sakthipriya
SM Exclusive
" கவிதா ஆண்டி..." என்று உற்சாகமாக அழைத்தபடி கவிதாம்மாவின் அருகில் சென்றாள் செளந்தர்யா.
"வாடா தங்கம்! அந்த மிலிட்டரி உன்னை பஸ்ல அனுப்பி வைச்சிட்டாளா" என்றபடி கார் கதவை திறக்க இருவரும் ஏறிக் கொண்டார்கள்.
"ஆண்டி! அம்மாவை குறை சொல்லாதீங்க. அவங்க என் நல்லதுக்குதான் எதையும் செய்வாங்க" என்றவளை பார்த்து ஆச்சரியப் பட்டாள் கவிதா.
"இன்னொரு பொண்ணாக இருந்தால் இந்நேரம் உங்க அம்மாவை திட்டி தீர்த்து இருப்பாங்க. உண்மையிலே நீ தங்கம்தான்" என்று மனதார பாராட்டினாள் கவிதா.
"எந்த அம்மாவும் தன் மகளுக்கு நல்லதுதான் நினைப்பாங்க" என்று பெரியமனுசியாக பேசி விட்டு சிரித்த வேளையில் கார் வீட்டினை அடைந்து விட்டது.
செளமியாவும், கவிதாவும் வீட்டுக்கு உள்ளே நுழைந்த வேளையில் அவினாஷ் அங்கே இருந்தான்.
"அவினாஷ்... நீ வீட்லதான் இருக்கியா? நல்லதா போச்சு!" என்றாள் கவிதா.
"ஏய் செளமி! எப்படி இருக்க?" என்றான் அவினாஷ்.
"நான் நல்லா இருக்கேன்யா. நீ எப்படி இருக்கயா?"
"நான் சூப்பரா இருக்கேன். நீ வர்றதா அம்மா சொல்லிட்டு இருந்தாங்க."
"உங்க ஸ்கூலில் ஒரு வருசம் வேலை செய்ய சொல்லி அம்மா ஆர்டர்." என்றாள் செளந்தர்யா.
"உனக்கு இல்லாத வேலையா?" என்று அவினாஷ் சொல்ல,
"இப்படி உடனே தரக் கூடாது. ஒரு இன்டர்வியூ வைச்சு நான் அதுல பாஸ் செஞ்சு அப்புறம் அப்பாயின்டமென்ட் லெட்டர் தரனும்" என்றாள் செளந்தர்யா.
"ஒகே மேடம்... நாளைக்கு காலையில் பத்துமணிக்கு இன்டர்வியூ. நல்லா பிரிப்பேர் பன்னிக்கோ. ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லிவிட்டு சென்றான் அவினாஷ்.
கவிதாவின் ஒரே மகன்தான் அவினாஷ். மேகா எஸ்டேட், டீ பாக்டரி,ஸ்கூல் எல்லாம் அவன் பொறுப்பில்தான் உள்ளது.
நல்ல வாரிய தலைமுடி, கத்தரிக்கபட்ட மீசை, சவரம் செய்யபட்ட முகம், கணிக்க முடியாத கண்கள், கறுப்பு இல்லாத உதடுகள், நல்ல உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மாநிறம் உடைய இருபத்தி எட்டு வயது இளைஞன் அவினாஷ்.
"தங்கம்! நீ என் வீட்ல தங்குவே இல்லையா?" என்று கவிதா கேட்க "தங்குவேன் ஆனா வாடகை தருவேன். ஒகேவா?" என்றாள் செளந்தர்யா.
"எங்க ஸ்கூலில் டீச்சர்களுக்கு போர்டிங், லாட்ஜிங் இலவசம்" என்று கவிதா சொல்ல "அப்ப எனக்கு பைசா மிச்சம்" என்றாள் செளந்தர்யா.
"சரி... தங்கம்... நான் கேட்க மறந்துட்டேன். நீ சாப்பிட்டியா?" என்றாள்.
"அம்மா சாப்பிட வைச்சுதான் அனுப்பினாங்க ஆண்டி"
"உன் ரூமுக்கு போயி ரெஸ்ட் எடு. மதியான சாப்பாடுக்கு உன்னை கூப்பிடறேன்" என்றாள் கவிதா.
