திரும்பும்-னு தெரியாது.. "
"என்னால முடிஞ்சது, நான் அவனோட போனெல்லாத்தையும் பக் பண்ணி இருக்கேன். அவனை ஃபாலோ பண்ணுங்க-ன்னு, ரெண்டு கான்ஸ்டபிளை போட்டு இருக்கேன்.."
பரிதியின் அலைபேசி அடிக்க, "ஓகே.. மாமா, வேலை இருக்கு . வர்றேன் ", என்று கிளம்பினான்.
அடுத்த சில பல மணி நேரங்களில், உலகத்தின் இன்னொரு மூலையில், மனோ-வின் ஸ்விஸ் வங்கி கணக்கு, SNP- யின் துப்பறியும் நபர்களால், ஹேக் செய்யப்பட்டு.. செயலிழக்க செய்யப்பட்டது... ஒரே ஒரு நிமிடத்தில்.. ஒன்றுமில்லாதவனாய் ஆனான், மனோ..
விதி வலியது.
++++++++++++++++++++++++++++++++
இவர்களின் வழக்கின் தீர்ப்பு, தேதி குறிப்பிடப் படாமல் ஒத்தி வைக்கப் பட்டு இருந்தது. காரணம், தரமில்லாத அந்த சாம்பிள்கள் [மாதிரி] , இங்கே தயாரிக்கப்பட்டவையா இல்லை போலியா , என கண்டறிந்த பின்னரே, வழக்கின் போக்கு முடிவாகும் என குறிப்பிட்டு, தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.
இவை இவ்வாறு இருக்க, SNP, எப்போது இப்படி ஒரு வழக்கு வந்துள்ளது என்று தெரிந்ததோ, அன்றிலிருந்தே .. வெளிச்சந்தையில் இருந்த அனைத்து தயாரிப்புகளை திரும்ப வாங்கி இருந்தான். ஒரு பக்கமும் விடாது, மருத்துவ மனைகள், மொத்த கொள்முதல் செய்பவர்கள் முதல், சிறிய மருந்து கடை வைத்திருப்பவர் வரை அனைவரிடத்தும் இவனது SIPCOT தயாரிப்புகளை திரும்பப் பெற்றான். இதை இளம்பரிதியும் குறிப்பிட்டு இருந்தான்.. அதற்கும் முன்னரே, இந்த வேலையை SNP , துவங்கி , இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் உள்ளனரா என்று அதையும் சலித்தான். நல்லவேளையாக, கடவுள் அருளால், அப்படி யாரும் பாதிக்கப்பட வில்லை..
அடுத்தது அவன் செய்ததுதான், யாராலும் யூகிக்க முடியாதது.. SIPCOT -ன் தயாரிப்பாளர் உரிமத்தினை ரத்து செய்யுமாறு சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பித்து இருந்தான்.. [cancellation of licence ]
இவையனைத்தையும் தொழிலாளர்களுடன் கலந்து ஆலோசித்து செய்தான்..
இந்த முத்திரைக்கு கறை படிந்து விட்டது.. மீட்டாக வேண்டும் என்பதால் இதை செய்வதாக.. "உங்க பழைய முதலாளி, உங்க மேல வச்ச நம்பிக்கையை , நீங்க காப்பாத்துங்க.. என் கூட நில்லுங்க.. திரும்ப நாம முழு வீச்சுல மேல வருவோம், நல்ல மதிப்போட , அதுவரை... இங்க ரெனோவேஷன் [புதுப்பித்தல்] வொர்க் நடக்கும், அவங்கவங்க யூனிட் -ல ஏதாவது மாத்தம் வேணும்-னு நினச்சா சொல்லுங்க செய்வோம்.. ", என்று அறிவித்து, தொழிலாளர்கள் மதிப்பினை பெற்றான்.
ஒன்றிரண்டு வாரங்கள் சென்ற நிலையில், மீண்டும் உரிமத்துக்கு விண்ணப்பித்தான், தற்போதும் SNP & கோ. என்ற அதே பெயரில்.. கிட்டத்தட்ட ஒரு தொழிற்சாலை கட்டமைப்பின் ஆரம்ப நிலை. உரிமமும் கிடைக்க... இரண்டே மாதங்களில்.. SNP SIPCOT குழுமத்தின் .. முதல் தயாரிப்பினை.. மக்களின் பார்வைக்கு கொண்டு சென்றான், "How do they do it?" என்ற நிகழ்ச்சியின் மூலம். ஃபாக்டரியின் அனைத்து செயல்பாடுகளையும், தர கட்டுப்பாடுகள், அதற்க்குண்டான கருவிகள், அவை எவ்வாறு வேலை செய்கின்றன ? என ஒன்று விடாது, ஒளிபரப்பினான். மொத்தத்தில், SNP trade mark - கின் நம்பகத்தன்மையினை மீட்டுக்கொண்டான்...
தலைவர் மொழியில் சொல்வதென்றால், "நான் யானையில்ல, குதிரை, யானை விழுந்தா எந்திரிக்க நேரமாகும், ஆனா, குதிரை, டக்குன்னு சுதாரிச்சு உடனே நின்னுடும் ", SNP குதிரை... அதுவும் உயர் ஜாதி குதிரை என்பதை நிரூபித்தான்.
மொத்தத்தில் இந்த வழக்கு, அதன் தாக்கங்கள் SNP குடும்பம் மற்றும் மனோகரன், கல்பலதிகா இவர்களுக்குள் மாத்திரமே..
