lakshmiperumal
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 4,840
- Reaction score
- 3,628
Nice ud
Super name rmba superசிதம்பரம் – சாரதாவின் ஒரே தவப்புதல்வன் தான் துகிலன். சிதம்பரம் ஒரு ஆசிரியர். துகிலனுக்கு ஐந்து வயது இருக்கும் பொழுதே அவர் இறந்துவிட அவரின் வேலையை சாரதாவிற்கு கிடைத்தது.. அன்றிலிருந்து இன்று வரை தன்னுடைய மகனே தன்னுடைய வாழ்க்கை என்று வாழ்கிறார் சாரதா..
துகிலனும் சாரதாவைப் போலவே மிகுந்த பாசம் கொண்டவன்.. அவனுக்கு அம்மாவைப் பிடிக்கும் என்ற காரணத்தால் அவர் சொல்வது எதுவாக இருந்தாலும் அம்மாவின் விருப்பத்திற்கு சரியென தலையசைப்பவன்.. அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும் வெளியே சொல்லவே மாட்டான்..
மாடியில் இருந்து இறங்கி வந்த மகனைப் பார்த்த சாரதா, “டேய் துகில்..” என்று அழைக்க, “அம்மா..” என்றவன் நின்று அவரைப் பார்க்க, “பொண்ணு உனக்கு பிடிச்சிருக்கு இல்ல..?!” என்று கேட்டதும், ‘பிடிக்கல..’ என்று மனதில் சொன்னவன், “எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அம்மா..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய அறைக்குள் சென்று மறைந்தான்..
தன்னுடைய மகன் சரியென்று சொன்னதில் மகிழ்ச்சியடைந்த சாரதா பொண்ணு வீட்டிருக்கு அழைத்து மற்ற விஷயங்களைப் பற்றி பேச ஆரமித்தார்..
“ஹலோ நான் சாரதா பேசுகிறேன்... உங்க பெண்ணை என்னோட மகனுக்கு ரொம்ப பிடித்திருக்கிறதாம்.. அடுத்து வர ஒரு நல்ல நாளில் பெண் பார்க்க நாங்க வருகிறோம்..” என்று சாரதா மகிழ்ச்சியாகச் சொல்ல, அவர் பேசுவதை எல்லாம் தன்னுடைய அறையில் இருந்து கேட்ட துகிலனுக்கு ஏனோ கமழினியைப் பிடிக்காமல் போனது.. தனக்கு திருமணத்தில் ஈடுபாடு இல்லை என்று சொல்லாமல் கமழினியைப் பார்க்காமலே அவளை மனதில் இருந்து ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய வேலையைக் கவனிக்க ஆரம்பித்தான்..
அவன் வேலைக்கு கிளம்பி வெளியே வரும் பொழுது, “என்ன கண்ணா கடைக்கு கிளம்பிட்டியா..?” என்று கேட்டதும், “ம்ம் ஆமாம்மா இன்னைக்கு ஜவுளிகடையில் வேலை கொஞ்சம் இருக்கு..” என்று கூறியவன் சாப்பிட அமர அவனுக்கு சாப்பாடு பரிமாற ஆரம்பித்தார் சாரதா..
அவன் சாப்பிட்டுவிட்டு எழுந்ததும், “துகில் எல்லா வேலையையும் இந்த வாரமே முடிந்துவிடு அடுத்தவாரம் பொண்ணு பார்க்க அவங்க வீட்டுக்கு போகணும்..” என்று சொல்ல சரியென்று தலையசைத்தவன் அந்த இடத்தைவிட்டு அகன்றான்..
தன்னுடைய பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் செல்லும் மகனைப் பார்த்த சாரதா, “என்னோட மகன் அப்படியே அவங்க அப்பாவைப் போல..” என்று சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்திருக்கு கிளம்பிச் சென்றார்..
வீட்டைவிட்டு வெளியே வந்த துகிலனைப் பார்த்த பூவிழி, “எப்படியே துகில் உனக்கு திருமணம் நடக்க போகிறது..” என்று சொல்லி அவனை வம்பிற்கு இழுக்க, “நீவேற போடி கம்முன்னு..” என்று கத்திவிட்டு தன்னுடைய பைக்கை எடுத்தான் துகிலன்..
அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்றாள் பூவிழி. அவளின் மனம், ‘இவன் அம்மா விருப்பமே தன்னுடைய விருப்பம் என்று இருக்கிறான்.. இவனுக்கு அந்த பொண்ணுக்கும் சரிவருமா..?! அது அவளை மீட்டு எடுக்குமா..?!’ என்று யோசித்தாள்..
பூவிழி துகிலனின் உயிர் தோழி. அதற்காக அவள் துகிலனுடன் படித்தவள் என்றோ, இல்ல அவனுடைய கல்லூரி தோழி என்றோ நினைக்க வேண்டாம்.. பூவிழி ஒரு பள்ளி ஆசிரியை. துகிலனின் அம்மா பள்ளி ஆசிரியை என்பதால் இவர்கள நட்பும் பள்ளியில் இருந்தே தொடங்கியது.. அவள் துகிலனை சந்தித்து ஒரு வருடம் தான் சென்று இருக்கிறது..
பூவிழியைப் பொறுத்தவரை துகிலன் ஒரு நல்ல நண்பன். அவனுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அதை அவனே சமாளிப்பான்.. அதனால் அவனின் வாழ்க்கையில் அவள் அதிகமாக தலையிடவே மாட்டாள்.. ஆனால் பூவிழி ஏன் அங்கிருக்கிறாள் என்று சாரதாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது..
அவனைப் பார்த்தபடியே நின்ற பூவிழியின் தோளில் கைவைத்த சாரதா, “எல்லாம் நல்லபடியாக நடக்கும் பூவிழி.. அதற்கு உண்டான காலமும், நேரமும் வந்துக் கொண்டே இருக்கிறது..” என்றவர் ஆறுதலாக அவளின் தலையை வருடினார்..
“இது எல்லாம் சரியாக நடந்தால் தான் அம்மா என்னோட வாழ்க்கை நேராகும்..” என்று சொல்லும் பொழுதே அவளின் கண்களில் ஒரு மெல்லிய தேடல்.. அந்த தேடல் யாருக்கானது என்பதை அறிந்த சாரதா, “இது எல்லாம் நல்லதாகவே நடக்கும் அதை மட்டும் முழுவதுமாக நம்புடா..” என்று சொல்லி அவளை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் சாரதா..
அவரின் மனமோ, ‘பிள்ளையாரப்பா என்னோட பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து வாழ வேண்டும்.. அதுக்கு துணை நில்லுங்க பிள்ளையாரப்பா..’ என்று மனதார வேண்டிக் கொண்டவர் பூவிழிக்கு சாப்பாடு பரிமாற சாப்பிட ஆரம்பித்தவளின் கண்கள் இரண்டும் கலங்கி இருந்தது..
இந்த திருமணம் துகிலனுக்கும், கமழினிக்கும் வெறுப்பைக் கொடுத்தாலும், இந்த திருமணத்தில் மற்றொரு ஜோடியின் திருமணமும் மறைந்திருக்கிறது.. ஒரு மனதின் உண்மையான காதலும் மறைந்திருக்கிறது...
அவள் ஏதோ யோசனையுடன் சாப்பிட்டு முடித்ததும் பூவிழியை அழைத்துக்கொண்டு வேலைக்கு புறப்பட்ட சாரதாவின் மனமும் கனத்தது.. இந்த திருமணம் எல்லோருக்கும் ஒரு சவாலை வைத்திருக்கிறது..
வீட்டில் இருந்து கிளம்பிய துகிலனுக்கு திருமணம் பற்றிய நினைவே இல்லை.. அவன் அங்கிருந்து கிளம்பியதும் தன்னுடைய ஜவுளிகடையில் அடுத்து செய்யவேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டுக் கொண்டே தன்னுடைய கடையின் முன்னாடி பைக்கை நிறுத்தியவன் கடையை நிமிர்ந்துப் பார்த்தான்..
அவனின் கடை சிறிதாக இருந்தாலும் துகிலனுக்கு சொந்த தொழில் என்றால் ரொம்ப பிடிக்கும்.. அதற்கு காரணம் தன்னை யாரும் கேள்வி கேட்கவே மாட்டார்கள்.. தான் யாரிடமும் கைகட்டி நிற்க வேண்டிய அவசியமும் வராது என்று உறுதியாக நினைப்பவன்..
நான்கு அடுக்குகளைக் கொண்ட ஜவுளிகடைக்கு எஸ். கே. சில்க்ஸ் என்று பெயரிட்டு இருக்க அதில் பணிபுரியும் வேலை ஆள்கள் எல்லாம் அவன் கடையைத் திறக்க காத்திருந்தனர்.. அந்த கடையில் முதல் தளம் முழுக்க முழுக்க ஆண், பெண்களுக்கு உண்டான மெட்டிரியல் எல்லாம் இருந்தது..
இரண்டாவது தளம் முழுக்க முழுக்க குழந்தைகளுக்கு உண்டானது.. மூன்றாவது தளம் முழுவதும் திருமண பெண்ணிற்கான பட்டுபுடவைகள், காட்டன் புடவைகள், டிசைனர் சாரீஸ் எல்லாம் குவித்திருந்தான்..
நான்காவது தளம் முழுக்க கல்லூரி செல்லும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான உடைகள் எல்லாவற்றையும் அடக்கியது அந்த கடை.. அதில் வேலை செய்யும் பணியாளர்கள் மட்டும் ஒரு தளத்திற்கு பத்து பெயரை நியமித்திருந்தான்..
அந்த கடையில் தன்னுடைய கனவுகள் முழுவதையும் வைத்து வடிவமைத்தவனுக்கு அவனின் தொழில் தான் அவனின் உலகம்.. அந்த கடைக்கு ஒரு முறை வந்தால் மறுபடியும் அங்கு வரும் எண்ணத்தோடுதான் செல்வார்கள்..
அதேபோல பணியாளர்களை தன்னுடைய வீட்டில் இருக்கும் சொந்தகளை போலவே நடத்துவான்.. துகிலனின் அலட்சியம் எல்லாம் வீட்டில் மட்டும்தான்.. அவனின் தொழிலில் துளி கூட கவனசிதறல் ஏற்பட்டது கிடையாது..
துகிலன் – கமழினி இருவருக்கும் திருமணம் நடக்க வீட்டில் எல்லா ஏற்பாடுகளையும் செய்ய அவர்கள் இருவரும் தங்களின் படிப்பு, வேலை இரண்டிலும் கவனம் செலுத்துகின்றனர்.. அடுத்து என்ன நடக்குமோ..?!
ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...