• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Kaadhale thunai 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
காதல் 7

நான்கு நாட்கள் கடந்த நிலையில், பிரீத்தியின் குடும்பம் அபிஷேகப்பட்டியில் வந்து இறங்கிய சமயம், ஆதிக்கின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள். பாட்டிக்கு அப்பொழுது விஷயம் புரிந்தது, பேரன் எப்படி சரி என்று ஒத்துக் கொண்டான் என்று.
அதில் புன்னகை புரிந்த பாட்டி, இனி நடப்பவை நல்லதாக நடகட்டும் என்று எண்ணி, தன் குல தெய்வத்தின் மேல் பாரத்தை வைத்தார்.

“என்ன சம்பந்தி, நாம இப்படி ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்து இருக்கோம். இப்போ தான் நமக்கு தெரியுது, நம்ம வீட்டுக்கும் வாங்க சம்மந்தி” என்று அழைத்தார் ப்ரீத்தியின் தந்தை.

“இருக்கட்டும் சம்பந்தி, இன்னும் ஒரு வாரம் இங்க தான இருக்க போறோம், ஒரு நாள் வரோம். நீங்களும், நம்ம வீட்டுக்கு வாங்க சம்பந்தி” என்று ஆதிக்கின் தந்தையும் அவரை அழைத்தார்.

அதற்குள் ஆதிசேகரியின் பெற்றோர் இவர்களை பார்த்து, வரவேற்பாக புன்னகைத்துவிட்டு இவர்களை வீட்டிற்குள் அழைக்க, அவர்கள் இன்னொரு நாள் வருவதாக கூறி விடை பெற்றனர்.

ஆதிக் , பிரீத்தி இருவரும் இவ்வுலகில் இல்லை, அவர்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரிதுக் கொண்டு இருந்தனர். கண்களால் அவர்கள் பேசும் பாஷையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அதில் தெரிந்த அன்னியோன்யம் ஆதியை வியக்க செய்தது.

“ஆத்தி! என்னமோ பிடிக்கலன்னு சொல்லிட்டு, இப்போ கண்ணாலே பேசிக்குறாக! எக்கோவ்! என்ன நடக்குது இங்கின? ” என்று விசாரிக்க தொடங்கினாள்.

“கொஞ்ச நேரம் பேசாத, அவங்க எல்லாம் போகட்டும் சொல்லுறேன் சரியா” என்று பிரீத்தி கூறவும், இப்போதைக்கு தன் அக்கா என்னவென்று கூட கேட்க மாட்டார்கள் என்று புரிந்து, தலையை திருப்பி பார்த்தவள் அங்கே அஜய் மும்முரமாக இவளை நோட்டம் விட்டதை பார்த்து அதிர்ந்தாள்.

“கிறுக்கு பையபிள்ளை! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? இவனை” என்று பல்லை கடித்துக் கொண்டே, அவள் அவனை பார்த்து முறைத்தாள்.

அவனோ, அவளை பார்த்து கண்ணடித்து விட்டு, கண்களை அவள் உதட்டில் மேய விட்டான். அதில், அவள் தான் முகத்தை திருப்ப வேண்டியதாகி விட்டது.

“திருட்டு பய! இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கான் தெரியலையே?” என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், அங்கே அஜய் எல்லோரும் முன்னும் பிரசனமானன்.

“வாங்க மாப்பிள்ளை! மச்சு வீட்டில் உங்க ஸ்னேகித பையனை தங்க வச்சுடீங்களா, சௌகரியமா இருக்குதா” என்று கேட்டார் ஆதியின் தந்தை.

“அது எல்லாம் சௌகரியமாக இருக்கு மாமா, பாட்டி வாங்க எப்படி இருக்கீங்க? பெரிப்பா, பெரிமா நல்லா இருக்கீங்களா? வாங்க அப்பா கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று அவருக்கு பதில் அளித்துவிட்டு, அவன் அங்கே ஆதிக் குடும்பத்தை நலம் விசாரித்துக் கொண்டு இருந்தான்.

“அடேய்! நான் இங்க இருக்கேன், என்னை நீ ஒரு வார்த்தை கேட்கல” என்று குறைபட்ட ஆதிக்கை பார்த்து சிரித்தான்.

“என்ன பண்ணுறது அண்ணா, அப்போ நீ அண்ணியை மட்டுமே கவனிச்சிகிட்டு இருந்த, அப்போ உன்னை கூப்பிட்டு விசாரிச்சா காண்டு ஆகிடுவியே அப்படினு ஒரு நல்ல எண்ணத்தில் கேட்கவில்லை” என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் கூறிய விதத்தில் எல்லோரும் சிரித்தனர்.

பிரீத்தியோ வெட்கத்தில் தலை குனிந்து கொண்டு, தன் அம்மாவின் பின்னே மறைந்து நின்று கொண்டாள். அவள் வெட்கத்தை பார்த்து, மேலும் அதிர்ந்தாள் ஆதிசேகரி.

“அடி ஆத்தி! இந்த அக்கா ஏன் இப்படி பொசுக்கு பொசுக்குண்ணு இப்படி சிவக்குது?” என்று காரணம் புரியாமல் அவள் யோசித்துக் கொண்டு இருந்தாள்.

அவளின் அந்த நிலையை புரிந்த அஜய், பெருமூச்சு விட்டான்.

“இவளுக்கு கிளாஸ் எடுத்தே, நீ கிழவன் ஆகிடுவ போலயே டா. அன்னைக்கு அப்படித்தான், அங்க பக்கத்துல வந்து கிஸ் பண்ண போனா அடி பின்ன வந்துட்டா”.

அவன் மனமோ, இந்த பெட்ரோமாக்ஸ் தான் வேணுமா எனவும், அவன் அவளை பார்த்துக் கொண்டே ஆம் என்றான் மனதிற்குள்.

ஆதிக்கின் குடும்பம் அவர்களிடம் சொல்லிக் கொண்டு, அங்கு இருந்து அஜய்யுடன் சென்றனர்.
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
வீட்டிற்குள் வந்த அனைவருக்கும் காலை பலகாரம் செய்ய, ஆதியின் தாய் விரைய மற்றவர்களுக்கு தேவையான உதவியை ஆதி செய்து கொண்டு இருந்தாள்.

“பெரிம்மை! அக்காவை நான் என்கூட தங்க வச்சிகிடுதேன். நீங்களும் பெரிப்பாவும் இங்கின இருங்க சரியா, அப்புறம் எதும் வேணும்னா கேட்க தயங்காதீங்க பெரிம்மை” என்று கூறிவிட்டு பிரீத்தியை அழைத்து கொண்டு மாடியில் இருக்கும் அவள் அறைக்கு சென்றாள்.

“எக்கா! உம்ம கிட்ட ஒரு கேள்வி கேட்குதேன் அதுக்கு நீ சரியா பதில் சொல்லணும் சரியா” என்று ஆதி கேட்கவும், பிரீத்தி சரி என்றாள்.

“இல்லை! பிடிக்கல சொல்லிட்டு நீ அவிக கூட இப்படி சிரிச்சு பேசுத, அப்புறம் ஏன் உம்ம கன்னம் அடிக்கடி சிவக்குது?” என்று கேட்ட ஆதியை பார்த்து சிரித்தாள்.

“ஆமா! உனக்கும் கல்யாணம் நிச்சயமாகி இருக்கு தானே, நீ உன் மாப்பிள்ளை கிட்ட பேசி இருக்கியா என்ன” என்று பதில் கேள்வி கேட்டாள்.

“அந்த நண்டு கூட பேசி இருக்கியாவா! அது எல்லாம் அடிதடி சண்டை போடுற அளவுக்கு நல்லா பேசி இருக்குதேன் அது கூட, சின்ன பிள்ளையில் இருந்து. இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு எக்கா” என்று ஒரே பிடியில் நின்றாள்.

“ஹா ஹா! அதான் விஷயம் ஆதி. உனக்கு ஏற்கனவே பழகின ஒருத்தர் கூட நிச்சயமாகி இருக்கு. எனக்கும் என்னோட துறையில், நான் ரோல் மாடலா நினைக்கிற ஒருத்தர் கூட பிக்ஸ் ஆகுச்சு”.

“எனக்கு அவரோட ஆதிக்கம் பிடிக்கல, அதனால நானும் அப்படி அவர் இருக்கும் பொழுது, பட்டுன்னு பேசிடுவேன். ஆனா அவருக்கும் சரி, எனக்கும் சரி ஒருத்தருக்கு ஒருத்தர் ரொம்ப பிடிக்கும், அதனால நேத்து இங்க வர முன்னாடி தான் எல்லா விஷயமும் பேசி தெளிவு படுத்திக்கிட்டோம்”.

“அதனால வந்த புரிதல் தான் இன்னைக்கு நீ பார்த்தது, சரி வா ஆத்துல போய் குளிச்சிட்டு வரலாம், ரொம்ப நாள் ஆகிடுச்சு” என்று கூறி பிரீத்தி அவளை அங்கு அழைத்து செல்ல கூறினாள்.

என்ன தான் அவளின் அக்கா விளக்கம் கொடுத்தாலும், அவளுக்கு இன்னும் சில விஷயங்கள் புரியவே இல்லை. இனி அஜய் அவளுக்கு புரிய வைத்துவிடுவான் மெதுவாக.

இங்கே இவர்கள் ஆத்தங்கரைக்கு செல்ல, தாய்மார்களின் அனுமதியை வாங்க போராட, அங்கே அஜய், ஆதிக் இருவரும் வீட்டினரிடம் சொல்லிக் கொண்டு நேராக ஆத்தங்கரை சென்று கொண்டு இருந்தனர்.

“டேய் அண்ணா! பிடிக்கல சொன்ன இப்போ இப்படி கண்ணும் கண்ணும் நோக்கிங் தான் போல, அண்ணி கூட” என்று கேலி செய்தான் அஜய்.

“ம்ம் ரெண்டு நாள் முன்னாடி வரை நாங்க சண்டை தான் டா போட்டோம், நேத்து தான் மனசு விட்டு பேசி இப்போ நீ இல்லாம நான் இல்லை அப்படினு வந்து இருக்கோம்” என்றவனை பார்த்து சிரித்தான்.

“ஆமா! அப்படி என்ன சண்டை டா, பொண்ணு பார்க்க போனதில் இருந்து” என்று கேட்டான் அஜய்.

“அதை அப்புறம் சொல்லுறேன், வா நாம அங்க போய் குளிக்கலாம், ரொம்ப வருஷம் ஆகிடுச்சு இங்க வந்து குளிச்சு” என்று கூறிய ஆதிக் ஓரிடத்தில் சடன் ப்ரேக் போட்டு நின்றான்.

திரும்பி அஜயை பார்த்தவன், கையை கட்டிக் கொண்டு அவனை பார்வையால் துளைத்து கொண்டு இருந்தான். அதை புரிந்த அஜய், ஆதிக்கிடம் அசடு வலிந்து கொண்டே கூற தொடங்கினான்.

“ஹிஹி! கேசரி தான் நான் கல்யாணம் கட்டிக்க போற பொண்ணு அண்ணா ” என்றவனை அதிர்ச்சியோடு பார்த்தான் ஆதிக்.

“அவ ஜடையை பிடிச்சு இழுத்ததுக்கு, உன்னை ரவுண்ட் கட்டி அடிச்சாளே அவளா! அது சரி, எப்படி அவளை சம்மதிக்க வச்ச?” என்று வியப்போடு கேட்டான்.

ஏனெனில், அவனுக்கு நன்றாக தெரியும் சிறு வயதில் இருந்து இப்பொழுது வரை, ரெண்டும் முட்டிக் கொள்ளும் ரகம் என்று . அதுவும், அவள் அவ்வளவு எளிதில் சம்மதித்து இருக்க மாட்டாள் என்பது அவனது கணிப்பு.

“ம்க்கும்.. இப்போ வரைக்கும் ஆஞ்சநேயர் துணை சொல்லிக் கிட்டு இருக்கா, நான் காதலே துணை சொல்லிகிட்டு, அவளை நல்லா சைட் அடிச்சிகிட்டு இருக்கேன்” என்று கூறி உன் கணிப்பு சரிதான் என்பது போல் பேசினான் அஜய்.

மேற்கொண்டு அவனிடம் பேச நினைத்தவன், அஜயின் பார்வை மாற்றத்தை பார்த்து, அவன் பார்வை சென்ற திக்கை பார்த்தவன், இனிமையாக உணர்ந்தான்.

தோழிகள் படை சூழ சென்று கொண்டு இருந்த, பிரீத்தி, ஆதியை பார்த்து தான் அவர்களின் பார்வை மாறியது. அவர்கள் பின்னே, இவர்களும் ஆத்தன்கரை நோக்கி சென்றனர்.

ஆனால், சென்ற வேகத்தில் இருவரும் அவர்களிடம் சிக்காமல் ஓட்டம் எடுத்தனர். இல்லை என்றால், இதற்குள் இவர்கள் பேச்சுக்கு மொத்தி எடுத்து இருப்பர்.

தொடரும்..
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
அடுத்த பதிவு மக்களே.. அடுத்து இன்னும் இரண்டு பதிவு இருக்கிறது , நாளை இரண்டையும் சேர்த்து கொடுக்க முயற்சி செய்கிறேன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top