திருமணம் ஆன புதிதில் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழவும், விருப்பு வெறுப்புகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் தனிக்குடித்தனமே சாலச்சிறந்தது.
குறைந்த பட்சம் ஒரு சில காலமாவது
இருவர்க்கு இடையிலேயே கருத்து வேறுபாடுகள் பல இருக்கும்.
இதற்கு மேலும் மூன்றாவதாக மாமியாரும் சேர்ந்தால் கேட்கவே வேண்டாம்.
நாம் எவ்வளவு தான் விட்டுக் கொடுத்தாலும், வழியிலிருந்து ஒதுங்கிப் போனாலும், மேலேயே வந்து விழுந்து சண்டை போடுபவர் பலருண்டு.
நாம் எதை செய்தும் அவர்களை திருப்தி செய்ய முடியாது.
வீட்டில் இருக்கும் அனைவரும் சிறிதளவாவது தங்கள் சுயநலத்தை விட்டுக் கொடுத்தால் வீட்டில் அமைதியும் சந்தோஷமும் நிலவும். எல்லோரும் மன நிம்மதியுடன் வாழலாம்.