Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
முடிவுரை
மனிதநேயத்தோடும் வெவ்வேறு மதங்களோடும் இந்த கதைக்குள் நுழையும் போது எந்த மதத்தினரையும் துளியளவும் காயப்படுத்திவிடகூடாதே என்கிற பயத்தோடே ஆரம்பித்தேன். அப்படி காயப்படுத்தி இருந்தேன் எனில் அது நிச்சயம் தெரிந்து நடந்திருக்காது.
இந்த கதை கரு ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை. அதை அவள் எப்படி எதிர்கொண்டு கடந்து வருகிறாள்.
மனம் கனக்கும் ஒரு கதைதான் எனினும் ஏதோ ஓர் துணிவு இந்த கதையை எழுதி சொல்லி உந்தி தள்ளியது. நாம் கண்கூடாய் கண்டு கேட்டு ஏன் அனுபவித்து கொண்டூம் இருக்கும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கான முடிவுரை யார் எழுத முடியும் ?
செய்பவர்கள் திருந்துவார்கள் திருந்த வேண்டும் தண்டிக்கப்பட வேண்டூம் என்பதை விட இதனால் பாதிக்கப்படும் பெண்கள் துணிவோடு மாற வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.
மனோதிடத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை. எதையும் சமாளிக்கும் துணிவை தரவல்லது. அதை ஒவ்வொரு பெண்களும் மனதில் கொள்ள வேண்டும்.
பெண்மை மென்மை என்ற வார்த்தையை உடைத்தெறிந்து அவள் கொஞ்சம் வன்மையாய் மாற வேண்டும். தனக்கு நடக்கும் அநீதிகளை தட்டிகேட்கும் துணிவு கொள்ள வேண்டும்.
இதெல்லாம் வார்த்தைகளுக்கு நன்றாக இருக்கும். நிஜத்தில் நடக்குமா என்று கேட்பீர்கள். எதற்கும் நம்மை நாமே தயார்படுத்தி கொண்டால் நிச்சயம் முடியும்.
பெண் என்பவள் ஆக்க சக்தி மட்டுமல்ல. அழிக்கும் சக்தியும் கூட
சாம்ராஜ்யங்கள் கூட பெண்மைக்கு செய்யும் அநீதிகளால் கவிழ்க்கப்பட்டதாக நாம் கேள்விபடவில்லையா ?
பாரதியாரின் வரிகள் போல பெண்ணே உனக்கு எதிராய் நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராய்
ரௌத்திரம் பழகு ! !
இந்த கதையை நான் எழுதியதாக அல்ல. வாழ்ந்ததாகவே தோன்றியது. அழுகை கோபம் காதல் என பல்வேறு உணர்ச்சி குவியல்களுக்குள் நானுமே மூழ்கி திளைத்து இப்போது உண்மையிலயே இந்த கதையில் மீள முடியாமல் இருக்கிறேன்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பாடல் போடும் போது ஏதோ பெயருக்கென்று போடவில்லை. எழுதி முடித்த பின் அந்த பாடல் வரிகளை முழுதாய் கேட்டு அவை இந்த கதை சூழ்நிலைக்கு பொருந்துமா என்று பார்த்து ரசித்து போட்டேன். அது கூட முற்றிலும் ஒர் வித்தியாசமான அனுபவம்.
இந்த கதையில் என் எழுத்து பாணியை மாற்றி, பல உணர்வுகளுக்கு தமிழில் வார்த்தைகளை தேடி கற்று எழுதி என அதுவும் சற்று புதிய அனுபவமாகவும் இருந்தது.
பல கதைமாந்தர்களை கொண்டு தொடங்கி அவர்களை கடைசி வரை அழைத்து வந்த அனுபவம்தான் ரொம்பவும் கடினம்.
உண்மையிலயே முற்றிலுமாய் எனக்கு இந்த கதை மாறுப்பட்ட அனுபவம்.
Spark, என்னோட முதல் கதைக்கு ஒரு டிவி நீயூஸ். இரண்டாவது கதை எங்க அம்மா சொன்ன அவர்கள் குடும்பத்தில் நடந்த நிஜ சம்பவம்.
அதே போல் இந்த கதைக்கான. Spark இன்னொரு கதை.
ஓரு பெண்ணின் சிலையை வடித்து அதுக்கு உடை கொடுத்து ஆபாரணம் கொடுத்து உயிர் கொடுத்து, பின் மூவரில் யாருக்கு அவள் சொந்தம்?
இந்த கதையை எல்லோரும் கேள்விட்டிருப்பீர்கள்.
அதில் ஆடை கொடுத்த அவள் மானம் காப்பவனுக்கே அவள் சொந்தமானவன் என முடியும்.
அப்படி ஒரு பெண்ணின் வாழ்வில் அவளை சொந்தமாக்கி கொள்ள விழையும் மூன்று ஆண்கள்.
அங்கே வந்துச்சு இந்த கதையோட Spark
என்னோடு கதை முழுக்கவும் பயணித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
பதிலுரை கொடுக்க இயலாமல் நான் இந்த கதையோடு ஓட வேண்டியதாக போயிற்று.
மே மாதம் தொடங்கி ஜுலை மாதம் பாதியில் முடிந்திருக்க,
இந்த எழுபது நாட்களில் ஐம்பது அத்தியாயம் என தூக்கமிழந்து சவாலோடு என்னை பாடாய்படுத்திய கதை.
இரவு எழுதி முடித்து சரி பார்க்க முடியாத காரணத்தால் நிறைய எழுத்துபிழைகள் கூட செய்திருப்பேன். அதையெல்லாம் பொறுத்து கொண்டதற்கும் நன்றிகள் பல.
ஆனால் எப்படியோ முடித்தாகியது என்று நிம்மதியடைய முடியாமல் ஏனோ மனம் பாரமானது.
இனி இந்த கதாபாத்திரங்களோடு உலா வர முடியாது.
உங்கள் எல்லோரின் கருத்துக்களையும் பார்க்க முடியாது.
ஆனால் என் இரண்டாம் கதை ஆதியே அந்தமாய் அத்தியாயங்களை மீண்டும் பதிவிட இருக்கிறேன்.
படிக்காதவர்கள் படித்து கொள்ளலாம்.
நன்றியுரை சொல்ல வேண்டிய நண்பர்கள். நான் கருத்து தெரிவிக்க முடியாத போதும் துவளாமல் கருத்து தெரிவித்த நண்பர்கள்
banumathi jayaraman, kavyajaya, jasha, Narmada, Aparna, pavithra narayanan, Vadivelamal, sakthi priya,.
annapoorani, orange, afroz, riha, deepivijay, mathibalasri, usha suresh mam, keerthana, kayalvizhi ravi, premalatha, nishridha, thadsa, bhuvani, sridevi, husna, usha mohan, umamshesan, Yamini dhanasekar, samruthika, rajamangai, lakshmi perumal,gashini, chitrasaraswati, thiya, divyabharathi, tony stark, vijaya Rs, umaradha, nadarajan, saru, priyapraveenkumar, laya, halimath meenateacher,saranya, ugina,sony, riy, suganya, banupriya, harinidilip, sameera, rahidevideva, usha mohan, stella, puvi, vairam, akilamathan, usha mohan, shamla, wasee, sairam, halimath, suvitha, Kaviyesham, Dr. Anitha kadarkaraisamy, saDi, pradeep, klaxmi, vimalanarayan, anjali raji, sanshiv
அனைவருக்கும் நன்றிறிறிறிறிறிறிகள் பல.
என்னை உங்கள் கருத்துக்கள்தான் இந்த கதையை எழுதி முடிக்க உந்திதள்ளியது என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது.
யாராவது பெயர் விட்டுபோனதா என்றுதான் தெரியவில்லை. ஆனால் முடிந்த வரை எல்லோர் பெயரும் எழுதிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
லைக்ஸ் போட்டு என் கதைக்கு இன்னும் பெருமை சேர்த்த அன்பர்களுக்கும் நன்றி.
Special thanks to மகாகவி பாரதி.
அவர் இல்லையெனில் இந்த கதை இல்லை.
அப்புறம் Voting மறந்திடாதீங்க.
வாடி என் தமிழச்சி, நான் அவள் இல்லை
இரண்டுமே என் கற்பனை கருவில் ஜனித்த அழகான குழந்தைகள். கொஞ்சம் பார்த்து செய்யுங்க.
வேறெதவும் நான் சொல்ல தேவையில்லை. என் முயற்சிகள் முடிந்தது.
அதற்கு மேலாய் எல்லாம் உங்களின் விருப்பம்...
வாசகர்களுக்கு இன்னொரு தகவல்.
Commercial style விட்டு தள்ளி ஒரு அழகான குடும்ப நாவல் எழுத ஆசையா இருக்கு.
நல்லா வருமா வராதான்னு தெரியல. புது முயற்சி வெற்றியும் பெறலாம் . சொத்தபலாகவும் முடியலாம்.
எப்போதும் போல் முயற்சி செய்யலாம் என உங்களின் ஆதரவை வேண்டி இறங்குகிறேன்.
தலைப்பு சில யோசித்திருக்கிறேன். எது தனித்துவமாய் இருக்கிறதென்று நீங்களே சொல்லுங்கள்.
தீக்குள் விரலை வைத்தால்
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி
வஞ்சமடி என் நெஞ்சமே
இது Final selection இல்ல. இன்னும் Better ஆன தலைப்பு கிடைத்தால் அதை சூட்டி கொள்ளலாம்.
மொத்தத்தில் என் எழுத்து நடையில் குடும்ப சூழலுக்குள் யதார்த்தமான வாழ்க்கையோடு ஓர் கதை.
மனிதநேயத்தோடும் வெவ்வேறு மதங்களோடும் இந்த கதைக்குள் நுழையும் போது எந்த மதத்தினரையும் துளியளவும் காயப்படுத்திவிடகூடாதே என்கிற பயத்தோடே ஆரம்பித்தேன். அப்படி காயப்படுத்தி இருந்தேன் எனில் அது நிச்சயம் தெரிந்து நடந்திருக்காது.
இந்த கதை கரு ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை. அதை அவள் எப்படி எதிர்கொண்டு கடந்து வருகிறாள்.
மனம் கனக்கும் ஒரு கதைதான் எனினும் ஏதோ ஓர் துணிவு இந்த கதையை எழுதி சொல்லி உந்தி தள்ளியது. நாம் கண்கூடாய் கண்டு கேட்டு ஏன் அனுபவித்து கொண்டூம் இருக்கும் இத்தகைய பாலியல் வன்கொடுமைகளுக்கான முடிவுரை யார் எழுத முடியும் ?
செய்பவர்கள் திருந்துவார்கள் திருந்த வேண்டும் தண்டிக்கப்பட வேண்டூம் என்பதை விட இதனால் பாதிக்கப்படும் பெண்கள் துணிவோடு மாற வேண்டும் என்பதே என் தாழ்மையான கருத்து.
மனோதிடத்திற்கு மிஞ்சிய சக்தி இல்லை. எதையும் சமாளிக்கும் துணிவை தரவல்லது. அதை ஒவ்வொரு பெண்களும் மனதில் கொள்ள வேண்டும்.
பெண்மை மென்மை என்ற வார்த்தையை உடைத்தெறிந்து அவள் கொஞ்சம் வன்மையாய் மாற வேண்டும். தனக்கு நடக்கும் அநீதிகளை தட்டிகேட்கும் துணிவு கொள்ள வேண்டும்.
இதெல்லாம் வார்த்தைகளுக்கு நன்றாக இருக்கும். நிஜத்தில் நடக்குமா என்று கேட்பீர்கள். எதற்கும் நம்மை நாமே தயார்படுத்தி கொண்டால் நிச்சயம் முடியும்.
பெண் என்பவள் ஆக்க சக்தி மட்டுமல்ல. அழிக்கும் சக்தியும் கூட
சாம்ராஜ்யங்கள் கூட பெண்மைக்கு செய்யும் அநீதிகளால் கவிழ்க்கப்பட்டதாக நாம் கேள்விபடவில்லையா ?
பாரதியாரின் வரிகள் போல பெண்ணே உனக்கு எதிராய் நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராய்
ரௌத்திரம் பழகு ! !
இந்த கதையை நான் எழுதியதாக அல்ல. வாழ்ந்ததாகவே தோன்றியது. அழுகை கோபம் காதல் என பல்வேறு உணர்ச்சி குவியல்களுக்குள் நானுமே மூழ்கி திளைத்து இப்போது உண்மையிலயே இந்த கதையில் மீள முடியாமல் இருக்கிறேன்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் பாடல் போடும் போது ஏதோ பெயருக்கென்று போடவில்லை. எழுதி முடித்த பின் அந்த பாடல் வரிகளை முழுதாய் கேட்டு அவை இந்த கதை சூழ்நிலைக்கு பொருந்துமா என்று பார்த்து ரசித்து போட்டேன். அது கூட முற்றிலும் ஒர் வித்தியாசமான அனுபவம்.
இந்த கதையில் என் எழுத்து பாணியை மாற்றி, பல உணர்வுகளுக்கு தமிழில் வார்த்தைகளை தேடி கற்று எழுதி என அதுவும் சற்று புதிய அனுபவமாகவும் இருந்தது.
பல கதைமாந்தர்களை கொண்டு தொடங்கி அவர்களை கடைசி வரை அழைத்து வந்த அனுபவம்தான் ரொம்பவும் கடினம்.
உண்மையிலயே முற்றிலுமாய் எனக்கு இந்த கதை மாறுப்பட்ட அனுபவம்.
Spark, என்னோட முதல் கதைக்கு ஒரு டிவி நீயூஸ். இரண்டாவது கதை எங்க அம்மா சொன்ன அவர்கள் குடும்பத்தில் நடந்த நிஜ சம்பவம்.
அதே போல் இந்த கதைக்கான. Spark இன்னொரு கதை.
ஓரு பெண்ணின் சிலையை வடித்து அதுக்கு உடை கொடுத்து ஆபாரணம் கொடுத்து உயிர் கொடுத்து, பின் மூவரில் யாருக்கு அவள் சொந்தம்?
இந்த கதையை எல்லோரும் கேள்விட்டிருப்பீர்கள்.
அதில் ஆடை கொடுத்த அவள் மானம் காப்பவனுக்கே அவள் சொந்தமானவன் என முடியும்.
அப்படி ஒரு பெண்ணின் வாழ்வில் அவளை சொந்தமாக்கி கொள்ள விழையும் மூன்று ஆண்கள்.
அங்கே வந்துச்சு இந்த கதையோட Spark
என்னோடு கதை முழுக்கவும் பயணித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.
பதிலுரை கொடுக்க இயலாமல் நான் இந்த கதையோடு ஓட வேண்டியதாக போயிற்று.
மே மாதம் தொடங்கி ஜுலை மாதம் பாதியில் முடிந்திருக்க,
இந்த எழுபது நாட்களில் ஐம்பது அத்தியாயம் என தூக்கமிழந்து சவாலோடு என்னை பாடாய்படுத்திய கதை.
இரவு எழுதி முடித்து சரி பார்க்க முடியாத காரணத்தால் நிறைய எழுத்துபிழைகள் கூட செய்திருப்பேன். அதையெல்லாம் பொறுத்து கொண்டதற்கும் நன்றிகள் பல.
ஆனால் எப்படியோ முடித்தாகியது என்று நிம்மதியடைய முடியாமல் ஏனோ மனம் பாரமானது.
இனி இந்த கதாபாத்திரங்களோடு உலா வர முடியாது.
உங்கள் எல்லோரின் கருத்துக்களையும் பார்க்க முடியாது.
ஆனால் என் இரண்டாம் கதை ஆதியே அந்தமாய் அத்தியாயங்களை மீண்டும் பதிவிட இருக்கிறேன்.
படிக்காதவர்கள் படித்து கொள்ளலாம்.
நன்றியுரை சொல்ல வேண்டிய நண்பர்கள். நான் கருத்து தெரிவிக்க முடியாத போதும் துவளாமல் கருத்து தெரிவித்த நண்பர்கள்
banumathi jayaraman, kavyajaya, jasha, Narmada, Aparna, pavithra narayanan, Vadivelamal, sakthi priya,.
annapoorani, orange, afroz, riha, deepivijay, mathibalasri, usha suresh mam, keerthana, kayalvizhi ravi, premalatha, nishridha, thadsa, bhuvani, sridevi, husna, usha mohan, umamshesan, Yamini dhanasekar, samruthika, rajamangai, lakshmi perumal,gashini, chitrasaraswati, thiya, divyabharathi, tony stark, vijaya Rs, umaradha, nadarajan, saru, priyapraveenkumar, laya, halimath meenateacher,saranya, ugina,sony, riy, suganya, banupriya, harinidilip, sameera, rahidevideva, usha mohan, stella, puvi, vairam, akilamathan, usha mohan, shamla, wasee, sairam, halimath, suvitha, Kaviyesham, Dr. Anitha kadarkaraisamy, saDi, pradeep, klaxmi, vimalanarayan, anjali raji, sanshiv
அனைவருக்கும் நன்றிறிறிறிறிறிறிகள் பல.
என்னை உங்கள் கருத்துக்கள்தான் இந்த கதையை எழுதி முடிக்க உந்திதள்ளியது என்று சொன்னால் நிச்சயம் மிகையாகாது.
யாராவது பெயர் விட்டுபோனதா என்றுதான் தெரியவில்லை. ஆனால் முடிந்த வரை எல்லோர் பெயரும் எழுதிவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன்.
லைக்ஸ் போட்டு என் கதைக்கு இன்னும் பெருமை சேர்த்த அன்பர்களுக்கும் நன்றி.
Special thanks to மகாகவி பாரதி.
அவர் இல்லையெனில் இந்த கதை இல்லை.
அப்புறம் Voting மறந்திடாதீங்க.
வாடி என் தமிழச்சி, நான் அவள் இல்லை
இரண்டுமே என் கற்பனை கருவில் ஜனித்த அழகான குழந்தைகள். கொஞ்சம் பார்த்து செய்யுங்க.
வேறெதவும் நான் சொல்ல தேவையில்லை. என் முயற்சிகள் முடிந்தது.
அதற்கு மேலாய் எல்லாம் உங்களின் விருப்பம்...
வாசகர்களுக்கு இன்னொரு தகவல்.
Commercial style விட்டு தள்ளி ஒரு அழகான குடும்ப நாவல் எழுத ஆசையா இருக்கு.
நல்லா வருமா வராதான்னு தெரியல. புது முயற்சி வெற்றியும் பெறலாம் . சொத்தபலாகவும் முடியலாம்.
எப்போதும் போல் முயற்சி செய்யலாம் என உங்களின் ஆதரவை வேண்டி இறங்குகிறேன்.
தலைப்பு சில யோசித்திருக்கிறேன். எது தனித்துவமாய் இருக்கிறதென்று நீங்களே சொல்லுங்கள்.
தீக்குள் விரலை வைத்தால்
கொஞ்சம் வஞ்சம் கொண்டேனடி
வஞ்சமடி என் நெஞ்சமே
இது Final selection இல்ல. இன்னும் Better ஆன தலைப்பு கிடைத்தால் அதை சூட்டி கொள்ளலாம்.
மொத்தத்தில் என் எழுத்து நடையில் குடும்ப சூழலுக்குள் யதார்த்தமான வாழ்க்கையோடு ஓர் கதை.