33
பிரகாஷ் சொன்னது போல் ரதி வெண்பாவிடம் விஷயத்தை சொல்லிவிட தான் நினைத்தாள்.பல தடவை அவள் எண்ணிற்கு முயன்றும் , எடுக்கப்படவில்லை.
வெண்பாவுக்கு இப்போது இருந்த மனநிலையில், மறுபடியும் ரதியிடம் பேச விருப்பமில்லை!எல்லா விஷயங்களையும் கடந்து போய்விட மாட்டோமா என்ற எண்ணம் துளிர்க்க ஆரம்பித்திருந்தது! ரதியின் எண்ணிலிருந்து பல நாட்களாய் தொடர்ந்து அழைப்பு வர, அவள் எண்ணை பிளாக் செய்துவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்களானாள்.
வெண்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து பல எண்களில் இருந்து அவளுக்கு மாற்றி மாற்றி தொடர்பு கொள்ள, புதிய எண் எதையுமே வெண்பா எடுத்தாளில்லை.என்ன செய்வது என்று புலப்படாததால் அந்த விஷயத்தை தள்ளி போட்டாள் ரதி. தவறிழைக்கையில் அது இத்தனை பெரிய காரியமாய் தெரியவில்லை. இப்போது செய்த தப்பை திருத்துவதற்கு தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது!இதே யோசனையில் இருந்தவளுக்கு தூக்கம் அறவே இல்லை. அதனால் அன்று காலையில் நேரத்துக்கு எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்திருந்தாள்.அன்று அவள் செய்திருந்த உணவில் அசந்து போனான் பிரகாஷ்.தேங்காய் பால் சாதம்,அதனுடன் ஒரு பன்னீர் கிரேவி,குடைமிளகாய் போட்டு ஒரு கறி!அவளிடம் தன் ஆசையை சொன்னதிலிருந்து, தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு கொண்டு வர ஆரம்பித்திருந்தான்.கூட உள்ளவர்கள் எப்படி என்று கேட்க, எப்போதும் போல் பதில் சொல்லாமல் சிரித்து சமாளித்தான். இன்னும் ஆபிஸில் ஒருவருக்கும் தெரியாது, இவனுக்கும் ரதிக்கும் திருமணம் ஆன சங்கதி!
விழியன் பணி முடித்து வீடு வந்து சேர, ரேணுகா அவசரமாய் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தாள்.வெண்பாவுக்கு இப்போது ஆறாவது மாதம் தொடங்கி விட்டிருந்தது.
“எங்கே மா, இந்த நேரத்தில்?”
“இங்க பக்கத்து வீடு வரை போயிட்டு வரேன்.அவ மேல தான் இருக்கா.இரண்டு பேரும் சீக்கிரமா டிபன் சாப்பிடுங்க.” என்றுவிட்டு நிற்காமல் ஓடினாள் ரேணுகா!
கிட்சனில் போய் என்ன சமையல் என்று எட்டி பார்க்க எல்லாம் அவன் மனைவிக்கு பிடித்த வகையறாக்கள்.
‘வர வர இந்த அம்மா என்னை கவனிக்கவே மாட்றாங்க. எப்போ பார்த்தாலும் காய்கறி பொங்கல், உப்மான்னு!’
அறைக்கு போக, வெண்பா கஷ்டப்பட்டு , எட்ட முடியாத தன் கால் விரல்களுக்கு ‘நெயில் பாலிஷ்’ போட்டுக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் அறைவாசலில் இருந்தவன் அவள் படும் அவஸ்தையை பார்த்தபடி இருந்தான். அவளின் பெரிய வயிறு தட்ட ,முழுதாய் குனிய முடியவில்லை. எல்லா பக்கமும் கால்களை நகர்த்தி போட முயற்சித்தாலும், மிகவும் சிரமம்பட்டு கொண்டிருந்தாள்.அவளை நெருங்கியவன்,
“வெண்பா, அதை கொடு நான் போட்டு விடுறேன்”நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
“வேண்டாம், இப்ப தானே வந்தீங்க!இருக்கட்டும்”
“குடுறீ ” அவள் கையிலிருந்ததை அனைத்தையும் வாங்கியவன் அவள் கால் மாட்டில் அமர்ந்து கொண்டு,அவள் கால்களை எடுத்து அவன் மடியில் வைத்தான்.
“விழியன் உங்க டிரஸ்ஸில் கரை ஆகிட போகுது.வேண்டாம்.அப்புறம் போகாது”
அவள் சொன்னது எதுவும் அவள் காதில் விழவில்லை.
பொறுமையாய் ஒவ்வொரு விரலையும் பிடித்து அந்த நகப்பூச்சை போட்டு விட வெண்பா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவனை என்ன தான் செய்வது? நம்புவதா வேண்டாமா?’எப்போதும் தோன்றும் அதே சந்தேகம், இப்போதும் எட்டி பார்த்தது!போட்டு முடித்து அவன் இவளை பார்க்க, அவனை இன்னமும் வைத்த கண் வாங்காமல் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தின் முன் சொடுக்கு போடும் வரைக்கும் நினைவுக்கு திரும்பவில்லை அவள்.
விழியன் காட்டிய பாசத்தில், காதலில் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கூட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தாள் வெண்பா.அதை பல சந்தர்பங்களில் விழியன் புரிந்து கொண்டாலும்,
‘துரு பிடிச்ச அந்த மூளையையும் கொஞ்சம் உபயோகிச்சா நல்லா இருக்கும் டி’அடிக்கடி தன் மனதில் புலம்பி கொள்வான்.இப்போது அவள் செயலுக்கு பின்,
“வர வர ரொம்ப அழகா ஆகிட்டே இருக்கே வெண்பா.பெண் தாய்மை அடையுறப்போ அவங்க அழகின் உச்சியில் இருப்பாளாம்! அது உண்மை தான் போல”அவளிடம் பதிலில்லை. தலை குனிந்திருந்ததால்!என்ன நினைக்கிறாள் என்பதும் தெரியவில்லை.
‘ரொம்ப ஓவரா தான் போறே நீ! இன்னைக்கு செய்தவரைக்கும் போதும்’ என்று அவன் மனசாட்சி குரல் கொடுக்க,
“சாப்பிட போலாம் வெண்பா பசிக்கிது” என்றபடி வெளியேறி விட்டான்.
சபாபதி அடிக்கடி தன் தங்கையிடம் பேசி வெண்பாவின் நலனை விசாரித்துக் கொள்வார். மகள் செய்துவிட்ட காரியம் அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது.எப்படி சரி செய்ய போகிறார்கள் இவர்கள் பிரச்சனையை என்ற சந்தேகம் எப்போதும் நெருடிக் கொண்டிருந்தது. ஆனாலும் விழியன் மேல் ஒரு நம்பிக்கை.சரி செய்துவிடுவான் சீக்கிரத்தில் என்ற எண்ணம்.அது இப்போது வரை தவறவும் இல்லை.
அன்றும் ரேணுகாவுக்கு போன் செய்திருந்தவர்,
“வளைகாப்பு செய்ய நாள் பார்த்திடலாமா மா, அடுத்த மாசம் வச்சிகிட்டா, அப்படியே வெண்பாவை திருச்சிக்கு அழைச்சிட்டு வந்திடுவேன்”
“சரி அண்ணே. விழியன் கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லட்டா?”
“அப்படியே ஆகட்டும் ரேணுகா! வெண்பா நல்லா இருக்கா தானே”
“ஆமா நல்லா இருக்கா! நீங்களும் அண்ணியும் வாங்களேன் அவளை பார்க்க!”
“இருக்கட்டும் ரேணுகா, அதான் அடுத்த மாசம் இங்க வந்திட போறாளே, பிறகென்ன.சரி மா நீ பேசிட்டு சொல்லு”
அன்று மாலை வீடு வந்த விழியன் அவசரமாய் பெங்களூர் போக வேண்டும் என்று கிளம்பினான்.ரேணுகா அவனிடம் சொன்ன விஷயத்தை கேட்க கூட இஷ்டமில்லாதவன் போல் இருந்தது அவனின் செய்கை!
“என்ன டா நான் கேட்டுகிட்டே இருக்கேன், ஒண்ணும் சொல்லாம இருக்கே”
பெட்டியில் இரண்டு நாட்களுக்கான துணிகளை எடுத்து வைத்துவிட்டு திரும்பியவன்,
“கட்டாயம் அவ திருச்சி போகணுமா மா? இங்கே சென்னையிலேயே பிரசவம் வச்சிக்கலாமே!”
அவன் சொன்னது வெண்பாவுக்கும் கேட்டது, கிட்சனில் தானிருந்தாள்.
