ஹாய் பிரெண்ட்ஸ்
கடைசி அத்தியாயத்தோட வந்திட்டேன்...நீங்க கொடுத்த ஊக்கத்தால தான் கதையை முடிக்க முடிஞ்சது...முதலில் இருந்து லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்....
மார்கஸ் சர்ச் மேரெஜ் என்றதில் மார்கஸ்ஸுக்கு தான் திருமணம் என்று முடிவே கட்டி விட்டாள் சைதன்யா.இவ்வளவு சீக்கிரம் தன்னை மறந்து யாரையோ திருமணம் செய்வதா என கோபம் தலைக்கேறியது அவளுக்கு.இனி அவனே எல்லாம் என நாடு சொந்த பந்தம் எல்லாவற்றையும் துறந்து வந்திருக்கும் தன்னிலை என்ன?அவன் செய்வது நியாயமே மில்லை...மேரி கூடவா இது தவறென்று கூறவில்லை?!
கணநேரத்தில் உலகையே சுற்றி வரும் மனம் எதையெதையோ எண்ணி தவித்தது.படபடக்கும் இதயத்தை முயன்று அடக்கியவள் எதிரிலிருந்தவரிடம்,
"சர்ச்....சர்ச் நேம்...அண்ட் அட்ரஸ்..."
அது இவளுக்கு எதற்கு என்பது போல் அவளை மேலும் கீழும் பார்த்தார் அவர்.
"ப்ளீஸ் கிவ் மீ த அட்ரஸ்...இட்ஸ் அர்ஜண்ட்"என்று பொறுமை இழந்த குரலில் கூவினாள்.
தான் கூறுவது அவளுக்கு புரியாது என்பதால் கேப் ஒன்றை புக் செய்தார்.பத்து நிமிடங்களில் கார் வந்து ரோட்டில் நின்றது.அதில் செல்லுமாறு சைகை செய்தார்.அவருக்கு மனதார நன்றி கூறியவள் அதில் ஏறி விரைந்து செல்லுமாறு பணிந்தாள்.
செயிண்ட் ஜார்ஜ் சர்ச் உள்ளே அமருமிடம் உறவினர் நண்பர்களால் நிரம்பி இருந்தது.மணமகளின் தந்தை அவளின் கையோடு தன் கையை கோர்த்தவாறு அழைத்து வந்து மணமகனின் அருகில் நிறுத்தினார்.
மணமக்கள் இருவரும் பிரமாணம் செய்து மோத்திரம் அணிவிக்கப் போகும் சமயத்தில் சர்ச் வாயிற்கதவிலிருந்து,
"ஸ்டாப் த மேரெஜ்!இந்த மேரெஜ் நடக்கக் கூடாது...மார்கஸ் இஸ் மை மேன்...ஹி இஸ் மை லவ்...ஸ்டாப் நவ்"என்று உரத்த குரலில் எதையும் கவனியாமல் கத்தியவாறு நிமிர்ந்து பார்த்த சைதன்யா அதிர்ந்தாள்.ஏனெனில் அங்கே நின்றிருந்த மணமகன் மார்கஸ் அல்ல வேறு யாரோ ஒருவன்.
தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என சுற்றிலும் பார்வையை அவள் ஓட்டிய போது மணமகனின் சில அடி பின்னே இவளையே கண்கொட்டாமல் பார்த்தவாறு மார்கஸ் நிற்பதைக் கண்டாள்.இவளின் கலாட்டாவால் அதிர்ந்து நின்றிருந்தனர் அனைவரும்.ஓரிருவர் யார் என்ன என்று விசாரிக்க முன்னேறு முன் எதிரில் வந்து நின்ற மார்கஸ்,
"சாரி லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்!திஸிஸ் ஜஸ்ட் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்..."என்றவன் சைதன்யாவின் அருகே வந்து அவள் தோளில் கை வைத்து தன் அருகே இருத்தவன்,
"திஸ் இஸ் சைதன்யா...மை லவ்...மை ஃபியான்ஸி...ஏதோ சின்ன ப்ராப்ளம்...யூ காய்ஸ் கேரி ஆன்...நோ இஷுஸ்.."என்று அவர்களை சமாதானம் செய்து திருமணம் தொடர்ந்து நடக்க வழி செய்தவன் சைதன்யாவின் தோளை விடாமல் அவளை அழைத்துச் சென்று வெளியே நின்றிருந்த காரில் அமர்த்தினான்.ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவன் காரை புயல் வேகத்தில் செலுத்தினான்.
அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தாள் அவள்.அவனுடையது சர்ச்சில் கண்ட மென்மையான முகமாக இல்லை.அந்த கடினமான முகத்திலிருந்து அவளால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் லேப்டாப்பை தட்டியவாறு அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.கண்கள் திரையைப் பார்த்திருந்தாலும் மனம் வேறெங்கோ சஞ்சரிப்பது அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.கண்ணாடி முன் தலைவாரியபடி நின்றிருந்த விக்னேஷ் அதை விடுத்து அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
"அச்சும்மா!சியரப்டா...நீ இப்படி அப்செட்டா இருக்கறத என்னால பாக்க முடியல...வா எங்காவது சைட் சீயிங் போலாம்..."
"ப்ச்...எங்க போகவும் பிடிக்கல...விக்கி!அவ ஏன் அப்படி பண்ணா?பாவம் மார்க் அண்ணா...சே...லவ்வாம் மூணு வருஷமா!எனக்கு தெரியாம இவளுக்கு லவ்வா...நாங்க எல்கேஜி படிக்கறதுலேந்து பெஸ்ட் பிரெண்ட்ஸ் தெரியுமா? எப்பவும் ஒண்ணாவே இருப்போம்....எங்கிட்டையே மறைச்சிட்டா..."
"அச்சு!எவ்ளோ பிரெண்ட்ஸ்னாலும் அவங்கவங்களுக்கு பர்சனல் விஷயங்கள் இருக்கும்... எல்லாத்தையும் ஷேர் பண்ணும்னு அவசியமில்ல..."
"ஆனாலும் அவ...."பேசியபடியே முகநூலை அழுத்தியிருந்தவள் அதில் தோழி ஷிவானியின் சுயவிவரத்தை அழுத்தியிருந்தாள். அதில் தெரிந்த அன்றைக்கு அவள் பதிவிட்ட கவர் போட்டோவில் அவளோடு அவள் பெற்றோர் மற்றும் ஒரு இளைஞன் நின்றிருக்க கண்டாள்.சிறியளவிலான படமானாலும் அந்த இளைஞனை எங்கையோ பார்த்தது போல் தோன்றவும் படத்தை பெரிதுப்படுத்தினாள்.அந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன் சைதன்யா அறிமுகப்படுத்திய விஷ்வா.அதே புகைப்படத்தின் கீழே லைக்கில் இருந்த விஷ்வாவின் சுயவிவரத்தை அழுத்தி படபடப்பாக காத்திருந்தாள்.
அவனின் ஆல்பத்தின் முதல் படமே அவனோடு அவன் மனைவி இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தையோடு இருக்கும் படம்.அதை கண்டு அதிர்ந்து விட்டாள் அர்ச்சனா.அவளின் அதிர்ந்த முகத்தைக் கண்ட விக்கி,
"அச்சு!வாட் ஹேப்பண்ட்...ஏன் இவ்ளோ ஷாக் ஆயிட்டே?"
வாய் பேசாமல் லேப்டாப்பை அவன் புறம் திருப்பிக் காட்டினாள்.அவனும் அவள் அளவே அதிர்ந்து விட்டான்.
"அச்சு!இது...."
"விஷ்வா...ஒன் மினிட் விக்கி.."என்று யார் யாருக்கோ போன் செய்து எப்படியோ ஷிவானியின் நம்பரை வாங்கினாள்.கைகள் நடுங்க அவள் நம்பரை அமுக்கிக் காத்திருந்தாள்.நான்கைந்து ரிங் போனது மேல் ஷிவானியின் "ஹலோ...!"என்றது.
"ஹாய் ஷிவா!நா அர்ச்சனா... ஞாபகம் இருக்கா...ஸ்கூல் பிரெண்ட்..."
"ஹே அச்சு!ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்...!எப்படி இருக்கே?பாத்து ரொம்ப நாள் ஆச்சு..."
"ஐம் ஃபைன்...எனக்கு மேரெஜ் ஆயிடுச்சு...இப்ப ஹஸ்பெண்ட கூட சிட்னிக்கு ஹனிமூன் வந்திருக்கேன்...ஷிவா எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான இன்ஃபோ வேணும்...ப்ளீஸ் சொல்றியா?"
"வாவ் கன்கிராஜுலேஷன்ஸ் டியர்... அப்புறம் உனக்கு என்ன விஷயம் தெரியனும்... எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்"
"விஷ்வாங்கறது யாரு? உனக்கு ரிலேட்டிவா?"
"ஓ விஷ்வா...அவன் என் பெரியப்பா பையன்...சென்னைல தான் இருந்தான்...இப்ப அமெரிக்காவுல இருக்கான்...நம்ம சைத்துவும் அவனும் ஒரே பேட்மிண்டன் டீமாச்சே... உனக்கு தெரியாதா?"என்று இவள் கேளாத கேள்விக்கும் விடையளித்துவிட்டாள்.
அர்ச்சனாவிற்கு சைதன்யா தன்னோடு இருப்பதை விட்டு பேட்மிண்டன் கற்க போவது பிடிக்காமல் இருந்ததால் அங்கே யார் யார் அவளோடு விளையாடுகிறார்கள் என்று இவள் கேட்டதே இல்லை.அதனாலயே விஷ்வா அவள் டீமில் இருந்தது இவளுக்கு தெரியவில்லை.
"ஹோ... எனக்கு தெரிலப்பா...இட்ஸ் ஓகே...உன் ப்ரோஃபைல்ல விஷ்வா போட்டோ பாத்தேன் அதான் யாரா இருக்கும்னு கேட்டேன்...நா அப்புறம் கால் பண்றேன்...பை..."
"பை...ஹாப்பி ஹனிமூன்"என்று போனை வைத்து விட்டாள்.
இதுவரை அவள் ஸ்பீக்கரில் பேசியதால் விக்னேஷும் அனைத்தையும் கேட்டிருந்தான்.
"அச்சு...!"
"பொய்... அத்தனையும் பொய்...விஷ்வா மேல லவ் மூணு வருஷமா...எல்லா பொய்!அமெரிக்காவுல மனைவி குழந்தையோட இருக்கறவன இவ இந்தியாவுல இருந்துகிட்டு லவ் பண்ணாளாமா?அவள அவள...கைல கெடைச்சா...அடி பின்னிருவேன்... எதுக்கு இந்த பொய்...?"
"வைட் ய மினிட் அச்சு...! அன்னிக்கு நாம விருந்துக்கு போன போது அவளையும் மார்கஸையும் வச்சு எவ்ளோ கேலி பண்ணோம்..எவ்ளோ வெட்கப்பட்டா... பிடிக்காம இருந்தா அப்படி ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டா...ஐ திங்க் அவர் அப்பாதான் இதுல என்னமோ பண்ணிட்டார்...நா கேட்டதுக்கு ரெண்டு நாள் டயம் கேட்டார்...ரெண்டு நாள்ல சைதன்யா இப்படி ஒரு ட்ராமா பண்றான்னா...அவர் ஏதோ சொல்லி அவள பயமுறுத்தியிருக்கனும்..."
"ஆமா நீங்க சொல்றது தான் கரெக்ட்...விக்கி!மார்க் அண்ணாக்கு உடனே போன் பண்ணுங்க... அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்"
ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் லைன் கிடைக்க வில்லை.
கடைசி அத்தியாயத்தோட வந்திட்டேன்...நீங்க கொடுத்த ஊக்கத்தால தான் கதையை முடிக்க முடிஞ்சது...முதலில் இருந்து லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ் கொடுத்து வரும் அனைத்து வாசகர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்....
மார்கஸ் சர்ச் மேரெஜ் என்றதில் மார்கஸ்ஸுக்கு தான் திருமணம் என்று முடிவே கட்டி விட்டாள் சைதன்யா.இவ்வளவு சீக்கிரம் தன்னை மறந்து யாரையோ திருமணம் செய்வதா என கோபம் தலைக்கேறியது அவளுக்கு.இனி அவனே எல்லாம் என நாடு சொந்த பந்தம் எல்லாவற்றையும் துறந்து வந்திருக்கும் தன்னிலை என்ன?அவன் செய்வது நியாயமே மில்லை...மேரி கூடவா இது தவறென்று கூறவில்லை?!
கணநேரத்தில் உலகையே சுற்றி வரும் மனம் எதையெதையோ எண்ணி தவித்தது.படபடக்கும் இதயத்தை முயன்று அடக்கியவள் எதிரிலிருந்தவரிடம்,
"சர்ச்....சர்ச் நேம்...அண்ட் அட்ரஸ்..."
அது இவளுக்கு எதற்கு என்பது போல் அவளை மேலும் கீழும் பார்த்தார் அவர்.
"ப்ளீஸ் கிவ் மீ த அட்ரஸ்...இட்ஸ் அர்ஜண்ட்"என்று பொறுமை இழந்த குரலில் கூவினாள்.
தான் கூறுவது அவளுக்கு புரியாது என்பதால் கேப் ஒன்றை புக் செய்தார்.பத்து நிமிடங்களில் கார் வந்து ரோட்டில் நின்றது.அதில் செல்லுமாறு சைகை செய்தார்.அவருக்கு மனதார நன்றி கூறியவள் அதில் ஏறி விரைந்து செல்லுமாறு பணிந்தாள்.
செயிண்ட் ஜார்ஜ் சர்ச் உள்ளே அமருமிடம் உறவினர் நண்பர்களால் நிரம்பி இருந்தது.மணமகளின் தந்தை அவளின் கையோடு தன் கையை கோர்த்தவாறு அழைத்து வந்து மணமகனின் அருகில் நிறுத்தினார்.
மணமக்கள் இருவரும் பிரமாணம் செய்து மோத்திரம் அணிவிக்கப் போகும் சமயத்தில் சர்ச் வாயிற்கதவிலிருந்து,
"ஸ்டாப் த மேரெஜ்!இந்த மேரெஜ் நடக்கக் கூடாது...மார்கஸ் இஸ் மை மேன்...ஹி இஸ் மை லவ்...ஸ்டாப் நவ்"என்று உரத்த குரலில் எதையும் கவனியாமல் கத்தியவாறு நிமிர்ந்து பார்த்த சைதன்யா அதிர்ந்தாள்.ஏனெனில் அங்கே நின்றிருந்த மணமகன் மார்கஸ் அல்ல வேறு யாரோ ஒருவன்.
தவறான இடத்திற்கு வந்துவிட்டோமோ என சுற்றிலும் பார்வையை அவள் ஓட்டிய போது மணமகனின் சில அடி பின்னே இவளையே கண்கொட்டாமல் பார்த்தவாறு மார்கஸ் நிற்பதைக் கண்டாள்.இவளின் கலாட்டாவால் அதிர்ந்து நின்றிருந்தனர் அனைவரும்.ஓரிருவர் யார் என்ன என்று விசாரிக்க முன்னேறு முன் எதிரில் வந்து நின்ற மார்கஸ்,
"சாரி லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்!திஸிஸ் ஜஸ்ட் மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்..."என்றவன் சைதன்யாவின் அருகே வந்து அவள் தோளில் கை வைத்து தன் அருகே இருத்தவன்,
"திஸ் இஸ் சைதன்யா...மை லவ்...மை ஃபியான்ஸி...ஏதோ சின்ன ப்ராப்ளம்...யூ காய்ஸ் கேரி ஆன்...நோ இஷுஸ்.."என்று அவர்களை சமாதானம் செய்து திருமணம் தொடர்ந்து நடக்க வழி செய்தவன் சைதன்யாவின் தோளை விடாமல் அவளை அழைத்துச் சென்று வெளியே நின்றிருந்த காரில் அமர்த்தினான்.ட்ரைவர் சீட்டில் அமர்ந்தவன் காரை புயல் வேகத்தில் செலுத்தினான்.
அவன் முகத்தைப் பார்க்கவே பயந்தாள் அவள்.அவனுடையது சர்ச்சில் கண்ட மென்மையான முகமாக இல்லை.அந்த கடினமான முகத்திலிருந்து அவளால் எதையும் ஊகிக்க முடியவில்லை.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறை ஒன்றில் லேப்டாப்பை தட்டியவாறு அமர்ந்திருந்தாள் அர்ச்சனா.கண்கள் திரையைப் பார்த்திருந்தாலும் மனம் வேறெங்கோ சஞ்சரிப்பது அவள் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது.கண்ணாடி முன் தலைவாரியபடி நின்றிருந்த விக்னேஷ் அதை விடுத்து அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
"அச்சும்மா!சியரப்டா...நீ இப்படி அப்செட்டா இருக்கறத என்னால பாக்க முடியல...வா எங்காவது சைட் சீயிங் போலாம்..."
"ப்ச்...எங்க போகவும் பிடிக்கல...விக்கி!அவ ஏன் அப்படி பண்ணா?பாவம் மார்க் அண்ணா...சே...லவ்வாம் மூணு வருஷமா!எனக்கு தெரியாம இவளுக்கு லவ்வா...நாங்க எல்கேஜி படிக்கறதுலேந்து பெஸ்ட் பிரெண்ட்ஸ் தெரியுமா? எப்பவும் ஒண்ணாவே இருப்போம்....எங்கிட்டையே மறைச்சிட்டா..."
"அச்சு!எவ்ளோ பிரெண்ட்ஸ்னாலும் அவங்கவங்களுக்கு பர்சனல் விஷயங்கள் இருக்கும்... எல்லாத்தையும் ஷேர் பண்ணும்னு அவசியமில்ல..."
"ஆனாலும் அவ...."பேசியபடியே முகநூலை அழுத்தியிருந்தவள் அதில் தோழி ஷிவானியின் சுயவிவரத்தை அழுத்தியிருந்தாள். அதில் தெரிந்த அன்றைக்கு அவள் பதிவிட்ட கவர் போட்டோவில் அவளோடு அவள் பெற்றோர் மற்றும் ஒரு இளைஞன் நின்றிருக்க கண்டாள்.சிறியளவிலான படமானாலும் அந்த இளைஞனை எங்கையோ பார்த்தது போல் தோன்றவும் படத்தை பெரிதுப்படுத்தினாள்.அந்த இளைஞன் இரண்டு நாட்களுக்கு முன் சைதன்யா அறிமுகப்படுத்திய விஷ்வா.அதே புகைப்படத்தின் கீழே லைக்கில் இருந்த விஷ்வாவின் சுயவிவரத்தை அழுத்தி படபடப்பாக காத்திருந்தாள்.
அவனின் ஆல்பத்தின் முதல் படமே அவனோடு அவன் மனைவி இரண்டு வயது மதிக்கத்தக்க குழந்தையோடு இருக்கும் படம்.அதை கண்டு அதிர்ந்து விட்டாள் அர்ச்சனா.அவளின் அதிர்ந்த முகத்தைக் கண்ட விக்கி,
"அச்சு!வாட் ஹேப்பண்ட்...ஏன் இவ்ளோ ஷாக் ஆயிட்டே?"
வாய் பேசாமல் லேப்டாப்பை அவன் புறம் திருப்பிக் காட்டினாள்.அவனும் அவள் அளவே அதிர்ந்து விட்டான்.
"அச்சு!இது...."
"விஷ்வா...ஒன் மினிட் விக்கி.."என்று யார் யாருக்கோ போன் செய்து எப்படியோ ஷிவானியின் நம்பரை வாங்கினாள்.கைகள் நடுங்க அவள் நம்பரை அமுக்கிக் காத்திருந்தாள்.நான்கைந்து ரிங் போனது மேல் ஷிவானியின் "ஹலோ...!"என்றது.
