Hai frnds... happy reading please share ur thoughts...
ஹாய் மக்களே. என்னோட கதையான மெல்ல திறந்தது மனது கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹீரோ ஹீரோயின் பத்தி என்ன சொல்ல. தினமும் நாம சந்திச்சு கடந்துபோற சாதாரண மனிதர்கள் தான்
அத்தியாயம் 1
கதையின் ஹீரோ பேரு தேவா எம்.காம் முடிச்சிட்டு பேங்க் வேலைக்கக குரூப் எக்ஸாம் எழுதறான்! ஐந்தரை அடி உயரம், அளவான உடம்பு, உதட்டை விடக் கண்கள் பேசும் முகம்.
உயிரே படத்துல வர ஷாருக்கான் மாதிரி கோரை முடி எந்த ஸ்டைல்ல வேணாலும் சீவிக்க முடியும். இதனாலயே தினம் ஒரு லுக்கில் தெரிவான். வயது 25. சுருக்கமா சொல்லனும்னா இந்தப் பையனை ஏன் லவ்வரா செலக்ட் பண்ணக்கூடாதுனு பொண்ணுங்கள யோசிக்க வைக்கற உருவம், முக்கியமா இவன் நடத்தை. ஆனா ஆளு படிப்புல சுமார்தான்!
தம்மு சரக்குனு எந்தப் பழக்கமும் ரெகுலரா கிடையாது. எப்பவாவது ஒரு பியர், அரைகுறையா குடிக்கத் தெரியாம குடிக்கற ஒரு சிகரெட். தேவா வீடு இருக்கிறது சென்னை ஐயப்பன் தாங்கல்!
தேவாவுக்குப் பெரியவள் ரேகா! வயது 27! படிச்சது பி.காம் ஹிஸ்ட்ரி! தானே பெரிய அறிவாளி எனக்கெதுக்குப் படிப்புனு பல அரியர் வைச்சி படிப்பை நிறுத்திட்டாங்க மேடம்!
ஒரு நாலஞ்சு வருசமா மேடம் பேஸ்புக், ட்விட்டர் வாட்ஸப்புலதான் வாழறாங்க. அதுவும் ஒரு பெண்ணியவாதியா. பெண்ணியம்னா என்னனு அம்மாக்கிட்ட பேசினிங்கனா உங்களுக்குத் தெரிஞ்ச பெண்ணியமும் மறந்து போயிரும்.
அம்மாவ ஆணாதிக்கத்தால சமையலடியில் போட்டுட்டாங்கனு பொங்குவாளே தவிர மறந்தும் சமையல் அறை பக்கம் போகமாட்டாள்! பேஸ்புக்ல பெண்ணியத்த அரைகுறையா தெரிஞ்சிக்கிட்டு அலப்பறை தர இரகம் இவள்!
கடைக்குட்டி பேரு உமா! பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படிக்கறா, அடுத்து எம்.எஸ்.ஸி, எம்.பில்., பி.எச்.டி பண்ணி கல்லூரி பேராசிரியையா போகனுங்கறது இவளோட இலட்சியம். சரியான பக்தி பழம் அம்மா மீனாட்சி மாதிரியே. இந்த மூனு பேரையும் பெத்த புண்ணியவதி பேரு மீனாட்சி. வீட்ல மீனாட்சி ஆட்சிதான்! ஆனா நல்லாட்சி!
அப்பா பேரு சந்திரசேகர் தாசில்தாரா இருக்கார். ரொம்பப் பழமை வாதி. வறட்டுக் கெளரவம் அதிகம். தான் 100% பர்பெக்கிட்டுங்கற எண்ணத்தால வந்தது. பணம் நகைனு பெருசா சேர்த்தி வைக்கமாட்டேன் படிக்கத்தான் வைப்பனு பிள்ளைங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச காலத்திலயே சொல்லியே வளர்த்தினார்.
வீட்டு ஹால்ல பெரிய சேகுவேரா படம் இருக்கும் ! இந்தப் படம்தான் வீட்டின் அடையாளம்! ஆனா இந்தப் படத்தை வைச்சது தேவா! வீடு சொந்த வீடுதான்.
மேற்கொண்டு ஹீரோ குடும்பத்த பத்தி சொல்ல ஒன்னுமில்ல. தேவாவோட பால்ய நண்பன் விக்கிய பத்தி சொல்லலாம் பள்ளியிலிருந்து காலேஜ்வரை இப்ப குரூப் எக்ஸாம் எழுதப்போற வரை இன்னமும் பிரியாம இருக்காங்க! தேவா வீட்டுல இவனும் ஒரு ஆள் அவங்க வீட்ல தேவாவும் ஒரு ஆள்!
அன்று ஞாயிற்றுக்கிழமை…..
நான்வெஜ்க்காக மிடில் கிளாஸ் ஒதுக்கி வைச்சிருக்க வார நாள்….
மீனாட்சி சமைக்கத் தயார் செய்துக்கொண்டிருக்க உமா மீனாட்சிக்கு வெங்காயம் உறிக்க உதவிக்கிட்டு இருந்தாள்…..
நைட் மூனு மணி வரைக்கும் பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ்அப்பில் பெண்ணியப் புரட்சி பண்ணிட்டு எட்டு மணிக்கு மேல எழுந்து டீ க்காகச் சமையலறை பக்கம் வந்தாள் ரேகா…..
"மீனு டீ குடு" என்றாள் ரேகா…அவ மீனாட்சியை அப்படிக் கூப்பிட்டுத்தான் பழக்கம்.
" பாத்திரத்துல இருக்கு சூடு பண்ணிக்கோ. எனக்கு இன்னைக்குக் கறி, மீன்னு நிறைய வேலை இருக்கு" என்றாள் மீனாட்சி….
சமையலைறையில் சம்மணம் போட்டு அமர்ந்தவள் "உமா குட்டி டீ சூடு பண்ணிக் குடேன்"னு கொஞ்சலா கேட்க, உமா சிரிச்சிக்கிட்டே டீ சூடு பண்ணித்தர,
"இப்படியே இவளுக்கு எல்லாரும் தொண்டு ஊழியம் செய்ங்க, இவ அந்தப் போன்லயே எந்நேரமும் கெடந்து வீணா போவட்டும். வயசு 27 ஆவுது ஒரு கல்யாணம்னு பேச்சை எடுக்க முடியல"ன மீனாட்சி ஆரம்பிக்க…. டீ ய எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தாள் ரேகா……
ஹால்ல உடீகார்ந்து நியூஸ் சேனல் பார்த்துக்கிட்டு இருந்த சந்திர சேகர் அவள் கண்ணை மட்டுமே பார்த்தார்…..
"ஹாய் பா குட்மார்னிங்"
"குட்மார்னிங் இருக்கட்டும் நேரத்துக்குத் தூங்கி பழகுமா, பாரு கண்ணெல்லாம் கருவளையம் விழுது"னு சந்திரசேகர் சொல்ல எதுவும் பேசாம டிவிய பார்த்துக்கிட்டு டீ ய குடிக்க ஆரம்பிச்சாள் ரேகா….
" இங்க பாரு ரேகா உன்னோட எல்லாத்தையும் வெளியில வைச்சுக்கோ. வீட்ல காட்டாத. நேரத்துக்குச் சோறு போடறது என் கடமை என் கெளரவம் ஸோ அதை நான் ஒழுங்கா செய்றன். ஒன்னு மேற்கொண்டு ஏதாவது கரஸ்ல படி இல்லனா கல்யாணத்த பண்ணு.
கண்ட கழிசடைங்கக்கூடலாம் ப்ரன்ட்ஷிப்னு பேஸ்புக்ல அலையாத, கடைசியா என் கெளரவத்துக்குக் கெட்ட பேர கொண்டு வந்துடாத. இதைப் பேசினா வீட்ல சண்டை வருதுனுதான் அமைதியா இருக்கன். உன் தங்கச்சி உமாவ பார்த்தாவது திருந்து!"னு பேசி முடிச்சிட்டு எழுந்து பெட்ரூமுக்கு போயிட்டார்!
தெருமுனையில இருக்க டீக்கடை அடர்ந்த மர நிழல்ல இருக்கும். அங்க ஸ்பெசலா தெருவாசிகளே ஏழு சிமெண்ட் பென்ஞ்ச்களைக் கட்டி வைச்சிருந்தாங்க. வாக்கிங் போய்ட்டு சிலபல பேர் அந்தச் சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து கதை பேசிட்டு போவாங்க!
தேவாவும் விக்கியும் சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து எக்ஸாம் பத்தி பேசிக்கிட்டு இருக்கப்ப புல்லட்ட ஓட்டிக்கிட்டு அவங்கள ஓரக் கண்ணால பார்த்தப்படியே கடந்து போனாள் கோதை நாச்சியார் என்கிற நாச்சி!
ஹாய் மக்களே. என்னோட கதையான மெல்ல திறந்தது மனது கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹீரோ ஹீரோயின் பத்தி என்ன சொல்ல. தினமும் நாம சந்திச்சு கடந்துபோற சாதாரண மனிதர்கள் தான்
அத்தியாயம் 1
கதையின் ஹீரோ பேரு தேவா எம்.காம் முடிச்சிட்டு பேங்க் வேலைக்கக குரூப் எக்ஸாம் எழுதறான்! ஐந்தரை அடி உயரம், அளவான உடம்பு, உதட்டை விடக் கண்கள் பேசும் முகம்.
உயிரே படத்துல வர ஷாருக்கான் மாதிரி கோரை முடி எந்த ஸ்டைல்ல வேணாலும் சீவிக்க முடியும். இதனாலயே தினம் ஒரு லுக்கில் தெரிவான். வயது 25. சுருக்கமா சொல்லனும்னா இந்தப் பையனை ஏன் லவ்வரா செலக்ட் பண்ணக்கூடாதுனு பொண்ணுங்கள யோசிக்க வைக்கற உருவம், முக்கியமா இவன் நடத்தை. ஆனா ஆளு படிப்புல சுமார்தான்!
தம்மு சரக்குனு எந்தப் பழக்கமும் ரெகுலரா கிடையாது. எப்பவாவது ஒரு பியர், அரைகுறையா குடிக்கத் தெரியாம குடிக்கற ஒரு சிகரெட். தேவா வீடு இருக்கிறது சென்னை ஐயப்பன் தாங்கல்!
தேவாவுக்குப் பெரியவள் ரேகா! வயது 27! படிச்சது பி.காம் ஹிஸ்ட்ரி! தானே பெரிய அறிவாளி எனக்கெதுக்குப் படிப்புனு பல அரியர் வைச்சி படிப்பை நிறுத்திட்டாங்க மேடம்!
ஒரு நாலஞ்சு வருசமா மேடம் பேஸ்புக், ட்விட்டர் வாட்ஸப்புலதான் வாழறாங்க. அதுவும் ஒரு பெண்ணியவாதியா. பெண்ணியம்னா என்னனு அம்மாக்கிட்ட பேசினிங்கனா உங்களுக்குத் தெரிஞ்ச பெண்ணியமும் மறந்து போயிரும்.
அம்மாவ ஆணாதிக்கத்தால சமையலடியில் போட்டுட்டாங்கனு பொங்குவாளே தவிர மறந்தும் சமையல் அறை பக்கம் போகமாட்டாள்! பேஸ்புக்ல பெண்ணியத்த அரைகுறையா தெரிஞ்சிக்கிட்டு அலப்பறை தர இரகம் இவள்!
கடைக்குட்டி பேரு உமா! பி.எஸ்.சி கம்யூட்டர் சயின்ஸ் படிக்கறா, அடுத்து எம்.எஸ்.ஸி, எம்.பில்., பி.எச்.டி பண்ணி கல்லூரி பேராசிரியையா போகனுங்கறது இவளோட இலட்சியம். சரியான பக்தி பழம் அம்மா மீனாட்சி மாதிரியே. இந்த மூனு பேரையும் பெத்த புண்ணியவதி பேரு மீனாட்சி. வீட்ல மீனாட்சி ஆட்சிதான்! ஆனா நல்லாட்சி!
அப்பா பேரு சந்திரசேகர் தாசில்தாரா இருக்கார். ரொம்பப் பழமை வாதி. வறட்டுக் கெளரவம் அதிகம். தான் 100% பர்பெக்கிட்டுங்கற எண்ணத்தால வந்தது. பணம் நகைனு பெருசா சேர்த்தி வைக்கமாட்டேன் படிக்கத்தான் வைப்பனு பிள்ளைங்களுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச காலத்திலயே சொல்லியே வளர்த்தினார்.
வீட்டு ஹால்ல பெரிய சேகுவேரா படம் இருக்கும் ! இந்தப் படம்தான் வீட்டின் அடையாளம்! ஆனா இந்தப் படத்தை வைச்சது தேவா! வீடு சொந்த வீடுதான்.
மேற்கொண்டு ஹீரோ குடும்பத்த பத்தி சொல்ல ஒன்னுமில்ல. தேவாவோட பால்ய நண்பன் விக்கிய பத்தி சொல்லலாம் பள்ளியிலிருந்து காலேஜ்வரை இப்ப குரூப் எக்ஸாம் எழுதப்போற வரை இன்னமும் பிரியாம இருக்காங்க! தேவா வீட்டுல இவனும் ஒரு ஆள் அவங்க வீட்ல தேவாவும் ஒரு ஆள்!
அன்று ஞாயிற்றுக்கிழமை…..
நான்வெஜ்க்காக மிடில் கிளாஸ் ஒதுக்கி வைச்சிருக்க வார நாள்….
மீனாட்சி சமைக்கத் தயார் செய்துக்கொண்டிருக்க உமா மீனாட்சிக்கு வெங்காயம் உறிக்க உதவிக்கிட்டு இருந்தாள்…..
நைட் மூனு மணி வரைக்கும் பேஸ்புக் ட்விட்டர் வாட்ஸ்அப்பில் பெண்ணியப் புரட்சி பண்ணிட்டு எட்டு மணிக்கு மேல எழுந்து டீ க்காகச் சமையலறை பக்கம் வந்தாள் ரேகா…..
"மீனு டீ குடு" என்றாள் ரேகா…அவ மீனாட்சியை அப்படிக் கூப்பிட்டுத்தான் பழக்கம்.
" பாத்திரத்துல இருக்கு சூடு பண்ணிக்கோ. எனக்கு இன்னைக்குக் கறி, மீன்னு நிறைய வேலை இருக்கு" என்றாள் மீனாட்சி….
சமையலைறையில் சம்மணம் போட்டு அமர்ந்தவள் "உமா குட்டி டீ சூடு பண்ணிக் குடேன்"னு கொஞ்சலா கேட்க, உமா சிரிச்சிக்கிட்டே டீ சூடு பண்ணித்தர,
"இப்படியே இவளுக்கு எல்லாரும் தொண்டு ஊழியம் செய்ங்க, இவ அந்தப் போன்லயே எந்நேரமும் கெடந்து வீணா போவட்டும். வயசு 27 ஆவுது ஒரு கல்யாணம்னு பேச்சை எடுக்க முடியல"ன மீனாட்சி ஆரம்பிக்க…. டீ ய எடுத்துக்கிட்டு ஹாலுக்கு வந்தாள் ரேகா……
ஹால்ல உடீகார்ந்து நியூஸ் சேனல் பார்த்துக்கிட்டு இருந்த சந்திர சேகர் அவள் கண்ணை மட்டுமே பார்த்தார்…..
"ஹாய் பா குட்மார்னிங்"
"குட்மார்னிங் இருக்கட்டும் நேரத்துக்குத் தூங்கி பழகுமா, பாரு கண்ணெல்லாம் கருவளையம் விழுது"னு சந்திரசேகர் சொல்ல எதுவும் பேசாம டிவிய பார்த்துக்கிட்டு டீ ய குடிக்க ஆரம்பிச்சாள் ரேகா….
" இங்க பாரு ரேகா உன்னோட எல்லாத்தையும் வெளியில வைச்சுக்கோ. வீட்ல காட்டாத. நேரத்துக்குச் சோறு போடறது என் கடமை என் கெளரவம் ஸோ அதை நான் ஒழுங்கா செய்றன். ஒன்னு மேற்கொண்டு ஏதாவது கரஸ்ல படி இல்லனா கல்யாணத்த பண்ணு.
கண்ட கழிசடைங்கக்கூடலாம் ப்ரன்ட்ஷிப்னு பேஸ்புக்ல அலையாத, கடைசியா என் கெளரவத்துக்குக் கெட்ட பேர கொண்டு வந்துடாத. இதைப் பேசினா வீட்ல சண்டை வருதுனுதான் அமைதியா இருக்கன். உன் தங்கச்சி உமாவ பார்த்தாவது திருந்து!"னு பேசி முடிச்சிட்டு எழுந்து பெட்ரூமுக்கு போயிட்டார்!
தெருமுனையில இருக்க டீக்கடை அடர்ந்த மர நிழல்ல இருக்கும். அங்க ஸ்பெசலா தெருவாசிகளே ஏழு சிமெண்ட் பென்ஞ்ச்களைக் கட்டி வைச்சிருந்தாங்க. வாக்கிங் போய்ட்டு சிலபல பேர் அந்தச் சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து கதை பேசிட்டு போவாங்க!
தேவாவும் விக்கியும் சிமெண்ட் பெஞ்ச்ல உட்கார்ந்து எக்ஸாம் பத்தி பேசிக்கிட்டு இருக்கப்ப புல்லட்ட ஓட்டிக்கிட்டு அவங்கள ஓரக் கண்ணால பார்த்தப்படியே கடந்து போனாள் கோதை நாச்சியார் என்கிற நாச்சி!
Last edited: