அத்தியாயம் 23
இவளைப் போல் அவனும் சில இடங்களில் தடுமாறினான்.
ஆனால், முகில் கீழே விழுந்தாலும் ஸ்னோ ஒட்டவில்லை என்னும் ரகமாச்சே, சமாளித்துக் கொண்டிருந்தான். அவன் திணறுவதை ஆசை தீர பார்த்த கண்மணி, அவன் தோளில் தட்டி,
“அட்வைஸ் பண்றது ரொம்ப எளிதான விஷயம் சார்... மத்தவங்கக்கிட்ட சொல்றப்ப மட்டும் தான் அது ஈஸியா தெரியும், நகருங்க...” என்று மறுபடியும் இவளே பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள்
இத்தனை களேபரத்தில் கார்த்தியும் வழி மாற்றிவிட்டது என்று இன்னும் நடக்க விட்டான். பேபி கார்ட் இருந்தும் அதைப் பணி பொழிந்த சாலையில் தள்ள முடியவில்லை. முழு நேரமும் தமிழை கண்மணி சுமந்து கொண்டிருந்தாள். நிரல்யா சற்று பெரிய குட்டி என்பதால், நடந்து வந்தாள் பிரச்சனை தராது.
ஒருவழியாய் அவர்களின் ஹோட்டலுக்கு வந்து சேர, சற்று நேர ஓய்வுக்குப் பின் அடுத்த இடம் போனார்கள்.
மொத்த ஊரும் வெள்ளை வெளேர் என்றிருந்தது. எல்லா இடமும் பனிக்கட்டிகள். ஒரு சிலர் அவர்கள் வீட்டின் கூரை மேலேறி அங்கிருந்த பனிகுமியலை தள்ளிக் கொண்டிருந்தனர்.
சில மெஷின்கள் சாலையில் குமிந்திருந்த பனி மலையை அகற்றிக் கொண்டிருந்தது. போகும் வழியெங்கும் இவள் அருகிலேயே இருந்தான் முகில். அவர்கள் போயிருந்த இடம் பனிக்கட்டிகளான சிற்பங்களை செய்துவைத்திருந்த இடம். சிலைகளும், வீடுகளும் மாளிகைகளும் அழகழகாய் செய்து வைத்திருந்தனர்.
அத்தனை கலைநயம். அதை மேன்மேலும் அழகாக்குவது போல் விளக்குகள் மூலம் அலங்கரித்திருந்தனர். எல்லாமே ரம்மியமாய் இருக்க, ஒன்றே ஒன்று மட்டும் கண்மணியால் தாளமுடியவில்லை. அது மக்கள் கூட்டம்.
ஜப்பானில் மக்கள் தொகை குறைவு என்றனர், ஆனால் இங்கு எங்குச் சென்றாலும் லைன் கட்டி நின்றனர். இந்தக் குளிரில் மணிக்கணக்கில் நின்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டி இருந்தது.
போட்டோ எடுக்க லைன், டிக்கெட் வாங்குவதற்கு வரிசை, குப்பை போட வரிசை. அட என்னங்கடா. ஆனால் அது எத்தனை நல்லொழுக்கம்.
இந்தக் கூட்டத்தைச் சபித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு அதனால் ஏற்பட்ட நன்மைகள் இருந்ததென்னவோ உண்மை. அது தன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் என்று இவள் நினைத்திருக்க, திவ்யா இவள் புறம் திரும்பி ‘எனக்கும் தெரியுமுடி...’ என்பதுபோல் கண்ணடித்துக் கொண்டிருந்தாள்.
கண்மணிக்கு தோழியின் செய்கையில் தலை குனிவதைத் தவிர வேறு வழியில்லை. கூட்டத்தில் இருந்து அவளையும் குழந்தையும் பாதுகாக்க எண்ணிய முகில், இவள் தோளில் கைபோட்டு தன்னுடன் இணைத்திருந்தான். பத்திரமாய் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கரையில். இந்தப் பெண் மனம் அதன் காரணமாய் துள்ள ஆரம்பித்திருந்தது. திவ்யாவும் அவள் நினைப்பிற்கு ஒத்து ஊதி, ஓட்டிக் கொண்டிருந்தாள் தோழியை.
கூட்டம் குறைந்த இடம் வந்ததும் முகில் அவன் பற்றியிருந்தவளை விட்டாலும், திவ்யா கண்மணியை விடாமல் பிடித்துக் கொண்டாள்.
“என்ன கண்மணி கூட்டத்தில் என்னென்னவோ நடக்குது...”
தன்னைத் தான் சொல்கிறாள் என்பது தெரிந்தும், “ம்ம்... அதுவா. கீழே விழுந்து வச்சேன்னா அடி பட்டிடும் தானே, அதான்...” என்றாள் சமாளிப்பாய்.
அவள் சொன்னதுக்குத் திவ்யாவும், “அட அட... என்ன ஒரு அக்கறை...” என்று கிண்டலடிக்க,
“ஆமாம். ஆனா அது எனக்கில்லை அவர் பொண்ணுக்கு...” என்றாள் மற்றவள்.
“ஓ ஹோ...!!! அவர் பொண்ணுக்காகப் பார்த்தாராமா? பாரேன் அவர் மனசுல நினைச்ச விஷயம் கூட உனக்குக் கேட்டிருக்கு. அத்தனை நெருக்கம் போல.”
திவ்யா சொன்ன தொனியில், தோழிகள் இருவரும் புன்னகையில் மூழ்கினர். கார்த்தி இவர்கள் இருந்த திசையைப் பார்த்து.
“ஃபோன்லையும் நேர்லையும் இத்தனை பேசியும் உங்க இரண்டு பேருக்கு இன்னும் விஷயம் பாக்கி இருக்கு போல. ஆனா இப்போ இங்க போட்டோ எடுத்திட்டு சீக்கிரம் ஹோட்டலுக்குக் கிளம்பலாமே...” என்றழைத்தான்.
அதற்கேற்ப, குடும்பச் சகிதமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கார்த்தி முழு நேர போட்டோகிராபராக மாறி முகில் கண்மணியை பல கேண்டிட் ஸ்ஷாட்ஸ் எடுத்தது அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை.
பயணம் ஆரம்பித்ததிலிருந்து கண்மணியின் எண்ணம் போலவே நடந்தன எல்லாம். அவனின் செயல்கள் அவளுக்குள் இருந்த பெண்மையை இன்பமாக்கியது. முகில் தனக்கானவன் என்பதை அச்சாணி கொண்டு எழுதியது போல.
இரு குடும்பமும் தங்கியிருந்த ரிசார்ட் வளாகத்தில் நிறைய விளையாட்டு அரங்குகள், ஆன்சன் என்னும் நீர்நிலைகள் என்று சகலமும். அங்கெல்லாம் வரவில்லை என்றாலும் விடாது திவ்யா இவளைத் தள்ளிக்கொண்டு போனாள்.
விருப்பமில்லாமல் போனாலும் விரைவில் அவற்றில் எல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு பின்னிரவே அவரவர் அறைக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் மட்டும் தான் இப்படி என்றில்லை. பொதுவாய் நிறைய ஜப்பானிய மங்கையர்களும் அந்த ஆன்சனில் பின்னிரவு வரை பொழுதை கழிந்திருந்தனர். பாதுகாப்பான ஊர், பாதுகாப்பான இடம்.
மகளிரைப் பொறுத்த வரையும் எந்த வித பயமும் இல்லை. சட்டங்கள் அத்தனை கடுமையானவை. மக்கள் அதற்கெல்லாம் பயந்தாவது ஒழுங்காய் இருந்தனர். சாலை விபத்து என்றோ, பெண்களுக்குப் பிரச்சனை என்றோ அங்குச் செய்திகள் வருவது வெகு அரிது. கண்மணிக்கு நம் ஊரும் இப்படி மாறிவிட்டால் எப்படியிருக்கும் என்றிருந்தது. மாறும் நம்புவோம்.
அறைக்குத் திரும்பியவள் கண்டது தந்தையும் மகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை. அத்தனை பாதுகாப்பாய்த் தன் பிள்ளையைக் கட்டிக்கொண்டு உறங்கியிருந்தான் முகில்.
என்றேனும் அந்த அணைப்புக்குள் தானிருந்தால் எப்படி இருக்கும்? தன் எண்ணம் போன போக்கைத் தடுக்க முடியவில்லை கண்மணிக்கு.
