Super nxt update tmrw venue.அவள் அமர்ந்த நேரம், அவளின் செல்பேசி இசைத்தது. எடுத்து யார் என்று பார்த்தவள் முகத்தில், புன்முறுவல் பூத்தது.
“எக்கா! எப்படி இருக்க? உனக்கு மாப்பிள்ளை பிடிச்சதா? அடுத்த மாசம், நிச்சயம், கல்யாணம் எல்லாம் ஒண்ணா வச்சு இருக்காங்களாம். இப்போ தான் ஆத்தாவுக்கு, பெரிம்மை போன் போட்டு சொன்னாவுங்க” என்று ஆதிகேசரி தமக்கையிடம் நலன் விசாரித்து விட்டு, அவளுக்கு மாப்பிள்ளை பிடித்து இருக்கிறதா என்று கேட்டாள்.
“எத்தனை கேள்வி கேட்ப ஆதி, மூச்சு விட்டு பொறுமையா பேசு டி. ம்ம்.. நீ ஒருத்தி தான் டி மாப்பிள்ளை பிடிச்சு இருக்கா உனக்கு, அப்படின்னு கேட்டு இருக்க”.
“என்ன சொல்லுறது, அவனுக்கு என்னை பிடிக்கல, எனக்கு அவனை பிடிக்கல. ஆனா கல்யாணம் பண்ணிக்க போறோம், அவ்வளவு தான்” என்று கூறினாள் தங்கையிடம்.
“என்னக்கா சொல்லுற? ரெண்டு பேருக்கும் பிடிக்கலையா! சொல்ல வேண்டியது தானே அக்கா வீட்டில, ஏன் சொல்லல?” என்று கேட்டாள்.
“ம்ம். அது அப்படித்தான் ஆதி, ஆனா எனக்கு மாபிள்ளையை முழுசா பிடிக்காம எல்லாம் இல்லை, லைட்டா பிடிச்சு இருக்குன்னு வச்சுக்கோயேன்” எனவும், குழம்பி போனாள் ஆதி.
பாவம் அவளுக்கு தெரியவில்லை, தன் அக்காவுக்கு அந்த மாபிள்ளையை பிடித்து இருக்கிறது, ஆனாலும் அவனின் ஆதிக்கம் பிடிக்காமல் தான் இப்படி சொல்லுகிறாள் என்று. இருவரும், அதன் பின் வேறு கதைகளை பேசி போன் வைத்து விட்டனர்.
இங்கே ஆதிக், அவனின் கம்பெனியில் எல்லோரையும் வறுத்து எடுத்துக் கொண்டு இருந்தான். அவன் இருந்த டென்ஷன் பார்த்து, அவனின் பி.ஏ. வழக்கம் போல் இப்படி சூழ்நிலையில், ஆதிக்கின் உற்ற நண்பனும் அவனின் தம்பியுமான அஜய்க்கு அழைத்து விஷயத்தை சொல்லுவான்.
இன்றும் அப்படி தான் ஆஜய்க்கு போன் செய்து, விஷயத்தை கோடிட்டு காட்டிவிட்டு போனை வைத்து விட்டான். ஆதிக், அடுத்து தேடியது அவனின் பி. ஏ. வை தான். அவனோ, சிக்கினா கைமா தான் என்று எண்ணி, அவன் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டு இருந்தான்.
அதற்குள் அஜயிடம் இருந்து, அவனுக்கு அழைப்பு வரவும், மற்றதை தற்சமயம் மறந்து விட்டு, அவன் காலை அட்டென்ட் செய்து பேச தொடங்கினான்.
“டேய் அண்ணா! எப்படி இருக்க? இப்போ தான் அம்மா சொன்னாங்க, உனக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சாம், வாழ்த்துக்கள் டா அண்ணா” என்று சந்தோஷமாக பேசினான்.
“ரொம்ப முக்கியம் டா, எல்லாம் அந்த கிழவி பண்ண வேலை டா. இன்னைக்கு அது பண்ண வேலையில், எனக்கு சும்மா தாறுமாறா பிபி எகிறிடுச்சு. என்னை நல்லா வச்சு செஞ்சிடுச்சு தெரியுமா, உனக்கு சிரிப்பா இருக்கா டா” என்று மறுபக்கம் அவனின் சிரிப்பில் கடுப்பானான்.
“கூல் டா அண்ணா! எல்லாம் பாட்டி நல்லதுக்கு தான் செய்வாங்க, சும்மா கோபப்படாத டா. பாரு உன்னால, நான் இப்போ எவ்வளவு ஹாப்பியா இருக்கேன் தெரியுமா? என் ரூட் கிளியர் ஆகிடுச்சே. சரி, உனக்கு அண்ணியை பிடிச்சு இருக்கா?” என்று கேட்டான் அஜய்.
“தெரியல டா! ஆனா, ஒன்னு சரியான திமிர் பிடிச்சவ டா. எப்படி பால் போட்டாலும், திரும்ப அந்த பாலை நம்ம பக்கம் திருப்பி விடுறா ராட்சசி” என்று கூறிய பொழுது தான், அஜய் உணர்ந்தான் அவனுக்கு பெண்ணை பிடித்து இருக்கிறது என்று.
ஆனால், அவன் அதை உணரவில்லை என்பதையும் புரிந்து கொண்டான். அதன் பின், வேறு சில விஷயங்கள் பேசி போனை வைத்தனர்.
பிடிக்கவில்லை, பிடிக்கவில்லை என்று சொல்லியே காதல் புரியும் இருவர் ஒரு பக்கம் திருமண பந்தத்தில் இணைகின்றனர். ஹனுமான் துணை என்று கூறிக் கொண்டு இருப்பவளை, காதலே துணை என்று எண்ணி அவளை சுற்றும் ஒருவனும் எப்படி காதலை சொல்லி அதன் துணையோடு, வாழ்கின்றனர் என்று பார்ப்போமா இனி.
தொடரும்..