MithraPrasath
SM Exclusive
மரணத்தின் மர்மம்
அத்தியாயம் 3நடப்பதும், நடந்ததும் புரியாமல் விளிக்கும் சௌந்தர்யா, கெளதமை பார்த்தும் குழம்புகிறாள். அவனது அமைதி அவளுக்கு புரியாத புதிராக இருந்தது. அதை அவனிடம் கேட்கவும் செய்தாள்.
“நீங்க கொலை செஞ்சீங்களா?..” கோவ பார்வயோடு கேட்டாள்.
“நீயும் என்ன நம்பலையா?..” என்றான் ஏமாற்றத்துடன்,
“நம்புறதால தான் கேக்குறேன்.. சொல்லுங்க..”
“பண்ணல.”
“அப்பறம் ஏன் அமைதியா இருக்கீங்க...?”
இன்ஸ்பெக்டர் எழுந்து வருகிறார் அவர்களுக்கு அருகில், “நீங்க ரெண்டு பேரும் போடுற ட்ராமா பாக்குறதுக்கு நாங்க இல்ல.” என்று கூறி நெருங்கி அவனை கன்னத்தில் அடித்தார். “சொல்லு உண்மைய?..”
“எதுக்கு சார் அவர அடிக்கிறீங்க..? இதெல்லாம் தப்பு.... வேணாம் ”
“என்னம்மா எனக்கே ஆர்டர் போடுறியா...? இதெல்லாம் சரிவராது. நீ கிளம்பு. கான்ஸ்டபில்...”
“எஸ் சார்...”
“இந்த பொண்ண அனுப்புங்க...”
“சார், நீங்க இப்டிலாம் பண்ண கூடாது. நீங்க அடிக்காதீங்கனு சொன்னா, என்னையே நீங்க தப்பு பண்ண மாதிரி
வெளில போக சொல்லுறீங்க. நான் போக மாட்டேன்.” என எதிர்த்து பேசியவளை கோபமாக முறைத்து பார்த்தார் இன்ஸ்பெக்டர்.
“என்னம்மா திமிரா பேசுற. பொண்ணுன்னு பாத்தா... இப்போ நீ கிளம்புறியா, இல்ல உன்ன இந்த கொலைக்கு உடந்தையா இருந்தனு உள்ள தள்ளவா.”
“சார், சார்.. அவள தப்பா நினைக்காதீங்க, அவ புரியாம பேசுறா.” இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சி கொண்டே சௌந்தர்யாவை பார்த்து, “போ, போ..” கையசைக்கிறான்.
அவள் ஏன் என்பது போல் தலை சாய்த்தும், “முடியாது.” என சாதரணமாக சொல்லினாள்.
“கான்ஸ்டபில்... என்ன பன்னுறீங்க.... சொன்னா எதுவும் கேக்கமாட்டீங்களா?”
“ஏம்மா!... கிளம்பு நீ... நிக்காத”
கம்பை வைத்து அவளை வெளியே தள்ள, அவளோ “கெளதம் நீங்க கவலைபடாதீங்க... நான் இருக்கேன்.” பேசி கொண்டே வெளியே சென்றாள்.
“இப்போவே போய் வக்கில் ஐயா பாக்கணும்.” தனக்கு மட்டும் கேக்குமாறு பேசி கொண்டாள்.
வக்கீல் நடராஜன் வீட்டிலே ஆபீஸ் வைத்து நடத்துகிறார். வயது ஐம்பதை தாண்டி, தலை முடி நரைத்து, பார்ப்பதற்கு இப்போதே பென்ஷன் வாங்கும் கிழவரை போல் தோற்றமளிப்பவர். கேஸ் நன்றாக நடத்தும் நல்ல வக்கீல் என்றாலும், காசே கடவுள் என்பவர். ஆனால் சில ஆண்டுகளாக கேஸ் வருவது குறைந்தும் விட்டது. அதனாலே அவர் உடம்பும் சரியில்லாமல் போய்விட, அவர் கோர்ட்டுக்கு செல்வதை குறைத்து விட்டார். இவரிடம் கேஸ் எடுத்து நடத்தி கொடுக்கும் படி சௌந்தர்யா உதவி கேட்க எண்ணியிருந்தாள்.
வழக்கத்திற்கு மாறாக இன்று நடராஜர் ஆபீஸிலே இருந்தார். காலையில் இருந்தே. வீட்டு வேலை செய்யும் சுந்தரி இதை கவனித்து, அவரிடம் சென்று சௌந்தர்யாவை பற்றி சொல்லலாம் என நினைத்தாள். ஆபீஸ்க்குள் வந்து நடராஜரை பார்க்கிறாள். அவர் புக் பார்த்து கொண்டிருந்தார்.
“அய்யா...”
“நிமிர்ந்து பார்த்த நடராஜர், “என்ன சுந்தரி சுத்தம் பண்ண போறியா...” என எழ,
“இல்ல அய்யா... நான் வந்து ஒரு உதவி கேட்டு வந்தேன்.”
“என்ன உதவி... அதுவும் உனக்கா?... சம்பளம் பத்தி கேக்கனுமா?.... சொல்லு...”
“இல்ல அய்யா எனக்கு இல்ல, எனக்கு தெரிஞ்சவுங்களுக்கு...”
“அய்யா..” அதற்குள் சௌந்தர்யாவே வந்து விட
“யாரு உள்ள வாங்க.”
சௌந்தர்யா உள்ளே வருவதை பார்த்த சுந்தரி, “நீயா.. உன்ன பத்தி தான் சொல்லிட்டு இருந்தேன். வா..” என கூறி அவளை உள்ளே வருமாறு தலையசைத்தாள்.
“யாரு இந்த பொண்ணு, உனக்கு தெரியுமா சுந்தரி?...”
“நான் ஒருத்தருக்கு உதவி கேட்டேன்ல அய்யா அது இவளுக்காக தான். இவ பேரு சௌந்தர்யா, எங்க பாக்கத்து வீட்டுல இருக்கா. ஒரு கேஸ் எடுத்துக்க சொல்லி...” அவள் புறம் திரும்பி, “சொல்லுடி..” என கைகளை பிடித்தாள்.
“அது வந்து அய்யா நான் நீலமேக கோவில் தெருவுல பூக்கடை நடத்தி வரேன். என் பக்கத்துக்கு கடைக்காரர போலீஸ் பிடிச்சுட்டு போய்ட்டாங்க.”
“எதுக்காக..? என்ன கேஸ்..?”
“கோகிலாபுரத்துக்கு பின்னாடி ஒரு ஆக்சிடென்ட் நடந்ததுல நேத்து அது தான் அய்யா கேஸ்.”
“நான் கூட நியூஸ் பேப்பர்ல பாத்தேன். என்ன நடந்ததுன்னு தெளிவா சொல்லு.”
“என் பக்கத்து கடைக்காரர் பேரு கெளதம் அய்யா. அந்த ஆக்சிடென்ட் கேஸ் ல இறந்தது அவரோட நண்பர் முருகன். முருகன் இவர தான் கடைசியா பாக்க வந்தாராம். அத சொல்லி அர்ரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க.”
“முருகன் யாரு?..”
சுந்தரி இடைமறித்து, “சிவகுரு அய்யா தெரியும்ல அய்யா உங்களுக்கு. அவரோட பேரன் தான் இந்த முருகன்.”
“ஓ!... சிவா சுந்தரம் மகனா. தெரியும் தெரியும்.”
“அது மட்டும் இல்ல அய்யா, போலீஸ் ஸ்டேஷன்ல இப்போ என்னன்னா இது கொலைன்னு சொல்லுறாங்க. அவர் அப்டி பட்டவர் இல்ல அய்யா. நீங்க தான் எப்டியாது கௌதம வெளில கொண்டு வரணும். அதுக்கு தான் உங்கள தேடி வந்தேன் அய்யா.”
“அதெல்லாம் சரிம்மா. எனக்கு பீஸ் தரனும், அதெல்லாம் சரினா தான் நான் கேஸ் எடுப்பேன்.”
“சரிங்க அய்யா, நான் எப்பாடு பட்டாது தந்துருவேன். நீங்க கௌதம எப்டியாது வெளில எடுத்தா போதும்.”
“நீ கட்டிட்டா நல்லது. நீ கேஸ் பத்தி எல்லா விவரமும் எனக்கு சொல்லு. அதுவும் இது கொலைன்னு எப்டி சொல்லுறாங்க..? கெளதம் கொலை பண்ணலன்னு நீ எப்டி சொல்லுற..? இதெல்லாம் எனக்கு தெரியனும்.”
“அய்யா அவுங்க ஏதோ போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல கொலைன்னு இருக்குனு சொல்லுறாங்க... சாட்சி இருக்குனும் சொல்லுறாங்க. கெளதம் நான் கொலை பண்ணலன்னு சொல்லுறார். அவுங்க அடிக்க வேற செய்யுறாங்க. நான் கேட்டா என் மேலேயே கேஸ் போடுறத சொல்லி மிரட்டுறாங்க.” என்று வருத்தபட்டாள்.
“சரிம்மா. நாம போலீஸ் ஸ்டேஷன்க்கு போகலாம்... கேஸ் டீட்டைல்ஸ் வாங்கணும். நீ எதுவும் போய் பேசாத. நான் கேஸ் பைல் பண்ணிடுறேன். நாம ஈவ்னிங் போகலாம் போலீஸ் ஸ்டேஷன். இப்போ நீ கிளம்பு.”
“ம்ம்.. சரிங்கய்யா.”
“அப்பறம்... பீஸ்க்கு பணத்த ரெடி பண்ணிடு. கோர்ட்க்கு போகுறதுக்குல்ல பீஸ் கட்டிடு.”
“சரி அய்யா கட்டிடுறேன்.” திரும்பி சுந்தரியை பார்த்து, “ரொம்ப நல்ல உதவி பண்ணிருக்கீங்க அக்கா, இத எப்போவும் மறக்க மாட்டேன். ரொம்ப நன்றி அக்கா.”
“அதெல்லாம் எதுக்குடி... நீ கிளம்பு... எனக்கு வேலை இருக்கு... அம்மா பார்த்தா திட்டுவாங்க.”
“சரிக்கா, சரிக்கா... நீங்க போங்க... நான் கிளம்புறேன்.”