ஹாய் பிரண்ட்ஸ்...
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன ரொம்ப லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... இன்னைக்கு இந்தர் - ரதி காதல் பார்ப்போம்... மனதை மயிலிறகால் வருடும் காதல் அவர்களோடது... வாருங்க படிப்போம்... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
காதல் – 14
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித் தனி…
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி…
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி...
அந்தக் குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில் இந்தருக்காய் காத்திருந்தாள் ரதி. அவள் இந்தியா வந்த பிறகு, இப்பொழுது தான் முதல் முறையாக அவனைப் பார்க்க வருகிறாள். கோபத்தில் இருந்தவளை, அவனின் ஒரே அழைப்புச் சமாதானப்படுத்துவதாக இருந்தது.
என்ன தான் கோபத்தில் சுற்றினாலும், அவனுக்கு மெசேஜ் தட்டி விடுவாள். இந்தர் ஒரு மெசேஜுக்கு கூடப் பதிலளிக்கவில்லை... கடந்த ஒரு வாரமாக அந்த மெசேஜ் கூட நிறுத்திவிட்டாள். அவன் மேல் அத்தனை கோபம் இருந்தது.
துபாயில் தனது, வேலையை முடித்துக் கொண்டு நேற்று தான் இந்தர் வந்திருந்தான். வந்ததும் அவளுக்குத் தான் அழைத்தான். துபாயில் இருக்கும் பொழுது பெரும்பாலும், இந்தர் வேறு ஒரு நம்பர் தான் பயன்படுத்துவான். இங்குள்ளதை ஸ்விச் ஆஃப் செய்து விடுவான். அதனால் தான் கெளதம் அழைப்பு அவனுக்கு எட்டவே இல்லை.
பிளைட் விட்டு இறங்கி நேராகச் சத்தியநாதன் வீட்டுக்கு தான் வந்திருந்தான். கொஞ்ச நேரம் மதியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் வந்ததிலிருந்து அவளின் கேள்வி முழுவதும் கௌதமை பற்றித் தான் இருந்தது. யோசனையோடு அவளின் கேள்விக்குப் பதில் கூறிக் கொண்டு இருந்தான்.
“அவன் எங்கிருக்கிறான் இந்தர்”
“யாருடா?”
“உன் நண்பன் என்று ஒருவன் தாலி கட்டுனானே அவன் தான்”
“இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற?”
“சொல்லு”
அவள் முகத்தையே பார்த்திருந்தான் இந்தர். “தெரியல, ஆனா, சென்னையில் தான் இருக்கிறான். துபாய் வேலையை விட்டுவிட்டான். வேற என்ன வேலை செய்யுறான்னு தெரியல, ஒரே ஒரு நாள் தான் சிக்னலில் அவனைப் பார்த்தேன் அதன் பிறகு பார்க்கவில்லை...”
“சரி” என்றவள் தன் அறைக்கு எழுந்து சென்றாள். அவள் என்ன நினைக்கிறாள் என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால், அவள் என்ன முடிவெடுத்தாலும் அவள் வீட்டில் எல்லாரும் அவளுக்கு மட்டுமே துணை! அவனைப் பற்றி விசாரித்தாளே ஒழிய, அவன் எப்படி இருப்பான்...’ இப்படி எதுவும் கேட்காமல் செல்லும் அவளையே பார்த்தவன் தன் அறைக்கு எழுந்து சென்றான்.
மதி சொல்லாமல் கௌதமிடம் பேச இந்தர் விரும்பவில்லை. அதிலும் கௌதம் சிறு வயது காதல் தெரியுமாதலால், அவளிடம் அதிகம் அவனைப் பற்றி பேசாமல் இருந்தான் இந்தர்.
ஆனால் இன்று மதியே அவனை பற்றி விசாரிக்க இப்பொழுது அவளாக அவனைப் பற்றிக் கேட்க ‘சீக்கிரம் ரதியையும், கௌதமையும் பார்க்க வேண்டும்’ மனதில் எண்ணிக் கொண்டான்.
‘அடுத்த வாரத்தில் இருந்து சென்னை ஆஃபிஸ் செல்லவேண்டும்’ எண்ணியவன், தனது அலைப்பேசியை எடுத்து, இங்குள்ள சிம்மை அதில் போட்டு ஆன் செய்ய, பல மெசேஜ் வந்து விழுந்து கொண்டிருந்தது.
எல்லாம் அவள், ரதி அனுப்பியிருந்த மெசேஜ், முப்பதுக்கும் மேற்பட்ட மெசேஜ்.
“எனக்கு உன்கிட்ட பேசணும் இந்தர்”
“ஏன் என்னை இப்படி அழவைக்கிற?”
“உன்னைப் பார்க்கணும் இந்தர்?”
“இன்னும் எத்தனை நாள் இப்படியே உன் அழைப்புக்கு காத்திருப்பது?”
இப்படிப் பல...
‘என்ன ஆச்சு இவளுக்கு’ எண்ணியவன் கடிகாரத்தைப் பார்க்க, நேரம் இரவு பத்து மணியை நெருங்கி விட்டிருந்தது.
தினமும் தூங்கும் முன் இந்தர் அழைப்பு, ‘வருகிறதா? நான் அழைக்கவா? மெசேஜ் செய்யவா?’ எனப் பல சிந்தனையுடன் போனைப் பார்த்தபடியே வெகு நேரம் விழித்து இருப்பாள் ரதி. அதே போல் இன்றும், ‘அவனுக்கு மெசேஜ் அனுப்பவா? வேண்டாமா?’ எனச் சிந்தித்துக் கொண்டிருக்க, ஒலித்தது அலைப்பேசி.
திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து முகத்தில் சின்னதாகப் புன்னகை அரும்பியது.
அழைப்பை ஏற்று “ஹலோ” என்றாள் ரதி.
அவள் குரல் அவன் காதில் விழுந்த அந்த நொடி வார்த்தையில் விவரிக்க முடியாத சிறு நிம்மதி பரவியது.
மறுமுனையில் அமைதி பரவ “ஹலோ இந்தர்” மென்மையாக அழைத்தாள்.
கைபேசியைக் கையில் வைத்தபடியே அப்படியே அமர்ந்திருந்தான் இந்தர். அவள் குரல் அவனுள் ஏதோ மாற்றம் உண்டாக்கியது இனியும் அவளைத் தனியே தவிக்க வைக்க அவன் மனம் விரும்பவில்லை போலும்,
“உன்கிட்ட பேசணும் ரதி” தயக்கமாகக் கேட்டான். அவளை இத்தனை நாள் தவிக்க விட்டது, மனத்தை உறுத்தியது.
“பேசு அதற்குத் தான் காத்திருக்கேன் இந்தர்”
“நாளைக்கு நான் சொல்லும் காபி ஷாப் வா” ஷாப் பெயர் கூறியவன், சிறிது நேரம் பேசி அழைப்பை நிறுத்தினான். மனம் மிகவும் லேசாகி இருந்தது.
ரதி மனமோ என்றும் இல்லாத உற்சாகத்தில் குதித்தது . முகத்தில் புன்னகை தோன்ற இனிய கனவுடன் தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
அறைக்கு வந்த மதிக்கு ஏதேதோ நினைவுகள். அவளின் மனம் கவர்ந்த கிச்சாவும், தாலி கட்டியவனும் ஒன்று என அறிந்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை...
அவளுக்கு நன்கு தெரியும், தன்னைத் தினமும் பார்க்கும், பேசும் எவரோ தான் என் மனதில் இருப்பவன்? ஆனால் யார் என்று தான் தெரியவில்லை... இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்று யாரையும் கற்பனை செய்து பார்க்கும் மன தைரியம் இன்னும் வரவில்லை.
இந்தரிடம் கேட்டால், ஒரே நொடியில் அவனின் முகத்தைக் காட்டுவான் தான், ஆனால் அப்படி அவன் மூலமாக அவள் மனதை கவர்ந்தவனைக் காண மனம் இடம் தரவில்லையே?'
அவனே என் கண் முன் வரட்டும், நான் தான் உன் கிச்சானு அறிமுகமாகட்டும், அதுவரை யார் முகமும் பார்க்க வேண்டாம் என எண்ணியவள், அப்படியே தூங்கிப் போனாள்.
காலையில், மிகவும் அழகாகக் கிளம்பி மதி முன் வந்து நின்றான் இந்தர்.
“என்னடா இந்தர், கொக்கு இன்னைக்குச் சொக்கா போட்டு சொக்குது” கிண்டலடித்தபடி அவனைச் சுற்றி வந்தாள் அவள்.
“ஏன் மதிக்குட்டி, நான் நல்லா இல்லையா?” குனிந்து தன்னைப் பார்த்தபடியே வினவினான் அவன்.
“அதெல்லாம், நல்லா தான் இருக்க, எங்கே கிளம்பிட்ட காலம் காத்தாலே? ரதியை பார்க்க போறியா? முகமே மினுங்குது”
“பார்க்க போறேன் இல்ல, அழைச்சிட்டு வரப் போறேன்?” சிரிப்புடன் கூறினான்.
“வாரே... வா... இப்பவாச்சும், அவளைக் கண்ணுல காட்டணும்னு தோணுதே?”
“உனக்கு, அவ மேல கோபம் ஒன்னும் இல்லையே”
“எனக்கு என்ன கோபம்டா?”
“அதில்லைடா, அவ அண்ணன் தான்...” என ஆரம்பிக்க,
“எனக்கு உன் மேல சந்தேகமா இருந்திச்சு, என்னை வச்சு தான் ரதியை விட்டு விலகின அப்படித் தான? என் சந்தேகத்தை இன்னைக்கு நீ ப்ரூப் பண்ணிட்ட” கோபத்துடன் கடிந்தாள்.
“அதில்லை மதி... நீ இப்படி இருக்கும் போது, எப்படி அவங்க வீட்டுக்கு போறது?”
“என்னை ஏன்டா ரதி கூடச் சேர்க்கிற, ரதி உன்னைக் காதலிக்கிறா? ஆனா அவன் அண்ணன் என்னைக் காதலித்துத் தாலி கட்டலை, கட்டாயத்துக்குக் கட்டினான். ஆனா நீ பண்ணினது ரொம்பத் தப்பு இந்தர்” காட்டமாக வினவினாள்.
“சரி விடு, இனி அதைப் பற்றிப் பேசி பயனில்லை, ரதியை இனி தனியே விடமாட்டேன்”
“இப்போ தான் நீ என் அத்தான்” கன்னத்தைப் பிடித்து ஆட்ட,
“ஆஹா... மரியாதை கூடுதே?”
“உனக்கு யாருடா மரியாதை தந்தது... நான் ரதிக்காகத் தந்தேன்” கிண்டலடிக்க.
“போச்சுடா வீட்டுல இருந்த ஒரு டிக்கெட்டும் போச்சா”
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த நாகுவும், சத்தியநாதனும் “நான் உனக்கு இருக்கேன்டா” என வந்தனர்.
“க்கும்” முகத்தை வெட்டிக் கொண்டாள் மதி.
“சரி... சரி... சீக்கிரம் ரதியை அழைச்சிட்டு வா” கூற, மதியை பார்த்தபடியே கிளம்பினான் இந்தர்.
காபி ஷாப் விட்டு வெளியில் வந்தவர்கள் அந்த நடைபாதையில், கைகள் உரசியபடி மௌனமாக நடக்க அந்தக் கணத்தை இருவரும் மிகவும் ரசித்தனர்.
ஓசை இல்லாத அந்த மௌனங்கள் கூட மிக அழகாகத் தெரிந்தது இரு காதலர்களுக்கும். அவ்வபோது அவள் முகத்தைப் பார்த்தபடி நடந்தான் இந்தர். அவன் பார்வையைக் கண்டு தலையைக் குனிந்தபடி வந்தாள் ரதி.
