அத்தியாயம் – 6
கமழினியின் வீட்டில் இருப்பவர்கள் சாரதாவையும், துகிலனைவும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்க காரில் ஏறிய துகிலனின் முகம் பார்த்த வசந்த், ‘இனி எல்லாவற்றையும் இவன் பார்த்துக் கொள்வான்..’ என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டான்..
துகிலன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற வசந்திற்கு அப்பொழுதுதான் கமழினியின் நினைவு வர, ‘ஐயோ அவள் என்ன செய்கிறாளோ தெரியலையே..?!’ என்று வேகமாக வீட்டின் உள்ளே சென்றவன் மாடியேறிச் சென்றான்..
வசந்த் ,மாடிக்குச் சென்றதைப் பார்த்த வேணி, ‘ஒரு நிமிஷம் கூட தோழியை விட்டு தனியாக இருக்க முடியல.. இதில் இவளுக்கு கல்யாணம் நடந்தால்..?!’ என்று யோசித்தவர் சமையலறைக்குள் சென்றார்..
வேகமாக மாடிக்கு வந்த வசந்த் அங்கிருந்த அறைக்குள் சென்று பார்க்க தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கமழினி.. அவளைப் பார்த்தும் வசந்த், ‘இவன் என்ன சொல்லிட்டுப் போனானோ..?’ என்று இன்னொரு பயம் மனத்தைக் கவ்வ அவளின் அருகில் சென்றான்..
அவளோ வசந்த் வந்ததை அறியாமல் முழங்காலைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்க, “கமழி..” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்த கமழினி, “வசந்த்..” என்று அழுகவும் அவளின் முகத்தை கூர்ந்து கவனித்தவன்,
“என்னடா..” என்று கேட்டதும் அவன் செய்ததை சொல்ல வாய் எடுத்தவள், ‘இல்ல என்னதான் நண்பன் என்றாலும் இவனிடம் இது பற்றி நான் எப்படி சொல்ல முடியும்..?’ என்று ஒரு மனம் அவளிடம் கேள்வி கேட்டதும் அவள் அழுவதை நிறுத்திவிட்டாள்..
அவளின் முகம் பார்த்த வசந்திற்கு துகிலன் செய்த வேலை என்னவென்று நொடியில் புரிந்து போனது.. அதே போல துகிலனின் மன உணர்வுகளையும் வசந்த்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது.. தன்னுடைய காதலியைப் பிரிந்திருக்கும் துயரம் என்னவென்று அவனும் அறிவானே..
கமழினி அமைதியாக இருக்க அவளின் அருகில் அமர்ந்த வசந்த், “எதுக்கு இப்போ இந்த அழுகை..? உனக்கு மாப்பிள்ளை பிடிக்கலையா..? நான் வேண்டுமென்றால் உன்னோட அப்பாவிடம் பேசட்டுமா..?” என்று அவளின் மனதை அறிந்துக்கொள்ள தூண்டிலைப் போட்டான் வசந்த்..
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த கமழினி, “இல்ல வேண்டாம் வசந்த்.. நான்.. நான்.. நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்று திக்கித்திணறியபடி சொல்ல அவளைப் பார்த்து சிரித்தான் வசந்த்..
“அப்புறம் எதற்கு இந்த அழுகை..?!” என்று அவன் புன்னகையோடு கேட்டதும், “போடா அது எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது..” என்று அவள் தலையைக் கவிழ்ந்து கொள்ள, “சரிடி எந்திரிச்சி போய் சேலையை மாத்து..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் வசந்த்..
அவளும் சரியென தலையசைக்க அறையைவிட்டு வெளியே வந்த வசந்த் மனம், ‘டேய் அநியாயம் பிள்ளையை இப்படியா பண்ணிவைப்பா..?! நல்ல வேலை நாங்க யாரும் கூட இல்ல..’ என்று நினைத்தவனின் மனம் உடனே மாறியது..
‘துகில் நீ அவளை நல்ல பார்த்துக்கணும்.. அவள் தெரியாமல் செய்த தப்பை எல்லாம் சுட்டிக்காட்டி அவளை நோகடிக்காதே.. அதை மட்டும் என்னால் ஏற்றுகொள்ளவே முடியாது..’ என்று நினைத்தவன், ‘நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்..’ என்று எண்ணியபடி கீழிறங்கி வந்தான்.
அவனைப் பார்த்த அழகர், “வசந்த் இங்கே வா..” என்று அழைக்க அவனின் சிந்தனை கலைந்தது விட, “அப்பா..” என்று அவரின் அருகில் சென்று அமர, இன்னொரு சோபாவில் அமர்ந்தான் கண்ணன்..
அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அப்பா..” என்று அழைக்க, “வசந்த் இவளை மீட்டுக்கொண்டு வரணும் என்று நினைத்து உன்னோட வாழ்க்கையை நீ கேள்வி குறியாக்காதே..” என்று சொல்லவும் அவர் சொன்னதைக்கேட்டு சிரித்தான் வசந்த்..
அவன் சிரிப்பதைப் பார்த்த கண்ணன், “டேய் அப்பா உன்னோட நல்லதுக்குத்தான் சொல்கிறார்..” என்றவன் கோபத்துடன் சொல்லவும், “என்னோட வாழ்க்கை எனக்கு பக்கத்தில் தான் கண்ணா இருக்கு.. அவள் இங்கேதான் இருக்கா.. இப்பொழுது நினைத்தாலும் இன்னும் பத்து நிமிசத்தில் அவளை நான் போய் பார்க்க முடியும்..” என்று கூறியவன் நிறுத்திவிட்டு இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்..
‘அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான்..?’ என்ற யோசனையுடன் வசந்த்தை இருவரும் கேள்வியாக நோக்க, “அவளைப் பார்க்கும் பொழுது என்னோட தோழி ஒரு ஜெடபொருளாக இருப்பதை என்னால் பார்க்க முடியாதுப்பா..” என்று கூறியதும் அவனைப் பெருமையாகப் பார்த்தனர் அழகரும், கண்ணனும்..!
இருவரின் முகத்தையும் பார்த்தவன், “துகிலனும் என்னை புரிந்துக் கொள்வான்.. நாங்க எல்லோரும் சந்தோசமாக இருப்பதை நீங்களே பார்ப்பீங்க.. என்னோட தோழிக்கு எல்லாம் நினைவும் வரணும்.. அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி..” என்று கூறியவன் எழுந்து வெளியே சென்றான்..
கமழினி வீட்டில் இருந்து கிளம்பிய துகிலனின் மனம் அவனிடம் இல்லை.. காரை அவன் துரிதமான வேகத்தில் அவனின் கைகள் செலுத்தினாலும் அவனின் மனம் மட்டும் அவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கமழினியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தது..
மிகுந்த யோசனையுடன் வந்த மகனைப் பார்த்த சாரதா, “என்னடா இப்படி ரொம்ப அமைதியாக வர..?” என்று கேட்க அவருக்கும் பதில் சொல்லாமல் வண்டியைச் செலுத்தினான்..
அவனின் முகத்தைப் பார்த்த சாரதா, “டேய் நான் உன்னிடம் தான் கேட்டேன்..” என்று மகனை அதட்டவும், “அம்மா கொஞ்ச நேரம் அமைதியாக வாங்க..” என்று எரிச்சலுடன் கூறினான்..
அவனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த சாரதா அமைதியாகிவிட தன்னுடைய செல்லை எடுத்த துகிலன் ஒரு கையில் காரை செலுத்தியபடியே கிருஷ்ணாவுக்கு போன் செய்தான்.. அவனுக்கு ரிங் போய் கொண்டே இருக்க போனை வைத்துவிட்டான்..
அவனின் அவசரத்தையும், அவனின் முகத்தில் இருந்த பதட்டமும் அவருக்கு உண்மையை உணர்த்த, ‘எல்லாம் நீதாண்டா சரி பண்ணனும்..’ என்று மனதில் நினைத்தவர் மகனின் முகத்தையே பார்த்தார்.. தன்னால் முடிந்த அளவு வேகமாக காரை ஒட்டிய துகிலன் வீட்டின் முன்னே காரை நிறுத்த காரைவிட்டு இறங்கினார் சாரதா..
அவர் இறங்கிய மறுநொடியே, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்று கூறியவன் காரை எடுத்துக்கொண்டு செல்ல அவனைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட சாரதா வீட்டின் உள்ளே சென்றார்..
காரில் சென்று கொண்டிருந்த துகிலனின் மனம், ‘உனக்கு என்னடி ஆச்சு..?! இந்த அளவுக்கு மாத்திரை எதுக்கு போடுகிறாய்..?’ என்ற கேள்வியுடன் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க அதை எடுத்துப் பார்த்தான் துகிலன்..
திரையில் ஒளிர்ந்த என்னைப் பார்த்த துகிலன் உடனே போனை எடுக்க, “டேய் துகில் என்னடா திடீரென போன் பண்ணிருக்க..?!’ என்று கேட்டதும், அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “எனக்கு ஒரு இன்பார்மேஷன் வேணும் கிருஷ்ணா..” என்று மட்டும் கூறினான் துகிலன்..
அவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் செஸ்ட் ரிலாக்ஸ்..” என்று சொல்லவும், “என்ன இன்பார்மேஷன் வேண்டும் சொல்லுடா..” என்று கூறியதும் காரை சாலை ஓரத்தில் நிறுத்தியவன்,
“நான் சில டபிலேட் நேம் சொல்கிறேன்.. அது எதுக்கு சாப்பிடுவாங்க என்று விசாரித்து சொல்லுடா..” என்று கேட்டான்.. அவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் கொஞ்சம் நிதானமாக இருடா..” என்று கூறியதும், “இப்பொழுது அது ரொம்ப முக்கியம் பாரு..?!” என்று எறிந்து விழுந்தான்..
“சரிடா என்ன விஷயம் என்று சொல்லு..” என்றவன் கேட்டதும் அதற்கு பதில் சொல்லாமல் மாத்திரையின் பெயரை மட்டும் சொல்லியவன், “இந்த மாத்திரை எல்லாம் எதுக்கு..” என்று கேட்டவன் குரல் கம்மியது.. பிறகு குரலை சரிசெய்து கொண்டவன், “எந்த நோய்க்கு இதை சாப்பிடுவாங்க..” என்று கேட்டான்..
கமழினியின் வீட்டில் இருப்பவர்கள் சாரதாவையும், துகிலனைவும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்க காரில் ஏறிய துகிலனின் முகம் பார்த்த வசந்த், ‘இனி எல்லாவற்றையும் இவன் பார்த்துக் கொள்வான்..’ என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டான்..
துகிலன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற வசந்திற்கு அப்பொழுதுதான் கமழினியின் நினைவு வர, ‘ஐயோ அவள் என்ன செய்கிறாளோ தெரியலையே..?!’ என்று வேகமாக வீட்டின் உள்ளே சென்றவன் மாடியேறிச் சென்றான்..
வசந்த் ,மாடிக்குச் சென்றதைப் பார்த்த வேணி, ‘ஒரு நிமிஷம் கூட தோழியை விட்டு தனியாக இருக்க முடியல.. இதில் இவளுக்கு கல்யாணம் நடந்தால்..?!’ என்று யோசித்தவர் சமையலறைக்குள் சென்றார்..
வேகமாக மாடிக்கு வந்த வசந்த் அங்கிருந்த அறைக்குள் சென்று பார்க்க தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கமழினி.. அவளைப் பார்த்தும் வசந்த், ‘இவன் என்ன சொல்லிட்டுப் போனானோ..?’ என்று இன்னொரு பயம் மனத்தைக் கவ்வ அவளின் அருகில் சென்றான்..
அவளோ வசந்த் வந்ததை அறியாமல் முழங்காலைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்க, “கமழி..” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்த கமழினி, “வசந்த்..” என்று அழுகவும் அவளின் முகத்தை கூர்ந்து கவனித்தவன்,
“என்னடா..” என்று கேட்டதும் அவன் செய்ததை சொல்ல வாய் எடுத்தவள், ‘இல்ல என்னதான் நண்பன் என்றாலும் இவனிடம் இது பற்றி நான் எப்படி சொல்ல முடியும்..?’ என்று ஒரு மனம் அவளிடம் கேள்வி கேட்டதும் அவள் அழுவதை நிறுத்திவிட்டாள்..
அவளின் முகம் பார்த்த வசந்திற்கு துகிலன் செய்த வேலை என்னவென்று நொடியில் புரிந்து போனது.. அதே போல துகிலனின் மன உணர்வுகளையும் வசந்த்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது.. தன்னுடைய காதலியைப் பிரிந்திருக்கும் துயரம் என்னவென்று அவனும் அறிவானே..
கமழினி அமைதியாக இருக்க அவளின் அருகில் அமர்ந்த வசந்த், “எதுக்கு இப்போ இந்த அழுகை..? உனக்கு மாப்பிள்ளை பிடிக்கலையா..? நான் வேண்டுமென்றால் உன்னோட அப்பாவிடம் பேசட்டுமா..?” என்று அவளின் மனதை அறிந்துக்கொள்ள தூண்டிலைப் போட்டான் வசந்த்..
அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த கமழினி, “இல்ல வேண்டாம் வசந்த்.. நான்.. நான்.. நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்று திக்கித்திணறியபடி சொல்ல அவளைப் பார்த்து சிரித்தான் வசந்த்..
“அப்புறம் எதற்கு இந்த அழுகை..?!” என்று அவன் புன்னகையோடு கேட்டதும், “போடா அது எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது..” என்று அவள் தலையைக் கவிழ்ந்து கொள்ள, “சரிடி எந்திரிச்சி போய் சேலையை மாத்து..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் வசந்த்..
அவளும் சரியென தலையசைக்க அறையைவிட்டு வெளியே வந்த வசந்த் மனம், ‘டேய் அநியாயம் பிள்ளையை இப்படியா பண்ணிவைப்பா..?! நல்ல வேலை நாங்க யாரும் கூட இல்ல..’ என்று நினைத்தவனின் மனம் உடனே மாறியது..
‘துகில் நீ அவளை நல்ல பார்த்துக்கணும்.. அவள் தெரியாமல் செய்த தப்பை எல்லாம் சுட்டிக்காட்டி அவளை நோகடிக்காதே.. அதை மட்டும் என்னால் ஏற்றுகொள்ளவே முடியாது..’ என்று நினைத்தவன், ‘நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்..’ என்று எண்ணியபடி கீழிறங்கி வந்தான்.
அவனைப் பார்த்த அழகர், “வசந்த் இங்கே வா..” என்று அழைக்க அவனின் சிந்தனை கலைந்தது விட, “அப்பா..” என்று அவரின் அருகில் சென்று அமர, இன்னொரு சோபாவில் அமர்ந்தான் கண்ணன்..
அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அப்பா..” என்று அழைக்க, “வசந்த் இவளை மீட்டுக்கொண்டு வரணும் என்று நினைத்து உன்னோட வாழ்க்கையை நீ கேள்வி குறியாக்காதே..” என்று சொல்லவும் அவர் சொன்னதைக்கேட்டு சிரித்தான் வசந்த்..
அவன் சிரிப்பதைப் பார்த்த கண்ணன், “டேய் அப்பா உன்னோட நல்லதுக்குத்தான் சொல்கிறார்..” என்றவன் கோபத்துடன் சொல்லவும், “என்னோட வாழ்க்கை எனக்கு பக்கத்தில் தான் கண்ணா இருக்கு.. அவள் இங்கேதான் இருக்கா.. இப்பொழுது நினைத்தாலும் இன்னும் பத்து நிமிசத்தில் அவளை நான் போய் பார்க்க முடியும்..” என்று கூறியவன் நிறுத்திவிட்டு இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்..
‘அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான்..?’ என்ற யோசனையுடன் வசந்த்தை இருவரும் கேள்வியாக நோக்க, “அவளைப் பார்க்கும் பொழுது என்னோட தோழி ஒரு ஜெடபொருளாக இருப்பதை என்னால் பார்க்க முடியாதுப்பா..” என்று கூறியதும் அவனைப் பெருமையாகப் பார்த்தனர் அழகரும், கண்ணனும்..!
இருவரின் முகத்தையும் பார்த்தவன், “துகிலனும் என்னை புரிந்துக் கொள்வான்.. நாங்க எல்லோரும் சந்தோசமாக இருப்பதை நீங்களே பார்ப்பீங்க.. என்னோட தோழிக்கு எல்லாம் நினைவும் வரணும்.. அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி..” என்று கூறியவன் எழுந்து வெளியே சென்றான்..
கமழினி வீட்டில் இருந்து கிளம்பிய துகிலனின் மனம் அவனிடம் இல்லை.. காரை அவன் துரிதமான வேகத்தில் அவனின் கைகள் செலுத்தினாலும் அவனின் மனம் மட்டும் அவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கமழினியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தது..
மிகுந்த யோசனையுடன் வந்த மகனைப் பார்த்த சாரதா, “என்னடா இப்படி ரொம்ப அமைதியாக வர..?” என்று கேட்க அவருக்கும் பதில் சொல்லாமல் வண்டியைச் செலுத்தினான்..
அவனின் முகத்தைப் பார்த்த சாரதா, “டேய் நான் உன்னிடம் தான் கேட்டேன்..” என்று மகனை அதட்டவும், “அம்மா கொஞ்ச நேரம் அமைதியாக வாங்க..” என்று எரிச்சலுடன் கூறினான்..
அவனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த சாரதா அமைதியாகிவிட தன்னுடைய செல்லை எடுத்த துகிலன் ஒரு கையில் காரை செலுத்தியபடியே கிருஷ்ணாவுக்கு போன் செய்தான்.. அவனுக்கு ரிங் போய் கொண்டே இருக்க போனை வைத்துவிட்டான்..
அவனின் அவசரத்தையும், அவனின் முகத்தில் இருந்த பதட்டமும் அவருக்கு உண்மையை உணர்த்த, ‘எல்லாம் நீதாண்டா சரி பண்ணனும்..’ என்று மனதில் நினைத்தவர் மகனின் முகத்தையே பார்த்தார்.. தன்னால் முடிந்த அளவு வேகமாக காரை ஒட்டிய துகிலன் வீட்டின் முன்னே காரை நிறுத்த காரைவிட்டு இறங்கினார் சாரதா..
அவர் இறங்கிய மறுநொடியே, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்று கூறியவன் காரை எடுத்துக்கொண்டு செல்ல அவனைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட சாரதா வீட்டின் உள்ளே சென்றார்..
காரில் சென்று கொண்டிருந்த துகிலனின் மனம், ‘உனக்கு என்னடி ஆச்சு..?! இந்த அளவுக்கு மாத்திரை எதுக்கு போடுகிறாய்..?’ என்ற கேள்வியுடன் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க அதை எடுத்துப் பார்த்தான் துகிலன்..
திரையில் ஒளிர்ந்த என்னைப் பார்த்த துகிலன் உடனே போனை எடுக்க, “டேய் துகில் என்னடா திடீரென போன் பண்ணிருக்க..?!’ என்று கேட்டதும், அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “எனக்கு ஒரு இன்பார்மேஷன் வேணும் கிருஷ்ணா..” என்று மட்டும் கூறினான் துகிலன்..
அவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் செஸ்ட் ரிலாக்ஸ்..” என்று சொல்லவும், “என்ன இன்பார்மேஷன் வேண்டும் சொல்லுடா..” என்று கூறியதும் காரை சாலை ஓரத்தில் நிறுத்தியவன்,
“நான் சில டபிலேட் நேம் சொல்கிறேன்.. அது எதுக்கு சாப்பிடுவாங்க என்று விசாரித்து சொல்லுடா..” என்று கேட்டான்.. அவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் கொஞ்சம் நிதானமாக இருடா..” என்று கூறியதும், “இப்பொழுது அது ரொம்ப முக்கியம் பாரு..?!” என்று எறிந்து விழுந்தான்..
“சரிடா என்ன விஷயம் என்று சொல்லு..” என்றவன் கேட்டதும் அதற்கு பதில் சொல்லாமல் மாத்திரையின் பெயரை மட்டும் சொல்லியவன், “இந்த மாத்திரை எல்லாம் எதுக்கு..” என்று கேட்டவன் குரல் கம்மியது.. பிறகு குரலை சரிசெய்து கொண்டவன், “எந்த நோய்க்கு இதை சாப்பிடுவாங்க..” என்று கேட்டான்..