Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 26 – மதுமிதா
சுரேகா சொல்லச் சொல்ல மீதி கதையை மித்ரா டைப் செய்து கொண்டிருந்தாள்.
எழுதி முடித்ததும், கதையின் தலைப்பை இதயமலரே என்று வை என்றாள் சுரேகா
என்னது இதய மலரே ன்னு டைட்டிலா நல்லாவே இல்லை
சரி நீயே நீயே ன்னு வை.
இதுவும் வேண்டாம். வேறு தலைப்பு வை
இப்போதைக்கு இந்தத் தலைப்பு இருக்கட்டும். பிறகு மாத்திக்கலாம் என்றாள் சுரேகா.
முடிவில் தலைப்புடன் கிடைத்த கதை இது.
இதய மலரே ( நீயே நீயே )
--------------------------------------------
கதையின் நாயகன் ராம்குமார் பாடகனாக காத்திருப்பவனாக முதல் காட்சியில் அறிமுகமாகிறான். அபுதாபியில் பணியில் இருக்கும் அவனுக்கு எப்போதும் ஊரின் நினைவு தான். அவனை நண்பர்கள் அனைவரும் ராஜா என்றே அழைப்பார்கள்.
அபுதாபிக்கு வந்து வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இடையில் ஊருக்குப் போகவே இல்லை. ஊரின் ஞாபகம் இப்போதெல்லாம் அதிகமாக வந்தது ராஜாவுக்கு. எப்போது ராஜா ஊருக்குத் திரும்புவான் என அவனுடைய குடும்பத்தினரும் ஊர் நண்பர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, இன்னும் ஒரு வருடத்துக்குள்ளாவது ஊருக்குத் திரும்பிப் போக முடியுமா என்று நினைத்துப் பார்த்தான்…
க்லிங்கென்ற சத்தம் கேட்டதும் பாடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு வாட்ஸப் மெசேஜை பார்த்தான் ராஜா. புதிதாக ஒரு எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. திறந்து பார்த்தால் ”வாழ்த்துகள் ராஜா” என்று மெசேஜ் இருந்தது. அப்போதுதான் தெரிந்தது, நண்பர்கள் குழுமத்தில் தான் பாடிய பாட்டின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தான். அது எழுத்தாளர்களும் கலைஞர்களும் சேர்ந்திருக்கும் குழுமம். அந்த குழுமத்தின் ஒரு எண்ணிலிருந்துதான் அந்த வீடியோ பாடல் மிகவும் நன்றாக இருந்தது என வாழ்த்தி மெசேஜ் வந்திருந்தது.
தனிமையில் புதிதாக கிரியேட்டிவாக செயல்பட முடியாமல் டல்லான மூடில் இருந்தபோது, இந்த வாழ்த்து ஒரு புத்துணர்வை அளித்து புதிய உற்சாகத்தை கொடுத்தது. மெசேஜை அனுப்பியது யாரென்று பார்த்தபோது பவித்ராம்மா என்று தெரிந்தது.
இன்னும் நித்யாவிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை… ஏன் அவளிடமிருந்து ஒரு மெசேஜும் வரவில்லை எனத் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒரு மெசேஜும் நித்யாவிடமிருந்து வரவில்லை என்பதே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி அவளால் அவனை தொடர்புகொள்ள முடியாமல் இருக்க முடிந்தது என நினைத்துப் பார்த்தான்.
சிறுவயதில் வேப்பங்குளத்தில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது முதலில் காதலில் விழுந்த போது அது அவர்களுக்குத் தெரியவில்லை. ராஜா (ராம்குமார்) சிறுவயது நித்யாவையும், நித்யா (சித்ரா) சிறுவயது ராஜாவையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுவயதில் வேப்பங்குளத்தில் கண்மாயில் விழுந்த சித்ராவை (நித்யா), பாயும் நீரின் வேகத்துக்கிடையில் நீச்சலடித்துப் போய் காப்பாற்றிக் கரை சேர்த்தவன் ராம்குமார் (ராஜா). இருவரும் காலத்தின் போக்கில் பிரிந்து இப்போது கல்லூரியில் சேர்ந்த போது அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
தங்களை அறியாமல் இப்போது இந்த வயதில் மனம் ஒன்றிணைந்தபோது சிறுவயது நட்பா, இந்தக் காதலா இதை எப்படி முடிவு செய்வது என்ற மனப் போராட்டத்தில் இருக்கின்றனர்.
பிறகு பல தடுமாற்றங்களுக்குப் பிறகு ராம்குமார் தான் ராஜா என்றும், சித்ரா தான் நித்யா என்றும் ஒரு தருணத்தில் தெரிந்து கொள்கிறார்கள். ராம்குமார் & ராஜா, சித்ரா & நித்யா இருவரும் ஒருவரே என்பது இருவருக்கும் தெரிய வருகிறது. மகிழ்ந்து போகிறார்கள்.
வேலைக்கு ராஜா அபுதாபிக்கு வந்த பிறகும் மொபைலில் இருவரும் பேசி கொண்டுதானிருந்தார்கள். ஆனால் ஏன் சில நாட்களாக அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதும் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் அவனுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஊருக்குத் திரும்பி திரைப்படத்தில் பாடுவதற்கு முன்னோட்டமாக நண்பர்களுடன் இணைந்து தயாரித்த இரு குறும்படங்களில் பாடி இருந்தான். நடிப்பை விட பாடுவது மட்டுமே அவனுக்கு பிடித்தமானதாக இருந்தது.
நித்யாவின் பிரச்சினை என்ன? ஏன் அவளிடமிருந்து தகவல் இல்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்து சரி செய்தான் என்பது சொல்லப்பட வேண்டும்.
பாடகனாக வெற்றி பெறுவதற்கான போராட்டத்தினிடையே சென்னைக்கும், தனது ஊருக்கும் ராஜா செய்யும் நன்மை எப்படி சாத்தியப்பட்டது என்பதை காட்சிப் படுத்த வேண்டும்.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, அவனுடைய மீடியா வெற்றியை, அடுத்த தனது முன்னேற்றத்துக்கென வெற்றிக்கென கவனத்தில் வைத்துக் கொள்ளாமல், ஊருக்கான நன்மை தரும் திட்டமாக எப்படி மடைமாற்ற முடிந்தது என்பது ஒவ்வொன்றாக சொல்லப்பட வேண்டும்.
நித்யாவின் கதாபாத்திரம் முழு ஆளுமையாக செதுக்கப்பட வேண்டும். பவித்ராம்மாவின் பாடல்கள் தயாரிப்பினால் தொடர்ந்த நட்பு ராஜாவை இன்னும் எவ்விதம் பக்குவப் படுத்தியது, அவரின் ஆலோசனைப்படி, இளைய தலைமுறைகள் அனைவரும் தொழில் என்று பெரு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட, முதியவர்கள் மட்டுமே குழந்தைகளின் பாசத்தில் வாடிக்கிடந்து சோகம் நிறைந்திருக்கும் ஊரில் மகிழ்ச்சியை எப்படிக் கொண்டுவருகின்றனர் என்பது சித்திரம் போல காட்சிப் படுத்த வேண்டும்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த ஊரில், பதினைந்து வருடங்களுக்கு முன்பு பொங்கிப் பெருகி ஓடிய கண்மாயில், இப்போது ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கண்மாயில், ராஜாவும் நித்யாவும் என்ன மாயம் செய்து தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்கின்றனர். மீண்டும் எப்படி ஊரில் பசுமை விரிகிறது. ஊர் மக்களை வாழவைத்து இந்தியாவுக்கே நீரின் மேலாண்மையை எப்படிக் கற்றுக் கொடுக்கின்றனர் என்பது கதை.
இந்தக் கதை உலகுக்கே நீரின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும், இதில் காட்டப்படும் வழிமுறைகளின் காட்சியால் உலகம் முழுக்க தண்ணீர் விழிப்புணர்வு பெற்று நீர் வளம் பெருகும் சரித்திர முக்கியத்துவம் பெறும் படமாக அமையட்டும். ஆனால் இது போதனை செய்யும் படமோ டாக்குமெண்ட்ரி படமோ அல்ல.
ராஜாவின் குணாதிசயங்கள் (விகடன் ஆசிரியர் கண்ணன், இயக்குநர் கவிதாபாரதியைப் பற்றி முன்னுரையில் எழுதிய குணாதிசயங்கள் இருப்பது போல முழுக்க முழுக்க காட்சிப் படுத்த வேண்டும்) பிறருக்கு உதவும் மென்மையான மனம், நித்யாவுடனான காதல், ஊரின் மீதான பற்று, பவித்ராம்மாவுடன் நீடிக்கும் நட்பு அனைத்தும் பல பரிமாணங்களில் காட்சிப் படுத்தப்பட்டு தொடர ஊருக்கு செய்யும் நன்மையுடன் அது உலகுக்கான நன்மையாக விரிய ராஜாவும் நித்யாவும் ஒன்று சேர மக்களின் வாழ்த்துடன் கதை முடிகிறது.
(பி.கு) முதலில் குறிப்பிட்ட வயல்வெளி கரும்புத்தோட்டம் வெல்லப்பாகு காய்ச்சும் காட்சிகள் சுரேகா, அசோக் பெயரில் இல்லாமல் ராஜா, நித்யா என்று பெயர் மாற்றம் செய்து விடலாம்.
பவித்ரா - சுரேகாவாகிய நானே தான். இப்போ பாடல்கள் எழுதுகிறேனே
சுபம்.
எழுதிய இந்தக் கதை தேர்வாச்சுன்னு சொன்னால் அதன் பிறகு இதை எப்படி விரிவாக எழுதணும், எத்தனை காட்சிகளாக எழுதணும் என்பதை நீங்க சொன்ன பிறகு எழுத ஆரம்பிக்கிறேன் என்று எழுதி செல்வகுமாருக்கு மெயிலில் அனுப்பி வைத்தாள்.
சுரேகா சொல்லச் சொல்ல மீதி கதையை மித்ரா டைப் செய்து கொண்டிருந்தாள்.
எழுதி முடித்ததும், கதையின் தலைப்பை இதயமலரே என்று வை என்றாள் சுரேகா
என்னது இதய மலரே ன்னு டைட்டிலா நல்லாவே இல்லை
சரி நீயே நீயே ன்னு வை.
இதுவும் வேண்டாம். வேறு தலைப்பு வை
இப்போதைக்கு இந்தத் தலைப்பு இருக்கட்டும். பிறகு மாத்திக்கலாம் என்றாள் சுரேகா.
முடிவில் தலைப்புடன் கிடைத்த கதை இது.
இதய மலரே ( நீயே நீயே )
--------------------------------------------
கதையின் நாயகன் ராம்குமார் பாடகனாக காத்திருப்பவனாக முதல் காட்சியில் அறிமுகமாகிறான். அபுதாபியில் பணியில் இருக்கும் அவனுக்கு எப்போதும் ஊரின் நினைவு தான். அவனை நண்பர்கள் அனைவரும் ராஜா என்றே அழைப்பார்கள்.
அபுதாபிக்கு வந்து வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகி விட்டன. இடையில் ஊருக்குப் போகவே இல்லை. ஊரின் ஞாபகம் இப்போதெல்லாம் அதிகமாக வந்தது ராஜாவுக்கு. எப்போது ராஜா ஊருக்குத் திரும்புவான் என அவனுடைய குடும்பத்தினரும் ஊர் நண்பர்களும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்க, இன்னும் ஒரு வருடத்துக்குள்ளாவது ஊருக்குத் திரும்பிப் போக முடியுமா என்று நினைத்துப் பார்த்தான்…
க்லிங்கென்ற சத்தம் கேட்டதும் பாடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்திவிட்டு வாட்ஸப் மெசேஜை பார்த்தான் ராஜா. புதிதாக ஒரு எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. திறந்து பார்த்தால் ”வாழ்த்துகள் ராஜா” என்று மெசேஜ் இருந்தது. அப்போதுதான் தெரிந்தது, நண்பர்கள் குழுமத்தில் தான் பாடிய பாட்டின் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தான். அது எழுத்தாளர்களும் கலைஞர்களும் சேர்ந்திருக்கும் குழுமம். அந்த குழுமத்தின் ஒரு எண்ணிலிருந்துதான் அந்த வீடியோ பாடல் மிகவும் நன்றாக இருந்தது என வாழ்த்தி மெசேஜ் வந்திருந்தது.
தனிமையில் புதிதாக கிரியேட்டிவாக செயல்பட முடியாமல் டல்லான மூடில் இருந்தபோது, இந்த வாழ்த்து ஒரு புத்துணர்வை அளித்து புதிய உற்சாகத்தை கொடுத்தது. மெசேஜை அனுப்பியது யாரென்று பார்த்தபோது பவித்ராம்மா என்று தெரிந்தது.
இன்னும் நித்யாவிடமிருந்து எந்த மெசேஜும் வரவில்லை… ஏன் அவளிடமிருந்து ஒரு மெசேஜும் வரவில்லை எனத் தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு மேலாகியும் ஒரு மெசேஜும் நித்யாவிடமிருந்து வரவில்லை என்பதே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி அவளால் அவனை தொடர்புகொள்ள முடியாமல் இருக்க முடிந்தது என நினைத்துப் பார்த்தான்.
சிறுவயதில் வேப்பங்குளத்தில் இருவரும் ஒன்றாக விளையாடியவர்கள். ஆனால் கல்லூரியில் படிக்கும்போது முதலில் காதலில் விழுந்த போது அது அவர்களுக்குத் தெரியவில்லை. ராஜா (ராம்குமார்) சிறுவயது நித்யாவையும், நித்யா (சித்ரா) சிறுவயது ராஜாவையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சிறுவயதில் வேப்பங்குளத்தில் கண்மாயில் விழுந்த சித்ராவை (நித்யா), பாயும் நீரின் வேகத்துக்கிடையில் நீச்சலடித்துப் போய் காப்பாற்றிக் கரை சேர்த்தவன் ராம்குமார் (ராஜா). இருவரும் காலத்தின் போக்கில் பிரிந்து இப்போது கல்லூரியில் சேர்ந்த போது அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை.
தங்களை அறியாமல் இப்போது இந்த வயதில் மனம் ஒன்றிணைந்தபோது சிறுவயது நட்பா, இந்தக் காதலா இதை எப்படி முடிவு செய்வது என்ற மனப் போராட்டத்தில் இருக்கின்றனர்.
பிறகு பல தடுமாற்றங்களுக்குப் பிறகு ராம்குமார் தான் ராஜா என்றும், சித்ரா தான் நித்யா என்றும் ஒரு தருணத்தில் தெரிந்து கொள்கிறார்கள். ராம்குமார் & ராஜா, சித்ரா & நித்யா இருவரும் ஒருவரே என்பது இருவருக்கும் தெரிய வருகிறது. மகிழ்ந்து போகிறார்கள்.
வேலைக்கு ராஜா அபுதாபிக்கு வந்த பிறகும் மொபைலில் இருவரும் பேசி கொண்டுதானிருந்தார்கள். ஆனால் ஏன் சில நாட்களாக அவளிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை என்பதும் அவளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதும் அவனுக்கு ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஊருக்குத் திரும்பி திரைப்படத்தில் பாடுவதற்கு முன்னோட்டமாக நண்பர்களுடன் இணைந்து தயாரித்த இரு குறும்படங்களில் பாடி இருந்தான். நடிப்பை விட பாடுவது மட்டுமே அவனுக்கு பிடித்தமானதாக இருந்தது.
நித்யாவின் பிரச்சினை என்ன? ஏன் அவளிடமிருந்து தகவல் இல்லை என்பதை எப்படிக் கண்டுபிடித்து சரி செய்தான் என்பது சொல்லப்பட வேண்டும்.
பாடகனாக வெற்றி பெறுவதற்கான போராட்டத்தினிடையே சென்னைக்கும், தனது ஊருக்கும் ராஜா செய்யும் நன்மை எப்படி சாத்தியப்பட்டது என்பதை காட்சிப் படுத்த வேண்டும்.
பெரும் போராட்டங்களுக்குப் பிறகு, அவனுடைய மீடியா வெற்றியை, அடுத்த தனது முன்னேற்றத்துக்கென வெற்றிக்கென கவனத்தில் வைத்துக் கொள்ளாமல், ஊருக்கான நன்மை தரும் திட்டமாக எப்படி மடைமாற்ற முடிந்தது என்பது ஒவ்வொன்றாக சொல்லப்பட வேண்டும்.
நித்யாவின் கதாபாத்திரம் முழு ஆளுமையாக செதுக்கப்பட வேண்டும். பவித்ராம்மாவின் பாடல்கள் தயாரிப்பினால் தொடர்ந்த நட்பு ராஜாவை இன்னும் எவ்விதம் பக்குவப் படுத்தியது, அவரின் ஆலோசனைப்படி, இளைய தலைமுறைகள் அனைவரும் தொழில் என்று பெரு நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட, முதியவர்கள் மட்டுமே குழந்தைகளின் பாசத்தில் வாடிக்கிடந்து சோகம் நிறைந்திருக்கும் ஊரில் மகிழ்ச்சியை எப்படிக் கொண்டுவருகின்றனர் என்பது சித்திரம் போல காட்சிப் படுத்த வேண்டும்.
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருந்த ஊரில், பதினைந்து வருடங்களுக்கு முன்பு பொங்கிப் பெருகி ஓடிய கண்மாயில், இப்போது ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் கண்மாயில், ராஜாவும் நித்யாவும் என்ன மாயம் செய்து தண்ணீரை ஊற்றெடுக்கச் செய்கின்றனர். மீண்டும் எப்படி ஊரில் பசுமை விரிகிறது. ஊர் மக்களை வாழவைத்து இந்தியாவுக்கே நீரின் மேலாண்மையை எப்படிக் கற்றுக் கொடுக்கின்றனர் என்பது கதை.
இந்தக் கதை உலகுக்கே நீரின் முக்கியத்துவத்தை விளக்குவதாகவும், இதில் காட்டப்படும் வழிமுறைகளின் காட்சியால் உலகம் முழுக்க தண்ணீர் விழிப்புணர்வு பெற்று நீர் வளம் பெருகும் சரித்திர முக்கியத்துவம் பெறும் படமாக அமையட்டும். ஆனால் இது போதனை செய்யும் படமோ டாக்குமெண்ட்ரி படமோ அல்ல.
ராஜாவின் குணாதிசயங்கள் (விகடன் ஆசிரியர் கண்ணன், இயக்குநர் கவிதாபாரதியைப் பற்றி முன்னுரையில் எழுதிய குணாதிசயங்கள் இருப்பது போல முழுக்க முழுக்க காட்சிப் படுத்த வேண்டும்) பிறருக்கு உதவும் மென்மையான மனம், நித்யாவுடனான காதல், ஊரின் மீதான பற்று, பவித்ராம்மாவுடன் நீடிக்கும் நட்பு அனைத்தும் பல பரிமாணங்களில் காட்சிப் படுத்தப்பட்டு தொடர ஊருக்கு செய்யும் நன்மையுடன் அது உலகுக்கான நன்மையாக விரிய ராஜாவும் நித்யாவும் ஒன்று சேர மக்களின் வாழ்த்துடன் கதை முடிகிறது.
(பி.கு) முதலில் குறிப்பிட்ட வயல்வெளி கரும்புத்தோட்டம் வெல்லப்பாகு காய்ச்சும் காட்சிகள் சுரேகா, அசோக் பெயரில் இல்லாமல் ராஜா, நித்யா என்று பெயர் மாற்றம் செய்து விடலாம்.
பவித்ரா - சுரேகாவாகிய நானே தான். இப்போ பாடல்கள் எழுதுகிறேனே
சுபம்.
எழுதிய இந்தக் கதை தேர்வாச்சுன்னு சொன்னால் அதன் பிறகு இதை எப்படி விரிவாக எழுதணும், எத்தனை காட்சிகளாக எழுதணும் என்பதை நீங்க சொன்ன பிறகு எழுத ஆரம்பிக்கிறேன் என்று எழுதி செல்வகுமாருக்கு மெயிலில் அனுப்பி வைத்தாள்.