• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay....Episode 13.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம்13.

கடைசியில் இது தான் இவன் நிறமா? என் உடலை அடைவதற்குத்தான் இத்தனை அன்பும் காதலுமாக இருந்தானா? எத்தனை பெரிய கயவன் இவன்? பசுத்தோல் போர்த்த புலி. துணையில்லாத புள்ளி மானைக் கண்டதும் நாவில் நீர் ஊறுகிறதோ? இருக்கட்டும் நான் புள்ளி மான் இல்லை பெண் புலி என அவனுக்குக் காட்டுகிறேன். என நினைத்துக் கொண்டவள் சர்ரென நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்தாள்.

"உங்களைப் பத்தி நான் வெச்சிருந்த மரியாதையே போச்சு கதிரவன்! நீங்க பெண் பித்தன், பொறுக்கி, மணமான பெண்ணை படுக்கைக்கு அழைக்கும் ஒரு கயவன். இந்த விஷயம் என் கணவருக்குத் தெரிந்தால் அவ்வளவு தான். உங்கள் பணக்கார புத்தியை காட்டிட்டீங்க. இனி எப்போதுமே உங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது என இறைவனை வேண்டிக்கறேன் ." என்றவள் நடந்தாள்.

"நில்லுங்க அனிதா! நான் கெட்டவனாவே இருந்துட்டுப் போறேன். ஆனா உங்க கணவர் எப்படிப்பட்டவர்? அது தெரியுமா உங்களுக்கு?"

"அவரு சோம்பேறியா ஒருக்கலாம், உங்களை மாதிரி பிசினஸ்ல சாமர்த்தியம் இல்லதவரா இருக்கலாம் ஆனா தன் மானம் உள்ளவர்." என சீறினாள். கண்கள் கடுமையாக இருக்க அவனது உதடுகள் மட்டும் சிரித்தன. அதைப் பார்க்கவே பயமாக இருக்க கண்களை மூடிக்கொண்டாள்.

"கண்ணைத் திறங்க அனிதா! நீங்க என்னை வெறுக்கலாம் அதனாலயே உங்க கணவர் நல்லவர்னு ஆயிடுமா? உங்களுக்கு தைரியம் இருந்தா நான் சொன்னதை உங்க கணவர் கிட்ட சொல்றீங்களா?"

"சீ! இதை அவர்கிட்ட வேற சொல்லணுமா?"

"உண்மையைக் கண்டு பயப்படாதீங்க அனிதா! உங்க கணவர் கடைஞ்செடுத்த சுயநல வாதி. தான் நல்லா இருக்கணும்னு என்ன வேணும்னாலும் செய்வாரு." அவன் பேசப் பேசவே கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள். லிஃப்டில் இறங்கும் போதும் வரவேற்பில் பாசைக் கொடுக்கும் போதும் கலங்கிய கண்களை சமாளித்துக் கொண்டாள். நேரே வீட்டுக்கு வந்தவள் தன் அறைக்குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள். கண்கள் மழையாகப் பொழிய வெடித்து அழுதாள். சரசுவும் ஆனந்தனும் கதவைத் தட்டியபடி இருந்தனர்.

அத்தியாயம் 13.

சரசு டீச்சருக்கு மனம் பதைத்தது. மகளும் மருமகனும் ஒன்றாக வந்தார்கள் பிறகு மகள் மட்டும் தனியே கிளம்பி எங்கோ சென்றாள் திரும்பி வந்து கதவை அடைத்துக்கொண்டு அழுகிறாள் என்றால் என்ன அர்த்தம்? அவர்களுக்குள் என்ன பிரச்சனை? ஏதேனும் பெரிய விஷயமா? மருமகன் முகமே சரியில்லையே? இவளானால் எதுவும் சொல்லாமல் அழுகிறாளே என எண்ணிக் குழம்பினாள் சரசு. சற்று நேரத்தில் அறையிலிருந்து வெளி வந்தாள் கையில் பெட்டி.

"அம்மா! நாங்க கிளம்புறோம். இன்னொரு நாள் வந்து நிதானமா உக்காந்து பேசலாம்." என்று தாயிடம் சொல்லி விட்டுக் கணவனை ஏறிட்டாள்.

"கிளம்புங்க! என்னால இனி ஒரு நிமிஷம் கூட இந்த ஊருல இருக்க மாட்டேன். உம் கிளம்புங்க" என்றாள்.

அவளை வெறித்துப் பார்த்தான் ஆனந்த்.

"என்னை அதிகாரம் பண்றது இருக்கட்டும். முதல்ல நீ போன விஷயம் என்ன ஆச்சு? கதிரவன் என்ன சொன்னான்?" என்றான் கொஞ்சமும் கூச்சமே இல்லாமல். கதிரவன் என்ற பெயரைக் கேட்டதும் அதிர்ந்து போனாள் சரசு. இது என்ன விபரீதம்? கதிரவன் ஏதேனும் இவர்கள் வாழ்க்கையில் இடைஞ்சல் செய்கிறானோ? என எண்ணிப் பதறியது அவள் தாயுள்ளம். மூச்சைப் பிடித்துக்கொண்டு எதுவும் பேசாமல் கவனித்தாள்.

"சே! எங்கம்மா எதிருலயே கேக்கறீங்களே? உங்களுக்கு வெக்கம் மானம் இல்ல?" என்று வெடித்தாள் அனிதா.

"என்னடி ரொம்ப எகிறுற? உன் புருஷன் நான், எனக்கு ஒரு உதவி செய்ய மாட்டியா? சொல்லு அவன் என்ன சொன்னான்? ஒத்துக்கிட்டானா?" என்றான் மீண்டும்.

அதற்கு மேலும் சும்மா இருக்க முடியாத சரசு குறிக்கிட்டாள்.

"அனி என்னம்மா? இப்ப கதிரவனையா போய்ப் பார்த்துட்டு வந்த? அவன் இன்னமும் உன் வாழ்க்கையில் விளையாடுறானா? அவனைக் கொன்னுட்டு தான் மறுவேலை" என்றாள் ஆத்திரமாக.

"அம்மா ப்ளீஸ்! நீ சும்மா இரு. இது விஷயமே வேற. இதோ இருக்காரே உன் அழகான மருமகன் அவர் செய்த வேலை அத்தனையும். எவ்வளவுக்கெவ்வளவு நாம மரியாதையா மானத்தோட இருந்தோமோ அதை அப்படியே வாங்கிட்டாரு இவரு. " என்று சொல்லி அழுதாள்.

"என்னடி நாடகம் ஆடுற? அவன் என்ன தான் சொன்னான்? அவனுக்குத்தான் உன் மேல மயக்கம்னு ஊரு முழுக்கத் தெரியுமே? நீ சொல்லியுமா அவன் கேக்கல்ல?" என்றான் எகத்தாளமாக.

"அனிதா! என்ன நடக்குது இங்க? மாப்பிள்ளை எதுக்கு கதிரவனைப் பார்க்கச் சொன்னாரு? நீ ஏன் அழுற? தயவு செஞ்சு சொல்லும்மா! என் நெஞ்சே வெடிச்சிரும் போல இருக்கு" என்று கதறினாள் சரசு.

"வாயை மூடிக்கிட்டு கம்முன்னு கிடங்க அத்தை! உங்களுக்கு வேற எல்லாத்தையும் சொல்லணுமா? இருக்குற தொல்லையில உங்க தொல்லை வேற! சும்மா நொய்யி நொய்யின்னு பேசிக்கிட்டு. அனிதா இப்ப சொல்லப் போறியா இல்லியா?" என்று கத்தினான்.

உயிரினும் மேலான தன் தாயை அவமரியாதையாகப் பேசியதாலோ என்னவோ சட்டென வெடித்தாள் அனிதா.

"அவன்..அவன் அவன் கூட நான் கோவாவுக்கு ஒரு வாரம் வரணுமாம். அப்படி செஞ்சா அவன் தன் நண்பன் கிட்ட சொல்லுவானாம். போதுமா? இதுக்கு மேலயும் என்னை அவமானப்படுத்தப் போறீங்களா?" என்று கத்தினாள்.

சற்றும் அசராமல் பேசினான் ஆனந்தன்.

"அதுக்கு நீ என்ன சொன்ன?" இரு கரங்களாலும் வாயைப் பொத்தி இரண்டடி பின்னால் நகர்ந்தாள் சரசு. அதைக் கவனிக்காதவன் போல இருந்தான் ஆனந்தன்.

"சொல்லுடி நீ என்ன சொன்ன?"

"நான் என்ன சொல்லுவேன்? முகத்துல காறித்துப்பிட்டு வந்துட்டேன்" என்றாள். சட்டென எழுந்தவன் தாவி அவள் முடியைப் பிடித்து அடித்தான்.

"அறிவிருக்காடி உனக்கு? இவ பெரிய பத்தினி, காறித்துப்பினாளாம். ஏன் அவன் கூட கோவா போனா உனக்கென்ன கேடு?" என்றான்.

தன் காதுகளையே நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் அனிதா. கதிரவன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. எத்தனை சரியாகக் கணித்து வைத்திருக்கிறான் அவன்? நான் தான் ஏமாந்து விட்டேன். பாவம் என் அம்மா! சூது வாது தெரியாமல் இவனை நம்பி என்னைக் கல்யாணம் செய்து கொடுத்து விட்டாள். இவனோடு இனியும் குடும்பம் எப்படி நடத்த? இன்றைக்கு கதிரவனோடு போ என்று சொல்லும் அவன் நாளேயே வெறு ஒருவனோடு போ எனச் சொல்ல மாட்டான் என்பது என்ன நிச்சயம்? ஓ! ஆனந்தனைப் பற்றி நான் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று தான் கதிர் அப்படிப் பேசி அதை ஆனந்தனிடம் சொல்லவும் சொல்லியிருக்கிறான். என்று யோசித்துக்கொண்டிருந்தவளை அணுகினான் ஆனந்தன்.

"அனி! நல்லா யோசிச்சுப் பாரு! இதனால நமக்கு என்ன நஷ்டம்? ஆனா லாபம்னு பார்த்தா எவ்வளவு? அதோட நீ அவன் கிட்ட நைச்சியமாப் பேசி அவன் தொழில்ல என்னையும் பங்குதாரரா ஆக்கிக்கச் சொல்லலாம். அதை யோசிச்சுப் பார்த்தியா?" என்றான்.

குமட்டி வாந்தி வரும் போல ஆகி விட்டது அனிதாவுக்கு. ஆனால் யாருமே எதிர் பாராமல் சரசு ரப்பென்று ஆனந்தன் கன்னத்தில் அறைந்தாள். காளியாகச் சீறிய தன் மாமியாரை பார்த்தான் ஆனந்தன்.

"என் மகளை என்னன்னு நெனச்சே? அவ சண்முகம் சார் மகள்டா! அவளை இன்னொருத்தனுக்கு முந்தி விரிக்கச் சொல்றியா? இன்னொரு தரம் அப்படிச் சொன்னேன்னா நீ உசிரோட போக மாட்டே ஆமா சொல்லிட்டேன்" என்று கத்தினாள்.

எட்டி மாமியாரின் கழுத்தைப் படித்தான் ஆனந்தன்.

"ஏ கிளவி! எல்லாமே நீ சொல்லிக்கொடுக்குறது தானா? எதுக்கும் லாயக்கில்லாம மகளை வளர்த்து வெச்சுட்டு பேச்சா பேசுற? உன்னை நசுக்கியே கொன்னுருவேன் பார்த்துக்கோ" என்று கழுத்தை இறுக்கினான். கண்களில் நீர் வழிய மூச்சுக்காற்றுக்குப் போராடினாள் சரசம்மாள். எங்கே தாயைக் கொன்றே விடுவானோ என்ற பயத்தில் அவனோடு போராடினாள் அனிதா. அவளை கண் மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்தான் ஆனந்தன். தடுக்க வந்த சரசுவுக்கும் அடி விழுந்தது. தூரப்போய் விழுந்தாள் அந்த முதியவள். பதறிப் போய்த் தாயைத் தூக்க வந்த அனிதாவின் வயிற்றில் எட்டி உதைத்தான் ஆனந்தன்.

"அம்மா" என்ற அலறலோடு வயிற்றைப் பிடித்துக்கொண்டு அப்படியே சாய்ந்தாள் அனிதா. தனக்கு என்ன நேர்கிறது என அவளுக்குத் தெரிந்து விட்டது. வலி தாங்க முடியாமல் அரற்றினாள். சரசு கண்ணீரோடு மகளை மடியில் போட்டுக்கொண்டாள்.

"என்னை அடிச்சுக்கொல்லுடா நாயே! உன்னை நம்பி என் மகளைக் கொடுத்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். ஆனா என் மக உனக்கு என்ன செஞ்சா? அவளை ஏன் இப்படி சித்திரவதை செய்யுற? விட்டுருடா!" என்று அழுதாள்.

என்ன தோன்றியதோ அவர்களை அப்படியே விட்டு விட்டு வெளியேறினான் அந்தக் கயவன். மயங்கிய நிலையில் மகளை மடியில் கிடத்திக்கொண்டு உதவிக்கு யாரும் இல்லாமல் கண்ணீரோடு கதறிக்கொண்டிருந்தாள் அந்தத் தாய்.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
இனியாவது ஆனந்தனை பற்றி தெரிந்து கொள்ளட்டும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top