Nishirdha
அமைச்சர்
Nice epi sis
Superஅவர்கள் எல்லோரின் வருகையால் அந்த வீடே களைகட்டியது. அமிர்தவள்ளிக்கு எங்கே ஷிவானியை தன் தம்பிக்கு மாப்பிள்ளையாக்கி விடுவார்களோ என்று உள்ளூர ஒரு நெருடல் இருந்தாலும் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது.
அந்த வீட்டு பெரிய மருமகனின் வீம்பு பற்றிதான் எல்லோருக்குமே தெரியுமே. அந்த நம்பிக்கை அமிர்தத்துக்கு.
ஆனால் ஐஸ்வர்யாவுக்கோ திக்திக்கென்றுதான் இருந்தது. ஷிவானியின் நடை உடை பாவனை எல்லாம் உயர்மட்ட ஆட்களின் பாணியில் இருக்க அவளுக்குள் பொறாமையும் பயமும் ஏகபோகமாய் வளர்ந்து கொண்டிருந்தது.
ஆதலால் ஷிவானி அவளிடம் ஆசையாய் பேசினாலும் ஐஸ்வர்யா வேண்டா வெறுப்பாய் பெயருக்கென்று இரண்டு வார்த்தை மட்டும் பேசினாள். ஷிவானி குமரனிடம் பேச போக அவனிடமும் ஐஸ்வர்யா அதிகம் பேச கூடாதென கண்காட்டினாள்.
இந்த குடும்ப அரசியல் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தங்கம் வைத்த நாட்டு கோழி குழம்பின் மணத்தில் எல்லோரும் ஆவலாய் மதிய உணவிற்கு அமர்ந்தனர்.
அதிலும் ஷிவானிதான் அதீத ஆர்வமாய் அமர்ந்தாள். வாசனை வேறு அவள் மூக்கை துளைக்க, தாத்தா பாட்டி சித்தி அவரவர் பங்குக்கு அவளை பலமாக கவனிக்க தப்பித்தால் போதுமென சாப்பிட்டு பிடித்து கொள்ளை புறம் வந்து நின்றாள்.
அவள் இப்படியும் அப்படியும் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருக்க சிவகுரு அவளை பார்த்து, "என்னல ஆச்சுது?" என்று புரியாமல் கேட்க,
"மாம்ஸ்... காரம் தாங்கல" என்று நாக்கை பாம்பு போல நீட்டி நீட்டி அவதியுற்று கொண்டிருந்தாள்.
"தண்ணி குடிக்க வேண்டியதுதானே"
"ஹ்ம்ம்ம்... மூணு சொம்பு குடிச்சிட்டேன்... அதுக்கு மேல குடிச்சா வயிறு வெடிச்சிடும்" அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன்,
"வேண்டி வேண்டி சாப்பிட்டுட்டு இப்ப காரம் காரம்னு குதிக்கீக"
"போங்க மாம்ஸ்... ஆச்சியும் சித்தியும் சாப்பிடு சாப்பிடுன்னு போட்டுக்கிட்டே இருந்தாக"
"அங்கனயே சொல்ல வேண்டிதானே"
"ஆச்சி கஷ்டப்பட்டு சமைச்சிருக்காங்க... நான் காரம் ஜாஸ்தின்னு சொன்னா மனசு வரூத்தப்பட மாட்டாங்களா... அதுவும் ஆசையா பரிமாறும் போது எப்படி வேண்டான்னு சொல்றது" என்றவள் சொல்ல உறவுகளை மதிக்கும் அவளின் குணத்தின் மீது வியப்புற்றவன் அவள் படும் அவஸ்த்தையை பார்த்து,
"இதோ வந்திடுதேன்... இங்கனேயே இரு" என்று சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் அதே வேகத்தில் திரும்பி வந்தான்.
"வாயை திற... சீனி போடிறேன்... காரம் அடங்கிடும்" என்று சொல்லி தன் கரத்தில் எடுத்து வந்த சக்கரையை அவள் வாயில் கொட்டினான்.
சில நொடிகளில் அவள் ஒருவாறு நிதானமடைந்து, "தேங்க்ஸ் மாம்ஸ்... தேங்க்யூ ஸோ மச்" என்றாள்.
"யாருக்குல உன் தேங்க்ஸ் வேணும்... அதை நீயே வைச்சுக்கோ" என்று கோபமானான்.
"என்ன மாம்ஸ்? நல்லாதானே பேசிட்டிருந்தீங்க... திடீர்னு என்னாச்சு"
"என்னாச்சுதா? ஏணில இருந்து நீ என் மேல விழுந்த கதையை அப்படியே அக்காகிட்ட சொல்லி என்னை வம்பில மாட்டி விட பார்க்குதே... "
"அது வந்து"
"பேசாதே... வர ஆத்திரத்துக்கு ஒண்ணு விட்டேன்னா கன்னம் கதை பாடும்" என்றவன் சீற்றமாய் பேசி கொண்டிருக்க அவள் மிரட்சியாய் பார்த்தாள்.
"அதுவுமில்லாம நீயா வந்துதான் என் மேல விழுந்த... அப்புறம் எதுக்கு மூஞ்சை தூக்கி வைச்சிக்கிட்டே"
"ஆமா விழுந்தேன்... நீங்க ஏன் என்னை கட்டிப்பிடிச்சீங்க... அதுவும் கட்டிப்பிடிச்சி கீழே தள்ளி" என்று மேலே பேச முடியாமல் அவள் நாணப்பட்டு தலையை கவிழ்ந்து கொள்ள,
"என் பொத்தன்ல மாட்டியிருந்த முடியை நீ எடுக்க ரொம்ப சிரமப்பட்ட... அதான் உதவி செய்யலாம்னு" என்று சொன்னவனை ஏற இறங்க பார்த்தவள்,
"அதான் உங்க ஊர்ல உதவியா?!"என்று முறைத்தபடி கேட்டாள்.
"எங்க ஊர்ல நாங்க அப்படிதான்
உதவி செய்யுவோம்... பாசமா கட்டிக்கிட்டு... உங்க ஊர்ல எப்படி... எட்டி நின்னுதான் உதவுவாகளோ?" என்றவன் கிண்டலாய் சிரித்து கொண்டே கேட்க,
"நீங்க என்னவோ மனசில வைச்சிக்கிட்டு பேசிறீங்க" என்று அவள் கூர்மையாய் அவனை அளவெடுக்க
புன்னகையித்தவன், "வேறென்ன? உன்னைய கட்டிக்கிடலாம்தான்" என்று பளிச்சென்று தன் மனதில் உள்ளதை சொல்லிவிட்டான்.
அந்த எண்ணம் அவன் மனதிலிருப்பதை எல்லோரும் அறியும் போது அவள் அறியாளா என்ன? ஆனால் அவன் ஏதோ அக்கா மகள் என்ற உரிமையில் பேசுகிறான் என்பதே எல்லோரின் எண்ணமும். அதை தாண்டி அவன் ரொம்பவும் ஆழமாய் உள்ளூர அந்த எண்ணத்தை வைத்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் உட்பட வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் அலட்சியமாய்,"ஸாரி மாம்ஸ்... நீங்க நினைக்கிறது கனவில கூட நடக்காது" என்று வெகுசாதாரணமாய் சொல்லிவிட்டு அவள் அவனை கடந்து செல்ல,
"ஏன்... அந்த வெண்டைக்காயைதான் கட்டிப்பீகளோ?!" என்று கேட்டபடி அவள் பின்னோடு நடந்தான்.
"அவனை பத்தி பேசாதீங்க... நான் ஒண்ணும் அவனை கட்டிக்கிட்ட மாட்டேன்... ஐ ஹேட் ஹிம்"
"அன்னைக்குதான் க்ளோஸ் ப்ரண்டுன்னெல்லாம் சொன்னீக"
"அவன் ரொம்ப ஓவரா பேசிட்டான்... செவிலயே ஒண்ணு விட்டேன்" என்று அவள் சொல்லவும் அதிர்ச்சியாய் நின்றவன்
"அடிச்சீகளா எதுக்கு?" என்று வினவ,
"பின்ன... என்னை வெறுப்பேத்துகிட்டே இருந்தான்... அதுவும் இல்லாம உங்களை வேற மரியாதையில்லாம பேசினான்... அதான்"
அவனுக்கு ஆச்சர்யம் மிகுந்திட அவளோ முன்னேறி வீட்டிற்குள் நுழைய, அவனும் வேகமெடுத்து அவளோடு உள்ளே நுழைந்து, "அப்போ உன் நிச்சியதார்த்தம்" என்று எதிர்பார்ப்போடு கேட்டான்.
"கேன்ஸலாயிடுச்சு" என்று சாதரணமாக அவள் சொல்ல,
"நிசமாத்தான் சொல்றீகளா?" என்று நம்ப முடியாமல் கேட்டான்.
"ஹ்ம்ம்" என்று அவள் பேசிக் கொண்டே போய் கவனியாமல் வாசற்படியில் முட்டிக் கொண்டு நெற்றியை பிடிக்க,
அவன் பதறி கொண்டு அவள் நெற்றியை தேய்த்துவிட்டான்.
"நான்தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல... குனிஞ்சி போன்னு" என்றவன் அக்கறையாய் சொல்லி அழுந்த தேய்க்க,
"விடுங்க மாம்ஸ்... வலிக்குது" என்றாள்.
"சும்மா இருவே... அப்புறம் பனியாரமாட்டும் மண்டை வீங்கிரும்" என்று சொல்லி அவன் தேய்க்க அந்த நொடி அவள் விழிகள் அவனையே பார்க்க நேரிட்டது.
அவள் இதயம் அவனிடம் மெல்ல மெல்ல நழுவி கொண்டிருக்க, குருவோ அவள் பார்வையில் மதிமயங்கி நெற்றியை தேய்ப்பதை நிறுத்தி தன் கரத்தை அவள் கன்னத்திற்கு இடம்பெய்ர்த்திருந்தான்.
இந்த காட்சியை சபரி பார்த்திருந்தால் எந்தளவுக்கு காண்டாகியிருப்பாரோ அந்தளவுக்கு வெறுப்பாக பார்த்திருந்தாள் ஐஸ்வர்யா.
அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க,
"மாம்ம்ம்ம்ம்ம்மா" என்று அவள் குரலையுயிர்த்தி அந்த வீடே இரண்டாகும் அளவிற்கு கத்தி வைத்தாள்.
********-----**********
Hi friends,
Story ல ஏதாச்சும் fault இல்ல Slow moving இல்ல Bored effect இருந்தா வெளிப்படையா சொல்லுங்க. மறக்காம லைக் பட்டனை ப்ரஸ் பண்ணுங்க. Views
And comments குறைஞ்சிட்ட மாறி ஒரு ப்ஃல் அதான்கேட்கிறேன்.
Come on share your views, we ll discuss
Ayyaye intha chalk piece ennathuku kurukkala vanthuttu...அவர்கள் எல்லோரின் வருகையால் அந்த வீடே களைகட்டியது. அமிர்தவள்ளிக்கு எங்கே ஷிவானியை தன் தம்பிக்கு மாப்பிள்ளையாக்கி விடுவார்களோ என்று உள்ளூர ஒரு நெருடல் இருந்தாலும் அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையும் இருந்தது.
அந்த வீட்டு பெரிய மருமகனின் வீம்பு பற்றிதான் எல்லோருக்குமே தெரியுமே. அந்த நம்பிக்கை அமிர்தத்துக்கு.
ஆனால் ஐஸ்வர்யாவுக்கோ திக்திக்கென்றுதான் இருந்தது. ஷிவானியின் நடை உடை பாவனை எல்லாம் உயர்மட்ட ஆட்களின் பாணியில் இருக்க அவளுக்குள் பொறாமையும் பயமும் ஏகபோகமாய் வளர்ந்து கொண்டிருந்தது.
ஆதலால் ஷிவானி அவளிடம் ஆசையாய் பேசினாலும் ஐஸ்வர்யா வேண்டா வெறுப்பாய் பெயருக்கென்று இரண்டு வார்த்தை மட்டும் பேசினாள். ஷிவானி குமரனிடம் பேச போக அவனிடமும் ஐஸ்வர்யா அதிகம் பேச கூடாதென கண்காட்டினாள்.
இந்த குடும்ப அரசியல் எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், தங்கம் வைத்த நாட்டு கோழி குழம்பின் மணத்தில் எல்லோரும் ஆவலாய் மதிய உணவிற்கு அமர்ந்தனர்.
அதிலும் ஷிவானிதான் அதீத ஆர்வமாய் அமர்ந்தாள். வாசனை வேறு அவள் மூக்கை துளைக்க, தாத்தா பாட்டி சித்தி அவரவர் பங்குக்கு அவளை பலமாக கவனிக்க தப்பித்தால் போதுமென சாப்பிட்டு பிடித்து கொள்ளை புறம் வந்து நின்றாள்.
அவள் இப்படியும் அப்படியும் நிலைகொள்ளாமல் நடந்து கொண்டிருக்க சிவகுரு அவளை பார்த்து, "என்னல ஆச்சுது?" என்று புரியாமல் கேட்க,
"மாம்ஸ்... காரம் தாங்கல" என்று நாக்கை பாம்பு போல நீட்டி நீட்டி அவதியுற்று கொண்டிருந்தாள்.
"தண்ணி குடிக்க வேண்டியதுதானே"
"ஹ்ம்ம்ம்... மூணு சொம்பு குடிச்சிட்டேன்... அதுக்கு மேல குடிச்சா வயிறு வெடிச்சிடும்" அவள் சொன்னதை கேட்டு சிரித்தவன்,
"வேண்டி வேண்டி சாப்பிட்டுட்டு இப்ப காரம் காரம்னு குதிக்கீக"
"போங்க மாம்ஸ்... ஆச்சியும் சித்தியும் சாப்பிடு சாப்பிடுன்னு போட்டுக்கிட்டே இருந்தாக"
"அங்கனயே சொல்ல வேண்டிதானே"
"ஆச்சி கஷ்டப்பட்டு சமைச்சிருக்காங்க... நான் காரம் ஜாஸ்தின்னு சொன்னா மனசு வரூத்தப்பட மாட்டாங்களா... அதுவும் ஆசையா பரிமாறும் போது எப்படி வேண்டான்னு சொல்றது" என்றவள் சொல்ல உறவுகளை மதிக்கும் அவளின் குணத்தின் மீது வியப்புற்றவன் அவள் படும் அவஸ்த்தையை பார்த்து,
"இதோ வந்திடுதேன்... இங்கனேயே இரு" என்று சொல்லிவிட்டு சென்றவன் மீண்டும் அதே வேகத்தில் திரும்பி வந்தான்.
"வாயை திற... சீனி போடிறேன்... காரம் அடங்கிடும்" என்று சொல்லி தன் கரத்தில் எடுத்து வந்த சக்கரையை அவள் வாயில் கொட்டினான்.
சில நொடிகளில் அவள் ஒருவாறு நிதானமடைந்து, "தேங்க்ஸ் மாம்ஸ்... தேங்க்யூ ஸோ மச்" என்றாள்.
"யாருக்குல உன் தேங்க்ஸ் வேணும்... அதை நீயே வைச்சுக்கோ" என்று கோபமானான்.
"என்ன மாம்ஸ்? நல்லாதானே பேசிட்டிருந்தீங்க... திடீர்னு என்னாச்சு"
"என்னாச்சுதா? ஏணில இருந்து நீ என் மேல விழுந்த கதையை அப்படியே அக்காகிட்ட சொல்லி என்னை வம்பில மாட்டி விட பார்க்குதே... "
"அது வந்து"
"பேசாதே... வர ஆத்திரத்துக்கு ஒண்ணு விட்டேன்னா கன்னம் கதை பாடும்" என்றவன் சீற்றமாய் பேசி கொண்டிருக்க அவள் மிரட்சியாய் பார்த்தாள்.
"அதுவுமில்லாம நீயா வந்துதான் என் மேல விழுந்த... அப்புறம் எதுக்கு மூஞ்சை தூக்கி வைச்சிக்கிட்டே"
"ஆமா விழுந்தேன்... நீங்க ஏன் என்னை கட்டிப்பிடிச்சீங்க... அதுவும் கட்டிப்பிடிச்சி கீழே தள்ளி" என்று மேலே பேச முடியாமல் அவள் நாணப்பட்டு தலையை கவிழ்ந்து கொள்ள,
"என் பொத்தன்ல மாட்டியிருந்த முடியை நீ எடுக்க ரொம்ப சிரமப்பட்ட... அதான் உதவி செய்யலாம்னு" என்று சொன்னவனை ஏற இறங்க பார்த்தவள்,
"அதான் உங்க ஊர்ல உதவியா?!"என்று முறைத்தபடி கேட்டாள்.
"எங்க ஊர்ல நாங்க அப்படிதான்
உதவி செய்யுவோம்... பாசமா கட்டிக்கிட்டு... உங்க ஊர்ல எப்படி... எட்டி நின்னுதான் உதவுவாகளோ?" என்றவன் கிண்டலாய் சிரித்து கொண்டே கேட்க,
"நீங்க என்னவோ மனசில வைச்சிக்கிட்டு பேசிறீங்க" என்று அவள் கூர்மையாய் அவனை அளவெடுக்க
புன்னகையித்தவன், "வேறென்ன? உன்னைய கட்டிக்கிடலாம்தான்" என்று பளிச்சென்று தன் மனதில் உள்ளதை சொல்லிவிட்டான்.
அந்த எண்ணம் அவன் மனதிலிருப்பதை எல்லோரும் அறியும் போது அவள் அறியாளா என்ன? ஆனால் அவன் ஏதோ அக்கா மகள் என்ற உரிமையில் பேசுகிறான் என்பதே எல்லோரின் எண்ணமும். அதை தாண்டி அவன் ரொம்பவும் ஆழமாய் உள்ளூர அந்த எண்ணத்தை வைத்து கொண்டிருக்கிறான் என்பதை அவள் உட்பட வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அவள் அலட்சியமாய்,"ஸாரி மாம்ஸ்... நீங்க நினைக்கிறது கனவில கூட நடக்காது" என்று வெகுசாதாரணமாய் சொல்லிவிட்டு அவள் அவனை கடந்து செல்ல,
"ஏன்... அந்த வெண்டைக்காயைதான் கட்டிப்பீகளோ?!" என்று கேட்டபடி அவள் பின்னோடு நடந்தான்.
"அவனை பத்தி பேசாதீங்க... நான் ஒண்ணும் அவனை கட்டிக்கிட்ட மாட்டேன்... ஐ ஹேட் ஹிம்"
"அன்னைக்குதான் க்ளோஸ் ப்ரண்டுன்னெல்லாம் சொன்னீக"
"அவன் ரொம்ப ஓவரா பேசிட்டான்... செவிலயே ஒண்ணு விட்டேன்" என்று அவள் சொல்லவும் அதிர்ச்சியாய் நின்றவன்
"அடிச்சீகளா எதுக்கு?" என்று வினவ,
"பின்ன... என்னை வெறுப்பேத்துகிட்டே இருந்தான்... அதுவும் இல்லாம உங்களை வேற மரியாதையில்லாம பேசினான்... அதான்"
அவனுக்கு ஆச்சர்யம் மிகுந்திட அவளோ முன்னேறி வீட்டிற்குள் நுழைய, அவனும் வேகமெடுத்து அவளோடு உள்ளே நுழைந்து, "அப்போ உன் நிச்சியதார்த்தம்" என்று எதிர்பார்ப்போடு கேட்டான்.
"கேன்ஸலாயிடுச்சு" என்று சாதரணமாக அவள் சொல்ல,
"நிசமாத்தான் சொல்றீகளா?" என்று நம்ப முடியாமல் கேட்டான்.
"ஹ்ம்ம்" என்று அவள் பேசிக் கொண்டே போய் கவனியாமல் வாசற்படியில் முட்டிக் கொண்டு நெற்றியை பிடிக்க,
அவன் பதறி கொண்டு அவள் நெற்றியை தேய்த்துவிட்டான்.
"நான்தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன் இல்ல... குனிஞ்சி போன்னு" என்றவன் அக்கறையாய் சொல்லி அழுந்த தேய்க்க,
"விடுங்க மாம்ஸ்... வலிக்குது" என்றாள்.
"சும்மா இருவே... அப்புறம் பனியாரமாட்டும் மண்டை வீங்கிரும்" என்று சொல்லி அவன் தேய்க்க அந்த நொடி அவள் விழிகள் அவனையே பார்க்க நேரிட்டது.
அவள் இதயம் அவனிடம் மெல்ல மெல்ல நழுவி கொண்டிருக்க, குருவோ அவள் பார்வையில் மதிமயங்கி நெற்றியை தேய்ப்பதை நிறுத்தி தன் கரத்தை அவள் கன்னத்திற்கு இடம்பெய்ர்த்திருந்தான்.
இந்த காட்சியை சபரி பார்த்திருந்தால் எந்தளவுக்கு காண்டாகியிருப்பாரோ அந்தளவுக்கு வெறுப்பாக பார்த்திருந்தாள் ஐஸ்வர்யா.
அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க,
"மாம்ம்ம்ம்ம்ம்மா" என்று அவள் குரலையுயிர்த்தி அந்த வீடே இரண்டாகும் அளவிற்கு கத்தி வைத்தாள்.
********-----**********
Hi friends,
Story ல ஏதாச்சும் fault இல்ல Slow moving இல்ல Bored effect இருந்தா வெளிப்படையா சொல்லுங்க. மறக்காம லைக் பட்டனை ப்ரஸ் பண்ணுங்க. Views
And comments குறைஞ்சிட்ட மாறி ஒரு ப்ஃல் அதான்கேட்கிறேன்.
Come on share your views, we ll discuss