கேசவனே !
அகலத்தையும் உன்னுள் அடக்கிய விந்தை என்ன விந்தையடா..?
அதை விந்தையாய் நான் பார்த்திட நீ மாயமாய் மாற்றினாயோ..?
மாயமதை நீ புரிந்ததை பேதையவள் உணரவில்லையோ..?
அல்ல பேதையவளுக்கு நின் லீலைகள் விளங்கவில்லையோ..?
எட்டாம் மகவாய் நீ பிறந்து வசுதேவருக்கு எட்டாக் கனி ஆனாயோ..?
கம்ஷனை வதைத்திட கரிய மேனியான் நீ உதித்திட...மயங்கிய நிலையில் பெற்றதோ என் கரங்கள்...?
ஆயிரையாய் நீ வளர்ந்திட உன் சின்ன சிரிப்பில், உன் குறும்புத்தனத்தில் மனம் மயங்கியதோ...
காரிருள் வர்ணனைக் கொஞ்சிட கோபிய மங்கைகள் ஏங்கினரோ..? லீலைகள் செய்தே மயக்கினாயோ.?
தேனுண்ட வண்டாய் ஆயர் பெண்டிர் உன்னைச் சூழ்ந்தது குழலிசையின் கானத்தாலோ..?
அன்றி முராரியவன் வீரத்தாலோ..?