அத்தியாயம் – 27
சென்னையில் வடபழனி கோவிலில் சிவானந்தத்தை திருமணம் செய்துக்கொண்டாள் அன்பரசி.. இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.. முதலில் இதைக் கண்டுபிடித்தவர் ராமநாதன்..
அவர் அன்பரசியிடம் சென்று, “என்னம்மா இப்படி பண்ணிட்ட..? இது ராம்குமாருக்குத் தெரிந்தால் அவன் உன்னை ஒன்னும் செய்ய மாட்டான் ஆனால் அவன் உயிருடன் இருக்க மாட்டான் அது உனக்கு தெரியாதா..?” என்று பொறுமையாகக் கேட்டார்
அவரை வரவேற்று உபசரித்த அன்பரசி, “அண்ணா எனக்கும் இந்த உண்மை தெரியும்.. ஆனால் உங்களுக்கு இன்னொரு உண்மை தெரியுமா..?” என்று அவருக்கே புதிர் போட்டாள்
“என்னம்மா உண்மை..?” என்று ராமநாதன் கேட்க, “அண்ணா அந்த முடிவை எடுக்க கூடாது என்பதற்காக தான் நான் அவருக்கு முதலில் திருமணம் செய்து வைத்தேன்.. அதற்கு முன்னாடி இருந்தே இவரை நான் விரும்பினேன்.. இவருக்கும் என்னைப் போல அப்பா அம்மா இருவரும் கிடையாது..” என்று சொன்னவள் கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு,
“நான் இவரை முதலில் பார்த்தது உங்களின் அலுவலகத்தில் தான் அண்ணா.. அதன்பிறகு இவரை நான் காதலிக்க ஆரமித்தது என்னுடைய தோழி ஜோதியின் வீட்டிற்கு சென்று வரும் பொழுதுகளில் இவரை நான் காதலிக்க ஆரமித்தேன்.. முதலில் அண்ணாவிற்கு திருமணம் செய்துவிட்டால், அண்ணா இதில் அதிகம் பாதிக்க படமாட்டான் என்று தான் அண்ணாவிற்கு திருமணம் செய்துவைக்க அந்த போராட்டம் பண்ணினேன்..” என்று நிறுத்தியவள் கண்கள் கலங்க,
“அண்ணி எனக்கு அம்மா அண்ணா.. எனக்காக குழந்தை பிறப்பதைக் கூட தள்ளிப்போட சொல்லிட்டாங்க.. அதுதான் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.. ஒரு பெண்ணை பெண்ணாக உணரவைப்பதே தாய்மைதான்.. ஆனால் அதுவே வேண்டாம் என்று முடிவெடுத்தது எனக்கு அப்புறம் தான் தெரியும் அதற்குள் இவருக்கும் சென்னையில் ஆடிட்டர் வேலை கிடைக்க, நானும் இங்கே வேலை செய்வதாக சொல்லிவிட்டு வந்து இவரை திருமணம் திருமணம் செய்துக் கொண்டேன்..” என்று நடந்தது அனைத்தும் சொல்லி முடித்தாள் அன்பரசி..
அவள் சொல்லிய அனைத்தையும் அமைதியாகக் கேட்ட ராமநாதன், “உங்களை வளர்த்தவர் உன்னுடைய மாமா தானே..?” என்று மட்டும் சிவானந்தத்திடம் கேட்டார்
“ம்ம் ஆமாங்க.. அவரின் பெண் தேவகியை என்னை திருமணம் செய்ய சொன்னார்.. ஆனால் எனக்கு அதற்கு விருப்பம் இல்லை தேவகிடம் நான் அன்பரசியை விரும்புதாக உண்மையை சொன்னேன்.. அவளும் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள நான் அன்பரசியைத் திருமணம் செய்தேன்..” என்று சொன்னார் சிவானந்தம் அவரின் கண்களில் போய் இல்லை என்பதை அனுபவம் மூலம் அறிந்துக் கொண்ட ராமநாதன்,
“அந்த பெண்ணிருக்கு திருமணம் முடிந்துவிட்டதா..?” என்று கேட்க, “மாமா என்மேல் உள்ள கோபத்தில் ஒரு பயனைப் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்.. ஆனால் அவளுக்கு இதில் விருப்பம் இல்லை ஒருவருடம் சென்று திருமணம் செய்வதாக சொல்லிவிட்டாள்..” என்று சொல்ல,
“அந்தப்பெண் எங்களின் பெண்ணோட வாழ்க்கையில் விளையாட கூடாது.. அப்படி மட்டும் நடந்தது..?” என்று சிவானந்தத்தை கோபத்துடன் சொல்ல,
“என்ன அண்ணா செய்வீங்க..? சும்மா அவரை மிரட்டாமல் இருங்க அண்ணா..” என்று கணவனுக்கு அண்ணனிடம் பேச, அவர் மெல்ல புன்னகைத்தார்..
“சரிம்மா உன்னோட சந்தோசம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்..” என்று சொன்னவருக்கு, “அண்ணா அண்ணி இருவரிடம் அவள் திருமணம் செய்து மும்பையில் இருக்கிறாள் என்று மட்டும் சொல்லுங்க..” என்று சொல்ல, அவர் புரியாமல் பார்த்தார்..
“நாங்க மும்பை செல்ல போகிறோம் அண்ணா..” என்று காரணத்தைக் கூறிய அன்பரசியை பார்த்து, சிவானந்தம் பக்கம் திரும்பிய ராமநாதன், “எங்களுடைய செல்லம்! அவள் அவளை நல்ல பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று மட்டும் சொல்ல
“அன்பரசி என்னுடைய பொறுப்பு சார்..” என்று சொல்ல, “நான் உங்களுக்கு மச்சான் முறை..” என்று சொன்னவர், “அன்பு மும்பை சென்றது போன் பண்ணும்மா.. என்ன நடந்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லு.. என்னிடம் சொல்லிவிட்டுதான் எந்த விதமான முடிவையும் எடுக்க வேண்டும்..” என்று சொல்லிவிட்டு சென்றார்..
இவர்கள் இருவரும் மும்பை செல்ல, திருப்பூர் வந்த ராமநாதன், ராம்குமாரிடமும், வசந்தியிடமும் உண்மையைச் சொல்ல, அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர்..
ஆனால் அவள் அனுப்பிய கடிதம் அவர்களை நம்ப வைத்தது.. அந்த கடிதத்தில், “அண்ணா என்னை மன்னித்துவிடு! நான் சிவானந்தம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டேன்.. இந்த செய்தி உங்கள் இருவருக்கு இடியாக இருக்கலாம்.. ஆனால் எனக்கு வேற வழித் தெரியவில்லை.. எனக்கு நீங்கள் யாரும் வேண்டாம்.. உங்களின் சொத்துகளும் வேண்டாம்.. உங்களின் மனதில் நான் மட்டும் இருப்பேன் என்று தெரியும்.. ஆனால் எனக்கு இவரும் முக்கியம்.. அதனால் இப்படி ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தது என்னை மன்னித்துவிடுங்கள். இப்படிக்கு அன்பரசி” என்று கையெழுத்தைப் போட்டிருந்தாள்
அதை படித்த ராம்குமார், “பார்த்தியா வாசு! அம்முக்கு நாம் யாரும் வேண்டாமாம்.. அவன் மட்டும் போதுமாம். இதற்குத்தான் இவளை இவ்வளவு கஷ்டம் பட்டு நான் வளர்த்தேனா..?” என்று மனமுடைந்து அமந்தவரைப் பார்த்து கண்ணீர் வடித்தாள் வசந்தி
“பாவம் சின்னப்பெண் தெரியாமல் அப்படி பண்ணிவிட்டாள்..” என்று வசந்தி கூற, “யாரும்மா உன்னோட மகளா..?” என்று வசந்தியைக் கிண்டல் பண்ணிய ராம்குமார், “அவள் பிடித்ததைத்தான் நாம் செய்வோம் என்று அவளுக்கு புரியவில்லையே வாசு.. ஆனால் எங்கிருந்தாலும் நல்ல இருந்தால் என்றால் மட்டும் போதும்..” என்று மனதைத் தேற்றிக்கொண்டு சென்றார்..
அந்த வீட்டில் அவர்களால் இருக்கவே முடியவில்லை என்று திருப்பூரில் பழைய பஸ் நிலையம் அருகில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு அங்கே சென்றுவிட்டனர்..
அந்த நேரத்தில் கருவுற்றார் வசந்தி.. அங்கே மும்பையிலும் அன்பரசியும் கருவுற்று இருந்தாள்.. அவள் அண்ணா அண்ணி இருவரின் தகவலையும் ராமநாதன் மூலமாக அறிந்துக் கொள்வாள்.. இவ்வாறு ஒன்பது மாதங்கள் கடந்தது..
அந்த நேரத்தில் தேவகி, சிவானந்தம் அவர்களின் மாமன் மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அவரும் அங்குதான் இருந்தார்..
“அன்பு நம்ம தேவகிக்கு திருமணமாம்.. பத்திரிக்கைக் கொடுக்க மாமா, அத்தை, தேவகி மூவரும் நேரில் வராங்களாம்..” என்று ரொம்ப சந்தோசமாக சொன்னார் சிவானந்தம்
“அப்படிங்களா ரொம்ப சந்தோசம்! தேவகிக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்க நிமிடத்தில் செய்துவிடுகிறேன்..” என்று துள்ளலுடன் சொன்ன அன்பரசியைத் திரும்பிப் பார்த்தார் சிவானந்தம்
பெரிய வயிறுடன் நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடந்து வந்த மனைவியைப் பார்த்து சிரித்தவர், “அன்பு இந்த வயிற்றை வைத்துக் கொண்டு நிமிடத்தில் சாப்பாடு செய்துவிடுவாய்..” என்று அவளை கேலி செய்தவர் முகத்தில் காதல் மட்டுமே இருந்தது!
“என்னையும் என்னுடைய மகனையும் பார்த்து உங்களுக்கு பொறாமை..” என்று சொல்ல, “ஆமாம் பிறக்காதது முன்னமே மகன் என்று முடிவு செய்து முகிலன் என்று பெயர் வைத்து அன்பு நீ செய்யும் சேட்டை நாளுக்கு நாள் உன்னுடைய வயிறு போலவே வளர்ந்துக்கொண்டே போகிறது..” என்று கேலிசெய்ய,
“சிவா நீ என்ன ரொம்ப கிண்டல் பண்ற, இரு இரு இதற்கு எல்லாம் இருக்கு உனக்கு..” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் அன்பரசி.. அது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான்..
“என்னடி செல்லம் சொல்வதை சரியாக சொல்லிட்டு போம்மா..” என்று அன்பரசியின் பின்னே அவள் நடப்பது போல நடந்து செல்ல, அதை கவனித்த அன்பரசி, முகம் முழுக்க சிரிப்புடன்
“கிண்டல் கிண்டல் பண்ணிடே இருக்கீங்க..” என்று அவளின் கணவனை நெஞ்சில் குத்தினாள்..
“அடியே வலிக்குதுடி செல்லம்..” என்று சொல்லி அவளிடம் இன்னும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.. அந்த நேரத்தில் சிவானந்தத்தின் அலைபேசி அடிக்க, அதில் சொல்லப்பட்ட செய்தி அவரின் தலையில் இடியாக இறங்கியது
அவரின் முகத்தைப் பார்த்து, “என்னங்க விஷயம் யாருக்கு என்ன ஆச்சு..?” என்று பதட்டமாகக் கேட்டாள் அன்பரசி
“அன்பு நீ இங்கேயே இரும்மா.. நான்.. நான்.. போய் என்ன என்று பார்த்து வருகிறேன்..” என்று விஷயத்தை சொல்லாமல் திக்கி, திக்கி சொன்ன கணவனின் சட்டையைப் பிடித்தவள்
“யாருக்கு என்ன நடந்தது..? எனக்கு இப்ப தெரிந்தே ஆகணும்..” என்று சொல்ல,
“மாமா வந்த கார் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது அன்பு..” என்று கதறினார் சிவானந்தம்
“யாருக்கும் எதுவும் ஆகலையே..?” என்று மட்டும் கேட்டாள் அன்பரசி.. அவளின் குரலில் மெல்லிய பயம் தெரிந்தது..
“தெரியலம்மா.. நான் போகவேண்டும்..” என்று சொல்ல, “இல்ல நானும் வருவேன்..” என்று சொல்லி அவருடன் கிளம்பினாள் அன்பரசி..
தன்னுடைய மகளுக்கு திருமணம் என்று பத்திரிகை கொடுக்க குடும்பத்துடன் வரும் வழியில் பெரிய விபத்தில் தேவகியின் அப்பா அம்மா இருவரும் இறந்துவிட்ட செய்தி கிடைத்து சிவானந்தமும்- அன்பரசியும் அங்கே சென்றனர்..
விபத்து நடந்த இடத்தில் இருவரும் இறந்துவிட, தேவகி மட்டும் உயிருடன் இருந்தாள்..
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்த சிவானந்தம், அவர்களின் பெயர் சொல்லி விபரம் கேட்க, “அவர்கள் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள், அந்தப்பெண் மட்டும் அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்..” என்று சொல்ல மாமா அத்தைக்கு இறுதி சடங்கை செய்தார் சிவானந்தம்
அன்பரசி தேவகியைப் பார்த்துக் கொள்ள, டாக்டர்கள் போராடி தேவகியின் உயிரை மீட்டெடுத்தனர்.. அவளின் திருமணம் நின்றுவிட்டது.. இது எதுவும் தெரியாமல் மூன்று நாள் சென்று கண்விழித்த தேவகிடம் உண்மை சொல்ல பட கதறி அழுதாள் தேவகி..
அவளின் அழுவதைப் பார்த்து, “அக்கா நான் இருக்கேன்.. மாமா இருக்காங்க.. நாங்க உன்னை பார்த்துக் கொள்கிறோம்..” என்று பாசமாகக் கூற அதுவரை நிற்காத கண்ணீர் அன்பரசியின் பாசம் கண்டு நின்றது..
தேவகியும் அன்பரசியைப் போல ஒரு சின்ன குழந்தை.. அவளுக்கு உலகம் அவளின் அப்பா அம்மா இருவரும் மட்டுமே!
அதன்பிறகு அவளை மெல்ல மெல்ல தேற்ற, அவளைப் பற்றிய ரிப்போர்ட் வாங்க சென்ற பொழுது கணவன் மனைவி இருவருக்கும் இன்னும் ஒரு இடி காத்திருந்தது..
அவர்கள் இருவரையும் வரவேற்ற டாக்டர், “வாங்க சிவானந்தம்” என்று அழைத்து அமரச்செய்து, “தேவகி இஸ் ஆல்ரைட்.. ஆனால் அவளுக்கு ஏற்பட்ட விபத்தில்..” என்று சொல்ல அன்பரசி நுணுக்கமாக கவனித்து, “என்ன டாக்டர் பிரச்சனை..?” என்று கேட்டாள்
“அவளுக்கு விபத்தில் ஏற்பட்ட அடியால் கற்பப்பை சிதைந்துபோனது.. எனவே அவரின் கற்பப்பையை நீக்கிவிட்டும் மற்றபடி அந்த பெண்ணிற்கு ஒன்று இல்லை..” என்று சொல்லி முடிக்க,
அது சிவானந்தம் பெரிய இடியாக கருத, இதுதான் விதியின் விளையாட்டு போல என்று நினைத்தாள் அன்பரசி..
அதன்பிறகு தேவகியை வீட்டிற்கு அழைத்து வர, அவர்களின் மூலம் விஷயம் அறிந்த தேவகி, “அது இருந்து மட்டும் எனக்கு என்ன திருமண நடக்க போகிறது.. ராசி இல்லாதவள் என்று ஒதுக்கத்தானே போகிறார்கள் அதற்கு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை..” என்று அவர்களைத் தேற்றுவது போல தன்னையும் தேற்றிக் கொண்டாள் தேவகி
ஆனால் அன்பரசி அவளின் மனதை சரியாக கணித்தாள்.. இது நடந்து ஒரு மாதத்தில் வசந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அதே வாரத்தில் இங்கே அன்பரசிக்கும் ஆண்குழந்தை பிறந்தது..
ஏற்கனவே விபத்தில் இருந்து மீண்டு வந்த தேவகிக்கு இந்த செய்தி மிகவும் இனிமையாக இருந்தது.. குழந்தை பிறந்து குழந்தையை கையில் வாங்கியது தேவகிதான்
அதன் பிறகு கண்விழித்த அன்பரசி, தேவகியைப் பார்த்து, “என்னடா உன்னோட மகன் என்ன சொல்கிறான்..?” என்று ஒரு குழந்தையிடம் இன்னொரு குழந்தையைப் பற்றிக் கேட்டாள்
“முகிலன் தானே என்னை ரொம்ப பிடித்திருக்கிறதாம்..” என்று சொல்ல, அவளின் குரலில் வழிந்த குதுகலம் பார்த்து, “உன்னோட மகனுக்கு உன்னை பிடிக்காமல் போகுமா..?” என்று அன்பரசி சிரிப்புடன் சொல்ல
“அக்கா நான் விளையாட்டிற்கு தான் சொன்னேன் இவன் உங்கள் குழந்தை..” என்று கள்ளம் கபடம் இல்லாமல் பதில் சொன்னாள் தேவகி..
வெளியே இருந்த கணவனை கண்களால் அருகில் அழைத்தாள் அன்பரசி அவரும் அவளின் அருகில் வர, “குழந்தையை கையில் வாங்குங்க..” என்று சொல்ல தேவகியின் கையில் இருந்த குழந்தையை வாங்கினார் சிவானந்தம்
சென்னையில் வடபழனி கோவிலில் சிவானந்தத்தை திருமணம் செய்துக்கொண்டாள் அன்பரசி.. இந்த விஷயம் யாருக்குமே தெரியாது.. முதலில் இதைக் கண்டுபிடித்தவர் ராமநாதன்..
அவர் அன்பரசியிடம் சென்று, “என்னம்மா இப்படி பண்ணிட்ட..? இது ராம்குமாருக்குத் தெரிந்தால் அவன் உன்னை ஒன்னும் செய்ய மாட்டான் ஆனால் அவன் உயிருடன் இருக்க மாட்டான் அது உனக்கு தெரியாதா..?” என்று பொறுமையாகக் கேட்டார்
அவரை வரவேற்று உபசரித்த அன்பரசி, “அண்ணா எனக்கும் இந்த உண்மை தெரியும்.. ஆனால் உங்களுக்கு இன்னொரு உண்மை தெரியுமா..?” என்று அவருக்கே புதிர் போட்டாள்
“என்னம்மா உண்மை..?” என்று ராமநாதன் கேட்க, “அண்ணா அந்த முடிவை எடுக்க கூடாது என்பதற்காக தான் நான் அவருக்கு முதலில் திருமணம் செய்து வைத்தேன்.. அதற்கு முன்னாடி இருந்தே இவரை நான் விரும்பினேன்.. இவருக்கும் என்னைப் போல அப்பா அம்மா இருவரும் கிடையாது..” என்று சொன்னவள் கணவனின் தோளில் சாய்ந்துக் கொண்டு,
“நான் இவரை முதலில் பார்த்தது உங்களின் அலுவலகத்தில் தான் அண்ணா.. அதன்பிறகு இவரை நான் காதலிக்க ஆரமித்தது என்னுடைய தோழி ஜோதியின் வீட்டிற்கு சென்று வரும் பொழுதுகளில் இவரை நான் காதலிக்க ஆரமித்தேன்.. முதலில் அண்ணாவிற்கு திருமணம் செய்துவிட்டால், அண்ணா இதில் அதிகம் பாதிக்க படமாட்டான் என்று தான் அண்ணாவிற்கு திருமணம் செய்துவைக்க அந்த போராட்டம் பண்ணினேன்..” என்று நிறுத்தியவள் கண்கள் கலங்க,
“அண்ணி எனக்கு அம்மா அண்ணா.. எனக்காக குழந்தை பிறப்பதைக் கூட தள்ளிப்போட சொல்லிட்டாங்க.. அதுதான் எனக்கு குற்ற உணர்ச்சியாக இருந்தது.. ஒரு பெண்ணை பெண்ணாக உணரவைப்பதே தாய்மைதான்.. ஆனால் அதுவே வேண்டாம் என்று முடிவெடுத்தது எனக்கு அப்புறம் தான் தெரியும் அதற்குள் இவருக்கும் சென்னையில் ஆடிட்டர் வேலை கிடைக்க, நானும் இங்கே வேலை செய்வதாக சொல்லிவிட்டு வந்து இவரை திருமணம் திருமணம் செய்துக் கொண்டேன்..” என்று நடந்தது அனைத்தும் சொல்லி முடித்தாள் அன்பரசி..
அவள் சொல்லிய அனைத்தையும் அமைதியாகக் கேட்ட ராமநாதன், “உங்களை வளர்த்தவர் உன்னுடைய மாமா தானே..?” என்று மட்டும் சிவானந்தத்திடம் கேட்டார்
“ம்ம் ஆமாங்க.. அவரின் பெண் தேவகியை என்னை திருமணம் செய்ய சொன்னார்.. ஆனால் எனக்கு அதற்கு விருப்பம் இல்லை தேவகிடம் நான் அன்பரசியை விரும்புதாக உண்மையை சொன்னேன்.. அவளும் இந்த திருமணத்திற்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொள்ள நான் அன்பரசியைத் திருமணம் செய்தேன்..” என்று சொன்னார் சிவானந்தம் அவரின் கண்களில் போய் இல்லை என்பதை அனுபவம் மூலம் அறிந்துக் கொண்ட ராமநாதன்,
“அந்த பெண்ணிருக்கு திருமணம் முடிந்துவிட்டதா..?” என்று கேட்க, “மாமா என்மேல் உள்ள கோபத்தில் ஒரு பயனைப் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துவிட்டார்.. ஆனால் அவளுக்கு இதில் விருப்பம் இல்லை ஒருவருடம் சென்று திருமணம் செய்வதாக சொல்லிவிட்டாள்..” என்று சொல்ல,
“அந்தப்பெண் எங்களின் பெண்ணோட வாழ்க்கையில் விளையாட கூடாது.. அப்படி மட்டும் நடந்தது..?” என்று சிவானந்தத்தை கோபத்துடன் சொல்ல,
“என்ன அண்ணா செய்வீங்க..? சும்மா அவரை மிரட்டாமல் இருங்க அண்ணா..” என்று கணவனுக்கு அண்ணனிடம் பேச, அவர் மெல்ல புன்னகைத்தார்..
“சரிம்மா உன்னோட சந்தோசம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்..” என்று சொன்னவருக்கு, “அண்ணா அண்ணி இருவரிடம் அவள் திருமணம் செய்து மும்பையில் இருக்கிறாள் என்று மட்டும் சொல்லுங்க..” என்று சொல்ல, அவர் புரியாமல் பார்த்தார்..
“நாங்க மும்பை செல்ல போகிறோம் அண்ணா..” என்று காரணத்தைக் கூறிய அன்பரசியை பார்த்து, சிவானந்தம் பக்கம் திரும்பிய ராமநாதன், “எங்களுடைய செல்லம்! அவள் அவளை நல்ல பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று மட்டும் சொல்ல
“அன்பரசி என்னுடைய பொறுப்பு சார்..” என்று சொல்ல, “நான் உங்களுக்கு மச்சான் முறை..” என்று சொன்னவர், “அன்பு மும்பை சென்றது போன் பண்ணும்மா.. என்ன நடந்தாலும் என்னிடம் ஒரு வார்த்தை சொல்லு.. என்னிடம் சொல்லிவிட்டுதான் எந்த விதமான முடிவையும் எடுக்க வேண்டும்..” என்று சொல்லிவிட்டு சென்றார்..
இவர்கள் இருவரும் மும்பை செல்ல, திருப்பூர் வந்த ராமநாதன், ராம்குமாரிடமும், வசந்தியிடமும் உண்மையைச் சொல்ல, அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர்..
ஆனால் அவள் அனுப்பிய கடிதம் அவர்களை நம்ப வைத்தது.. அந்த கடிதத்தில், “அண்ணா என்னை மன்னித்துவிடு! நான் சிவானந்தம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டேன்.. இந்த செய்தி உங்கள் இருவருக்கு இடியாக இருக்கலாம்.. ஆனால் எனக்கு வேற வழித் தெரியவில்லை.. எனக்கு நீங்கள் யாரும் வேண்டாம்.. உங்களின் சொத்துகளும் வேண்டாம்.. உங்களின் மனதில் நான் மட்டும் இருப்பேன் என்று தெரியும்.. ஆனால் எனக்கு இவரும் முக்கியம்.. அதனால் இப்படி ஒரு காரியத்தை செய்ய நேர்ந்தது என்னை மன்னித்துவிடுங்கள். இப்படிக்கு அன்பரசி” என்று கையெழுத்தைப் போட்டிருந்தாள்
அதை படித்த ராம்குமார், “பார்த்தியா வாசு! அம்முக்கு நாம் யாரும் வேண்டாமாம்.. அவன் மட்டும் போதுமாம். இதற்குத்தான் இவளை இவ்வளவு கஷ்டம் பட்டு நான் வளர்த்தேனா..?” என்று மனமுடைந்து அமந்தவரைப் பார்த்து கண்ணீர் வடித்தாள் வசந்தி
“பாவம் சின்னப்பெண் தெரியாமல் அப்படி பண்ணிவிட்டாள்..” என்று வசந்தி கூற, “யாரும்மா உன்னோட மகளா..?” என்று வசந்தியைக் கிண்டல் பண்ணிய ராம்குமார், “அவள் பிடித்ததைத்தான் நாம் செய்வோம் என்று அவளுக்கு புரியவில்லையே வாசு.. ஆனால் எங்கிருந்தாலும் நல்ல இருந்தால் என்றால் மட்டும் போதும்..” என்று மனதைத் தேற்றிக்கொண்டு சென்றார்..
அந்த வீட்டில் அவர்களால் இருக்கவே முடியவில்லை என்று திருப்பூரில் பழைய பஸ் நிலையம் அருகில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு அங்கே சென்றுவிட்டனர்..
அந்த நேரத்தில் கருவுற்றார் வசந்தி.. அங்கே மும்பையிலும் அன்பரசியும் கருவுற்று இருந்தாள்.. அவள் அண்ணா அண்ணி இருவரின் தகவலையும் ராமநாதன் மூலமாக அறிந்துக் கொள்வாள்.. இவ்வாறு ஒன்பது மாதங்கள் கடந்தது..
அந்த நேரத்தில் தேவகி, சிவானந்தம் அவர்களின் மாமன் மகளுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அவரும் அங்குதான் இருந்தார்..
“அன்பு நம்ம தேவகிக்கு திருமணமாம்.. பத்திரிக்கைக் கொடுக்க மாமா, அத்தை, தேவகி மூவரும் நேரில் வராங்களாம்..” என்று ரொம்ப சந்தோசமாக சொன்னார் சிவானந்தம்
“அப்படிங்களா ரொம்ப சந்தோசம்! தேவகிக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லுங்க நிமிடத்தில் செய்துவிடுகிறேன்..” என்று துள்ளலுடன் சொன்ன அன்பரசியைத் திரும்பிப் பார்த்தார் சிவானந்தம்
பெரிய வயிறுடன் நடக்க முடியாமல் மெல்ல மெல்ல நடந்து வந்த மனைவியைப் பார்த்து சிரித்தவர், “அன்பு இந்த வயிற்றை வைத்துக் கொண்டு நிமிடத்தில் சாப்பாடு செய்துவிடுவாய்..” என்று அவளை கேலி செய்தவர் முகத்தில் காதல் மட்டுமே இருந்தது!
“என்னையும் என்னுடைய மகனையும் பார்த்து உங்களுக்கு பொறாமை..” என்று சொல்ல, “ஆமாம் பிறக்காதது முன்னமே மகன் என்று முடிவு செய்து முகிலன் என்று பெயர் வைத்து அன்பு நீ செய்யும் சேட்டை நாளுக்கு நாள் உன்னுடைய வயிறு போலவே வளர்ந்துக்கொண்டே போகிறது..” என்று கேலிசெய்ய,
“சிவா நீ என்ன ரொம்ப கிண்டல் பண்ற, இரு இரு இதற்கு எல்லாம் இருக்கு உனக்கு..” என்று சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் சென்றாள் அன்பரசி.. அது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான்..
“என்னடி செல்லம் சொல்வதை சரியாக சொல்லிட்டு போம்மா..” என்று அன்பரசியின் பின்னே அவள் நடப்பது போல நடந்து செல்ல, அதை கவனித்த அன்பரசி, முகம் முழுக்க சிரிப்புடன்
“கிண்டல் கிண்டல் பண்ணிடே இருக்கீங்க..” என்று அவளின் கணவனை நெஞ்சில் குத்தினாள்..
“அடியே வலிக்குதுடி செல்லம்..” என்று சொல்லி அவளிடம் இன்னும் வாங்கிக் கட்டிக் கொண்டார்.. அந்த நேரத்தில் சிவானந்தத்தின் அலைபேசி அடிக்க, அதில் சொல்லப்பட்ட செய்தி அவரின் தலையில் இடியாக இறங்கியது
அவரின் முகத்தைப் பார்த்து, “என்னங்க விஷயம் யாருக்கு என்ன ஆச்சு..?” என்று பதட்டமாகக் கேட்டாள் அன்பரசி
“அன்பு நீ இங்கேயே இரும்மா.. நான்.. நான்.. போய் என்ன என்று பார்த்து வருகிறேன்..” என்று விஷயத்தை சொல்லாமல் திக்கி, திக்கி சொன்ன கணவனின் சட்டையைப் பிடித்தவள்
“யாருக்கு என்ன நடந்தது..? எனக்கு இப்ப தெரிந்தே ஆகணும்..” என்று சொல்ல,
“மாமா வந்த கார் ஆக்சிடெண்ட் ஆகிவிட்டது அன்பு..” என்று கதறினார் சிவானந்தம்
“யாருக்கும் எதுவும் ஆகலையே..?” என்று மட்டும் கேட்டாள் அன்பரசி.. அவளின் குரலில் மெல்லிய பயம் தெரிந்தது..
“தெரியலம்மா.. நான் போகவேண்டும்..” என்று சொல்ல, “இல்ல நானும் வருவேன்..” என்று சொல்லி அவருடன் கிளம்பினாள் அன்பரசி..
தன்னுடைய மகளுக்கு திருமணம் என்று பத்திரிகை கொடுக்க குடும்பத்துடன் வரும் வழியில் பெரிய விபத்தில் தேவகியின் அப்பா அம்மா இருவரும் இறந்துவிட்ட செய்தி கிடைத்து சிவானந்தமும்- அன்பரசியும் அங்கே சென்றனர்..
விபத்து நடந்த இடத்தில் இருவரும் இறந்துவிட, தேவகி மட்டும் உயிருடன் இருந்தாள்..
வேகமாக மருத்துவமனைக்குள் நுழைந்த சிவானந்தம், அவர்களின் பெயர் சொல்லி விபரம் கேட்க, “அவர்கள் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார்கள், அந்தப்பெண் மட்டும் அங்கே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறாள்..” என்று சொல்ல மாமா அத்தைக்கு இறுதி சடங்கை செய்தார் சிவானந்தம்
அன்பரசி தேவகியைப் பார்த்துக் கொள்ள, டாக்டர்கள் போராடி தேவகியின் உயிரை மீட்டெடுத்தனர்.. அவளின் திருமணம் நின்றுவிட்டது.. இது எதுவும் தெரியாமல் மூன்று நாள் சென்று கண்விழித்த தேவகிடம் உண்மை சொல்ல பட கதறி அழுதாள் தேவகி..
அவளின் அழுவதைப் பார்த்து, “அக்கா நான் இருக்கேன்.. மாமா இருக்காங்க.. நாங்க உன்னை பார்த்துக் கொள்கிறோம்..” என்று பாசமாகக் கூற அதுவரை நிற்காத கண்ணீர் அன்பரசியின் பாசம் கண்டு நின்றது..
தேவகியும் அன்பரசியைப் போல ஒரு சின்ன குழந்தை.. அவளுக்கு உலகம் அவளின் அப்பா அம்மா இருவரும் மட்டுமே!
அதன்பிறகு அவளை மெல்ல மெல்ல தேற்ற, அவளைப் பற்றிய ரிப்போர்ட் வாங்க சென்ற பொழுது கணவன் மனைவி இருவருக்கும் இன்னும் ஒரு இடி காத்திருந்தது..
அவர்கள் இருவரையும் வரவேற்ற டாக்டர், “வாங்க சிவானந்தம்” என்று அழைத்து அமரச்செய்து, “தேவகி இஸ் ஆல்ரைட்.. ஆனால் அவளுக்கு ஏற்பட்ட விபத்தில்..” என்று சொல்ல அன்பரசி நுணுக்கமாக கவனித்து, “என்ன டாக்டர் பிரச்சனை..?” என்று கேட்டாள்
“அவளுக்கு விபத்தில் ஏற்பட்ட அடியால் கற்பப்பை சிதைந்துபோனது.. எனவே அவரின் கற்பப்பையை நீக்கிவிட்டும் மற்றபடி அந்த பெண்ணிற்கு ஒன்று இல்லை..” என்று சொல்லி முடிக்க,
அது சிவானந்தம் பெரிய இடியாக கருத, இதுதான் விதியின் விளையாட்டு போல என்று நினைத்தாள் அன்பரசி..
அதன்பிறகு தேவகியை வீட்டிற்கு அழைத்து வர, அவர்களின் மூலம் விஷயம் அறிந்த தேவகி, “அது இருந்து மட்டும் எனக்கு என்ன திருமண நடக்க போகிறது.. ராசி இல்லாதவள் என்று ஒதுக்கத்தானே போகிறார்கள் அதற்கு இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை..” என்று அவர்களைத் தேற்றுவது போல தன்னையும் தேற்றிக் கொண்டாள் தேவகி
ஆனால் அன்பரசி அவளின் மனதை சரியாக கணித்தாள்.. இது நடந்து ஒரு மாதத்தில் வசந்திக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அதே வாரத்தில் இங்கே அன்பரசிக்கும் ஆண்குழந்தை பிறந்தது..
ஏற்கனவே விபத்தில் இருந்து மீண்டு வந்த தேவகிக்கு இந்த செய்தி மிகவும் இனிமையாக இருந்தது.. குழந்தை பிறந்து குழந்தையை கையில் வாங்கியது தேவகிதான்
அதன் பிறகு கண்விழித்த அன்பரசி, தேவகியைப் பார்த்து, “என்னடா உன்னோட மகன் என்ன சொல்கிறான்..?” என்று ஒரு குழந்தையிடம் இன்னொரு குழந்தையைப் பற்றிக் கேட்டாள்
“முகிலன் தானே என்னை ரொம்ப பிடித்திருக்கிறதாம்..” என்று சொல்ல, அவளின் குரலில் வழிந்த குதுகலம் பார்த்து, “உன்னோட மகனுக்கு உன்னை பிடிக்காமல் போகுமா..?” என்று அன்பரசி சிரிப்புடன் சொல்ல
“அக்கா நான் விளையாட்டிற்கு தான் சொன்னேன் இவன் உங்கள் குழந்தை..” என்று கள்ளம் கபடம் இல்லாமல் பதில் சொன்னாள் தேவகி..
வெளியே இருந்த கணவனை கண்களால் அருகில் அழைத்தாள் அன்பரசி அவரும் அவளின் அருகில் வர, “குழந்தையை கையில் வாங்குங்க..” என்று சொல்ல தேவகியின் கையில் இருந்த குழந்தையை வாங்கினார் சிவானந்தம்