sakthipriya
SM Exclusive
"அரசி! அரசி!" என்று உற்சாகமான குரலில் அழைத்தபடியை அரசியின் மாளிகைக்குள் நுழைந்தார் எழில்முகில் வேந்தர்.
"வாருங்கள் அரசே!" என்று அரசி செளந்தர்யவதி எதிர் நின்று அழைக்க அதை ஏற்று புன்னகை வீசிய எழில் முகிலர் பஞ்சுமெத்தை திண்டுக்கள் போடப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.
"அப்பா!" என்றபடி இளவரசி ரத்னமாலையும் அங்கு வர, "மகளே! நீயும் இங்குதான் உள்ளாயா?" என்றார் அரசர்.
"ஆம் தந்தையே" என்று ரத்னா பதில் உரைக்க, "நல்லது! நானே அன்னையுடன் வந்து உன்னை காணலாம் என்றிருந்தேன். நீயே இங்கிருக்கிறாய்" என்றார் அரசர்.
"என்ன விஷயம் அப்பா?" என்று ரத்னமாலை கேட்டாள்.
"உன் திருமண விஷயம்தான்" என்றவுடன் வெட்கத்தில் நாணி தலை கவிழ்ந்து புன்னகை சிந்தினாள் ரத்னமாலை.
"சுயம்வரத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டீர்களா?" என்று வினவினாள் அரசியார்.
"ம்" என்று அவர் தலையசைக்க, "நம் மகளின் நிபந்தனை"என்று முகம் சுருக்கி கேட்டார் அரசி.
"அதுக்கு வழி கண்டுபிடித்து ஆகிவிட்டது" என்று அரசர் கூற எப்படி என்று இருவரும் அரசரை கேள்விகளோடு முகம் சுருக்கி பார்த்தார்கள்.
"என்ன அப்படி பார்க்கிறிர்கள்?" என்றார் அரசர்.
"என் தோழி அழகம்மையின் பிரச்சனை தீர்க்கும் இளவரசரை அறிய என்ன வழி கண்டறிந்து உள்ளீர்கள் தந்தையே" என்று இளவரசி வினவினார்.
"நானும் குழப்பத்தில்தான் இருந்தேன். நம் மதி மந்திரியார் மதிபாலர்தான் ஒர் வினாவை எழுப்பி அதற்கு விடை கூறும் இளவரசர் எவராயினும் அவர் நம் புதல்வியை மணம் முடிக்கலாம் என்று சொன்னார். நானும் அவரை மடல் வரைய கூறிவிட்டேன்" என்றார் அரசர்.
"என்ன வினா தந்தையே?" என்று ஆர்வமாக கேட்டாள் இளவரசி ரத்னமாலை.
"காணா உலகில் கரைந்துவிட்ட காளையனால் கண்ணீரால் கரைகின்றவளை காக்க போகா வழி கண்டு போய் சேர்ந்து பொல்லா சதி வென்றால் புதுமலர் புன்னகையால் பூத்திடும். அழகுமலர் அள்ளி அணைத்திடும். இதுதான் அந்த கேள்வி. யார் இதற்கு துணிந்து விடை சொல்கிறாரோ அவரே இளவரசியின் மணாளன்" என்று சொல்லிவிட்டு புன்முறுவல் புரிந்தார் எழில் முகில் வேந்தர்.
"அற்புதம் தந்தையே! என்னே நம் மந்திரியார் அறிவு!" என்று வியந்து பாராட்டினாள் இளவரசி ரத்னமாலை.
"அதுதான் அவர் சிறப்பு மகளே." என்று அரசர் பாராட்டினார்.
"ஆம் தந்தையே. நீங்கள் கூறுவதும் சரிதான்" என்றார் இளவரசி ரத்னமாலை.
"இதற்கு விடை சொல்லி சவாலை ஏற்கும் துணிவுமிக்க இளவரசர்தான் யாரென்று தெரியவில்லையே?" என்று தாயாக வருத்தத்துடன் கேட்டார் செளந்தர்யவதி.
"கண்டிப்பாக யாரேனும் துணிவும் அறிவும் மிக்க நபர் வருவார்" என்று இளவரசி நம்பிக்கையுடன் சொல்ல,
"அதையும் பார்ப்போம்" என்றார் அரசர் எழில்முகில் வேந்தர்.
இளவரசியின் சுயம்வர மடல் செல்ல அதை வாசித்த பெரும்பாலான இளவரசர்கள் அதன் பொருள் அறிந்தாலும் பெரும் சவாலை ஏற்க தயாராக இல்லாத காரணத்தால் அவர்கள் யாரும் துணியவில்லை.
இளவரசர்களில் சிலர் சவாலை ஏற்று சில தேசங்கள் வரை சென்று பார்த்து திரும்பி வந்து விட்டார்கள்.
பல நாட்டு இளவரசர்கள் செளந்தர்யபுரி மன்னருக்கு பெண்ணை மணம் முடிக்கும் யோசனை இல்லை அதனால் யாரும் செய்ய முடியாத சவாலை விடுகிறார் என்றார்கள்.
சில இளவரசர்கள் ரத்னமாலை யாரையோ காதலிக்கிறார் அதனால் சுயம்வரத்தை தள்ளி போட தன் தோழியை காரணம் காட்டுகிறார் என்று பழி கூறினார்கள்.
ரத்னமாலையின் சுயம்வர மடல் விடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் பலன் அளிக்கவில்லை.
அரசருக்கும், அரசியாருக்கும் ஏன் நாட்டு மக்களுக்கும் இளவரசி ரத்னமாலையின் திருமணம் குறித்து மிகப்பெரிய கவலை ஏற்பட ஆரம்பித்து விட்டது.
Message…
"வாருங்கள் அரசே!" என்று அரசி செளந்தர்யவதி எதிர் நின்று அழைக்க அதை ஏற்று புன்னகை வீசிய எழில் முகிலர் பஞ்சுமெத்தை திண்டுக்கள் போடப்பட்ட ஆசனத்தில் அமர்ந்தார்.
"அப்பா!" என்றபடி இளவரசி ரத்னமாலையும் அங்கு வர, "மகளே! நீயும் இங்குதான் உள்ளாயா?" என்றார் அரசர்.
"ஆம் தந்தையே" என்று ரத்னா பதில் உரைக்க, "நல்லது! நானே அன்னையுடன் வந்து உன்னை காணலாம் என்றிருந்தேன். நீயே இங்கிருக்கிறாய்" என்றார் அரசர்.
"என்ன விஷயம் அப்பா?" என்று ரத்னமாலை கேட்டாள்.
"உன் திருமண விஷயம்தான்" என்றவுடன் வெட்கத்தில் நாணி தலை கவிழ்ந்து புன்னகை சிந்தினாள் ரத்னமாலை.
"சுயம்வரத்திற்கான ஏற்பாடுகள் ஆரம்பித்து விட்டீர்களா?" என்று வினவினாள் அரசியார்.
"ம்" என்று அவர் தலையசைக்க, "நம் மகளின் நிபந்தனை"என்று முகம் சுருக்கி கேட்டார் அரசி.
"அதுக்கு வழி கண்டுபிடித்து ஆகிவிட்டது" என்று அரசர் கூற எப்படி என்று இருவரும் அரசரை கேள்விகளோடு முகம் சுருக்கி பார்த்தார்கள்.
"என்ன அப்படி பார்க்கிறிர்கள்?" என்றார் அரசர்.
"என் தோழி அழகம்மையின் பிரச்சனை தீர்க்கும் இளவரசரை அறிய என்ன வழி கண்டறிந்து உள்ளீர்கள் தந்தையே" என்று இளவரசி வினவினார்.
"நானும் குழப்பத்தில்தான் இருந்தேன். நம் மதி மந்திரியார் மதிபாலர்தான் ஒர் வினாவை எழுப்பி அதற்கு விடை கூறும் இளவரசர் எவராயினும் அவர் நம் புதல்வியை மணம் முடிக்கலாம் என்று சொன்னார். நானும் அவரை மடல் வரைய கூறிவிட்டேன்" என்றார் அரசர்.
"என்ன வினா தந்தையே?" என்று ஆர்வமாக கேட்டாள் இளவரசி ரத்னமாலை.
"காணா உலகில் கரைந்துவிட்ட காளையனால் கண்ணீரால் கரைகின்றவளை காக்க போகா வழி கண்டு போய் சேர்ந்து பொல்லா சதி வென்றால் புதுமலர் புன்னகையால் பூத்திடும். அழகுமலர் அள்ளி அணைத்திடும். இதுதான் அந்த கேள்வி. யார் இதற்கு துணிந்து விடை சொல்கிறாரோ அவரே இளவரசியின் மணாளன்" என்று சொல்லிவிட்டு புன்முறுவல் புரிந்தார் எழில் முகில் வேந்தர்.
"அற்புதம் தந்தையே! என்னே நம் மந்திரியார் அறிவு!" என்று வியந்து பாராட்டினாள் இளவரசி ரத்னமாலை.
"அதுதான் அவர் சிறப்பு மகளே." என்று அரசர் பாராட்டினார்.
"ஆம் தந்தையே. நீங்கள் கூறுவதும் சரிதான்" என்றார் இளவரசி ரத்னமாலை.
"இதற்கு விடை சொல்லி சவாலை ஏற்கும் துணிவுமிக்க இளவரசர்தான் யாரென்று தெரியவில்லையே?" என்று தாயாக வருத்தத்துடன் கேட்டார் செளந்தர்யவதி.
"கண்டிப்பாக யாரேனும் துணிவும் அறிவும் மிக்க நபர் வருவார்" என்று இளவரசி நம்பிக்கையுடன் சொல்ல,
"அதையும் பார்ப்போம்" என்றார் அரசர் எழில்முகில் வேந்தர்.
இளவரசியின் சுயம்வர மடல் செல்ல அதை வாசித்த பெரும்பாலான இளவரசர்கள் அதன் பொருள் அறிந்தாலும் பெரும் சவாலை ஏற்க தயாராக இல்லாத காரணத்தால் அவர்கள் யாரும் துணியவில்லை.
இளவரசர்களில் சிலர் சவாலை ஏற்று சில தேசங்கள் வரை சென்று பார்த்து திரும்பி வந்து விட்டார்கள்.
பல நாட்டு இளவரசர்கள் செளந்தர்யபுரி மன்னருக்கு பெண்ணை மணம் முடிக்கும் யோசனை இல்லை அதனால் யாரும் செய்ய முடியாத சவாலை விடுகிறார் என்றார்கள்.
சில இளவரசர்கள் ரத்னமாலை யாரையோ காதலிக்கிறார் அதனால் சுயம்வரத்தை தள்ளி போட தன் தோழியை காரணம் காட்டுகிறார் என்று பழி கூறினார்கள்.
ரத்னமாலையின் சுயம்வர மடல் விடுக்கப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும் பலன் அளிக்கவில்லை.
அரசருக்கும், அரசியாருக்கும் ஏன் நாட்டு மக்களுக்கும் இளவரசி ரத்னமாலையின் திருமணம் குறித்து மிகப்பெரிய கவலை ஏற்பட ஆரம்பித்து விட்டது.
Message…
Last edited: