Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 30 – மதுமிதா
அதிகாலை நேரம் தான் மனதுக்கு எத்தனை இனிமையைத் தருகிறது. முதல் நாளின் களைப்பைப் போக்கி அன்றைய நாளில் செயல்படும் சக்தியைப் பெற நான்கு மணிக்கே மொட்டைமாடிக்குச் சென்றவள் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சிகளை முடித்து விட்டு ஐந்து மணிக்கு கீழே இறங்கி வந்தாள். வாசலில் கோலம் போட்டுவிட்டு சமையல் செய்துகொண்டிருந்தாள்.
ஜன்னலின் வழியே மேலிருந்து இறங்கும் குழாயில் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த இரு குருவிகள் கீச் கீச் என்றன. மெதுவாக அவற்றைப் பார்த்தாள். டிவி கேபிள் வயர்களின் மேல் அமர்ந்து ஊஞ்சலாடுவது இருப்பதும், காம்பவுண்ட் சுவரில் உட்காருவதும், பறந்து சென்று சின்ன புழுவைப் பிடித்துக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுவதுமாக இருந்தன. குஞ்சுகளோ அதிபுத்திசாலிகள். நார் நாராகப் பரப்பி மெத்து மெத்தென்று கூடு கட்டி வைத்திருந்தன. மூன்று குஞ்சுகள் கண்களைத் திறக்காமல் கீச் கீச் என்று சொல்லிக் கொண்டு இருந்தன. அம்மா குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகும் போலிருக்கிறது. வேறு சத்தம் ஏதும் கேட்டால் குஞ்சுகள் சத்தமே இல்லாமல் தலையை உள்ளே இழுத்துக்கொண்டு அமைதியாக இருக்கும். அம்மாவின் சத்தம் கேட்டுவிட்டால் போதும் கீச் கீச் என்று வாய் திறந்து மூடுவது மட்டும் தெரியும். அலகில் எடுத்து வந்த புழுவை கொடுத்துவிட்டு தாய்ப்பறவை பறந்து போய்விடும். இந்த பால்கனி குழாய் இப்போது இப்படி பறவைகளின் சரணாலயமாகி இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
இதுவரையில் ஐந்து பறவை ஜோடிகள் வந்து குடித்தனம் இருந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து வளர்த்தெடுத்துக்கொண்டு போயிருக்கின்றன. போட்டோ எடுக்கும் அளவில் அமைப்பு இல்லை.
கிரைண்டரில் இட்லிக்கு அரைக்க நனைய வைத்திருந்த அரிசியைப் போட்டுவிட்டு வந்தாள். காலம்தான் என்னென்ன மாற்றங்களைச் செய்கிறது. ஆட்டுரல் நிலையாக இருக்க குழவியை ஆட்டி இட்லிக்கு மாவரைத்த காலம் போய், இப்போது உரல் சுற்றிக்கொண்டிருக்கிறது. குழவி நிலையாக இருக்கிறது. இடது கை குழவியைச் சுற்ற வலது கையால் மாவை தள்ளிக்கொண்டே இருந்த காலம் பல வருடங்களுக்கு முன்பே எப்போதோ மாறிவிட்டது. மாவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிட்டு வந்து, ஸ்டவ்வை நிறுத்தி, பொங்கிய பாலை இறக்கி வைத்தாள். கையைத் துடைக்கத் துணியைத் தேடியவள் நைட்டியிலேயே துடைத்துக் கொண்டாள். சென்னையில் இதேபோல இப்படி துடைத்தபோது குழந்தைகள் சின்னப்புள்ளை போல இப்படித் துடைக்கிறீங்க என்று கேலி செய்தது நினைவுக்கு வந்தது. சேலை என்றால் முந்தானையில் துடைத்துக்கொள்வது பழக்கமாகி இருந்தது.
அடைக்கு ஊற வைத்ததை இன்னும் இட்லிக்கு மாவு அரைப்பது முடியவில்லை என்று கிரைண்டரில் போடாமல் மிக்சியில் போட வந்தாள்.
கா கா என்று சத்தம் கேட்டது. ஒரு காகம் குரம் கொடுக்க இன்னொரு காகம் கா கா என்றது. இன்னொன்று இன்னொன்று இன்னொன்று என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போல பல காகங்களின் குரல்கள் திடீரென்று கேட்டதும் என்ன என்று கவனித்தாள். குரல் வீட்டின் முன் வாசல் அருகே கேட்டது. முன் வாசலுக்கு வந்து படியில் இறங்கிப் பார்ப்பதற்கு முன்பே முப்பதுக்கும் மேற்பட்ட காகங்கள் எலக்ட்ரிக் வயர்களிலும் மொட்டை மாடி சுவரிலும், காம்பவுண்ட் சுவர் என்று மாறி மாறி இங்கும் அங்கும் பறந்தபடியே குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. முன் கேட்டைத் திறக்க வந்து நின்றாள். காகங்கள் நிறுத்தாமல் கா கா என்று குரல் கொடுத்துக்கொண்டே இருந்தன. சாலையில் நடுப்பகுதியில் கொத்தாக காகத்தின் இறகுகள் சில இருந்தன. என்னதிது என்று நிதானித்துப் பார்த்தால், ஒரு காகம் இறந்திருக்க வேண்டும், மற்ற காகங்கள் அதைப் பற்றி பேசுகின்றன என்று புரிந்தது. மேலே இருந்து தவறி கீழே விழுந்து விட்டதா? ஏதேனும் வாகனத்தில் அடிபட்டு கீழே விழுந்துவிட்டதா? எதுவும் தெரியவில்லை.
மறுபடியும் கீழே கிடந்ததை கூர்ந்து பார்த்தால் உடலோ காலோ முகமோ எதுவும் தெரியவில்லை. இறகுகள் மட்டுமே இருந்தன. தொடர்ந்து காகங்களின் குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் காகங்கள் பறந்து வந்து கொண்டிருந்தன. சுரேகா முன் கேட்டைத் திறந்ததும் காகங்கள் இந்த வீடு எதிர்வீட்டு என்று இங்கும் அங்கும் பறந்து மொட்டை மாடி சுவரில் உட்கார்ந்துகொண்டு குரல் கொடுத்தன. கேட்டை மூடிவிட்டு உள்ளே வந்து விட்டாள். சிறிது நேரம் அவளுடைய உடலும் மனமும் அதிர்ந்துகொண்டிருந்தது. மனிதர்களின் மரணத்தில் உறவுகளும் நண்பர்களும் கூடுவதுபோல இவை கூடி இருக்கின்றன. இருபது நிமிட கா கா கதறல் கரைதலுக்குப் பிறகு அமைதி.
சமைத்துவிட்டு மீதி வேலையை முடித்தபோது கூட சுரேகாவுக்கு இந்த காகங்களின் குரலே காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. மனது சரியில்லை. வேலை முடிந்ததும் லைப்ரரிக்குப் போய்வரணும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு காகத்துக்கு ஆபத்து என்று இத்தனை காகங்கள் வந்தன. இப்போது இல்லை. அவைகளுக்கு இறந்த காகத்தின் நினைவு இனி இருக்குமா?
மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றால் மனிதர்களின் ஆதரவு இந்த காலகட்டத்தில் கிடைக்கிறதா… இதுபோல சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு காகங்கள் காலைந்து போய்விடுவதுபோல, மனிதர்களும் கலைந்து போய் மறந்தும் போய்விடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இல்லாத ஆதரவா? அந்த இரவில் ஒளிர்ந்த கலகக்குரல்களின் மொபைல் ஒளி உலகமெல்லாம் பெரும் ஆதரவைப் பெற்றுத் தரவில்லையா? ஆனால் சில நாட்களில் என்ன ஆயிற்று?
போன் சத்தம் அவளை நனவுலகுக்கு கொண்டு வந்தது.
அக்கா லைப்ரரிக்கு வர முடியுமா
வர்றேன்மா
நூலகர் முத்துலட்சுமிதான் பேசினாள்.
போனை வைத்ததும் மறுபடியும் போன் வந்தது.
தங்கபாண்டியன் எம் எல் ஏ பேசினார்.
என்னம்மா மனுவை கலெக்டர் ஆபீசில் குடுக்கச் சொன்னேனே குடுத்தீங்களா
உங்களுக்கு தானே மனுவைக் குடுத்தோம். நீங்கதானே அதைப் பார்த்துட்டு கலெக்டரிடம் பேசறேன்னு சொன்னீங்க.
என் வேலையை நான் செய்தாச்சு. நீங்க உங்க வேலையைச் செஞ்சீங்களா
என்ன வேலையைச் சொல்லறீங்க. இருபத்தி ஆறு வருஷமா செஞ்சுட்டுதானே இருக்கிறோம்
நான் சொன்னதை செஞ்சீங்களா
…………………………………….
என்னம்மா சத்தத்தைக் காணும்
இல்லீங்க… வந்து… என்ன செய்யச் சொன்னீங்க
நீங்க உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து லைப்ரரிக்காக இடம் கேட்டு குடுக்க வேண்டிய மனுவை குடுத்தீங்களா
அன்னிக்கே லைப்ரேரியன் விருதுநகருக்குப் போய் குடுத்துட்டாங்களே…
முதல்ல அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க. இப்பதான் டிஆர்ஓட்ட கேட்டேன். உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து மனு வரலைன்னு சொல்லறாங்க. என்ன விபரம்னு கேட்டுட்டு உடனே என்னைக் கூப்பிடுங்க.
டக் கென்று போனை வைத்து விட்டார்.
இதென்ன வம்பாகப் போச்சு. அன்னிக்கே கொடுத்தாச்சுக்கா என்று லைப்ரேரியன் சொன்னது நினைவுக்கு வந்தது. நூலகத்துக்குப் போனாள் சுரேகா.
என்னம்மா அவசரமா வரச்சொல்லி போன் பண்ணினீங்க?
அக்கா எம் எல் ஏ அன்னிக்கு சொன்னாருல்ல. நாம குடுக்கிற மனுவை நாம கலெக்டர் ஆபீசில் குடுக்கறதுக்கு முன்னாலேயே அவர் நம்ம மனுவை வெச்சு, அவரோட லெட்டர்பேடில் எழுதி குடுத்துட்டாருக்கா. நான் அந்த மனுவைப் பார்த்தேன். சொன்னத அப்படியே செஞ்சுட்டாருக்கா.
ரொம்ப நல்ல விஷயம்மா. நீங்க போனை வெச்சதும் எம் எல் ஏ பேசினாரு. கோபமா பேசினது போல இருந்துச்சு. நம்ம பக்கம் இருந்து மனு குடுத்தாச்சுன்னு சொன்னா. நீங்க மனுவை இன்னும் குடுக்கலைன்னு சொல்லறாரே.
இல்லக்கா நான் தான் நேரா போய் குடுத்தேன்
நீங்க ஏன் போனீங்க. டிஎல்ஓ (மாவட்ட நூலக அலுவலர்) தானே போய் கொடுக்கணும்.
இல்லக்கா அவரு லீவுல இருக்குறாரு. அதனால நான் போய் குடுத்துட்டேன்.
யாருட்ட குடுத்தீங்கம்மா. இப்பதான் எம் எல் ஏ போன்ல ’டிஆர்ஓட்ட குடுத்தீங்களா? இப்பதான் டிஆர்ஓட்ட பேசினேன். உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து மனு வரலைன்னு சொல்லறாங்க. என்ன விபரம்னு கேட்டுட்டு உடனே கூப்பிடுங்க’ ன்னு சொல்லிட்டு டொக்குன்னு போனை வெச்சுட்டாரும்மா.
ஆமா அக்கா அவரு சொன்னாப்புல மனுவை டிஆர்ஓட்ட குடுங்கன்னு நீங்க சொன்னது ஞாபகம் இருக்கு. அங்கே ஒருத்தங்க கிட்ட டிஆர்ஓ எங்கே இருக்காருன்னு தான் கேட்டேன். என்னன்னு கேட்டாங்க. டிஆர்ஓட்ட மனு குடுக்கணும்னு சொன்னவுடனே, அவர் இப்பதான் வெளியே போனாரு, வர்றதுக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்னு வேற இடத்தக் காட்டுனாங்க. அவங்க என்னைய திருப்பி விட்டுட்டாங்கக்கா. அவங்க சொன்ன இடத்துலதான் குடுத்துட்டேன்.
சரி இருங்க
எம் எல் ஏ க்கு போன் செய்தாள். இந்த விபரத்தைச் சொன்னாள்.
அவரோ போனை வைங்க நான் டிஎல்ஓ ட்டயும், டிஆர்ஓட்டயும் பேசிட்டு சொல்லறேன் என்று போனை வைத்து விட்டார்.
அதிகாலை நேரம் தான் மனதுக்கு எத்தனை இனிமையைத் தருகிறது. முதல் நாளின் களைப்பைப் போக்கி அன்றைய நாளில் செயல்படும் சக்தியைப் பெற நான்கு மணிக்கே மொட்டைமாடிக்குச் சென்றவள் நடைப்பயிற்சி மூச்சுப்பயிற்சிகளை முடித்து விட்டு ஐந்து மணிக்கு கீழே இறங்கி வந்தாள். வாசலில் கோலம் போட்டுவிட்டு சமையல் செய்துகொண்டிருந்தாள்.
ஜன்னலின் வழியே மேலிருந்து இறங்கும் குழாயில் கூடு கட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து குடித்தனம் நடத்திக் கொண்டிருந்த இரு குருவிகள் கீச் கீச் என்றன. மெதுவாக அவற்றைப் பார்த்தாள். டிவி கேபிள் வயர்களின் மேல் அமர்ந்து ஊஞ்சலாடுவது இருப்பதும், காம்பவுண்ட் சுவரில் உட்காருவதும், பறந்து சென்று சின்ன புழுவைப் பிடித்துக்கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டுவதுமாக இருந்தன. குஞ்சுகளோ அதிபுத்திசாலிகள். நார் நாராகப் பரப்பி மெத்து மெத்தென்று கூடு கட்டி வைத்திருந்தன. மூன்று குஞ்சுகள் கண்களைத் திறக்காமல் கீச் கீச் என்று சொல்லிக் கொண்டு இருந்தன. அம்மா குஞ்சுகளுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகும் போலிருக்கிறது. வேறு சத்தம் ஏதும் கேட்டால் குஞ்சுகள் சத்தமே இல்லாமல் தலையை உள்ளே இழுத்துக்கொண்டு அமைதியாக இருக்கும். அம்மாவின் சத்தம் கேட்டுவிட்டால் போதும் கீச் கீச் என்று வாய் திறந்து மூடுவது மட்டும் தெரியும். அலகில் எடுத்து வந்த புழுவை கொடுத்துவிட்டு தாய்ப்பறவை பறந்து போய்விடும். இந்த பால்கனி குழாய் இப்போது இப்படி பறவைகளின் சரணாலயமாகி இருப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.
இதுவரையில் ஐந்து பறவை ஜோடிகள் வந்து குடித்தனம் இருந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்து வளர்த்தெடுத்துக்கொண்டு போயிருக்கின்றன. போட்டோ எடுக்கும் அளவில் அமைப்பு இல்லை.
கிரைண்டரில் இட்லிக்கு அரைக்க நனைய வைத்திருந்த அரிசியைப் போட்டுவிட்டு வந்தாள். காலம்தான் என்னென்ன மாற்றங்களைச் செய்கிறது. ஆட்டுரல் நிலையாக இருக்க குழவியை ஆட்டி இட்லிக்கு மாவரைத்த காலம் போய், இப்போது உரல் சுற்றிக்கொண்டிருக்கிறது. குழவி நிலையாக இருக்கிறது. இடது கை குழவியைச் சுற்ற வலது கையால் மாவை தள்ளிக்கொண்டே இருந்த காலம் பல வருடங்களுக்கு முன்பே எப்போதோ மாறிவிட்டது. மாவில் கொஞ்சம் தண்ணீர் தெளித்துவிட்டு வந்து, ஸ்டவ்வை நிறுத்தி, பொங்கிய பாலை இறக்கி வைத்தாள். கையைத் துடைக்கத் துணியைத் தேடியவள் நைட்டியிலேயே துடைத்துக் கொண்டாள். சென்னையில் இதேபோல இப்படி துடைத்தபோது குழந்தைகள் சின்னப்புள்ளை போல இப்படித் துடைக்கிறீங்க என்று கேலி செய்தது நினைவுக்கு வந்தது. சேலை என்றால் முந்தானையில் துடைத்துக்கொள்வது பழக்கமாகி இருந்தது.
அடைக்கு ஊற வைத்ததை இன்னும் இட்லிக்கு மாவு அரைப்பது முடியவில்லை என்று கிரைண்டரில் போடாமல் மிக்சியில் போட வந்தாள்.
கா கா என்று சத்தம் கேட்டது. ஒரு காகம் குரம் கொடுக்க இன்னொரு காகம் கா கா என்றது. இன்னொன்று இன்னொன்று இன்னொன்று என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது போல பல காகங்களின் குரல்கள் திடீரென்று கேட்டதும் என்ன என்று கவனித்தாள். குரல் வீட்டின் முன் வாசல் அருகே கேட்டது. முன் வாசலுக்கு வந்து படியில் இறங்கிப் பார்ப்பதற்கு முன்பே முப்பதுக்கும் மேற்பட்ட காகங்கள் எலக்ட்ரிக் வயர்களிலும் மொட்டை மாடி சுவரிலும், காம்பவுண்ட் சுவர் என்று மாறி மாறி இங்கும் அங்கும் பறந்தபடியே குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. முன் கேட்டைத் திறக்க வந்து நின்றாள். காகங்கள் நிறுத்தாமல் கா கா என்று குரல் கொடுத்துக்கொண்டே இருந்தன. சாலையில் நடுப்பகுதியில் கொத்தாக காகத்தின் இறகுகள் சில இருந்தன. என்னதிது என்று நிதானித்துப் பார்த்தால், ஒரு காகம் இறந்திருக்க வேண்டும், மற்ற காகங்கள் அதைப் பற்றி பேசுகின்றன என்று புரிந்தது. மேலே இருந்து தவறி கீழே விழுந்து விட்டதா? ஏதேனும் வாகனத்தில் அடிபட்டு கீழே விழுந்துவிட்டதா? எதுவும் தெரியவில்லை.
மறுபடியும் கீழே கிடந்ததை கூர்ந்து பார்த்தால் உடலோ காலோ முகமோ எதுவும் தெரியவில்லை. இறகுகள் மட்டுமே இருந்தன. தொடர்ந்து காகங்களின் குரல்கள் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் காகங்கள் பறந்து வந்து கொண்டிருந்தன. சுரேகா முன் கேட்டைத் திறந்ததும் காகங்கள் இந்த வீடு எதிர்வீட்டு என்று இங்கும் அங்கும் பறந்து மொட்டை மாடி சுவரில் உட்கார்ந்துகொண்டு குரல் கொடுத்தன. கேட்டை மூடிவிட்டு உள்ளே வந்து விட்டாள். சிறிது நேரம் அவளுடைய உடலும் மனமும் அதிர்ந்துகொண்டிருந்தது. மனிதர்களின் மரணத்தில் உறவுகளும் நண்பர்களும் கூடுவதுபோல இவை கூடி இருக்கின்றன. இருபது நிமிட கா கா கதறல் கரைதலுக்குப் பிறகு அமைதி.
சமைத்துவிட்டு மீதி வேலையை முடித்தபோது கூட சுரேகாவுக்கு இந்த காகங்களின் குரலே காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. மனது சரியில்லை. வேலை முடிந்ததும் லைப்ரரிக்குப் போய்வரணும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஒரு காகத்துக்கு ஆபத்து என்று இத்தனை காகங்கள் வந்தன. இப்போது இல்லை. அவைகளுக்கு இறந்த காகத்தின் நினைவு இனி இருக்குமா?
மனிதனுக்கு ஒரு ஆபத்து என்றால் மனிதர்களின் ஆதரவு இந்த காலகட்டத்தில் கிடைக்கிறதா… இதுபோல சில மணி நேரங்கள் அல்லது நாட்களுக்குப் பிறகு காகங்கள் காலைந்து போய்விடுவதுபோல, மனிதர்களும் கலைந்து போய் மறந்தும் போய்விடுகிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு இல்லாத ஆதரவா? அந்த இரவில் ஒளிர்ந்த கலகக்குரல்களின் மொபைல் ஒளி உலகமெல்லாம் பெரும் ஆதரவைப் பெற்றுத் தரவில்லையா? ஆனால் சில நாட்களில் என்ன ஆயிற்று?
போன் சத்தம் அவளை நனவுலகுக்கு கொண்டு வந்தது.
அக்கா லைப்ரரிக்கு வர முடியுமா
வர்றேன்மா
நூலகர் முத்துலட்சுமிதான் பேசினாள்.
போனை வைத்ததும் மறுபடியும் போன் வந்தது.
தங்கபாண்டியன் எம் எல் ஏ பேசினார்.
என்னம்மா மனுவை கலெக்டர் ஆபீசில் குடுக்கச் சொன்னேனே குடுத்தீங்களா
உங்களுக்கு தானே மனுவைக் குடுத்தோம். நீங்கதானே அதைப் பார்த்துட்டு கலெக்டரிடம் பேசறேன்னு சொன்னீங்க.
என் வேலையை நான் செய்தாச்சு. நீங்க உங்க வேலையைச் செஞ்சீங்களா
என்ன வேலையைச் சொல்லறீங்க. இருபத்தி ஆறு வருஷமா செஞ்சுட்டுதானே இருக்கிறோம்
நான் சொன்னதை செஞ்சீங்களா
…………………………………….
என்னம்மா சத்தத்தைக் காணும்
இல்லீங்க… வந்து… என்ன செய்யச் சொன்னீங்க
நீங்க உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து லைப்ரரிக்காக இடம் கேட்டு குடுக்க வேண்டிய மனுவை குடுத்தீங்களா
அன்னிக்கே லைப்ரேரியன் விருதுநகருக்குப் போய் குடுத்துட்டாங்களே…
முதல்ல அவங்க கிட்ட கேட்டுட்டு சொல்லுங்க. இப்பதான் டிஆர்ஓட்ட கேட்டேன். உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து மனு வரலைன்னு சொல்லறாங்க. என்ன விபரம்னு கேட்டுட்டு உடனே என்னைக் கூப்பிடுங்க.
டக் கென்று போனை வைத்து விட்டார்.
இதென்ன வம்பாகப் போச்சு. அன்னிக்கே கொடுத்தாச்சுக்கா என்று லைப்ரேரியன் சொன்னது நினைவுக்கு வந்தது. நூலகத்துக்குப் போனாள் சுரேகா.
என்னம்மா அவசரமா வரச்சொல்லி போன் பண்ணினீங்க?
அக்கா எம் எல் ஏ அன்னிக்கு சொன்னாருல்ல. நாம குடுக்கிற மனுவை நாம கலெக்டர் ஆபீசில் குடுக்கறதுக்கு முன்னாலேயே அவர் நம்ம மனுவை வெச்சு, அவரோட லெட்டர்பேடில் எழுதி குடுத்துட்டாருக்கா. நான் அந்த மனுவைப் பார்த்தேன். சொன்னத அப்படியே செஞ்சுட்டாருக்கா.
ரொம்ப நல்ல விஷயம்மா. நீங்க போனை வெச்சதும் எம் எல் ஏ பேசினாரு. கோபமா பேசினது போல இருந்துச்சு. நம்ம பக்கம் இருந்து மனு குடுத்தாச்சுன்னு சொன்னா. நீங்க மனுவை இன்னும் குடுக்கலைன்னு சொல்லறாரே.
இல்லக்கா நான் தான் நேரா போய் குடுத்தேன்
நீங்க ஏன் போனீங்க. டிஎல்ஓ (மாவட்ட நூலக அலுவலர்) தானே போய் கொடுக்கணும்.
இல்லக்கா அவரு லீவுல இருக்குறாரு. அதனால நான் போய் குடுத்துட்டேன்.
யாருட்ட குடுத்தீங்கம்மா. இப்பதான் எம் எல் ஏ போன்ல ’டிஆர்ஓட்ட குடுத்தீங்களா? இப்பதான் டிஆர்ஓட்ட பேசினேன். உங்க டிபார்ட்மெண்ட்டிலிருந்து மனு வரலைன்னு சொல்லறாங்க. என்ன விபரம்னு கேட்டுட்டு உடனே கூப்பிடுங்க’ ன்னு சொல்லிட்டு டொக்குன்னு போனை வெச்சுட்டாரும்மா.
ஆமா அக்கா அவரு சொன்னாப்புல மனுவை டிஆர்ஓட்ட குடுங்கன்னு நீங்க சொன்னது ஞாபகம் இருக்கு. அங்கே ஒருத்தங்க கிட்ட டிஆர்ஓ எங்கே இருக்காருன்னு தான் கேட்டேன். என்னன்னு கேட்டாங்க. டிஆர்ஓட்ட மனு குடுக்கணும்னு சொன்னவுடனே, அவர் இப்பதான் வெளியே போனாரு, வர்றதுக்கு இன்னும் ஒரு மணிநேரம் ஆகும்னு வேற இடத்தக் காட்டுனாங்க. அவங்க என்னைய திருப்பி விட்டுட்டாங்கக்கா. அவங்க சொன்ன இடத்துலதான் குடுத்துட்டேன்.
சரி இருங்க
எம் எல் ஏ க்கு போன் செய்தாள். இந்த விபரத்தைச் சொன்னாள்.
அவரோ போனை வைங்க நான் டிஎல்ஓ ட்டயும், டிஆர்ஓட்டயும் பேசிட்டு சொல்லறேன் என்று போனை வைத்து விட்டார்.