"ஹாய் ஷிவா!நா அர்ச்சனா... ஞாபகம் இருக்கா...ஸ்கூல் பிரெண்ட்..."
"ஹே அச்சு!ப்ளஸண்ட் சர்ப்ரைஸ்...!எப்படி இருக்கே?பாத்து ரொம்ப நாள் ஆச்சு..."
"ஐம் ஃபைன்...எனக்கு மேரெஜ் ஆயிடுச்சு...இப்ப ஹஸ்பெண்ட கூட சிட்னிக்கு ஹனிமூன் வந்திருக்கேன்...ஷிவா எனக்கு உன்கிட்ட ஒரு முக்கியமான இன்ஃபோ வேணும்...ப்ளீஸ் சொல்றியா?"
"வாவ் கன்கிராஜுலேஷன்ஸ் டியர்... அப்புறம் உனக்கு என்ன விஷயம் தெரியனும்... எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்"
"விஷ்வாங்கறது யாரு? உனக்கு ரிலேட்டிவா?"
"ஓ விஷ்வா...அவன் என் பெரியப்பா பையன்...சென்னைல தான் இருந்தான்...இப்ப அமெரிக்காவுல இருக்கான்...நம்ம சைத்துவும் அவனும் ஒரே பேட்மிண்டன் டீமாச்சே... உனக்கு தெரியாதா?"என்று இவள் கேளாத கேள்விக்கும் விடையளித்துவிட்டாள்.
அர்ச்சனாவிற்கு சைதன்யா தன்னோடு இருப்பதை விட்டு பேட்மிண்டன் கற்க போவது பிடிக்காமல் இருந்ததால் அங்கே யார் யார் அவளோடு விளையாடுகிறார்கள் என்று இவள் கேட்டதே இல்லை.அதனாலயே விஷ்வா அவள் டீமில் இருந்தது இவளுக்கு தெரியவில்லை.
"ஹோ... எனக்கு தெரிலப்பா...இட்ஸ் ஓகே...உன் ப்ரோஃபைல்ல விஷ்வா போட்டோ பாத்தேன் அதான் யாரா இருக்கும்னு கேட்டேன்...நா அப்புறம் கால் பண்றேன்...பை..."
"பை...ஹாப்பி ஹனிமூன்"என்று போனை வைத்து விட்டாள்.
இதுவரை அவள் ஸ்பீக்கரில் பேசியதால் விக்னேஷும் அனைத்தையும் கேட்டிருந்தான்.
"அச்சு...!"
"பொய்... அத்தனையும் பொய்...விஷ்வா மேல லவ் மூணு வருஷமா...எல்லா பொய்!அமெரிக்காவுல மனைவி குழந்தையோட இருக்கறவன இவ இந்தியாவுல இருந்துகிட்டு லவ் பண்ணாளாமா?அவள அவள...கைல கெடைச்சா...அடி பின்னிருவேன்... எதுக்கு இந்த பொய்...?"
"வைட் ய மினிட் அச்சு...! அன்னிக்கு நாம விருந்துக்கு போன போது அவளையும் மார்கஸையும் வச்சு எவ்ளோ கேலி பண்ணோம்..எவ்ளோ வெட்கப்பட்டா... பிடிக்காம இருந்தா அப்படி ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டா...ஐ திங்க் அவர் அப்பாதான் இதுல என்னமோ பண்ணிட்டார்...நா கேட்டதுக்கு ரெண்டு நாள் டயம் கேட்டார்...ரெண்டு நாள்ல சைதன்யா இப்படி ஒரு ட்ராமா பண்றான்னா...அவர் ஏதோ சொல்லி அவள பயமுறுத்தியிருக்கனும்..."
"ஆமா நீங்க சொல்றது தான் கரெக்ட்...விக்கி!மார்க் அண்ணாக்கு உடனே போன் பண்ணுங்க... அவர்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடலாம்"
ஆனால் அவர்கள் எவ்வளவு முயற்சித்தும் லைன் கிடைக்க வில்லை.