Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
5. ஆழமாய் ஊடூருவிய விழிகள்
சிவசு மெஸ்ஸிலிருந்து காரில் ஏறி மோகனுடன் புறப்பட்டிருந்த ஷிவாணியின் மனம் எங்கோ கண்காண திசையில் தன்னை மறந்து பயணித்துக் கொண்டிருந்தது.
எதை நினைத்து எதனால் என்பதற்கான காரண காரியத்தை எல்லாம் அவள் தீவிரமாய் அலசி ஆராயவில்லை.
அதே நேரம் அந்த நெகிழ்ச்சியான உணர்வைச் சற்றும் வெளியேற விடாமல் மௌன நிலையில் வந்தவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு வந்தான் மோகன்.
'இவளுக்கு என்னாச்சு... ஏன் இவ்வளவு ஸைலன்ட்டா வரா' என்று மனதிற்குள் கேட்டு கொண்டவன்,
அதற்கு மேல் பொறுமையிழந்து, "ஷிவா?" என்றழைத்தான்.
"ஹ்ம்ம்.. சொல்லு மோக்" என்று அறைகுறை சிந்தனையோடு ஜன்னலோரம் காட்சிகளை ரசித்தபடி அவள் கேட்க,
அவன் அவளிடம் வீடும் வரை பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான்.
"இறங்கு ஷீவா" என்றவன் சொல்ல உணர்வு பெற்றவள், காரிலிருந்து இறங்கினாள்.
அவள் முன்னேறி நடக்க மோகன், "ஷிவா" என்றழைத்தான்
"என்ன லா?" என்றவள் கேட்டபடி திரும்பி நிற்க,
"நான் கேட்டதுக்கு எதுக்கும் நீ பதில் சொல்லாமலே போற... உனக்கு இதுல விருப்பமில்லையா?" என்று கேட்கவும் அவள் முகம் குழப்பமாய் மாறியிருந்தது.
"நீ என்ன கேட்ட... நான் என்ன பதில் சொல்லனும்?" என்றவள் கேட்க,
"ஏ... நான் உன்கூட இவ்வளவு நேரம் பேசிட்டு வந்ததெல்லாம் நீ காதிலயே வாங்கிலயா?!" என்றவன் கடுப்பாகி வினவ,
"ஸாரி லா... நான் வேறேதோ யோசிச்சிட்டு இருந்தேனா?... நீ என்ன சொன்னன்னு நான் கவனிக்கவே இல்லை" என்றாள்.
அவன் முகமெல்லாம் அத்தனை எரிச்சலாய் மாறியிருக்க
அவள் யோசனைகுறியோடு, "ஆமா மோக்... நீ என்ன சொன்ன?" என்றவள் கேட்க,
"நான் ஒரு மன்னங்கட்டியும் சொல்லல... நீ போ" என்று கடுப்படித்தான்.
அவனின் கோபமான பாவனை பார்த்துக் குழப்பமானவள், மேலே அவனிடம் எதையாவது பேசி வாங்கி கட்டி கொள்வானேன் என்ற எண்ணத்தோடு மௌனமாய் அகன்று விட்டாள்.
மோகன் ஒருவித தோற்று போன உணர்வோடு தன் காரின் மீது குத்தி கொண்டிருக்க,
"டே மோகன்" என்று அவன் செயலைப் பார்த்துப் பதை பதைத்து ரஞ்சன் அழைக்க அவன் சற்று அமைதி பெற்றான்.
ரஞ்சன் சந்தேகத்தோடு, "ஷிவாகிட்ட பேசிட்டியா?" என்று கேட்டு வைக்க,
"அவ கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானாடா" என்று கோபமானான்.
"என்னடா ஆச்சு? பொறுமையா நடந்ததைச் சொல்லு"
"ஏதாச்சும் நடந்தாதானேடா சொல்றதுக்கு... ஒரு மண்ணும் ஆகல... அவளுக்கு நல்லா சாப்பிட தெரியுது... கேவளா சமைக்க தெரியுது... வேறெதவும் தெரியல" என்று சொல்ல ரஞ்சன் அவன் தோள்களைத் தடவி கொடுத்து,
"நீ டென்ஷா இருக்க... வா உள்ளே போய் பொறுமையா பேசிக்கலாம்"
"என்னால முடியலடா... மூஞ்சி முகரை தெரியாதவன்கிட்ட எல்லாம் பேசிறா... ஆனா நான் பேசினா காது கொடுத்து கூட கேட்கா மாட்டிறா... அவ கூட இருக்க போற ப்யூச்சரை நினைச்சா எனக்கு கதிகலங்குது" என்க, ரஞ்சனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
இவர்களுக்கிடையில் திருமணம் என்ற உறவு சாத்தியப்படுமா என்று ரஞ்சனுக்கே கவலை எழ, தன் தம்பியைச் சமாதானம் செய்து அப்போதைக்கு இயல்பு நிலைக்கு மாற்ற முயன்றுகொண்டிருந்தான்.
இங்கே இவர்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், உள்ளே போன ஷிவானியிடம் நளினி சபரி அரவிந்தன் என எல்லோரும் சூழ்ந்து கொண்டு நிச்சியதார்த்தத்தை பற்றிப் பேச முற்பட்டனர்.
நளினி முதலில், "உனக்கும் மோகனுக்கும் எங்கேஜ்மன்ட் பண்ணலாம்னு" என்று கொஞ்சம் தயக்கத்தோடு சொல்ல, வேதாவிற்கு உள்ளூர பயமாய் இருந்தது. இவள் கோபத்தில் எதையெல்லாம் தூக்கி போட்டு உடைக்க போகிறாளோ என்றவர் அஞ்சிக் கொண்டு நிற்க, ஷிவானி எல்லோரின் மீதும் தன் அதிர்ச்சியான படரவிட்டு கொண்டிருந்தாள்.
அவளின் மௌன நிலையைச் சாதகமாய் மாற்றிக் கொண்டு சபரி அவள் அருகில் அமர்ந்து தன் விருப்பத்தை மெதுமெதுவாய் அவள் மூலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.
அவள் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவள் தன் மௌனத்தைக் கலைத்து, "இதெல்லாம் அப்போ உங்க ஏற்பாடா டேட் ?" என்று கேட்க,
"இல்ல வாணிம்மா... நீ சம்மதிப்பன்னுதான்" என்றவர் தடுமாறியபடி பதிலுரைத்தார்.
அவள் முகமலர்ச்சியோடு,
"கம்மான் டேட்... நீங்க சொல்லி எதுக்காச்சும் நான் வேண்டாம்னு சொல்லிருக்கேனா?" என்றவள் கேட்க எல்லோரும் வியப்பாய் பார்த்திருந்தனர்.
"அப்படின்னா உனக்கு ஒகே வா வாணிம்மா" என்று சபரி மீண்டும் தெளிவுபெற கேட்க,
"ஒகே டேட்" என்றவள் தன் சம்மதத்தை பளிச்சென்று உரைக்க, யார் முகத்திலும் ஈயாடவில்லை. அப்போது உள்ளே நுழைந்த ரஞ்சனும் மோகனும் கூட அவள் சொன்னதை கேட்டு வியப்பில் மூழ்கினர்.
சபரிக்கு அத்தனை கர்வம். தன் மகள் அப்படியே தன் எண்ணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டாளே என்று. தன் மனைவியை அவர் திமிராய் ஒரு பார்வை பார்க்க, வேதா நம்ப முடியாத பார்வையோடு நின்றிருந்தார்.
அவள் மனதாரதான் சம்மதம் சொன்னாளா என்ற குழப்பம் எழ மகளின் பின்னோடு அறைக்குள் சென்றவர்,
"உனக்கு உண்மையிலேயே இந்த எங்கேஜ்மன்ட்ல சம்மதமா வாணி" என்று கேட்டார்.
"அப்பாவோட டெசிஷனுக்கு நான் எப்போ மீ மறுத்து பேசியிருக்கேன்" என்று வெளியே சொன்னதையே அவள் திரும்பவும் சொல்ல,
"இது உன் ப்யூச்சர் லைஃப் சம்பந்தபட்ட டெசிஷன் வாணி" என்றாள் வேதா.
"அதெல்லாம் டேடுக்கு தெரியாதா மீ... அவரு பார்த்திப்பாரு" என்று ஷிவானி தந்தையின் மீதான நம்பிக்கையோடு பேச வேதாவும் தன் மகளின் வார்த்தைகளைக் கேட்டு பூரித்துதான் போனாள்.
அதே நேரம் ஓர் பழைய சம்பவத்தின் நினைவு அவர் விழிகளில் நீரைச் சுரக்க செய்தது.
இதே போல ஒரு சூழ்நிலையில் அவள் தந்தையிடம் பேசிய வார்த்தைகள் அவள் காதுகளில் அப்போது ஒலித்தன.
"உனக்கு எதை செய்யனும் செய்ய கூடாதுன்னு எனக்கு தெரியாதால" என்று வேதாவின் தந்தை முருகவேல் சொல்ல,
"அதெல்லாம் எனக்குத் தெரியாது... நான் அவரைதான் கட்டிக்கிடுவேன்... அப்படி இல்லன்னா... இதே உத்திரத்தில தூக்கு போட்டு தொங்கிடுவனாக்கும்" என்று பிடிவாதமாய் சொல்ல வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ந்து போயினர்.
"அடி பாவி மவளே" என்று அவள் தாய் தங்கம் அவளை அடி வெலத்து வாங்க
"என்னத்துக்கு வயசுபுள்ளைய போட்டு இப்படி அடிக்க" என்று முருகவேல் மனைவியைத் தடுத்து "போகட்டும் தங்கம்... அவ ஆசை பட்டவனையே அவளுக்குக் கட்டி வைச்சிருவோம்" என்றார்.
"என்ன சொல்லுதீக... அவளுக்கு பிறவு அடுத்து அடுத்து மூணு நிக்கே... அவைகளும் இவளை போலவே சொன்னா" என்று வேதாவின் தாய் சொல்ல, முருகவேல் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார்.
அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த,
வேதாவிற்கு தான் சொல்லிய வார்த்தை தன் பெற்றோர்களின் மனதை எந்தளவுக்கு ரணப்படுத்தியிருக்கும் என்பதை இப்போது உணர முடிந்தது.
அதுவும் ஷிவானி அவள் அப்பாவின் மீது கொண்ட நம்பிக்கையையும் பாசத்தையும் பார்த்த போது,
தான் ஏன் தன் தந்தையின் மீது அத்தகைய நம்பிக்கையை வைக்காமல் போய்விட்டோம் என்று அர்த்தமில்லாமல் எண்ணத் தோன்றியது.
இவ்வாறு எண்ணமிட்டு அவர் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாய் வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் அந்தத் திருமணத்திற்கு ஷிவானி சம்மதம் சொன்னதை எண்ணி களிப்புற்றிருந்தனர்.
மோகனும் அவள் சம்மதத்தில் சற்று வியப்பானான். அதன் காரணத்தால் அவள் மீது சுமந்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் அப்போதைக்கு மறந்து போயிருந்தான்.
குற்றாலத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்தவர்கள் நிச்சியத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் மும்முரமாயினர்.
அதே நேரம் வேதாவிற்கு எப்போது தன் வீட்டாரைப் பார்ப்போம் என உள்ளூர தவிப்பும் எதிர்பார்ப்பும் மலையென வளர்ந்து கொண்டிருக்க,
அதற்கான சரியான சந்தர்ப்பம்தான் அவருக்கு இன்னும் வாய்க்கப் பெறவில்லை.
மோகனும் ஷிவானியும் திருமணத்திற்கு நிச்சயம் செய்து கொள்ளப் போகிறோம் என்பன பற்றிய எண்ணமெல்லாம் மறந்து,
எப்போதும் போல அவர்களுக்கே உண்டான சேட்டைகளையும் சண்டைகளையும் குறையேதுமின்றி செய்து கொண்டுதான் இருந்தனர்.
அந்த வீட்டின் முன்புறம் இருந்த பெரிய இடத்தில் மோகனும் ஷிவானியும் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருக்க, ரஞ்சனும் சங்கீதாவும் ஒரு ஓரமாய் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சங்கீதா தன் கணவனிடம், "இவங்க இரண்டு பேர்கிட்டயும் ஏதோ மிஸ்ஸாகுது... கல்யாணம் பண்ணிக்க போறவங்க மாறியே இல்லை" என்க,
"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல... இரண்டு பேரும் கொஞ்சம் சின்ன பிள்ளைங்க மாறி பிகேவ் பன்றாங்க... அவ்வளவுதான்" என்றான்.
அவன் சொல்வதற்கு ஏற்றாற் போலதான் அவர்கள் இருவரும் இருந்தனர்.
"உனக்கு விளையாடவே தெரியல லா"
"யாரு எனக்கா? உனக்குதான் தெரியல"
அவர்களுக்கிடையில் இடமாறியது இறகுபந்து (Shuttlecork) மட்டுமல்ல. வார்த்தைகளும்தான்.
ஷிவானி அவன் பேச்சைத் தாங்க முடியாமல் கொஞ்சம் வேகமாய் அந்த பந்தைத் தூக்கி உயர அடித்தாள்.
அது விழுந்த திசையை இருவரும் பார்க்க, அது தூரமாய் வீட்டிற்குள் நுழைந்த நபரின் மேல் விழுந்தது. அந்த நபர் யாரென்று நம் வாசகர்களுக்குச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது சிவகுருதான்.
மோகன் அவள் புறம் திரும்பி, "இதுதான் நீ ஆடிற இலட்சணமா?" என்று கேட்க,
"கொஞ்சம் பார்ஸ்ட்டா அடிச்சிட்டேன்... அதுக்கு என்ன இப்போ"
"எது... இது கொஞ்சம் பாஃர்ஸ்ட்டா" என்றவன் முறைக்க
அவளோ, "உன் எஃப் எம்மை ஆஃப் பண்ணு... நான் போய் கார்க்கை எடுத்துட்டு வர்றேன்" என்றவள் முன்னே நடந்தாள்.
குருவும் தன் மீது இதனை யார் எறிந்தார்கள் என்று தேடலாய் பார்த்தவன்,
ஷிவானியை பார்த்ததும் அவனை அறியாமலே முகம் மலர்ந்தான்.
அதே நேரம் அவள் ஒரு த்ரீ பை போஃர்த் பேண்டும் டைட் டீஷர்ட்டும் அணிந்து கொண்டு வர,
சிவசு மெஸ்ஸிலிருந்து காரில் ஏறி மோகனுடன் புறப்பட்டிருந்த ஷிவாணியின் மனம் எங்கோ கண்காண திசையில் தன்னை மறந்து பயணித்துக் கொண்டிருந்தது.
எதை நினைத்து எதனால் என்பதற்கான காரண காரியத்தை எல்லாம் அவள் தீவிரமாய் அலசி ஆராயவில்லை.
அதே நேரம் அந்த நெகிழ்ச்சியான உணர்வைச் சற்றும் வெளியேற விடாமல் மௌன நிலையில் வந்தவளைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு வந்தான் மோகன்.
'இவளுக்கு என்னாச்சு... ஏன் இவ்வளவு ஸைலன்ட்டா வரா' என்று மனதிற்குள் கேட்டு கொண்டவன்,
அதற்கு மேல் பொறுமையிழந்து, "ஷிவா?" என்றழைத்தான்.
"ஹ்ம்ம்.. சொல்லு மோக்" என்று அறைகுறை சிந்தனையோடு ஜன்னலோரம் காட்சிகளை ரசித்தபடி அவள் கேட்க,
அவன் அவளிடம் வீடும் வரை பேச்சு கொடுத்துக் கொண்டே வந்தான்.
"இறங்கு ஷீவா" என்றவன் சொல்ல உணர்வு பெற்றவள், காரிலிருந்து இறங்கினாள்.
அவள் முன்னேறி நடக்க மோகன், "ஷிவா" என்றழைத்தான்
"என்ன லா?" என்றவள் கேட்டபடி திரும்பி நிற்க,
"நான் கேட்டதுக்கு எதுக்கும் நீ பதில் சொல்லாமலே போற... உனக்கு இதுல விருப்பமில்லையா?" என்று கேட்கவும் அவள் முகம் குழப்பமாய் மாறியிருந்தது.
"நீ என்ன கேட்ட... நான் என்ன பதில் சொல்லனும்?" என்றவள் கேட்க,
"ஏ... நான் உன்கூட இவ்வளவு நேரம் பேசிட்டு வந்ததெல்லாம் நீ காதிலயே வாங்கிலயா?!" என்றவன் கடுப்பாகி வினவ,
"ஸாரி லா... நான் வேறேதோ யோசிச்சிட்டு இருந்தேனா?... நீ என்ன சொன்னன்னு நான் கவனிக்கவே இல்லை" என்றாள்.
அவன் முகமெல்லாம் அத்தனை எரிச்சலாய் மாறியிருக்க
அவள் யோசனைகுறியோடு, "ஆமா மோக்... நீ என்ன சொன்ன?" என்றவள் கேட்க,
"நான் ஒரு மன்னங்கட்டியும் சொல்லல... நீ போ" என்று கடுப்படித்தான்.
அவனின் கோபமான பாவனை பார்த்துக் குழப்பமானவள், மேலே அவனிடம் எதையாவது பேசி வாங்கி கட்டி கொள்வானேன் என்ற எண்ணத்தோடு மௌனமாய் அகன்று விட்டாள்.
மோகன் ஒருவித தோற்று போன உணர்வோடு தன் காரின் மீது குத்தி கொண்டிருக்க,
"டே மோகன்" என்று அவன் செயலைப் பார்த்துப் பதை பதைத்து ரஞ்சன் அழைக்க அவன் சற்று அமைதி பெற்றான்.
ரஞ்சன் சந்தேகத்தோடு, "ஷிவாகிட்ட பேசிட்டியா?" என்று கேட்டு வைக்க,
"அவ கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானாடா" என்று கோபமானான்.
"என்னடா ஆச்சு? பொறுமையா நடந்ததைச் சொல்லு"
"ஏதாச்சும் நடந்தாதானேடா சொல்றதுக்கு... ஒரு மண்ணும் ஆகல... அவளுக்கு நல்லா சாப்பிட தெரியுது... கேவளா சமைக்க தெரியுது... வேறெதவும் தெரியல" என்று சொல்ல ரஞ்சன் அவன் தோள்களைத் தடவி கொடுத்து,
"நீ டென்ஷா இருக்க... வா உள்ளே போய் பொறுமையா பேசிக்கலாம்"
"என்னால முடியலடா... மூஞ்சி முகரை தெரியாதவன்கிட்ட எல்லாம் பேசிறா... ஆனா நான் பேசினா காது கொடுத்து கூட கேட்கா மாட்டிறா... அவ கூட இருக்க போற ப்யூச்சரை நினைச்சா எனக்கு கதிகலங்குது" என்க, ரஞ்சனுக்கு என்ன பேசுவதென்றே புரியவில்லை.
இவர்களுக்கிடையில் திருமணம் என்ற உறவு சாத்தியப்படுமா என்று ரஞ்சனுக்கே கவலை எழ, தன் தம்பியைச் சமாதானம் செய்து அப்போதைக்கு இயல்பு நிலைக்கு மாற்ற முயன்றுகொண்டிருந்தான்.
இங்கே இவர்கள் சம்பாஷனை நடந்து கொண்டிருந்த அதே நேரத்தில், உள்ளே போன ஷிவானியிடம் நளினி சபரி அரவிந்தன் என எல்லோரும் சூழ்ந்து கொண்டு நிச்சியதார்த்தத்தை பற்றிப் பேச முற்பட்டனர்.
நளினி முதலில், "உனக்கும் மோகனுக்கும் எங்கேஜ்மன்ட் பண்ணலாம்னு" என்று கொஞ்சம் தயக்கத்தோடு சொல்ல, வேதாவிற்கு உள்ளூர பயமாய் இருந்தது. இவள் கோபத்தில் எதையெல்லாம் தூக்கி போட்டு உடைக்க போகிறாளோ என்றவர் அஞ்சிக் கொண்டு நிற்க, ஷிவானி எல்லோரின் மீதும் தன் அதிர்ச்சியான படரவிட்டு கொண்டிருந்தாள்.
அவளின் மௌன நிலையைச் சாதகமாய் மாற்றிக் கொண்டு சபரி அவள் அருகில் அமர்ந்து தன் விருப்பத்தை மெதுமெதுவாய் அவள் மூலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.
அவள் தந்தையின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்தவள் தன் மௌனத்தைக் கலைத்து, "இதெல்லாம் அப்போ உங்க ஏற்பாடா டேட் ?" என்று கேட்க,
"இல்ல வாணிம்மா... நீ சம்மதிப்பன்னுதான்" என்றவர் தடுமாறியபடி பதிலுரைத்தார்.
அவள் முகமலர்ச்சியோடு,
"கம்மான் டேட்... நீங்க சொல்லி எதுக்காச்சும் நான் வேண்டாம்னு சொல்லிருக்கேனா?" என்றவள் கேட்க எல்லோரும் வியப்பாய் பார்த்திருந்தனர்.
"அப்படின்னா உனக்கு ஒகே வா வாணிம்மா" என்று சபரி மீண்டும் தெளிவுபெற கேட்க,
"ஒகே டேட்" என்றவள் தன் சம்மதத்தை பளிச்சென்று உரைக்க, யார் முகத்திலும் ஈயாடவில்லை. அப்போது உள்ளே நுழைந்த ரஞ்சனும் மோகனும் கூட அவள் சொன்னதை கேட்டு வியப்பில் மூழ்கினர்.
சபரிக்கு அத்தனை கர்வம். தன் மகள் அப்படியே தன் எண்ணத்தை ஏற்றுக் கொண்டுவிட்டாளே என்று. தன் மனைவியை அவர் திமிராய் ஒரு பார்வை பார்க்க, வேதா நம்ப முடியாத பார்வையோடு நின்றிருந்தார்.
அவள் மனதாரதான் சம்மதம் சொன்னாளா என்ற குழப்பம் எழ மகளின் பின்னோடு அறைக்குள் சென்றவர்,
"உனக்கு உண்மையிலேயே இந்த எங்கேஜ்மன்ட்ல சம்மதமா வாணி" என்று கேட்டார்.
"அப்பாவோட டெசிஷனுக்கு நான் எப்போ மீ மறுத்து பேசியிருக்கேன்" என்று வெளியே சொன்னதையே அவள் திரும்பவும் சொல்ல,
"இது உன் ப்யூச்சர் லைஃப் சம்பந்தபட்ட டெசிஷன் வாணி" என்றாள் வேதா.
"அதெல்லாம் டேடுக்கு தெரியாதா மீ... அவரு பார்த்திப்பாரு" என்று ஷிவானி தந்தையின் மீதான நம்பிக்கையோடு பேச வேதாவும் தன் மகளின் வார்த்தைகளைக் கேட்டு பூரித்துதான் போனாள்.
அதே நேரம் ஓர் பழைய சம்பவத்தின் நினைவு அவர் விழிகளில் நீரைச் சுரக்க செய்தது.
இதே போல ஒரு சூழ்நிலையில் அவள் தந்தையிடம் பேசிய வார்த்தைகள் அவள் காதுகளில் அப்போது ஒலித்தன.
"உனக்கு எதை செய்யனும் செய்ய கூடாதுன்னு எனக்கு தெரியாதால" என்று வேதாவின் தந்தை முருகவேல் சொல்ல,
"அதெல்லாம் எனக்குத் தெரியாது... நான் அவரைதான் கட்டிக்கிடுவேன்... அப்படி இல்லன்னா... இதே உத்திரத்தில தூக்கு போட்டு தொங்கிடுவனாக்கும்" என்று பிடிவாதமாய் சொல்ல வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ந்து போயினர்.
"அடி பாவி மவளே" என்று அவள் தாய் தங்கம் அவளை அடி வெலத்து வாங்க
"என்னத்துக்கு வயசுபுள்ளைய போட்டு இப்படி அடிக்க" என்று முருகவேல் மனைவியைத் தடுத்து "போகட்டும் தங்கம்... அவ ஆசை பட்டவனையே அவளுக்குக் கட்டி வைச்சிருவோம்" என்றார்.
"என்ன சொல்லுதீக... அவளுக்கு பிறவு அடுத்து அடுத்து மூணு நிக்கே... அவைகளும் இவளை போலவே சொன்னா" என்று வேதாவின் தாய் சொல்ல, முருகவேல் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் அவள் விரும்பியவனுக்கே மணமுடித்து வைத்தார்.
அந்த நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த,
வேதாவிற்கு தான் சொல்லிய வார்த்தை தன் பெற்றோர்களின் மனதை எந்தளவுக்கு ரணப்படுத்தியிருக்கும் என்பதை இப்போது உணர முடிந்தது.
அதுவும் ஷிவானி அவள் அப்பாவின் மீது கொண்ட நம்பிக்கையையும் பாசத்தையும் பார்த்த போது,
தான் ஏன் தன் தந்தையின் மீது அத்தகைய நம்பிக்கையை வைக்காமல் போய்விட்டோம் என்று அர்த்தமில்லாமல் எண்ணத் தோன்றியது.
இவ்வாறு எண்ணமிட்டு அவர் கண்ணீர் பெருக்கிக் கொண்டிருக்க, அதற்கு நேர்மாறாய் வீட்டில் உள்ள மற்றவர்கள் எல்லோரும் அந்தத் திருமணத்திற்கு ஷிவானி சம்மதம் சொன்னதை எண்ணி களிப்புற்றிருந்தனர்.
மோகனும் அவள் சம்மதத்தில் சற்று வியப்பானான். அதன் காரணத்தால் அவள் மீது சுமந்திருந்த வெறுப்பை எல்லாம் அவன் அப்போதைக்கு மறந்து போயிருந்தான்.
குற்றாலத்திலிருந்து திருநெல்வேலிக்கு வந்தவர்கள் நிச்சியத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வதில் மும்முரமாயினர்.
அதே நேரம் வேதாவிற்கு எப்போது தன் வீட்டாரைப் பார்ப்போம் என உள்ளூர தவிப்பும் எதிர்பார்ப்பும் மலையென வளர்ந்து கொண்டிருக்க,
அதற்கான சரியான சந்தர்ப்பம்தான் அவருக்கு இன்னும் வாய்க்கப் பெறவில்லை.
மோகனும் ஷிவானியும் திருமணத்திற்கு நிச்சயம் செய்து கொள்ளப் போகிறோம் என்பன பற்றிய எண்ணமெல்லாம் மறந்து,
எப்போதும் போல அவர்களுக்கே உண்டான சேட்டைகளையும் சண்டைகளையும் குறையேதுமின்றி செய்து கொண்டுதான் இருந்தனர்.
அந்த வீட்டின் முன்புறம் இருந்த பெரிய இடத்தில் மோகனும் ஷிவானியும் பேட்மிட்டன் விளையாடிக் கொண்டிருக்க, ரஞ்சனும் சங்கீதாவும் ஒரு ஓரமாய் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சங்கீதா தன் கணவனிடம், "இவங்க இரண்டு பேர்கிட்டயும் ஏதோ மிஸ்ஸாகுது... கல்யாணம் பண்ணிக்க போறவங்க மாறியே இல்லை" என்க,
"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல... இரண்டு பேரும் கொஞ்சம் சின்ன பிள்ளைங்க மாறி பிகேவ் பன்றாங்க... அவ்வளவுதான்" என்றான்.
அவன் சொல்வதற்கு ஏற்றாற் போலதான் அவர்கள் இருவரும் இருந்தனர்.
"உனக்கு விளையாடவே தெரியல லா"
"யாரு எனக்கா? உனக்குதான் தெரியல"
அவர்களுக்கிடையில் இடமாறியது இறகுபந்து (Shuttlecork) மட்டுமல்ல. வார்த்தைகளும்தான்.
ஷிவானி அவன் பேச்சைத் தாங்க முடியாமல் கொஞ்சம் வேகமாய் அந்த பந்தைத் தூக்கி உயர அடித்தாள்.
அது விழுந்த திசையை இருவரும் பார்க்க, அது தூரமாய் வீட்டிற்குள் நுழைந்த நபரின் மேல் விழுந்தது. அந்த நபர் யாரென்று நம் வாசகர்களுக்குச் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அது சிவகுருதான்.
மோகன் அவள் புறம் திரும்பி, "இதுதான் நீ ஆடிற இலட்சணமா?" என்று கேட்க,
"கொஞ்சம் பார்ஸ்ட்டா அடிச்சிட்டேன்... அதுக்கு என்ன இப்போ"
"எது... இது கொஞ்சம் பாஃர்ஸ்ட்டா" என்றவன் முறைக்க
அவளோ, "உன் எஃப் எம்மை ஆஃப் பண்ணு... நான் போய் கார்க்கை எடுத்துட்டு வர்றேன்" என்றவள் முன்னே நடந்தாள்.
குருவும் தன் மீது இதனை யார் எறிந்தார்கள் என்று தேடலாய் பார்த்தவன்,
ஷிவானியை பார்த்ததும் அவனை அறியாமலே முகம் மலர்ந்தான்.
அதே நேரம் அவள் ஒரு த்ரீ பை போஃர்த் பேண்டும் டைட் டீஷர்ட்டும் அணிந்து கொண்டு வர,