அத்தியாயம் – 32
வானம் விடியலை நோக்கி பயணிக்க, நாளைய விடியல் எப்படி இருக்கும் என்ற யோசனையில் இருந்தாள் கவிமலர்..! மறுநாள் காலை நன்றாக விடிய, அந்த விடியலின் புதிரை அறிந்துக்கொள்ள ஆவலே இல்லாமல் இருந்தாள்
மறுநாள் காலை அவளைப் பார்க்க வந்தனர் ராம்குமார் மற்றும் வசந்தி..! வாசலில் நிழலாட யார் என்று நிமிர்ந்து பார்த்த கவிமலர்,
“அம்மா யாரோ வந்திருக்காங்க.. உள்ளே வாங்க ஆண்ட்டி உள்ளே வாங்க அங்கிள்” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தவள் செய்தித்தாளைப் படிக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த தேவகி,
சோபாவில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, “அண்ணா – அண்ணி..!” என்று வந்தவர்களை வரவேற்கவும், கவிமலர் எழுந்து அவளின் அறைக்குள் சென்று மறந்தாள்..
அவள் சென்றதும் தேவகி அவர்களைப் பார்த்து சங்கடமாக சிரிக்க, “அவள் மனது அவளுக்கு தெரியும் தேவகி.. குழந்தைக்கு மருந்து கசக்கும் என்று நாம் அவர்களுக்கு மருந்து கொடுக்காமல் விடுவோமா..?” என்று கேட்டவர் வசந்தியைப் பார்த்தார்..
அவர் எழுந்து கவியின் அறைக்குள் செல்ல, அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்தான் முகிலன்..
“வாங்க மாமா..” என்று அழைத்தவன் பின்னோடு வீட்டிற்குள் வந்தாள் நிலா..
“வாம்மா எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டதும், “ம்ம் நல்ல இருக்கிறேன்..” என்று பதில் சொன்னாள் நிலா..
கவிமலரை ஹாலில் தேடியவள் அவளைக் காணாது அவளின் அறைக்குள் சென்றாள்.. அவளுக்கு உடல்நிலை தேறும் வரையில் கவிமலர் அவளின் வீட்டிலேயே இருந்தாள்..
தேவகி வந்தவர்களுக்கு காபி போட சமையல் அறைக்குள் செல்ல, அறைக்குள் சென்ற வசந்தி, அவளை படுக்கையில் தேட அவளோ ஜன்னல் அருகில் நின்று வெளியே இருந்த சிட்டுக்குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்
தனக்கு பின்னே நிழலாடுவது கண்டு திரும்பியவள், வசந்தியைப் பார்த்துக் கொண்டே நிற்க, அவளின் அருகில் வந்த வசந்தி அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அம்மு..” என்று அவளைக் கட்டியணைத்தாள்..
‘அம்மு..’ என்ற அழைப்பில் வந்தவர் யார் என்று அவர் சொல்லாமலேயே அறிந்துக் கொண்டாள் கவிமலர்.. அவர்கள் அவளின் அன்னை அன்பரசியை சொல்கின்றார் என்று!
அன்னையை நினைத்தவள், அவளை கட்டியணைத்து கண்ணீர் விட்ட, அவளின் அத்தை வசந்தியை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்..
“அத்தை என்ன இது குழந்தை போல அழுகிறீங்க..?” என்று அவரை சமாதானம் செய்ய அவளிடம் இருந்து விலகிய வசந்தி கவிமலரின் கன்னத்தில் முத்தம் இட்டாள்..
“எத்தனை வருடம் தேடிய தேடல் இப்பொழுதுதான் நிறைவிற்கு வந்திருக்கிறது..” என்று சொன்னவர், “என்னோட அம்மு மாதிரியே இருக்க கண்ணம்மா..” என்று சொன்னவரைப் பார்த்து புன்னகைத்தாள் கவிமலர்..
“அத்தை அம்மா..?!” என்று கேட்டாள் கவிமலர்.. “தேவகி உன்னோட மாமா கிட்ட பேசிட்டு இருக்காங்க செல்லம்..” என்று சொன்னவர்,
“அம்முவை அப்படியே உரித்து வைத்திருகிறாய் செல்லம்..” என்று சொல்ல உள்ளே வந்தாள் நிலா..
“அம்மா நீங்க வெளியே இருங்க.. நான் அவளை அலங்காரம் பண்ணி அழைத்து வருகிறேன்..” என்று சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் தீப்பொறி பறந்தது..
“என்னோட மருமகள் அலங்காரம் செய்து நீ எனக்கு காட்ட வேண்டாம் நிலா.. என்னோட மருமகளை நான் இப்படியே எங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்..” என்று கவியின் கையைப் பிடித்தார் வசந்தி..
அப்பொழுதுதான் அவளுக்கு அங்கே நடப்பது புரிந்தது.. ‘இவர்கள் என்னை பொண்ணு பார்க்க வந்திருக்கிறார்களா..?’ என்று மனதில் நினைத்தவள் நிமிர்ந்து நிலாவைப் பார்க்க அவள்,
“என்னம்மா எங்கள் வீட்டுப்பெண் மட்டும் போதும் என்று சொன்னால் நாங்கள் அவளை அனுப்பி வைப்போமா..?! அவள் இந்த வீட்டின் இளவரசி.. அவளை நீங்களே அழைத்து செல்கிறேன் என்றாலும் அவளின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது..” என்று வசந்தியிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தாள் நிலா..
“உங்கள் வீட்டு இளவரசியா..? இவள் எங்கள் வீட்டின் மகராணி.. என்னோட மகனுக்கு என்றே பிறந்தவள்.. அவளே விருப்பம் இல்லை என்றாலும் என்னோட மகன் அவளை கடத்தி சென்று விடுவான்..” என்று சொல்ல,
அதை கேட்டுக் கொண்டிருந்தவள் மனம் தான் வலித்தது.. உறவுகள் உடைய கூடாது என்று காதலை மறைத்தவள், இப்பொழுது இன்னொருவனுக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர் என்று நினைத்தால் மனம் இன்னும் வலித்தது..
“சரிம்மா உங்கள் மருமகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என்று சொன்னவள், அறையை விட்டு வெளியே செல்ல, அங்கே மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தான் முகிலன்..
“மாமா இப்பொழுதுதான் அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியாக இருக்கிறது.. இன்று நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ளலாம்.. அடுத்த வாரம் நல்ல முகூர்த்தம் இருக்கிறது அன்று திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்..” என்று வீட்டிற்கு பெரியவனாக முடிவெடுக்க, வசந்தி கவிமலரை வெளியே அழைத்து வந்தாள்..
“இல்ல முகிலன் அவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறான்.. அவன் அவன் வந்ததும் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்..” என்று சொன்னவர், கவிமலரை நிமிர்ந்து பார்த்தார்..
“என்னம்மா இப்பொழுது உடம்பிற்கு நன்றாக இருக்கிறதா..?” என்று கேட்டவருக்கு அமைதியாக தலையசைத்தாள்.. அவளை பார்த்து புன்னகை புரிந்தவர்,
“வசந்தி மருமகளை அழைத்து வா..” என்று சொல்லவும், அவளை அழைத்துக்கொண்டு அவரின் அருகில் சென்று அமர, அவளும் அமைதியாக இருந்தாள்..
“சரிங்க மாமா.. எப்பொழுது மாப்பிள்ளை ஊரில் இருந்து வருகிறார்..” என்று கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘அண்ணா எனக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை..’ என்று பார்வையில் சொல்ல, அவளை கவனிக்காமல் பேச்சை தொடர்ந்தான் முகிலன்..
“அடுத்த வாரம் வியாழன் காலை வருகிறான்..” என்று சொல்லவும், அவர்களின் அருகில் நின்ற தேவகியைப் பார்த்து பார்வையால் கெஞ்சினாள் கவிமலர்.. அவரும் அவளைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க, ‘என்ன நடக்கணும் என்று தலையில் எழுதியிருக்கோ அதுதான் நடக்கும்..’ என்று நினைத்தவள், அமைதியாக இருந்தாள்..
“சரிங்க மாமா.. அடுத்த வாரம் சென்னையில் முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் திருமணம்..” என்று சொல்ல, அங்கிருந்த அனைவரின் முகமும் மலர்ந்தது..
“சரிப்பா நீ புதன் அன்று அங்கெ வந்துவிடு! நாங்கள் சென்று வேலையை கவனிக்கிறோம்..” என்று சொன்னவர், “என்னோட தங்கையின் பெண் என்னோட வீட்டிற்கு மருமகளாக வருகிறாள் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது..” என்று சொன்னவர் எழுந்து செல்ல,
“இன்னும் ஒருவாரம் உன்னை பார்க்காமல் இருக்க வேண்டுமா..?!” என்று முகம் வாடிய வண்ணம் எழுந்து சென்றார் வசந்தி.. அவரின் பின்னோடு சென்று அவர்களை வழியனுப்பிவிட்டு வரச்சென்றனர் தேவகி, முகிலன், நிலா மூவரும்!
அவர்கள் சென்றதும் அப்படியே சோபாவில் அமர்ந்தவள், ‘நான் கதிரைக் காதலித்தது யாருக்கும் தெரியாது.. அவனும் சொல்லவில்லை.. அப்புறம் எப்படி என்னோட காதல் அனைவருக்கும் தெரிந்தது..?!’ என்று குழப்பத்துடன் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தாள் கவி!
அப்பொழுது அவளின் அலைபேசி அடிக்க, அதை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தாள் கவிமலர்..
“மலர் திருமண ஏற்பாடு பலமாக நடக்குது போல..?!” என்று கேட்டான் கதிர்நிலவன், அவனின் குரல் கேட்டு அமைதியாக இருந்தாள்
“என்னடி பதிலையே வரமாட்டேன் என்கிறது..? இப்பொழுது வலிக்குதா..? எனக்கு எப்படி வலித்திருக்கும்..? நீ என்னை திருமணம் செய்ய சொன்ன பொழுது..?” என்று கேட்டான்
“அதுக்குத்தான் உண்மையைச் சொல்லி என்னோட திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறாயா கதிர்..?” என்று நிதானமாக கேட்டாள்
“கண்டுபிடித்துவிட்டாயா..?!” என்று கேட்டவன் குரலில் கேலி வழிந்தோடியது..
“நான் தாண்டி முகிலனிடம் சொன்னேன்.. உன்னோட தங்கையும் நானும் காதலித்தோம்.. அவள் என்னை திருமணம் செய்ய சொல்கிறாள்.. எங்களின் வீட்டில் எல்லா ஏற்பாடும் செய்துவிட்டனர் என்று..?!” என்று சொன்னவனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள் கவிமலர்..
“ஏய் உனக்கு என்ன பைத்தியமா..?! நீயாக உன்னோட காதலை அனைவரின் முன்னிலையிலும் என்னிடம் சொல்கின்றவரையில் நானாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..” என்று சொல்லவும்,
“என்னோட திருமண ஏற்பாட்டிற்கு நீ காரணம் இல்லையா..?!” என்று கேட்டாள் கவிமலர்..
“ஒரு மண்ணும் கிடையாது..” என்று சொன்னவன், “என்னோட திருமணத்திற்கு நீ வருகிறாய்.. என்னோட காதல் வெற்றி தான் அடையாமல் போய்விட்டது.. அது தோல்வி அடைவதையாவது கண்ணால் பார்க்கிறேன்..” என்று சொன்னவனின் குரலில் இருந்த வருத்தம் அவளின் மனதை தொட்டது..
அவளுக்கு அழுகையும் வந்தது.. ஆனால் அவள் உண்மை சொல்லாத வரையில் இருந்த நிம்மதி கூட இப்பொழுது இல்லாமல் இருந்தாள் கவிமலர்..
“நீ என்னோட திருமணத்திற்கு வரணும்.. ஓடி ஒழிய நினைத்தாய் அப்புறம் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று மிரட்டியவன் போனை வைத்தான்..
ஆகமொத்தம் அவளை யோசிக்கவிடாமல் செய்தனர் அவளின் வீட்டில் இருக்கும் அனைவரும்..!
அவன் போனை வைத்தும், ‘இவர் சொல்லவில்லை என்றால் நிஷா அவள் சொல்லியிருப்பாளா..?!’ என்றவளின் கைகள் தானாகவே நிஷாவிற்கு அழைத்தது..
“ஹாய் கவிமலர் எப்படி இருக்கிறாய்..?!” என்று துள்ளலுடன் கேட்டாள் நிஷா.. அவளிடமிருந்து பதில் இல்லாமல் போக, “என்னடா நாம் இந்த நிலையில் இருக்கும் பொழுது இவள் இப்படி கேட்கிறாள் என்று நீ ரொம்ப கடுப்பில் இருக்கிறாய் போல..?” என்று கேட்டதும்,
அவளின் பேச்சில் இருந்தே அவள் உண்மையை சொல்லவில்லை என்று கவிமலருக்கு தெரிந்துவிட, “எனக்கென்னம்மா நல்ல இருக்கிறேன்.. உன்னோட திருமண ஏற்பாடு எல்லாம் எப்படி நடக்கிறது.?” என்று கேட்டாள்
“அதுக்கு என்ன குறைச்சல் அது சூப்பராக நடக்கிறது..” என்று சொன்னவள் குரலில் சந்தோசம் பொங்கி வழிந்தது.. அப்பொழுதுதான் கவிக்கு தன்னுடைய டைரி ஞாபகம் வந்தது..
“சரி நிஷா நான் போனை வைக்கிறேன்..” என்று சொல்ல, “மறக்காமல் திருமணத்திற்கு வா கவி.. உன்னோட காதல் தோற்பதை நான் பார்க்க வேண்டும்..” என்று சொல்லவும்,
“உன்னோட திருமணத்திற்கு நான் வரமாட்டேன் நிஷா என்னை எதிர்பார்க்காதே..!” என்று சொன்னவள் போனை வைத்துவிட்டு அறைக்குள் சென்று சுடிதாரை மாற்றிவிட்டு ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று வண்டியை எடுத்தவள் சென்றுவிட்டாள்..
“ஏய் கவி..” என்று அழைத்த நிலா, “முகில் அவள் வண்டியை எடுத்துக் கொண்டு எங்கோ செல்கிறாள்..” என்று சொல்ல,
“நீ கவலைப்படாதே நிலா.. அவளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் யோசிக்க வெளியே செல்கிறாள்..” என்று சொன்னவன் வீட்டிற்குள் சென்றான்..
அவள் நேராக சென்று தனது ஆபீஸ் முன்னே வண்டியை நிறுத்துவிட்டு, அவளின் கேபினுக்கு சென்று ‘அவளின் டைரியை வைத்த இடத்தில் இருக்கிறதா..?!’ என்று பார்க்க அதுவும் அங்கே இருந்தது..
அதை அங்கே வைத்திருப்பது ரவிவர்மா தவிர மற்ற யாருக்கும் தெரியாது.. அப்படி இருக்க என்னோட கடந்த காலம் எல்லாம் எப்படி அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது..? என்று யோசிக்க அவரின் அறையில் இருந்து வெளியே வந்த ரவிவர்மா,
“என்னம்மா கவிமலர் ஆபீஸ் வருவதே இல்லை.. எனக்கும் திருமண வேலைகள் அதிகம் இருக்கிறது.. நீ வந்தால் எனக்கும் கொஞ்சம் வசதியாக இருக்கும்..” என்று சொல்ல,
“எனக்கும் எங்களின் வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறது சார்..” என்று சொல்லவும் அவரின் முகம் மலர்ந்தது..
“என்னம்மா சுந்தர் மாப்பிள்ளை பார்க்கிறானா..?!” என்று கேட்டதும் அவளின் முகம் நிமிர்ந்து இல்லை என்று தலையசைத்து, “என்னோட அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்..” என்று கூறினாள்..
“எனக்கு புரியவில்லை..” என்று பொய்யாக நடித்தார் ரவிவர்மா..
வானம் விடியலை நோக்கி பயணிக்க, நாளைய விடியல் எப்படி இருக்கும் என்ற யோசனையில் இருந்தாள் கவிமலர்..! மறுநாள் காலை நன்றாக விடிய, அந்த விடியலின் புதிரை அறிந்துக்கொள்ள ஆவலே இல்லாமல் இருந்தாள்
மறுநாள் காலை அவளைப் பார்க்க வந்தனர் ராம்குமார் மற்றும் வசந்தி..! வாசலில் நிழலாட யார் என்று நிமிர்ந்து பார்த்த கவிமலர்,
“அம்மா யாரோ வந்திருக்காங்க.. உள்ளே வாங்க ஆண்ட்டி உள்ளே வாங்க அங்கிள்” என்று வீட்டிற்குள் குரல் கொடுத்தவள் செய்தித்தாளைப் படிக்க, சமையல் அறையில் இருந்து வெளியே வந்த தேவகி,
சோபாவில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து, “அண்ணா – அண்ணி..!” என்று வந்தவர்களை வரவேற்கவும், கவிமலர் எழுந்து அவளின் அறைக்குள் சென்று மறந்தாள்..
அவள் சென்றதும் தேவகி அவர்களைப் பார்த்து சங்கடமாக சிரிக்க, “அவள் மனது அவளுக்கு தெரியும் தேவகி.. குழந்தைக்கு மருந்து கசக்கும் என்று நாம் அவர்களுக்கு மருந்து கொடுக்காமல் விடுவோமா..?” என்று கேட்டவர் வசந்தியைப் பார்த்தார்..
அவர் எழுந்து கவியின் அறைக்குள் செல்ல, அப்பொழுதுதான் வீட்டிற்குள் வந்தான் முகிலன்..
“வாங்க மாமா..” என்று அழைத்தவன் பின்னோடு வீட்டிற்குள் வந்தாள் நிலா..
“வாம்மா எப்படி இருக்கிறாய்..?” என்று கேட்டதும், “ம்ம் நல்ல இருக்கிறேன்..” என்று பதில் சொன்னாள் நிலா..
கவிமலரை ஹாலில் தேடியவள் அவளைக் காணாது அவளின் அறைக்குள் சென்றாள்.. அவளுக்கு உடல்நிலை தேறும் வரையில் கவிமலர் அவளின் வீட்டிலேயே இருந்தாள்..
தேவகி வந்தவர்களுக்கு காபி போட சமையல் அறைக்குள் செல்ல, அறைக்குள் சென்ற வசந்தி, அவளை படுக்கையில் தேட அவளோ ஜன்னல் அருகில் நின்று வெளியே இருந்த சிட்டுக்குருவிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்
தனக்கு பின்னே நிழலாடுவது கண்டு திரும்பியவள், வசந்தியைப் பார்த்துக் கொண்டே நிற்க, அவளின் அருகில் வந்த வசந்தி அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு, “அம்மு..” என்று அவளைக் கட்டியணைத்தாள்..
‘அம்மு..’ என்ற அழைப்பில் வந்தவர் யார் என்று அவர் சொல்லாமலேயே அறிந்துக் கொண்டாள் கவிமலர்.. அவர்கள் அவளின் அன்னை அன்பரசியை சொல்கின்றார் என்று!
அன்னையை நினைத்தவள், அவளை கட்டியணைத்து கண்ணீர் விட்ட, அவளின் அத்தை வசந்தியை ஆதரவாக அணைத்துக் கொண்டாள்..
“அத்தை என்ன இது குழந்தை போல அழுகிறீங்க..?” என்று அவரை சமாதானம் செய்ய அவளிடம் இருந்து விலகிய வசந்தி கவிமலரின் கன்னத்தில் முத்தம் இட்டாள்..
“எத்தனை வருடம் தேடிய தேடல் இப்பொழுதுதான் நிறைவிற்கு வந்திருக்கிறது..” என்று சொன்னவர், “என்னோட அம்மு மாதிரியே இருக்க கண்ணம்மா..” என்று சொன்னவரைப் பார்த்து புன்னகைத்தாள் கவிமலர்..
“அத்தை அம்மா..?!” என்று கேட்டாள் கவிமலர்.. “தேவகி உன்னோட மாமா கிட்ட பேசிட்டு இருக்காங்க செல்லம்..” என்று சொன்னவர்,
“அம்முவை அப்படியே உரித்து வைத்திருகிறாய் செல்லம்..” என்று சொல்ல உள்ளே வந்தாள் நிலா..
“அம்மா நீங்க வெளியே இருங்க.. நான் அவளை அலங்காரம் பண்ணி அழைத்து வருகிறேன்..” என்று சொல்லவும் அவளை நிமிர்ந்து பார்த்தவள் கண்ணில் தீப்பொறி பறந்தது..
“என்னோட மருமகள் அலங்காரம் செய்து நீ எனக்கு காட்ட வேண்டாம் நிலா.. என்னோட மருமகளை நான் இப்படியே எங்களின் வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்..” என்று கவியின் கையைப் பிடித்தார் வசந்தி..
அப்பொழுதுதான் அவளுக்கு அங்கே நடப்பது புரிந்தது.. ‘இவர்கள் என்னை பொண்ணு பார்க்க வந்திருக்கிறார்களா..?’ என்று மனதில் நினைத்தவள் நிமிர்ந்து நிலாவைப் பார்க்க அவள்,
“என்னம்மா எங்கள் வீட்டுப்பெண் மட்டும் போதும் என்று சொன்னால் நாங்கள் அவளை அனுப்பி வைப்போமா..?! அவள் இந்த வீட்டின் இளவரசி.. அவளை நீங்களே அழைத்து செல்கிறேன் என்றாலும் அவளின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது..” என்று வசந்தியிடம் வம்பு பேசிக்கொண்டிருந்தாள் நிலா..
“உங்கள் வீட்டு இளவரசியா..? இவள் எங்கள் வீட்டின் மகராணி.. என்னோட மகனுக்கு என்றே பிறந்தவள்.. அவளே விருப்பம் இல்லை என்றாலும் என்னோட மகன் அவளை கடத்தி சென்று விடுவான்..” என்று சொல்ல,
அதை கேட்டுக் கொண்டிருந்தவள் மனம் தான் வலித்தது.. உறவுகள் உடைய கூடாது என்று காதலை மறைத்தவள், இப்பொழுது இன்னொருவனுக்கு திருமணம் செய்ய நினைக்கின்றனர் என்று நினைத்தால் மனம் இன்னும் வலித்தது..
“சரிம்மா உங்கள் மருமகளை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்..” என்று சொன்னவள், அறையை விட்டு வெளியே செல்ல, அங்கே மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தான் முகிலன்..
“மாமா இப்பொழுதுதான் அவளுக்கு உடம்பு கொஞ்சம் சரியாக இருக்கிறது.. இன்று நிச்சயதார்த்தம் செய்துக் கொள்ளலாம்.. அடுத்த வாரம் நல்ல முகூர்த்தம் இருக்கிறது அன்று திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்..” என்று வீட்டிற்கு பெரியவனாக முடிவெடுக்க, வசந்தி கவிமலரை வெளியே அழைத்து வந்தாள்..
“இல்ல முகிலன் அவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கிறான்.. அவன் அவன் வந்ததும் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்..” என்று சொன்னவர், கவிமலரை நிமிர்ந்து பார்த்தார்..
“என்னம்மா இப்பொழுது உடம்பிற்கு நன்றாக இருக்கிறதா..?” என்று கேட்டவருக்கு அமைதியாக தலையசைத்தாள்.. அவளை பார்த்து புன்னகை புரிந்தவர்,
“வசந்தி மருமகளை அழைத்து வா..” என்று சொல்லவும், அவளை அழைத்துக்கொண்டு அவரின் அருகில் சென்று அமர, அவளும் அமைதியாக இருந்தாள்..
“சரிங்க மாமா.. எப்பொழுது மாப்பிள்ளை ஊரில் இருந்து வருகிறார்..” என்று கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தவள், ‘அண்ணா எனக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்லை..’ என்று பார்வையில் சொல்ல, அவளை கவனிக்காமல் பேச்சை தொடர்ந்தான் முகிலன்..
“அடுத்த வாரம் வியாழன் காலை வருகிறான்..” என்று சொல்லவும், அவர்களின் அருகில் நின்ற தேவகியைப் பார்த்து பார்வையால் கெஞ்சினாள் கவிமலர்.. அவரும் அவளைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்க, ‘என்ன நடக்கணும் என்று தலையில் எழுதியிருக்கோ அதுதான் நடக்கும்..’ என்று நினைத்தவள், அமைதியாக இருந்தாள்..
“சரிங்க மாமா.. அடுத்த வாரம் சென்னையில் முதல் நாள் நிச்சயதார்த்தம் மறுநாள் திருமணம்..” என்று சொல்ல, அங்கிருந்த அனைவரின் முகமும் மலர்ந்தது..
“சரிப்பா நீ புதன் அன்று அங்கெ வந்துவிடு! நாங்கள் சென்று வேலையை கவனிக்கிறோம்..” என்று சொன்னவர், “என்னோட தங்கையின் பெண் என்னோட வீட்டிற்கு மருமகளாக வருகிறாள் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது..” என்று சொன்னவர் எழுந்து செல்ல,
“இன்னும் ஒருவாரம் உன்னை பார்க்காமல் இருக்க வேண்டுமா..?!” என்று முகம் வாடிய வண்ணம் எழுந்து சென்றார் வசந்தி.. அவரின் பின்னோடு சென்று அவர்களை வழியனுப்பிவிட்டு வரச்சென்றனர் தேவகி, முகிலன், நிலா மூவரும்!
அவர்கள் சென்றதும் அப்படியே சோபாவில் அமர்ந்தவள், ‘நான் கதிரைக் காதலித்தது யாருக்கும் தெரியாது.. அவனும் சொல்லவில்லை.. அப்புறம் எப்படி என்னோட காதல் அனைவருக்கும் தெரிந்தது..?!’ என்று குழப்பத்துடன் தலையைத் தாங்கி அமர்ந்திருந்தாள் கவி!
அப்பொழுது அவளின் அலைபேசி அடிக்க, அதை எடுத்து ஆன் செய்து காதில் வைத்தாள் கவிமலர்..
“மலர் திருமண ஏற்பாடு பலமாக நடக்குது போல..?!” என்று கேட்டான் கதிர்நிலவன், அவனின் குரல் கேட்டு அமைதியாக இருந்தாள்
“என்னடி பதிலையே வரமாட்டேன் என்கிறது..? இப்பொழுது வலிக்குதா..? எனக்கு எப்படி வலித்திருக்கும்..? நீ என்னை திருமணம் செய்ய சொன்ன பொழுது..?” என்று கேட்டான்
“அதுக்குத்தான் உண்மையைச் சொல்லி என்னோட திருமணத்திற்கும் ஏற்பாடு செய்கிறாயா கதிர்..?” என்று நிதானமாக கேட்டாள்
“கண்டுபிடித்துவிட்டாயா..?!” என்று கேட்டவன் குரலில் கேலி வழிந்தோடியது..
“நான் தாண்டி முகிலனிடம் சொன்னேன்.. உன்னோட தங்கையும் நானும் காதலித்தோம்.. அவள் என்னை திருமணம் செய்ய சொல்கிறாள்.. எங்களின் வீட்டில் எல்லா ஏற்பாடும் செய்துவிட்டனர் என்று..?!” என்று சொன்னவனை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள் கவிமலர்..
“ஏய் உனக்கு என்ன பைத்தியமா..?! நீயாக உன்னோட காதலை அனைவரின் முன்னிலையிலும் என்னிடம் சொல்கின்றவரையில் நானாக யாரிடமும் சொல்ல மாட்டேன்..” என்று சொல்லவும்,
“என்னோட திருமண ஏற்பாட்டிற்கு நீ காரணம் இல்லையா..?!” என்று கேட்டாள் கவிமலர்..
“ஒரு மண்ணும் கிடையாது..” என்று சொன்னவன், “என்னோட திருமணத்திற்கு நீ வருகிறாய்.. என்னோட காதல் வெற்றி தான் அடையாமல் போய்விட்டது.. அது தோல்வி அடைவதையாவது கண்ணால் பார்க்கிறேன்..” என்று சொன்னவனின் குரலில் இருந்த வருத்தம் அவளின் மனதை தொட்டது..
அவளுக்கு அழுகையும் வந்தது.. ஆனால் அவள் உண்மை சொல்லாத வரையில் இருந்த நிம்மதி கூட இப்பொழுது இல்லாமல் இருந்தாள் கவிமலர்..
“நீ என்னோட திருமணத்திற்கு வரணும்.. ஓடி ஒழிய நினைத்தாய் அப்புறம் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..” என்று மிரட்டியவன் போனை வைத்தான்..
ஆகமொத்தம் அவளை யோசிக்கவிடாமல் செய்தனர் அவளின் வீட்டில் இருக்கும் அனைவரும்..!
அவன் போனை வைத்தும், ‘இவர் சொல்லவில்லை என்றால் நிஷா அவள் சொல்லியிருப்பாளா..?!’ என்றவளின் கைகள் தானாகவே நிஷாவிற்கு அழைத்தது..
“ஹாய் கவிமலர் எப்படி இருக்கிறாய்..?!” என்று துள்ளலுடன் கேட்டாள் நிஷா.. அவளிடமிருந்து பதில் இல்லாமல் போக, “என்னடா நாம் இந்த நிலையில் இருக்கும் பொழுது இவள் இப்படி கேட்கிறாள் என்று நீ ரொம்ப கடுப்பில் இருக்கிறாய் போல..?” என்று கேட்டதும்,
அவளின் பேச்சில் இருந்தே அவள் உண்மையை சொல்லவில்லை என்று கவிமலருக்கு தெரிந்துவிட, “எனக்கென்னம்மா நல்ல இருக்கிறேன்.. உன்னோட திருமண ஏற்பாடு எல்லாம் எப்படி நடக்கிறது.?” என்று கேட்டாள்
“அதுக்கு என்ன குறைச்சல் அது சூப்பராக நடக்கிறது..” என்று சொன்னவள் குரலில் சந்தோசம் பொங்கி வழிந்தது.. அப்பொழுதுதான் கவிக்கு தன்னுடைய டைரி ஞாபகம் வந்தது..
“சரி நிஷா நான் போனை வைக்கிறேன்..” என்று சொல்ல, “மறக்காமல் திருமணத்திற்கு வா கவி.. உன்னோட காதல் தோற்பதை நான் பார்க்க வேண்டும்..” என்று சொல்லவும்,
“உன்னோட திருமணத்திற்கு நான் வரமாட்டேன் நிஷா என்னை எதிர்பார்க்காதே..!” என்று சொன்னவள் போனை வைத்துவிட்டு அறைக்குள் சென்று சுடிதாரை மாற்றிவிட்டு ஸ்கூட்டியின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே சென்று வண்டியை எடுத்தவள் சென்றுவிட்டாள்..
“ஏய் கவி..” என்று அழைத்த நிலா, “முகில் அவள் வண்டியை எடுத்துக் கொண்டு எங்கோ செல்கிறாள்..” என்று சொல்ல,
“நீ கவலைப்படாதே நிலா.. அவளுக்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் யோசிக்க வெளியே செல்கிறாள்..” என்று சொன்னவன் வீட்டிற்குள் சென்றான்..
அவள் நேராக சென்று தனது ஆபீஸ் முன்னே வண்டியை நிறுத்துவிட்டு, அவளின் கேபினுக்கு சென்று ‘அவளின் டைரியை வைத்த இடத்தில் இருக்கிறதா..?!’ என்று பார்க்க அதுவும் அங்கே இருந்தது..
அதை அங்கே வைத்திருப்பது ரவிவர்மா தவிர மற்ற யாருக்கும் தெரியாது.. அப்படி இருக்க என்னோட கடந்த காலம் எல்லாம் எப்படி அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது..? என்று யோசிக்க அவரின் அறையில் இருந்து வெளியே வந்த ரவிவர்மா,
“என்னம்மா கவிமலர் ஆபீஸ் வருவதே இல்லை.. எனக்கும் திருமண வேலைகள் அதிகம் இருக்கிறது.. நீ வந்தால் எனக்கும் கொஞ்சம் வசதியாக இருக்கும்..” என்று சொல்ல,
“எனக்கும் எங்களின் வீட்டில் திருமண ஏற்பாடு நடக்கிறது சார்..” என்று சொல்லவும் அவரின் முகம் மலர்ந்தது..
“என்னம்மா சுந்தர் மாப்பிள்ளை பார்க்கிறானா..?!” என்று கேட்டதும் அவளின் முகம் நிமிர்ந்து இல்லை என்று தலையசைத்து, “என்னோட அம்மா எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்..” என்று கூறினாள்..
“எனக்கு புரியவில்லை..” என்று பொய்யாக நடித்தார் ரவிவர்மா..