‘தான் இவளை காணும் முன் வந்த கோபம் என்ன? இப்பொழுது தோன்றும் வெட்கம் என்ன?’ ரசனையாக எண்ணியவன், அவள் கைகளை வேண்டும் என்றே மெதுவாகத் தீண்டினான். கையை மெதுவாக விலக்கிக் கொண்டாள் மதி.
கார் அருகில் வர, அவளுக்கு முன் கதவை திறந்து விட்டான் இந்தர். மெளனமாகக் காரில் ஏற, அவளைத் தொடர்ந்து அவனும் ஏறிக் கொண்டான்.
அங்கே நிலவி கொண்டிருந்த மௌனத்தை, அவ்வப்போது அவளின் வளையல் சத்தம் கலைத்தது.
அவள் பக்கம் திரும்பாமல் வந்த பொழுதும், அவளின் வளையல் அவனைப் பார்க்க வைத்தது. அந்தச் சத்தம் அவனுள் ஊடுருவி விளையாடியது.
அவள் வளையல் சத்தம் மட்டும் இல்லாமல், அவன் அருகில் அமர்ந்திருக்கும் அவளின் தவிப்பும், தலையில் சூடி இருந்த மல்லிகை வாசமும் அவனைத் தாக்கியது.
அவளின் தவிப்பை மாற்றும் விதமாக, காரில் மெல்லிய பாடலை இசைக்க விட்டான் இந்தர். எப்பொழுதும் அவளை மாற்றும் அந்த இசைகூட அவளின், அவன் மேல் உள்ள தவிப்பை மாற்றவில்லை போலும், வளையல் ஓசை தொடர்ந்து கொண்டிருந்தது.
“எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்...
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...” மிக மெல்லிய குரலில் காரில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்தப் பாடல் வரிகள்.
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன ரொம்ப லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... இன்னைக்கு இந்தர் - ரதி காதல் பார்ப்போம்... மனதை மயிலிறகால் வருடும் காதல் அவர்களோடது... வாருங்க படிப்போம்... இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
காதல் – 14
காதல் வந்து தீண்டும் வரை இருவரும் தனித் தனி…
காதலின் பொன் சங்கிலி இணைத்தது கண்மணி…
கடலிலே மழை வீழ்ந்த பின் எந்தத் துளி மழைத் துளி
காதலில் அது போல நான் கலந்திட்டேன் காதலி...
அந்தக் குறிப்பிட்ட ஷாப்பிங் மாலில் இந்தருக்காய் காத்திருந்தாள் ரதி. அவள் இந்தியா வந்த பிறகு, இப்பொழுது தான் முதல் முறையாக அவனைப் பார்க்க வருகிறாள். கோபத்தில் இருந்தவளை, அவனின் ஒரே அழைப்புச் சமாதானப்படுத்துவதாக இருந்தது.
என்ன தான் கோபத்தில் சுற்றினாலும், அவனுக்கு மெசேஜ் தட்டி விடுவாள். இந்தர் ஒரு மெசேஜுக்கு கூடப் பதிலளிக்கவில்லை... கடந்த ஒரு வாரமாக அந்த மெசேஜ் கூட நிறுத்திவிட்டாள். அவன் மேல் அத்தனை கோபம் இருந்தது.
துபாயில் தனது, வேலையை முடித்துக் கொண்டு நேற்று தான் இந்தர் வந்திருந்தான். வந்ததும் அவளுக்குத் தான் அழைத்தான். துபாயில் இருக்கும் பொழுது பெரும்பாலும், இந்தர் வேறு ஒரு நம்பர் தான் பயன்படுத்துவான். இங்குள்ளதை ஸ்விச் ஆஃப் செய்து விடுவான். அதனால் தான் கெளதம் அழைப்பு அவனுக்கு எட்டவே இல்லை.
பிளைட் விட்டு இறங்கி நேராகச் சத்தியநாதன் வீட்டுக்கு தான் வந்திருந்தான். கொஞ்ச நேரம் மதியிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அவன் வந்ததிலிருந்து அவளின் கேள்வி முழுவதும் கௌதமை பற்றித் தான் இருந்தது. யோசனையோடு அவளின் கேள்விக்குப் பதில் கூறிக் கொண்டு இருந்தான்.
“அவன் எங்கிருக்கிறான் இந்தர்”
“யாருடா?”
“உன் நண்பன் என்று ஒருவன் தாலி கட்டுனானே அவன் தான்”
“இப்போ எதுக்கு அதைப் பத்தி பேசுற?”
“சொல்லு”
அவள் முகத்தையே பார்த்திருந்தான் இந்தர். “தெரியல, ஆனா, சென்னையில் தான் இருக்கிறான். துபாய் வேலையை விட்டுவிட்டான். வேற என்ன வேலை செய்யுறான்னு தெரியல, ஒரே ஒரு நாள் தான் சிக்னலில் அவனைப் பார்த்தேன் அதன் பிறகு பார்க்கவில்லை...”
“சரி” என்றவள் தன் அறைக்கு எழுந்து சென்றாள். அவள் என்ன நினைக்கிறாள் என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ஆனால், அவள் என்ன முடிவெடுத்தாலும் அவள் வீட்டில் எல்லாரும் அவளுக்கு மட்டுமே துணை! அவனைப் பற்றி விசாரித்தாளே ஒழிய, அவன் எப்படி இருப்பான்...’ இப்படி எதுவும் கேட்காமல் செல்லும் அவளையே பார்த்தவன் தன் அறைக்கு எழுந்து சென்றான்.
மதி சொல்லாமல் கௌதமிடம் பேச இந்தர் விரும்பவில்லை. அதிலும் கௌதம் சிறு வயது காதல் தெரியுமாதலால், அவளிடம் அதிகம் அவனைப் பற்றி பேசாமல் இருந்தான் இந்தர்.
ஆனால் இன்று மதியே அவனை பற்றி விசாரிக்க இப்பொழுது அவளாக அவனைப் பற்றிக் கேட்க ‘சீக்கிரம் ரதியையும், கௌதமையும் பார்க்க வேண்டும்’ மனதில் எண்ணிக் கொண்டான்.
‘அடுத்த வாரத்தில் இருந்து சென்னை ஆஃபிஸ் செல்லவேண்டும்’ எண்ணியவன், தனது அலைப்பேசியை எடுத்து, இங்குள்ள சிம்மை அதில் போட்டு ஆன் செய்ய, பல மெசேஜ் வந்து விழுந்து கொண்டிருந்தது.
எல்லாம் அவள், ரதி அனுப்பியிருந்த மெசேஜ், முப்பதுக்கும் மேற்பட்ட மெசேஜ்.
“எனக்கு உன்கிட்ட பேசணும் இந்தர்”
“ஏன் என்னை இப்படி அழவைக்கிற?”
“உன்னைப் பார்க்கணும் இந்தர்?”
“இன்னும் எத்தனை நாள் இப்படியே உன் அழைப்புக்கு காத்திருப்பது?”
இப்படிப் பல...
‘என்ன ஆச்சு இவளுக்கு’ எண்ணியவன் கடிகாரத்தைப் பார்க்க, நேரம் இரவு பத்து மணியை நெருங்கி விட்டிருந்தது.
தினமும் தூங்கும் முன் இந்தர் அழைப்பு, ‘வருகிறதா? நான் அழைக்கவா? மெசேஜ் செய்யவா?’ எனப் பல சிந்தனையுடன் போனைப் பார்த்தபடியே வெகு நேரம் விழித்து இருப்பாள் ரதி. அதே போல் இன்றும், ‘அவனுக்கு மெசேஜ் அனுப்பவா? வேண்டாமா?’ எனச் சிந்தித்துக் கொண்டிருக்க, ஒலித்தது அலைப்பேசி.
திரையில் ஒளிர்ந்த எண்ணைப் பார்த்து முகத்தில் சின்னதாகப் புன்னகை அரும்பியது.
அழைப்பை ஏற்று “ஹலோ” என்றாள் ரதி.
அவள் குரல் அவன் காதில் விழுந்த அந்த நொடி வார்த்தையில் விவரிக்க முடியாத சிறு நிம்மதி பரவியது.
மறுமுனையில் அமைதி பரவ “ஹலோ இந்தர்” மென்மையாக அழைத்தாள்.
கைபேசியைக் கையில் வைத்தபடியே அப்படியே அமர்ந்திருந்தான் இந்தர். அவள் குரல் அவனுள் ஏதோ மாற்றம் உண்டாக்கியது இனியும் அவளைத் தனியே தவிக்க வைக்க அவன் மனம் விரும்பவில்லை போலும்,
“உன்கிட்ட பேசணும் ரதி” தயக்கமாகக் கேட்டான். அவளை இத்தனை நாள் தவிக்க விட்டது, மனத்தை உறுத்தியது.
“பேசு அதற்குத் தான் காத்திருக்கேன் இந்தர்”
“நாளைக்கு நான் சொல்லும் காபி ஷாப் வா” ஷாப் பெயர் கூறியவன், சிறிது நேரம் பேசி அழைப்பை நிறுத்தினான். மனம் மிகவும் லேசாகி இருந்தது.
ரதி மனமோ என்றும் இல்லாத உற்சாகத்தில் குதித்தது . முகத்தில் புன்னகை தோன்ற இனிய கனவுடன் தன் தூக்கத்தைத் தொடர்ந்தாள்.
அறைக்கு வந்த மதிக்கு ஏதேதோ நினைவுகள். அவளின் மனம் கவர்ந்த கிச்சாவும், தாலி கட்டியவனும் ஒன்று என அறிந்ததில் இருந்து மனம் ஒரு நிலையில் இல்லை...
அவளுக்கு நன்கு தெரியும், தன்னைத் தினமும் பார்க்கும், பேசும் எவரோ தான் என் மனதில் இருப்பவன்? ஆனால் யார் என்று தான் தெரியவில்லை... இவர்களாக இருக்குமோ, அவர்களாக இருக்குமோ என்று யாரையும் கற்பனை செய்து பார்க்கும் மன தைரியம் இன்னும் வரவில்லை.
இந்தரிடம் கேட்டால், ஒரே நொடியில் அவனின் முகத்தைக் காட்டுவான் தான், ஆனால் அப்படி அவன் மூலமாக அவள் மனதை கவர்ந்தவனைக் காண மனம் இடம் தரவில்லையே?'
அவனே என் கண் முன் வரட்டும், நான் தான் உன் கிச்சானு அறிமுகமாகட்டும், அதுவரை யார் முகமும் பார்க்க வேண்டாம் என எண்ணியவள், அப்படியே தூங்கிப் போனாள்.
காலையில், மிகவும் அழகாகக் கிளம்பி மதி முன் வந்து நின்றான் இந்தர்.
“என்னடா இந்தர், கொக்கு இன்னைக்குச் சொக்கா போட்டு சொக்குது” கிண்டலடித்தபடி அவனைச் சுற்றி வந்தாள் அவள்.
“ஏன் மதிக்குட்டி, நான் நல்லா இல்லையா?” குனிந்து தன்னைப் பார்த்தபடியே வினவினான் அவன்.
“அதெல்லாம், நல்லா தான் இருக்க, எங்கே கிளம்பிட்ட காலம் காத்தாலே? ரதியை பார்க்க போறியா? முகமே மினுங்குது”
“பார்க்க போறேன் இல்ல, அழைச்சிட்டு வரப் போறேன்?” சிரிப்புடன் கூறினான்.
“வாரே... வா... இப்பவாச்சும், அவளைக் கண்ணுல காட்டணும்னு தோணுதே?”
“உனக்கு, அவ மேல கோபம் ஒன்னும் இல்லையே”
“எனக்கு என்ன கோபம்டா?”
“அதில்லைடா, அவ அண்ணன் தான்...” என ஆரம்பிக்க,
“எனக்கு உன் மேல சந்தேகமா இருந்திச்சு, என்னை வச்சு தான் ரதியை விட்டு விலகின அப்படித் தான? என் சந்தேகத்தை இன்னைக்கு நீ ப்ரூப் பண்ணிட்ட” கோபத்துடன் கடிந்தாள்.
“அதில்லை மதி... நீ இப்படி இருக்கும் போது, எப்படி அவங்க வீட்டுக்கு போறது?”
“என்னை ஏன்டா ரதி கூடச் சேர்க்கிற, ரதி உன்னைக் காதலிக்கிறா? ஆனா அவன் அண்ணன் என்னைக் காதலித்துத் தாலி கட்டலை, கட்டாயத்துக்குக் கட்டினான். ஆனா நீ பண்ணினது ரொம்பத் தப்பு இந்தர்” காட்டமாக வினவினாள்.
“சரி விடு, இனி அதைப் பற்றிப் பேசி பயனில்லை, ரதியை இனி தனியே விடமாட்டேன்”
“இப்போ தான் நீ என் அத்தான்” கன்னத்தைப் பிடித்து ஆட்ட,
“ஆஹா... மரியாதை கூடுதே?”
“உனக்கு யாருடா மரியாதை தந்தது... நான் ரதிக்காகத் தந்தேன்” கிண்டலடிக்க.
“போச்சுடா வீட்டுல இருந்த ஒரு டிக்கெட்டும் போச்சா”
இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த நாகுவும், சத்தியநாதனும் “நான் உனக்கு இருக்கேன்டா” என வந்தனர்.
“க்கும்” முகத்தை வெட்டிக் கொண்டாள் மதி.
“சரி... சரி... சீக்கிரம் ரதியை அழைச்சிட்டு வா” கூற, மதியை பார்த்தபடியே கிளம்பினான் இந்தர்.
காபி ஷாப் விட்டு வெளியில் வந்தவர்கள் அந்த நடைபாதையில், கைகள் உரசியபடி மௌனமாக நடக்க அந்தக் கணத்தை இருவரும் மிகவும் ரசித்தனர்.
ஓசை இல்லாத அந்த மௌனங்கள் கூட மிக அழகாகத் தெரிந்தது இரு காதலர்களுக்கும். அவ்வபோது அவள் முகத்தைப் பார்த்தபடி நடந்தான் இந்தர். அவன் பார்வையைக் கண்டு தலையைக் குனிந்தபடி வந்தாள் ரதி.
‘தான் இவளை காணும் முன் வந்த கோபம் என்ன? இப்பொழுது தோன்றும் வெட்கம் என்ன?’ ரசனையாக எண்ணியவன், அவள் கைகளை வேண்டும் என்றே மெதுவாகத் தீண்டினான். கையை மெதுவாக விலக்கிக் கொண்டாள் மதி.
கார் அருகில் வர, அவளுக்கு முன் கதவை திறந்து விட்டான் இந்தர். மெளனமாகக் காரில் ஏற, அவளைத் தொடர்ந்து அவனும் ஏறிக் கொண்டான்.
அங்கே நிலவி கொண்டிருந்த மௌனத்தை, அவ்வப்போது அவளின் வளையல் சத்தம் கலைத்தது.
அவள் பக்கம் திரும்பாமல் வந்த பொழுதும், அவளின் வளையல் அவனைப் பார்க்க வைத்தது. அந்தச் சத்தம் அவனுள் ஊடுருவி விளையாடியது.
அவள் வளையல் சத்தம் மட்டும் இல்லாமல், அவன் அருகில் அமர்ந்திருக்கும் அவளின் தவிப்பும், தலையில் சூடி இருந்த மல்லிகை வாசமும் அவனைத் தாக்கியது.
அவளின் தவிப்பை மாற்றும் விதமாக, காரில் மெல்லிய பாடலை இசைக்க விட்டான் இந்தர். எப்பொழுதும் அவளை மாற்றும் அந்த இசைகூட அவளின், அவன் மேல் உள்ள தவிப்பை மாற்றவில்லை போலும், வளையல் ஓசை தொடர்ந்து கொண்டிருந்தது.
“எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்...
உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்...
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...” மிக மெல்லிய குரலில் காரில் ஒலித்துக் கொண்டிருந்தது அந்தப் பாடல் வரிகள்.
Last edited: