- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
காதல் 7
நான்கு நாட்கள் கடந்த நிலையில், பிரீத்தியின் குடும்பம் அபிஷேகப்பட்டியில் வந்து இறங்கிய சமயம், ஆதிக்கின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள். பாட்டிக்கு அப்பொழுது விஷயம் புரிந்தது, பேரன் எப்படி சரி என்று ஒத்துக் கொண்டான் என்று.
அதில் புன்னகை புரிந்த பாட்டி, இனி நடப்பவை நல்லதாக நடகட்டும் என்று எண்ணி, தன் குல தெய்வத்தின் மேல் பாரத்தை வைத்தார்.
“என்ன சம்பந்தி, நாம இப்படி ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்து இருக்கோம். இப்போ தான் நமக்கு தெரியுது, நம்ம வீட்டுக்கும் வாங்க சம்மந்தி” என்று அழைத்தார் ப்ரீத்தியின் தந்தை.
“இருக்கட்டும் சம்பந்தி, இன்னும் ஒரு வாரம் இங்க தான இருக்க போறோம், ஒரு நாள் வரோம். நீங்களும், நம்ம வீட்டுக்கு வாங்க சம்பந்தி” என்று ஆதிக்கின் தந்தையும் அவரை அழைத்தார்.
அதற்குள் ஆதிசேகரியின் பெற்றோர் இவர்களை பார்த்து, வரவேற்பாக புன்னகைத்துவிட்டு இவர்களை வீட்டிற்குள் அழைக்க, அவர்கள் இன்னொரு நாள் வருவதாக கூறி விடை பெற்றனர்.
ஆதிக் , பிரீத்தி இருவரும் இவ்வுலகில் இல்லை, அவர்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரிதுக் கொண்டு இருந்தனர். கண்களால் அவர்கள் பேசும் பாஷையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அதில் தெரிந்த அன்னியோன்யம் ஆதியை வியக்க செய்தது.
“ஆத்தி! என்னமோ பிடிக்கலன்னு சொல்லிட்டு, இப்போ கண்ணாலே பேசிக்குறாக! எக்கோவ்! என்ன நடக்குது இங்கின? ” என்று விசாரிக்க தொடங்கினாள்.
“கொஞ்ச நேரம் பேசாத, அவங்க எல்லாம் போகட்டும் சொல்லுறேன் சரியா” என்று பிரீத்தி கூறவும், இப்போதைக்கு தன் அக்கா என்னவென்று கூட கேட்க மாட்டார்கள் என்று புரிந்து, தலையை திருப்பி பார்த்தவள் அங்கே அஜய் மும்முரமாக இவளை நோட்டம் விட்டதை பார்த்து அதிர்ந்தாள்.
“கிறுக்கு பையபிள்ளை! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? இவனை” என்று பல்லை கடித்துக் கொண்டே, அவள் அவனை பார்த்து முறைத்தாள்.
அவனோ, அவளை பார்த்து கண்ணடித்து விட்டு, கண்களை அவள் உதட்டில் மேய விட்டான். அதில், அவள் தான் முகத்தை திருப்ப வேண்டியதாகி விட்டது.
“திருட்டு பய! இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கான் தெரியலையே?” என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், அங்கே அஜய் எல்லோரும் முன்னும் பிரசனமானன்.
“வாங்க மாப்பிள்ளை! மச்சு வீட்டில் உங்க ஸ்னேகித பையனை தங்க வச்சுடீங்களா, சௌகரியமா இருக்குதா” என்று கேட்டார் ஆதியின் தந்தை.
“அது எல்லாம் சௌகரியமாக இருக்கு மாமா, பாட்டி வாங்க எப்படி இருக்கீங்க? பெரிப்பா, பெரிமா நல்லா இருக்கீங்களா? வாங்க அப்பா கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று அவருக்கு பதில் அளித்துவிட்டு, அவன் அங்கே ஆதிக் குடும்பத்தை நலம் விசாரித்துக் கொண்டு இருந்தான்.
“அடேய்! நான் இங்க இருக்கேன், என்னை நீ ஒரு வார்த்தை கேட்கல” என்று குறைபட்ட ஆதிக்கை பார்த்து சிரித்தான்.
“என்ன பண்ணுறது அண்ணா, அப்போ நீ அண்ணியை மட்டுமே கவனிச்சிகிட்டு இருந்த, அப்போ உன்னை கூப்பிட்டு விசாரிச்சா காண்டு ஆகிடுவியே அப்படினு ஒரு நல்ல எண்ணத்தில் கேட்கவில்லை” என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் கூறிய விதத்தில் எல்லோரும் சிரித்தனர்.
பிரீத்தியோ வெட்கத்தில் தலை குனிந்து கொண்டு, தன் அம்மாவின் பின்னே மறைந்து நின்று கொண்டாள். அவள் வெட்கத்தை பார்த்து, மேலும் அதிர்ந்தாள் ஆதிசேகரி.
“அடி ஆத்தி! இந்த அக்கா ஏன் இப்படி பொசுக்கு பொசுக்குண்ணு இப்படி சிவக்குது?” என்று காரணம் புரியாமல் அவள் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் அந்த நிலையை புரிந்த அஜய், பெருமூச்சு விட்டான்.
“இவளுக்கு கிளாஸ் எடுத்தே, நீ கிழவன் ஆகிடுவ போலயே டா. அன்னைக்கு அப்படித்தான், அங்க பக்கத்துல வந்து கிஸ் பண்ண போனா அடி பின்ன வந்துட்டா”.
அவன் மனமோ, இந்த பெட்ரோமாக்ஸ் தான் வேணுமா எனவும், அவன் அவளை பார்த்துக் கொண்டே ஆம் என்றான் மனதிற்குள்.
ஆதிக்கின் குடும்பம் அவர்களிடம் சொல்லிக் கொண்டு, அங்கு இருந்து அஜய்யுடன் சென்றனர்.
நான்கு நாட்கள் கடந்த நிலையில், பிரீத்தியின் குடும்பம் அபிஷேகப்பட்டியில் வந்து இறங்கிய சமயம், ஆதிக்கின் குடும்பமும் வந்து சேர்ந்தார்கள். பாட்டிக்கு அப்பொழுது விஷயம் புரிந்தது, பேரன் எப்படி சரி என்று ஒத்துக் கொண்டான் என்று.
அதில் புன்னகை புரிந்த பாட்டி, இனி நடப்பவை நல்லதாக நடகட்டும் என்று எண்ணி, தன் குல தெய்வத்தின் மேல் பாரத்தை வைத்தார்.
“என்ன சம்பந்தி, நாம இப்படி ஒன்னுக்குள்ள ஒண்ணா இருந்து இருக்கோம். இப்போ தான் நமக்கு தெரியுது, நம்ம வீட்டுக்கும் வாங்க சம்மந்தி” என்று அழைத்தார் ப்ரீத்தியின் தந்தை.
“இருக்கட்டும் சம்பந்தி, இன்னும் ஒரு வாரம் இங்க தான இருக்க போறோம், ஒரு நாள் வரோம். நீங்களும், நம்ம வீட்டுக்கு வாங்க சம்பந்தி” என்று ஆதிக்கின் தந்தையும் அவரை அழைத்தார்.
அதற்குள் ஆதிசேகரியின் பெற்றோர் இவர்களை பார்த்து, வரவேற்பாக புன்னகைத்துவிட்டு இவர்களை வீட்டிற்குள் அழைக்க, அவர்கள் இன்னொரு நாள் வருவதாக கூறி விடை பெற்றனர்.
ஆதிக் , பிரீத்தி இருவரும் இவ்வுலகில் இல்லை, அவர்களுக்கான தனி உலகத்தில் சஞ்சரிதுக் கொண்டு இருந்தனர். கண்களால் அவர்கள் பேசும் பாஷையை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும், அதில் தெரிந்த அன்னியோன்யம் ஆதியை வியக்க செய்தது.
“ஆத்தி! என்னமோ பிடிக்கலன்னு சொல்லிட்டு, இப்போ கண்ணாலே பேசிக்குறாக! எக்கோவ்! என்ன நடக்குது இங்கின? ” என்று விசாரிக்க தொடங்கினாள்.
“கொஞ்ச நேரம் பேசாத, அவங்க எல்லாம் போகட்டும் சொல்லுறேன் சரியா” என்று பிரீத்தி கூறவும், இப்போதைக்கு தன் அக்கா என்னவென்று கூட கேட்க மாட்டார்கள் என்று புரிந்து, தலையை திருப்பி பார்த்தவள் அங்கே அஜய் மும்முரமாக இவளை நோட்டம் விட்டதை பார்த்து அதிர்ந்தாள்.
“கிறுக்கு பையபிள்ளை! யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க? இவனை” என்று பல்லை கடித்துக் கொண்டே, அவள் அவனை பார்த்து முறைத்தாள்.
அவனோ, அவளை பார்த்து கண்ணடித்து விட்டு, கண்களை அவள் உதட்டில் மேய விட்டான். அதில், அவள் தான் முகத்தை திருப்ப வேண்டியதாகி விட்டது.
“திருட்டு பய! இப்போ எதுக்கு இங்க வந்து இருக்கான் தெரியலையே?” என்று யோசித்துக் கொண்டு இருந்த வேளையில், அங்கே அஜய் எல்லோரும் முன்னும் பிரசனமானன்.
“வாங்க மாப்பிள்ளை! மச்சு வீட்டில் உங்க ஸ்னேகித பையனை தங்க வச்சுடீங்களா, சௌகரியமா இருக்குதா” என்று கேட்டார் ஆதியின் தந்தை.
“அது எல்லாம் சௌகரியமாக இருக்கு மாமா, பாட்டி வாங்க எப்படி இருக்கீங்க? பெரிப்பா, பெரிமா நல்லா இருக்கீங்களா? வாங்க அப்பா கூட்டிட்டு வர சொன்னாங்க” என்று அவருக்கு பதில் அளித்துவிட்டு, அவன் அங்கே ஆதிக் குடும்பத்தை நலம் விசாரித்துக் கொண்டு இருந்தான்.
“அடேய்! நான் இங்க இருக்கேன், என்னை நீ ஒரு வார்த்தை கேட்கல” என்று குறைபட்ட ஆதிக்கை பார்த்து சிரித்தான்.
“என்ன பண்ணுறது அண்ணா, அப்போ நீ அண்ணியை மட்டுமே கவனிச்சிகிட்டு இருந்த, அப்போ உன்னை கூப்பிட்டு விசாரிச்சா காண்டு ஆகிடுவியே அப்படினு ஒரு நல்ல எண்ணத்தில் கேட்கவில்லை” என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் கூறிய விதத்தில் எல்லோரும் சிரித்தனர்.
பிரீத்தியோ வெட்கத்தில் தலை குனிந்து கொண்டு, தன் அம்மாவின் பின்னே மறைந்து நின்று கொண்டாள். அவள் வெட்கத்தை பார்த்து, மேலும் அதிர்ந்தாள் ஆதிசேகரி.
“அடி ஆத்தி! இந்த அக்கா ஏன் இப்படி பொசுக்கு பொசுக்குண்ணு இப்படி சிவக்குது?” என்று காரணம் புரியாமல் அவள் யோசித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் அந்த நிலையை புரிந்த அஜய், பெருமூச்சு விட்டான்.
“இவளுக்கு கிளாஸ் எடுத்தே, நீ கிழவன் ஆகிடுவ போலயே டா. அன்னைக்கு அப்படித்தான், அங்க பக்கத்துல வந்து கிஸ் பண்ண போனா அடி பின்ன வந்துட்டா”.
அவன் மனமோ, இந்த பெட்ரோமாக்ஸ் தான் வேணுமா எனவும், அவன் அவளை பார்த்துக் கொண்டே ஆம் என்றான் மனதிற்குள்.
ஆதிக்கின் குடும்பம் அவர்களிடம் சொல்லிக் கொண்டு, அங்கு இருந்து அஜய்யுடன் சென்றனர்.