அத்தியாயம் – 23
கதிர்நிலவன் சென்றவுடன் உள்ளே வந்தவள், “உன்னிடம் உண்மையைச் சொல்ல எனக்கும் ஆசைதான் ஆனால் கடைசியில் என்னை நீ ஏற்றுக்கொள்வாய் என்று எனக்கு தெரியும்.. ஆனால் இந்த வாழ்க்கை நாம் இருவர் மட்டும் தீர்மானித்தால், கடைசியில் என்னுடைய நிலையில், என்னுடைய மகள் நிற்க வேண்டி வரும்..” என்று வாய்விட்டுக் கூறியவள் தனது அறைக்குள் சென்றுவிட,
அவளின் பின்னோடு வீட்டிற்குள் வந்த தேவகிக்கு கவியின் மேல் சந்தேகம் எழுந்தது.. அவர் வந்த காரியத்தை மறந்து அவள் பின்னே சென்றவர்,
“கவிமலர் உன்னோட மனதில் என்ன இருக்கிறது..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டார்
அவரைப் பார்த்தவள் ஒரு புன்னகையுடன், “என்னோட மனதில் ஆயிரம் இருக்கிறது அம்மா.. ஆனால் அதை நான் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன்..” என்று கூறினாள்
“கவிம்மா உன்னுடைய அப்பா என்ன செய்கிறார்..?” என்றார் தேவகி
“யாருக்கு தெரியும் அம்மா..? அப்பா வரும் வரையில் இங்கேதான் இருப்பேன்..” என்று சம்மந்தம் இல்லாத பதிலைக் கூறியவள் உள்ளே சென்று மறைய, தேவகி சந்தேகம் அதிகமானது.
தனது வீட்டிற்குள் நுழைந்தவர் நேராக அவரின் படுக்கை அறைக்குள் சென்றவர், அலைமாரியில் இருந்த போட்டோவை எடுத்து “அக்கா இன்று நீங்கள் இறந்த நாள். ஆனால் அந்தப்பெண் கவியின் பிறந்தநாளும் இன்றுதான். எனக்கு என்னோமோ சந்தேகமாகவே இருக்கிறது இவள் நம்முடைய மகள் மிருதுவா..? ஜோதிதான் உன்னுடைய உயிர் தோழியா..? அவளுக்குத்தான் நம் மகளைக் கொடுத்தீங்களா..? சொல்லுக்கா எனக்கு பதில் சொல்லு..” என்று புகைப்படத்தில் இருந்த கவியின் அன்னை அன்பரசியிடம் கதறினார் தேவகி.
இங்கே காரில் சென்றவர்கள் ஆளுக்கொரு சிந்தனையில் வந்தனர்.. முகிலன் தான் சென்னை சென்றதும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டபடியே வந்தான் என்றால், கதிர்நிலவன் உண்மையைத் தெரித்துக் கொள்ள நினைத்தபடியே வந்தான்..
அகிலும், முகிலினியும் திருப்பூரில் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பழைய பஸ்நிலையத்தில் இறங்கிவிட, கதிர்நிலவன், முகிலன், நிலா மூவரும் சென்னை நோக்கிச் சென்றனர்..
கதிர்நிலவன், முகிலன் இருவரும் எதுவும் பேசாமல் வர, நிலா சென்னை சென்றதும் முகிலனிடம் உண்மையைக் கூற வேண்டும் என்று நினைத்தாள்
இவ்வாறு இவர்களின் பயணம் சென்னையில் முடிந்தது.. இருவரையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்ட கதிர்நிலவன் புயல் வேகத்தில் வீட்டிருக்கு சென்று காரை நிறுத்தியவன் புயல் போல உள்ளே நுழைந்தான்..
“அப்பா.. அப்பா..” என்று கத்திக்கொண்டு வீட்டிற்குள் வரும் மகனைக் கண்டு பதட்டத்துடன் சமையல் அறையில் இருந்து உள்ளே வந்தார் வசந்தி..
அவரைப் பார்த்தவன், “அம்மா அப்பா எங்கே..?” என்றான் கோபமாகக் கேட்டான்..
அவனின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த வசந்தி, தனது கணவனை அழைத்துவர திரும்பியவர் அப்படியே நின்றார்.. அவனைப் பார்த்த படியே வந்தவர் அவனின் தந்தை ராம்குமார்...
“என்ன கதிர் என்ன பிரச்சனை..?” என்று மட்டும் கேட்டார்..
அவரின் முகத்தில் இருந்த தெளிவைப் பார்த்தவன், “அப்பா என்னுடைய அத்தை மகள் தான் கவிமலரா..? இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா..?” என்று கேட்டான்
“ம்ம் தெரியும்.. ஆனால் அந்த பெண்ணை மறந்துவிட்டு நாங்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துக் கொள் கதிர்..” என்று அமைதியாக வெடிகுண்டை வீசினார் ராம்குமார்..
“அப்பா என்ன பேசறீங்க என்று புரிந்துதான் பேசறீங்களா..?” என்று கோபமாகக் கத்தினான் கதிர்நிலவன்
“ம்ம் நல்ல புரிந்துதான் பேசுகிறேன் கதிர்.. நீ அந்த பெண்ணைத் திருமணம் செய்ய கூடாது.. நாங்கள் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்..” என்று திரும்பவும் கூறி அவனை இன்னும் கோபத்தை அதிகரித்தவர்,
“அடுத்த மாதம் உனக்கும் நான் பார்க்கும் பெண்ணிற்கும் திருமணம்..” என்று முடிவாகக் கூறியவர் வசந்தியைப் பார்க்க, அவரும் அவர்களையே தான் பார்த்துக்கொண்டு இருந்தார்..
“இந்த கதிர் இதில் பெண்ணின் போட்டோ இருக்கிறது பார்..” என்று அவன் கையில் கவரைக் கொடுக்க, கையைக் கட்டிக்கொண்டு அவரைப் பார்த்தவன்,
“அப்பா நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்வேன் என்று எப்படி உறுதியாக நம்பறீங்க..?” என்று கேட்டான்
“என்னோட மகன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு..” என்று இருபொருள் படக் கூறியவர், அங்கிருந்த டேபிளின் மேல் கவரை வைத்தவர், அறைக்குள் சென்று மறைய அவனது அன்னை வசந்தியும் அவரின் பின்னே செல்ல,
“அவள் திருமணப் பத்திரிக்கையுடன் வந்து பார் என்று கூறுகிறாள்.. இங்கே திருமணத்திற்கு நாள் குறிக்கின்றனர்.. இவர்களின் பேச்சிற்கு நான் கட்டுப்படுவேன் என்று எப்படி நினைத்தனர்..” என்று கோபத்துடன் கூறியவன் தனது அறைக்குள் சென்று மறைந்தான்..
அங்கே சென்றவுடன், “அவளுக்கும் இவருக்கும் ஒரு பாடம் கற்பித்தே ஆகவேண்டும்..” என்று முடிவை எடுத்தான் கதிர்நிலவன்..
மறுநாள் காலையில் எழுந்த நிலாவிற்கு ஆசரமத்தின் நிர்வாகியிடம் இருந்து அழைப்பு வர அதை எடுத்துப் பேசினாள்..
“நிலாம்மா உன்னைப் பார்க்க சிவானந்தம் அவர்களின் மகன் வந்திருக்கிறார்..” என்று கூற
அதுவரையில் குழப்பத்தில் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் தெளிவும், அத்துடன் தனது காதல் ஜெய்க்கும் என்ற நம்பிக்கையும் வந்தது..
சிறிது நேரம் யோசித்தவள், “சார் அவரை அந்த ஆசரமத்தின் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் இருக்க சொல்லுங்க..” என்று கூறியவள் இன்னும் சில தகவலைப் பெற்றுகொண்டு அறைக்குள் சென்றவள் தயாராகி வெளியே வந்தாள்..
அவள் கூறியதை அப்படியே அவனிடம் கூறிய ஆசரமத்தின் நிர்வாகி தனது வேலையை பார்க்க செல்ல அவனும் அந்த பூங்காவிற்கு சென்றான்..
இதில் நடந்த குழப்பம் என்னவென்றால், முகிலனிடம் சிவானந்தம் அவர்களின் வளர்ப்பு மகள் என்று கூறியவர், நிலாவிடம் சிவானந்தம் அவர்களின் மகன் வந்திருக்கிறார் என்று கூறியது இங்கே இருவரும் யாரையோ காணப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டனர்..
அடுத்த அரைமணி நேரத்தில் பூங்காவை அடைந்தனர் இருவரும்.. வாசலில் இருந்துப் பார்த்தவள் அங்கே முகிலன் நிற்பதைப் பார்த்து முதலில் திகைத்தவள் அவனின் அருகில் செல்ல அவனும் இவளைப் பார்த்து திகைத்து நின்றான்..
“முகில் நீ இங்கே என்ன பண்ற..?” என்று கேட்டாள் நிலா
“அந்த கேள்வியை நான் கேட்க வேண்டும் நீ இங்க என்ன பண்ற..?” என்று கோபமாகக் கேட்டான்
“இரு இரு நீ இங்கே இருப்பது எனக்கு தெரியாது.. என்னைப் பார்க்க என்னை வளர்த்தவரின் மகன் வந்திருப்பதாக ஆசாரத்தின் நிர்வாகி அழைத்தார்.. அவரை இங்கே தான் இருக்க சொல்லி சொன்னேன் அவரைப் பார்க்கத்தான் வந்தேன்..” என்று உண்மையைக் கூறினாள் நிலா
கதிர்நிலவன் சென்றவுடன் உள்ளே வந்தவள், “உன்னிடம் உண்மையைச் சொல்ல எனக்கும் ஆசைதான் ஆனால் கடைசியில் என்னை நீ ஏற்றுக்கொள்வாய் என்று எனக்கு தெரியும்.. ஆனால் இந்த வாழ்க்கை நாம் இருவர் மட்டும் தீர்மானித்தால், கடைசியில் என்னுடைய நிலையில், என்னுடைய மகள் நிற்க வேண்டி வரும்..” என்று வாய்விட்டுக் கூறியவள் தனது அறைக்குள் சென்றுவிட,
அவளின் பின்னோடு வீட்டிற்குள் வந்த தேவகிக்கு கவியின் மேல் சந்தேகம் எழுந்தது.. அவர் வந்த காரியத்தை மறந்து அவள் பின்னே சென்றவர்,
“கவிமலர் உன்னோட மனதில் என்ன இருக்கிறது..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டார்
அவரைப் பார்த்தவள் ஒரு புன்னகையுடன், “என்னோட மனதில் ஆயிரம் இருக்கிறது அம்மா.. ஆனால் அதை நான் சொல்ல முடியாத சூழலில் இருக்கிறேன்..” என்று கூறினாள்
“கவிம்மா உன்னுடைய அப்பா என்ன செய்கிறார்..?” என்றார் தேவகி
“யாருக்கு தெரியும் அம்மா..? அப்பா வரும் வரையில் இங்கேதான் இருப்பேன்..” என்று சம்மந்தம் இல்லாத பதிலைக் கூறியவள் உள்ளே சென்று மறைய, தேவகி சந்தேகம் அதிகமானது.
தனது வீட்டிற்குள் நுழைந்தவர் நேராக அவரின் படுக்கை அறைக்குள் சென்றவர், அலைமாரியில் இருந்த போட்டோவை எடுத்து “அக்கா இன்று நீங்கள் இறந்த நாள். ஆனால் அந்தப்பெண் கவியின் பிறந்தநாளும் இன்றுதான். எனக்கு என்னோமோ சந்தேகமாகவே இருக்கிறது இவள் நம்முடைய மகள் மிருதுவா..? ஜோதிதான் உன்னுடைய உயிர் தோழியா..? அவளுக்குத்தான் நம் மகளைக் கொடுத்தீங்களா..? சொல்லுக்கா எனக்கு பதில் சொல்லு..” என்று புகைப்படத்தில் இருந்த கவியின் அன்னை அன்பரசியிடம் கதறினார் தேவகி.
இங்கே காரில் சென்றவர்கள் ஆளுக்கொரு சிந்தனையில் வந்தனர்.. முகிலன் தான் சென்னை சென்றதும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டபடியே வந்தான் என்றால், கதிர்நிலவன் உண்மையைத் தெரித்துக் கொள்ள நினைத்தபடியே வந்தான்..
அகிலும், முகிலினியும் திருப்பூரில் ஒருவரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று பழைய பஸ்நிலையத்தில் இறங்கிவிட, கதிர்நிலவன், முகிலன், நிலா மூவரும் சென்னை நோக்கிச் சென்றனர்..
கதிர்நிலவன், முகிலன் இருவரும் எதுவும் பேசாமல் வர, நிலா சென்னை சென்றதும் முகிலனிடம் உண்மையைக் கூற வேண்டும் என்று நினைத்தாள்
இவ்வாறு இவர்களின் பயணம் சென்னையில் முடிந்தது.. இருவரையும் அவரவர் வீட்டில் இறக்கிவிட்ட கதிர்நிலவன் புயல் வேகத்தில் வீட்டிருக்கு சென்று காரை நிறுத்தியவன் புயல் போல உள்ளே நுழைந்தான்..
“அப்பா.. அப்பா..” என்று கத்திக்கொண்டு வீட்டிற்குள் வரும் மகனைக் கண்டு பதட்டத்துடன் சமையல் அறையில் இருந்து உள்ளே வந்தார் வசந்தி..
அவரைப் பார்த்தவன், “அம்மா அப்பா எங்கே..?” என்றான் கோபமாகக் கேட்டான்..
அவனின் முகத்தில் இருந்த குழப்பத்தைப் பார்த்த வசந்தி, தனது கணவனை அழைத்துவர திரும்பியவர் அப்படியே நின்றார்.. அவனைப் பார்த்த படியே வந்தவர் அவனின் தந்தை ராம்குமார்...
“என்ன கதிர் என்ன பிரச்சனை..?” என்று மட்டும் கேட்டார்..
அவரின் முகத்தில் இருந்த தெளிவைப் பார்த்தவன், “அப்பா என்னுடைய அத்தை மகள் தான் கவிமலரா..? இந்த உண்மை உங்களுக்குத் தெரியுமா..?” என்று கேட்டான்
“ம்ம் தெரியும்.. ஆனால் அந்த பெண்ணை மறந்துவிட்டு நாங்கள் பார்த்த பெண்ணைத் திருமணம் செய்துக் கொள் கதிர்..” என்று அமைதியாக வெடிகுண்டை வீசினார் ராம்குமார்..
“அப்பா என்ன பேசறீங்க என்று புரிந்துதான் பேசறீங்களா..?” என்று கோபமாகக் கத்தினான் கதிர்நிலவன்
“ம்ம் நல்ல புரிந்துதான் பேசுகிறேன் கதிர்.. நீ அந்த பெண்ணைத் திருமணம் செய்ய கூடாது.. நாங்கள் பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்..” என்று திரும்பவும் கூறி அவனை இன்னும் கோபத்தை அதிகரித்தவர்,
“அடுத்த மாதம் உனக்கும் நான் பார்க்கும் பெண்ணிற்கும் திருமணம்..” என்று முடிவாகக் கூறியவர் வசந்தியைப் பார்க்க, அவரும் அவர்களையே தான் பார்த்துக்கொண்டு இருந்தார்..
