அத்தியாயம் – 3
கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வசந்த் அந்த போட்டோவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கடல் அலையோடு விளையாடிய கமழினி மணலில் அமர்ந்திருந்த வசந்த் அருகில் வந்து அமர்ந்தாள்..
அவள் வந்ததைக் கவனிக்காத வசந்த், ‘துகில் என்னை நீ தவறாக நினைத்தாலும் சரி.. உன்னை விரும்பிய என்னோட தோழியை உன்னிடம் சேர்த்து வைப்பதில் தான் என்னோட சந்தோசம்..’ என்று மனதிற்குள் அந்த போட்டோவிடம் அவன் பேசிக்கொண்டிருந்தான்..
அவனின் அருகில் அமர்ந்த கமழினி, “டேய் அந்த போட்டோவில் இருப்பவனை உனக்கு முன்னாடியே தெரியுமா..?” என்று கேட்டதும் தன்னுடைய மனதில் இருப்பதை தன்னுடைய மனதிற்குள் மறைத்துக்கொண்ட வசந்த், “இவனை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு கமழி..” என்று யோசனையுடன் கூறினான்..
அவன் அப்படி சொன்னதும், “ஓ உனக்கும் அப்படிதான் தோணுதா..? நானும் நேற்று நைட்ல இருந்து யோசிக்கிறேன் என்னால் கண்டுபிடிக்கவே முடியலடா...” என்று வருத்தத்துடன் கூறினாள் கமழினி..
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வசந்த், “கமழினி இவன் யார் என்ற ஞாபகம் உனக்கு வருதா..?” என்று கேட்டான்.. அவனின் குரலில் ஒரு தேடலும், அவனின் விழிகளில் ஒரு மின்னலும் வந்து போனது.. அவளோ அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், “எனக்கு ஞாபகம் வரல..” என்று சொல்லிவிட்டு எழுந்துக்கொண்டாள்..
அவள் எழுந்தும் எழுந்த வசந்த், “சரிடா நீ போய் கவலைபடாமல் காலேஜ் போ.. நான் என்னோட வேலையைப் பார்க்கிறேன்..” என்று ஒருவிதமான நிதானத்துடன் கூறியதும் சரியென தலையசைத்துவிட்டு தன்னுடைய வழியில் நடந்த கமழினியைப் பார்த்த வசந்த் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வழியில் நடந்தான்..
அவன் தன்னுடைய வழியில் நடக்க அவனின் மனமோ, ‘இவளுக்கு குணம் ஆகும் வரையில் இவளை பத்திரமாகப் பார்த்துக்கணும்..’ என்று நினைத்தான்.. அப்பொழுது அவனின் செல் அடித்தது.. அவன் தனது அலைபேசியை எடுத்து திரையைப் பார்த்தான்..
திரையில் வந்த எண்ணைப் பார்த்த மறுநொடியே அலைபேசியை எடுத்த வசந்த், “கண்ணா சொல்லுடா என்ன விஷயம்..?” என்று கேட்டான்..
அவனின் குரலைக்கேட்ட கண்ணனுக்கு மனம் நிம்மதியாக இருக்க, “டேய் அப்பா போன் செய்து எல்லாவற்றையும் சொன்னாரு.. அவள் எப்படி ரியாக்ட் பண்ற..?” என்று தன்னுடைய தங்கையைப் பற்றி கேட்டான் கண்ணன்..
அவனின் குரலில் இருந்த பதட்டம் உணர்ந்த வசந்த், “யாரு உன்னோட தங்கச்சி தானே.. காலில் சலங்கை ஒன்று மட்டும் கொடுத்திருந்தால் கன்னியாகுமரி கடலின் முன்னே ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருப்பாள்..” என்றவன் சிரிப்புடன்..
அவன் சொன்னதைக்கேட்டு வாய்விட்டு சிரித்த கண்ணன், “அவள் எங்களோட இருக்கும் பொழுது கூட ருத்ரதாண்டவம் ஆடமாட்டா..” என்று கூறியவன், “அவளுக்கு எப்பொழுது வசந்த் பழையபடி நினைவுகள் திரும்பும்..?” என்று வருத்தத்துடன் கேட்டான்..
அவனின் குரலில் இருக்கும் வருத்தம் உணர்ந்த வசந்த், “அது எனக்கே தெரியலடா.. நான் வேற குழந்தைகள் நல மருத்துவர் என்று பொய் சொல்லிட்டு இருக்கேன்.. என்னைக்கு இவளுக்கு உண்மை தெரிஞ்சு என்னை கத்தபோகிறலோ தெரியலடா..” என்றான் வசந்த்..
“நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள் வசந்த்...” என்று சொல்ல, “அவளுக்கு எல்லாம் நினைவு வரணும்.. அதுக்குதான் நானும் வெயிட் பண்றேன்.. என்னதான் நான் ஒரு மனநல மருத்துவராக இருந்தும் என்னோட தோழியை சரி செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மனசு வலிக்குது கண்ணா..” என்று கூறியவனின் குரலில் இருந்த வருத்தம் போனில் பேசிய கண்ணனையும் பாதித்தது..
அடுத்தநொடியே தன்னை சரி செய்துக்கொண்ட வசந்த், “கண்ணா நீ கமழினி பற்றிய கவலையை விடு.. அவளுக்கு சீக்கிரம் குணமாகும்.. அதுக்கு முதலில் துகிலனுடன் திருமணம் நடக்கணும்.. அவனின் அலட்சியம் தான் இவளை மீட்டுக்கொண்டு வரும்..” என்றவன் சொல்ல, “நீ சொல்வதும் சரிதான்..” என்று சொன்னவன் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைக்க தன்னுடைய வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு கிளம்பிய வசந்த் கமழினிக்கு அழைத்தான்..
காலையில் கடற்கரையில் இருந்து வந்த கமழினி திருமணம் பற்றிய எல்லா கவலையும் மறந்துவிட வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.. அவள் குளித்து முடித்து வெளியே வந்தவள் கண்ணாடி முன்னாடி நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள்...
கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்த கமழினிக்கு ஏதோ நினைவுகளின் தாக்கம் ஏற்ப்பட தலை மெல்ல வலிக்க ஆரம்பிக்கும்போது சரியாக அவளின் அலைபேசி அடித்தது.. அலைபேசியின் ஒலியில் தன்னை மீட்டெடுத்த கமழினி தன்னுடைய செல்லை எடுத்துப் பார்த்தாள்..
திரையில் அழைப்பது, ‘பூவிழி...’ என்று காட்டியதும், வேகமாக போனை எடுத்த கமழினி, “அக்கா நீ எங்கே இருக்க..?!” என்று கேட்டாள்.. தங்கையின் குரலைக்கேட்டு அழுதேவிட்டாள் பூவிழி..
பூவிழி, கமழினி இருவரும் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள்.. பூவிழி அழகரின் அண்ணன் மாணிக்கத்தின் மகள்.. கமழினிக்கு பூவிழி என்றால் அவ்வளவு விருப்பம்.. அக்கா.. அக்கா.. என்று அவளின் பின்னோடியே சுற்றிக்கொண்டு இருப்பாள்..
அவளின் அழுகுரல் கேட்டதும் கமழினியின் மனம் வலிக்க, “அக்கா நீ இப்பொழுது எதுக்கு அழுகிற..?! இப்போ நீ எங்க அக்கா இருக்கிற..? நீ வசந்திடம் உண்மையைச் சொன்னாயா..?! அவனுக்கும் வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்க.. அவன் அதில் எல்லாம் கவனமே செலுத்துவதே இல்ல..” என்று சொல்ல தங்கையைப் பேசவிட்ட பூவிழிக்கு துக்கம் தொண்டையை அடித்தது..
பூவிழியின் மனமோ, ‘உனக்காக நாங்க எல்லாம் இங்கே தவிக்கிறோம் செல்லம்.. உன்னோட மனசில் இருக்கும் காதல் என்னைக்கு வெளிவரும் என்று நான் ரொம்பவே காத்துக்கிட்டு இருக்கிறேன்..’ என்று நினைத்தவள் தனது கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தாள்..
ஒருவரின் நினைவுகள் தொலைந்தால் அதில் எத்தனை பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது என்பதற்கு கமழினியின் நினைவுகள் ஒரு எடுத்துக்காட்டு..
அவளின் மனதில் தொலைந்துபோன நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்தால் மட்டும்தான், பூவிழியின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.. வசந்த் – பூவிழி இணைய கமழினி – துகிலன் இணைய வேண்டும் என்பது எழுதபடாத விதியின் விளையாட்டு...
கமழினி பூவிழியைப் பார்த்து கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.. கமழினி கடைசியாக பூவிழியைப் பார்த்தது அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது விபத்து ஏற்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்...
அதன்பிறகு அவளை கமழினி பார்க்கவே இல்ல.. அது மட்டும் இன்றி பூவிழி வசந்திடம் உண்மையைச் சொன்னாளா என்றும் அவளுக்கு தெரியவில்லை.. அதன்பிறகு அவள் இன்றுதான் அழைக்கிறாள்.. பூவிழியின் நினைவுகள் கடந்தகாலம் நோக்கிப் பயணிக்க அதை தடுத்து நிறுத்தியது கமழினியின் குரல்..!
“அக்கா நீ வசந்திடம் உண்மையைச் சொல்லியிரு அக்கா.. இதுக்கு மேல் தாமதிக்காதே..” என்று கூறியவள் கண்களில் வழிந்த கண்ணீரோடு, “அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அக்கா.. அடுத்தவாரம் பொண்ணு பார்க்க வராங்க..” என்று வருத்தத்துடன் கூறினாள்..
அவள் சொன்னதைக்கேட்டு மெல்ல சிரித்த பூவிழி, “அப்படியா கமழினி..? யார் மாப்பிள்ளை..? எங்கே இருக்காங்க..?” என்று கேட்டதும் கமழினியின் நினைவுகள் பின்னோக்கி நகர அவள் தலை வெடிப்பது போலவே இருந்தது..
அவள் தலை மீது கையை வைத்துக்கொண்டு, “தெரியல அக்கா.. அப்பாதான் போட்டோ அனுப்பினார்.. நான்தான் சரியென்ற வார்த்தை தவிர வேற எதுவும் பேசவே மாட்டேன் என்று உனக்கு தெரியுமே.. அதுதான் சரி என்று சொல்லிட்டேன்..” என்றவள் கூறியதும்,
“சரிடா அக்கா சீக்கிரம் உன்னோட திருமணத்திற்கு வருகிறேன்.. வசந்திடம் நான் போன் செய்தேன் என்று சொல்லுடா..” என்று அவள் சொல்லவே, “ம்ம் கண்டிப்பாக வசந்திடம் உண்மையைச் சொல்கிறேன்..” என்று கூறியவள் போனை வைக்க வசந்த் அழைத்தான்..
அவனின் அழைப்பைப் பார்த்த கமழினி ஆன் செய்து காதில் வைக்க, “ஏய் லூசு டபிலேட் போட்டுட்டு காலேஜ் போ.. இல்ல மறுபடியும் உனக்குத்தான் தலை வலிக்கும்..” என்று சொல்ல, “சரிடா..” என்று கூறியவள் குரலில் இருந்த மகிழ்ச்சியைக் கவனித்தான் வசந்த்.
கடற்கரை மணலில் அமர்ந்திருந்த வசந்த் அந்த போட்டோவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருக்க கிட்டதட்ட இரண்டு மணிநேரம் கடல் அலையோடு விளையாடிய கமழினி மணலில் அமர்ந்திருந்த வசந்த் அருகில் வந்து அமர்ந்தாள்..
அவள் வந்ததைக் கவனிக்காத வசந்த், ‘துகில் என்னை நீ தவறாக நினைத்தாலும் சரி.. உன்னை விரும்பிய என்னோட தோழியை உன்னிடம் சேர்த்து வைப்பதில் தான் என்னோட சந்தோசம்..’ என்று மனதிற்குள் அந்த போட்டோவிடம் அவன் பேசிக்கொண்டிருந்தான்..
அவனின் அருகில் அமர்ந்த கமழினி, “டேய் அந்த போட்டோவில் இருப்பவனை உனக்கு முன்னாடியே தெரியுமா..?” என்று கேட்டதும் தன்னுடைய மனதில் இருப்பதை தன்னுடைய மனதிற்குள் மறைத்துக்கொண்ட வசந்த், “இவனை எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கு கமழி..” என்று யோசனையுடன் கூறினான்..
அவன் அப்படி சொன்னதும், “ஓ உனக்கும் அப்படிதான் தோணுதா..? நானும் நேற்று நைட்ல இருந்து யோசிக்கிறேன் என்னால் கண்டுபிடிக்கவே முடியலடா...” என்று வருத்தத்துடன் கூறினாள் கமழினி..
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த வசந்த், “கமழினி இவன் யார் என்ற ஞாபகம் உனக்கு வருதா..?” என்று கேட்டான்.. அவனின் குரலில் ஒரு தேடலும், அவனின் விழிகளில் ஒரு மின்னலும் வந்து போனது.. அவளோ அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல், “எனக்கு ஞாபகம் வரல..” என்று சொல்லிவிட்டு எழுந்துக்கொண்டாள்..
அவள் எழுந்தும் எழுந்த வசந்த், “சரிடா நீ போய் கவலைபடாமல் காலேஜ் போ.. நான் என்னோட வேலையைப் பார்க்கிறேன்..” என்று ஒருவிதமான நிதானத்துடன் கூறியதும் சரியென தலையசைத்துவிட்டு தன்னுடைய வழியில் நடந்த கமழினியைப் பார்த்த வசந்த் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு தன்னுடைய வழியில் நடந்தான்..
அவன் தன்னுடைய வழியில் நடக்க அவனின் மனமோ, ‘இவளுக்கு குணம் ஆகும் வரையில் இவளை பத்திரமாகப் பார்த்துக்கணும்..’ என்று நினைத்தான்.. அப்பொழுது அவனின் செல் அடித்தது.. அவன் தனது அலைபேசியை எடுத்து திரையைப் பார்த்தான்..
திரையில் வந்த எண்ணைப் பார்த்த மறுநொடியே அலைபேசியை எடுத்த வசந்த், “கண்ணா சொல்லுடா என்ன விஷயம்..?” என்று கேட்டான்..
அவனின் குரலைக்கேட்ட கண்ணனுக்கு மனம் நிம்மதியாக இருக்க, “டேய் அப்பா போன் செய்து எல்லாவற்றையும் சொன்னாரு.. அவள் எப்படி ரியாக்ட் பண்ற..?” என்று தன்னுடைய தங்கையைப் பற்றி கேட்டான் கண்ணன்..
அவனின் குரலில் இருந்த பதட்டம் உணர்ந்த வசந்த், “யாரு உன்னோட தங்கச்சி தானே.. காலில் சலங்கை ஒன்று மட்டும் கொடுத்திருந்தால் கன்னியாகுமரி கடலின் முன்னே ஒரு ருத்ர தாண்டவமே ஆடியிருப்பாள்..” என்றவன் சிரிப்புடன்..
அவன் சொன்னதைக்கேட்டு வாய்விட்டு சிரித்த கண்ணன், “அவள் எங்களோட இருக்கும் பொழுது கூட ருத்ரதாண்டவம் ஆடமாட்டா..” என்று கூறியவன், “அவளுக்கு எப்பொழுது வசந்த் பழையபடி நினைவுகள் திரும்பும்..?” என்று வருத்தத்துடன் கேட்டான்..
அவனின் குரலில் இருக்கும் வருத்தம் உணர்ந்த வசந்த், “அது எனக்கே தெரியலடா.. நான் வேற குழந்தைகள் நல மருத்துவர் என்று பொய் சொல்லிட்டு இருக்கேன்.. என்னைக்கு இவளுக்கு உண்மை தெரிஞ்சு என்னை கத்தபோகிறலோ தெரியலடா..” என்றான் வசந்த்..
“நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள் வசந்த்...” என்று சொல்ல, “அவளுக்கு எல்லாம் நினைவு வரணும்.. அதுக்குதான் நானும் வெயிட் பண்றேன்.. என்னதான் நான் ஒரு மனநல மருத்துவராக இருந்தும் என்னோட தோழியை சரி செய்ய முடியாத நிலையில் இருக்கிறேன் என்று நினைக்கும் பொழுது மனசு வலிக்குது கண்ணா..” என்று கூறியவனின் குரலில் இருந்த வருத்தம் போனில் பேசிய கண்ணனையும் பாதித்தது..
அடுத்தநொடியே தன்னை சரி செய்துக்கொண்ட வசந்த், “கண்ணா நீ கமழினி பற்றிய கவலையை விடு.. அவளுக்கு சீக்கிரம் குணமாகும்.. அதுக்கு முதலில் துகிலனுடன் திருமணம் நடக்கணும்.. அவனின் அலட்சியம் தான் இவளை மீட்டுக்கொண்டு வரும்..” என்றவன் சொல்ல, “நீ சொல்வதும் சரிதான்..” என்று சொன்னவன் சிறிதுநேரம் பேசிவிட்டு போனை வைக்க தன்னுடைய வீட்டிற்கு சென்று மருத்துவமனைக்கு கிளம்பிய வசந்த் கமழினிக்கு அழைத்தான்..
காலையில் கடற்கரையில் இருந்து வந்த கமழினி திருமணம் பற்றிய எல்லா கவலையும் மறந்துவிட வேகமாக குளியலறைக்குள் புகுந்தாள்.. அவள் குளித்து முடித்து வெளியே வந்தவள் கண்ணாடி முன்னாடி நின்று தலைவாரிக் கொண்டிருந்தாள்...
கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்த கமழினிக்கு ஏதோ நினைவுகளின் தாக்கம் ஏற்ப்பட தலை மெல்ல வலிக்க ஆரம்பிக்கும்போது சரியாக அவளின் அலைபேசி அடித்தது.. அலைபேசியின் ஒலியில் தன்னை மீட்டெடுத்த கமழினி தன்னுடைய செல்லை எடுத்துப் பார்த்தாள்..
திரையில் அழைப்பது, ‘பூவிழி...’ என்று காட்டியதும், வேகமாக போனை எடுத்த கமழினி, “அக்கா நீ எங்கே இருக்க..?!” என்று கேட்டாள்.. தங்கையின் குரலைக்கேட்டு அழுதேவிட்டாள் பூவிழி..
பூவிழி, கமழினி இருவரும் பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள்.. பூவிழி அழகரின் அண்ணன் மாணிக்கத்தின் மகள்.. கமழினிக்கு பூவிழி என்றால் அவ்வளவு விருப்பம்.. அக்கா.. அக்கா.. என்று அவளின் பின்னோடியே சுற்றிக்கொண்டு இருப்பாள்..
அவளின் அழுகுரல் கேட்டதும் கமழினியின் மனம் வலிக்க, “அக்கா நீ இப்பொழுது எதுக்கு அழுகிற..?! இப்போ நீ எங்க அக்கா இருக்கிற..? நீ வசந்திடம் உண்மையைச் சொன்னாயா..?! அவனுக்கும் வீட்டில் பொண்ணு பார்க்கிறாங்க.. அவன் அதில் எல்லாம் கவனமே செலுத்துவதே இல்ல..” என்று சொல்ல தங்கையைப் பேசவிட்ட பூவிழிக்கு துக்கம் தொண்டையை அடித்தது..
பூவிழியின் மனமோ, ‘உனக்காக நாங்க எல்லாம் இங்கே தவிக்கிறோம் செல்லம்.. உன்னோட மனசில் இருக்கும் காதல் என்னைக்கு வெளிவரும் என்று நான் ரொம்பவே காத்துக்கிட்டு இருக்கிறேன்..’ என்று நினைத்தவள் தனது கழுத்தில் இருந்த தாலியைப் பார்த்தாள்..
ஒருவரின் நினைவுகள் தொலைந்தால் அதில் எத்தனை பேரின் வாழ்க்கை கேள்விக்குறியாக மாறுகிறது என்பதற்கு கமழினியின் நினைவுகள் ஒரு எடுத்துக்காட்டு..
அவளின் மனதில் தொலைந்துபோன நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்தால் மட்டும்தான், பூவிழியின் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும்.. வசந்த் – பூவிழி இணைய கமழினி – துகிலன் இணைய வேண்டும் என்பது எழுதபடாத விதியின் விளையாட்டு...
கமழினி பூவிழியைப் பார்த்து கிட்டதட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.. கமழினி கடைசியாக பூவிழியைப் பார்த்தது அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது விபத்து ஏற்படுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர்...
அதன்பிறகு அவளை கமழினி பார்க்கவே இல்ல.. அது மட்டும் இன்றி பூவிழி வசந்திடம் உண்மையைச் சொன்னாளா என்றும் அவளுக்கு தெரியவில்லை.. அதன்பிறகு அவள் இன்றுதான் அழைக்கிறாள்.. பூவிழியின் நினைவுகள் கடந்தகாலம் நோக்கிப் பயணிக்க அதை தடுத்து நிறுத்தியது கமழினியின் குரல்..!
“அக்கா நீ வசந்திடம் உண்மையைச் சொல்லியிரு அக்கா.. இதுக்கு மேல் தாமதிக்காதே..” என்று கூறியவள் கண்களில் வழிந்த கண்ணீரோடு, “அப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கிறார் அக்கா.. அடுத்தவாரம் பொண்ணு பார்க்க வராங்க..” என்று வருத்தத்துடன் கூறினாள்..
அவள் சொன்னதைக்கேட்டு மெல்ல சிரித்த பூவிழி, “அப்படியா கமழினி..? யார் மாப்பிள்ளை..? எங்கே இருக்காங்க..?” என்று கேட்டதும் கமழினியின் நினைவுகள் பின்னோக்கி நகர அவள் தலை வெடிப்பது போலவே இருந்தது..
அவள் தலை மீது கையை வைத்துக்கொண்டு, “தெரியல அக்கா.. அப்பாதான் போட்டோ அனுப்பினார்.. நான்தான் சரியென்ற வார்த்தை தவிர வேற எதுவும் பேசவே மாட்டேன் என்று உனக்கு தெரியுமே.. அதுதான் சரி என்று சொல்லிட்டேன்..” என்றவள் கூறியதும்,
“சரிடா அக்கா சீக்கிரம் உன்னோட திருமணத்திற்கு வருகிறேன்.. வசந்திடம் நான் போன் செய்தேன் என்று சொல்லுடா..” என்று அவள் சொல்லவே, “ம்ம் கண்டிப்பாக வசந்திடம் உண்மையைச் சொல்கிறேன்..” என்று கூறியவள் போனை வைக்க வசந்த் அழைத்தான்..
அவனின் அழைப்பைப் பார்த்த கமழினி ஆன் செய்து காதில் வைக்க, “ஏய் லூசு டபிலேட் போட்டுட்டு காலேஜ் போ.. இல்ல மறுபடியும் உனக்குத்தான் தலை வலிக்கும்..” என்று சொல்ல, “சரிடா..” என்று கூறியவள் குரலில் இருந்த மகிழ்ச்சியைக் கவனித்தான் வசந்த்.
Last edited: