MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 5
கான்ஸ்டபில் முத்து போன் பேசி முடித்து விட்டு உள்ளே செல்கிறார். ஏதோ யோசனையோடு இருந்தார். பின் மெதுவாக எழுந்து, சுற்றி சுற்றி பார்த்து கொண்டே, கையில் கம்பை எடுத்து கொண்டு கெளதமை நோக்கி செல்கிறார். அவன் அசதியில் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்திருந்தான். சாப்பிடாமல் இருந்ததால் பசி மயக்கம் கண்களை திறக்க முடியாமல் அவனை தூக்கத்திற்கு தள்ளியிருந்தது. கெளதமை நோக்கி கான்ஸ்டபில் வந்தார். அவன் அசதியில் இருந்ததால் கான்ஸ்டபில் வருவது தெரிய வில்லை. முத்து கெளதம் தோளை தொட சென்றார், அதற்குள் டெலிபோன் ஒலித்தது. முத்து திரும்பி பார்த்தார். கெளதம் அப்போதும் கண் திறக்க வில்லை. கான்ஸ்டபில் சென்று கால் அட்டென்ட் செய்கிறார்.
“ஹலோ...”
எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் பேசுகிறார், “முத்து நான் இன்ஸ்பெக்டர்... நீங்க இப்போ கலெக்டர் ஆபீஸ்க்கு வாங்க...”
“சார், இங்க ஸ்டேஷன்ல யாராது இருக்கணும்ல...”
“எனக்கு தெரியும். நான் கான்ஸ்டபில் ரகு அனுப்பியிருக்கேன், அவன் வரவும் நீங்க இங்க வந்துருங்க...”
“சார்.. அது வந்து...”
“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், நீங்க சீக்கிரம் வாங்க...”
இன்ஸ்பெக்டர் உடனே கால் கட் செய்து விட்டார். எரிச்சலுடன் திரும்பினார் முத்து. ‘ரகு வர்றதுக்குள்ள நம்ம போய் பண்ணிடலாம்’ என்று மனதினுள் நினைத்து கொண்டு கெளதம் நோக்கி சென்றார் முத்து. உள்ளே சென்று கெளதமை தட்டி எழுப்பினார். அவன் கண் விளித்து பார்க்கவும்,
“எழுந்திரு... உன் கிட்ட விசாரணை பண்ணனும்..”
எழுந்திருக்க முடியாமல் தட்டு தடு மாறி எழுந்தான், “ம்ம்ம்.. கேளுங்க சார்... என்ன..?”
அதற்குள் ஸ்டேஷனுள் நுழைந்த கான்ஸ்டபில் ரகு, இவர்கள் இருக்கும் செல்லுக்குள் வருகிறார். அவனை பார்த்ததும் முத்து திரும்பி பார்த்தார். உள்ளுக்குள் எரிச்சலடைந்தார். பின் கெளதமை பார்த்து,
“உன்ன அப்பறம் வந்து விசாரிக்கிறேன்.” என்று கூறி விட்டு வெளியே சென்றார்.
“சார் என்னாச்சு..? அவன் என்ன பண்ணான்..?” என்று ரகு கேக்க,
முத்து பதில் எதுவும் பேசாமல் அவரது இடத்திருக்கு சென்றார். அவரது தொப்பியையும், செல் போனையும் எடுத்து கொண்டு திரும்பினார். பின் ரகுவை பார்த்து,
“கவனமா பாத்துக்கோ..”
“ம்ம்ம்.. ஓகே சார்.” என்று ரகு பதிலளிக்கவும், முத்து வெளியேறி சென்றுவிட்டார்.
...
இரண்டு நாள் கழிந்தது. அன்று காலை வக்கீல் நடராஜர் கெளதமை பார்க்க வருகிறார். சௌந்தர்யா உடன் வரவில்லை. ஸ்டேஷன் வந்து இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டு, கெளதமை பார்க்க வருகிறார். நேற்றே சௌந்தர்யா வக்கீல் வருவார் என்று கூறி இருந்ததால், வக்கீலை எதிர் பார்த்து கொண்டிருந்த கெளதம் அவரை பார்த்து எதிர் பார்ப்புடன், எழுந்து வந்து நின்றான். அவனுக்கு அருகில் வந்த நடராஜர்,
“உன் கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும் அதான் வந்தேன். நான் வர போறது உனக்கு ஏற்கனவே தெரியுமா..?!”
“ஆமாம் சார்... சௌந்தர்யா சொன்னா. என்ன கேக்கணும் சார்... சொல்லுங்க.”
“அது வந்து... நீ நிஜமாவே கொலை பண்ணலைல..?” என்று தலையை சாய்த்து கண்களை சுருக்கி சந்தேகத்துடன் கேட்டார்.
“ஏன் சார், எப்போ பாரு இப்டியே கேக்குறீங்க..?”
“நீ சொல்லுப்பா..” என்று பிடிவாதமாக அவரது கேள்வியிலே இருந்தார்.
“இல்ல” என்று கூறி குனிந்து கொண்டான்.
“ம்ம்ம்... அது உண்மையா இருந்தா ஓகே தான். நீ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெளிவா சொன்னா நல்லது.”
“சார்.. முருகன் வந்து என்கிட்டே வருத்த பட்டு பேசினான். அப்பறம் போய்ட்டான். நான் அவன சமாதன படுத்த பின்னாடியே போனேன். அவன் ரோட கடந்து போய்ட்டான். நானும் போனேன். ஆனா அவன அங்க காணோம். திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டது. நான் போய் பார்த்தேன். ரோட்டுல யாரோ கிடந்தாங்க. நான் ஒருவேள முருகனோ அப்டின்னு நினைச்சு பயந்து வேகமா போய் பக்கத்துல உக்காந்து பார்த்தேன். ஆனா அது முகம் சிதைந்து போய் இருந்துச்சு. எனக்கு யாருன்னு தெரியல, ஒன்னும் புரியவும் இல்ல, நான் திரும்பி வந்துட்டேன். அவ்ளோ தான் சார் நடந்துச்சு.”
“ம்ம்ம்.... ஓகே, இப்போ புரியுது. இது போதும் நான் பாத்துக்கிறேன்.”
“சார்.. நான் அன்னைக்கு கொலை எதுவும் பண்ணல.”
கெளதம் சொன்னதை கேட்காமல் அவர் மேலும் கேள்வியை கேட்டார்.“ம்ம்ம்... அப்பறமா இன்னொன்னு கேக்கணும்... நீ அன்னைக்கு சைமன பாத்தியா..?”
“அது...” புருவங்கள் சுருங்கி பின் விரிந்து அவன் யோசிப்பதை காட்டியது. “இல்லையே சார்..”
“நீ நல்ல யோசிச்சு சொல்லு.”
“ம்ம்ம்..?!” மறுபடியும் யோசிக்கிறான். “பாத்த மாதிரி ஞாபகம் இல்ல சார்..”
“ஓகே... சைமன பத்தி நீ என்ன நினைக்கிற..?” கெளதம் புரியாமல் விழிக்க, “அது வந்து, அவன் உண்மைய தான் சொல்லுறானா.. இல்ல யாருக்கும் உதவி பண்ணுறானா?”
“சார்.. அவன் ரொம்ப நல்லவன்.”
“நல்லவன் எல்லாம் நல்லவனாவே இருக்க மாட்டான்பா எல்லா நேரத்துலையும்..”
“அப்டி பேசாதீங்க சார்.. அவன் நிஜமாவே எந்த தப்புக்கும் துணை போக மாட்டான்.”
“அது சரி, ஒரு வேல அவன் வேற யாருக்காது பயந்து இப்டி கூட பண்ணுறானோ என்னவோ..? நீ என்ன நினைக்கிற..? உனக்கு யார் மீதாது சந்தேகம் இருக்கா..?”
“சார்.. எனக்கு அத பத்தி எதுவும் தெரியல.. நீங்க சொன்ன மாதிரி சைமன் பயந்து இப்டி பண்ணுறானானு தெரியல..”
“உனக்கு எதிரி யாராது இருக்காங்களா?”
“இல்லையே சார்... எனக்கு எல்லாம் யார் எதிரியா இருக்க போறாங்க..?!”
“அப்போ முருகனுக்கு எதிரி யாரும் இருக்காங்களா..?”
“எனக்கு தெரிஞ்சு யாரும் இல்ல சார்..”
எரிச்சல் பட்டு கொண்டே, ‘ம்ம்... எத கேட்டாலும் தெரியாது.. எதுவும் புரியாது, இந்த மாதிரி ஏமாளியா இருந்தா யாரா இருந்தாலும் ஏமாத்து வாங்க... என்ன பண்ண, இவனுக்கு எல்லாம் நாம வாதாட வேண்டியதா இருக்கு.’ என்று மனதினுள் அவனை திட்டவும் செய்தார்.
“சரி போதும் நான் இப்போ கிளம்புறேன், வேற ஏதாது வேணும்ன்னா கேக்க வர்றேன்.. போயிட்டு வர்றேன்.”
“சரி சார்..”
திரும்பியவர் ஏதோ யோசித்து நிற்கிறார். மீண்டும் அவன் அருகில் வந்து, “அப்பறம் இன்னொன்னு, அந்த பொண்ண வந்து நீ பீஸ் கட்ட சொல்லு.. அப்போ தான் நான் கேஸ் நடத்த முடியும்.”
நடராஜர் பேசி விட்டு கிளம்பிவிட்டார். கெளதம் பேசாமல் நின்றான். அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சௌந்தர்யாவை நாம் இப்படி கஷ்ட படுத்துறோம், அவள் பீஸ் கட்ட என்ன செய்வாள், எங்கு கடன் வாங்கி எவ்ளோ கஷ்ட படுவாளோ என்று எண்ணி வருத்த பட்டான். பின் வக்கீல் சொன்னதை நினைத்து பார்த்தான். ‘சைமன் எப்போ அங்கு வந்திருப்பான், இல்ல ஒரு வேல அவர் சொல்லுற மாதிரி யாருக்காது பயந்து பண்ணுறானா..? ஒண்ணுமே புரியல... எல்லாம் நல்லதுக்கு தான் நடக்கும்... கடவுள் இருப்பார் நமக்கு... அது போதும்.’ மனதினுள் தனக்கு தானே சமாதனம் செய்து கொண்டான்.
வெளியே வந்த நடராஜர் நேராக சைமனை சந்திக்க செல்கிறார். அவனை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள முடிவு எடுக்கிறார். சைமன் வீட்டிற்கு அருகில் சென்றவர் அவன் வீட்டை விட்டு அப்போது தான் வெளியேறுவதை பார்க்கிறார். சென்று அவனிடம் விசாரிக்க வேகமாக நடக்க, அதற்குள் சைமன் சென்று விட்டான். வயதான நடராஜரால் அவனது வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. முச்சு வாங்க ஒரு இடத்தில் நின்று, யோசித்தார். சைமன் நாம் கேட்கும் கேள்விக்கு பதில் தருவானா, இல்லை மறைத்து பேசுவானா என்ற சந்தேகம் எழுந்தது. பின் அங்கு இருக்கும் மற்றவர்களிடம் விசாரித்து பார்க்கலாம் என்று எண்ணி, மெதுவாக நடந்து அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.
அந்த வீட்டின் கதவை தட்டுகிறார். கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கவில்லை. பின் எதிர் புறம் இருக்கும் வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறார். கதவு திறக்க படுகிறது. உள்ளிருந்து ஒரு பெண் வருகிறார். அந்த பெண் நடராஜரை யார் என்று கேக்க, அவர் தன்னை பற்றி கூறி, பின் சைமனை பற்றி விசாரிக்கிறார். அந்த பெண் எனக்கு எதுவும் தெரியாது, நான் அவர்களுடன் பேசுவது இல்லை, நீங்கள் வேறு யார் கிட்டவாது சென்று விசாரிங்க என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். பின் வேறு ஒரு வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார். அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூற, அவரது இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்று நினைத்து கொண்டு கிளம்பி விட்டார். ‘இன்னைக்கு நாளே வேஸ்ட்’ என்று தனக்குள்ளே கூறி கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இரண்டு நாள் கழிந்தது. நடராஜர் சுந்தரியிடமும் சௌந்தர்யாவை பீஸ் வந்து கட்ட சொல்லி ஏற்கனவே அனுப்பியிருந்தார். எப்படி பீஸ் கட்டுவது என்று குழம்பி கொண்டிருந்தாள் அவள். கெளதமை இரண்டு நாளாக வேலை அதிகமாக இருந்தால் வந்து பார்க்கவில்லை என்றும் வருத்த பட்டு கொண்டிருந்தாள். இன்று கெளதமை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஸ்டேஷன் வருகிறாள். அவள் ஸ்டேஷன் வரும் போது, இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை. கான்ஸ்டபில் முத்து மற்றும் ஒரு கான்ஸ்டபில் இருக்கின்றனர்.
கெளதம் சௌந்தர்யாவை பார்த்ததும் சந்தோசம் அடைந்தான். அவனுக்கு இருக்கும் ஒரு ஆறுதல் அவள் மட்டும் தான். அவளிடம் வக்கீல் நடராஜர் கூறியதை கூறுகிறான். சௌந்தர்யாவும் நடராஜர் சுந்தரியிடமும் பீஸ் கட்ட சொல்லி அனுப்பியதை கூறுகிறாள். இருவரும் பேசாமல் சிறிது நேரம் யோசனையில் அமைதியாக இருக்கின்றனர். பின் கெளதம்
“நீ எப்படி பீஸ் கட்ட போற..?!” என்று மெதுவாக சோகத்தோடு கேட்கிறான்.
“அத தான் யோசிச்சுட்டு இருக்கேன். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க.” என்று அவனை சமாதன படுத்த கூறுகிறாள், ஆனால் அவளது முகமே அவளது நிலைமையை காட்டி கொடுத்தது. அவள் பணத்திற்காக அலைவது, வேலைகள் அதிகமாக செய்வது என்று சோர்ந்து போய், கண்கள் சிவந்து சரியாக தூக்கமில்லாமல் இருப்பது தெரிந்தது. அவளது சௌந்தர்யமே காணாமல் போய் இருந்தது. கெளதமிற்கு சௌந்தர்யாவின் நிலை மனசில் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வக்கீல் பீஸ் அதிகமாக இருக்கு, அதை கட்ட அவள் வேலை அதிகமாக செய்து கஷ்ட படுகிறாள் என்பது புரிந்தது.
“நீ ரொம்பல்லாம் கஷ்டபடாத, எனக்கு தலை எழுத்து எப்டி இருக்கோ அப்டியே நடக்கட்டும், நீ விட்டுரு..,” என்று முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு வருத்த பட்டு பேசினான்.
“இங்க பாருங்க...” என்று அவனை கூர்ந்து பார்த்தால்
அவன் பார்க்கவும், “நான் எந்த கஷ்டமும் படல, நீங்க என்ன நினைச்சு இப்டி வருத்த படாதீங்க...”
“இருந்தாலும் என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்..?!” என்று அவன் வருத்த பட்டு பேச,
“உங்களுக்காக கஷ்ட படுறதுல நான் ரொம்ப சந்தோஷ படுறேன், உங்கள போல ஒருத்தர் கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சுருக்கனும். நீங்க எப்டி பட்ட நல்லவர்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்கள நான் வாழ்கையில துணையா அடைய போறேன்னு நினைச்சாலே எனக்குள்ள ஏற்படுற சந்தோசத்துக்கு அளவே இல்ல.”
“நீ என்னதான் சொன்னாலும் நான் உனக்கு சந்தோசத்த கொடுக்கல, நான் அதுக்கு பதிலா கஷ்டத்த தான் கொடுத்துருக்கேன். என்ன கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே இப்டி கஷ்ட படுறியே நீ.. எனக்கு அது தான் கஷ்டமா இருக்கு... நான் இதுக்கு எல்லாம் என்ன கைமாறு பண்ணுறதோ... ”
கான்ஸ்டபில் முத்து போன் பேசி முடித்து விட்டு உள்ளே செல்கிறார். ஏதோ யோசனையோடு இருந்தார். பின் மெதுவாக எழுந்து, சுற்றி சுற்றி பார்த்து கொண்டே, கையில் கம்பை எடுத்து கொண்டு கெளதமை நோக்கி செல்கிறார். அவன் அசதியில் கண்களை மூடி சுவற்றில் சாய்ந்திருந்தான். சாப்பிடாமல் இருந்ததால் பசி மயக்கம் கண்களை திறக்க முடியாமல் அவனை தூக்கத்திற்கு தள்ளியிருந்தது. கெளதமை நோக்கி கான்ஸ்டபில் வந்தார். அவன் அசதியில் இருந்ததால் கான்ஸ்டபில் வருவது தெரிய வில்லை. முத்து கெளதம் தோளை தொட சென்றார், அதற்குள் டெலிபோன் ஒலித்தது. முத்து திரும்பி பார்த்தார். கெளதம் அப்போதும் கண் திறக்க வில்லை. கான்ஸ்டபில் சென்று கால் அட்டென்ட் செய்கிறார்.
“ஹலோ...”
எதிர்முனையில் இன்ஸ்பெக்டர் பேசுகிறார், “முத்து நான் இன்ஸ்பெக்டர்... நீங்க இப்போ கலெக்டர் ஆபீஸ்க்கு வாங்க...”
“சார், இங்க ஸ்டேஷன்ல யாராது இருக்கணும்ல...”
“எனக்கு தெரியும். நான் கான்ஸ்டபில் ரகு அனுப்பியிருக்கேன், அவன் வரவும் நீங்க இங்க வந்துருங்க...”
“சார்.. அது வந்து...”
“அதெல்லாம் அப்பறம் பாத்துக்கலாம், நீங்க சீக்கிரம் வாங்க...”
இன்ஸ்பெக்டர் உடனே கால் கட் செய்து விட்டார். எரிச்சலுடன் திரும்பினார் முத்து. ‘ரகு வர்றதுக்குள்ள நம்ம போய் பண்ணிடலாம்’ என்று மனதினுள் நினைத்து கொண்டு கெளதம் நோக்கி சென்றார் முத்து. உள்ளே சென்று கெளதமை தட்டி எழுப்பினார். அவன் கண் விளித்து பார்க்கவும்,
“எழுந்திரு... உன் கிட்ட விசாரணை பண்ணனும்..”
எழுந்திருக்க முடியாமல் தட்டு தடு மாறி எழுந்தான், “ம்ம்ம்.. கேளுங்க சார்... என்ன..?”
அதற்குள் ஸ்டேஷனுள் நுழைந்த கான்ஸ்டபில் ரகு, இவர்கள் இருக்கும் செல்லுக்குள் வருகிறார். அவனை பார்த்ததும் முத்து திரும்பி பார்த்தார். உள்ளுக்குள் எரிச்சலடைந்தார். பின் கெளதமை பார்த்து,
“உன்ன அப்பறம் வந்து விசாரிக்கிறேன்.” என்று கூறி விட்டு வெளியே சென்றார்.
“சார் என்னாச்சு..? அவன் என்ன பண்ணான்..?” என்று ரகு கேக்க,
முத்து பதில் எதுவும் பேசாமல் அவரது இடத்திருக்கு சென்றார். அவரது தொப்பியையும், செல் போனையும் எடுத்து கொண்டு திரும்பினார். பின் ரகுவை பார்த்து,
“கவனமா பாத்துக்கோ..”
“ம்ம்ம்.. ஓகே சார்.” என்று ரகு பதிலளிக்கவும், முத்து வெளியேறி சென்றுவிட்டார்.
...
இரண்டு நாள் கழிந்தது. அன்று காலை வக்கீல் நடராஜர் கெளதமை பார்க்க வருகிறார். சௌந்தர்யா உடன் வரவில்லை. ஸ்டேஷன் வந்து இன்ஸ்பெக்டரிடம் பேசி விட்டு, கெளதமை பார்க்க வருகிறார். நேற்றே சௌந்தர்யா வக்கீல் வருவார் என்று கூறி இருந்ததால், வக்கீலை எதிர் பார்த்து கொண்டிருந்த கெளதம் அவரை பார்த்து எதிர் பார்ப்புடன், எழுந்து வந்து நின்றான். அவனுக்கு அருகில் வந்த நடராஜர்,
“உன் கிட்ட நான் ஒரு முக்கியமான விஷயம் கேக்கணும் அதான் வந்தேன். நான் வர போறது உனக்கு ஏற்கனவே தெரியுமா..?!”
“ஆமாம் சார்... சௌந்தர்யா சொன்னா. என்ன கேக்கணும் சார்... சொல்லுங்க.”
“அது வந்து... நீ நிஜமாவே கொலை பண்ணலைல..?” என்று தலையை சாய்த்து கண்களை சுருக்கி சந்தேகத்துடன் கேட்டார்.
“ஏன் சார், எப்போ பாரு இப்டியே கேக்குறீங்க..?”
“நீ சொல்லுப்பா..” என்று பிடிவாதமாக அவரது கேள்வியிலே இருந்தார்.
“இல்ல” என்று கூறி குனிந்து கொண்டான்.
“ம்ம்ம்... அது உண்மையா இருந்தா ஓகே தான். நீ அன்னைக்கு என்ன நடந்ததுன்னு தெளிவா சொன்னா நல்லது.”
“சார்.. முருகன் வந்து என்கிட்டே வருத்த பட்டு பேசினான். அப்பறம் போய்ட்டான். நான் அவன சமாதன படுத்த பின்னாடியே போனேன். அவன் ரோட கடந்து போய்ட்டான். நானும் போனேன். ஆனா அவன அங்க காணோம். திடீர்ன்னு ஏதோ சத்தம் கேட்டது. நான் போய் பார்த்தேன். ரோட்டுல யாரோ கிடந்தாங்க. நான் ஒருவேள முருகனோ அப்டின்னு நினைச்சு பயந்து வேகமா போய் பக்கத்துல உக்காந்து பார்த்தேன். ஆனா அது முகம் சிதைந்து போய் இருந்துச்சு. எனக்கு யாருன்னு தெரியல, ஒன்னும் புரியவும் இல்ல, நான் திரும்பி வந்துட்டேன். அவ்ளோ தான் சார் நடந்துச்சு.”
“ம்ம்ம்.... ஓகே, இப்போ புரியுது. இது போதும் நான் பாத்துக்கிறேன்.”
“சார்.. நான் அன்னைக்கு கொலை எதுவும் பண்ணல.”
கெளதம் சொன்னதை கேட்காமல் அவர் மேலும் கேள்வியை கேட்டார்.“ம்ம்ம்... அப்பறமா இன்னொன்னு கேக்கணும்... நீ அன்னைக்கு சைமன பாத்தியா..?”
“அது...” புருவங்கள் சுருங்கி பின் விரிந்து அவன் யோசிப்பதை காட்டியது. “இல்லையே சார்..”
“நீ நல்ல யோசிச்சு சொல்லு.”
“ம்ம்ம்..?!” மறுபடியும் யோசிக்கிறான். “பாத்த மாதிரி ஞாபகம் இல்ல சார்..”
“ஓகே... சைமன பத்தி நீ என்ன நினைக்கிற..?” கெளதம் புரியாமல் விழிக்க, “அது வந்து, அவன் உண்மைய தான் சொல்லுறானா.. இல்ல யாருக்கும் உதவி பண்ணுறானா?”
“சார்.. அவன் ரொம்ப நல்லவன்.”
“நல்லவன் எல்லாம் நல்லவனாவே இருக்க மாட்டான்பா எல்லா நேரத்துலையும்..”
“அப்டி பேசாதீங்க சார்.. அவன் நிஜமாவே எந்த தப்புக்கும் துணை போக மாட்டான்.”
“அது சரி, ஒரு வேல அவன் வேற யாருக்காது பயந்து இப்டி கூட பண்ணுறானோ என்னவோ..? நீ என்ன நினைக்கிற..? உனக்கு யார் மீதாது சந்தேகம் இருக்கா..?”
“சார்.. எனக்கு அத பத்தி எதுவும் தெரியல.. நீங்க சொன்ன மாதிரி சைமன் பயந்து இப்டி பண்ணுறானானு தெரியல..”
“உனக்கு எதிரி யாராது இருக்காங்களா?”
“இல்லையே சார்... எனக்கு எல்லாம் யார் எதிரியா இருக்க போறாங்க..?!”
“அப்போ முருகனுக்கு எதிரி யாரும் இருக்காங்களா..?”
“எனக்கு தெரிஞ்சு யாரும் இல்ல சார்..”
எரிச்சல் பட்டு கொண்டே, ‘ம்ம்... எத கேட்டாலும் தெரியாது.. எதுவும் புரியாது, இந்த மாதிரி ஏமாளியா இருந்தா யாரா இருந்தாலும் ஏமாத்து வாங்க... என்ன பண்ண, இவனுக்கு எல்லாம் நாம வாதாட வேண்டியதா இருக்கு.’ என்று மனதினுள் அவனை திட்டவும் செய்தார்.
“சரி போதும் நான் இப்போ கிளம்புறேன், வேற ஏதாது வேணும்ன்னா கேக்க வர்றேன்.. போயிட்டு வர்றேன்.”
“சரி சார்..”
திரும்பியவர் ஏதோ யோசித்து நிற்கிறார். மீண்டும் அவன் அருகில் வந்து, “அப்பறம் இன்னொன்னு, அந்த பொண்ண வந்து நீ பீஸ் கட்ட சொல்லு.. அப்போ தான் நான் கேஸ் நடத்த முடியும்.”
நடராஜர் பேசி விட்டு கிளம்பிவிட்டார். கெளதம் பேசாமல் நின்றான். அவனுக்கு கஷ்டமாக இருந்தது. சௌந்தர்யாவை நாம் இப்படி கஷ்ட படுத்துறோம், அவள் பீஸ் கட்ட என்ன செய்வாள், எங்கு கடன் வாங்கி எவ்ளோ கஷ்ட படுவாளோ என்று எண்ணி வருத்த பட்டான். பின் வக்கீல் சொன்னதை நினைத்து பார்த்தான். ‘சைமன் எப்போ அங்கு வந்திருப்பான், இல்ல ஒரு வேல அவர் சொல்லுற மாதிரி யாருக்காது பயந்து பண்ணுறானா..? ஒண்ணுமே புரியல... எல்லாம் நல்லதுக்கு தான் நடக்கும்... கடவுள் இருப்பார் நமக்கு... அது போதும்.’ மனதினுள் தனக்கு தானே சமாதனம் செய்து கொண்டான்.
வெளியே வந்த நடராஜர் நேராக சைமனை சந்திக்க செல்கிறார். அவனை பற்றி விசாரித்து தெரிந்து கொள்ள முடிவு எடுக்கிறார். சைமன் வீட்டிற்கு அருகில் சென்றவர் அவன் வீட்டை விட்டு அப்போது தான் வெளியேறுவதை பார்க்கிறார். சென்று அவனிடம் விசாரிக்க வேகமாக நடக்க, அதற்குள் சைமன் சென்று விட்டான். வயதான நடராஜரால் அவனது வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. முச்சு வாங்க ஒரு இடத்தில் நின்று, யோசித்தார். சைமன் நாம் கேட்கும் கேள்விக்கு பதில் தருவானா, இல்லை மறைத்து பேசுவானா என்ற சந்தேகம் எழுந்தது. பின் அங்கு இருக்கும் மற்றவர்களிடம் விசாரித்து பார்க்கலாம் என்று எண்ணி, மெதுவாக நடந்து அவனது வீட்டிற்கு அருகில் இருக்கும் வீட்டிற்கு செல்கிறார்.
அந்த வீட்டின் கதவை தட்டுகிறார். கதவு வெகு நேரம் ஆகியும் திறக்கவில்லை. பின் எதிர் புறம் இருக்கும் வீட்டிற்கு சென்று கதவை தட்டுகிறார். கதவு திறக்க படுகிறது. உள்ளிருந்து ஒரு பெண் வருகிறார். அந்த பெண் நடராஜரை யார் என்று கேக்க, அவர் தன்னை பற்றி கூறி, பின் சைமனை பற்றி விசாரிக்கிறார். அந்த பெண் எனக்கு எதுவும் தெரியாது, நான் அவர்களுடன் பேசுவது இல்லை, நீங்கள் வேறு யார் கிட்டவாது சென்று விசாரிங்க என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். பின் வேறு ஒரு வீட்டிற்கு சென்று விசாரிக்கிறார். அவர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூற, அவரது இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது என்று நினைத்து கொண்டு கிளம்பி விட்டார். ‘இன்னைக்கு நாளே வேஸ்ட்’ என்று தனக்குள்ளே கூறி கொண்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இரண்டு நாள் கழிந்தது. நடராஜர் சுந்தரியிடமும் சௌந்தர்யாவை பீஸ் வந்து கட்ட சொல்லி ஏற்கனவே அனுப்பியிருந்தார். எப்படி பீஸ் கட்டுவது என்று குழம்பி கொண்டிருந்தாள் அவள். கெளதமை இரண்டு நாளாக வேலை அதிகமாக இருந்தால் வந்து பார்க்கவில்லை என்றும் வருத்த பட்டு கொண்டிருந்தாள். இன்று கெளதமை சென்று பார்த்தே ஆக வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஸ்டேஷன் வருகிறாள். அவள் ஸ்டேஷன் வரும் போது, இன்ஸ்பெக்டர் அங்கு இல்லை. கான்ஸ்டபில் முத்து மற்றும் ஒரு கான்ஸ்டபில் இருக்கின்றனர்.
கெளதம் சௌந்தர்யாவை பார்த்ததும் சந்தோசம் அடைந்தான். அவனுக்கு இருக்கும் ஒரு ஆறுதல் அவள் மட்டும் தான். அவளிடம் வக்கீல் நடராஜர் கூறியதை கூறுகிறான். சௌந்தர்யாவும் நடராஜர் சுந்தரியிடமும் பீஸ் கட்ட சொல்லி அனுப்பியதை கூறுகிறாள். இருவரும் பேசாமல் சிறிது நேரம் யோசனையில் அமைதியாக இருக்கின்றனர். பின் கெளதம்
“நீ எப்படி பீஸ் கட்ட போற..?!” என்று மெதுவாக சோகத்தோடு கேட்கிறான்.
“அத தான் யோசிச்சுட்டு இருக்கேன். நீங்க எதுக்கும் கவலை படாதீங்க.” என்று அவனை சமாதன படுத்த கூறுகிறாள், ஆனால் அவளது முகமே அவளது நிலைமையை காட்டி கொடுத்தது. அவள் பணத்திற்காக அலைவது, வேலைகள் அதிகமாக செய்வது என்று சோர்ந்து போய், கண்கள் சிவந்து சரியாக தூக்கமில்லாமல் இருப்பது தெரிந்தது. அவளது சௌந்தர்யமே காணாமல் போய் இருந்தது. கெளதமிற்கு சௌந்தர்யாவின் நிலை மனசில் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. வக்கீல் பீஸ் அதிகமாக இருக்கு, அதை கட்ட அவள் வேலை அதிகமாக செய்து கஷ்ட படுகிறாள் என்பது புரிந்தது.
“நீ ரொம்பல்லாம் கஷ்டபடாத, எனக்கு தலை எழுத்து எப்டி இருக்கோ அப்டியே நடக்கட்டும், நீ விட்டுரு..,” என்று முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டு வருத்த பட்டு பேசினான்.
“இங்க பாருங்க...” என்று அவனை கூர்ந்து பார்த்தால்
அவன் பார்க்கவும், “நான் எந்த கஷ்டமும் படல, நீங்க என்ன நினைச்சு இப்டி வருத்த படாதீங்க...”
“இருந்தாலும் என்னால உனக்கு எவ்ளோ கஷ்டம்..?!” என்று அவன் வருத்த பட்டு பேச,
“உங்களுக்காக கஷ்ட படுறதுல நான் ரொம்ப சந்தோஷ படுறேன், உங்கள போல ஒருத்தர் கிடைச்சதுக்கு நான் ரொம்ப குடுத்து வச்சுருக்கனும். நீங்க எப்டி பட்ட நல்லவர்ன்னு எனக்கு நல்லாவே தெரியும். உங்கள நான் வாழ்கையில துணையா அடைய போறேன்னு நினைச்சாலே எனக்குள்ள ஏற்படுற சந்தோசத்துக்கு அளவே இல்ல.”
“நீ என்னதான் சொன்னாலும் நான் உனக்கு சந்தோசத்த கொடுக்கல, நான் அதுக்கு பதிலா கஷ்டத்த தான் கொடுத்துருக்கேன். என்ன கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடியே இப்டி கஷ்ட படுறியே நீ.. எனக்கு அது தான் கஷ்டமா இருக்கு... நான் இதுக்கு எல்லாம் என்ன கைமாறு பண்ணுறதோ... ”