ஹாய் பிரண்ட்ஸ்...
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன ரொம்ப லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... இன்னைக்கு கெளதம் - மதி வாழ்க்கை எப்படி ஆரம்பம் ஆகுதுன்னு பாப்போம் வாருங்க... மதி கௌதமை விட்டாளா? இல்லை ஏதாவது பனிஷ் பண்ணுனாளானு பார்க்கலாம்? இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பிரெண்ட்ஸ்... குறுநாவல் போட்டிக்கு நானும் கலந்திருக்கேன்... "காதலில் சொதப்புவது எப்படி..?" இது தான் கதையோட டைட்டில். நமக்கு வார ஹீரோ எல்லாம் காதலில் சொதப்ப தான் செய்யுறாங்க... இவனும் அப்படி தான்...திங்கள் கிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நாள் வேற இல்ல... அதுவும் ஒரு ஜாலி கதை தான்.... அடுத்த வாரத்தில் இருந்து ரெண்டு கதையோட எபியும் தரலாம்னு இருக்கேன்...கொஞ்சம் முன்ன பின்ன வந்தா மன்னிச்சுக்கோங்க...
காதல் – 15
உன் கால்களின் கொலுசு சத்தமும்...
உன் முகத்தின் முத்து சிரிப்பும்...
உன் வளையலின் இன்னிசையும்...
என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கையில்...
நான் எப்படி கண்ணயர்வேன் என் கண்மணியே...?
இன்றோடு மதி, கௌதம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று. காலேஜ் திறந்ததை தொடர்ந்து கெளதம் இரு நாட்கள் விடுமுறை எடுக்க, மதியோ ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.
அன்று உண்மையாகவே கௌதமை வீட்டில் எதிர் பார்க்கவில்லை. அதிலும் கணவனாக, காதலனாக அவனை எதிர் பார்க்கவில்லை.
அவன் வீட்டுக்கு வரவும் அவளின் பல கேள்விக்கு பதில் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.. தன்னை தொடர்ந்து வந்தது இவன் தான் அதனால் தான் என்னை பற்றி எல்லாம் அறிந்திருக்கிறான்.
இப்பொழுது தேடி வந்தவன் ஏன் தாலியைக் கட்டி விட்டு சென்றான்? இது மட்டும் அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும் அவனை உடனே மன்னித்து ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை.
அப்படியும் அவனின் தவறை மன்னிக்க அவள் ஓன்றும் அவனுடன் வாழ்கையை பகிர்ந்துக் கொண்ட மனைவி அல்லவே... பகிர்ந்துக் கொள்ள போகும் மனைவி.
அதற்காக, அவனுடன் செல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இத்தனை நாள் அப்பாவையும், பாட்டியையும் கஷ்டபடுத்தியதுப் போதும். என் வாழ்க்கை சந்தோசமாக அமைந்தால் தான் இந்தர் அவன் வாழ்க்கையைப் பார்ப்பான்.
பலவற்றை எண்ணியவள் வந்தவர்களையே பார்த்து நின்றாள். கமலாவை அவள் மனம் உடனே அறிந்துக் கொண்டது. சோறூட்டி வளர்த்த ஆன்ட்டி.
அவளின் அம்மா, பள்ளியை விட்டு வர நேரமானால், கெளதம் அவளை அவன் வீட்டுக்கு தான் அழைத்து செல்வான். அவளுக்கு தெரிந்த வரையில் அவனின் பெயர் கிருஷ்ணா. அந்த பெயர் வாயில் வராததால் அவளே அவனுக்கு “கிச்சா” என்று பெயர் வைத்துக் கொண்டாள். ஆனால், இங்கு அவர்களின் ஜி.கே ப்ரோபோசரை எதிர் பார்க்கவில்லை.
எங்கு எல்லாமோ சுற்றி, ஒரே கூட்டுக்குள் வந்து சேர்ந்தது இரு குடும்பமும். நாகு, கமலாவை அப்படியே பார்த்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகுப் பார்க்கிறார்.
கமலாவின் மகனாக, கௌதமை இன்னும் நினைத்து பார்க்க முடியவில்லை அவரால். ‘கமலா வளர்த்த பையனா அப்படி ஒரு காரியம் செய்தான். நம்ப முடியவில்லை அவரால். ஆனாலும், இனி பேசி என்ன பயன், எல்லாம் தான் சரியாகி விட்டதே. அவனும் அவளை தேடி வந்துவிட்டானே, இனி என்ன வேண்டும், மதி அவள் வாழ்கையை காப்பாள்’ எண்ணியவர்,
மதியின் முகத்தைப் பார்த்தார். அவளோ கௌதமையே பார்த்திருந்தாள். அவனும், அவளைத்தான் பார்த்திருந்தான். கண்களோ அவளிடம் மன்னிப்பையே யாசித்தது.
எல்லார் முகங்களையும் ஒரு முறை பார்த்த கருத்தபாண்டி அவர்களை நோக்கி “என் மருமகளை நான் அழச்சிட்டு போகட்டும்களா?” என சத்தியநாதனை பார்த்துக் கேட்டார்.
“இத்தனை நாள் உங்க மருமகள் உங்க கண்ணுக்கு தெரியலைங்களா?”
“அப்படி சொல்லாதீங்க சம்மந்தி... என் பையன் கல்யாணம் பண்ணினது எனக்கே தெரியாதுங்க?”
இந்தர்க்கு இந்த கதை புதியது. அவனின் பார்வை ரதியை நோக்கி தாவியது. ‘நீ சொல்லலியா?’ என...
‘நான் சொன்னேன்... ஆனா ரொம்ப லேட்டா சொன்னேன்’ என்பதாக பதில் பார்வைப் பார்த்தாள் அவள்.
மெதுவாக எழுந்த கமலா, மதி அருகில் சென்று, அவளின் கன்னம் வருடி “நீ என் வீட்டுக்கு என்னோட மகளா வரியாம்மா?” இப்பொழுது கேள்வியை அவளிடமே கேட்டார். முடிவெடுக்க வேண்டியவள் அவளே.
வாழ போவது அவள். அவள் பதிலை எதிர் பார்த்திருந்தனர். ஆனால் அவளோ தன் தந்தையைப் பார்த்தாள். இத்தனை நாள், எந்த கஷ்டமும், எந்த வார்த்தையும் சொல்லாமல், அவளின் சந்தோசத்துக்காக அவளை படிக்க வைத்தவர்கள். அவர்கள் பதில் தான் அவள் பதிலாக இருக்கும்.
நேற்றே இந்தர், சத்தியநாதனிடம் எல்லாம் கூறிவிட்டான். கெளதம் சிறு வயது காதலும், அவளை தேடி அலைந்ததில் தான் மதியை விட்டு சென்றான் என்றும். அவனின் காதலியும், தாலி கட்டிய மனைவியும் மதி தான் என்ற உண்மை தெரியவரவும், அவளின் மனநிலை அறிய அவளிடம் விளையாட்டாக பேசியதையும் சத்தியநாதனிடம் கூறியிருந்தான்.
கோபமாக அவனை ஏறிட்டார் “இது வாழ்க்கை இந்தர் விளையாட்டு இல்லை... ஒரு வேளை இவளுக்கு கிச்சாவை பிடிக்கலன்னா இவன், மனைவியாகிய மதியை தேடி வரமாட்டானாமா?”
“அப்படி இல்ல மாமா, அவளுக்கு கிச்சாவை பிடிக்கலன்னா, கணவனா அவன் கண்டிப்பா அவளை தேடி வருவான்?”
“அதெப்படி வருவான் இந்தர்... ஒரு வேளை அவனோட காதலி கிடைக்கலன்னா, கடைசி வரைக்கும் நம்ம மதியை அவன் தேடியிருக்கவே மாட்டான் தானே?”
“ஏன் மாமா இப்படி எல்லாம் நெகட்டிவ்வா பேசுறீங்க... அப்படி நான் விட்டிருவேனா? அவங்க ரெண்டு பெரும் சேர்ந்த பிறகு தான், நானும் ரதியும் சேர்வதாக பேசியிருந்தோம் மாமா, இப்படி இருக்கும் போது எப்படியும் கெளதம், மதியை ஏற்றுக் கொள்ள தானே வேண்டும்?”
“எதுக்கு பிடிக்காத பொண்ணை வச்சு, அவன் என்ன பண்ணுவான், ஒரே வருஷத்துல என் பொண்ணை விட்டு விட்டு போகவா?”
“என்ன மாமா, எது சொன்னாலும் இப்படியே பேசுறீங்க. அவன் ரொம்ப நல்லவன் மாமா, மதி மேல அவன் உயிரையே வச்சிருக்கான்”
“மதி மேலன்னு சொல்லாத, அவன் காதலி மேலன்னு சொல்லு?” கடுப்பாக மொழிந்தார்.
“ரெண்டு பேரும் ஒருத்தங்க தானே மாமா?”
“அது இப்போ தானே, அவனுக்கு தெரியுது”
“மாமா, பிளீஸ்... எதுக்குன்னாலும் இப்படி ஏறுக்கு, மாறா பேசினா எப்படி மாமா? காலம் முழுக்க நம்ம மதி இங்கயே இருக்கணுமா? இப்போ அவ மனசு முழுக்க இருக்கிறது, அவளோட கணவன்?”
சட்டென அமைதியானார் அவர்.
“ஆமா மாமா, உண்மை தான்”
“என்ன சொல்லுற?”
“ஆமா, மாமா... ஒருநாளும் கெளதம் பத்தி, மதி என்கிட்ட கேட்டதே இல்லை. ஆனா நேத்து அவனை பத்தி தான் எல்லாம் கேட்டா... அதுக்கு பிறகு தான் நான் ரதியை பார்க்க போனேன்... அவ அப்பாகிட்ட பேசினேன்”
அமைதியாக கேட்டவர். அதன் பிறகு எதுவும் கூறவில்லை. எப்பொழுதும் மதி சந்தோசம் தான் அவர்கள் சந்தோசம். மதியின் முடிவு தான் அவர்கள் முடிவு.
இப்பொழுதும் மதியின் முடிவை நோக்கி இருந்தனர். அவள் முகத்தை பார்க்க, அவளோ தன் தந்தையை பார்த்து நின்றாள். அஷோக் எல்லாருடைய முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
‘என்னடா இது... சட்டுபுட்டுன்னு ஒரு முடிவை எடுத்து அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க, அப்போ தான் என் ரூட் கிளியர் ஆகும்’ மனதில் புலம்பிக் கொண்டான்.
அவன் புலம்பல் அருகில் இருந்த கௌதமுக்கு கேட்டதுப் போல, எழுந்து சத்தியநாதனை நோக்கி சென்றான்.
“அங்கிள்...” என அவரை அழைத்தான் கெளதம்.
“சொல்லுப்பா..”
“என்ன மன்னிசிடுங்க அங்கிள்... நான்... எனக்கு மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்ல... ஆனா இப்போ என்னால அதை மட்டும் தான் செய்யமுடியும். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து நான் அதிகம் தேடியது என்னோட நிலாக்குட்டியை தான்... அந்த நாட்கள் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஆனா, நான் ஒரு அளவுக்கு வளரும் போது என்னை விட்டு போயிட்டா, அவளை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?.
அது எனக்கு மட்டும் தான் தெரியும், இதோ இருக்கிறானே அஷோக் அவனுக்கு கூட தெரியாது. அவளை தேடி நான் அலைஞ்சுட்டு இருக்கும் பொழுது, என்னோட எம்டி பண்ணுன வேலையில், யாரோ ஒரு பொண்ணுக்கு தாலி கட்ட வேண்டிய கட்டாயம், அதிலும் அந்த பொண்ணு முகத்தில் இருந்த ஏதோ ஒன்றுக்காக கட்டினேன். அது சத்தியமா என்னோட நிலாக்குட்டின்னு எனக்கு தெரியாது.
ஒரு வேளை அவளோட அப்பா, அம்மா அங்க இருந்திருந்தால், இவளை அடையாளம் கண்டிருப்பேனோ என்னவோ, பாட்டியை கூட நான் பார்க்கலை. எல்லாம் என் விதி. கையில் கிடைச்ச பிறகும், தொலைத்து தேடி அலையணும் என்று எனக்கு விதி இருக்கும் போல,
தாலி கட்டின அன்னைக்கு கூட நான் அவளை விட்டு போகணும்னு நினைக்கல, ஆனா, என்னோட நிலாக்குட்டி முதல் முறையா என்கிட்ட கேட்ட ஒரு விஷயம் என்னால எப்படி அதை நிறை வேற்றாமல் இருக்க முடியும்” அவளையே ஆழ்ந்துப் பார்த்தான்.
அவளுக்கே என்ன என்று நியாபகம் இல்ல. அவனையே பார்த்திருந்தாள். அப்படியா என்னை அவன் நினைவில் வைத்திருக்கிறான். அவளால் நம்ப முடியவில்லை. எல்லாரும் அவன் முகத்தையே பார்த்திருக்க மீண்டும் தொடர்ந்தான்,
மீண்டும் நானே... சொன்ன மாதிரியே அடுத்த காதல் கொண்டுவந்துட்டேன்... ஆனா என்ன ரொம்ப லேட் ஆகிட்டு சாரிப்பா... வாங்க இன்னைக்கு என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்... இன்னைக்கு கெளதம் - மதி வாழ்க்கை எப்படி ஆரம்பம் ஆகுதுன்னு பாப்போம் வாருங்க... மதி கௌதமை விட்டாளா? இல்லை ஏதாவது பனிஷ் பண்ணுனாளானு பார்க்கலாம்? இதுவரை படிச்சு கமெண்ட் பண்ணுற எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...
அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் பிரெண்ட்ஸ்... குறுநாவல் போட்டிக்கு நானும் கலந்திருக்கேன்... "காதலில் சொதப்புவது எப்படி..?" இது தான் கதையோட டைட்டில். நமக்கு வார ஹீரோ எல்லாம் காதலில் சொதப்ப தான் செய்யுறாங்க... இவனும் அப்படி தான்...திங்கள் கிழமையில் இருந்து ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.... நாள் வேற இல்ல... அதுவும் ஒரு ஜாலி கதை தான்.... அடுத்த வாரத்தில் இருந்து ரெண்டு கதையோட எபியும் தரலாம்னு இருக்கேன்...கொஞ்சம் முன்ன பின்ன வந்தா மன்னிச்சுக்கோங்க...
காதல் – 15
உன் கால்களின் கொலுசு சத்தமும்...
உன் முகத்தின் முத்து சிரிப்பும்...
உன் வளையலின் இன்னிசையும்...
என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கையில்...
நான் எப்படி கண்ணயர்வேன் என் கண்மணியே...?
இன்றோடு மதி, கௌதம் வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆயிற்று. காலேஜ் திறந்ததை தொடர்ந்து கெளதம் இரு நாட்கள் விடுமுறை எடுக்க, மதியோ ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்தாள்.
அன்று உண்மையாகவே கௌதமை வீட்டில் எதிர் பார்க்கவில்லை. அதிலும் கணவனாக, காதலனாக அவனை எதிர் பார்க்கவில்லை.
அவன் வீட்டுக்கு வரவும் அவளின் பல கேள்விக்கு பதில் கிடைத்தது என்று தான் சொல்லவேண்டும்.. தன்னை தொடர்ந்து வந்தது இவன் தான் அதனால் தான் என்னை பற்றி எல்லாம் அறிந்திருக்கிறான்.
இப்பொழுது தேடி வந்தவன் ஏன் தாலியைக் கட்டி விட்டு சென்றான்? இது மட்டும் அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும் அவனை உடனே மன்னித்து ஏற்றுக் கொள்ள மனம்வரவில்லை.
அப்படியும் அவனின் தவறை மன்னிக்க அவள் ஓன்றும் அவனுடன் வாழ்கையை பகிர்ந்துக் கொண்ட மனைவி அல்லவே... பகிர்ந்துக் கொள்ள போகும் மனைவி.
அதற்காக, அவனுடன் செல்லாமல் இருக்கவும் முடியவில்லை. இத்தனை நாள் அப்பாவையும், பாட்டியையும் கஷ்டபடுத்தியதுப் போதும். என் வாழ்க்கை சந்தோசமாக அமைந்தால் தான் இந்தர் அவன் வாழ்க்கையைப் பார்ப்பான்.
பலவற்றை எண்ணியவள் வந்தவர்களையே பார்த்து நின்றாள். கமலாவை அவள் மனம் உடனே அறிந்துக் கொண்டது. சோறூட்டி வளர்த்த ஆன்ட்டி.
அவளின் அம்மா, பள்ளியை விட்டு வர நேரமானால், கெளதம் அவளை அவன் வீட்டுக்கு தான் அழைத்து செல்வான். அவளுக்கு தெரிந்த வரையில் அவனின் பெயர் கிருஷ்ணா. அந்த பெயர் வாயில் வராததால் அவளே அவனுக்கு “கிச்சா” என்று பெயர் வைத்துக் கொண்டாள். ஆனால், இங்கு அவர்களின் ஜி.கே ப்ரோபோசரை எதிர் பார்க்கவில்லை.
எங்கு எல்லாமோ சுற்றி, ஒரே கூட்டுக்குள் வந்து சேர்ந்தது இரு குடும்பமும். நாகு, கமலாவை அப்படியே பார்த்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகுப் பார்க்கிறார்.
கமலாவின் மகனாக, கௌதமை இன்னும் நினைத்து பார்க்க முடியவில்லை அவரால். ‘கமலா வளர்த்த பையனா அப்படி ஒரு காரியம் செய்தான். நம்ப முடியவில்லை அவரால். ஆனாலும், இனி பேசி என்ன பயன், எல்லாம் தான் சரியாகி விட்டதே. அவனும் அவளை தேடி வந்துவிட்டானே, இனி என்ன வேண்டும், மதி அவள் வாழ்கையை காப்பாள்’ எண்ணியவர்,
மதியின் முகத்தைப் பார்த்தார். அவளோ கௌதமையே பார்த்திருந்தாள். அவனும், அவளைத்தான் பார்த்திருந்தான். கண்களோ அவளிடம் மன்னிப்பையே யாசித்தது.
எல்லார் முகங்களையும் ஒரு முறை பார்த்த கருத்தபாண்டி அவர்களை நோக்கி “என் மருமகளை நான் அழச்சிட்டு போகட்டும்களா?” என சத்தியநாதனை பார்த்துக் கேட்டார்.
“இத்தனை நாள் உங்க மருமகள் உங்க கண்ணுக்கு தெரியலைங்களா?”
“அப்படி சொல்லாதீங்க சம்மந்தி... என் பையன் கல்யாணம் பண்ணினது எனக்கே தெரியாதுங்க?”
இந்தர்க்கு இந்த கதை புதியது. அவனின் பார்வை ரதியை நோக்கி தாவியது. ‘நீ சொல்லலியா?’ என...
‘நான் சொன்னேன்... ஆனா ரொம்ப லேட்டா சொன்னேன்’ என்பதாக பதில் பார்வைப் பார்த்தாள் அவள்.
மெதுவாக எழுந்த கமலா, மதி அருகில் சென்று, அவளின் கன்னம் வருடி “நீ என் வீட்டுக்கு என்னோட மகளா வரியாம்மா?” இப்பொழுது கேள்வியை அவளிடமே கேட்டார். முடிவெடுக்க வேண்டியவள் அவளே.
வாழ போவது அவள். அவள் பதிலை எதிர் பார்த்திருந்தனர். ஆனால் அவளோ தன் தந்தையைப் பார்த்தாள். இத்தனை நாள், எந்த கஷ்டமும், எந்த வார்த்தையும் சொல்லாமல், அவளின் சந்தோசத்துக்காக அவளை படிக்க வைத்தவர்கள். அவர்கள் பதில் தான் அவள் பதிலாக இருக்கும்.
நேற்றே இந்தர், சத்தியநாதனிடம் எல்லாம் கூறிவிட்டான். கெளதம் சிறு வயது காதலும், அவளை தேடி அலைந்ததில் தான் மதியை விட்டு சென்றான் என்றும். அவனின் காதலியும், தாலி கட்டிய மனைவியும் மதி தான் என்ற உண்மை தெரியவரவும், அவளின் மனநிலை அறிய அவளிடம் விளையாட்டாக பேசியதையும் சத்தியநாதனிடம் கூறியிருந்தான்.
கோபமாக அவனை ஏறிட்டார் “இது வாழ்க்கை இந்தர் விளையாட்டு இல்லை... ஒரு வேளை இவளுக்கு கிச்சாவை பிடிக்கலன்னா இவன், மனைவியாகிய மதியை தேடி வரமாட்டானாமா?”
“அப்படி இல்ல மாமா, அவளுக்கு கிச்சாவை பிடிக்கலன்னா, கணவனா அவன் கண்டிப்பா அவளை தேடி வருவான்?”
“அதெப்படி வருவான் இந்தர்... ஒரு வேளை அவனோட காதலி கிடைக்கலன்னா, கடைசி வரைக்கும் நம்ம மதியை அவன் தேடியிருக்கவே மாட்டான் தானே?”
“ஏன் மாமா இப்படி எல்லாம் நெகட்டிவ்வா பேசுறீங்க... அப்படி நான் விட்டிருவேனா? அவங்க ரெண்டு பெரும் சேர்ந்த பிறகு தான், நானும் ரதியும் சேர்வதாக பேசியிருந்தோம் மாமா, இப்படி இருக்கும் போது எப்படியும் கெளதம், மதியை ஏற்றுக் கொள்ள தானே வேண்டும்?”
“எதுக்கு பிடிக்காத பொண்ணை வச்சு, அவன் என்ன பண்ணுவான், ஒரே வருஷத்துல என் பொண்ணை விட்டு விட்டு போகவா?”
“என்ன மாமா, எது சொன்னாலும் இப்படியே பேசுறீங்க. அவன் ரொம்ப நல்லவன் மாமா, மதி மேல அவன் உயிரையே வச்சிருக்கான்”
“மதி மேலன்னு சொல்லாத, அவன் காதலி மேலன்னு சொல்லு?” கடுப்பாக மொழிந்தார்.
“ரெண்டு பேரும் ஒருத்தங்க தானே மாமா?”
“அது இப்போ தானே, அவனுக்கு தெரியுது”
“மாமா, பிளீஸ்... எதுக்குன்னாலும் இப்படி ஏறுக்கு, மாறா பேசினா எப்படி மாமா? காலம் முழுக்க நம்ம மதி இங்கயே இருக்கணுமா? இப்போ அவ மனசு முழுக்க இருக்கிறது, அவளோட கணவன்?”
சட்டென அமைதியானார் அவர்.
“ஆமா மாமா, உண்மை தான்”
“என்ன சொல்லுற?”
“ஆமா, மாமா... ஒருநாளும் கெளதம் பத்தி, மதி என்கிட்ட கேட்டதே இல்லை. ஆனா நேத்து அவனை பத்தி தான் எல்லாம் கேட்டா... அதுக்கு பிறகு தான் நான் ரதியை பார்க்க போனேன்... அவ அப்பாகிட்ட பேசினேன்”
அமைதியாக கேட்டவர். அதன் பிறகு எதுவும் கூறவில்லை. எப்பொழுதும் மதி சந்தோசம் தான் அவர்கள் சந்தோசம். மதியின் முடிவு தான் அவர்கள் முடிவு.
இப்பொழுதும் மதியின் முடிவை நோக்கி இருந்தனர். அவள் முகத்தை பார்க்க, அவளோ தன் தந்தையை பார்த்து நின்றாள். அஷோக் எல்லாருடைய முகத்தையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
‘என்னடா இது... சட்டுபுட்டுன்னு ஒரு முடிவை எடுத்து அவளை வீட்டுக்கு அழைச்சுட்டு போங்க, அப்போ தான் என் ரூட் கிளியர் ஆகும்’ மனதில் புலம்பிக் கொண்டான்.
அவன் புலம்பல் அருகில் இருந்த கௌதமுக்கு கேட்டதுப் போல, எழுந்து சத்தியநாதனை நோக்கி சென்றான்.
“அங்கிள்...” என அவரை அழைத்தான் கெளதம்.
“சொல்லுப்பா..”
“என்ன மன்னிசிடுங்க அங்கிள்... நான்... எனக்கு மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்ல... ஆனா இப்போ என்னால அதை மட்டும் தான் செய்யமுடியும். எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து நான் அதிகம் தேடியது என்னோட நிலாக்குட்டியை தான்... அந்த நாட்கள் அவ்ளோ சந்தோஷமா இருக்கும். ஆனா, நான் ஒரு அளவுக்கு வளரும் போது என்னை விட்டு போயிட்டா, அவளை எங்கெல்லாம் தேடினேன் தெரியுமா?.
அது எனக்கு மட்டும் தான் தெரியும், இதோ இருக்கிறானே அஷோக் அவனுக்கு கூட தெரியாது. அவளை தேடி நான் அலைஞ்சுட்டு இருக்கும் பொழுது, என்னோட எம்டி பண்ணுன வேலையில், யாரோ ஒரு பொண்ணுக்கு தாலி கட்ட வேண்டிய கட்டாயம், அதிலும் அந்த பொண்ணு முகத்தில் இருந்த ஏதோ ஒன்றுக்காக கட்டினேன். அது சத்தியமா என்னோட நிலாக்குட்டின்னு எனக்கு தெரியாது.
ஒரு வேளை அவளோட அப்பா, அம்மா அங்க இருந்திருந்தால், இவளை அடையாளம் கண்டிருப்பேனோ என்னவோ, பாட்டியை கூட நான் பார்க்கலை. எல்லாம் என் விதி. கையில் கிடைச்ச பிறகும், தொலைத்து தேடி அலையணும் என்று எனக்கு விதி இருக்கும் போல,
தாலி கட்டின அன்னைக்கு கூட நான் அவளை விட்டு போகணும்னு நினைக்கல, ஆனா, என்னோட நிலாக்குட்டி முதல் முறையா என்கிட்ட கேட்ட ஒரு விஷயம் என்னால எப்படி அதை நிறை வேற்றாமல் இருக்க முடியும்” அவளையே ஆழ்ந்துப் பார்த்தான்.
அவளுக்கே என்ன என்று நியாபகம் இல்ல. அவனையே பார்த்திருந்தாள். அப்படியா என்னை அவன் நினைவில் வைத்திருக்கிறான். அவளால் நம்ப முடியவில்லை. எல்லாரும் அவன் முகத்தையே பார்த்திருக்க மீண்டும் தொடர்ந்தான்,