Ennoda மன்னிப்பை profile status la போட்டிருக்கேன் பாருங்க...?Pinna enna ka ellarum ippa kadhaila recipe oda dhan vareenga ...google eh thevai illa polaye
Ennoda மன்னிப்பை profile status la போட்டிருக்கேன் பாருங்க...?Pinna enna ka ellarum ippa kadhaila recipe oda dhan vareenga ...google eh thevai illa polaye
Of course ka...idhu therilaya ungalukkuKedi , அதுக்கு தான் எங்க கதை ya படிக்கிறியா
Panjaayathu dhana....paathen paathen...Ennoda மன்னிப்பை profile status la போட்டிருக்கேன் பாருங்க...?
Thank you da.?very nice start
ரஞ்சன் புன்னகை ததும்ப, "இந்த டோங்க் லீதான் உனக்கு வில்லன் போல!" என்று சொல்லி வாய்க்குள் சிரிக்க அதற்கு மேல் முடியாமல் எழுந்து கை அலம்பி கொண்டான் மோகன்.
"என்ன மோக்... போதுமா... இன்னும் நாஸி லெமாக்... இருக்கே" என்றவள் சொல்ல,
அவள் அருகாமையில் மெலிதாக "எனக்கு போதும்... நீ உன் பிரண்டு கியாங் செவின்... நல்லா கவனி" என்று கோபம் கலந்து புன்னகையோடு உரைக்கவும்,
"மோக்... அது கியாங் செவின் இல்ல... சியாங் கெவின்" என்றாள்.
அவன் வேண்டா வெறுப்பாய் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு அங்கிருந்து அகல, அவனின் எண்ணம் என்னவென்று அவளால் யூகிக்க முடியவில்லை.
ஆனால் ரஞ்சன் தன் தம்பியின் வேதனையை புரிந்து சில நிமிடங்களில் அவன் பின்னோடு வந்து நின்று அவன் தோளை தொட்டு,
"அந்த சைனா மேட் ஜஸ்ட் அவளோட ப்ரண்டு டா" என்றுரைக்க, அப்படி ஒன்றும் அவன் கண்ணுக்கு புலப்படவில்லை.
அவனோடு அவள் இயைந்து கொண்டு நிற்பதை பார்த்தால் அது வெறும் நட்பு ரீதியான உறவென்று சொல்வதற்கில்லை.
சிறு வயதிலிருந்து ஷிவானிதான் அவனுக்கென்று பேசி வைத்திருக்க, புதிதாய் எங்கிருந்து முளைத்தான் இந்த சைனாக்காரன் என்று உள்ளூர அவன் பொறுமி கொண்டிருக்க,
மோகன் மனதில் எரியும் தீ கட்டுபடுத்த முடியாத நிலையில் வளர்ந்து கொண்டே இருந்தது.
அதுவே இனி ஷிவானி வாழ்வில் நடைப்பெற போகும் விபரிதங்களுக்கு மூலகாரணியாக அமைய போகிறது.
உண்மையிலேயே மோகனுக்கு வில்லனாய் வர போகிறவன் கெவின் அல்லவே!
அவன் தமிழ் நாட்டில் நெல்லை நகரத்தில் அல்லவா வசித்து வருகிறான். சற்றும் அவளின் பழக்கவழக்கங்களுக்கு சம்பந்தமில்லாமல்.