அடுத்த மாசம் ஸ்டார் டிசைனர் நளினி கிட்ட சேர்த்து விட ,அங்க இருந்து விண்டாலூ சிக்கன் வீட்டுக்கே பார்சல் வர வெறுத்துட்டான்…
அடுத்த ஐந்து மாதங்களில் ஆராஸ் லேடிஸ் வியர் கலெக்ஷன்ஸ் ஓபனிங் செரிமனி… வேதாஜி ரிப்பன் வெட்ட, அவங்க மருமக ரோஜாஜி குத்து விளக்கு ஏற்ற, ஆராஜி கேக் வெட்டி ….கிராண்ட் ஓபனிங்…
கேக்குலாம் நல்லாத்தான் வெட்டுறா இந்த குள்ள வாத்து…, துணிய ஒழுங்கா வெட்டுவாளா… கிரிஷ்க்கு அவன் கவலை…
ஆராஸ் பேச்சு எழுந்ததுமே பாதி பணம் நீதான் போடணும்னு வலுக்கட்டாயமாக , வாழைக்காய் பஜ்ஜி சுட்டு கொடுத்து பாட்னர் ஷிப் டீலை முடிச்சிட்டாங்க வேதாவும், ரோஜாவும்…
ஒரு வாழைக்காய் பஜ்ஜி க்குக் ஆசைப்பட்டு வாழ்க்கைய அடகு வச்சிட்டான் ஆராஸ் சில்….
ஆனா கிருஷும் இளாவும் ஆராஸின் மார்கெட்டிங் பிசினஸ்ஸ ஹாண்டில் பண்ண, ஆராவும் கடுமையான உழைப்பை போட குட்டீஸ் லயிருந்து பாட்டீஸ் வரைக்கான ஆராஸ் டிசைனர் வேர் செம்ம பிக் அப் காட்டியது…
“மா…, உன் பொண்ணு தட்டு தட்டா நிரப்பி ஃபுல்லா கட்டுவான்னு பார்த்தா நல்லாவே கல்லாவும் கட்டுறா , வித்தை தெரிஞ்சவ தான் பொழைச்சுப்பா…”
மெச்சி கொண்டான் கிருஷும்…
அவங்களோட மிஷன் டிரீட்டிங் பெரிய புள்ளை ஆராவுக்கு, ஆராஸ்ஸின் வளர்ச்சி ரொம்ப உதவியது… கஸ்டமர் ஹாண்டலிங், ஒர்க்கேர்ஸ் ஹாண்டெலிங், டைம் மேனேஜ்மென்ட் என நிறைய படிக்க படிக்க தனிப்பட்ட முறையில் ஆராவிடம் நிறைய மாற்றம்…
ஆனால் அந்த நாலு பேர்க்கிட்டயும் அதே ஆரா…, கொஞ்சல்,கெஞ்சல் ஊட்டினாத்தான் திங்கறது…, இளா வந்து முத்தம் கொடுத்தா தான் தூங்கரதுண்ணு எல்லாரையும் ஒரே நேரத்தில் டயர்ட் ஆக்கினாள்…
இந்த நேரத்தில் ரோஜா பிரேக்ணன்ட், வெளியில ஒரு பாப்பா ரெண்டு மாச வயித்து புள்ளைக்கு கதைய சொல்லி பீதி கிளப்ப, உள்ள இருக்கிற கிருஷோட வாரிசு பாப்பா தின்னதை எல்லாம் வாந்தியா வெளியில கிளப்ப ஒரே அதிரி புதிரி….
அவங்க ஷோ ரூம் இருக்கும் எல்லா ஊர்களிலும் , ஆராஸ் தொடங்கபட்டது… அதே போல திருச்சியிலும்…
எல்லா இடங்களிலும் ஆசிர்வாத் கட்டிடத்துக்கு அருகிலேயே ஆராஸ் திறக்கப்பட, திருச்சியில் இடப்பற்றாக்குறையினால் ஆசீர்வாத்தின் பின் புறம்… ஒரே பில்டிங்கில் தான்… வெவ்வேறு தெருக்களை நோக்கினார் போல ஆராஸ்…
சென்னை சிட்டியை விட, சிட்டியாக மாறிக்கொண்டிருக்கும் கோயம்பத்தூர், தஞ்சாவூர் திருச்சியில் டிசைனர் டிரசெஸ்க்கு செம்ம வரவேற்பு… குறிப்பாக காலேஜ் மாணவிகளிடம்…
ஆராவொட இருபத்தி மூன்றாவது பிறந்தநாள் கடந்து மூன்று மாதங்கள் தாண்ட, ரோஜாவுக்கு வளைகாப்பு….
ரோஜா வினை கொண்டே எளிய காட்டன் உடைகளை கொண்ட பிரேக்னன்சி வேர் கலக்ஷன்ஸ் திறக்க வைத்து சர்ப்ரைஸ் கொடுத்தாள் ஆரா…
“லட்டு கலக்குறா டாலி…” ஆராவை பார்த்து கொண்டே வேதாவுக்கு முத்தம் வைக்க,
“என்னடா பண்ற என் தாய்கிழவியை… அவன்தான் முத்தம் தரான்னா ,நீ என்ன ஈன்னு பல்லை காட்டிட்டு நிக்கிற….?”
“எல்லாம் நல்ல விஷயம் தான்டா யோசிக்கிறேன்… பேசாம ,ஆராக்கும் இளாவுக்கும் சீக்கிரமே கல்யாணத்தை முடிச்சிடுவோம்…” வேதா கிருஷிர்க்கு பதில் கூற…
“ரோஸ்க்கு நல்ல படியா குழந்தை பிறந்ததும் கல்யாணத்தை வச்சிப்போம் டாலி… நானும் கிரிஷும் யூ எஸ்ஸில் ஆரம்பிக்க போற பிரான்ச்செஸ் க்காண வேலைங்க நெருங்கிட்டு இருக்கு, ரோஸ் இப்படி இருக்கிறப்போ இந்த தடியனை அங்க வார கணக்கில் தங்க வச்சி வேலை வாங்க முடியாது நான்தான் போகனும்… அடுத்த மூணு ,நாலு மாசமும் ஆரா தனியா ஆராஸையும் , ஆசீர்வாத்தையும் பார்த்துக்க போறா… ஜஸ்ட் கிருஷ் நிலவரம் என்னன்னு ஃபோன்ல ஃபாலோ பண்ணினா மட்டும் போதும்…”
“சரி உன் இஷ்டம் இளா ஆனா இன்னும் நாலு மாசம் தான் டைம்…கிருஷ் பாப்பாவுக்கு பேரு வைக்கிறப்போ நிச்சயம்…அதுக்கு அடுத்த மாசம் கல்யாணம்… அதுக்கப்புறம் எதுவும் சாக்கு போக்கு லாம் கிடையாது பார்த்துக்க…” சொல்லிவிட்டு வேதா நகர,
“கண்டிப்பா டாலி….. டேக் இட் ஈஸி…” நடந்து போயிகொண்டிருந்தவரிடம் கத்தினான்…, இளா ஆராவை பார்த்து புன்னகைத்தபடியே ஓக்கே சொல்ல விதிக்கு ஒரே கெக்க பிக்கே… அது எப்படி நான் இருக்கிரப்போ ஆராவை ஈசியா கையை பிடிக்கிறன்னு ஒரே கொக்கரிப்பு… ஒரு வேளை ஒரே ஒரு டும் டும் டும் மிற்கு விதி கும் கும் கும்மென்று கும்ம போகிறதோ….?????
“எப்படியோடா சீக்கிரம் நம்ம கணவர்கள் நல
சங்கத்துக்கு புது உறுப்பினர் வரவு… வெல்கம் மாப்ள…” கிருஷ் பேசிக்கொண்டே போக….
“லட்டு ஒயிட் கலர்ல இருக்குது…”
“எங்கடா, யெல்லோ கலர்ல தான இருக்குது…”
“இல்லையே……., முழுசா முழுங்க ஆசைப்படுறது போல வெள்ளையா மனச கொள்ளையடிக்குதே….”
“உன் வாய் இங்க இருக்குது, கண் எங்கயோ லுக்குதே…”
அவன் லுக்கை தொடர்ந்த கிருஷ்க்கு பக்கு…
கிருஷ் பதார்த்ததை சொல்ல, யதார்த்தம்,
ஒயிட் லெகங்கா வில் ஆரா…
ஆராவும் என்னன்னு கேட்டபடி இவனை பார்க்க, இவன் தனியே வர ஜாடை காட்ட, ஆரா மீண்டும் கேள்வியாய் நோக்க, வா இங்க,நம்ம இளா சேதி சொல்லிட்டு பக்கத்து ரூமுக்கு போயிட்டான்…
அந்த அப்ரசன்டி ஆராக்கு அப்பவும் ஒன்னியும் புரியாம,
“என்ன சொல்ல வரான் இந்த இளா ,கேட்டு சொல்லு அண்ணா…”, டவுட்ட…
“அவன்ட்டயே போயி கேட்டுக்க பக்கி…” தள்ளி விட்டு கிருஷ் காண்டுல போயிட்டான்…
“இப்ப எதுக்கு கூப்பிட்ட…?,”
கேள்வியோடு உள்ளே போனவளை, பின்னிலிருந்து கட்டி கொண்டான் இளா…
“என்ன இளா…?”
“ஒன்னும் இல்லை… சும்மா… ரொம்ப அழகா இருந்தியா அதான் சொல்லலாம்னு….” காதல் பொங்கி ஊத்த இளா,
“அதை இங்க கூப்பிட்டு தான் சொல்லனுமா லூசு இளா…”
இன்னும் கொஞ்ச நாட்களில் இதே வார்த்தை தனியாக வந்து சொல்லைன்னு ஊடல் கொள்ளபோவது தெரியாத ஆரா…, இளாவை லூசு சொல்லிட்டு போறா…
சாரல்…..