• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 6

கமழினியின் வீட்டில் இருப்பவர்கள் சாரதாவையும், துகிலனைவும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்க காரில் ஏறிய துகிலனின் முகம் பார்த்த வசந்த், ‘இனி எல்லாவற்றையும் இவன் பார்த்துக் கொள்வான்..’ என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டான்..

துகிலன் செல்வதைப் பார்த்துக் கொண்டே நின்ற வசந்திற்கு அப்பொழுதுதான் கமழினியின் நினைவு வர, ‘ஐயோ அவள் என்ன செய்கிறாளோ தெரியலையே..?!’ என்று வேகமாக வீட்டின் உள்ளே சென்றவன் மாடியேறிச் சென்றான்..

வசந்த் ,மாடிக்குச் சென்றதைப் பார்த்த வேணி, ‘ஒரு நிமிஷம் கூட தோழியை விட்டு தனியாக இருக்க முடியல.. இதில் இவளுக்கு கல்யாணம் நடந்தால்..?!’ என்று யோசித்தவர் சமையலறைக்குள் சென்றார்..

வேகமாக மாடிக்கு வந்த வசந்த் அங்கிருந்த அறைக்குள் சென்று பார்க்க தரையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் கமழினி.. அவளைப் பார்த்தும் வசந்த், ‘இவன் என்ன சொல்லிட்டுப் போனானோ..?’ என்று இன்னொரு பயம் மனத்தைக் கவ்வ அவளின் அருகில் சென்றான்..

அவளோ வசந்த் வந்ததை அறியாமல் முழங்காலைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருக்க, “கமழி..” என்று அழைக்க அவனை நிமிர்ந்து பார்த்த கமழினி, “வசந்த்..” என்று அழுகவும் அவளின் முகத்தை கூர்ந்து கவனித்தவன்,

“என்னடா..” என்று கேட்டதும் அவன் செய்ததை சொல்ல வாய் எடுத்தவள், ‘இல்ல என்னதான் நண்பன் என்றாலும் இவனிடம் இது பற்றி நான் எப்படி சொல்ல முடியும்..?’ என்று ஒரு மனம் அவளிடம் கேள்வி கேட்டதும் அவள் அழுவதை நிறுத்திவிட்டாள்..

அவளின் முகம் பார்த்த வசந்திற்கு துகிலன் செய்த வேலை என்னவென்று நொடியில் புரிந்து போனது.. அதே போல துகிலனின் மன உணர்வுகளையும் வசந்த்தால் புரிந்துக் கொள்ள முடிந்தது.. தன்னுடைய காதலியைப் பிரிந்திருக்கும் துயரம் என்னவென்று அவனும் அறிவானே..

கமழினி அமைதியாக இருக்க அவளின் அருகில் அமர்ந்த வசந்த், “எதுக்கு இப்போ இந்த அழுகை..? உனக்கு மாப்பிள்ளை பிடிக்கலையா..? நான் வேண்டுமென்றால் உன்னோட அப்பாவிடம் பேசட்டுமா..?” என்று அவளின் மனதை அறிந்துக்கொள்ள தூண்டிலைப் போட்டான் வசந்த்..

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த கமழினி, “இல்ல வேண்டாம் வசந்த்.. நான்.. நான்.. நான் அவனையே கல்யாணம் பண்ணிக்கிறேன்..” என்று திக்கித்திணறியபடி சொல்ல அவளைப் பார்த்து சிரித்தான் வசந்த்..

“அப்புறம் எதற்கு இந்த அழுகை..?!” என்று அவன் புன்னகையோடு கேட்டதும், “போடா அது எல்லாம் உன்னிடம் சொல்ல முடியாது..” என்று அவள் தலையைக் கவிழ்ந்து கொள்ள, “சரிடி எந்திரிச்சி போய் சேலையை மாத்து..” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான் வசந்த்..

அவளும் சரியென தலையசைக்க அறையைவிட்டு வெளியே வந்த வசந்த் மனம், ‘டேய் அநியாயம் பிள்ளையை இப்படியா பண்ணிவைப்பா..?! நல்ல வேலை நாங்க யாரும் கூட இல்ல..’ என்று நினைத்தவனின் மனம் உடனே மாறியது..

‘துகில் நீ அவளை நல்ல பார்த்துக்கணும்.. அவள் தெரியாமல் செய்த தப்பை எல்லாம் சுட்டிக்காட்டி அவளை நோகடிக்காதே.. அதை மட்டும் என்னால் ஏற்றுகொள்ளவே முடியாது..’ என்று நினைத்தவன், ‘நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கட்டும்..’ என்று எண்ணியபடி கீழிறங்கி வந்தான்.

அவனைப் பார்த்த அழகர், “வசந்த் இங்கே வா..” என்று அழைக்க அவனின் சிந்தனை கலைந்தது விட, “அப்பா..” என்று அவரின் அருகில் சென்று அமர, இன்னொரு சோபாவில் அமர்ந்தான் கண்ணன்..

அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அப்பா..” என்று அழைக்க, “வசந்த் இவளை மீட்டுக்கொண்டு வரணும் என்று நினைத்து உன்னோட வாழ்க்கையை நீ கேள்வி குறியாக்காதே..” என்று சொல்லவும் அவர் சொன்னதைக்கேட்டு சிரித்தான் வசந்த்..

அவன் சிரிப்பதைப் பார்த்த கண்ணன், “டேய் அப்பா உன்னோட நல்லதுக்குத்தான் சொல்கிறார்..” என்றவன் கோபத்துடன் சொல்லவும், “என்னோட வாழ்க்கை எனக்கு பக்கத்தில் தான் கண்ணா இருக்கு.. அவள் இங்கேதான் இருக்கா.. இப்பொழுது நினைத்தாலும் இன்னும் பத்து நிமிசத்தில் அவளை நான் போய் பார்க்க முடியும்..” என்று கூறியவன் நிறுத்திவிட்டு இருவரையும் நிமிர்ந்து பார்த்தான்..

‘அவன் அடுத்து என்ன சொல்ல போகிறான்..?’ என்ற யோசனையுடன் வசந்த்தை இருவரும் கேள்வியாக நோக்க, “அவளைப் பார்க்கும் பொழுது என்னோட தோழி ஒரு ஜெடபொருளாக இருப்பதை என்னால் பார்க்க முடியாதுப்பா..” என்று கூறியதும் அவனைப் பெருமையாகப் பார்த்தனர் அழகரும், கண்ணனும்..!

இருவரின் முகத்தையும் பார்த்தவன், “துகிலனும் என்னை புரிந்துக் கொள்வான்.. நாங்க எல்லோரும் சந்தோசமாக இருப்பதை நீங்களே பார்ப்பீங்க.. என்னோட தோழிக்கு எல்லாம் நினைவும் வரணும்.. அப்பொழுதுதான் எனக்கு நிம்மதி..” என்று கூறியவன் எழுந்து வெளியே சென்றான்..

கமழினி வீட்டில் இருந்து கிளம்பிய துகிலனின் மனம் அவனிடம் இல்லை.. காரை அவன் துரிதமான வேகத்தில் அவனின் கைகள் செலுத்தினாலும் அவனின் மனம் மட்டும் அவனின் கட்டுப்பாட்டில் இல்லாமல் கமழினியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தது..

மிகுந்த யோசனையுடன் வந்த மகனைப் பார்த்த சாரதா, “என்னடா இப்படி ரொம்ப அமைதியாக வர..?” என்று கேட்க அவருக்கும் பதில் சொல்லாமல் வண்டியைச் செலுத்தினான்..

அவனின் முகத்தைப் பார்த்த சாரதா, “டேய் நான் உன்னிடம் தான் கேட்டேன்..” என்று மகனை அதட்டவும், “அம்மா கொஞ்ச நேரம் அமைதியாக வாங்க..” என்று எரிச்சலுடன் கூறினான்..

அவனின் குரலில் இருந்த எரிச்சலை உணர்ந்த சாரதா அமைதியாகிவிட தன்னுடைய செல்லை எடுத்த துகிலன் ஒரு கையில் காரை செலுத்தியபடியே கிருஷ்ணாவுக்கு போன் செய்தான்.. அவனுக்கு ரிங் போய் கொண்டே இருக்க போனை வைத்துவிட்டான்..

அவனின் அவசரத்தையும், அவனின் முகத்தில் இருந்த பதட்டமும் அவருக்கு உண்மையை உணர்த்த, ‘எல்லாம் நீதாண்டா சரி பண்ணனும்..’ என்று மனதில் நினைத்தவர் மகனின் முகத்தையே பார்த்தார்.. தன்னால் முடிந்த அளவு வேகமாக காரை ஒட்டிய துகிலன் வீட்டின் முன்னே காரை நிறுத்த காரைவிட்டு இறங்கினார் சாரதா..

அவர் இறங்கிய மறுநொடியே, “அம்மா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கும்மா..” என்று கூறியவன் காரை எடுத்துக்கொண்டு செல்ல அவனைப் பார்த்து பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட சாரதா வீட்டின் உள்ளே சென்றார்..

காரில் சென்று கொண்டிருந்த துகிலனின் மனம், ‘உனக்கு என்னடி ஆச்சு..?! இந்த அளவுக்கு மாத்திரை எதுக்கு போடுகிறாய்..?’ என்ற கேள்வியுடன் மருத்துவமனையை நோக்கி சென்று கொண்டிருந்தவனின் அலைபேசி அடிக்க அதை எடுத்துப் பார்த்தான் துகிலன்..

திரையில் ஒளிர்ந்த என்னைப் பார்த்த துகிலன் உடனே போனை எடுக்க, “டேய் துகில் என்னடா திடீரென போன் பண்ணிருக்க..?!’ என்று கேட்டதும், அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் “எனக்கு ஒரு இன்பார்மேஷன் வேணும் கிருஷ்ணா..” என்று மட்டும் கூறினான் துகிலன்..

அவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் செஸ்ட் ரிலாக்ஸ்..” என்று சொல்லவும், “என்ன இன்பார்மேஷன் வேண்டும் சொல்லுடா..” என்று கூறியதும் காரை சாலை ஓரத்தில் நிறுத்தியவன்,

“நான் சில டபிலேட் நேம் சொல்கிறேன்.. அது எதுக்கு சாப்பிடுவாங்க என்று விசாரித்து சொல்லுடா..” என்று கேட்டான்.. அவனின் குரலில் இருந்த பதட்டத்தை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் கொஞ்சம் நிதானமாக இருடா..” என்று கூறியதும், “இப்பொழுது அது ரொம்ப முக்கியம் பாரு..?!” என்று எறிந்து விழுந்தான்..

“சரிடா என்ன விஷயம் என்று சொல்லு..” என்றவன் கேட்டதும் அதற்கு பதில் சொல்லாமல் மாத்திரையின் பெயரை மட்டும் சொல்லியவன், “இந்த மாத்திரை எல்லாம் எதுக்கு..” என்று கேட்டவன் குரல் கம்மியது.. பிறகு குரலை சரிசெய்து கொண்டவன், “எந்த நோய்க்கு இதை சாப்பிடுவாங்க..” என்று கேட்டான்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
துகிலன் சொன்ன மாத்திரைகளை எல்லாம் பார்த்த கிருஷ்ணா, “இது எல்லாம் நினைவு மறந்த பொழுது ஒருவர் சாப்பிடும் மாத்திரைகள்.. இது பற்றி ஏண்டா கேட்கிற..?!” என்று கேட்டவனின் குரல் துகிலனுக்கு கேட்கவே இல்லை..

அவன் சொன்ன, ‘நினைவு மறந்த பொழுது...’ என்ற வார்த்தை துகிலனின் தலையில் இடியென இறங்க அவனுக்கு பேச்சே வரவில்லை.. அவனின் மனமோ, ‘என்னோட தாமரைக்கு இந்த நிலையா..?!’ என்று அதிர்ச்சியடைந்தவன் அப்படியே நின்றான்..

திடீரென அவன் அமைதியானதை உணர்ந்த கிருஷ்ணா, “டேய் என்னடா பிரச்சனை..?” என்று கேட்டதும், “டேய் கிருஷ்ணா நான் அப்புறம் பேசுகிறேண்டா..” என்று சொல்லி போனை வைத்தவன் கண்கள் இரண்டும் கலங்கியது...

அவனால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. தன்னுடைய மனம் முழுவதும் இருந்து மணம் வீசியவளின் இந்த நிலையை அவன் முற்றிலுமாக எதிர்பார்க்காத ஒன்று.. என்றோ ஒருநாள் அவளை சந்திப்போம் என்று மட்டும் நினைத்திருந்தான்..

அது எல்லாம் நடந்த பொழுதும் கூட அவனால் அவளின் இந்த நிலையை ஏற்றுகொள்ளவே முடியவில்லை.. அவனின் மனம் அவளின் நினைவுகளுடன் கலந்துறவாடியது.. அவனின் மனம் அவளின் காதலியின் இந்த நிலையை எண்ணி வலித்தது..

காரில் ஏறிய துகிலன் நேராக வீட்டிற்கு வர அவனின் முகத்தைப் பார்த்த பூவிழி, ‘ஏன் இவன் இப்படி வருகிறான்..? கமழினியின் உண்மையான நிலையைத் தெரிந்துவிட்டாதா..?’ என்று தனக்குள் பல கேள்விகளை அடுக்கியவள் அவனின் அருகில் சென்றாள்..

திடீரென அவளின் கைகளை யாரோ பிடிக்க நின்ற இடத்தில் இருந்தே திரும்பிப்பார்த்தாள் பூவிழி.. அவளின் கையைப்பிடித்திருந்த சாரதா, “வாம்மா..” என்றவளை அழைத்துச்சென்றார்..

வீட்டிற்குள் நுழைந்தவன் நேராக தன்னுடைய அறைக்குள் சென்று கதவை சாத்திவிட்டு படுக்கை விழுந்தான்.. ‘தன்னை திருமணம் செய்ய போகிறவள்..’ என்ற அக்கரையில் போய் கடமைக்காக அவன் சென்று விசாரிக்கவில்லை..

‘என்னுடைய காதலிக்கு இந்த நிலையா..?’ என்று பதறியவன் அவளின் இன்றைய நிலையைத் தெரிந்துக்கொள்ளவே அந்த மாத்திரைகளை எடுத்துச்சென்று அவள் விசாரித்தான்..அவளின் உண்மை தெரிந்தவனின் மனம் வலியில் துடித்தது.. அவனின் மனதை யாரோ கசக்கிப்பிழிவது போல இருந்தது..

அவனின் மனம், ‘அவளுக்கு நிஜத்திலேயே என்னை நினைவில்லையா..? நான் அவளுக்கு மூன்றாவது ஆளா..? என்னை வேண்டாம் என்று தூக்கி எறிஞ்சிட்டு போன அந்த தாமரை எங்கே..? இப்பொழுது நான் பார்த்துவிட்டு வந்த கமழினி எங்கே..?’ என்று அவனின் மனதில் ஆயிரம் கேள்விகள்..

‘தன்னுடைய காதலிக்கா இந்தநிலை..?’ என்று நினைக்கவும் முடியாமல், அவளின் நினைவுகளை மறக்கவும் முடியாமல், அவளை காயப்படுத்திவிட்டு வந்த துகிலனின் மனம் வலித்தது.. ‘உன்னை காயப்படுத்த நான் யாருடி..’ என்று யோசித்தவனுக்கு, ‘அவளின் இன்றைய நிலையை அறிய வேண்டும்..’ என்ற எண்ணம் அவனின் மனதில் ஆழ்ந்து வேர்விட்டது..

ஆனால் அது பற்றி யாரிடம் கேட்பது என்று அவனுக்கு ஒரே யோசனையாக இருந்தது.. அவனின் மனம், ‘அம்மாவிடம் கேட்கலாம்..’ என்று யோசித்தவன், ‘இல்ல அம்மாக்கு உண்மை தெரிந்து இந்த திருமணத்தை நிறுத்திவிட்டால்..?’ என்று யோசித்தவன் அமைதியாகிவிட்டது..

மறுபடியும் மனம் அமைதி இல்லாமல் அலைபாய, ‘அவளின் அப்பாவிடம் கேட்கலாமா..?’ என்றவன் நினைத்தவன் மறுநொடியே அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டான்.. அவளின் அண்ணனிடம் கேட்கலாம் என்று நினைத்தவன், ‘வேண்டாம் என்று ஒதிக்கினான்..

அவன் மனகண்ணில் வந்து நின்றான் வசந்த்.. அவனின் நினைவு வந்த மறுநொடியே எழுந்து அமர்ந்த துகிலன், ‘இவன் இந்த திருமணத்தை நிறுத்த ஏதாவது பிளான் பண்ணுகிறானா..?’ என்ற சந்தேகம் கூடவே அவனின் மனதில் எழுந்தது..

ஆனால் மறுநொடியே, ‘இருக்காது வசந்த் அப்படி பண்ணியிருக்க மாட்டான்..’ என்று துகிலனின் இன்னொரு மனம் சொல்ல, ‘அவன் பொய் சொல்லியிருந்தால்..?’ என்று மற்றொரு மனம் அவனை கேள்வி கேட்டது..

‘கண்டிப்பாக இருக்காது.. வசந்த் எப்பொழுதும் கமழினியின் நலம் விரும்பி அவன் பொய் சொல்ல மாட்டான்..’ என்று இன்னொரு மனம் வசந்திற்கு சப்போர்ட்டாக பேசியதும் கொஞ்சநேரம் யோசிக்க ஆரம்பித்தான் துகிலன்..

‘இதுவரை அவனை கண்டாலே பிடிக்காது.. இப்பொழுது எப்படி என்னோட மனம் அவனுக்கு சாதகமாகப் பேசுகிறது..? கமழினிக்கு இப்படி ஆனதும் தன்னுடைய மனம் அவனின் பக்கம் சாய்ந்துவிட்டதா..?’ என்றவன் யோசிக்க யோசிக்க அவனின் மனதில் இருந்த வன்மம் எல்லாம் மாறிப்போனது..

‘வசந்த் மீது நான் கொண்ட வெறுப்பிற்கு பெயர் பொறாமை... அவளின் மீது காதல் கொண்ட என்னால் அவன் எங்கள் இருவரின் இடையே வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தது.. மற்றபடி தான் சொல்லிய வார்த்தைகளுக்கு நான் மட்டும்தான் பொறுப்பு..’ என்று நினைத்தவனின் மனம் தெளிவடைந்தது..

அந்த தெளிவுடன் அமர்ந்தவனின் மனம், ‘இதுநாள் வரையில் அவளின் நிலையை அறியாமல் இருந்தது என்னோட தவறு.. அவளுக்கு என்னை எந்தளவுக்கு பிடிக்கும் என்று எனக்கு தெரியாதா..?’ என்று நினைத்தவனின் மனம் அவளின் நினைவுகளில் சென்று நின்றது..

வசந்திற்கு போன செய்தவனின் நினைவுகளை கடந்தகாலம் செல்ல நினைக்க அதை தடுக்க முயற்சி செய்தவன் அது முடியாமல் போக அவளின் நினைவுகளுடன் உறவாடியவனின் உதட்டில் புன்னகை அழகாக மலர எழுந்து ஜன்னலின் அருகில் சென்றவனின் மனம் அந்த சூழ்நிலையை ரொம்பவே ரசித்தது..

மழை மெல்லிய தூரலில் நனைத்தபடியே கம்பீரமாக நின்றிருந்த மரத்தின் சிவப்பு நிறத்தில் பூத்து புன்னகை பூக்க அதை பார்க்க பார்க்க அவளின் நினைவுகள் அதிகமாக படையெடுக்க அவனுக்கு அவளை நினைத்து சிரிப்புதான் வந்தது.. அவனின் மனம் கடந்த காலத்தை நோக்கிச் சென்றது..

அதே மழையில் பூங்காவில் அமர்ந்திருந்த வசந்தின் மனம் துகிலனின் மீது இருந்தது.. அவனுக்கு தெரியும் தன்னைவிட பலமடங்கு காதலை அவன் கமழினி மீது வைத்திருக்கிறான் என்று..!

அதேபோல கமழினியின் மனம் என்னவென்று அவனுக்கும் தெரியும்.. கமழினி மனம் ஒரு பூவைப்போல.. எது வாங்கினாலும் அவள் எல்லோருக்கும் வாங்குவது போல துகிலனுக்கு சேர்ந்து எடுப்பது வசந்திற்கு மட்டுமே தெரியும்.. அவளின் மனம் பற்றி அறிந்த காரணத்தில் தான் வசந்த் தேடிபிடித்து துகிலனுக்கு திருமணம் செய்யும் முடிவையே எடுத்தான்..

அவனின் அலட்சிய பார்வை ஒவ்வொன்றும் அவளின் நினைவுகளைத் தூண்டும்.. கூடவே அவளின் மனதில் புதைந்திருக்கும் துகிலனின் நினைவுகளை தேடும்.. அந்த தேடலின் முடிவில் அவள் மீண்டு வர வாய்ப்புகள் அதிகம் என்றுதான் வசந்த் இந்த முடிவை எடுத்தது..

சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்து தோழியின் நினைவுகளுடன் கடந்தகாலம் நோக்கிப் பயணித்தது வசந்த்தின் மனம்..

அதேபோல வீட்டில் அமர்ந்திருந்த பூவிழியின் மனமும் கமழினி பற்றிய எண்ணங்களுடன் உறவாடிச்செல்ல, ‘இவள் இல்லையென்றால் நான் வசந்தை கணவனாக அடைந்திருக்க முடியுமா..?’ என்று நினைத்தவளின் மனமும் கடந்த காலம் நோக்கிப் பயணித்தது..

கடந்த காலத்தின் காதலும், நட்பும், கனவுகளும் அழகாக கதவுகள் திறந்து மூவரையும் கடந்தகாலம் நோக்கி அழைத்துச் சென்றது...

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top