கட்டங்கள் – 42
சத்தம் கேட்டு எழுந்த மதுசூதனன் , அருகில் நித்யாவை காணாமல் தேடினான்.
கதவு உள்பக்கமாக, தாழிட்டுயிருக்க நித்யாவைத் தேடி பால்கனிக்கு சென்றான்.
அவன் பால்கனிக்கு செல்லவும், பால்கனி வாசலில் மேலிருந்து மறுபடியும் படாரென்று சத்தம் கேட்க.., அண்ணாந்து பார்த்தான் மதுசூதனன்.
அவன் முகத்தில், பூக்கள் விழ.., மதுசூதனன் அதிர்ச்சியிலிருந்து வெளி வருவதற்குள், மீண்டும் சத்தத்தோடு தண்ணீர் விழுந்தது. மதுசூதனன் முழுதாக நனைந்திருக்க, "ஹாப்பி.. பர்த்டே...", என்று நித்யா வாழ்த்து தெரிவித்தாள்
மனதில் சந்தோசம் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, "ராத்திரி நேரம் இப்படி தான் தண்ணீர் கொட்டி விளையாடுவியா..? ", என்று மதுசூதனன் சிடுசிடுப்பாக கேட்க, தன் தோள்களை குலுக்கிக் கொண்டு, "ஆம்" , என்று தலை அசைத்தாள் நித்யா.
"இது எல்லாம் யாரோடது..? என்ன சின்ன குழந்தை விளையாட்டு சாமான் எல்லாம் வைத்திருக்க..?", என்று ஈரத்தோடு நின்ற மதுசூதனன் கடுப்பாக கேட்க, "எல்லாம் என் சாமான்.. யாரும் தொட கூடாது..", என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, அவனுக்கு நீல நிற துண்டை நீட்டினாள் நித்யா.
"இதை யார் தொடுவா..?", என்று எண்ணியபடியே., அந்தத் துண்டை வாங்கினான்.
துண்டைப் பார்த்த மதுசூதனன், "என் துண்டு எங்கே..? ஏன் ப்ளூ கலர் துண்டை கொடுக்கிற,?", என்று கேள்வியோடு அவளை முறைத்தான்.
"வேணுமுன்னா இதை உபயோகிச்சிக்கோங்க.. இல்லைனா இப்படியே ஈரமா நில்லுங்கள்..", என்று நித்யா கறாராக கூற, அவளை திட்டிக் கொண்டே, தன் தலையை துவட்டினான் மதுசூதனன்.
அவன் முன் ஹார்ட் வடிவம் கொண்ட கேக்கை நீட்டி, மீண்டும் அவனை நித்யா வாழ்த்த, "இதெல்லாம் எதற்கு..?", என்று முகம் சுருக்கி தயக்கமாக மதுசூதனன் கேட்க, "வேண்டாமா..? சொல்லுங்கள்.. முகிலன், அத்தை, மாமா எல்லாரையும் எழுப்பி அவங்களுக்குக் கொடுக்கிறேன்..", என்று கூறி, " முகிலன் ", என்று நித்யா சத்தமாக குரல் கொடுக்க, அவள் தலையில் தட்டி.., "லூசு.. லூசு.. சத்தம் போடாத...", என்று முணுமுணுப்பாகக் கூறினான் மதுசூதனன்.
" இவளால் கண்ணைக் கட்டுதே...", என்று எண்ணியபடியே ஊஞ்சலில் அமர்ந்தான் மதுசூதனன்.
அவனைக் கேலி புன்னகையோடு நித்யா பார்த்துக் கொண்டிருக்க, "உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?", என்று மதுசூதனன் புன்னகையோடு கேட்டான்.
நித்யா சம்மதமாக தலை அசைக்க, "ஒரு ஊரில் சோமு.. சோமுன்னு ஒருத்தன் இருந்தான்..", என்று மதுசூதனன் கூற, "அவன் பெயர் சோமுவா..? இல்லை சோமு சோமுவா ?" , என்று நித்யா தீவிரமாக சந்தேகம் கேட்க, "நான் முடிக்கும் வரை நீ இடையில் பேச கூடாது..", என்று மதுசூதனன் கடுமையாக கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் நித்யா.
"சோமுவுக்கு lottery யில் அதிர்ஷ்டவசமாக ஒரு bulldozer கிடைத்ததாம்.. தனக்கு ஒத்து வராதென்று தெரிந்தும்.., கிடைத்த அதிர்ஷ்ட பொருளான bulldozer ரை விட்டுக் கொடுக்க மனமில்லாமல்... அதை வீட்டிற்குக் கொண்டு வந்தான். அவன் வீட்டிற்கு வரும் பாதை ரொம்ப சின்னதா இருந்ததால் வரும் வழியில் இரண்டு வீடுகளில் சுவர் இடிபட்டு, உடைந்த சுவருக்கு அபராதமும் கட்டிவிட்டு bulldozer ரோடு வீட்டிற்கு வந்தான் சோமு..,", என்று மதுசூதனன் கதையை நிறுத்த, "மச்சு", என்று குரல் எழுப்பி பரிதாபமாக தலை அசைத்தாள் நித்யா.
மதுசூதனன் மேலும் கதையை தொடர்ந்தான், " வீட்டிற்கு வந்து பார்த்தால், வாசல் மிகவும் குறுகியதாக இருந்தது.. அதை இடித்துச் சரி செய்தான் சோமு.. bulldozer உள்ளே சென்றால், உள்ளே நுழைய முடியவில்லை.., கூரை உயரம் குறைவாக இருந்தது.. அதையும் இடித்துக் கட்டினான் சோமு..", என்று மதுசூதனன் சோகமாக கூற, "அதற்கு அந்தப் bulldozerரை முதலிலேயே வேண்டாமென்று சொல்லிருக்கலாம்...", என்று நித்யா கடுப்பாக கூறினாள்.
"இது சரி.. உன் அறிவோ.. அறிவு..", என்று மதுசூதனன் நித்யாவை பாராட்ட, மதுசூதனனைச் சந்தேகமாக பார்த்தாள் நித்யா.
முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, கண்களில் கேலி புன்னகை மின்ன, " பாரேன்.. உனக்கு இருக்கும் அறிவு எனக்கு இல்லை.. கல்யாணத்தன்று அதிர்ஷ்டமாகக் கிடைத்த பெண்ணை விட மனமில்லாமல்.. அந்தப் பெண்ணை கூட கூட்டிட்டு வந்து நான் படும் பாடு இருக்கே...", என்று மதுசூதனன் சோகமாக கூற, நித்யா அவனை கோபமாக முறைத்தாள்.
பால்கனியில் இருந்து தங்கள் அறைக்குள் சென்று, மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்தாள் நித்யா.
"ஏன் பேபி கோபப்படுற..? நான் நீ எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமென்று சொல்ல வந்தேன்...", என்று மதுசூதனன் அதே கேலி புன்னகையோடு கூற, "இப்பொழுது பேச மாட்டேன்.. நாளைக் காலை என்ன நடக்குதுன்னு பாருங்கள்..", என்று மனதிற்குள் கூறிக்கொண்டு அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள் நித்யா.
"யாரவது கேலி பேச்சுக்கு கோபப்படுவார்களா...? வா கேக் சாப்பிடலாம்..", என்று மதுசூதனன் அவளை பால்கனிக்கு அழைத்துச் செல்ல, நித்யா சிரித்த முகமாக அவனோடு சென்றாள்
"ஹே.. அருமை.. நைஸ் டிசைன் அண்ட் சூப்பர் டேஸ்ட்...", என்று மதுசூதனன் கூற, நித்யா அமைதியாகப் புன்னகைத்தாள்.
"நித்யா இன்னும் கோபமா..? விளையாட்டுக்குத் தான் சொன்னேன்..", என்று மதுசூதனன் கூற, நித்யா அவனை ஆழமாகப் பார்த்தாள்.
"நைட் ஒரு மனிதனை எழுப்பி தலையில் தண்ணி ஊற்றி நீ விளையாடலாம்.. அது தப்பில்லை.. நான் கேலி பேசினால் அது தப்பா..?", என்று அவன் சட்டம் பேச நித்யா மெலிதாக புன்னகைத்தாள்.
"இது நித்யா...!!", என்று அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, "கேக் செம.. எங்க வாங்கின..?", என்று அவன் கேக்கை ருசித்த படி கேட்க, "நான் வீட்டில் செய்தேன்..", என்று அவள் பெருமையாக கூற, "Really Awesome..Design and Taste..", என்று நித்யாவை மனதார பாராட்டினான்.
"கேக் மட்டும் தானா நித்யா..?", என்று மதுசூதனன் ஆழமான குரலில் கேட்க, நித்யா அவன் முகத்தைப் பார்த்து, "வேறு என்ன வேண்டும்..?", என்று தலை சாய்த்துக் கேட்டாள் நித்யா.
"உன் சம்மதம்..", என்று மதுசூதனன் சுவரில் சாய்ந்து நித்யாவின் முகம் பார்த்து கூற, "இது என்ன புதுசா இருக்கு.. நீங்க என்ன சொன்னாலும் நான் எல்லாவற்றிக்கும் சரியென்று தானே சொல்றேன்..", என்று நித்யா புன்னகையோடு அமைதியாகக் கூற, மதுசூதனன் சிரித்துக் கொண்டான்.
"முகிலன்..", என்று மதுசூதனன் தயக்கமாக ஆரம்பிக்க, நித்யா தன் கண்களைச் சுருக்கி கொண்டு மதுசூதனனை நேரடியாகப் பார்த்தாள்.
"முகிலன் காயத்ரியை கல்யாணம் செய்யணும்முன்னு விரும்பறான்...", என்று மதுசூதனன் நிதானமாகக் கூற, மதுசூதனன் கூறிய சொற்கள் நினைவு வர நித்யாவின் முகம் மாறியது.
" மதுசூதனன் இன்று மாறி இருக்கலாம்.., ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் அப்படிக் கூறிவிட்டால்...?", என்ற எண்ணம் தோன்ற நித்யா மறுப்பாகத் தலை அசைக்க எண்ணுகையில், அவள் முகத்திலிருந்து நித்யாவின் முடிவை அறிந்து கொண்ட மதுசூதனன், "நீ மறுத்தால் என் மனம் மிகவும் வருந்தும்.. ", என்று கூறிவிட்டு முகவாட்டத்தோடு அவர்கள் அறைக்குள் செல்ல, அவன் வருந்திச் செல்வது பிடிக்காமல் அவன் செல்லும் வழியை மறித்து நின்றாள் நித்யா.
சத்தம் கேட்டு எழுந்த மதுசூதனன் , அருகில் நித்யாவை காணாமல் தேடினான்.
கதவு உள்பக்கமாக, தாழிட்டுயிருக்க நித்யாவைத் தேடி பால்கனிக்கு சென்றான்.
அவன் பால்கனிக்கு செல்லவும், பால்கனி வாசலில் மேலிருந்து மறுபடியும் படாரென்று சத்தம் கேட்க.., அண்ணாந்து பார்த்தான் மதுசூதனன்.
அவன் முகத்தில், பூக்கள் விழ.., மதுசூதனன் அதிர்ச்சியிலிருந்து வெளி வருவதற்குள், மீண்டும் சத்தத்தோடு தண்ணீர் விழுந்தது. மதுசூதனன் முழுதாக நனைந்திருக்க, "ஹாப்பி.. பர்த்டே...", என்று நித்யா வாழ்த்து தெரிவித்தாள்
மனதில் சந்தோசம் இருந்தாலும், அதை மறைத்துக் கொண்டு, "ராத்திரி நேரம் இப்படி தான் தண்ணீர் கொட்டி விளையாடுவியா..? ", என்று மதுசூதனன் சிடுசிடுப்பாக கேட்க, தன் தோள்களை குலுக்கிக் கொண்டு, "ஆம்" , என்று தலை அசைத்தாள் நித்யா.
"இது எல்லாம் யாரோடது..? என்ன சின்ன குழந்தை விளையாட்டு சாமான் எல்லாம் வைத்திருக்க..?", என்று ஈரத்தோடு நின்ற மதுசூதனன் கடுப்பாக கேட்க, "எல்லாம் என் சாமான்.. யாரும் தொட கூடாது..", என்று அழுத்தமாகக் கூறிவிட்டு, அவனுக்கு நீல நிற துண்டை நீட்டினாள் நித்யா.
"இதை யார் தொடுவா..?", என்று எண்ணியபடியே., அந்தத் துண்டை வாங்கினான்.
துண்டைப் பார்த்த மதுசூதனன், "என் துண்டு எங்கே..? ஏன் ப்ளூ கலர் துண்டை கொடுக்கிற,?", என்று கேள்வியோடு அவளை முறைத்தான்.
"வேணுமுன்னா இதை உபயோகிச்சிக்கோங்க.. இல்லைனா இப்படியே ஈரமா நில்லுங்கள்..", என்று நித்யா கறாராக கூற, அவளை திட்டிக் கொண்டே, தன் தலையை துவட்டினான் மதுசூதனன்.
அவன் முன் ஹார்ட் வடிவம் கொண்ட கேக்கை நீட்டி, மீண்டும் அவனை நித்யா வாழ்த்த, "இதெல்லாம் எதற்கு..?", என்று முகம் சுருக்கி தயக்கமாக மதுசூதனன் கேட்க, "வேண்டாமா..? சொல்லுங்கள்.. முகிலன், அத்தை, மாமா எல்லாரையும் எழுப்பி அவங்களுக்குக் கொடுக்கிறேன்..", என்று கூறி, " முகிலன் ", என்று நித்யா சத்தமாக குரல் கொடுக்க, அவள் தலையில் தட்டி.., "லூசு.. லூசு.. சத்தம் போடாத...", என்று முணுமுணுப்பாகக் கூறினான் மதுசூதனன்.
" இவளால் கண்ணைக் கட்டுதே...", என்று எண்ணியபடியே ஊஞ்சலில் அமர்ந்தான் மதுசூதனன்.
அவனைக் கேலி புன்னகையோடு நித்யா பார்த்துக் கொண்டிருக்க, "உனக்கு ஒரு கதை சொல்லட்டுமா?", என்று மதுசூதனன் புன்னகையோடு கேட்டான்.
நித்யா சம்மதமாக தலை அசைக்க, "ஒரு ஊரில் சோமு.. சோமுன்னு ஒருத்தன் இருந்தான்..", என்று மதுசூதனன் கூற, "அவன் பெயர் சோமுவா..? இல்லை சோமு சோமுவா ?" , என்று நித்யா தீவிரமாக சந்தேகம் கேட்க, "நான் முடிக்கும் வரை நீ இடையில் பேச கூடாது..", என்று மதுசூதனன் கடுமையாக கூற, சம்மதமாகத் தலை அசைத்தாள் நித்யா.
"சோமுவுக்கு lottery யில் அதிர்ஷ்டவசமாக ஒரு bulldozer கிடைத்ததாம்.. தனக்கு ஒத்து வராதென்று தெரிந்தும்.., கிடைத்த அதிர்ஷ்ட பொருளான bulldozer ரை விட்டுக் கொடுக்க மனமில்லாமல்... அதை வீட்டிற்குக் கொண்டு வந்தான். அவன் வீட்டிற்கு வரும் பாதை ரொம்ப சின்னதா இருந்ததால் வரும் வழியில் இரண்டு வீடுகளில் சுவர் இடிபட்டு, உடைந்த சுவருக்கு அபராதமும் கட்டிவிட்டு bulldozer ரோடு வீட்டிற்கு வந்தான் சோமு..,", என்று மதுசூதனன் கதையை நிறுத்த, "மச்சு", என்று குரல் எழுப்பி பரிதாபமாக தலை அசைத்தாள் நித்யா.
மதுசூதனன் மேலும் கதையை தொடர்ந்தான், " வீட்டிற்கு வந்து பார்த்தால், வாசல் மிகவும் குறுகியதாக இருந்தது.. அதை இடித்துச் சரி செய்தான் சோமு.. bulldozer உள்ளே சென்றால், உள்ளே நுழைய முடியவில்லை.., கூரை உயரம் குறைவாக இருந்தது.. அதையும் இடித்துக் கட்டினான் சோமு..", என்று மதுசூதனன் சோகமாக கூற, "அதற்கு அந்தப் bulldozerரை முதலிலேயே வேண்டாமென்று சொல்லிருக்கலாம்...", என்று நித்யா கடுப்பாக கூறினாள்.
"இது சரி.. உன் அறிவோ.. அறிவு..", என்று மதுசூதனன் நித்யாவை பாராட்ட, மதுசூதனனைச் சந்தேகமாக பார்த்தாள் நித்யா.
முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு, கண்களில் கேலி புன்னகை மின்ன, " பாரேன்.. உனக்கு இருக்கும் அறிவு எனக்கு இல்லை.. கல்யாணத்தன்று அதிர்ஷ்டமாகக் கிடைத்த பெண்ணை விட மனமில்லாமல்.. அந்தப் பெண்ணை கூட கூட்டிட்டு வந்து நான் படும் பாடு இருக்கே...", என்று மதுசூதனன் சோகமாக கூற, நித்யா அவனை கோபமாக முறைத்தாள்.
பால்கனியில் இருந்து தங்கள் அறைக்குள் சென்று, மெத்தையில் சம்மணமிட்டு அமர்ந்தாள் நித்யா.
"ஏன் பேபி கோபப்படுற..? நான் நீ எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டமென்று சொல்ல வந்தேன்...", என்று மதுசூதனன் அதே கேலி புன்னகையோடு கூற, "இப்பொழுது பேச மாட்டேன்.. நாளைக் காலை என்ன நடக்குதுன்னு பாருங்கள்..", என்று மனதிற்குள் கூறிக்கொண்டு அவனைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள் நித்யா.
"யாரவது கேலி பேச்சுக்கு கோபப்படுவார்களா...? வா கேக் சாப்பிடலாம்..", என்று மதுசூதனன் அவளை பால்கனிக்கு அழைத்துச் செல்ல, நித்யா சிரித்த முகமாக அவனோடு சென்றாள்
"ஹே.. அருமை.. நைஸ் டிசைன் அண்ட் சூப்பர் டேஸ்ட்...", என்று மதுசூதனன் கூற, நித்யா அமைதியாகப் புன்னகைத்தாள்.
"நித்யா இன்னும் கோபமா..? விளையாட்டுக்குத் தான் சொன்னேன்..", என்று மதுசூதனன் கூற, நித்யா அவனை ஆழமாகப் பார்த்தாள்.
"நைட் ஒரு மனிதனை எழுப்பி தலையில் தண்ணி ஊற்றி நீ விளையாடலாம்.. அது தப்பில்லை.. நான் கேலி பேசினால் அது தப்பா..?", என்று அவன் சட்டம் பேச நித்யா மெலிதாக புன்னகைத்தாள்.
"இது நித்யா...!!", என்று அவளைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, "கேக் செம.. எங்க வாங்கின..?", என்று அவன் கேக்கை ருசித்த படி கேட்க, "நான் வீட்டில் செய்தேன்..", என்று அவள் பெருமையாக கூற, "Really Awesome..Design and Taste..", என்று நித்யாவை மனதார பாராட்டினான்.
"கேக் மட்டும் தானா நித்யா..?", என்று மதுசூதனன் ஆழமான குரலில் கேட்க, நித்யா அவன் முகத்தைப் பார்த்து, "வேறு என்ன வேண்டும்..?", என்று தலை சாய்த்துக் கேட்டாள் நித்யா.
"உன் சம்மதம்..", என்று மதுசூதனன் சுவரில் சாய்ந்து நித்யாவின் முகம் பார்த்து கூற, "இது என்ன புதுசா இருக்கு.. நீங்க என்ன சொன்னாலும் நான் எல்லாவற்றிக்கும் சரியென்று தானே சொல்றேன்..", என்று நித்யா புன்னகையோடு அமைதியாகக் கூற, மதுசூதனன் சிரித்துக் கொண்டான்.
"முகிலன்..", என்று மதுசூதனன் தயக்கமாக ஆரம்பிக்க, நித்யா தன் கண்களைச் சுருக்கி கொண்டு மதுசூதனனை நேரடியாகப் பார்த்தாள்.
"முகிலன் காயத்ரியை கல்யாணம் செய்யணும்முன்னு விரும்பறான்...", என்று மதுசூதனன் நிதானமாகக் கூற, மதுசூதனன் கூறிய சொற்கள் நினைவு வர நித்யாவின் முகம் மாறியது.
" மதுசூதனன் இன்று மாறி இருக்கலாம்.., ஆனால் எதிர்காலத்தில் மீண்டும் அப்படிக் கூறிவிட்டால்...?", என்ற எண்ணம் தோன்ற நித்யா மறுப்பாகத் தலை அசைக்க எண்ணுகையில், அவள் முகத்திலிருந்து நித்யாவின் முடிவை அறிந்து கொண்ட மதுசூதனன், "நீ மறுத்தால் என் மனம் மிகவும் வருந்தும்.. ", என்று கூறிவிட்டு முகவாட்டத்தோடு அவர்கள் அறைக்குள் செல்ல, அவன் வருந்திச் செல்வது பிடிக்காமல் அவன் செல்லும் வழியை மறித்து நின்றாள் நித்யா.