கட்டங்கள் – 40
மதுசூதனனின் மொபைலில் சதாசிவம் என்ற பெயர் மின்ன, மதுசூதனன், நித்யா இருவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்தனர்.
மதுசூதனின் மொபைல் ஒலிக்க.., காரை கிளப்பாமல், மொபைலை எடுத்து காதில் வைத்து பேச ஆரம்பித்தான் மதுசூதனன்.
நித்யா "என்ன?", என்று கண்களால் வினவ, "உஷ்...", என்று மதுசூதனன் விரலை, தன் உதடுகள் மீது வைத்து அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினான்.
"நான் பேசவில்லை...", என்று தன் கைகளால் நித்யா செய்கை காட்ட.., நித்யாவை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் மதுசூதனன்.
"ம்..", "சரி...", என்ற வார்த்தைகளைத் தவிர, மதுசூதனன் சதாசிவத்திடம் எதுவும் பேசாததால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாமல் நித்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சதாசிவத்திடம் பேசிவிட்டு, புன்முறுவலோடு காரை கிளப்பினான் மதுசூதனன்.
நித்யா அமைதியாக அமர்ந்திருக்க, "பேபி.. உன்னை வாயடைக்க இப்படி ஒரு வழி இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தா நான் இதை என்றோ செய்த்திருப்பேன்.." , என்று மதுசூதனன் மீண்டும் நித்யாவை வம்பிழுக்க, நித்யா அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் முறைப்பைப் பார்த்த மதுசூதனன்.., "பேபி.. நீ ரொம்ப அழகு..", என்று மதுசூதனன் நித்யாவை பார்த்தபடி ரசித்து கூற, நித்யா "களுக்கு " , என்று சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிற..?", என்று மதுசூதனன் சாலையை பார்த்தபடி கேட்க, "உங்க கண்ணை நினைத்து சிரித்தேன்.. ", என்று நித்யா நக்கலாக கூறினாள்.
"என் கண்ணிற்கு என்ன குறைச்சல்..?", என்று மதுசூதனன் தீவிரமாக சிந்தித்த படி கேட்க, "பக்கத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகுதே... ", என்று நித்யா கேலி தொனித்த குரலில் கூற, மதுசூதனன் ரசித்து சிரித்தான்.
"சதாசிவம் சார்.., அவங்க பெண்ணை பார்த்து பேசப் போகிறேன்.... பேசிட்டு பிஸ்னஸ் டீல் confirm பண்றேன் .., என்று கூறினார், ", என்று மதுசூதனன் கியரை மாற்றியபடியே கூற, "வாவ்.. தட்ஸ் எ கிரேட் நியூஸ்"..., என்று நித்யா சந்தோஷமாக கூறினாள்.
"உனக்கு நன்றி சொல்ல சொன்னார்...", என்று மதுசூதனன் ஸ்டியரிங்கை திருப்பியடியே கூற, நித்யா மெளனமாக புன்னகைத்தாள்.
"உனக்கு அந்த பெண் மேல் ஏன் இவ்வளவு அக்கறை... ", என்று மதுசூதனன் சிந்தனையோடு கேட்க, "எனக்கு உங்களை மாதிரி நல்ல கணவன் கிடைத்தற்கு அவங்களும் ஒரு காரணம்.. அதற்கு தான்..", என்று நித்யா உணர்ந்து கூற, "நான் செய்த தவறை சரி செய்கிறாயா நித்தி...", என்று ஆழமான குரலில் மதுசூதனன் கேட்க, "இதை நான் சொன்ன மாதிரியும் சொல்லலாம்..", என்று நித்யா கூறினாள் மதுசூதனனை வீட்டுக் கொடுக்காமல்.
"அவங்க அப்படி கல்யாணம் பண்ணதுக்கு நான் தான் காரணமா நித்தி...?", என்று மதுசூதனன் குரலில் வருத்தத்தோடு கேட்க, "நீங்க மட்டும் காரணம் இல்லை.. ஆனால் நீங்களும் ஒரு காரணம்...", என்று நித்யா அழுத்தமாக கூறினாள்.
"நித்தி நான் என் பிஸ்னெஸ்ஸை தவிர வேறு எதுவும் யோசித்ததில்லை.. யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை..", என்று மதுசூதனன் சாலையில் கவனமாக தீவிரமான குரலில் கூற, நித்யா மெளனமாக சிரித்தாள்.
"ஏன் பேபி.. என்னை நம்பலையா..? சிரிக்கிற...", என்று மதுசூதனன் வருத்தமான குரலில் கேட்க, "உங்களை விட உங்களை பற்றி எனக்கு நல்லா தெரியும்... நீங்க என் கிட்ட தன்னிலை விளக்கம் தர வேண்டாம்..", என்று நித்யா அழுத்தகமாக கூற, மதுசூதனன் சிரித்து கொண்டான்.
"வெண்பாவை பற்றி தெரிந்தும் அமைதியாக இருந்துட்ட...", என்று மதுசூதனன் மெதுவாக கூற, "நீங்க ரூபாவை பற்றி தெரிந்து அமைதியாக இருந்த மாதிரி ..", என்று நித்யா கண்சிமிட்டி சிரித்தாள்.
கார் அலுவலகத்தில் நுழைந்தது.
அவன் Lift ல் நுழைய, அவனோடு நுழைந்த நித்யா முதல் நாள் ஞாபகத்தில் புன்னகைக்க, இவள் சொன்ன டீல் நினைவுக்கு வர, "More than love.. You impressed me a lot….", என்று அவளை மனதார பாராட்டினான் மதுசூதனன்.
நித்யா புன்னகைத்து கொண்டே, உள்ளே நுழைய, "அண்ணி.. மாமா நல்லா இருக்காங்களா..?", என்று வினவ, "நல்லா இருக்காங்க..", என்று இன்முகமாக கூறிக்கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள் நித்யா.
நித்யா தன் டைரியை எடுத்து அனைத்து கட்டங்களையும் வெண்மை நிறத்திற்கு மாற்றினாள்.
நித்யாவிற்கு மதுசூதனனின் மேல் உள்ள கோபம், வருத்தம், வீம்பு, அவனிடம் கொண்ட பிடிவாதம் அனைத்தும் மதுசூதனனின் பொறுப்பான அன்பால் அழிந்து விட்டது.
மதுசூதனனின் மொபைலில் சதாசிவம் என்ற பெயர் மின்ன, மதுசூதனன், நித்யா இருவரும் ஒருவரையொருவர் அதிர்ச்சியாக பார்த்தனர்.
மதுசூதனின் மொபைல் ஒலிக்க.., காரை கிளப்பாமல், மொபைலை எடுத்து காதில் வைத்து பேச ஆரம்பித்தான் மதுசூதனன்.
நித்யா "என்ன?", என்று கண்களால் வினவ, "உஷ்...", என்று மதுசூதனன் விரலை, தன் உதடுகள் மீது வைத்து அமைதியாக இருக்கும் படி செய்கை காட்டினான்.
"நான் பேசவில்லை...", என்று தன் கைகளால் நித்யா செய்கை காட்ட.., நித்யாவை பார்த்து கண் சிமிட்டி சிரித்தான் மதுசூதனன்.
"ம்..", "சரி...", என்ற வார்த்தைகளைத் தவிர, மதுசூதனன் சதாசிவத்திடம் எதுவும் பேசாததால், அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாமல் நித்யா சிந்தனையில் ஆழ்ந்தாள்.
சதாசிவத்திடம் பேசிவிட்டு, புன்முறுவலோடு காரை கிளப்பினான் மதுசூதனன்.
நித்யா அமைதியாக அமர்ந்திருக்க, "பேபி.. உன்னை வாயடைக்க இப்படி ஒரு வழி இருக்குன்னு எனக்கு முன்னாடியே தெரிந்திருந்தா நான் இதை என்றோ செய்த்திருப்பேன்.." , என்று மதுசூதனன் மீண்டும் நித்யாவை வம்பிழுக்க, நித்யா அவனை முறைத்து பார்த்தாள்.
அவள் முறைப்பைப் பார்த்த மதுசூதனன்.., "பேபி.. நீ ரொம்ப அழகு..", என்று மதுசூதனன் நித்யாவை பார்த்தபடி ரசித்து கூற, நித்யா "களுக்கு " , என்று சிரித்தாள்.
"ஏன் சிரிக்கிற..?", என்று மதுசூதனன் சாலையை பார்த்தபடி கேட்க, "உங்க கண்ணை நினைத்து சிரித்தேன்.. ", என்று நித்யா நக்கலாக கூறினாள்.
"என் கண்ணிற்கு என்ன குறைச்சல்..?", என்று மதுசூதனன் தீவிரமாக சிந்தித்த படி கேட்க, "பக்கத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை கண்டுபிடிக்க இவ்வளவு நாள் ஆகுதே... ", என்று நித்யா கேலி தொனித்த குரலில் கூற, மதுசூதனன் ரசித்து சிரித்தான்.
"சதாசிவம் சார்.., அவங்க பெண்ணை பார்த்து பேசப் போகிறேன்.... பேசிட்டு பிஸ்னஸ் டீல் confirm பண்றேன் .., என்று கூறினார், ", என்று மதுசூதனன் கியரை மாற்றியபடியே கூற, "வாவ்.. தட்ஸ் எ கிரேட் நியூஸ்"..., என்று நித்யா சந்தோஷமாக கூறினாள்.
"உனக்கு நன்றி சொல்ல சொன்னார்...", என்று மதுசூதனன் ஸ்டியரிங்கை திருப்பியடியே கூற, நித்யா மெளனமாக புன்னகைத்தாள்.
"உனக்கு அந்த பெண் மேல் ஏன் இவ்வளவு அக்கறை... ", என்று மதுசூதனன் சிந்தனையோடு கேட்க, "எனக்கு உங்களை மாதிரி நல்ல கணவன் கிடைத்தற்கு அவங்களும் ஒரு காரணம்.. அதற்கு தான்..", என்று நித்யா உணர்ந்து கூற, "நான் செய்த தவறை சரி செய்கிறாயா நித்தி...", என்று ஆழமான குரலில் மதுசூதனன் கேட்க, "இதை நான் சொன்ன மாதிரியும் சொல்லலாம்..", என்று நித்யா கூறினாள் மதுசூதனனை வீட்டுக் கொடுக்காமல்.
"அவங்க அப்படி கல்யாணம் பண்ணதுக்கு நான் தான் காரணமா நித்தி...?", என்று மதுசூதனன் குரலில் வருத்தத்தோடு கேட்க, "நீங்க மட்டும் காரணம் இல்லை.. ஆனால் நீங்களும் ஒரு காரணம்...", என்று நித்யா அழுத்தமாக கூறினாள்.
"நித்தி நான் என் பிஸ்னெஸ்ஸை தவிர வேறு எதுவும் யோசித்ததில்லை.. யாருக்கும் கெடுதல் நினைத்ததில்லை..", என்று மதுசூதனன் சாலையில் கவனமாக தீவிரமான குரலில் கூற, நித்யா மெளனமாக சிரித்தாள்.
"ஏன் பேபி.. என்னை நம்பலையா..? சிரிக்கிற...", என்று மதுசூதனன் வருத்தமான குரலில் கேட்க, "உங்களை விட உங்களை பற்றி எனக்கு நல்லா தெரியும்... நீங்க என் கிட்ட தன்னிலை விளக்கம் தர வேண்டாம்..", என்று நித்யா அழுத்தகமாக கூற, மதுசூதனன் சிரித்து கொண்டான்.
"வெண்பாவை பற்றி தெரிந்தும் அமைதியாக இருந்துட்ட...", என்று மதுசூதனன் மெதுவாக கூற, "நீங்க ரூபாவை பற்றி தெரிந்து அமைதியாக இருந்த மாதிரி ..", என்று நித்யா கண்சிமிட்டி சிரித்தாள்.
கார் அலுவலகத்தில் நுழைந்தது.
அவன் Lift ல் நுழைய, அவனோடு நுழைந்த நித்யா முதல் நாள் ஞாபகத்தில் புன்னகைக்க, இவள் சொன்ன டீல் நினைவுக்கு வர, "More than love.. You impressed me a lot….", என்று அவளை மனதார பாராட்டினான் மதுசூதனன்.
நித்யா புன்னகைத்து கொண்டே, உள்ளே நுழைய, "அண்ணி.. மாமா நல்லா இருக்காங்களா..?", என்று வினவ, "நல்லா இருக்காங்க..", என்று இன்முகமாக கூறிக்கொண்டு தன் வேலையை பார்க்க சென்றாள் நித்யா.
நித்யா தன் டைரியை எடுத்து அனைத்து கட்டங்களையும் வெண்மை நிறத்திற்கு மாற்றினாள்.
நித்யாவிற்கு மதுசூதனனின் மேல் உள்ள கோபம், வருத்தம், வீம்பு, அவனிடம் கொண்ட பிடிவாதம் அனைத்தும் மதுசூதனனின் பொறுப்பான அன்பால் அழிந்து விட்டது.
Last edited: