Saranya
அமைச்சர்
Nice..
nalla azhumaஏற்கனவே கோபத்தில் திளைத்திருந்தவன் அவள் குரல் கேட்டதும் உக்கிரத்தோடு "என்கிட்ட பேச மாட்டியோ ?!" என்று நேரடியாக கேட்க,
"யார் நீங்க ?" அவனை முடிந்தளவு தவிர்த்துவிட வேண்டி அவள் பேச,
"தெரியாது இல்ல உனக்கு" அழுத்தமாய் கேட்டான்.
"நீங்க யார்னு சொன்னதானே தெரியும்"
"ஆனா சாக்ஷிக்கு நான் யாருன்னு சொல்லாமலே தெரியும்"
"ஸாரி... இங்க சாக்ஷின்னு யாருமே இல்லை... போஃனை வையுங்க"
"போஃனை கட் பண்ண... உன்னை கொன்றவன்டி" அத்தனை கோபமாக அவன் வார்த்தைகள் அவள் செவியில் பாய்ந்தது.
அவள் மௌனமாய் இருக்க, "எல்லாதையும் மறந்திட்ட இல்லடி நீ... ஆனா நான் மறக்கல.. எதையும் மறக்கல..." என்க, அவள் மௌனத்தை கலைக்கவில்லை. அவன் குரலை கேட்க கேட்க அவள் விழிகளில் பெருகிய கண்ணீரை கட்டுக்குள் வைக்க முடியாமல் வாயை மூடியபடி வெதும்பி கொண்டிருந்தாள்.
"நீ மறந்ததை நான் ஞாபகபடுத்தட்டுமா ?!" என்று கேட்டவன் சில நொடி மௌனத்திற்கு பின்,
___________
"காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு" என்றான்.
அந்த வார்த்தைகளை கேட்டதுமே அவள் கதறி அழ தொடங்கினாள்.
அவளின் இறுகிப் போன உணர்வுகளை உடைக்கும் சக்தி அவன் குரலுக்கு மட்டுமே உண்டு. ஆதலாலயே அவனிடம் பேச கூட அவள் பயந்திருந்தாள். ஆனால் அது நிகழ்ந்துவிட்டது.