ஹாய் தோழர் தோழிகளே. நான் வந்துட்டேன். வகை தொகை இல்லாமல் எல்லா தேர்வுக்கும் கன்னாபின்னான்னு பதிவு பண்ணி வச்சா இப்படித்தான் காவ்யா பதிவு தராம கண்ணாமூச்சி விளையாடுவா... அதனால நீங்களும் லைக் அண்ட் கமெண்ட் கூட கண்ணாமூச்சி விளையாடாம அதை போட்ருங்க ப்ளீஸ்...
மழை - 19
மதியின் சில நொடி நேர வார்த்தைகளில் அரசனின் இதயம் பல நொடிகள் செயலிழந்து பின் அதற்கும்
சேர்த்து வைத்துப் பன்மடங்கு வேகமாய்த் துடித்தது.
தன் முன்னால் தனது முகத்தையே பதிலுக்காக பார்த்திருப்பவளிடம் திரும்பியவன் அந்த இருளிலும்
அவளின் இருவிழிகள் காட்டிய கரைக்காணாக் காதலைக் கண்டுக்கொண்டான்.
இதை இப்போழுதே பேசி முடித்து விடவேண்டும் என்று தோன்ற முகத்தில் தவிப்போடு கூடவே
மறுப்பும் சேர, “மதி... இது” என்று ஆரம்பித்தான்.
அவனின் முகபாவனையிலே தன் காதலுக்கு எதிராய் சொல்லப் போகிறான் என்று
கண்டுக்கொண்டாள். கூறிய அடுத்தக் கணமே தன் காதல் நிராகரிப்படுவதை அவள் விரும்பாதலால்,
“மாமா... ப்ளீஸ். நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். தயவுசெய்து எதாவது பேசி அதைக் கெடுக்காதீங்க. எனக்குத் தெரியும் உங்களுக்கு நான் என்றில்லை யாரா இருந்தாலும் மாட்டேன்னுதான் சொல்வீங்க. அதனால தான் காதலை சொல்லாம கல்யாணத்தைக் கேட்குறேன்.
இதுக்கான பதிலைக் கூட நான் தாத்தா வீட்டிற்கு போயிட்டு சென்னை கிளம்பும் முன்னாடி கேட்டுக்குறேன். இப்போ வண்டி எடுக்குறீங்களா?” என்று படபடத்து அமர்ந்துக்கொண்டாள்.
அரசனுக்கோ இயல்பாகவே இருக்க முடியவில்லை. மனதெல்லாம் ஏதேதோ எண்ணிச் சஞ்சலம் கொண்டது. ‘சிறுபெண் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுப்பதா? வீட்டினரிடம் சொல்லிவிடலாமா?
வீட்டிற்குத் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?’ என்பது போல்.
திடீரென்று மதி எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருப்பதால் இதிலும் விளையாடுகிறாளோ
என்றொரு எண்ணம். விளையாட்டாக இருக்க வேண்டும் என்று ஒரு மனம் விரும்ப மற்றொரு மனம்
அவளின் வார்த்தைகளில் இருந்த உண்மையையும் கண்களில் தெரிந்த காதலையும் எடுத்துக்
கூறியது.
மௌனமாகவே அவரவர் சிந்தனையில் வீடு வந்து சேர வண்டியில் இருந்து இறங்கிய மதியிடம், “மதி எப்போ என்றாலும்...” என் பதில் ஒன்றுதான் என்று கூறுவதற்குள் அரசனின் வாயைச் சட்டென்று
வலதுகையால் மூடியிருந்தாள் மதி. அவனின் மீசை உள்ளங்கையைக் குத்தி குறுகுறுப்பூட்ட மற்றொரு கையால் சுட்டுவிரலை உதட்டில் வைத்து அமைதியாக இருக்குமாறு கூறி பின் பத்திரம்
காட்டிச் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் மாடுகளின் திருநாள் என்பதால் அனைத்து மாடுகளையும் அலங்கரித்து பூசை செய்தபின் அவை மகிழ்ச்சியாய் இருக்க சுதந்திரமாக அவிழ்த்துவிட, எல்லா மாடுகளை விடக் கன்றே அதீத உற்சாகம் அடைந்து துள்ளி குதித்தோடியது. கட்டவிழ்ந்த கன்றின் உற்சாகம் என்ற வழக்குச்சொல் வந்தது இதனால் தானோ?
அடுத்து அழகேசன் தன் தாய் வீட்டிற்கு புறப்பட கூடவே கீதாவும் மதியும் வீட்டினரிடம் கூறிக்கொண்டு புறப்பட்டனர். அரசன் இரவு பார்த்ததோடு சரி அதன் பின் மதி இருக்கும் பக்கமே வரவில்லை.
இப்போது அழகேசன் இல்லாததால் கோவில் விழா மேற்பார்வை பார்க்க தாத்தா செல்ல, கூடவே பேரனும் சென்று வேண்டிய உதவி செய்தான். பின் மாலையில் வீடு வர, வெகு வருடங்கள் கழித்து மீனாம்பிகை பாட்டி சமையலறையில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
இரவானதும் அவர் பரிமாறவர அனைவரும் அதற்கு விடாமல் அமர வைத்துக்கொண்டனர். தாத்தா அவரின் மனையாளை இவ்வளவு உற்சாமாகப் பார்க்காததால் அதில் லயித்திருக்க, ரெங்கநாயகியும்
மீனாம்பிகையும் பேசிக்கொண்டிருந்ததால் ரூபிணியின் கவனமும் அவர்களிடம் இருக்க... அரசனின்
யோசனை படிந்த முகம் யாரின் கவனத்தையும் கவராமல் போனதில் வியப்பில்லையே.
மறுநாள் திருவிழா முடிய அடுத்த நாளே கலியபெருமாள் தன் தாயையும் மகளையும் அழைத்துச் செல்ல வந்திருந்தார். மதியின் வீட்டினரும் இவர்களை வழியனுப்ப அரண்மனைக்கு
வந்துக்கொண்டிருக்க,
அறையில் இருந்த தங்கள் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர் ரூபிணியும் ரெங்கநாயகியும். தாத்தாவிடம் சிறிது நேரம் பேசி இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார் கலியபெருமாள்.
வந்ததும், “அம்மா என்னம்மா ரூபிணிக்கு அரசனைப் பிடிச்சிருக்கு நேரம் பார்த்து கல்யாணப்பேச்சு எடுங்கன்னு சொல்லிட்டுத்தான போனேன். அதைப்பத்தி பேசவே இல்லையா நீங்க?” என்று தாயைக்
கேள்வி கேட்க,
“அதுசரி... நீதான் அப்படி சொல்ற உன் பொண்ணு என்னடானா நான் பேசிப் பார்த்து சொல்றேன்
அதுவரை பொறுமையா இரு பாட்டின்னு வந்த அன்னைக்கே என் வாயைக் கட்டிப் போட்டுட்டா.
சம்மந்தம் பேசவா அரசனைப் பிடிச்சிருக்கான்னு நேத்தும் கேட்குறேன். அரசனைப் பிடிச்சிருக்கு. ஆனா அவங்க எனக்கு செட் ஆக மாட்டாங்க... ஒழுங்கா கிளம்பலாம்ன்னு சொல்லிட்டா. உனக்கே தெரியும்
உன் பொண்ண பத்தி இதுல நான் என்னத்தப் பண்றது?” என்று அவர் பக்க நியாயத்தை
எடுத்துரைத்தார்.
“ரூபிம்மா ஏண்டா? யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா?” என்று மகளிடம் பொறுமையாக
விசாரித்தார். ஏனெனில் அவருக்குத் தெரியுமே மகள் ஆர்வமாக இருந்தது.
“இல்ல டாட் அதெல்லாம் இல்ல. நான் பார்த்த வரைக்கும் ஒரு வித்தியாசமான ஆளா இருக்குறதால ஒரு ஆர்வம் வந்துருச்சிப்போல. உங்களுக்கொன்னு தெரியுமா? அவர் படிக்கவே இல்லைப்பா. மே பீ அவர் வளர்ந்த இடம் வசதி இல்லாத இடமா இருக்கலாம் அது கூட பரவால்ல இப்போத்தான் வசதி இருக்கே. பட் அவங்க இங்கேயே மரம், காடுன்னு வளர்த்துட்டு வாழ விருப்பப்படுறாங்க. ஹொவ் கேன் ஐ லிவ் பா?
அதான் வேண்டாம் என்று தோணுது. எனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்ன்னு ஒரு பிம்பம் இருக்கு. அதுக்கு இவங்க ஒத்துவரலை அவ்ளோதான். ஓகே நாங்க ரெடி கிளம்பலாமா டாட்” என்று ரூபிணி கூறி முடிக்க,
அவளது கூற்று தந்தை பாட்டியின் காதில் மட்டுமின்றி வேறொரு காதிற்கும் சென்றதை அவள் அறியவில்லை.
அறையில் இருந்து வெளிவந்து நடுக்கூடத்தில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க சற்று
நேரத்திற்க்கெல்லாம் அழகேசன் தன் மனைவி மகளுடன் வந்து சேர்ந்தார். இந்த இரு நாள்களின் தாய் வீட்டு வாசம் அவரைச் சற்று இளமையாக காட்டிக்கொண்டிருந்தது.
அரசன் இப்போது தோட்டத்தில் இருந்து வர, ரெங்கநாயகி அவனை அணைத்துக்கொண்டு, “ஒரு நாள் வீட்டுக்கு வா ராசா... உன் அம்மா வாழ்ந்த வீடு” என்று கண்கலங்கினார். ஒரே பேரனல்லவா? அதுவும் மகள் வழிப்பேரன் பிரிய மனமின்றிதான் பிரிந்தார். அதன்பின் அனைவரிடமும் விடைப்பெற்றுச் செல்ல அவர்களின் கார் வந்தது போல் அவர்களை அழைத்தும் சென்றது.
அதைப்பார்த்த மதிக்கு மனதில் ஏற்பட்ட அலைப்புறுதலும் அவர்களோடே சென்றது போல் உள்ளம் பெரும் ஆசுவாசம் அடைந்தது. கூடவே அதை விடப் பெரிதான அரசனின் பதிலை எண்ணி அலைபாயத் தொடங்கி, ‘ஐயானரே நான் பொங்கல் வச்சதுக்கு பதிலா மாமா கிட்ட இருந்து நல்ல பதிலை வரவைத்துவிடு’ என்று கடவுளிடம் கைம்மாறு உதவி ஒன்றை அவசரமாக வேண்டியது.
அவளின் எண்ணவோட்டத்தை, “மதி சக்திவேல் பத்திரம் உன்கிட்டத்தான இருக்கு போய் எடுத்துட்டு வா” என்ற அழகேசனின் குரல் தடை செய்தது.
“இதோ எடுத்துட்டு வரேன்ப்பா...” என்று மேலே சென்று அதை எடுத்து வர, “மாமா இதுக்கு மேல பொறுமையா இருக்க வேண்டாம். இன்னைக்கே ஒரு முடிவு கட்டலாம்ன்னு இருக்கேன் அதுக்கு அப்புறம் தான் சென்னைக்குப் போகணும். நீங்க என்ன சொல்றீங்க" என்று தன் மாமனாரிடம் கேட்டார்.
“என்னப்பா பண்ண போறீங்க?” என்று தாத்தா கேட்க நினைத்த கேள்வியை மதியே கேட்கவும்,
“கோவில்ல பாத்தியே என் ஃப்ரண்ட் விக்னேஷ். அவன் இப்போ சேலம் கமிஷனரா இருக்கான். இன்னும் ஆறு மாசத்துல பணிஓய்வு பெற போறானாம். அதுனால அவங்க பூர்விக வீட்டை புதுப்பிக்க
உதவி கேட்டான். அப்போ தான் எனக்கு தோணிச்சு ஏன் இவன் கிட்ட உதவி கேட்ககூடாது. நம்ம புகார் கோர்ட்க்கு போயிருசின்னா போதும். அதுக்கு அப்புறம் நான் பார்த்துப்பேன்” என்று
கூறிக்கொண்டிருக்கும் போதே மதி குறுக்கிட்டாள்.
“அப்பா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க ஃப்ரண்டே ஆனாலும் நல்லா விசாரிச்சி
சொல்லுங்கப்பா. இத்தனை வருஷம் கழித்தும் அவரு பழைய மாதிரியே நல்லவங்களா
இருப்பாங்கன்னு நம்ப வேண்டாம்.”
“ஹாஹா... நான் அதை விசாரிக்காம இருப்பேனா? அதெல்லாம் தொழில்ல நேர்மையாதான்
இருந்திருக்கான். அவனோட ட்ரான்ஸ்பர் எண்ணிக்கை சொல்லும் எவ்ளோ நல்லவன்னு” என்று அழகேசன் புகழ மதி ஒரு வழியாய் ஒத்துக்கொண்டாள்.
மழை - 19
மதியின் சில நொடி நேர வார்த்தைகளில் அரசனின் இதயம் பல நொடிகள் செயலிழந்து பின் அதற்கும்
சேர்த்து வைத்துப் பன்மடங்கு வேகமாய்த் துடித்தது.
தன் முன்னால் தனது முகத்தையே பதிலுக்காக பார்த்திருப்பவளிடம் திரும்பியவன் அந்த இருளிலும்
அவளின் இருவிழிகள் காட்டிய கரைக்காணாக் காதலைக் கண்டுக்கொண்டான்.
இதை இப்போழுதே பேசி முடித்து விடவேண்டும் என்று தோன்ற முகத்தில் தவிப்போடு கூடவே
மறுப்பும் சேர, “மதி... இது” என்று ஆரம்பித்தான்.
அவனின் முகபாவனையிலே தன் காதலுக்கு எதிராய் சொல்லப் போகிறான் என்று
கண்டுக்கொண்டாள். கூறிய அடுத்தக் கணமே தன் காதல் நிராகரிப்படுவதை அவள் விரும்பாதலால்,
“மாமா... ப்ளீஸ். நான் இப்போ ரொம்ப சந்தோசமா இருக்கேன். தயவுசெய்து எதாவது பேசி அதைக் கெடுக்காதீங்க. எனக்குத் தெரியும் உங்களுக்கு நான் என்றில்லை யாரா இருந்தாலும் மாட்டேன்னுதான் சொல்வீங்க. அதனால தான் காதலை சொல்லாம கல்யாணத்தைக் கேட்குறேன்.
இதுக்கான பதிலைக் கூட நான் தாத்தா வீட்டிற்கு போயிட்டு சென்னை கிளம்பும் முன்னாடி கேட்டுக்குறேன். இப்போ வண்டி எடுக்குறீங்களா?” என்று படபடத்து அமர்ந்துக்கொண்டாள்.
அரசனுக்கோ இயல்பாகவே இருக்க முடியவில்லை. மனதெல்லாம் ஏதேதோ எண்ணிச் சஞ்சலம் கொண்டது. ‘சிறுபெண் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுப்பதா? வீட்டினரிடம் சொல்லிவிடலாமா?
வீட்டிற்குத் தெரிந்தால் எப்படி எடுத்துக்கொள்வார்கள்?’ என்பது போல்.
திடீரென்று மதி எப்போதும் விளையாட்டுத்தனமாகவே இருப்பதால் இதிலும் விளையாடுகிறாளோ
என்றொரு எண்ணம். விளையாட்டாக இருக்க வேண்டும் என்று ஒரு மனம் விரும்ப மற்றொரு மனம்
அவளின் வார்த்தைகளில் இருந்த உண்மையையும் கண்களில் தெரிந்த காதலையும் எடுத்துக்
கூறியது.
மௌனமாகவே அவரவர் சிந்தனையில் வீடு வந்து சேர வண்டியில் இருந்து இறங்கிய மதியிடம், “மதி எப்போ என்றாலும்...” என் பதில் ஒன்றுதான் என்று கூறுவதற்குள் அரசனின் வாயைச் சட்டென்று
வலதுகையால் மூடியிருந்தாள் மதி. அவனின் மீசை உள்ளங்கையைக் குத்தி குறுகுறுப்பூட்ட மற்றொரு கையால் சுட்டுவிரலை உதட்டில் வைத்து அமைதியாக இருக்குமாறு கூறி பின் பத்திரம்
காட்டிச் சென்றுவிட்டாள்.
அடுத்த நாள் மாடுகளின் திருநாள் என்பதால் அனைத்து மாடுகளையும் அலங்கரித்து பூசை செய்தபின் அவை மகிழ்ச்சியாய் இருக்க சுதந்திரமாக அவிழ்த்துவிட, எல்லா மாடுகளை விடக் கன்றே அதீத உற்சாகம் அடைந்து துள்ளி குதித்தோடியது. கட்டவிழ்ந்த கன்றின் உற்சாகம் என்ற வழக்குச்சொல் வந்தது இதனால் தானோ?
அடுத்து அழகேசன் தன் தாய் வீட்டிற்கு புறப்பட கூடவே கீதாவும் மதியும் வீட்டினரிடம் கூறிக்கொண்டு புறப்பட்டனர். அரசன் இரவு பார்த்ததோடு சரி அதன் பின் மதி இருக்கும் பக்கமே வரவில்லை.
இப்போது அழகேசன் இல்லாததால் கோவில் விழா மேற்பார்வை பார்க்க தாத்தா செல்ல, கூடவே பேரனும் சென்று வேண்டிய உதவி செய்தான். பின் மாலையில் வீடு வர, வெகு வருடங்கள் கழித்து மீனாம்பிகை பாட்டி சமையலறையில் மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்தார்.
இரவானதும் அவர் பரிமாறவர அனைவரும் அதற்கு விடாமல் அமர வைத்துக்கொண்டனர். தாத்தா அவரின் மனையாளை இவ்வளவு உற்சாமாகப் பார்க்காததால் அதில் லயித்திருக்க, ரெங்கநாயகியும்
மீனாம்பிகையும் பேசிக்கொண்டிருந்ததால் ரூபிணியின் கவனமும் அவர்களிடம் இருக்க... அரசனின்
யோசனை படிந்த முகம் யாரின் கவனத்தையும் கவராமல் போனதில் வியப்பில்லையே.
மறுநாள் திருவிழா முடிய அடுத்த நாளே கலியபெருமாள் தன் தாயையும் மகளையும் அழைத்துச் செல்ல வந்திருந்தார். மதியின் வீட்டினரும் இவர்களை வழியனுப்ப அரண்மனைக்கு
வந்துக்கொண்டிருக்க,
அறையில் இருந்த தங்கள் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தனர் ரூபிணியும் ரெங்கநாயகியும். தாத்தாவிடம் சிறிது நேரம் பேசி இவர்கள் இருக்கும் அறைக்குள் நுழைந்தார் கலியபெருமாள்.
வந்ததும், “அம்மா என்னம்மா ரூபிணிக்கு அரசனைப் பிடிச்சிருக்கு நேரம் பார்த்து கல்யாணப்பேச்சு எடுங்கன்னு சொல்லிட்டுத்தான போனேன். அதைப்பத்தி பேசவே இல்லையா நீங்க?” என்று தாயைக்
கேள்வி கேட்க,
“அதுசரி... நீதான் அப்படி சொல்ற உன் பொண்ணு என்னடானா நான் பேசிப் பார்த்து சொல்றேன்
அதுவரை பொறுமையா இரு பாட்டின்னு வந்த அன்னைக்கே என் வாயைக் கட்டிப் போட்டுட்டா.
சம்மந்தம் பேசவா அரசனைப் பிடிச்சிருக்கான்னு நேத்தும் கேட்குறேன். அரசனைப் பிடிச்சிருக்கு. ஆனா அவங்க எனக்கு செட் ஆக மாட்டாங்க... ஒழுங்கா கிளம்பலாம்ன்னு சொல்லிட்டா. உனக்கே தெரியும்
உன் பொண்ண பத்தி இதுல நான் என்னத்தப் பண்றது?” என்று அவர் பக்க நியாயத்தை
எடுத்துரைத்தார்.
“ரூபிம்மா ஏண்டா? யாராவது ஏதாவது சொல்லிட்டாங்களா?” என்று மகளிடம் பொறுமையாக
விசாரித்தார். ஏனெனில் அவருக்குத் தெரியுமே மகள் ஆர்வமாக இருந்தது.
“இல்ல டாட் அதெல்லாம் இல்ல. நான் பார்த்த வரைக்கும் ஒரு வித்தியாசமான ஆளா இருக்குறதால ஒரு ஆர்வம் வந்துருச்சிப்போல. உங்களுக்கொன்னு தெரியுமா? அவர் படிக்கவே இல்லைப்பா. மே பீ அவர் வளர்ந்த இடம் வசதி இல்லாத இடமா இருக்கலாம் அது கூட பரவால்ல இப்போத்தான் வசதி இருக்கே. பட் அவங்க இங்கேயே மரம், காடுன்னு வளர்த்துட்டு வாழ விருப்பப்படுறாங்க. ஹொவ் கேன் ஐ லிவ் பா?
அதான் வேண்டாம் என்று தோணுது. எனக்கு வரப்போறவன் எப்படி இருக்கணும்ன்னு ஒரு பிம்பம் இருக்கு. அதுக்கு இவங்க ஒத்துவரலை அவ்ளோதான். ஓகே நாங்க ரெடி கிளம்பலாமா டாட்” என்று ரூபிணி கூறி முடிக்க,
அவளது கூற்று தந்தை பாட்டியின் காதில் மட்டுமின்றி வேறொரு காதிற்கும் சென்றதை அவள் அறியவில்லை.
அறையில் இருந்து வெளிவந்து நடுக்கூடத்தில் அமர்ந்து அனைவரும் பேசிக்கொண்டிருக்க சற்று
நேரத்திற்க்கெல்லாம் அழகேசன் தன் மனைவி மகளுடன் வந்து சேர்ந்தார். இந்த இரு நாள்களின் தாய் வீட்டு வாசம் அவரைச் சற்று இளமையாக காட்டிக்கொண்டிருந்தது.
அரசன் இப்போது தோட்டத்தில் இருந்து வர, ரெங்கநாயகி அவனை அணைத்துக்கொண்டு, “ஒரு நாள் வீட்டுக்கு வா ராசா... உன் அம்மா வாழ்ந்த வீடு” என்று கண்கலங்கினார். ஒரே பேரனல்லவா? அதுவும் மகள் வழிப்பேரன் பிரிய மனமின்றிதான் பிரிந்தார். அதன்பின் அனைவரிடமும் விடைப்பெற்றுச் செல்ல அவர்களின் கார் வந்தது போல் அவர்களை அழைத்தும் சென்றது.
அதைப்பார்த்த மதிக்கு மனதில் ஏற்பட்ட அலைப்புறுதலும் அவர்களோடே சென்றது போல் உள்ளம் பெரும் ஆசுவாசம் அடைந்தது. கூடவே அதை விடப் பெரிதான அரசனின் பதிலை எண்ணி அலைபாயத் தொடங்கி, ‘ஐயானரே நான் பொங்கல் வச்சதுக்கு பதிலா மாமா கிட்ட இருந்து நல்ல பதிலை வரவைத்துவிடு’ என்று கடவுளிடம் கைம்மாறு உதவி ஒன்றை அவசரமாக வேண்டியது.
அவளின் எண்ணவோட்டத்தை, “மதி சக்திவேல் பத்திரம் உன்கிட்டத்தான இருக்கு போய் எடுத்துட்டு வா” என்ற அழகேசனின் குரல் தடை செய்தது.
“இதோ எடுத்துட்டு வரேன்ப்பா...” என்று மேலே சென்று அதை எடுத்து வர, “மாமா இதுக்கு மேல பொறுமையா இருக்க வேண்டாம். இன்னைக்கே ஒரு முடிவு கட்டலாம்ன்னு இருக்கேன் அதுக்கு அப்புறம் தான் சென்னைக்குப் போகணும். நீங்க என்ன சொல்றீங்க" என்று தன் மாமனாரிடம் கேட்டார்.
“என்னப்பா பண்ண போறீங்க?” என்று தாத்தா கேட்க நினைத்த கேள்வியை மதியே கேட்கவும்,
“கோவில்ல பாத்தியே என் ஃப்ரண்ட் விக்னேஷ். அவன் இப்போ சேலம் கமிஷனரா இருக்கான். இன்னும் ஆறு மாசத்துல பணிஓய்வு பெற போறானாம். அதுனால அவங்க பூர்விக வீட்டை புதுப்பிக்க
உதவி கேட்டான். அப்போ தான் எனக்கு தோணிச்சு ஏன் இவன் கிட்ட உதவி கேட்ககூடாது. நம்ம புகார் கோர்ட்க்கு போயிருசின்னா போதும். அதுக்கு அப்புறம் நான் பார்த்துப்பேன்” என்று
கூறிக்கொண்டிருக்கும் போதே மதி குறுக்கிட்டாள்.
“அப்பா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க ஃப்ரண்டே ஆனாலும் நல்லா விசாரிச்சி
சொல்லுங்கப்பா. இத்தனை வருஷம் கழித்தும் அவரு பழைய மாதிரியே நல்லவங்களா
இருப்பாங்கன்னு நம்ப வேண்டாம்.”
“ஹாஹா... நான் அதை விசாரிக்காம இருப்பேனா? அதெல்லாம் தொழில்ல நேர்மையாதான்
இருந்திருக்கான். அவனோட ட்ரான்ஸ்பர் எண்ணிக்கை சொல்லும் எவ்ளோ நல்லவன்னு” என்று அழகேசன் புகழ மதி ஒரு வழியாய் ஒத்துக்கொண்டாள்.
Last edited: