குயிலி சொல்லத் தொடங்கினாள் "நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே பெருந்துறைக்கு பக்கத்தில் உள்ள வாய்க்கால் மேடுங்கிற கிராமத்தில் தான் .கொஞ்சம் கஷ்டப்படுற குடும்பம் தான் எங்களோடது.ரொம்ப வசதியான வாழ்க்கை இல்லனாலும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு எங்களோட வாழ்க்கை.
நான் அம்மா ,அப்பா, தங்கச்சி அப்புறம் என்னோட நாய்க்குட்டி ஜிம்மி . ஓட்டு வீடுதான் எங்களோடது என்றவள் முகம் பிரகாசமாக இருந்தது. இவ்வளவு நாட்களாக அவள் முகத்தில் காண முடியாத ஒளி இப்பொழுது தன் குடும்பத்தை பற்றி பேசும்பொழுது வந்திருந்தது .
மயில்வாகனன் அந்த முகத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். மீண்டும் குயிலியே தொடர்ந்தாள்" இடி மின்னல் எல்லாம் வந்துச்சுன்னா எனக்கு அவ்வளவு பயமா இருக்கும் எங்க வீட்டுக்குள்ள வந்துருமோன்னு. அப்ப எல்லாம் நான் அப்பாவை தான் கட்டி புடிச்சிட்டு இருப்பேன். அந்த டைம்ல என்னோட பெரிய ஆசையே ஒரு மச்சி வீட்டுக்கு போகணும் அப்படிங்கறதுதான்" என்றவள் விரக்தியாக சிரித்தாள்.
அவள் கையை அழுத்தி கொடுத்தவன் மேலே சொல்லு என்பது போல் பார்க்க "அப்பாக்கு நான் கலெக்டர் ஆகணும் அப்படிங்கறது தான் ஆசை .சின்ன வயசுல இருந்தே நான் நல்லா படிப்பேன். வீட்டுக்கு பக்கத்துல இருந்த கவர்மெண்ட் ஸ்கூல்ல தான் நானும் என் தங்கச்சியும் படிச்சோம் . தங்கச்சிய ரொம்ப பிடிக்கும். நாங்க இரண்டு பேரும் அடிக்கிற கூத்தெல்லாம் எங்க அம்மா அப்பா பார்த்து சிரிச்சுக்கிட்டே இருப்பாங்க. ரெண்டு பேருமே ரொம்ப ஜாலி டைப். எவ்வளவு குறும்பு பண்ணினாலும் எங்களை அடிச்சதே கிடையாது .அப்பாக்கு அங்கிருந்த ஒரு ரைஸ் மில்ல வேலை. அம்மா ஊர்தலைவர் வீட்ல இருக்க மாடு எல்லாம் பார்த்துப்பாங்க" என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
அவள் மனதில் ஏதோ சொல்ல முடியாத வேதனை குடி கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டவன் அவளாகவே பேசட்டும் என்று அமைதி காத்தான். சிறிது நேரத்தில் அவளே தொடர்ந்தாள். இவ்வளவு நேரம் நிமிர்ந்து அவனைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த தலை இப்பொழுதுதான் தானாக குனிந்திருந்தது.
ஊர்த்தலைவர் வீட்ல அம்மா மாடுங்களைப் பார்த்துக்க போறப்ப நானும் என் தங்கச்சியும் அவங்க கூட போவோம் . அங்க நிறைய வாத்து இருக்கும் .அது கூட விளையாடிட்டு இருப்போம்.எனக்கும் அவளுக்கும் வாத்துன்னா ரொம்ப பிடிக்கும் " என்றவள் மீண்டும் அமைதியாகி விட்டாள் .கண்கள் உடைப்பு எடுக்க ஆரம்பித்து இருந்தது.
யார் முன்பும் அழப் பிடிக்காதவள் இப்பொழுது மயில்வாகனன் முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் கண்களைத் துடைத்துவிட்டவன் "ச்சு..என்ன இது சின்ன பிள்ளை மாதிரி?" என்க தலையில் இடம் வலமாக அசைத்தவாறு அவன் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டாள். அவள் தலையை சிறிது நேரம் வருடிக்கொடுத்தான்.
அன்னைக்கு என் தங்கச்சிக்கு உடம்பு சரியில்ல. அதனால அம்மா அவளை பார்த்துக்க வீட்டிலேயே இருந்துட்டாங்க. எனக்கு வீட்ல இருக்க போர் அடிச்சிச்சு. அதனால அந்த வாத்துங்க கூட போய் விளையாடலாம்னு நினைச்சு அம்மாகிட்ட சொல்லிட்டு நான் போனேன். அப்ப எய்த் படிச்சுட்டு இருந்தேன்.
நான் போய் வாத்துங்களோட விளையாடிட்டு இருந்தேன் .அப்ப அந்த ஊர் தலைவர் வந்து வீட்டுக்குள்ள சாக்லேட் இருக்கு வா எடுத்து தரேன் அப்படின்னு கூப்பிட்டான் .அவன் எனக்கும் என் தங்கச்சிக்கும் அடிக்கடி சாக்லெட் தருவான் .அதனால நானும் நம்பி உள்ள போன. அப்ப அவங்க வீட்ல யாருமே இல்ல..." என்றவள் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை.
விஷயம் என்ன என்பதை உணர்ந்த மயில்வாகனனிற்க்கு ஒரு நிமிடம் உலகமே தட்டாமாலை சுற்றியது .தொண்டையைக் கனைத்துக் கொண்டு அவள் மீண்டும் தொடர்ந்தாள் "சாக்லெட் உள்ளே இருக்கு அப்படின்னு சொல்லி பெட் ரூம் குள்ள கூப்பிட்டான்.. நானும் தயங்கித் தயங்கி உள்ள போனேன். பெட்ல உட்காரு சாக்லெட் தர அப்படின்னு சொன்னான். நான் இல்லங்க ஐயா அதெல்லாம் வேண்டாம் அப்படின்னு சொன்ன .நான் சொன்னதைக் கேட்காமல் கோபமா பெட்ல உட்காரு அப்படின்னு சொன்னான். நானும் பயந்து போய் உட்கார்ந்துட்டேன்.இப்பகூட நான் அவன் ஏன் அப்படி பண்றான்னு நினைச்சேனே தவிர வேற எண்ணம் என் மனசுக்குள்ள வரலை. என் பக்கத்தில் வந்து உட்கார்ந்த உடனேயே நான் எழுந்திட்டேன் .நான் ஓடுறதுக்குள்ள என்னோட கைய பிடிச்சு அப்படியே பெட் மேல தள்ளிவிட்டான்" என்றவளின் உடல் நடுங்கியது
"நானும் அவனை தள்ளி விட்டு ஓட பார்த்த ஆனால் அவன் என்ன விடவே இல்ல. நான் கத்த கத்த என்ன ..."என்றவளின் வாயை பொத்திய மயில்வாகனன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
குயிலின் முதுகில் திடீரென்று ஈரம் பரவ அணைப்பில் இருந்து விடுபட பார்த்தால். ஆனால் முடியவில்லை .மயில்வாகனனின் உடல் லேசாகக் குலுங்கியது. அவன் அழுவதை பார்த்ததும் குயிலியின் வாய் தானாக "அப்பா" என்று முணுமுணுத்தது.
சட்டென்று அணைப்பிலிருந்து விலகியவன் "என்ன சொன்ன?" என்று கேட்க "எனக்கு அப்பா ஞாபகம் வந்திருச்சு" என்றவள் மேலே பேச தொடங்கினாள். அப்புறம் நான் கண் முழிச்சு பார்த்தப்ப ஹாஸ்பிடல்ல இருந்தேன். என்ன சுத்தி அம்மாவும் அப்பாவும் நின்னு அழுதுட்டு இருந்தாங்க. நர்ஸ் வந்து ஏதோ அம்மாவை திட்டிட்டு போனாங்க .எனக்கு அப்ப இருந்த நிலைமைல்ல எதுவுமே புரியல. அவங்க ஏதோ சொன்ன உடனே அம்மா அப்படியே கீழே உட்கார்ந்து அழுக ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு உடம்பெல்லாம் ஒரே வலி. நான் கண்மூடி படுத்துட்டே அவங்க சொன்னத கேட்டேன்.
"பணத்துக்கு ஆசைப்பட்டு சின்ன பிள்ளையை போயி இப்படி பண்ண வெச்சிருக்கியே... கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா உனக்கு ?"அப்படி இப்படின்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அப்பா அதுக்கு மேல ஒன்னும் பண்ணாம என்னை கூப்பிட்டு வீட்டுக்கு வந்துட்டாங்க.வீட்டுக்கு வந்ததுக்கப்பறம் நிறைய பேர் வந்து அப்பா அம்மாவை ஏதேதோ சொன்னாங்க. என்னோட தங்கச்சி "அக்காக்கு என்ன ஆச்சு ன்னு?" அம்மா அப்பா கிட்ட கேட்டுட்டே இருந்தாள்.
என்னால உடம்புவலி தாங்கவே முடியலை.வலிக்குது வலிக்குதுன்னு அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தேன். நாளைக்கு வலியே இருக்காது கண்ணு ...சரியாயிடும் அப்படின்னு சொன்னாங்க. அப்ப எனக்கு புரியல .ஆனா அடுத்த நாள் தான் புரிஞ்சுச்சு" என்றவளை அவன் கேள்வியாக பார்த்தான்.
அன்னைக்கு நைட் பால்ல எல்லாத்துக்கும் அம்மா விஷம் வெச்சு கொடுத்துட்டாங்க .எனக்கு பால் பிடிக்காது .அதனால நான் அந்தப் பாலைக் கொண்டு போய் வெளியே கொட்டிட்டேன் அம்மாவுக்கு தெரியாம .அதனால என்னைத் தவிர எல்லாரும் ..."என்றவள் பேச முடியாமல் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
"இன்னைக்கு தான் அவர்கள் இறந்த நாள். என்னால சத்தியமா முடியல .ஒவ்வொரு வருஷமா இந்த நாள்ல நான் படற பாடு" என்றவளின் உடல் நடுங்கியது." ஒன்னும் இல்லடா ...ஒன்னும் இல்ல... இனி உனக்கு எல்லாமா நான்இருக்கேன் "என்று மயில்வாகனன் சொல்ல
"அடுத்த நாள் காலையில் ஜிம்மி கத்திட்டே இருந்துச்சு. நான் கஷ்டப்பட்டு கண்ண முழிச்சு பக்கத்துல பார்த்தா மூணு பேரோட வாயிலையும் நுரை இருந்துச்சு. மூணு பேரையும் எழுப்பின ஆனா அவங்க எந்திரிக்கவே இல்லை. என்ன பண்றதுன்னு தெரியாம அம்மான்னு கத்தினேன். பக்கத்துல இருந்தவங்க எல்லாம் ஓடி வந்து பார்த்துட்டு எந்த ஹெப்பும்மே பண்ணல .ஊர்த்தலைவர் பெரிய ஆள்ல... எனக்கு உதவப் போய் அவரை ஏதாவது அவன் பண்ணிட்டான்னா... அதனால பயந்துட்டு யாருமே ஹெல்ப் பண்ண வரல... சில பேரு என் மேல தான் தப்பு அப்படின்னு பேசிட்டாங்க .யாருன்னு தெரியல யாரோ ஒருத்தர் ஆம்புலன்சுக்கு போன் பண்ணி அப்புறம்தான் எல்லாம் நடந்துச்சு..."