கட்டங்கள் – 34
அவர்கள் அறையில் நடந்த சம்பவத்திலிருந்து முதலில் மீண்டது நித்யா.
நித்யா கனல் கக்கும் பார்வையால் மதுசூதனனை முறைத்தாள்.
அடுத்ததாக சுதாரித்தது கொண்ட முகிலன், "ப்ரோ..." என்று பதறியபடியே அழைத்துக் கொண்டு..., மதுசூதனன் அருகே முகிலன் செல்ல, "முகிலன்...", என்று அழுத்தமாக நித்யா அழைத்தாள்.
அந்த அழுத்தம் முகிலனை அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் நிற்க செய்தது. நித்யாவின் குரலில் கோபம்.. அந்த கோபம் முகிலனை மிரளச் செய்தது.
மதுசூதனன் தன் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்று கொண்டிருந்தான்.
மதுசூதனனின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது. மூச்சை உள்ளே இழுத்து தன்னை சமாதானம் செய்து கொண்டிருந்தான் மதுசூதனன்.
"நான் என்ன தவறு செய்தேன்.. பிடிக்காத கல்யாணம்.. ஆனால் என் நிலையை அவளிடம் விளக்கி விட்டேன்.. ஆனால் இன்னும் நான் உன்னை விட்டுவிட்டு சென்று விடுவேன் என்று ஏன் முரட்டு பிடிவாதம் பிடிக்கிறாள்..? இவள் என்னை ஒரு நாளும் புரிந்து கொள்ள மாட்டாளா..? நான் இவளோடு போராடுவேனா..?. இல்லை அம்மாவை நினைத்து கவலை படுவேனா..? இந்த பிசினெஸ்ஸை பற்றி யோசிப்பேனா..?", என்று கண்களை இறுக மூடி தன் கவலையை தன்னுள் மறைத்துக் கொண்டான் மதுசூதனன்..
"நான் ஏன் இப்படி காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டேன்.., இவளை நான் எப்படி அடித்திருக்கலாம்..?", தான் செய்த செயல் தன்னையே அழுத்த, மதுசூதனனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் அவன் கைகளை தொட்டது.
"உங்க அண்ணனை திரும்பி அடிக்க எனக்கு எத்தனை நிமிடம் ஆகப் போகுது...?", என்று நித்யா மதுசூதனனை நக்கலாக பார்த்தபடி முகிலனிடம் அழுத்தமாக கேட்டாள்.
நித்யாவிடம் மன்னிப்பு கேட்க, தன் கண்களை திறந்த மதுசூதனன், நித்யாவின் கேள்வியால் வெகுண்டெழுந்து அவளை முறைத்தான்.
"நான் வந்த நேரம் சரியில்லை... சாரி...", என்று கூறிக் கொண்டே, "அடி வாங்கியவர்கள் கோபமாக நிற்க, அடித்தவன் கண் கலங்குகிறான்... என்ன நடக்கிறது.,..?", என்று சிந்தித்தபடியே அறையை விட்டு வெளியே சென்றான் முகிலன்.
"நீ என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனால்.., உன்னால் என்னை விட்டு ஒரு பொழுதும் என்னை மீறி இங்கிருந்து போக முடியாது. உனக்கு பிடித்திருக்கோ இல்லையோ.., இது தான் உன் வாழ்க்கை.. நீ என்னோடு தான் இருந்தாக வேண்டும்.. இதை நீ என் பணத் திமிர்.. என் கர்வம்.. என் ஆணவம்.. இப்படி என்ன நினைத்தாலும் பரவாயில்லை ", என்று நித்யாவின் முகம் முன் விரல் அசைத்து கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்ற மதுசூதனன் மீண்டும் நித்யாவின் அருகே வந்து எதிர் பக்கமாக அவளை கோபமாக பார்த்தபடி நின்றான்.
மதுசூதனன் அருகே நிற்பது தெரிந்தும், அவனை பார்ப்பதை தவிர்த்து தரையை பார்த்தபடி அதீத கோபத்தோடு சோபாவில் அமர்ந்திருந்தாள் நித்யா.
"ஆபரேஷனுக்கு தேவையான வேலைகளை முடித்து விட்டு.., நான் இரண்டு நாளில் லண்டன் கிளம்பறேன்..", என்று மதுசூதனன் கூற, "இவன் என்னை அடிப்பான்... என் வார்த்தைகளை மதிக்க மாட்டான்..", என்ற எண்ணம் அவள் மூளையை வேகமாக தாக்க, "நித்யா பொறுமை.. பொறுமை.. இன்று ஏன் உனக்கு நிதானம் இல்லை.. நேற்று முதல் இருந்த பதட்டம்.. அழுத்தம்.. இல்லை அதீத வேலையா...? இந்த கோபம் நல்லதில்லை.. ", என்று சிந்தித்த படி , "1.. 2.. 3.. 4.. 5.. 6.. 7.. 8... 9.. 10.. 11.. 12.. 13.. 14. 15..", என்று தன் மனதிற்குள் சொல்ல.., நித்யாவின் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.
நித்யா பதில் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்க, அவள் பதிலுக்காக காத்திருக்காமல் கதவை வேகமாக மூடிவிட்டு வெளியே சென்றான் மதுசூதனன்.
தன் டைரியை எடுத்து பதினைந்து கட்டங்களுக்கு நிறம் மாற்றினாள் நித்யா.
ஐந்து கட்டங்கள், இருபது கட்டங்களாக உயர்ந்து காட்சி அளிக்க, ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வு நித்யாவின் மனதை தாக்கியது.
அவள் கண்களிலிருந்து நீர் வந்துவிடுமோ என்று நித்யா அஞ்ச.., தன்னை தானே திடப்படுத்திக் கொண்டு மறுப்பாக தலை அசைத்து.., "இவன் நான் கூறுவதை கேட்க மாட்டானா..?", என்று முணுமுணுத்து கொண்டே மீண்டும் மூன்று கட்டங்களை நிறம் மாற்றினாள் நித்யா.
ஆக.., இருபத்துமூன்று கட்டங்கள் நிறம் மாறி இவளை பார்த்து கைகொட்டி சிரித்தது..
டைரியை மூடிவிட்டு, தன் வேலையைச் செய்ய தொடங்கினாள் நித்யா.
யாரிடமும் பேசாமல், தன் வேலைகளை முடித்து விட்டு, மருத்துவமனைக்கு நித்யா தயாராக, "நித்யா கிளம்பு... போலாம்..", என்று நித்யாவிடம் கூறிவிட்டு, "முகிலன் ரெடியா...?", என்று படியிறங்கி வந்த முகிலனைப் பார்த்து சோபாவில் சாய்ந்தபடி மதுசூதனன் கேட்டான்.
"முகிலன் நீங்க கார் எடுங்க நாம போலாம்.. இல்லைனா உங்க கார் சாவியை கொடுங்க.. நான் கிளம்பறேன்.. ", என்று தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு , முகிலனை பார்த்தபடி நித்யா கூற , அத்தனை வருத்தத்திலும் நித்யாவின் மன நிலைமை புரியாமல், பிரச்சனையின் வீரியம் தெரியாமல் மதுசூதனின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
நித்யா அறியாமல், அந்த புன்னகையை மறைத்தான் மதுசூதனன். நித்யா அவன் கண்களுக்கு கோபப்படும் சிறு குழந்தையாக தெரிந்தாள். "நான் அடித்தது தவறு தான். அதற்காக இவள் என்னிடம் பேசாமல் இருந்து விடுவாளா..?", என்று எண்ணம் மதுசூதனனிற்கு தோன்றியது.
"தவறு என் பக்கம்.. நான் தான் சமாதானம் செய்ய வேண்டும்", என்ற எண்ணம் தோன்ற, "உனக்கு கார் ஓட்ட தெரியுமுன்னு எனக்கு தெரிந்திருந்தா முன்னாடியே கார் வாங்கிருப்பேன்.. அம்மா.. ஆபரேஷன் முடியட்டும்.. நான் லண்டன் போயிட்டு வந்த உடனே.., உனக்கு பிடித்த மாதிரி கார் வாங்கிடலாம்.. இப்ப ஹாஸ்பிடல் கிளம்பு..", என்று மதுசூதனன் சமாதானமாக நித்யாவின் முகம் பார்த்து கனிவாக கூறினான்.
"தம்பி.. உங்க காரில் நீங்க கிளம்ப மாட்டிங்களா....?", என்று முகிலனின் முகம் பார்த்து நித்யா கோபமாக கேட்க, "அண்ணி.. நீங்க எப்படி சொல்றீங்களோ... அப்படி செய்றேன்..", என்று நித்யாவிடம் கூறிக்கொண்டே தன் அறைக்கு சென்று தன் கார் சாவியோடு திரும்பினான் முகிலன்.
முகிலனோடு நித்யா காரில் கிளம்பி செல்ல, மதுசூதனன் தன் தோளைக் குலுக்கி கொண்டு, தன் காரில் மருத்துவமனைக்கு சென்றான்.
அவள் மருத்துவமனைக்கு செல்ல, வாசலில் நின்று கொண்டிருந்த ரூபா, "வேலையை முடித்துவிட்டு வர இவ்வளவு நேரமா..?", என்று புருவம் உயர்த்தி சலிப்பாக கேட்டாள்.
அவர்கள் அறையில் நடந்த சம்பவத்திலிருந்து முதலில் மீண்டது நித்யா.
நித்யா கனல் கக்கும் பார்வையால் மதுசூதனனை முறைத்தாள்.
அடுத்ததாக சுதாரித்தது கொண்ட முகிலன், "ப்ரோ..." என்று பதறியபடியே அழைத்துக் கொண்டு..., மதுசூதனன் அருகே முகிலன் செல்ல, "முகிலன்...", என்று அழுத்தமாக நித்யா அழைத்தாள்.
அந்த அழுத்தம் முகிலனை அவன் நின்று கொண்டிருந்த இடத்தில் நிற்க செய்தது. நித்யாவின் குரலில் கோபம்.. அந்த கோபம் முகிலனை மிரளச் செய்தது.
மதுசூதனன் தன் கைகளை இறுக்கமாக கட்டிக் கொண்டு கண்மூடி நின்று கொண்டிருந்தான்.
மதுசூதனனின் கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அவன் கைகளில் விழுந்தது. மூச்சை உள்ளே இழுத்து தன்னை சமாதானம் செய்து கொண்டிருந்தான் மதுசூதனன்.
"நான் என்ன தவறு செய்தேன்.. பிடிக்காத கல்யாணம்.. ஆனால் என் நிலையை அவளிடம் விளக்கி விட்டேன்.. ஆனால் இன்னும் நான் உன்னை விட்டுவிட்டு சென்று விடுவேன் என்று ஏன் முரட்டு பிடிவாதம் பிடிக்கிறாள்..? இவள் என்னை ஒரு நாளும் புரிந்து கொள்ள மாட்டாளா..? நான் இவளோடு போராடுவேனா..?. இல்லை அம்மாவை நினைத்து கவலை படுவேனா..? இந்த பிசினெஸ்ஸை பற்றி யோசிப்பேனா..?", என்று கண்களை இறுக மூடி தன் கவலையை தன்னுள் மறைத்துக் கொண்டான் மதுசூதனன்..
"நான் ஏன் இப்படி காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டேன்.., இவளை நான் எப்படி அடித்திருக்கலாம்..?", தான் செய்த செயல் தன்னையே அழுத்த, மதுசூதனனின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர் அவன் கைகளை தொட்டது.
"உங்க அண்ணனை திரும்பி அடிக்க எனக்கு எத்தனை நிமிடம் ஆகப் போகுது...?", என்று நித்யா மதுசூதனனை நக்கலாக பார்த்தபடி முகிலனிடம் அழுத்தமாக கேட்டாள்.
நித்யாவிடம் மன்னிப்பு கேட்க, தன் கண்களை திறந்த மதுசூதனன், நித்யாவின் கேள்வியால் வெகுண்டெழுந்து அவளை முறைத்தான்.
"நான் வந்த நேரம் சரியில்லை... சாரி...", என்று கூறிக் கொண்டே, "அடி வாங்கியவர்கள் கோபமாக நிற்க, அடித்தவன் கண் கலங்குகிறான்... என்ன நடக்கிறது.,..?", என்று சிந்தித்தபடியே அறையை விட்டு வெளியே சென்றான் முகிலன்.
"நீ என்ன செய்தாலும் எனக்கு கவலை இல்லை.. ஆனால்.., உன்னால் என்னை விட்டு ஒரு பொழுதும் என்னை மீறி இங்கிருந்து போக முடியாது. உனக்கு பிடித்திருக்கோ இல்லையோ.., இது தான் உன் வாழ்க்கை.. நீ என்னோடு தான் இருந்தாக வேண்டும்.. இதை நீ என் பணத் திமிர்.. என் கர்வம்.. என் ஆணவம்.. இப்படி என்ன நினைத்தாலும் பரவாயில்லை ", என்று நித்யாவின் முகம் முன் விரல் அசைத்து கூறிவிட்டு அறையை விட்டு வெளியே சென்ற மதுசூதனன் மீண்டும் நித்யாவின் அருகே வந்து எதிர் பக்கமாக அவளை கோபமாக பார்த்தபடி நின்றான்.
மதுசூதனன் அருகே நிற்பது தெரிந்தும், அவனை பார்ப்பதை தவிர்த்து தரையை பார்த்தபடி அதீத கோபத்தோடு சோபாவில் அமர்ந்திருந்தாள் நித்யா.
"ஆபரேஷனுக்கு தேவையான வேலைகளை முடித்து விட்டு.., நான் இரண்டு நாளில் லண்டன் கிளம்பறேன்..", என்று மதுசூதனன் கூற, "இவன் என்னை அடிப்பான்... என் வார்த்தைகளை மதிக்க மாட்டான்..", என்ற எண்ணம் அவள் மூளையை வேகமாக தாக்க, "நித்யா பொறுமை.. பொறுமை.. இன்று ஏன் உனக்கு நிதானம் இல்லை.. நேற்று முதல் இருந்த பதட்டம்.. அழுத்தம்.. இல்லை அதீத வேலையா...? இந்த கோபம் நல்லதில்லை.. ", என்று சிந்தித்த படி , "1.. 2.. 3.. 4.. 5.. 6.. 7.. 8... 9.. 10.. 11.. 12.. 13.. 14. 15..", என்று தன் மனதிற்குள் சொல்ல.., நித்யாவின் கோபம் கொஞ்சம் கட்டுக்குள் வந்தது.
நித்யா பதில் எதுவும் கூறாமல் அமைதியாக அமர்ந்திருக்க, அவள் பதிலுக்காக காத்திருக்காமல் கதவை வேகமாக மூடிவிட்டு வெளியே சென்றான் மதுசூதனன்.
தன் டைரியை எடுத்து பதினைந்து கட்டங்களுக்கு நிறம் மாற்றினாள் நித்யா.
ஐந்து கட்டங்கள், இருபது கட்டங்களாக உயர்ந்து காட்சி அளிக்க, ஏதோ ஒரு ஏமாற்ற உணர்வு நித்யாவின் மனதை தாக்கியது.
அவள் கண்களிலிருந்து நீர் வந்துவிடுமோ என்று நித்யா அஞ்ச.., தன்னை தானே திடப்படுத்திக் கொண்டு மறுப்பாக தலை அசைத்து.., "இவன் நான் கூறுவதை கேட்க மாட்டானா..?", என்று முணுமுணுத்து கொண்டே மீண்டும் மூன்று கட்டங்களை நிறம் மாற்றினாள் நித்யா.
ஆக.., இருபத்துமூன்று கட்டங்கள் நிறம் மாறி இவளை பார்த்து கைகொட்டி சிரித்தது..
டைரியை மூடிவிட்டு, தன் வேலையைச் செய்ய தொடங்கினாள் நித்யா.
யாரிடமும் பேசாமல், தன் வேலைகளை முடித்து விட்டு, மருத்துவமனைக்கு நித்யா தயாராக, "நித்யா கிளம்பு... போலாம்..", என்று நித்யாவிடம் கூறிவிட்டு, "முகிலன் ரெடியா...?", என்று படியிறங்கி வந்த முகிலனைப் பார்த்து சோபாவில் சாய்ந்தபடி மதுசூதனன் கேட்டான்.
"முகிலன் நீங்க கார் எடுங்க நாம போலாம்.. இல்லைனா உங்க கார் சாவியை கொடுங்க.. நான் கிளம்பறேன்.. ", என்று தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு , முகிலனை பார்த்தபடி நித்யா கூற , அத்தனை வருத்தத்திலும் நித்யாவின் மன நிலைமை புரியாமல், பிரச்சனையின் வீரியம் தெரியாமல் மதுசூதனின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது.
நித்யா அறியாமல், அந்த புன்னகையை மறைத்தான் மதுசூதனன். நித்யா அவன் கண்களுக்கு கோபப்படும் சிறு குழந்தையாக தெரிந்தாள். "நான் அடித்தது தவறு தான். அதற்காக இவள் என்னிடம் பேசாமல் இருந்து விடுவாளா..?", என்று எண்ணம் மதுசூதனனிற்கு தோன்றியது.
"தவறு என் பக்கம்.. நான் தான் சமாதானம் செய்ய வேண்டும்", என்ற எண்ணம் தோன்ற, "உனக்கு கார் ஓட்ட தெரியுமுன்னு எனக்கு தெரிந்திருந்தா முன்னாடியே கார் வாங்கிருப்பேன்.. அம்மா.. ஆபரேஷன் முடியட்டும்.. நான் லண்டன் போயிட்டு வந்த உடனே.., உனக்கு பிடித்த மாதிரி கார் வாங்கிடலாம்.. இப்ப ஹாஸ்பிடல் கிளம்பு..", என்று மதுசூதனன் சமாதானமாக நித்யாவின் முகம் பார்த்து கனிவாக கூறினான்.
"தம்பி.. உங்க காரில் நீங்க கிளம்ப மாட்டிங்களா....?", என்று முகிலனின் முகம் பார்த்து நித்யா கோபமாக கேட்க, "அண்ணி.. நீங்க எப்படி சொல்றீங்களோ... அப்படி செய்றேன்..", என்று நித்யாவிடம் கூறிக்கொண்டே தன் அறைக்கு சென்று தன் கார் சாவியோடு திரும்பினான் முகிலன்.
முகிலனோடு நித்யா காரில் கிளம்பி செல்ல, மதுசூதனன் தன் தோளைக் குலுக்கி கொண்டு, தன் காரில் மருத்துவமனைக்கு சென்றான்.
அவள் மருத்துவமனைக்கு செல்ல, வாசலில் நின்று கொண்டிருந்த ரூபா, "வேலையை முடித்துவிட்டு வர இவ்வளவு நேரமா..?", என்று புருவம் உயர்த்தி சலிப்பாக கேட்டாள்.
Last edited: