கண்டிப்பா இனி விடாது மஹா ஹாஹாஹா?நன்றி மஹா அக்கா.. இது எனக்கே சவாலான ஒரு ஸ்டோரி அதுதான் இத்தனை ட்ரைனிங் பாய்ண்ட்ஸ்.. தொடர்ந்து படிங்க எல்லா கேள்விக்கும் விடைகள் இருக்கு...
கண்டிப்பா இனி விடாது மஹா ஹாஹாஹா?நன்றி மஹா அக்கா.. இது எனக்கே சவாலான ஒரு ஸ்டோரி அதுதான் இத்தனை ட்ரைனிங் பாய்ண்ட்ஸ்.. தொடர்ந்து படிங்க எல்லா கேள்விக்கும் விடைகள் இருக்கு...
ஹா ஹா ஹா மஹா அக்கா வந்துட்டாங்க....கண்டிப்பா இனி விடாது மஹா ஹாஹாஹா?
Omg kamali ku memory loss ah?“அக்கா கூப்பிட்டா வசந்த்..” என்று சொல்லவும், வசந்த் மனம் சந்தோசத்தில் துள்ளியது.. பூவிழி மனைவி அல்லவா..? அவனுக்கும் ஆசைகள் இருக்கும் தானே..?! அவள் சொன்னதைக் கேட்டு அவன் சிலையென்று நிற்க, “அக்கா உன்னை ரொம்பவே விசாரித்தால் டா..” என்று கூறினாள்..
அவள் கூறியதைக் கேட்ட வசந்த் எதுவும் பேசாமல் இருக்க கமழினியோ, ‘இவனுக்கு பேச்சு வரதே.. அவள் எப்படியெல்லாம் காதலித்தால் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்..?!’ என்று நினைத்தவள்,
“டேய் வசந்த் என்னடா ட்ரிம்மா..?” என்று கேட்டதும், “அதெல்லாம் இல்லடி.. அவள் எப்படி இருக்கிறாளாம்..?” என்று கேட்டான்.. அவனின் மனம் அவளின் நலனை அறிய விரும்பியது..
“அவள் நல்ல இருக்கிறாளாம்.. கண்டிப்பாக என்னோட திருமணத்திற்கு வரேன் என்று சொல்லியிருக்கா..” என்று சந்தோசமாக சொல்லியவளுக்கு வசந்த் – பூவிழி திருமணம் நினைவில்லாமல் போனதுதான் காலத்தின் விளையாட்டா..?!
அவள் சொன்னதைக் கேட்டு வசந்த் மனம் துள்ளியது.. அவனின் திருமணத்தின் பொழுது பூவிழியைப் பார்த்த ஞாபகம் அதன்பிறகு அவனை விட்டு பிரிந்து சென்றவள் இதோ இன்றுதான் கமழினிக்கு அழைத்திருக்கிறாள்..
கொஞ்சநேரம் சென்றபிறகு, “சரிடா நீ டபிலேட் போட்டுவிட்டு காலேஜ் போடா..” என்று சொல்லவும், “டேய் நான் என்ன பேசண்டா..? நானும் இன்னும் கொஞ்ச நாளில் டாக்டர்தான்..” என்று அவள் சொல்ல தன்னை மீறி சிரித்த வசந்த்..
“சரிங்க டாக்டரம்மா.. உங்களுக்கு ஞாபகம் இருக்கோ இல்லையோ எனக்கு ஞாபகம் இருக்கு நீங்க டாக்டர்தான்..” என்று டாக்டரில் அழுத்தம் கொடுத்து அவன் சொன்னதும் சிரித்தவள் அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள்..
அதன்பிறகு அவன் சொன்ன டப்லேட்ஸ் எல்லாம் எடுத்து போட்டவள் கல்லூரிக்கு கிளம்பிச் சென்றாள்.. கமழினி பெயரில் இருக்கும் மணம் இப்பொழுது அவளின் மனதில் இல்லை.. அவளின் மனம் இப்பொழுது காகிதபூவாக இருக்கிறது..
காகிதபூவின் அர்த்தம் பார்க்க அழகாக இருக்கும்.. துரத்தில் இருந்து பார்க்க நிஜமாகவே பூ போன்ற தோற்றம் அளிக்கும்.. அருகில் சென்று அதை எடுத்துப் பார்த்தால் அதில் மணம் மட்டும் இருக்காது..
அதேபோலவே கமழினியின் காதலும்.. தன்னுடைய நினைவுகள் இருக்கும் வரை பூவென்று கமழ்ந்த கமழினி இன்றைய நிலையில் வெறும் காகிதபூ மட்டுமே..
அவள் மணம் பெற வேண்டும் என்றால் அவளின் மனதில் இருக்கும் நினைவுகள் உயிர் பெற வேண்டும்.. அந்த நினைவுகளுக்கு உயிர் கொடுக்கத்தான் துகிலனுக்கு திருமணம் செய்து வைக்க நினைக்கின்றனர்..
கமழினியுடன் பேசிவிட்டு போனை வைத்த வசந்த் தன்னுடைய பெசண்டை பார்க்க சென்றான் வசந்த்.. அன்றைய கேஸ் ரொம்பவும் வினோதமாக இருந்தது.. பெசண்டை காண சென்ற வசந்த் அவரின் அருகில் என்றதும் தன்னை ஒரு தோழன் என்ற முறையில் தன்னுடைய அறிமுகத்தை ஆரம்பித்தான்..
“ஹலோ அரவிந்த்..” என்று சொல்லவும் அவனை நிமிர்ந்துப் பார்த்த அரவிந்த், “ஹலோ வசந்த்.. நீ எங்கடா இங்கே..?” என்று கேட்டதும் அவனின் பேச்சில் அவனுக்கு ஒரு நண்பன் இருப்பதை உணர்ந்துக்கொண்ட வசந்த்,
“இந்த கேள்வியை நான் கேட்க வேண்டும் அரவிந்த்.. உன்னோட அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க.. நீ எப்படி இங்கே வந்தா..?” என்று நார்மலாக அவனின் அருகில் அமர்ந்து அவனைப் பற்றிய கேள்விகளைத் தொடுத்தான் வசந்த்..
அவனின் கேள்வியில் கொஞ்சம் யோசித்த அரவிந்த், “அதுவா..?! நான் காலையில் வீட்டில் இருந்து கிளம்பியதும் வழியில் ஒரே நேரிசல்டா.. அப்படி இப்படி என்று தப்பித்து பிழைத்து வந்தால் சிக்னல் போட்டுடாங்க.. அப்பொழுது என்னோட பைக்கின் பின்னாடி ஒரு குட்டி பாப்பாடா உட்கார்ந்து சிரிக்கிற.. எனக்கு அவளை அடையமே தெரியல.. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தால் என்னை அப்பா என்று சொல்கிறாள்.. நான் என்ன பண்ண அதுதான் அவளை இங்கே கொண்டு வந்து விடலாம் என்று வந்தேன்..” என்றவன் சொல்ல அதை கேட்ட எல்லோரும் திகைத்து நின்றனர்..
அவர் சொல்வது எல்லாமே உண்மைதான்.. ஆனால் அவர் சொன்ன காலையில் நடந்த விஷயம் என்று சொன்னது எல்லாமே கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்னாடி நடந்த விஷயங்கள்..
மனதில் இருக்கும் நினைவுகள் எல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் அழிவதே கிடையாது.. மனதிற்கும் மூளைக்கும் நிறைய சம்மந்தம் உண்டு.. மனதிற்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அது அதை ஒதுக்கி வைக்கும் பொழுது மூளை அதன் நினைவு அலைகளை ஒதுக்கி வைக்கும்..
அதுபோலவே அரவிந்த் நிலையும்.. அவரின் குழந்தை இறந்துவிட்டது என்ற செய்தியை அவரால் நம்பவே முடியவில்லை.. அவருக்கு தலையில் அடி எல்லாம் படவே இல்லை.. ஆனால் அவரின் உயிருக்கு உயிராக வளர்ந்த மகள் விபத்தில் அடிபட்டதைநேரில் கண்டவரால் அந்த அதிர்வில் இருந்து வெளியே வரவே முடியவில்லை..
அதுதான் அவர் இப்பொழுது சொல்லும் பெண் அவரின் மகள்தான்.. அவரின் நினைவலையில் அவரின் மகளின் நினைவுகள் இருந்தாலும் அவள் இறந்த விஷயம் கேட்டபிறகு அதை ஏற்கமுடியாமல் அது வேறொரு பெண் என்ற கற்பனையில் இருக்கிறார்..
அவர் சொல்லி முடித்தும் அரவிந்தை பார்த்த வசந்த், “ஐயோ அரவிந்த் அது என்னோட குழந்தைடா.. அவள் எங்கே இருக்கிறாள்.. அவளுக்கு என்னை அடையாளம் காட்டு என்று சொல்லிதானே உன்னோடு அனுப்பி வைத்தேன்.. நீதானே அவளை காலையில் அழைச்சுட்டு வந்த..?” என்று கேட்டதும் அவனின் முகம் மாறியது..
அவனின் முகமாற்றத்தைக் கவனித்த வசந்த் அமைதியாக அமர்ந்திருக்க, “இல்லடா இல்ல நான் இன்னைக்கு காலையில் உன்னோட வீட்டுக்கு வரவே இல்ல..” என்று வேகமாக கூறினான்..
அவன் சொன்னதைக் கேட்டு சிரித்த வசந்த், “அப்புறம் எப்படி என்னோட மகள் உன்னோட வண்டியில் வந்தால்..?” என்று கேட்டதும் அவனின் நினைவுகள் மெல்ல மெல்ல மேல் எழ அதை அடக்க வழி தெரியாமல் கத்த ஆரம்பித்தான் அரவிந்த்..
எல்லோரும் அவனைவிட்டு நகர்ந்து செல்ல, “டேய் வசந்த் என்னோட மகள்.. என்னோட மகள்..” என்று அவன் மூச்சிரைக்க, “என்னோட மகள்..” என்று அவனை தூண்டிவிட, “இல்லடா அவள் என்னோட மகள் பிரீத்தி..” என்று சொன்னவனுக்கு தலை ரொம்பவே வலித்தது..
இருந்தாலும் கூட தன்னுடைய மனதில் பாரத்தை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலையில் அவனின் நினைவுகள் அவனின் மனதில் எழுந்து படமென்று ஓட, “என்னோட மகள் அன்னைக்கு காலையில் ரோடு கிராஸ் பண்ணும் பொழுது கார் விபத்தில் இறந்து போயிட்டாடா..” என்று சொன்னதும் வசந்த் முகத்தில் புன்னகை அரும்பியது..
வசந்த் அருகில் நின்றிருந்த அரவிந்த் மனைவி சங்கரி அவனை ஆச்சர்யத்தோடு பார்க்க, “என்னால் இந்த விஷயத்தை நம்பவே முடியலடா..” என்று வசந்த் சொல்லியபடியே அவனை கவனிக்கத்தான்..
அவனோ, “நம்புடா என்னோட மகள் இறந்துவிட்டாள்..” என்று சொல்லவும் சுற்றி இருந்த அனைவருக்குமே அவர் சரியாகிவிட்டத்தை உணர அனைவரின் கண்களும் மகிழ்ச்சி போங்க அனைவரையும் பார்த்த அரவிந்த் அப்பொழுதுதான் மனைவியைப் பார்த்தான்..
அவளைப் பார்த்தும், ‘சங்கரி..?!’ என்று அழைக்க, “டாக்டர் இவரை எங்கேயுமே குணப்படுத்த முடியாது என்று நினைத்தேன்.. ஆனால் நீங்க என்னோட கணவரை எனக்கு மீட்டு கொடுத்துட்டீங்க..” என்று கண்ணீரோடு சொல்ல, “பரவல்ல சிஸ்டர்..” என்று கூறியவன் எழுந்து சென்றான்..
இத்தனை திறமை உள்ள வசந்த் தன்னுடைய தோழியின் நினைவுகளை மீட்டெடுத்து, தன்னுடைய மனைவியின் கரம் பிடிப்பானா..? காலம் தான் சொல்ல வேண்டும்..
ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...