Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
கனலை_விழுங்கும்_இரும்பு
விலைமாதராய் வாழும் பெண்ணின் மனஉணர்வுகளை தத்ரூபமாக விளக்கிய கற்புநிலை யாதெனில் பிறகு
உங்கள் படைப்பான கனலை விழுங்கும் இரும்பில் விசாரணை அதிகாரியாக வலம் வரும் நாயகியின் வாழ்வியிலை சிறப்பாக காட்டியயிருக்கீங்க Kathambari
வாழ்த்துக்கள்?
தனித்துவமான அழகான எழுத்து நடை...
கதை சொல்லும் பாணி மிகப் புதுமை...
உரையாடல்கள் எதார்த்தம்...
நல்ல படைப்பு...
ஆனால் Romance partல் கவனம் செலுத்திய அளவுக்கு Thriller part இல்லை. கொஞ்சம் தொய்வு...
Cid மூன்று பேரும் பெண்களாகவே இருப்பதாக காட்டியதில் எதார்த்தமில்லைனு தோணுச்சு. கனகா மேம் Head என்பதற்கான தகுதியில் கொஞ்சமும் பொருந்தவில்லை.
எளிதான தமிழாக இருந்தாலும் ரொம்பவும் வர்ணனையாக மற்றும் அதீத உவமைகளாக இருந்த காரணத்தால் கேஸ் விசாரணையில் தெளிவின்மை தென்பட்டது. சில இடங்கள் புரியாமல் இரண்டு முறை படிக்க நேரிட்டது.
உணர்வுகள் பேசும் கற்புநிலை யாதெனில் கதைகளில் கவிதைகள் வலம் வருவது அழகு...
சயனா மாதிரி இரும்பு மனுஷியை காட்டும் போதும் இவ்வளவு கவிதை தேவையான்னு தோணுச்சு...
கொஞ்சம் குறைச்சிருக்கலாம்...
(முழு கதையாக படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வு.)
இதெல்லாம் தாண்டி புதுமையாக எழுதணும்கிற உங்க
ஆர்வமும் தேடலும் மற்றும் உங்க தனித்துவமான நடையும் எழுத்து துறையில் உங்களுக்கு தனி அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. Kathambari
உங்கள் வெற்றி பயணம் தொடர ஒரு வாசகியாகவும் அதேநேரம் சகஎழுத்தாளினியாகவும் என் வாழ்த்துக்கள்
-மோனிஷா
விலைமாதராய் வாழும் பெண்ணின் மனஉணர்வுகளை தத்ரூபமாக விளக்கிய கற்புநிலை யாதெனில் பிறகு
உங்கள் படைப்பான கனலை விழுங்கும் இரும்பில் விசாரணை அதிகாரியாக வலம் வரும் நாயகியின் வாழ்வியிலை சிறப்பாக காட்டியயிருக்கீங்க Kathambari
வாழ்த்துக்கள்?
தனித்துவமான அழகான எழுத்து நடை...
கதை சொல்லும் பாணி மிகப் புதுமை...
உரையாடல்கள் எதார்த்தம்...
நல்ல படைப்பு...
ஆனால் Romance partல் கவனம் செலுத்திய அளவுக்கு Thriller part இல்லை. கொஞ்சம் தொய்வு...
Cid மூன்று பேரும் பெண்களாகவே இருப்பதாக காட்டியதில் எதார்த்தமில்லைனு தோணுச்சு. கனகா மேம் Head என்பதற்கான தகுதியில் கொஞ்சமும் பொருந்தவில்லை.
எளிதான தமிழாக இருந்தாலும் ரொம்பவும் வர்ணனையாக மற்றும் அதீத உவமைகளாக இருந்த காரணத்தால் கேஸ் விசாரணையில் தெளிவின்மை தென்பட்டது. சில இடங்கள் புரியாமல் இரண்டு முறை படிக்க நேரிட்டது.
உணர்வுகள் பேசும் கற்புநிலை யாதெனில் கதைகளில் கவிதைகள் வலம் வருவது அழகு...
சயனா மாதிரி இரும்பு மனுஷியை காட்டும் போதும் இவ்வளவு கவிதை தேவையான்னு தோணுச்சு...
கொஞ்சம் குறைச்சிருக்கலாம்...
(முழு கதையாக படிக்கும் போது எனக்கு ஏற்பட்ட உணர்வு.)
இதெல்லாம் தாண்டி புதுமையாக எழுதணும்கிற உங்க
ஆர்வமும் தேடலும் மற்றும் உங்க தனித்துவமான நடையும் எழுத்து துறையில் உங்களுக்கு தனி அங்கீகாரத்தை கொடுக்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை. Kathambari
உங்கள் வெற்றி பயணம் தொடர ஒரு வாசகியாகவும் அதேநேரம் சகஎழுத்தாளினியாகவும் என் வாழ்த்துக்கள்
-மோனிஷா