ஆம்.. தியா, தற்போது வரை, அப்பா SNP வீட்டிற்கு வரவில்லை., லதிகா இன்னமும், பாஸ்கர் ஆதித்யா வுடன் பேசவில்லை, சரண்-னை பொறுத்தவரை, அவளது கணவனை SNP என்னும் தொழிலதிபராய் மட்டுமே பார்க்க, பேச முடிந்தது.. நரேன் என்ற அழைப்பும், இவளது இயல்பான, மகிழ்வான பேச்சுக்கள் இல்லாமல் போயிருந்தது..
அடுத்து பாதிக்கப்பட்டு இருந்தவன், மனோகரன்., அவன் நினைத்த எதுவுமே நடக்கவில்லை. எங்கேயும் ஒரு துரும்பு நுழையவும் வாய்ப்பின்றி, அனைத்தையும் SNP யின் கண் பார்வையில் இருந்ததால், எந்த ஒரு தகிடுதித்தங்களும் செய்யமுடியாது, மனதுக்குள் புழுங்கிக் கொண்டு இருந்தான். இவையனைத்திற்கும் மேல்..இவன் பணம் காணாமல் போய்விட்டது.. ஒன்றா இரண்டா, எத்தனை கோடிகள்? அனைத்தும் காணாமல் போவதென்றால்? பித்து பிடித்த நிலைதான்..
இது பணப்பித்து..... பித்து பிடித்தவன் என்ன செய்வான்? என்னமும் செய்வான்.. நேரம் பார்த்து காத்திருந்தான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
"பாஸ்கர்..", சத்தமாய் SNP கூப்பிட... குரலில் மகிழ்ச்சி தாண்டவமாடியதோ?
"டாட்", பின்புற தோட்டத்தில் இருந்து பாஸ் குரல் கொடுத்து, "தோ வரேன் ", சொல்லியவாறே வந்தான்.
"சரண் ", SNP யின் பாஸ்கர் என்ற அழைப்பிலேயே, சரண் வந்துவிட்டாள்.
"ம்ம். சொல்லுங்க.", என்று SNP -யின் முன் வந்து நின்றாள்.
"நமக்கு ப்ரமோஷன்", என்று கூறி, "ஆனா, நீ பாட்டி-ன்னா நம்பறா மாதிரியா இருக்கு?", சரண்யு-வை ஏற இறங்க பார்த்து சிரித்து, "இளா போன் பண்ணினார், வா தியா-வை பாத்திட்டு வரலாம்.",
"நீங்க வேணா போங்க, நான் வரல..", மகிழ்வான செய்தி, ஆனாலும், பெண் தனக்கு நேரடியாய் சொல்லவில்லையே என்ற ஆதங்கம் ஒரு புறம், அவளுக்கு "உங்க பொண்ணுக்கு ஒரு போன் பண்ணி சொல்ல துப்பில்லை..?, மாப்பிள்ளை சொல்லித்தான் நமக்கு தெரியனுமா?", என நொடித்தாள்...
ஒருவாறாய் விஷயத்தை ஊகித்த பாஸ்கர் ஆதித்யா.. "ம்மா.. விடுமா, இங்க வரல-ன்னாலும், போன்-ல பேசறா தான? யார் சொன்னா என்ன? இது நமக்கு ஹாப்பி நியூஸ் இல்லையா ?, ஸ்வீட் ரெடி பண்ணுங்க. நாம போலாம்.. ", இவன் பேசி முடிக்கும் முன்.... அதிதி ஸந்த்யா , அங்கே பிரசன்னமாகி இருந்தாள் ...
"நான் சொல்லல?, எல்லாரும் வீட்டுக்கு வர ரெடியாவாங்கன்னு?", இளம்பரிதியுடன் பேசிக்கொண்டே உள் நுழைந்த பெண்ணை ஆசையாய் பார்த்தார்கள் பெற்றவர்கள் இருவரும்.. எத்தனை நாட்களுக்கு பின் வீட்டிற்கு வருகிறாள்?
கோர்ட் நிகழ்வுகளுக்குப் பின்னும், தியா அப்பாவின் மேல் கோபமாய்த்தான் இருந்தாள், ஆனால், அவள் அப்பாவின் தொடர் தொழில் நடவடிக்கையால், சமாதானமாகி இருந்தாள், இங்கே வரவேண்டும் என்ற சித்தனை இருக்க, இவளுக்கும் நாட்கள் தள்ளிப் போய் இருக்க... டெஸ்ட் செய்து ஆம் என்று முடிவு தெரிந்தவுடன், நேராய் வந்துவிட்டாள். காரை வாசலில் நிறுத்திய பின் தான் இளம்பரிதி, SNP -இடம் பேசியதே..
"கங்ராஜுலேஷன் மாமா ", என்று பாஸ்கர் ஆதித்யா, பரிதியை கட்டிப்பிடிக்க.. இவன் நெளிந்து . "அய்யய்ய , சண்டைய மறந்து இப்படி பாசப்பயிர வளப்பீங்க-ன்னு தெரிஞ்சிருந்தா, கொஞ்சம் சீக்கிரம் ரெடி பண்ணி இருப்பேனே மச்சான்", காதினுள் கிசுகிசுக்க.... "ஹ ஹ ஹ ", வயிற்றை பிடித்து கொண்டு சத்தமாய் சிரித்தான் பாஸ்கர்.. சரண்-னின் வீடு ஒருவாறாய் மீண்டிருந்தது.
மொழிவோம்..