‘ம்ம்ம்... நம் கொடுப்பினை அவ்வளவு தான்...’ ஏக்கத்தைத் தூர எறிந்தவள், இப்போது தூக்கத்துக்கு ஏங்கி தன் இடத்தில் போய்ப் படுத்தாள்.
அன்று அலைந்த அலைச்சலுக்கும் அதன் பின் நீச்சல் குளத்தில் போட்ட ஆட்டம் எல்லாமாய்ச் சேர்ந்து விரைவாய் நித்திரா தேவியிடம் சரணாகதியாகி விட்டாள்.
காலையில் கண் முழித்தவள் புரண்டு படுக்க, அவள் கை அவள் பக்கம் இருந்தவனின் மீது விழுந்தது. தூக்கம் இன்னும் மிச்சம் இருக்க, திறக்க முடியாத கண்களைச் சிரமம்பட்டு திறந்து பார்க்க அவள் கை போட்டது முகிலின் மீது. அதை உணர்ந்தவளுக்கு உடல் எல்லாம் சிலிர்த்துக் கொண்டது.
இவன் எப்படி? ஐயோ ஆர்வ கோளார்ல அவன் படுக்கைக்கே வந்துட்டேனா? வெட்கக்கேடு.
அவன் மேல் விழுந்த கையை எடுத்தவள் எழுந்து அமர்ந்து கொண்டு தன்னை நிதானப்படுத்திப் பார்க்க, அது அவளின் படுக்கை தான். துரை தான் இடத்தை மாற்றியிருக்கிறார்.
சட்டென்று அந்த இடத்திலிருந்து அவள் எழுந்து கொள்ள அந்த அசைவில் விழித்துக் கொண்டான் அவனும். இவள் படபடவென்று எழுந்து போய் அவன் எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்த வேகத்தைப் பார்த்தவன்
‘என்ன ஆச்சு, ஏன் இப்படிப் பதறுற?’ என்பது போல் அவளை நேராகப் பார்த்தான்.
'செய்றதை எல்லாம் செஞ்சிட்டு பார்வையைப் பாரு. ஊமைக்கோட்டான்...’ என்று மனதுக்குள் அவளை திட்டிக்கொண்டாள் இவளும்.
இவள் அவனைப் பார்த்த குற்றம் சாட்டும் பார்வையில், தன் பக்கம் விளக்கம் சொல்வது அவசியம் என்று அவனுக்குப் பட, “ஏதோ கெட்ட கனவு போல. தூக்கத்தில் ரொம்பப் புலம்பிகிட்டு இருந்தே... அதான்...” என்றான் மெல்ல.
“அதுக்கு? என்ன டா பண்ணே...?” என்று அவள் மனம் அடித்துக் கொண்டது.
அவள் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க,
“ஏன் அப்படிப் பார்க்குறே? ஜஸ்ட் கொஞ்ச நேரம் உன்னைத் தட்டி விட்டேன், நீயும் தூங்கிட்ட அவ்வளவுதான். வேற எதுவும் செய்யலை கண்மணி...” அவன் அப்பாவி போல் சொன்ன தொனியில் சிரிப்பு வந்தாலும், சட்டென்று அதை அடக்கி,
“போதும், உங்க விளக்கம்...” என்றவளுக்கு அவன் முன் நிற்பதே வெட்கமாகிப் போனது. அறையில் இருந்த பாத்ரூமில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
முந்தின இரவில் அவள் தூக்கத்தில் அவளின் தாயை நினைத்து அழுததும், அதனால் அவன் அவள் பக்கம் சென்று ஆதரவாய் தட்டிக் கொடுத்ததும், தூக்கக் கலக்கத்தில் அவள் பக்கமே அவன் உறங்கிவிட்டதும் முழுதாய் விளக்க முடியாமல் போனது அவனால்.
அவனின் இந்தப் புதிய பார்வையும், அவனின் ஸ்பரிசமும் மறுபடியும் எண்ணிப் பார்த்து வெட்கப்பட்டவளைப் பார்த்த ஒரே சாட்சி குளியலறைக் கண்ணாடியில் தெரிந்த கண்மணியின் பிம்பம் மட்டுமே.
இந்த பயணம் இவர்கள் இருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயமானது. முகில் அவளிடம் கொஞ்சமேனும் இணக்கமாகி விட்டிருந்தான். சட்டென்று மாறியது வானிலை என்பது போல் நடந்த இந்த விஷயத்தை ஏன் எப்படி எங்கே அன்று அலசி ஆராய இருவருக்கும் இஷ்டமில்லை.
ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் அவன் மாற்றம் நிலையானதாக இருக்க வேண்டும், அதுவே கண்மணியின் வேண்டுதலாய் இருந்தது.
ஹோட்டலில் தங்கியிருந்தது போல் அனைவரும் ஒரே அறையில் தூங்க வேண்டும் இனி, என்று அந்த வீட்டு இளவரசியின் கட்டளைக்கிணங்க, முகிலின் நித்திரை தளம் சோபாவில் இருந்து முன்னேறி அவர்கள் இருவரின் பக்கம் வந்தது.
கண்மணிக்கும் அவனுக்கும் நடுவில் தமிழினி, தூங்கப் போகும் முன்பு வரைக்கும் கூட அத்தனை அபாரமாய் வேலை செய்யும் தன் மகளின் மூளையில் உதிக்கின்ற கேள்விகளுக்கும், நகைச்சுவையான பேச்சுக்களுக்கும் முகில் அடிமையாகிவிட்டிருந்தான்.
அதற்கும் மேல் கண்மணியிடம். நல்ல சமையல் கணவனின் மனதில் இடம் பிடிக்க உதவும் குறுக்குவழி என்பர். இவள் அதிலும் டேக் டைவர்ஷன் என்பது போல் அவன் மகளை வைத்து அவன் மனதை நெருங்கிவிட்டிருந்தாள்.
எந்த விதத்திலும் தமிழை விட்டுத்தாராது அன்பைப் பொழிந்து ஆராதித்து அவள் கொண்டு சென்ற விதம் அவனைக் கவர்ந்தது. அவன் மனக் கதவை அவளுக்காகத் திறந்து கொள்ளத் துணிந்தது.
இத்தனை தாமதமாக என்றாலும் நடந்ததே, அது வரை சந்தோஷம்.
இந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருப்பினும், தான் யாருமற்ற அனாதை என்று அவள் கனவில் புலம்பியதும் ஒன்று. தானும் அப்படி ஒரு நிலையில் தானே இருக்கிறோம், ஏன் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று முகில் எண்ண ஆரம்பித்தது அப்போது தான்.
கண்மணியை பற்றி இதையெல்லாம் சிந்தித்தவாறு உறங்கிவிட்டான் முகில்.
இத்தனை வலிமையான ஆட்டத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை. பயங்கரமான நிலநடுக்கம். வீட்டில் இருந்த கப்போர்ட், அலங்காரப் பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தன.
வியர்த்து விறுவிறுத்துப் போனவன், தன் வீடு இருந்த ஆறாவது மாடியில் இருந்து எட்டிபார்க்க, சுனாமியின் தாக்கத்தால், கடலில் இருக்க வேண்டிய நீர் அனைத்தும் அவர்கள் அபார்ட்மெண்டை சூழ ஆரம்பித்தது.
எல்லாப் பக்கமும் மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். பாதிப் பேர் மாடிக்கு ஏறுவதைக் கண்டவன் தன் வீட்டினுள் விரைந்து,
“சீக்கிரம் தமிழோடு படியில ஏறு, பதினாலாவது மாடிக்கு போயிடலாம்...”
அவர்கள் இருவரையும் வீட்டில் இருந்து கிளப்பிய பின், படிகளில் விரையச் சற்று நேரத்துக்கெல்லாம் மற்ற மக்கள் கூடியிருந்த அந்த இடத்தை அடைந்துவிட்டான். தன்னைத் தொடர்ந்து வந்தாளே எங்கே என்று திரும்பி பார்க்க அவளைக் காணவில்லை.
பெயரைச் சொல்லி கத்திப் பார்த்தான். பதில் இல்லை. படிகளில் இறங்கிப் பார்த்தால், தண்ணீர் அதற்குள் பத்தாவது மாடிக்கு உயர்ந்து விட்டது. தன் குடும்பத்தைக் காணவில்லை.
இவளைப் போல் அவனும் சில இடங்களில் தடுமாறினான்.
ஆனால், முகில் கீழே விழுந்தாலும் ஸ்னோ ஒட்டவில்லை என்னும் ரகமாச்சே, சமாளித்துக் கொண்டிருந்தான். அவன் திணறுவதை ஆசை தீர பார்த்த கண்மணி, அவன் தோளில் தட்டி,
“அட்வைஸ் பண்றது ரொம்ப எளிதான விஷயம் சார்... மத்தவங்கக்கிட்ட சொல்றப்ப மட்டும் தான் அது ஈஸியா தெரியும், நகருங்க...” என்று மறுபடியும் இவளே பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள்
இத்தனை களேபரத்தில் கார்த்தியும் வழி மாற்றிவிட்டது என்று இன்னும் நடக்க விட்டான். பேபி கார்ட் இருந்தும் அதைப் பணி பொழிந்த சாலையில் தள்ள முடியவில்லை. முழு நேரமும் தமிழை கண்மணி சுமந்து கொண்டிருந்தாள். நிரல்யா சற்று பெரிய குட்டி என்பதால், நடந்து வந்தாள் பிரச்சனை தராது.
ஒருவழியாய் அவர்களின் ஹோட்டலுக்கு வந்து சேர, சற்று நேர ஓய்வுக்குப் பின் அடுத்த இடம் போனார்கள்.
மொத்த ஊரும் வெள்ளை வெளேர் என்றிருந்தது. எல்லா இடமும் பனிக்கட்டிகள். ஒரு சிலர் அவர்கள் வீட்டின் கூரை மேலேறி அங்கிருந்த பனிகுமியலை தள்ளிக் கொண்டிருந்தனர்.
சில மெஷின்கள் சாலையில் குமிந்திருந்த பனி மலையை அகற்றிக் கொண்டிருந்தது. போகும் வழியெங்கும் இவள் அருகிலேயே இருந்தான் முகில். அவர்கள் போயிருந்த இடம் பனிக்கட்டிகளான சிற்பங்களை செய்துவைத்திருந்த இடம். சிலைகளும், வீடுகளும் மாளிகைகளும் அழகழகாய் செய்து வைத்திருந்தனர்.
அத்தனை கலைநயம். அதை மேன்மேலும் அழகாக்குவது போல் விளக்குகள் மூலம் அலங்கரித்திருந்தனர். எல்லாமே ரம்மியமாய் இருக்க, ஒன்றே ஒன்று மட்டும் கண்மணியால் தாளமுடியவில்லை. அது மக்கள் கூட்டம்.
ஜப்பானில் மக்கள் தொகை குறைவு என்றனர், ஆனால் இங்கு எங்குச் சென்றாலும் லைன் கட்டி நின்றனர். இந்தக் குளிரில் மணிக்கணக்கில் நின்று எல்லாவற்றையும் பார்க்க வேண்டி இருந்தது.
போட்டோ எடுக்க லைன், டிக்கெட் வாங்குவதற்கு வரிசை, குப்பை போட வரிசை. அட என்னங்கடா. ஆனால் அது எத்தனை நல்லொழுக்கம்.
இந்தக் கூட்டத்தைச் சபித்துக் கொண்டிருந்த கண்மணிக்கு அதனால் ஏற்பட்ட நன்மைகள் இருந்ததென்னவோ உண்மை. அது தன் மனசாட்சிக்கு மட்டுமே தெரியும் என்று இவள் நினைத்திருக்க, திவ்யா இவள் புறம் திரும்பி ‘எனக்கும் தெரியுமுடி...’ என்பதுபோல் கண்ணடித்துக் கொண்டிருந்தாள்.
கண்மணிக்கு தோழியின் செய்கையில் தலை குனிவதைத் தவிர வேறு வழியில்லை. கூட்டத்தில் இருந்து அவளையும் குழந்தையும் பாதுகாக்க எண்ணிய முகில், இவள் தோளில் கைபோட்டு தன்னுடன் இணைத்திருந்தான். பத்திரமாய் கொண்டு செல்ல வேண்டும் என்ற அக்கரையில். இந்தப் பெண் மனம் அதன் காரணமாய் துள்ள ஆரம்பித்திருந்தது. திவ்யாவும் அவள் நினைப்பிற்கு ஒத்து ஊதி, ஓட்டிக் கொண்டிருந்தாள் தோழியை.
கூட்டம் குறைந்த இடம் வந்ததும் முகில் அவன் பற்றியிருந்தவளை விட்டாலும், திவ்யா கண்மணியை விடாமல் பிடித்துக் கொண்டாள்.
“என்ன கண்மணி கூட்டத்தில் என்னென்னவோ நடக்குது...”
தன்னைத் தான் சொல்கிறாள் என்பது தெரிந்தும், “ம்ம்... அதுவா. கீழே விழுந்து வச்சேன்னா அடி பட்டிடும் தானே, அதான்...” என்றாள் சமாளிப்பாய்.
அவள் சொன்னதுக்குத் திவ்யாவும், “அட அட... என்ன ஒரு அக்கறை...” என்று கிண்டலடிக்க,
“ஆமாம். ஆனா அது எனக்கில்லை அவர் பொண்ணுக்கு...” என்றாள் மற்றவள்.
“ஓ ஹோ...!!! அவர் பொண்ணுக்காகப் பார்த்தாராமா? பாரேன் அவர் மனசுல நினைச்ச விஷயம் கூட உனக்குக் கேட்டிருக்கு. அத்தனை நெருக்கம் போல.”
திவ்யா சொன்ன தொனியில், தோழிகள் இருவரும் புன்னகையில் மூழ்கினர். கார்த்தி இவர்கள் இருந்த திசையைப் பார்த்து.
“ஃபோன்லையும் நேர்லையும் இத்தனை பேசியும் உங்க இரண்டு பேருக்கு இன்னும் விஷயம் பாக்கி இருக்கு போல. ஆனா இப்போ இங்க போட்டோ எடுத்திட்டு சீக்கிரம் ஹோட்டலுக்குக் கிளம்பலாமே...” என்றழைத்தான்.
அதற்கேற்ப, குடும்பச் சகிதமாய்ப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கார்த்தி முழு நேர போட்டோகிராபராக மாறி முகில் கண்மணியை பல கேண்டிட் ஸ்ஷாட்ஸ் எடுத்தது அவர்கள் இருவருக்கும் தெரியவில்லை.
பயணம் ஆரம்பித்ததிலிருந்து கண்மணியின் எண்ணம் போலவே நடந்தன எல்லாம். அவனின் செயல்கள் அவளுக்குள் இருந்த பெண்மையை இன்பமாக்கியது. முகில் தனக்கானவன் என்பதை அச்சாணி கொண்டு எழுதியது போல.
இரு குடும்பமும் தங்கியிருந்த ரிசார்ட் வளாகத்தில் நிறைய விளையாட்டு அரங்குகள், ஆன்சன் என்னும் நீர்நிலைகள் என்று சகலமும். அங்கெல்லாம் வரவில்லை என்றாலும் விடாது திவ்யா இவளைத் தள்ளிக்கொண்டு போனாள்.
விருப்பமில்லாமல் போனாலும் விரைவில் அவற்றில் எல்லாம் ஆட்டம் போட்டுவிட்டு பின்னிரவே அவரவர் அறைக்கு வந்து சேர்ந்தனர். இவர்கள் மட்டும் தான் இப்படி என்றில்லை. பொதுவாய் நிறைய ஜப்பானிய மங்கையர்களும் அந்த ஆன்சனில் பின்னிரவு வரை பொழுதை கழிந்திருந்தனர். பாதுகாப்பான ஊர், பாதுகாப்பான இடம்.
மகளிரைப் பொறுத்த வரையும் எந்த வித பயமும் இல்லை. சட்டங்கள் அத்தனை கடுமையானவை. மக்கள் அதற்கெல்லாம் பயந்தாவது ஒழுங்காய் இருந்தனர். சாலை விபத்து என்றோ, பெண்களுக்குப் பிரச்சனை என்றோ அங்குச் செய்திகள் வருவது வெகு அரிது. கண்மணிக்கு நம் ஊரும் இப்படி மாறிவிட்டால் எப்படியிருக்கும் என்றிருந்தது. மாறும் நம்புவோம்.
அறைக்குத் திரும்பியவள் கண்டது தந்தையும் மகளும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதை. அத்தனை பாதுகாப்பாய்த் தன் பிள்ளையைக் கட்டிக்கொண்டு உறங்கியிருந்தான் முகில்.
என்றேனும் அந்த அணைப்புக்குள் தானிருந்தால் எப்படி இருக்கும்? தன் எண்ணம் போன போக்கைத் தடுக்க முடியவில்லை கண்மணிக்கு.
‘ம்ம்ம்... நம் கொடுப்பினை அவ்வளவு தான்...’ ஏக்கத்தைத் தூர எறிந்தவள், இப்போது தூக்கத்துக்கு ஏங்கி தன் இடத்தில் போய்ப் படுத்தாள்.
அன்று அலைந்த அலைச்சலுக்கும் அதன் பின் நீச்சல் குளத்தில் போட்ட ஆட்டம் எல்லாமாய்ச் சேர்ந்து விரைவாய் நித்திரா தேவியிடம் சரணாகதியாகி விட்டாள்.
காலையில் கண் முழித்தவள் புரண்டு படுக்க, அவள் கை அவள் பக்கம் இருந்தவனின் மீது விழுந்தது. தூக்கம் இன்னும் மிச்சம் இருக்க, திறக்க முடியாத கண்களைச் சிரமம்பட்டு திறந்து பார்க்க அவள் கை போட்டது முகிலின் மீது. அதை உணர்ந்தவளுக்கு உடல் எல்லாம் சிலிர்த்துக் கொண்டது.
இவன் எப்படி? ஐயோ ஆர்வ கோளார்ல அவன் படுக்கைக்கே வந்துட்டேனா? வெட்கக்கேடு.
அவன் மேல் விழுந்த கையை எடுத்தவள் எழுந்து அமர்ந்து கொண்டு தன்னை நிதானப்படுத்திப் பார்க்க, அது அவளின் படுக்கை தான். துரை தான் இடத்தை மாற்றியிருக்கிறார்.
சட்டென்று அந்த இடத்திலிருந்து அவள் எழுந்து கொள்ள அந்த அசைவில் விழித்துக் கொண்டான் அவனும். இவள் படபடவென்று எழுந்து போய் அவன் எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்த வேகத்தைப் பார்த்தவன்
‘என்ன ஆச்சு, ஏன் இப்படிப் பதறுற?’ என்பது போல் அவளை நேராகப் பார்த்தான்.
'செய்றதை எல்லாம் செஞ்சிட்டு பார்வையைப் பாரு. ஊமைக்கோட்டான்...’ என்று மனதுக்குள் அவளை திட்டிக்கொண்டாள் இவளும்.
இவள் அவனைப் பார்த்த குற்றம் சாட்டும் பார்வையில், தன் பக்கம் விளக்கம் சொல்வது அவசியம் என்று அவனுக்குப் பட, “ஏதோ கெட்ட கனவு போல. தூக்கத்தில் ரொம்பப் புலம்பிகிட்டு இருந்தே... அதான்...” என்றான் மெல்ல.
“அதுக்கு? என்ன டா பண்ணே...?” என்று அவள் மனம் அடித்துக் கொண்டது.
அவள் அவனை அதிர்ச்சியாகப் பார்க்க,
“ஏன் அப்படிப் பார்க்குறே? ஜஸ்ட் கொஞ்ச நேரம் உன்னைத் தட்டி விட்டேன், நீயும் தூங்கிட்ட அவ்வளவுதான். வேற எதுவும் செய்யலை கண்மணி...” அவன் அப்பாவி போல் சொன்ன தொனியில் சிரிப்பு வந்தாலும், சட்டென்று அதை அடக்கி,
“போதும், உங்க விளக்கம்...” என்றவளுக்கு அவன் முன் நிற்பதே வெட்கமாகிப் போனது. அறையில் இருந்த பாத்ரூமில் சென்று கதவடைத்துக் கொண்டாள்.
முந்தின இரவில் அவள் தூக்கத்தில் அவளின் தாயை நினைத்து அழுததும், அதனால் அவன் அவள் பக்கம் சென்று ஆதரவாய் தட்டிக் கொடுத்ததும், தூக்கக் கலக்கத்தில் அவள் பக்கமே அவன் உறங்கிவிட்டதும் முழுதாய் விளக்க முடியாமல் போனது அவனால்.
அவனின் இந்தப் புதிய பார்வையும், அவனின் ஸ்பரிசமும் மறுபடியும் எண்ணிப் பார்த்து வெட்கப்பட்டவளைப் பார்த்த ஒரே சாட்சி குளியலறைக் கண்ணாடியில் தெரிந்த கண்மணியின் பிம்பம் மட்டுமே.
இந்த பயணம் இவர்கள் இருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயமானது. முகில் அவளிடம் கொஞ்சமேனும் இணக்கமாகி விட்டிருந்தான். சட்டென்று மாறியது வானிலை என்பது போல் நடந்த இந்த விஷயத்தை ஏன் எப்படி எங்கே அன்று அலசி ஆராய இருவருக்கும் இஷ்டமில்லை.
ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் அவன் மாற்றம் நிலையானதாக இருக்க வேண்டும், அதுவே கண்மணியின் வேண்டுதலாய் இருந்தது.
ஹோட்டலில் தங்கியிருந்தது போல் அனைவரும் ஒரே அறையில் தூங்க வேண்டும் இனி, என்று அந்த வீட்டு இளவரசியின் கட்டளைக்கிணங்க, முகிலின் நித்திரை தளம் சோபாவில் இருந்து முன்னேறி அவர்கள் இருவரின் பக்கம் வந்தது.
கண்மணிக்கும் அவனுக்கும் நடுவில் தமிழினி, தூங்கப் போகும் முன்பு வரைக்கும் கூட அத்தனை அபாரமாய் வேலை செய்யும் தன் மகளின் மூளையில் உதிக்கின்ற கேள்விகளுக்கும், நகைச்சுவையான பேச்சுக்களுக்கும் முகில் அடிமையாகிவிட்டிருந்தான்.
அதற்கும் மேல் கண்மணியிடம். நல்ல சமையல் கணவனின் மனதில் இடம் பிடிக்க உதவும் குறுக்குவழி என்பர். இவள் அதிலும் டேக் டைவர்ஷன் என்பது போல் அவன் மகளை வைத்து அவன் மனதை நெருங்கிவிட்டிருந்தாள்.
எந்த விதத்திலும் தமிழை விட்டுத்தாராது அன்பைப் பொழிந்து ஆராதித்து அவள் கொண்டு சென்ற விதம் அவனைக் கவர்ந்தது. அவன் மனக் கதவை அவளுக்காகத் திறந்து கொள்ளத் துணிந்தது.
இத்தனை தாமதமாக என்றாலும் நடந்ததே, அது வரை சந்தோஷம்.
இந்த மாற்றத்திற்குப் பல காரணங்கள் இருப்பினும், தான் யாருமற்ற அனாதை என்று அவள் கனவில் புலம்பியதும் ஒன்று. தானும் அப்படி ஒரு நிலையில் தானே இருக்கிறோம், ஏன் அவளைத் தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று முகில் எண்ண ஆரம்பித்தது அப்போது தான்.
கண்மணியை பற்றி இதையெல்லாம் சிந்தித்தவாறு உறங்கிவிட்டான் முகில்.
இத்தனை வலிமையான ஆட்டத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்ததில்லை. பயங்கரமான நிலநடுக்கம். வீட்டில் இருந்த கப்போர்ட், அலங்காரப் பொருட்கள் எல்லாம் கீழே விழுந்தன.
வியர்த்து விறுவிறுத்துப் போனவன், தன் வீடு இருந்த ஆறாவது மாடியில் இருந்து எட்டிபார்க்க, சுனாமியின் தாக்கத்தால், கடலில் இருக்க வேண்டிய நீர் அனைத்தும் அவர்கள் அபார்ட்மெண்டை சூழ ஆரம்பித்தது.
எல்லாப் பக்கமும் மக்கள் ஓடிக் கொண்டிருந்தனர். பாதிப் பேர் மாடிக்கு ஏறுவதைக் கண்டவன் தன் வீட்டினுள் விரைந்து,
“சீக்கிரம் தமிழோடு படியில ஏறு, பதினாலாவது மாடிக்கு போயிடலாம்...”
அவர்கள் இருவரையும் வீட்டில் இருந்து கிளப்பிய பின், படிகளில் விரையச் சற்று நேரத்துக்கெல்லாம் மற்ற மக்கள் கூடியிருந்த அந்த இடத்தை அடைந்துவிட்டான். தன்னைத் தொடர்ந்து வந்தாளே எங்கே என்று திரும்பி பார்க்க அவளைக் காணவில்லை.
பெயரைச் சொல்லி கத்திப் பார்த்தான். பதில் இல்லை. படிகளில் இறங்கிப் பார்த்தால், தண்ணீர் அதற்குள் பத்தாவது மாடிக்கு உயர்ந்து விட்டது. தன் குடும்பத்தைக் காணவில்லை.