“இந்த கதிர் இதில் பெண்ணின் போட்டோ இருக்கிறது பார்..” என்று அவன் கையில் கவரைக் கொடுக்க, கையைக் கட்டிக்கொண்டு அவரைப் பார்த்தவன்,
“அப்பா நான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்வேன் என்று எப்படி உறுதியாக நம்பறீங்க..?” என்று கேட்டான்
“என்னோட மகன் மேல் எனக்கு முழு நம்பிக்கை இருக்கு..” என்று இருபொருள் படக் கூறியவர், அங்கிருந்த டேபிளின் மேல் கவரை வைத்தவர், அறைக்குள் சென்று மறைய அவனது அன்னை வசந்தியும் அவரின் பின்னே செல்ல,
“அவள் திருமணப் பத்திரிக்கையுடன் வந்து பார் என்று கூறுகிறாள்.. இங்கே திருமணத்திற்கு நாள் குறிக்கின்றனர்.. இவர்களின் பேச்சிற்கு நான் கட்டுப்படுவேன் என்று எப்படி நினைத்தனர்..” என்று கோபத்துடன் கூறியவன் தனது அறைக்குள் சென்று மறைந்தான்..
அங்கே சென்றவுடன், “அவளுக்கும் இவருக்கும் ஒரு பாடம் கற்பித்தே ஆகவேண்டும்..” என்று முடிவை எடுத்தான் கதிர்நிலவன்..
மறுநாள் காலையில் எழுந்த நிலாவிற்கு ஆசரமத்தின் நிர்வாகியிடம் இருந்து அழைப்பு வர அதை எடுத்துப் பேசினாள்..
“நிலாம்மா உன்னைப் பார்க்க சிவானந்தம் அவர்களின் மகன் வந்திருக்கிறார்..” என்று கூற
அதுவரையில் குழப்பத்தில் இருந்தவள் இப்பொழுது கொஞ்சம் தெளிவும், அத்துடன் தனது காதல் ஜெய்க்கும் என்ற நம்பிக்கையும் வந்தது..
சிறிது நேரம் யோசித்தவள், “சார் அவரை அந்த ஆசரமத்தின் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் இருக்க சொல்லுங்க..” என்று கூறியவள் இன்னும் சில தகவலைப் பெற்றுகொண்டு அறைக்குள் சென்றவள் தயாராகி வெளியே வந்தாள்..
அவள் கூறியதை அப்படியே அவனிடம் கூறிய ஆசரமத்தின் நிர்வாகி தனது வேலையை பார்க்க செல்ல அவனும் அந்த பூங்காவிற்கு சென்றான்..
இதில் நடந்த குழப்பம் என்னவென்றால், முகிலனிடம் சிவானந்தம் அவர்களின் வளர்ப்பு மகள் என்று கூறியவர், நிலாவிடம் சிவானந்தம் அவர்களின் மகன் வந்திருக்கிறார் என்று கூறியது இங்கே இருவரும் யாரையோ காணப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டனர்..
அடுத்த அரைமணி நேரத்தில் பூங்காவை அடைந்தனர் இருவரும்.. வாசலில் இருந்துப் பார்த்தவள் அங்கே முகிலன் நிற்பதைப் பார்த்து முதலில் திகைத்தவள் அவனின் அருகில் செல்ல அவனும் இவளைப் பார்த்து திகைத்து நின்றான்..
“முகில் நீ இங்கே என்ன பண்ற..?” என்று கேட்டாள் நிலா
“அந்த கேள்வியை நான் கேட்க வேண்டும் நீ இங்க என்ன பண்ற..?” என்று கோபமாகக் கேட்டான்
“இரு இரு நீ இங்கே இருப்பது எனக்கு தெரியாது.. என்னைப் பார்க்க என்னை வளர்த்தவரின் மகன் வந்திருப்பதாக ஆசாரத்தின் நிர்வாகி அழைத்தார்.. அவரை இங்கே தான் இருக்க சொல்லி சொன்னேன் அவரைப் பார்க்கத்தான் வந்தேன்..” என்று உண்மையைக் கூறினாள் நிலா