“அதெல்லாம் முடியாது விழியா, அவ அம்மா அப்பாவுக்கு பொண்ணை வச்சு பார்க்கணும்னு ஆசை இருக்காதா?”
“அவங்களையும் இங்க வர சொல்லுங்க”
“இல்லாத வழக்கமெல்லாம் சொல்லாதே! வேணும்னா நீயே போன் செஞ்சு மாமா கிட்ட பேசிக்கோ!”
“சரி மா… நான் கிளம்புறேன்.அவசர வேலை, வர இரண்டு நாள் ஆகும்.அவளை பார்த்துகோங்க”
அவள் பக்கம் போனவன்,
“வெண்பா காலையில் தனியா நடக்க போக வேண்டாம். , பத்திரமா இரு”
ரேணுகா இருப்பதையும் சட்டை செய்யாது அவள் வயிற்று பக்கம் குனிந்தவன்,
“அப்பா ஊருக்கு போயிட்டு வரேன் குட்டி.அம்மாவை படுத்தாம பத்திரமா இருப்பீங்களாம்.பை”
வெண்பாவுக்கு இவன் தொல்லைகள் பழகி விட்டிருந்தது, தினமும் இரவில் இதே கூத்து தானே. பேசுகிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு எல்லா சேட்டைகளும் செய்து கொண்டு தான் இருக்கிறான்.ஆனால் மகனின் அளப்பரையை இப்போது தாங்க முடியாத ரேணுகா வெளியில் போய் காத்திருக்க ஆரம்பித்து விட்டாள்.அன்னை அங்கில்லை என்பதை உறுதிப்படுத்தியவன் முதலில் அவள் வயிற்றிலும் , பின் திகைத்து பார்த்த தன் மனைவியின் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்துவிட்டு புறப்பட்டான்.
பிரகாஷ் சொன்னது போல் ரதி வெண்பாவிடம் விஷயத்தை சொல்லிவிட தான் நினைத்தாள்.பல தடவை அவள் எண்ணிற்கு முயன்றும் , எடுக்கப்படவில்லை.
வெண்பாவுக்கு இப்போது இருந்த மனநிலையில், மறுபடியும் ரதியிடம் பேச விருப்பமில்லை!எல்லா விஷயங்களையும் கடந்து போய்விட மாட்டோமா என்ற எண்ணம் துளிர்க்க ஆரம்பித்திருந்தது! ரதியின் எண்ணிலிருந்து பல நாட்களாய் தொடர்ந்து அழைப்பு வர, அவள் எண்ணை பிளாக் செய்துவிட்டு, மற்ற வேலைகளை கவனிக்களானாள்.
வெண்பாவிடம் பேச வேண்டும் என்று நினைத்து பல எண்களில் இருந்து அவளுக்கு மாற்றி மாற்றி தொடர்பு கொள்ள, புதிய எண் எதையுமே வெண்பா எடுத்தாளில்லை.என்ன செய்வது என்று புலப்படாததால் அந்த விஷயத்தை தள்ளி போட்டாள் ரதி. தவறிழைக்கையில் அது இத்தனை பெரிய காரியமாய் தெரியவில்லை. இப்போது செய்த தப்பை திருத்துவதற்கு தலைகீழாய் நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது!இதே யோசனையில் இருந்தவளுக்கு தூக்கம் அறவே இல்லை. அதனால் அன்று காலையில் நேரத்துக்கு எழுந்து சமையல் வேலையை ஆரம்பித்திருந்தாள்.அன்று அவள் செய்திருந்த உணவில் அசந்து போனான் பிரகாஷ்.தேங்காய் பால் சாதம்,அதனுடன் ஒரு பன்னீர் கிரேவி,குடைமிளகாய் போட்டு ஒரு கறி!அவளிடம் தன் ஆசையை சொன்னதிலிருந்து, தினமும் ஆபிஸுக்கு வீட்டு சாப்பாடு கொண்டு வர ஆரம்பித்திருந்தான்.கூட உள்ளவர்கள் எப்படி என்று கேட்க, எப்போதும் போல் பதில் சொல்லாமல் சிரித்து சமாளித்தான். இன்னும் ஆபிஸில் ஒருவருக்கும் தெரியாது, இவனுக்கும் ரதிக்கும் திருமணம் ஆன சங்கதி!
விழியன் பணி முடித்து வீடு வந்து சேர, ரேணுகா அவசரமாய் வெளியில் கிளம்பிக் கொண்டிருந்தாள்.வெண்பாவுக்கு இப்போது ஆறாவது மாதம் தொடங்கி விட்டிருந்தது.
“எங்கே மா, இந்த நேரத்தில்?”
“இங்க பக்கத்து வீடு வரை போயிட்டு வரேன்.அவ மேல தான் இருக்கா.இரண்டு பேரும் சீக்கிரமா டிபன் சாப்பிடுங்க.” என்றுவிட்டு நிற்காமல் ஓடினாள் ரேணுகா!
கிட்சனில் போய் என்ன சமையல் என்று எட்டி பார்க்க எல்லாம் அவன் மனைவிக்கு பிடித்த வகையறாக்கள்.
‘வர வர இந்த அம்மா என்னை கவனிக்கவே மாட்றாங்க. எப்போ பார்த்தாலும் காய்கறி பொங்கல், உப்மான்னு!’
அறைக்கு போக, வெண்பா கஷ்டப்பட்டு , எட்ட முடியாத தன் கால் விரல்களுக்கு ‘நெயில் பாலிஷ்’ போட்டுக் கொண்டிருந்தாள்.
சற்று நேரம் அறைவாசலில் இருந்தவன் அவள் படும் அவஸ்தையை பார்த்தபடி இருந்தான். அவளின் பெரிய வயிறு தட்ட ,முழுதாய் குனிய முடியவில்லை. எல்லா பக்கமும் கால்களை நகர்த்தி போட முயற்சித்தாலும், மிகவும் சிரமம்பட்டு கொண்டிருந்தாள்.அவளை நெருங்கியவன்,
“வெண்பா, அதை கொடு நான் போட்டு விடுறேன்”நிமிர்ந்து அவனை பார்த்தவள்,
“வேண்டாம், இப்ப தானே வந்தீங்க!இருக்கட்டும்”
“குடுறீ ” அவள் கையிலிருந்ததை அனைத்தையும் வாங்கியவன் அவள் கால் மாட்டில் அமர்ந்து கொண்டு,அவள் கால்களை எடுத்து அவன் மடியில் வைத்தான்.
“விழியன் உங்க டிரஸ்ஸில் கரை ஆகிட போகுது.வேண்டாம்.அப்புறம் போகாது”
அவள் சொன்னது எதுவும் அவள் காதில் விழவில்லை.
பொறுமையாய் ஒவ்வொரு விரலையும் பிடித்து அந்த நகப்பூச்சை போட்டு விட வெண்பா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
‘இவனை என்ன தான் செய்வது? நம்புவதா வேண்டாமா?’எப்போதும் தோன்றும் அதே சந்தேகம், இப்போதும் எட்டி பார்த்தது!போட்டு முடித்து அவன் இவளை பார்க்க, அவனை இன்னமும் வைத்த கண் வாங்காமல் கணவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தின் முன் சொடுக்கு போடும் வரைக்கும் நினைவுக்கு திரும்பவில்லை அவள்.
விழியன் காட்டிய பாசத்தில், காதலில் கொஞ்சம் கொஞ்சமாய் தன் கூட்டிலிருந்து வெளிவந்து கொண்டிருந்தாள் வெண்பா.அதை பல சந்தர்பங்களில் விழியன் புரிந்து கொண்டாலும்,
‘துரு பிடிச்ச அந்த மூளையையும் கொஞ்சம் உபயோகிச்சா நல்லா இருக்கும் டி’அடிக்கடி தன் மனதில் புலம்பி கொள்வான்.இப்போது அவள் செயலுக்கு பின்,
“வர வர ரொம்ப அழகா ஆகிட்டே இருக்கே வெண்பா.பெண் தாய்மை அடையுறப்போ அவங்க அழகின் உச்சியில் இருப்பாளாம்! அது உண்மை தான் போல”அவளிடம் பதிலில்லை. தலை குனிந்திருந்ததால்!என்ன நினைக்கிறாள் என்பதும் தெரியவில்லை.
‘ரொம்ப ஓவரா தான் போறே நீ! இன்னைக்கு செய்தவரைக்கும் போதும்’ என்று அவன் மனசாட்சி குரல் கொடுக்க,
“சாப்பிட போலாம் வெண்பா பசிக்கிது” என்றபடி வெளியேறி விட்டான்.
சபாபதி அடிக்கடி தன் தங்கையிடம் பேசி வெண்பாவின் நலனை விசாரித்துக் கொள்வார். மகள் செய்துவிட்ட காரியம் அவர் மனதை மிகவும் பாதித்திருந்தது.எப்படி சரி செய்ய போகிறார்கள் இவர்கள் பிரச்சனையை என்ற சந்தேகம் எப்போதும் நெருடிக் கொண்டிருந்தது. ஆனாலும் விழியன் மேல் ஒரு நம்பிக்கை.சரி செய்துவிடுவான் சீக்கிரத்தில் என்ற எண்ணம்.அது இப்போது வரை தவறவும் இல்லை.
அன்றும் ரேணுகாவுக்கு போன் செய்திருந்தவர்,
“வளைகாப்பு செய்ய நாள் பார்த்திடலாமா மா, அடுத்த மாசம் வச்சிகிட்டா, அப்படியே வெண்பாவை திருச்சிக்கு அழைச்சிட்டு வந்திடுவேன்”
“சரி அண்ணே. விழியன் கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு சொல்லட்டா?”
“அப்படியே ஆகட்டும் ரேணுகா! வெண்பா நல்லா இருக்கா தானே”
“ஆமா நல்லா இருக்கா! நீங்களும் அண்ணியும் வாங்களேன் அவளை பார்க்க!”
“இருக்கட்டும் ரேணுகா, அதான் அடுத்த மாசம் இங்க வந்திட போறாளே, பிறகென்ன.சரி மா நீ பேசிட்டு சொல்லு”
அன்று மாலை வீடு வந்த விழியன் அவசரமாய் பெங்களூர் போக வேண்டும் என்று கிளம்பினான்.ரேணுகா அவனிடம் சொன்ன விஷயத்தை கேட்க கூட இஷ்டமில்லாதவன் போல் இருந்தது அவனின் செய்கை!
“என்ன டா நான் கேட்டுகிட்டே இருக்கேன், ஒண்ணும் சொல்லாம இருக்கே”
பெட்டியில் இரண்டு நாட்களுக்கான துணிகளை எடுத்து வைத்துவிட்டு திரும்பியவன்,
“கட்டாயம் அவ திருச்சி போகணுமா மா? இங்கே சென்னையிலேயே பிரசவம் வச்சிக்கலாமே!”
அவன் சொன்னது வெண்பாவுக்கும் கேட்டது, கிட்சனில் தானிருந்தாள்.
“அதெல்லாம் முடியாது விழியா, அவ அம்மா அப்பாவுக்கு பொண்ணை வச்சு பார்க்கணும்னு ஆசை இருக்காதா?”
“அவங்களையும் இங்க வர சொல்லுங்க”
“இல்லாத வழக்கமெல்லாம் சொல்லாதே! வேணும்னா நீயே போன் செஞ்சு மாமா கிட்ட பேசிக்கோ!”
“சரி மா… நான் கிளம்புறேன்.அவசர வேலை, வர இரண்டு நாள் ஆகும்.அவளை பார்த்துகோங்க”
அவள் பக்கம் போனவன்,
“வெண்பா காலையில் தனியா நடக்க போக வேண்டாம். , பத்திரமா இரு”
ரேணுகா இருப்பதையும் சட்டை செய்யாது அவள் வயிற்று பக்கம் குனிந்தவன்,
“அப்பா ஊருக்கு போயிட்டு வரேன் குட்டி.அம்மாவை படுத்தாம பத்திரமா இருப்பீங்களாம்.பை”
வெண்பாவுக்கு இவன் தொல்லைகள் பழகி விட்டிருந்தது, தினமும் இரவில் இதே கூத்து தானே. பேசுகிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு எல்லா சேட்டைகளும் செய்து கொண்டு தான் இருக்கிறான்.ஆனால் மகனின் அளப்பரையை இப்போது தாங்க முடியாத ரேணுகா வெளியில் போய் காத்திருக்க ஆரம்பித்து விட்டாள்.அன்னை அங்கில்லை என்பதை உறுதிப்படுத்தியவன் முதலில் அவள் வயிற்றிலும் , பின் திகைத்து பார்த்த தன் மனைவியின் கன்னத்திலும் முத்தத்தை கொடுத்துவிட்டு புறப்பட்டான்.