• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nambikkai malar-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
" கவிதா ஆண்டி..." என்று உற்சாகமாக அழைத்தபடி கவிதாம்மாவின் அருகில் சென்றாள் செளந்தர்யா.

"வாடா தங்கம்! அந்த மிலிட்டரி உன்னை பஸ்ல அனுப்பி வைச்சிட்டாளா" என்றபடி கார் கதவை திறக்க இருவரும் ஏறிக் கொண்டார்கள்.

"ஆண்டி! அம்மாவை குறை சொல்லாதீங்க. அவங்க என் நல்லதுக்குதான் எதையும் செய்வாங்க" என்றவளை பார்த்து ஆச்சரியப் பட்டாள் கவிதா.

"இன்னொரு பொண்ணாக இருந்தால் இந்நேரம் உங்க அம்மாவை திட்டி தீர்த்து இருப்பாங்க. உண்மையிலே நீ தங்கம்தான்" என்று மனதார பாராட்டினாள் கவிதா.

"எந்த அம்மாவும் தன் மகளுக்கு நல்லதுதான் நினைப்பாங்க" என்று பெரியமனுசியாக பேசி விட்டு சிரித்த வேளையில் கார் வீட்டினை அடைந்து விட்டது.

செளமியாவும், கவிதாவும் வீட்டுக்கு உள்ளே நுழைந்த வேளையில் அவினாஷ் அங்கே இருந்தான்.

"அவினாஷ்... நீ வீட்லதான் இருக்கியா? நல்லதா போச்சு!" என்றாள் கவிதா.

"ஏய் செளமி! எப்படி இருக்க?" என்றான் அவினாஷ்.

"நான் நல்லா இருக்கேன்யா. நீ எப்படி இருக்கயா?"

"நான் சூப்பரா இருக்கேன். நீ வர்றதா அம்மா சொல்லிட்டு இருந்தாங்க."

"உங்க ஸ்கூலில் ஒரு வருசம் வேலை செய்ய சொல்லி அம்மா ஆர்டர்." என்றாள் செளந்தர்யா.

"உனக்கு இல்லாத வேலையா?" என்று அவினாஷ் சொல்ல,
"இப்படி உடனே தரக் கூடாது. ஒரு இன்டர்வியூ வைச்சு நான் அதுல பாஸ் செஞ்சு அப்புறம் அப்பாயின்டமென்ட் லெட்டர் தரனும்" என்றாள் செளந்தர்யா.

"ஒகே மேடம்... நாளைக்கு காலையில் பத்துமணிக்கு இன்டர்வியூ. நல்லா பிரிப்பேர் பன்னிக்கோ. ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லிவிட்டு சென்றான் அவினாஷ்.

கவிதாவின் ஒரே மகன்தான் அவினாஷ். மேகா எஸ்டேட், டீ பாக்டரி,ஸ்கூல் எல்லாம் அவன் பொறுப்பில்தான் உள்ளது.

நல்ல வாரிய தலைமுடி, கத்தரிக்கபட்ட மீசை, சவரம் செய்யபட்ட முகம், கணிக்க முடியாத கண்கள், கறுப்பு இல்லாத உதடுகள், நல்ல உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மாநிறம் உடைய இருபத்தி எட்டு வயது இளைஞன் அவினாஷ்.

"தங்கம்! நீ என் வீட்ல தங்குவே இல்லையா?" என்று கவிதா கேட்க "தங்குவேன் ஆனா வாடகை தருவேன். ஒகேவா?" என்றாள் செளந்தர்யா.

"எங்க ஸ்கூலில் டீச்சர்களுக்கு போர்டிங், லாட்ஜிங் இலவசம்" என்று கவிதா சொல்ல "அப்ப எனக்கு பைசா மிச்சம்" என்றாள் செளந்தர்யா.

"சரி... தங்கம்... நான் கேட்க மறந்துட்டேன். நீ சாப்பிட்டியா?" என்றாள்.

"அம்மா சாப்பிட வைச்சுதான் அனுப்பினாங்க ஆண்டி"

"உன் ரூமுக்கு போயி ரெஸ்ட் எடு. மதியான சாப்பாடுக்கு உன்னை கூப்பிடறேன்" என்றாள் கவிதா.

"ரெஸ்ட் எல்லாம் அப்புறம் எடுத்துக்கிறேன். நான் இப்ப உங்களுக்கு சமையலுக்கு ஹெல்ப் பன்றேன்"

"இதுவும் உங்க அம்மா ஆர்டரா?" என்று கவிதா கேட்க "இல்லை. இது என் விருப்பம்" என்றாள் செளந்தர்யா.

அடுத்த நாள் காலை ஒன்பதரை மணிக்கே பள்ளிக்கு தன்னுடைய சர்டிபிக்கேட் பைலுடன் சென்று விட்டாள் செளந்தர்யா.

பள்ளி வேலை என்பதால் அழகான அதேசமயம் கண்ணை உறுத்தாத சேலையை அணிந்து கொண்டாள் செளந்தர்யா.

அவளுக்கு சின்னதாக ஒரு கிளாஸ் டெஸ்ட் எடுக்க வைத்தபின் இன்டர்வியூ செய்து தேர்வு செய்ய அவளுக்கு மகிழ்ச்சி.

பள்ளி தாளாளர் அறைக்கு அவள் செல்ல அங்கு அவினாஷ் இருக்கையில் இருந்தான்.

"குட்மார்னிங் சார்" என்று அவள் சொல்ல "வா செளந்தர்யா" என்றான் அவினாஷ்.

"செளந்தர்யா... உன்னை பற்றி பாசிட்டில் கமெண்ட்ஸ்தான் தந்திருக்காங்க. குட்! நீ இந்த நிமிசத்துல இருந்து எங்க ஸ்கூல் டீச்சர். உனக்கு பேசிக் சாலரி நைன் டவுசண்ட். நீ டென்த் வரை கிளாஸ் எடுக்க வேண்டி வரும். நீ உன் சர்டிபிக்கேட்ஸ் எல்லாம் சரண்டர் பன்னிடடு ஜாயின் பன்னிடு" என்றான் அவினாஷ்.

Message…
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"ஒகே சார்" என்று அறையை விட்டு வெளிவந்த செளந்தர்யா உடனே பிரின்சிபலை சந்தித்து அப்பாயின்ட்மென்ட் லெட்டரை தந்தாள்.

பள்ளியில் முறைப்படி தன் சர்டிபிக்கேட்டை ஒப்படைத்து சேர்வதற்கான கடிதம் எழுதி தந்தாள்.

"செளந்தர்யா ! இன்றைக்கு நீங்க ஜாயின் பன்னா போதும். நாளை முதல் ரெகுலரா ஸ்கூலுக்கு வரலாம். உங்க டைம்டேபிள் எல்லாம் நாளை தர்றோம்." என்று பிரின்சிபல் வனிதா சொல்ல "ஒகே மேடம்" என்றாள்.

பள்ளியில் இருந்து போன் செய்து தான் சேர்ந்துவிட்ட தகவலை அம்மாவுக்கு தெரிவித்தாள்.

செளந்தர்யா பள்ளியிலிருந்து நடந்தே வீடு திரும்பினாள்.

செளந்தர்யா நடந்து வருவதை பார்த்த கவிதாம்மா "செளமி! நீ நடந்தா வந்தே? அவினாஷ்கிட்ட சொன்னா டிராப் பன்ன மாட்டானா?" என்றாள்.

"ஆண்டி! எந்த ஸ்கூல்ல டீச்சரை கராஸ்பான்டன்ட் டிராப் பன்றாங்க" என்று கேட்டுவிட்டு சிரித்தாள் செளந்தர்யா.

"என்ன தங்கம்... எங்க ஸ்கூல் உனக்கு பிடிச்சிருக்கா?" என்றாள் கவிதா.

"ரொம்ப பிடிச்சிருக்கு ஆண்டி" என்றாள் செளந்தர்யா.

"சரிடா... நீ போயி ரெஸ்ட் எடு" என்று கவிதா சொல்ல "நோ ஆண்டி... இன்னிக்கு நான்தான் சமைக்கப் போறேன். என்ன சமைக்கனும் சொல்லுங்க?" என்றாள் செளந்தர்யா

"சரிடா... உன் இஷ்டம் போல என்ன வேண்டுமென்றாலும் செய். இன்னிக்கு உனக்கு பிடிச்சதை செய்"

"அவினாசுக்கு என்ன பிடிக்கும் சொல்லுங்க?" என்றாள் செளந்தர்யா.

"அவனுக்கு உருளைகிழங்கு பொரியல், ரசம், புளிக்குழம்பு பிடிக்கும்"

"சரி ஆண்டி உங்களுக்கு?"

"எனக்கு அதே மெனுதான் தங்கம்" என்று கவிதா சொல்லி அவளை பார்த்தார்.

"ஆண்டி... எனக்கும் இதுதான் பிடிக்கும். நாம மூன்று பேர் டேஸ்ட்டும் ஒன்றாக இருக்குது இல்லையா?" என்றபடி செளந்தர்யா சமையலைத் தொடங்கினாள்.

"உங்க அம்மாவுக்கும் இதுதான் பிடிக்கும் செல்லம்" என்று சொல்ல "தெரியும் ஆண்டி அதனால்தான் எனக்கும் பிடிக்குது போல்" என்றாள்.

"உன்னை தங்கமுன்னு சொல்றது தப்பே இல்லைடா" என்று மனதார பாராட்டினாள் கவிதா.

அகிலா தன் மகளை நன்றாக வளர்த்ததில் அவளுக்கு மகிழ்ச்சி.

கவிதா உடன் சேர்ந்து சமைக்க இருவரும் பேசிக் கொண்டே சமையலை முடித்து விட்டார்கள்.

செளந்தர்யாவின் சமையலை ருசி பார்த்த கவிதா, "அப்படியே உங்க அம்மா கைப்பக்குவம்" என்று பாராட்டினாள்.

"அப்படியா ஆண்டி?" என்று விழி விரிய கேட்டாள் செளந்தர்யா.

"ஆமாடா... உன் சமையல் ருசி அப்படியே இருக்கு" என்று சொல்ல செளந்தர்யா சிரித்தாள்.

சரி செல்லம்... அப்படியே நீ சாப்பிட்டுவிடு" என்றாள் கவிதா

"அவினாஷ் வரட்டும் ஆண்டி" என்று அவள் மறுக்க, அவன் வர லேட்டாகும். நீ வா சாப்பிடு" என்றுதும் மறுக்காமல் சாப்பிடவர இருவரும் மதிய சாப்பாட்டை முடித்தார்கள்

"சரிடா... நீ போய் ரெஸ்ட் எடு" என்று கவிதா சொன்னதும் செளந்தர்யா "சரி ஆண்டி" என்று தன் அறைக்கு சென்று விட்டாள்.

செளந்தர்யா ஒர் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு எழுந்து பிரெஷ் ஆகி வந்தாள்.

"என்னடா.. நல்லா தூங்கினியா? என்று கவிதா கேட்டார்.

"ஆமா ஆண்டி. நல்ல தூக்கம்" என்று செளந்தர்யா சொல்ல,
"இனி நீ நடந்து போக தேவை இல்லை தங்கம். வாசலில் போயி பாரு. உனக்கு சர்ப்ரைஸ் வெயிட்டிங்" என்றாள் கவிதா.

"என்ன சர்ப்ரைஸ் ஆண்டி" என்று சென்று அவள் பார்க்க அங்கே அவள் ஸ்கூட்டி நின்றது.

"ஆண்டி! என் ஸ்கூட்டி" என்று சந்தோஷமாய் அதை தொட்டு பார்த்தபடி சொன்னாள்.

Write your reply...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
சக்திப்ரியா டியர்
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
"இது எப்படி இங்கே?" என்று அவள் கேட்க "நீ தூங்க போன அந்த நேரத்துலதான் வந்தது. உன் அம்மா அனுப்பி வைச்சாடா தங்கம்" என்றார் கவிதா.

"அப்படியா!" என்ற செளந்தர்யா உடனே அம்மாவுக்கு போன் செய்து தாங்க்ஸ் சொன்னாள்.

"ஆண்டி... ஒரு ரவுண்டு போயிட்டு வர்றேன்" என்று செளந்தர்யா சொன்னாள்.

"சரிடா... பார்த்து பத்திரமா போயிட்டு வா" என்றார் கவிதா.

செளந்தர்யா தன் ஸ்கூட்டியில் ஏறி ஸ்டார்ட் செய்து ஆனந்தமாக ஒரு ரவுண்டு சென்று வந்தாள்.

கவிதா டீ போட்டு தர ரசித்து அதை குடித்துவிட்டு,
"நான் கார்டனுக்கு போயிட்டு வர்றேன் ஆண்டி" என்றாள் செளந்தர்யா.

"சரிடா.." என்று கவிதா தலையசைக்க தோட்டத்திற்கு சென்று அங்கு ஒரு குறுநடை நடந்தாள்.

தோட்டத்தின் மர நிழலில் அமர்ந்து இயற்கையை ரசித்தாள்.

தோட்டத்தில் வீணாக இருந்த மலர்களை பறித்து வந்து பூஜை அறையில் இருந்த சாமிக்கு போட்டு வழிபட்டாள்.

"தங்கம்! உன்னை அகிலா நல்லா வளர்த்து வைச்சிருக்கா." என்று பாராட்டினாள் கவிதா.

"தாங்க்ஸ் ஆண்டி" என்று அவள் சொல்ல "போ தங்கம்! நான் உன்னை என் மகள் மாதிரி பாக்கிறேன். நீ என்னடான்னா ஆண்டி ஆண்டிங்கற" என்று செல்லமாக கோபித்தாள் கவிதா.

"சாரிம்மா... இனி உங்களை அம்மான்னு கூப்பிடறேன்." என்று குழைந்த அவள் பாசம் கண்டு நீ சேற்றில் முளைத்த செந்தாமரை என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

செளந்தர்யாவுக்கும தன் அப்பா பற்றி ஏன் கவிதா அம்மாவிடம் கேட்க கூடாது என்று மனதில் தோன்றியது.

Write your reply...
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நன்றி பானுமதி அம்மா
சாரி,
அவ்வளவு-தான் பதிவு-ன்னு
நான் நினைத்து எழுதி
விட்டேன், சக்திப்ரியா டியர்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
என்ன சௌந்தர்யா, சேற்றில்
முளைத்த செந்தாமரையா?
என்னப்பா சொல்லுறீங்க,
சக்திப்ரியா டியர்?
அப்போ சௌந்து, அகிலாவின் பெண்ணில்லையாப்பா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top