"ரெஸ்ட் எல்லாம் அப்புறம் எடுத்துக்கிறேன். நான் இப்ப உங்களுக்கு சமையலுக்கு ஹெல்ப் பன்றேன்"
"இதுவும் உங்க அம்மா ஆர்டரா?" என்று கவிதா கேட்க "இல்லை. இது என் விருப்பம்" என்றாள் செளந்தர்யா.
அடுத்த நாள் காலை ஒன்பதரை மணிக்கே பள்ளிக்கு தன்னுடைய சர்டிபிக்கேட் பைலுடன் சென்று விட்டாள் செளந்தர்யா.
பள்ளி வேலை என்பதால் அழகான அதேசமயம் கண்ணை உறுத்தாத சேலையை அணிந்து கொண்டாள் செளந்தர்யா.
அவளுக்கு சின்னதாக ஒரு கிளாஸ் டெஸ்ட் எடுக்க வைத்தபின் இன்டர்வியூ செய்து தேர்வு செய்ய அவளுக்கு மகிழ்ச்சி.
பள்ளி தாளாளர் அறைக்கு அவள் செல்ல அங்கு அவினாஷ் இருக்கையில் இருந்தான்.
"குட்மார்னிங் சார்" என்று அவள் சொல்ல "வா செளந்தர்யா" என்றான் அவினாஷ்.
"செளந்தர்யா... உன்னை பற்றி பாசிட்டில் கமெண்ட்ஸ்தான் தந்திருக்காங்க. குட்! நீ இந்த நிமிசத்துல இருந்து எங்க ஸ்கூல் டீச்சர். உனக்கு பேசிக் சாலரி நைன் டவுசண்ட். நீ டென்த் வரை கிளாஸ் எடுக்க வேண்டி வரும். நீ உன் சர்டிபிக்கேட்ஸ் எல்லாம் சரண்டர் பன்னிடடு ஜாயின் பன்னிடு" என்றான் அவினாஷ்.
Message…
"வாடா தங்கம்! அந்த மிலிட்டரி உன்னை பஸ்ல அனுப்பி வைச்சிட்டாளா" என்றபடி கார் கதவை திறக்க இருவரும் ஏறிக் கொண்டார்கள்.
"ஆண்டி! அம்மாவை குறை சொல்லாதீங்க. அவங்க என் நல்லதுக்குதான் எதையும் செய்வாங்க" என்றவளை பார்த்து ஆச்சரியப் பட்டாள் கவிதா.
"இன்னொரு பொண்ணாக இருந்தால் இந்நேரம் உங்க அம்மாவை திட்டி தீர்த்து இருப்பாங்க. உண்மையிலே நீ தங்கம்தான்" என்று மனதார பாராட்டினாள் கவிதா.
"எந்த அம்மாவும் தன் மகளுக்கு நல்லதுதான் நினைப்பாங்க" என்று பெரியமனுசியாக பேசி விட்டு சிரித்த வேளையில் கார் வீட்டினை அடைந்து விட்டது.
செளமியாவும், கவிதாவும் வீட்டுக்கு உள்ளே நுழைந்த வேளையில் அவினாஷ் அங்கே இருந்தான்.
"அவினாஷ்... நீ வீட்லதான் இருக்கியா? நல்லதா போச்சு!" என்றாள் கவிதா.
"ஏய் செளமி! எப்படி இருக்க?" என்றான் அவினாஷ்.
"நான் நல்லா இருக்கேன்யா. நீ எப்படி இருக்கயா?"
"நான் சூப்பரா இருக்கேன். நீ வர்றதா அம்மா சொல்லிட்டு இருந்தாங்க."
"உங்க ஸ்கூலில் ஒரு வருசம் வேலை செய்ய சொல்லி அம்மா ஆர்டர்." என்றாள் செளந்தர்யா.
"உனக்கு இல்லாத வேலையா?" என்று அவினாஷ் சொல்ல,
"இப்படி உடனே தரக் கூடாது. ஒரு இன்டர்வியூ வைச்சு நான் அதுல பாஸ் செஞ்சு அப்புறம் அப்பாயின்டமென்ட் லெட்டர் தரனும்" என்றாள் செளந்தர்யா.
"ஒகே மேடம்... நாளைக்கு காலையில் பத்துமணிக்கு இன்டர்வியூ. நல்லா பிரிப்பேர் பன்னிக்கோ. ஆல் தி பெஸ்ட்" என்று சொல்லிவிட்டு சென்றான் அவினாஷ்.
கவிதாவின் ஒரே மகன்தான் அவினாஷ். மேகா எஸ்டேட், டீ பாக்டரி,ஸ்கூல் எல்லாம் அவன் பொறுப்பில்தான் உள்ளது.
நல்ல வாரிய தலைமுடி, கத்தரிக்கபட்ட மீசை, சவரம் செய்யபட்ட முகம், கணிக்க முடியாத கண்கள், கறுப்பு இல்லாத உதடுகள், நல்ல உயரம், ஆஜானுபாகுவான தோற்றம், மாநிறம் உடைய இருபத்தி எட்டு வயது இளைஞன் அவினாஷ்.
"தங்கம்! நீ என் வீட்ல தங்குவே இல்லையா?" என்று கவிதா கேட்க "தங்குவேன் ஆனா வாடகை தருவேன். ஒகேவா?" என்றாள் செளந்தர்யா.
"எங்க ஸ்கூலில் டீச்சர்களுக்கு போர்டிங், லாட்ஜிங் இலவசம்" என்று கவிதா சொல்ல "அப்ப எனக்கு பைசா மிச்சம்" என்றாள் செளந்தர்யா.
"சரி... தங்கம்... நான் கேட்க மறந்துட்டேன். நீ சாப்பிட்டியா?" என்றாள்.
"அம்மா சாப்பிட வைச்சுதான் அனுப்பினாங்க ஆண்டி"
"உன் ரூமுக்கு போயி ரெஸ்ட் எடு. மதியான சாப்பாடுக்கு உன்னை கூப்பிடறேன்" என்றாள் கவிதா.
"ரெஸ்ட் எல்லாம் அப்புறம் எடுத்துக்கிறேன். நான் இப்ப உங்களுக்கு சமையலுக்கு ஹெல்ப் பன்றேன்"
"இதுவும் உங்க அம்மா ஆர்டரா?" என்று கவிதா கேட்க "இல்லை. இது என் விருப்பம்" என்றாள் செளந்தர்யா.
அடுத்த நாள் காலை ஒன்பதரை மணிக்கே பள்ளிக்கு தன்னுடைய சர்டிபிக்கேட் பைலுடன் சென்று விட்டாள் செளந்தர்யா.
பள்ளி வேலை என்பதால் அழகான அதேசமயம் கண்ணை உறுத்தாத சேலையை அணிந்து கொண்டாள் செளந்தர்யா.
அவளுக்கு சின்னதாக ஒரு கிளாஸ் டெஸ்ட் எடுக்க வைத்தபின் இன்டர்வியூ செய்து தேர்வு செய்ய அவளுக்கு மகிழ்ச்சி.
பள்ளி தாளாளர் அறைக்கு அவள் செல்ல அங்கு அவினாஷ் இருக்கையில் இருந்தான்.
"குட்மார்னிங் சார்" என்று அவள் சொல்ல "வா செளந்தர்யா" என்றான் அவினாஷ்.
"செளந்தர்யா... உன்னை பற்றி பாசிட்டில் கமெண்ட்ஸ்தான் தந்திருக்காங்க. குட்! நீ இந்த நிமிசத்துல இருந்து எங்க ஸ்கூல் டீச்சர். உனக்கு பேசிக் சாலரி நைன் டவுசண்ட். நீ டென்த் வரை கிளாஸ் எடுக்க வேண்டி வரும். நீ உன் சர்டிபிக்கேட்ஸ் எல்லாம் சரண்டர் பன்னிடடு ஜாயின் பன்னிடு" என்றான் அவினாஷ்.
Message…
Last edited: