- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
காதல் 2
ஆதிக் மிகவும் கோபத்தில் இருந்தான், அவனுக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட் அதுவும் தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிய அந்த ப்ரொஜெட் இப்பொழுது கை நழுவி இருந்தது.
அதுவும், இப்பொழுது அந்த ப்ராஜெக்ட் சென்று இருப்பது ஏதோ சிறிய அளவிலான கம்பெனிக்கு என்று தன் பி.ஏ சொல்லவும், கொதித்து விட்டான். எங்கு தவறு நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தான்.
உடனே தன் பி. ஏ. ரத்தீஷை அழைத்து, உடனே காபின் வருமாறு பணித்தான். அவனோ, இருக்கும் அத்தனை கடவுளுக்கும் மனு போட்டுவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ரத்தீஷ்! வாட் இஸ் கோயிங் ஆன்? இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம் அப்படின்னு உனக்கு தெரியுமா, தெரியாதா? அப்புறம் இது எப்படி நம்ம கை விட்டு போச்சு?”.
“எனக்கு அன்னைக்கு வேறு ஒரு முக்கிய வேலை வந்ததால, நீ இந்த ப்ராஜெக்ட் டீம் லீட் ஸ்வேதா கூட்டிட்டு போன. அவ பெர்பெக்ட் presentation கொடுக்க போய் தான், உன்னையும் அவளையும் அனுப்பினேன்”.
“எப்படி மிஸ் ஆகிடுச்சு, ஸ்வேதா டிட் எனிதிங் ராங்?” என்று அவனை பார்த்து கூர்மையாக கேட்டான் ஆதிக்.
“இல்லை சார்! எல்லாமே பக்காவா தான் செய்தாங்க, ஆனா நம்ம ப்ராஜெக்ட் விட இன்னும் பெட்டெர் presentation அவங்க கொடுத்து இருந்ததால, அங்க போய்டுச்சு சார் ப்ராஜெக்ட்” என்று கூறியவனை எரித்தான்.
அடுத்து அவன் அந்த கம்பெனி டிடைல்ஸ் கேட்பான் என்று அறிந்து, உடனே அதன் கோப்பை எடுத்து அவன் முன் வைத்தான். அதை எடுத்து பார்த்தவனுக்கு, கண்கள் அந்த புகைப்படத்தில் நிலைத்து நின்றது.
எவ்வளவு நேரம் அவன் அப்படியே அந்த புகைப்படத்தை பார்த்தானோ, அவனின் செல்பேசி சிணுங்கவும் தான் சுயநினைவிற்கு வந்தான். செல்பேசியில் அழைத்தது அவனின் பாட்டி, எதற்கு அழைக்கிறார்கள் இப்பொழுது என்ற எரிச்சலுடன் எடுத்து பேசினான்.
“டேய் ஆதிக்! சீக்கிரம் கிளம்பி நேரா அப்பலோ ஆஸ்பிட்டல் வா” என்று கூறி போனை வைத்தார்.
“என்ன?” என்று அதிர்ந்தவன், ஏற்கனவே அவன் தந்தைக்கு போன வருடம் தான் பை பாஸ் சர்ஜெரி முடிந்து இருந்தது. அவருக்கா, இல்லை பாட்டிக்கு ஏதுமா என்று தெரியாமல் உடனே அவன் அங்கு இருந்து கிளம்பி, தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.
பெருங்குடியில் இருக்கும் அந்த மருத்துவமனை வாயிலின் முன், அவன் வண்டியை நிறுத்தும் பொழுது, சரியாக அந்த நேரம் பாட்டி அவன் இறங்கும் முன் அவர் வண்டியில் ஏறி விட்டார்.
“பாட்டி! என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க? உங்களுக்கா, இல்லை அப்பாவுக்கா?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தான்.
“முதல வண்டியை எடு, எனக்கு தான் ஜெனரல் செக் அப் பண்ணிக்க வந்தேன். உங்க அப்பா டிரைவர் கூட்டிட்டு, பத்திரிக்கை வைக்க ஊருக்கு போய்ட்டான்”.
“நான் பக்கத்து வீட்டு நீலா கூட இங்க வந்தேன் அப்போ, அதான் இப்போ உன்னை டிரைவர் வேளைக்கு கூப்பிட்டேன். நேரா இப்போ பக்கத்துல இருக்கிற மாக்ஸ் ஷோ ரூம் போ, உனக்கு டிரஸ் எடுக்கணும்” என்றவரை முறைத்து பார்த்தான்.
“பாட்டி! நான் எவ்வளவு பயந்துட்டு வந்தேன் தெரியுமா? சும்மா டிரைவர் வேலை பார்க்க கூப்பிட்டேன் சொல்லுறீங்க, உங்களை என்ன பண்ணுறது?”.
“நான் இன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் கை விட்டு போச்சு, அதை எப்படி மிஸ் பண்ணோம் அப்படின்னு பார்த்துகிட்டு இருந்தேன். உங்களுக்கு வண்டி வேணும் சொன்னா, நான் ஏற்பாடு பண்ணி இருப்பேன் தெரியும் தானே” என்று அவன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்தான்.
அவரோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஷோ ரூம் எந்த பக்கம் வருகிறது என்று பார்த்தார்.
“அடேய், ரைட் ல தான் ஷோ ரூம் இருக்கு, யூ டர்ன் அடிச்சு அங்க போ” என்று கூறவும், நொந்து விட்டான்.
காரை பார்க் பண்ணிவிட்டு, கையோடு அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். ஒன்றும் கூற முடியாமல், பல்லை கடித்துக் கொண்டு பின்னே சென்றான் ஆதிக்.
“அட! நம்ம ப்ரீத்தி பொண்ணு இங்க தான் இருக்கு, டேய் நீ போய் டிரஸ் எடு, நான் பேத்தியை போய் பார்த்து பேசிட்டு வரேன்” என்று கூறி சென்றவரை பார்த்து, அவனின் பல் இன்று அடிகடி கடித்துக் கொண்டது.
“எம்மாடி ப்ரீத்தி! எப்படி இருக்க? கல்யாணத்துக்கு ஷாப்பிங் பண்ண வந்தியா?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன் பாட்டி, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நான் நல்லா இருக்கேன், என்ன நீ மட்டுமா வந்து இருக்க” என்று கேட்டார்.
“இல்லை பாட்டி, பிரிண்ட்ஸ் கூட வந்து இருக்காங்க. இன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் எங்க கைக்கு கிடைச்சது, எங்க உழைப்பு வீண் போகல. அந்த சந்தோஷ கொண்டாட்டத்துக்கு தான், நான் எங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் டிரஸ் எடுத்து கொடுக்கலாம்ன்னு வந்தேன்” என்று கூறவும், அவரும் மகிழ்ந்து அவளை பாராட்டினார்.
“என் பேரன் கூட வந்து இருக்கான், தடியன் எடுதுட்டானா என்னனு தெரியல? நீ பாரு மா, நான் அங்க அவனை பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அவன் இருக்கும் இடம் நோக்கி சென்றார்.
அங்கே அவன், ஒன்றும் எடுக்காமல் இருப்பதை பார்த்து முறைத்தார்.
“ஏற்கனவே என் கிட்ட வேணும்கிற அளவுக்கு டிரஸ் இருக்கு பாட்டி,
இங்க இருக்கிற டிசைன் மாதிரியே. கல்யாணத்துக்கு கோட், ஷெர்வானி எல்லாம் அஜய் எடுத்துட்டு வருவான், நாம கிளம்பலாம்” என்று கூறியவனை பார்த்து சரி என்றார்.
“பாட்டி! நீங்க இங்க உட்காருங்க, நான் வண்டியை எடுத்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அவன் வண்டி எடுத்துக் கொண்டு வெளியே வந்த நேரம், பாட்டி ப்ரீத்தியுடனும் அவளின் தோழியுடனும் பேசிக் கொண்டு இருந்தார். அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து, ஏனோ அவன் மனம் அவளை ரசிக்க தொடங்கியது.
மாநிறம் தான், ஆனால் அதுவே அவளை அழகாக காட்டியது. நெற்றியில் விழுந்த முடியை சரி செய்த விதம், அவனை கவர்ந்து இழுத்தது. புடவையில் தான் வந்து இருந்தாள், அந்த கடல் வண்ணம் அவளின் நிறத்தை அழகாக எடுத்துக் காட்டியது.
அன்று அவள், என்ன புடவை கட்டினாள் என்று கூட தெரியாது. ஆனால் இன்று அவள் உடுத்திய புடவை நிறத்தில் இருந்து, அவள் கழுத்தில், காதில், கையில் என்ன எல்லாம் செய்து இருக்கிறாள் என்று கேட்டால், சரியாக பதில் சொல்லும் அளவிற்கு அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதிக்.
“டேய்! என்ன டா வேடிக்கை? வண்டியை எடு” என்று அவன் பாட்டி அவன் அருகில் இருந்து கத்தவும் தான், சுயநினைவிற்கு வந்தான்.
“ச! பாட்டி ஏறி அமர்ந்தது கூட தெரியாம, நான் அவளை நல்லா வேடிக்கை பார்த்து இருக்கேன்” என்று நொந்து கொள்ளும் பொழுது, அவன் மனசாட்சி அதுக்கு பேர் வேடிக்கை இல்லை சைட்டு என்று எடுத்து கூறவும், அவன் அதை அடக்கி வைத்தான்.
“டேய்! எங்க டா போற? வீட்டுக்கு வண்டியை விடு டா” என்று பாட்டி அலறவும் தான், அவன் சென்ற பாதையை கவனித்தான்.
அவள் தனது அக்டிவாவில், முன்னே சென்று கொண்டு இருந்தாள் அவளின் வீட்டிற்கு. மனதிற்குள், ரொம்ப முத்திடுச்சா டா என்று எண்ணிக் கொண்டான்.
“பாட்டி! அவ பாதுகாப்பா போய் சேர்ந்துட்டாளா என்னனு, நீங்க தான பார்க்க சொல்லி, போக சொன்னீங்க. நீங்க மறந்துட்டு, என்னை சொல்லாதீங்க” என்று பிளேட்டை திருப்பி போட்டான்.
ம்கும்! இவனை எனக்கு தெரியாதாக்கும், பொண்ணு பார்த்துட்டு, எரிச்சல் பட்டு வந்தது என்ன? இப்போ நடந்துகிறது என்ன? என்று அவர் மனம் பேரனை கேலி செய்தது.
அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அவள் வீடு சென்ற பிறகு தான், இவன் தன் வீட்டிற்கு சென்றான். அங்கே பாட்டியை இறக்கிவிட்டு, நேராக இவன் பி.ஏ. ரத்தீஷை அழைத்து, ப்ரீத்தி கம்பெனி முகவரி கேட்டு, அங்கே சென்றான்.
அவள் வீட்டில் இருந்து சிறிது தள்ளி இருந்த காம்ப்ளெக்ஸ் ஒன்றில், மூன்றாவது மாடியில் தான் அவளது கம்பெனி. அங்கே உள்ளே சென்றவன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவளை காண வேண்டும் என்றான்.
அங்கு இருந்த பெண், அவளுக்கு தகவல் தெரிவித்து அவளின் பதில் என்னவென்று கேட்டு அவனிடம் சிறிது நேரம் காத்து இருக்குமாறு கூறினாள். அங்கே போடப்பட்டு இருந்த ஒற்றை சோபாவில், அமர்ந்து அங்கே இருந்த பத்திரிக்கைகளை எல்லாம் புரட்டி பார்த்துக் கொண்டு இருந்தான்.
வீட்டில் இருந்தவள், சிறிது ரெப்ரெஷ் செய்துக் கொண்டு உடனே கம்பெனி வந்து சேர்ந்தாள். அவனிடம் எப்படி பேச வேண்டும் என்று, நன்றாகவே ஒத்திகை பார்த்துக் கொண்டாள். வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, லிப்டில் மேலே சென்று கம்பெனி உள்ளே வந்தவள், அவனை பார்த்து அழகாக புன்னகை புரிந்து வரவேற்றாள்.
அவனை, தன் காபின்க்கு அழைத்து சென்றவள் என்ன விபரம் என்று கேட்டாள்.
“வாழ்த்துக்கள்! அந்த ப்ராஜெக்ட் உங்க கைக்கு கிடைச்சது அப்படின்னு கேள்விபட்டேன், உங்க presentation பார்க்கலாமா இப் யூ டோன்ட் மைன்ட்” என்று கேட்டவனை ஆழ்ந்து பார்த்தாள்.
“சாரி! ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணிட்டு, அப்புறம் உங்களுக்கு நான் கண்டிப்பா காட்டுறேன்” என்று அவளும் புன்முறுவல் பூத்தாள்.
ப்ரீத்தியின் அந்த புத்திக் கூர்மை தான், முதலில் அவனை கவனிக்க வைத்தது. இப்பொழுதும், அவளின் புத்திசாலித்தனம் அவனை ஈர்த்தாலும், அவளிடம் இப்பொழுது வம்பு வளர்க்க தோன்றியது.
“ஒகே பைன்! அப்புறம் இப்போ இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணுறது உனக்கு முக்கியமா? இல்லை என்னை கல்யாணம் கட்டிக்கிறது உனக்கு முக்கியமா?” என்று கேட்டான், பதிலை தெரிந்து கொண்டே.
“ரெண்டு கண்ணுல எது பிடிக்கும், அப்படின்னு கேட்கிற மாதிரி இருக்கு. எனக்கு ரெண்டுமே முக்கியம் தான், அதனால இப்போ எனக்கு கூடுதல் வேலை இருக்கு, வேறு எதுவும் விஷயம்ன்னா பேசுங்க, இல்லைனா கிளம்புங்க” என்று ப்ரீத்தி கூறவும், மனதிற்குள் சிரித்தான்.
“ஒ ரியல்லி! அப்போ சரி, நாளைக்கு சண்டே தானே, உங்க அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு வைக்குறேன் நாம சேர்ந்து வெளியே போக, ரெடியா இரு” என்றவனை பார்த்து அதிர்ந்தாள் ப்ரீத்தி.
அடுத்து அவள் பேசும் முன், அவன் வெளியேறி இருந்தான். சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டே, அவன் காரை நேராக அலுவலகத்திற்கு விரட்டினான்.
இவனுக்கு, இப்போ என்ன வேணும் என்று புரியாமல் திகைத்தது விதி.
ஆதிக் மிகவும் கோபத்தில் இருந்தான், அவனுக்கு கிடைக்க வேண்டிய ப்ராஜெக்ட் அதுவும் தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்று நம்பிய அந்த ப்ரொஜெட் இப்பொழுது கை நழுவி இருந்தது.
அதுவும், இப்பொழுது அந்த ப்ராஜெக்ட் சென்று இருப்பது ஏதோ சிறிய அளவிலான கம்பெனிக்கு என்று தன் பி.ஏ சொல்லவும், கொதித்து விட்டான். எங்கு தவறு நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்று தெரியாமல் குழம்பி கொண்டு இருந்தான்.
உடனே தன் பி. ஏ. ரத்தீஷை அழைத்து, உடனே காபின் வருமாறு பணித்தான். அவனோ, இருக்கும் அத்தனை கடவுளுக்கும் மனு போட்டுவிட்டு, தைரியத்தை வரவழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ரத்தீஷ்! வாட் இஸ் கோயிங் ஆன்? இந்த ப்ராஜெக்ட் எவ்வளவு முக்கியம் அப்படின்னு உனக்கு தெரியுமா, தெரியாதா? அப்புறம் இது எப்படி நம்ம கை விட்டு போச்சு?”.
“எனக்கு அன்னைக்கு வேறு ஒரு முக்கிய வேலை வந்ததால, நீ இந்த ப்ராஜெக்ட் டீம் லீட் ஸ்வேதா கூட்டிட்டு போன. அவ பெர்பெக்ட் presentation கொடுக்க போய் தான், உன்னையும் அவளையும் அனுப்பினேன்”.
“எப்படி மிஸ் ஆகிடுச்சு, ஸ்வேதா டிட் எனிதிங் ராங்?” என்று அவனை பார்த்து கூர்மையாக கேட்டான் ஆதிக்.
“இல்லை சார்! எல்லாமே பக்காவா தான் செய்தாங்க, ஆனா நம்ம ப்ராஜெக்ட் விட இன்னும் பெட்டெர் presentation அவங்க கொடுத்து இருந்ததால, அங்க போய்டுச்சு சார் ப்ராஜெக்ட்” என்று கூறியவனை எரித்தான்.
அடுத்து அவன் அந்த கம்பெனி டிடைல்ஸ் கேட்பான் என்று அறிந்து, உடனே அதன் கோப்பை எடுத்து அவன் முன் வைத்தான். அதை எடுத்து பார்த்தவனுக்கு, கண்கள் அந்த புகைப்படத்தில் நிலைத்து நின்றது.
எவ்வளவு நேரம் அவன் அப்படியே அந்த புகைப்படத்தை பார்த்தானோ, அவனின் செல்பேசி சிணுங்கவும் தான் சுயநினைவிற்கு வந்தான். செல்பேசியில் அழைத்தது அவனின் பாட்டி, எதற்கு அழைக்கிறார்கள் இப்பொழுது என்ற எரிச்சலுடன் எடுத்து பேசினான்.
“டேய் ஆதிக்! சீக்கிரம் கிளம்பி நேரா அப்பலோ ஆஸ்பிட்டல் வா” என்று கூறி போனை வைத்தார்.
“என்ன?” என்று அதிர்ந்தவன், ஏற்கனவே அவன் தந்தைக்கு போன வருடம் தான் பை பாஸ் சர்ஜெரி முடிந்து இருந்தது. அவருக்கா, இல்லை பாட்டிக்கு ஏதுமா என்று தெரியாமல் உடனே அவன் அங்கு இருந்து கிளம்பி, தன் காரை எடுத்துக் கொண்டு விரைந்தான்.
பெருங்குடியில் இருக்கும் அந்த மருத்துவமனை வாயிலின் முன், அவன் வண்டியை நிறுத்தும் பொழுது, சரியாக அந்த நேரம் பாட்டி அவன் இறங்கும் முன் அவர் வண்டியில் ஏறி விட்டார்.
“பாட்டி! என்னாச்சு? டாக்டர் என்ன சொன்னாங்க? உங்களுக்கா, இல்லை அப்பாவுக்கா?” என்று கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தான்.
“முதல வண்டியை எடு, எனக்கு தான் ஜெனரல் செக் அப் பண்ணிக்க வந்தேன். உங்க அப்பா டிரைவர் கூட்டிட்டு, பத்திரிக்கை வைக்க ஊருக்கு போய்ட்டான்”.
“நான் பக்கத்து வீட்டு நீலா கூட இங்க வந்தேன் அப்போ, அதான் இப்போ உன்னை டிரைவர் வேளைக்கு கூப்பிட்டேன். நேரா இப்போ பக்கத்துல இருக்கிற மாக்ஸ் ஷோ ரூம் போ, உனக்கு டிரஸ் எடுக்கணும்” என்றவரை முறைத்து பார்த்தான்.
“பாட்டி! நான் எவ்வளவு பயந்துட்டு வந்தேன் தெரியுமா? சும்மா டிரைவர் வேலை பார்க்க கூப்பிட்டேன் சொல்லுறீங்க, உங்களை என்ன பண்ணுறது?”.
“நான் இன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் கை விட்டு போச்சு, அதை எப்படி மிஸ் பண்ணோம் அப்படின்னு பார்த்துகிட்டு இருந்தேன். உங்களுக்கு வண்டி வேணும் சொன்னா, நான் ஏற்பாடு பண்ணி இருப்பேன் தெரியும் தானே” என்று அவன் பாட்டுக்கு புலம்பிக் கொண்டும், திட்டிக் கொண்டும் இருந்தான்.
அவரோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஷோ ரூம் எந்த பக்கம் வருகிறது என்று பார்த்தார்.
“அடேய், ரைட் ல தான் ஷோ ரூம் இருக்கு, யூ டர்ன் அடிச்சு அங்க போ” என்று கூறவும், நொந்து விட்டான்.
காரை பார்க் பண்ணிவிட்டு, கையோடு அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். ஒன்றும் கூற முடியாமல், பல்லை கடித்துக் கொண்டு பின்னே சென்றான் ஆதிக்.
“அட! நம்ம ப்ரீத்தி பொண்ணு இங்க தான் இருக்கு, டேய் நீ போய் டிரஸ் எடு, நான் பேத்தியை போய் பார்த்து பேசிட்டு வரேன்” என்று கூறி சென்றவரை பார்த்து, அவனின் பல் இன்று அடிகடி கடித்துக் கொண்டது.
“எம்மாடி ப்ரீத்தி! எப்படி இருக்க? கல்யாணத்துக்கு ஷாப்பிங் பண்ண வந்தியா?” என்று கேட்டார்.
“நல்லா இருக்கேன் பாட்டி, நீங்க எப்படி இருக்கீங்க?” என்று கேட்டாள்.
“நான் நல்லா இருக்கேன், என்ன நீ மட்டுமா வந்து இருக்க” என்று கேட்டார்.
“இல்லை பாட்டி, பிரிண்ட்ஸ் கூட வந்து இருக்காங்க. இன்னைக்கு ஒரு ப்ராஜெக்ட் எங்க கைக்கு கிடைச்சது, எங்க உழைப்பு வீண் போகல. அந்த சந்தோஷ கொண்டாட்டத்துக்கு தான், நான் எங்க வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் டிரஸ் எடுத்து கொடுக்கலாம்ன்னு வந்தேன்” என்று கூறவும், அவரும் மகிழ்ந்து அவளை பாராட்டினார்.
“என் பேரன் கூட வந்து இருக்கான், தடியன் எடுதுட்டானா என்னனு தெரியல? நீ பாரு மா, நான் அங்க அவனை பார்க்கிறேன்” என்று கூறிவிட்டு அவன் இருக்கும் இடம் நோக்கி சென்றார்.
அங்கே அவன், ஒன்றும் எடுக்காமல் இருப்பதை பார்த்து முறைத்தார்.
“ஏற்கனவே என் கிட்ட வேணும்கிற அளவுக்கு டிரஸ் இருக்கு பாட்டி,
இங்க இருக்கிற டிசைன் மாதிரியே. கல்யாணத்துக்கு கோட், ஷெர்வானி எல்லாம் அஜய் எடுத்துட்டு வருவான், நாம கிளம்பலாம்” என்று கூறியவனை பார்த்து சரி என்றார்.
“பாட்டி! நீங்க இங்க உட்காருங்க, நான் வண்டியை எடுத்துட்டு வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.
அவன் வண்டி எடுத்துக் கொண்டு வெளியே வந்த நேரம், பாட்டி ப்ரீத்தியுடனும் அவளின் தோழியுடனும் பேசிக் கொண்டு இருந்தார். அவளின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து, ஏனோ அவன் மனம் அவளை ரசிக்க தொடங்கியது.
மாநிறம் தான், ஆனால் அதுவே அவளை அழகாக காட்டியது. நெற்றியில் விழுந்த முடியை சரி செய்த விதம், அவனை கவர்ந்து இழுத்தது. புடவையில் தான் வந்து இருந்தாள், அந்த கடல் வண்ணம் அவளின் நிறத்தை அழகாக எடுத்துக் காட்டியது.
அன்று அவள், என்ன புடவை கட்டினாள் என்று கூட தெரியாது. ஆனால் இன்று அவள் உடுத்திய புடவை நிறத்தில் இருந்து, அவள் கழுத்தில், காதில், கையில் என்ன எல்லாம் செய்து இருக்கிறாள் என்று கேட்டால், சரியாக பதில் சொல்லும் அளவிற்கு அவளை ரசித்துக் கொண்டு இருந்தான் ஆதிக்.
“டேய்! என்ன டா வேடிக்கை? வண்டியை எடு” என்று அவன் பாட்டி அவன் அருகில் இருந்து கத்தவும் தான், சுயநினைவிற்கு வந்தான்.
“ச! பாட்டி ஏறி அமர்ந்தது கூட தெரியாம, நான் அவளை நல்லா வேடிக்கை பார்த்து இருக்கேன்” என்று நொந்து கொள்ளும் பொழுது, அவன் மனசாட்சி அதுக்கு பேர் வேடிக்கை இல்லை சைட்டு என்று எடுத்து கூறவும், அவன் அதை அடக்கி வைத்தான்.
“டேய்! எங்க டா போற? வீட்டுக்கு வண்டியை விடு டா” என்று பாட்டி அலறவும் தான், அவன் சென்ற பாதையை கவனித்தான்.
அவள் தனது அக்டிவாவில், முன்னே சென்று கொண்டு இருந்தாள் அவளின் வீட்டிற்கு. மனதிற்குள், ரொம்ப முத்திடுச்சா டா என்று எண்ணிக் கொண்டான்.
“பாட்டி! அவ பாதுகாப்பா போய் சேர்ந்துட்டாளா என்னனு, நீங்க தான பார்க்க சொல்லி, போக சொன்னீங்க. நீங்க மறந்துட்டு, என்னை சொல்லாதீங்க” என்று பிளேட்டை திருப்பி போட்டான்.
ம்கும்! இவனை எனக்கு தெரியாதாக்கும், பொண்ணு பார்த்துட்டு, எரிச்சல் பட்டு வந்தது என்ன? இப்போ நடந்துகிறது என்ன? என்று அவர் மனம் பேரனை கேலி செய்தது.
அதை பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல், அவள் வீடு சென்ற பிறகு தான், இவன் தன் வீட்டிற்கு சென்றான். அங்கே பாட்டியை இறக்கிவிட்டு, நேராக இவன் பி.ஏ. ரத்தீஷை அழைத்து, ப்ரீத்தி கம்பெனி முகவரி கேட்டு, அங்கே சென்றான்.
அவள் வீட்டில் இருந்து சிறிது தள்ளி இருந்த காம்ப்ளெக்ஸ் ஒன்றில், மூன்றாவது மாடியில் தான் அவளது கம்பெனி. அங்கே உள்ளே சென்றவன், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அவளை காண வேண்டும் என்றான்.
அங்கு இருந்த பெண், அவளுக்கு தகவல் தெரிவித்து அவளின் பதில் என்னவென்று கேட்டு அவனிடம் சிறிது நேரம் காத்து இருக்குமாறு கூறினாள். அங்கே போடப்பட்டு இருந்த ஒற்றை சோபாவில், அமர்ந்து அங்கே இருந்த பத்திரிக்கைகளை எல்லாம் புரட்டி பார்த்துக் கொண்டு இருந்தான்.
வீட்டில் இருந்தவள், சிறிது ரெப்ரெஷ் செய்துக் கொண்டு உடனே கம்பெனி வந்து சேர்ந்தாள். அவனிடம் எப்படி பேச வேண்டும் என்று, நன்றாகவே ஒத்திகை பார்த்துக் கொண்டாள். வண்டியை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, லிப்டில் மேலே சென்று கம்பெனி உள்ளே வந்தவள், அவனை பார்த்து அழகாக புன்னகை புரிந்து வரவேற்றாள்.
அவனை, தன் காபின்க்கு அழைத்து சென்றவள் என்ன விபரம் என்று கேட்டாள்.
“வாழ்த்துக்கள்! அந்த ப்ராஜெக்ட் உங்க கைக்கு கிடைச்சது அப்படின்னு கேள்விபட்டேன், உங்க presentation பார்க்கலாமா இப் யூ டோன்ட் மைன்ட்” என்று கேட்டவனை ஆழ்ந்து பார்த்தாள்.
“சாரி! ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணிட்டு, அப்புறம் உங்களுக்கு நான் கண்டிப்பா காட்டுறேன்” என்று அவளும் புன்முறுவல் பூத்தாள்.
ப்ரீத்தியின் அந்த புத்திக் கூர்மை தான், முதலில் அவனை கவனிக்க வைத்தது. இப்பொழுதும், அவளின் புத்திசாலித்தனம் அவனை ஈர்த்தாலும், அவளிடம் இப்பொழுது வம்பு வளர்க்க தோன்றியது.
“ஒகே பைன்! அப்புறம் இப்போ இந்த ப்ராஜெக்ட் சக்சஸ் பண்ணுறது உனக்கு முக்கியமா? இல்லை என்னை கல்யாணம் கட்டிக்கிறது உனக்கு முக்கியமா?” என்று கேட்டான், பதிலை தெரிந்து கொண்டே.
“ரெண்டு கண்ணுல எது பிடிக்கும், அப்படின்னு கேட்கிற மாதிரி இருக்கு. எனக்கு ரெண்டுமே முக்கியம் தான், அதனால இப்போ எனக்கு கூடுதல் வேலை இருக்கு, வேறு எதுவும் விஷயம்ன்னா பேசுங்க, இல்லைனா கிளம்புங்க” என்று ப்ரீத்தி கூறவும், மனதிற்குள் சிரித்தான்.
“ஒ ரியல்லி! அப்போ சரி, நாளைக்கு சண்டே தானே, உங்க அப்பா கிட்ட பெர்மிஷன் கேட்டு வைக்குறேன் நாம சேர்ந்து வெளியே போக, ரெடியா இரு” என்றவனை பார்த்து அதிர்ந்தாள் ப்ரீத்தி.
அடுத்து அவள் பேசும் முன், அவன் வெளியேறி இருந்தான். சந்தோஷமாக விசில் அடித்துக் கொண்டே, அவன் காரை நேராக அலுவலகத்திற்கு விரட்டினான்.
இவனுக்கு, இப்போ என்ன வேணும் என்று புரியாமல் திகைத்தது விதி.