MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 11
சௌந்தர்யா நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டே வெளியே வருகிறாள். முருகன், சைமன், சந்தோஷ் அனைவருமே சௌந்தர்யாவை நினைத்து பெருமை கொண்டனர். படிக்காதவளாக இருந்தாலும் இப்படி தைரியமாக முன் சென்று பேசியது நினைத்து பாராட்டி கொண்டிருந்தனர். ஆனால் கெளதம் கொஞ்சம் கலக்கத்தோடு இருந்தான்.
அவனை பார்த்ததும் “ஏன் கெளதம் சௌந்தர்யா எவ்ளோ நல்ல தைரியசாலி..?! நான் வாயாடின்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அவ ரொம்ப போல்டா இருக்கா..” என்று சைமன் புகழ்ந்து பேச, கெளதம் சோகமாகவே இருந்தான். அவனிடம் அவள் செய்ததை நினைத்து எந்த சந்தோஷம் இல்லாதது போல தோன்றியது மற்றவர்களுக்கு.
சந்தோஷ் கெளதம் கை பிடித்து, “ஏன் கெளதம் ரொம்ப சோகமா இருக்க..? அவுங்க உன்ன அடிச்சது ரொம்ப வலிக்குதா..?!” என்று அன்போடு கேக்கிறான். சைமனும் முருகனும் உடன் சேர்ந்து, “நாங்க எல்லாரும் சேர்ந்து உன்ன எப்டியாது இந்த கஷ்டத்துல இருந்து வெளில கொண்டு வந்துருவோம்.” என்று வாக்கு கொடுப்பது போல் பேசினர்.
கெளதம் புன்னகையை வரவழைத்து கொண்டு, “எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. ஆனா..!” சௌந்தர்யா பக்கம் திரும்பி கோபமாக, “உன்னை நேத்தே இப்டி எதுவும் பண்ணாதன்னு சொன்னேன்ல..?! அப்பறமும் நீ இப்டி பண்ணிட்ட..!” என்று கூறி முகத்தை திருப்பி கொண்டான்.
சௌந்தர்யா போலி கோபத்தோடு, “நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு..?! இத இப்போ சொல்லலைனா என்ன பிரச்சன வந்துருக்கும்... அய்யோ.. அத நினைச்சாலே, வேண்டாம்பா..” என்று பேச்சை பாதியில் நிறுத்தி கொண்டு குனிந்து கொண்டு வருத்த பட்டாள். “இத இப்போ அவர் ப்ரெண்ட்ஸ் பண்ணிருந்தா சந்தோஷபட்டுருப்பாறு... நான் சொன்ன அது மட்டும் கண்டிப்பாரு..” என்று முனங்கி கொண்டாள்.
மற்றவர்களுக்கும் இது கேட்கும் என்று தெரிந்தும் அவள் சொல்லிவிட்டு தள்ளி சென்று நின்று கொண்டாள் கோபத்தை வெளி காட்ட. முருகன் கெளதமிடம் “ஏன்டா இப்டி சொல்லுற..? அவ எப்டி வருத்த படுறா பாரு..? அவ உனக்காக பேசுறா, உனக்கு ஒண்ணுன்னா அவளால தாங்க முடியல. அத நீ ஏன் இப்டி தப்பா நினைக்கிற..” என்று அக்கரையோடு கேட்கிறான்.
“டேய்..! உனக்குமா நான் எதுக்கு சொல்லுறேன்னு புரியல..?! அவ பொண்ணுடா. அவ இப்டி பேசி அதுனால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருச்சுன்னா என்ன பண்ணுறது...? அதுக்கு தான் நேத்தே அவ கிட்ட இப்டி எதுவும் பண்ணாத, நம்ம வக்கீல் வச்சு பேசிக்கலாம்ன்னு சொன்னேன். அத கேக்காம இப்டி பண்ணிட்டா..”
“நீ சொல்லுறது சரி தான். ஆனா நாங்க எல்லாரும் எதுக்கு இருக்கோம், அவளுக்கு எதுவும் நடக்காம நாங்க பாத்துக்குறோம். சரியா நீ கவலை படாத..” முருகன் கெளதமை சமாதான படுத்துகிறான்.
சந்தோஷ், “நீ சொன்னது சரி தான், ஆனா நம்ம வக்கீல் நடராஜர் சார் நேத்து இறந்து போயிட்டாரு. அதுனால தான் அவ வேற வழி இல்லாம இப்டி பண்ணிட்டா.. அதுவும் கூட நல்லதா போச்சு, இப்போ வேற இன்ஸ்பெக்டர் போட்டா கேஸ்ல நல்லது நடக்கும்ல..” என்று உண்மையை கூறினான்.
கெளதமுக்கு நடராஜர் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது. “எப்டி இறந்தாரு..?” என்று கேட்டான். அவர்கள் கூறவும் மிகவும் வருந்தினான். “அன்னைக்கு கோர்ட்ல அவர் மயங்கி விழுந்த போதே பயந்தேன். வயசான அவர் என்னால இப்டி இறந்து போயிட்டாரு.. என்னால எல்லாருக்கும் எப்போவும் கஷ்டம் தான்..” என்று கூறி அவனை அவனே வருத்தி கொண்டான்.
கெளதம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சௌந்தர்யா அதற்க்கு மேல் கோபத்தை காட்டாமல் அருகில் சென்று, “நீங்க ஏன் உங்கள நீங்களே வருத்திகுறீங்க..? அவருக்கு உடம்பு சரி இல்லாம தான இறந்து போனாரு.. அதுக்கும் உங்களுக்கு என்ன சம்பந்தம். தேவை இல்லாம வருத்த படாதீங்க..” என்று ஆதரவாக பேசினாள். அப்போதும் அவன் கண்கள் கலங்கியே இருந்தன. சமாதன படுத்த கெளதமின் கைகளை பாசத்தோடு பற்றினாள்.
அவர்கள் இருவரும் நடந்து கொள்வதை பார்த்து சைமன் நக்கலாக சிரித்தான். “ம்ம்.. நல்லா தான் இருக்கு, அவ உனக்காக கவலை படுறது, நீ அவளுக்காக கவலை படுறது.. ம்ம்ம்..” என்று மறுபடியும் சிரித்தான். “ஆனாலும் இப்டி கோப படுற மாதிரி நடிக்கிறது, அப்பறம் இப்டி பாசமா வந்து கைய பிடிக்குறதுன்னு பாக்கவே வேடிக்கையா தான் இருக்கு..” என்று கூறிய உடனே இருவரும் கையை விளக்கினர்.
சந்தோஷ், முருகன் இருவரும் சிரித்து கொண்டு கண்ணசைத்தனர். விடாமல் சைமன் மேலும் கேலி செய்தான். “என்னப்பா..? உங்க ரொமான்சுக்கு நாங்க மூணு பெரும் இடைஞ்சலா இருக்கோமா...??! நாங்க வேணா கொஞ்சம் தள்ளி நிக்கிறோம். நீங்க உங்க காதல கண்டின்யு பண்ணுங்க..”
“டேய்..! போடா..” என்று கூறும் போதே கெளதமின் கண்கள் பளபளத்தன. அவனது சோகம் காணாமல் போனது. உள்ளுக்குள் சந்தோஷம் தானாக வந்தது. சௌந்தர்யா வெட்கபட்டாள். அவளது முகமே சிவந்து அழகானது. அனைவரும் சிரித்து தங்களது சோகத்தை மறந்தனர் அந்த நேரத்தில்.
கெளதமின் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமலும் இன்னும் சிறிது நேரம் நின்றால் அவன் நம்மை அதிகம் கேலி செய்வான் என்று எண்ணியும் அங்கிருந்து கிளம்ப நினைத்தாள். “நான் கிளம்புறேன்..” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
உடனே வேகமாக கெளதம் “போகாத நில்லு..” என்றான்.
அவள் திரும்பி “என்ன” என்று பாவனை செய்தாள்.
“இவுங்க யாரு கூடவாது போ.. தனியா போகாத.. அது தான் நல்லது. இனி எங்கயுமே தனியா போகாத..” என்று கண்டிப்போடு கூறினான்.
அவள் புரியாதது போல், “ஏன்..?” என்று கேக்கவும், “சொன்னா கேளு..” என்று கூறினான்.
முருகன் உடனே, “ஆமாம் அதான் நல்லது சௌந்தர்யா. நீ இன்னைக்கு அவுங்கள எதிரித்து பேசி அவுங்கள சஸ்பெண்ட் பண்ண வேற வச்சுருக்க.. அதுக்கு அவுங்க வேற ஏதாது பண்ண முயற்சிக்கலாம். அதனால தனியா எங்கயும் போகாத. வீட்டுலே இரு. நாங்க போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து உன்னை பத்திரமான இடத்துக்கு கூட்டிட்டு போறோம்.”
கெளதம், “அவ வீட்டுக்கே தனியா போக வேண்டாம்..”
சந்தோஷ், “அவுங்க தான் ஸ்டேஷன் போறாங்க நான் போகல.. நான் என்னோட வண்டில கூட்டிட்டு போறேன். நீ கவலை படாத..”
“சரி.. நீங்க கிளம்புங்க. எல்லாரும் பத்திரமா இருங்க.” என்று கூறி அனுப்பி வைத்தான். கெளதமுக்கு ஜெயில் ஹாஸ்பிட்டலிலே ட்ரீட்மென்ட் செய்ய அழைத்து சென்றனர்.
சௌந்தர்யா நிம்மதி பெருமூச்சு விட்டு கொண்டே வெளியே வருகிறாள். முருகன், சைமன், சந்தோஷ் அனைவருமே சௌந்தர்யாவை நினைத்து பெருமை கொண்டனர். படிக்காதவளாக இருந்தாலும் இப்படி தைரியமாக முன் சென்று பேசியது நினைத்து பாராட்டி கொண்டிருந்தனர். ஆனால் கெளதம் கொஞ்சம் கலக்கத்தோடு இருந்தான்.
அவனை பார்த்ததும் “ஏன் கெளதம் சௌந்தர்யா எவ்ளோ நல்ல தைரியசாலி..?! நான் வாயாடின்னு மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன், ஆனா அவ ரொம்ப போல்டா இருக்கா..” என்று சைமன் புகழ்ந்து பேச, கெளதம் சோகமாகவே இருந்தான். அவனிடம் அவள் செய்ததை நினைத்து எந்த சந்தோஷம் இல்லாதது போல தோன்றியது மற்றவர்களுக்கு.
சந்தோஷ் கெளதம் கை பிடித்து, “ஏன் கெளதம் ரொம்ப சோகமா இருக்க..? அவுங்க உன்ன அடிச்சது ரொம்ப வலிக்குதா..?!” என்று அன்போடு கேக்கிறான். சைமனும் முருகனும் உடன் சேர்ந்து, “நாங்க எல்லாரும் சேர்ந்து உன்ன எப்டியாது இந்த கஷ்டத்துல இருந்து வெளில கொண்டு வந்துருவோம்.” என்று வாக்கு கொடுப்பது போல் பேசினர்.
கெளதம் புன்னகையை வரவழைத்து கொண்டு, “எனக்கு தெரியும் நீங்க எல்லாரும் இருக்குற வரைக்கும் எனக்கு எந்த கஷ்டமும் இல்ல.. ஆனா..!” சௌந்தர்யா பக்கம் திரும்பி கோபமாக, “உன்னை நேத்தே இப்டி எதுவும் பண்ணாதன்னு சொன்னேன்ல..?! அப்பறமும் நீ இப்டி பண்ணிட்ட..!” என்று கூறி முகத்தை திருப்பி கொண்டான்.
சௌந்தர்யா போலி கோபத்தோடு, “நான் பண்ணதுல என்ன தப்பு இருக்கு..?! இத இப்போ சொல்லலைனா என்ன பிரச்சன வந்துருக்கும்... அய்யோ.. அத நினைச்சாலே, வேண்டாம்பா..” என்று பேச்சை பாதியில் நிறுத்தி கொண்டு குனிந்து கொண்டு வருத்த பட்டாள். “இத இப்போ அவர் ப்ரெண்ட்ஸ் பண்ணிருந்தா சந்தோஷபட்டுருப்பாறு... நான் சொன்ன அது மட்டும் கண்டிப்பாரு..” என்று முனங்கி கொண்டாள்.
மற்றவர்களுக்கும் இது கேட்கும் என்று தெரிந்தும் அவள் சொல்லிவிட்டு தள்ளி சென்று நின்று கொண்டாள் கோபத்தை வெளி காட்ட. முருகன் கெளதமிடம் “ஏன்டா இப்டி சொல்லுற..? அவ எப்டி வருத்த படுறா பாரு..? அவ உனக்காக பேசுறா, உனக்கு ஒண்ணுன்னா அவளால தாங்க முடியல. அத நீ ஏன் இப்டி தப்பா நினைக்கிற..” என்று அக்கரையோடு கேட்கிறான்.
“டேய்..! உனக்குமா நான் எதுக்கு சொல்லுறேன்னு புரியல..?! அவ பொண்ணுடா. அவ இப்டி பேசி அதுனால அவளுக்கு ஏதாவது பிரச்சனை வந்துருச்சுன்னா என்ன பண்ணுறது...? அதுக்கு தான் நேத்தே அவ கிட்ட இப்டி எதுவும் பண்ணாத, நம்ம வக்கீல் வச்சு பேசிக்கலாம்ன்னு சொன்னேன். அத கேக்காம இப்டி பண்ணிட்டா..”
“நீ சொல்லுறது சரி தான். ஆனா நாங்க எல்லாரும் எதுக்கு இருக்கோம், அவளுக்கு எதுவும் நடக்காம நாங்க பாத்துக்குறோம். சரியா நீ கவலை படாத..” முருகன் கெளதமை சமாதான படுத்துகிறான்.
சந்தோஷ், “நீ சொன்னது சரி தான், ஆனா நம்ம வக்கீல் நடராஜர் சார் நேத்து இறந்து போயிட்டாரு. அதுனால தான் அவ வேற வழி இல்லாம இப்டி பண்ணிட்டா.. அதுவும் கூட நல்லதா போச்சு, இப்போ வேற இன்ஸ்பெக்டர் போட்டா கேஸ்ல நல்லது நடக்கும்ல..” என்று உண்மையை கூறினான்.
கெளதமுக்கு நடராஜர் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது. “எப்டி இறந்தாரு..?” என்று கேட்டான். அவர்கள் கூறவும் மிகவும் வருந்தினான். “அன்னைக்கு கோர்ட்ல அவர் மயங்கி விழுந்த போதே பயந்தேன். வயசான அவர் என்னால இப்டி இறந்து போயிட்டாரு.. என்னால எல்லாருக்கும் எப்போவும் கஷ்டம் தான்..” என்று கூறி அவனை அவனே வருத்தி கொண்டான்.
கெளதம் பேசுவதை கேட்டு கொண்டிருந்த சௌந்தர்யா அதற்க்கு மேல் கோபத்தை காட்டாமல் அருகில் சென்று, “நீங்க ஏன் உங்கள நீங்களே வருத்திகுறீங்க..? அவருக்கு உடம்பு சரி இல்லாம தான இறந்து போனாரு.. அதுக்கும் உங்களுக்கு என்ன சம்பந்தம். தேவை இல்லாம வருத்த படாதீங்க..” என்று ஆதரவாக பேசினாள். அப்போதும் அவன் கண்கள் கலங்கியே இருந்தன. சமாதன படுத்த கெளதமின் கைகளை பாசத்தோடு பற்றினாள்.
அவர்கள் இருவரும் நடந்து கொள்வதை பார்த்து சைமன் நக்கலாக சிரித்தான். “ம்ம்.. நல்லா தான் இருக்கு, அவ உனக்காக கவலை படுறது, நீ அவளுக்காக கவலை படுறது.. ம்ம்ம்..” என்று மறுபடியும் சிரித்தான். “ஆனாலும் இப்டி கோப படுற மாதிரி நடிக்கிறது, அப்பறம் இப்டி பாசமா வந்து கைய பிடிக்குறதுன்னு பாக்கவே வேடிக்கையா தான் இருக்கு..” என்று கூறிய உடனே இருவரும் கையை விளக்கினர்.
சந்தோஷ், முருகன் இருவரும் சிரித்து கொண்டு கண்ணசைத்தனர். விடாமல் சைமன் மேலும் கேலி செய்தான். “என்னப்பா..? உங்க ரொமான்சுக்கு நாங்க மூணு பெரும் இடைஞ்சலா இருக்கோமா...??! நாங்க வேணா கொஞ்சம் தள்ளி நிக்கிறோம். நீங்க உங்க காதல கண்டின்யு பண்ணுங்க..”
“டேய்..! போடா..” என்று கூறும் போதே கெளதமின் கண்கள் பளபளத்தன. அவனது சோகம் காணாமல் போனது. உள்ளுக்குள் சந்தோஷம் தானாக வந்தது. சௌந்தர்யா வெட்கபட்டாள். அவளது முகமே சிவந்து அழகானது. அனைவரும் சிரித்து தங்களது சோகத்தை மறந்தனர் அந்த நேரத்தில்.
கெளதமின் முகத்தை பார்க்க முடியாமல் வெட்கத்தில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமலும் இன்னும் சிறிது நேரம் நின்றால் அவன் நம்மை அதிகம் கேலி செய்வான் என்று எண்ணியும் அங்கிருந்து கிளம்ப நினைத்தாள். “நான் கிளம்புறேன்..” என்று மற்றவர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள்.
உடனே வேகமாக கெளதம் “போகாத நில்லு..” என்றான்.
அவள் திரும்பி “என்ன” என்று பாவனை செய்தாள்.
“இவுங்க யாரு கூடவாது போ.. தனியா போகாத.. அது தான் நல்லது. இனி எங்கயுமே தனியா போகாத..” என்று கண்டிப்போடு கூறினான்.
அவள் புரியாதது போல், “ஏன்..?” என்று கேக்கவும், “சொன்னா கேளு..” என்று கூறினான்.
முருகன் உடனே, “ஆமாம் அதான் நல்லது சௌந்தர்யா. நீ இன்னைக்கு அவுங்கள எதிரித்து பேசி அவுங்கள சஸ்பெண்ட் பண்ண வேற வச்சுருக்க.. அதுக்கு அவுங்க வேற ஏதாது பண்ண முயற்சிக்கலாம். அதனால தனியா எங்கயும் போகாத. வீட்டுலே இரு. நாங்க போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வந்து உன்னை பத்திரமான இடத்துக்கு கூட்டிட்டு போறோம்.”
கெளதம், “அவ வீட்டுக்கே தனியா போக வேண்டாம்..”
சந்தோஷ், “அவுங்க தான் ஸ்டேஷன் போறாங்க நான் போகல.. நான் என்னோட வண்டில கூட்டிட்டு போறேன். நீ கவலை படாத..”
“சரி.. நீங்க கிளம்புங்க. எல்லாரும் பத்திரமா இருங்க.” என்று கூறி அனுப்பி வைத்தான். கெளதமுக்கு ஜெயில் ஹாஸ்பிட்டலிலே ட்ரீட்மென்ட் செய்ய அழைத்து சென்றனர்.