கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்.
- சாரல்.
அத்தியாயம் – 24
“என்னது நாங்க ஆராவை விட்டுட்டு இருக்கணுமா…. என்ன டாக்டர் சொல்றீங்க..?” இளா அதிர்ச்சி காட்ட,
“அவ ஏதோ சாவு அது இதுன்னு, தத்துபித்துன்னு உளர்றா… அதுக்கு ஏதோ கவுன்சிலிங் போல டிரீட்மெண்ட் கொடுத்து அனுப்புவீங்கன்னு பார்த்தா…, என்ன இப்படி குண்ட தூக்கி போடுறீங்க…?”பிக்னிக் மூடு ஸ்பாயில் ஆன வேதா ,
இந்த ட்ரீட்மெண்ட்தான் கொடுக்கணும் அப்படின்னு கூட முடிவு பண்ணி வேகமா பேசினார்…
“முதல்ல எல்லாரும் உக்காருங்க… நான் சொல்ல வர்றதை தெளிவா கேளுங்க…எனக்கு தெரிஞ்சி ஆராக்கு உடம்புல எந்த பிரச்சினையும் அவங்க உட்பட உங்க அஞ்சு பேர் கிட்டயே யும் தனி தனியா பேசினேன் அதுல அவங்க மட்டும் தான் தெளிவா இருக்காங்க… கவுன்சிலிங் தேவைதான்… ஆனால் அது அவங்களுக்கு இல்லை உங்களுக்குத்தான் தேவைப்படுது… அந்த பொண்ண குழந்தையாகவே வச்சிருக்க ட்ரை பண்ணி இருக்கீங்க, அதனாலதான் அவளுக்கு இந்த மாதிரி பிரச்சினையாகி இருக்கு… அவங்கள இன்டிபென்டன்டா இருக்க விட்டாலே, கொஞ்ச நாளில இயல்பு நிலைக்கு திரும்பிடுவாங்க… எனக்கு நாற்பது வருஷம் இந்த பீல்டுல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நீங்க வந்த உடனேயே உங்க பிரச்சினை என்னன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு..”
“நீங்க நாலு பேருமே வளைச்சு வளைச்சு அந்த போண்ணுக்கு சின்ன வயசுல இப்படி ஆச்சு அப்படி ஆச்சு இதைத்தான் சொல்லி சொல்லி குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டோம், அப்புறம் ஏன் அவளுக்கு இந்த மாதிரி மன அழுத்தமானது ஆனது….? அப்படின்னு கேட்டீங்க… நான் இப்ப சொல்லறேன் அவங்கள குழந்தை மாதிரி பார்த்துக் கிட்டதால்தான் ஒரு சின்ன பிரச்சினையைக் கூட எதிர்த்து நிற்கக்கூடிய தைரியம் இல்லாம போச்சு…”
“யாரோ ஒரு அம்மா தடாலடியா நீ ஒரு அனாதை அப்படின்னு அந்த பொண்ண திட்டினதும், அவங்களுக்கு அதை தாங்கிக்கிற சக்தி கூட இல்ல. ஏன்.. இத்தனை நாளா அந்த பொண்ணுக்கு தான் ஒரு அனாதை அப்படின்னு தெரியாதா…? அப்புறம் ஏன் இப்ப பீல் பண்ணனும், அந்த அம்மா சொன்னதுக்கு யோசிச்சு பாருங்க…”
“இத்தனை வருஷமா அந்த பொண்ணு சுயமாக வாழ வேண்டிய, செய்ய வேண்டிய விஷயங்களை நீங்க இருந்து செய்ய வச்சிருக்கீங்க இல்லன்னா செஞ்சு கொடுத்து இருக்கீங்க. அவங்ளுக்கு ஒரு பிரச்சனைனா, அத அவங்கள ஃபேஸ் பண்ண விடாம , நீங்க பேஸ் பண்ணி இருக்கீங்க… அதனால அந்த பொண்ணுக்கு அப்படி ஒரு அனுபவமே ஏற்படாமல் போயி, இப்போ இந்த நிலைமையில் இருக்கிறாங்க…”
“ஷீ இஸ் பேர்பெக்ட்லி ஆல் ரைட்… ஒரு குழந்தை சைக்கிள் கத்துக்க ஆசைப்பட்டா, நாம அந்த குழந்தை பேலன்ஸ் பண்ற வர தான் சைக்கிள பிடிச்சுட்டு ஓட்ட வைக்கனும். அந்த குழந்தைக்கு சைக்கிள் ஓட்டும் தகுதி வந்தும் நாம் அந்த குழந்தைய சைக்கிளை தனியா ஓட்ட விட்டிரனும்… இல்லைன்னா அவங்க ,எந்த காலத்திலும் தனியா ஓட்ட மாட்டாங்க… கண்டிப்பா விழுவாங்கதான். விழுந்தா தான் அடுத்த முறை எப்படி விழாம ஓட்டணும்னு தெரியும். அடிபட்டால் தான், வலி என்னன்னு தெரியும் அந்த வலியை தாங்கக் கூடிய மனோ பலமும் கிடைக்கும்… நீங்க எல்லாரும் அந்த பொண்ணு மேல அதீத அன்பு வச்சிருக்கீங்க தான். ஆனால் அந்த பொண்ணு, உங்க அன்பாலதான் இப்போ இப்படி இருக்காங்க அதை முன்னாடி புரிஞ்சிக்கங்க…”
“உங்க கைக்குள்ளேயே பொத்தி பொத்தி வச்சுக்காதீங்க… கையை விட்டு வெளியில விடுங்க கொஞ்ச நாளில அந்த பொண்ணு தானா அவங்களோட வாழ்க்கையை எதிர்கொள்ள ஆராம்பிப்பாங்க …”
“லீவ் ஹெர்… லெட் லிவ் ஹெர் லைஃப் ஆன் ஹெர் ஓன்..”
அந்த டாக்டர் மூச்சு விடாமல் பேசி முடித்ததும் ,
வெளியில் இருந்த நர்சை கூப்பிட்டு,
“சிஸ்டர்…, கேன் ஐ ஹாவ் சம் வாட்டர்…?”
டாக்டர் இல்லைங்க, நம்ம இளா…
பேசினது நானு ,தண்ணி உனக்கா…? அப்படி பார்த்திட்டு நர்ஸை எடுத்துட்டு வர சொன்னார் கண்ணாலே….